Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35:
சிறிய வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்த மித்ரா தட்டுத்தடுமாறி சென்று மின் விளக்குகளை எரிய விட்டாள்... வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாத்து போல நிசப்தமாக இருந்தது அந்த வீடு... வீட்டை சுற்றி பார்வையை ஓட விட்டவள் அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை நோக்கி சென்றாள்...
கதவை மெல்ல திறந்து பார்க்க அவள் எதிர்பார்த்தது போல் அங்குதான் சோபாவில் சரிந்து கிடந்தான் ஆதி.. உள்ளே சென்று இவள் லைட்டை போட்டதும் விழிகளை மூடி ஏதோ நினைவில் இருந்தவன் கண்திறந்து பார்க்க எதிரில் நின்றவளை கண்டதும் எதுவும் பேசாமல் மீண்டும் கண் மூடிக் கொண்டான்...
அவனது அந்த செயலே அவனது நிலையை எடுத்துக்கூற அவனை நெருங்கியவள் “தேவ்...” என்று அவனை தொடுவதற்காக கரத்தினை நீட்ட கண்ணை திறக்காமலே அவளது கரத்தை பற்றி தன்னை தொட விடாமல் உதறித்தள்ளி விட்டவன் “எதுக்குடி வந்த....” என்றான் கோபமாக.... “நான் இருக்கேனா செத்துட்டேனான்னு பார்க்க வந்தியா....”
“தேவ்.... என்னடா பேசுற.....” அவளுக்கு அழுகையே வந்துவிட்டது...
“வேற என்ன பேச சொல்ற......”
ஆத்திரத்துடன் எழுந்தவன் “இங்க வந்து அழுது சீன் க்ரியேட் பண்றியா... வெளிய போ முதல்ல....” கத்தினான்...
“எனக்கு எதுவும் தெரியாதுடா.... நேத்துதான் அம்மு கூட பேசினேன்.. அவதான் நித்திலா சென்னைக்கு வந்துட்டதா சொன்னா.... நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்கன்னு நினைச்சுத்தானே நான் இத்தனநாள் நிம்மதியா இருந்தேன்.... அப்புறம் எப்படிடா இப்படி ஆச்சு....” என்றவளை கண்களில் தீப்பொறி பறக்க பார்த்தவன்,,,,,
“இப்ப உனக்கு சந்தோசமாடி.....” அவளது தலைமுடியை கொத்தாக பற்றிக் கொண்டான்…. “உன் ஆசைய நிறைவேத்திக்க இவள என் கண்ணுல காட்டி என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டேல்ல....” வெறுப்புடன் கூறினான்...
“அன்னைக்கு மட்டும் நீ என்ன வர வைக்காம இருந்திருந்தா நான் என் வழியில போயிட்டே இருந்திருப்பேன்.... எதுவும் வேணாம்னு தானேடி அத்தன வருஷம் ஒதுங்கி இருந்தேன்... உனக்கு அவன் வேணும்கிற ஒரே காரணத்துக்காக என்னை இப்படி பைத்தியக்காரன் மாதிரி நிக்க வெச்சிட்டேல்ல....” அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன் அதை செய்ய முடியாமல் “சை....” என்றபடி கையை சுவற்றில் ஓங்கி குத்தினான்....
“தேவ் சத்தியமா அன்னைக்கு நான் வேற எந்த ரீசன்காகவும் உன்ன வரவைக்கலடா... உன் நித்திலாவ நீ பார்க்கனும்னு தான் உன்ன வர சொன்னேன்... என்னை மன்னிச்சிடுடா......” கண்ணீருடன் கூறியவளை ஆற்றாமையுடன் பார்த்தவன் “போயிட்டாடி.... மறுபடியும் என்ன விட்டுட்டு போயிட்டா...” என்றவன் தொப்பென்று சோபாவில் விழுந்து முகத்தை மூடிக்கொண்டான்....
“தேவ்...” என்றபடி அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் மித்ரா... அவளது மடியில் முகம் புதைத்தவன் “அவ வேணும் மித்ரா.... அவ இல்லைன்னா நான் செத்துடுவேன்டி.....” என்க அவனது கண்ணீரை உணர்ந்தவளின் அழுகையும் அதிகரித்தது..
அவனும் ஒருகாலத்தில் இதே வேதனையைத்தான் நித்திலாவுக்கு கொடுத்திருந்தான்.. ஆனால் அதனை இவனிடம் கூறிவிட முடியாது... சொன்னாலும் புரிந்து கொள்ளவும் மாட்டான்... அவனுக்கு அவனது நியாயம்... மித்ராவினால் அப்போதைக்கு ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது....
“வந்திடுவாடா... அவ உன்மேல உயிரே வெச்சிருக்கா... அப்படியெல்லாம் நீ இல்லாம அவளால இருக்க முடியாது.. கண்டிப்பா உன்கிட்ட வந்துடுவா...”
அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவள் பின்பு அவனை சமாதானப்படுத்தி விட்டு உணவு சமைத்து அவன் மறுக்க மறுக்க தானே ஊட்டியும் விட்டாள்...
வேலைக்காரர்களை கூட வீட்டை விட்டு அனுப்பியிருந்தான் அவன்..
அவனை உறங்க வைத்தது வரை இன்னொரு தாயாய் அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவள் மறுநாள் அதிகாலை காலிங்பெல் சத்தத்தில்தான் கண்விழித்தாள்..
தன் மடியில் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை எழுப்ப மனமில்லாது மெல்ல அவனை நகர்த்திவிட்டு எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க அங்கு நின்றிருந்தவனை கண்டதும் அவளது புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது..
“என்ன கனகவேல்... இவ்வளவு தூரம்....???” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து..
“சின்ன முதலாளி இல்லைங்களா... அவர்கிட்ட பேசனும்...” என்க அவன் தூங்குவதாக கூறியவள் கனகவேலை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்...
வெகுநேரம் கழித்து எழுந்து வந்த ஆதியை கண்ட கனகவேல் விழிகள் கலங்கிப்போயின...
“இப்படி இளைச்சி போயிட்டீங்களே சின்ன முதலாளி...” என்று வேதனையுடன் கூறினான்...
ஆதி எதுவும் சொல்லவில்லை.. ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தான்...
“இங்க என்னதான் நடக்குதுங்க... நிர்மலா அக்காவும் சகுந்தலா அக்காவும் என்னென்னமோ பேசிக்கிறாங்களே...”
“என்ன பேசிக்கிறாங்க....” அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரிந்தும் கேட்டான்...
“அது... அது வந்து சீக்கிரமா நித்திலாம்மாவுக்கும் உங்களுக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு ஆர்யா தம்பிக்கு கட்டி வைக்கனும்னு பேசிக்கிறாங்க....” என்று ஆரம்பித்தவன் மேலும் சில விடயங்களை கூற முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி...
மித்ராதான் கொதித்துப் போனாள்.... ஏற்கனவே பாட்டியின் மேல் வெறுப்பில் இருந்தவளுக்கு இப்போது நிர்மலாவை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்தது..
“தேவ்.. இதை சும்மா விடக்கூடாது.. ஏற்கனவே....” என்று கோபமாக ஆரம்பித்தவள் கனகவேல் இருப்பதை உணர்ந்து வாயை மூடிக்கொண்டாள்..
“ஒரு வார்த்த சொல்லுங்கையா நித்திலாம்மாவ தூக்கிட்டு வந்தாவது உங்ககிட்ட ஒப்படைச்சிடுறேன்....” என்றான் கனகவேல்...
அதற்கு “நான் பார்த்துக்கறேன் கனகவேல்...” என்று மட்டும் கூறி வைத்தான் ஆதி...
கனகவேல் அவனுக்கும் அவனுடைய தாத்தாவுக்கும் எப்பேர்ப்பட்ட விசுவாசி என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் நித்திலாவை பற்றி ஒரு மூன்றாம் நபரிடம் எதையும் பேச அவன் விரும்பவில்லை...
கனகவேலை சமாதானப்படுத்தி அவன் மறுக்க மறுக்க பணமும் கொடுத்து அனுப்பி வைத்தான்.. அவன்மீது அதிக பாசம் வைத்திருக்கும் ஒருசில நபர்களில் கனகவேலும் ஒருவன்....
############################
“நித்து சாப்பிட்டாளா....” விஜயாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நிர்மலா...
“அவ எங்க சாப்பிட்டா... ரூம்ல தனியா எதையோ பறிகொடுத்தா மாதிரி உக்கார்த்துக்கிட்டு இருக்கா....” என்றாள் விஜயா... “இதுக்குத்தான் அப்பவே ஆதிகிட்ட சொல்லி அவள மும்பைக்கே கூட்டிட்டு போக சொல்ல சொன்னேன்... நீங்கதான் கேட்கல... ஏதோ சின்னஞ்சிறுசுங்க சண்டை போட்டுகிட்டு இவ புருஷன் வீட்டுல இருந்து கிளம்பி வந்துட்டா அப்படியே விட்டுர்ரதா...” என்றாள் மாமியாரிடம் கோபமாக....
விஜயாவை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட ஏதோ சண்டையால் நித்திலா கோபித்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நினைத்தாள்...
மருமகளின் பேச்சு நிர்மலாவுக்கு அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் அவள் சொல்வது போல்தான் நித்திலாவின் நிலையும் இருந்தது... அவள் ஆதியை விட்டுவிட்டு வந்தபோது நிர்மலா மிகவும் சந்தோசப்பட்டார்தான்... ஆனால் அந்த சந்தோசத்திற்கு ஆயுள் வெறும் ஒருநாள் மட்டுமேதான்...
அவனை பிரிந்து வந்ததிலிருந்து இவள் சரியாக சாப்பிடுவதுமில்லை,, தூங்குவதுமில்லை,, மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதுமில்லை... எதையோ பறிகொடுத்தாற்போல சோகமாக வளைய வந்து கொண்டிருந்தாள்....
அவரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்.. அவள் மசிவதாகவே தெரியவில்லை... இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பது போல் இருந்தது நிர்மலாவின் நிலை...
வீட்டிலுள்ள அனைவருக்குமே ஏதோ பிரச்சினை என்று தெரிந்துதான் இருந்தது.. ஆனால் யாராலும் நித்திலாவை நெருங்கி கேள்வி கேட்க முடியவில்லை... ஆதியை பற்றித்தான் அவர்களுக்கு தெரியுமே.. அவள் மனம் புண்படும்படி எதையோ செய்திருக்கிறான் அதனால் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்றுதான் அனைவரும் நினைத்தனர்...
இவளை பேசி சமாதானப்படுத்தி அவனிடம் திரும்ப அனுப்பவும் யாருக்கும் மனமில்லை சாரதா உட்பட... விஜயா மட்டும்தான் அவ்வப்போது நித்திலாவுக்கு புத்திமதி கூறி ஆதியுடன் பேச சொல்லி வற்புறுத்திக் கொண்டிருப்பாள்.. அதையும் அமைதியாக கேட்டுவிட்டு கடந்து போய்விடுவாள் நித்திலா... அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை..
பேத்தியை பற்றியே யோசித்தவண்ணம் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த நிர்மலா எதுவோ தடுக்கி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டார்... காலில் பயங்கர அடி...
அனைவரும் அடித்துபிடித்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை, அவரை அதிகம் நடக்க விடவேண்டாம் என்று வைத்தியர் கூறியிருந்தார்...
பாட்டிக்கு அடிபட்டதில் இருந்து தன்னுடைய பிரச்சினையை மறந்தவளாக நித்திலாதான் பாட்டியை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.. அது நிர்மலாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது...
அவள் கொஞ்சம் வாடித் தெரிவதை கண்டாலும் காலில் இல்லாத வலியை இருப்பதாக கூறி அவளது எண்ணத்தை திசை திருப்பி விடுவார்...
############################
சேதுபதி மிகுந்த பரபரப்புடன் ஏர்போட்டில் நடந்து கொண்டிருந்தார்... ஏழு ஆண்டுகளாக அவர் தேடிக்கொண்டிருந்த ஒருவன் தற்போது நேபாளில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்திருந்தது...
அவன் இருக்கும் இடம் வரை அத்தனையும் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும் அவரை உடனே கிளம்பி வருமாறும் அவர் நியமித்து வைத்திருந்த ஆட்கள் கூற தாமதிக்காது கிளம்பிவிட்டார்...
அவனை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் இத்தனை நாளாக விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்... எதையோ நினைத்தவரின் விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன...
ஆனால் அவருக்கு முன்பே வேறொருவன் அவர் தேடிக் கொண்டிருந்த அந்த நபரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதை பாவம் அவர் அறியவில்லை...
வேகமாக சென்று கொண்டிருந்தவர் யார்மீதோ மோதிவிட “சாரி...” என்று நிமிர்ந்தவர் எதிரில் நின்றவனை கண்டதும் எதையோ நியாபக படுத்த முயன்றவாறே “வரதராஜன் பையன்தானே???...” என்றார் கேள்வியாக...
“ஆமா அங்கிள்... அப்பாவ தெரியுமா.???” என்றான் அவன் பதிலுக்கு...
“ஆமாப்பா... பிசினஸ் விஷயமா வரதராஜன பல தடவை சந்திச்சிருக்கேன்...”
“ஓஹ்...”
“அப்பா விஷயம் கேள்விப்பட்டேன்பா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது...” என்றார்....
தந்தையை பற்றி பேசியதும் அர்ஜுன் முகமும் வேதனையை பிரதிபலித்தது...
அதை உணர்ந்தவர் “சந்திக்கலாம்....” என்று அவன் தோளில் லேசாக தட்டி விடைபெற்றவராக சேதுபதி அவர் வழியில் சென்றுவிட அர்ஜுனும் தன்வழியில் சென்றுவிட்டான்.. இருவருக்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு முடிச்சு விழப்போவது இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை..
அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவனிடம் ஓடி வந்த சரஸ்வதி மீராவுக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அதில் கடுப்பானவன்,,,
“டாக்டர வர சொல்லி பார்த்திருக்க வேண்டியதுதான...” என்றான் கோபமாக....
“அதெல்லாம் டாக்டர் வந்து பார்த்திட்டுதான் போனாரு... அவளுக்கு அவங்க அப்பா நியாபகம் வந்துடுச்சி போல.. அப்பாவ பார்க்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... சிவா வேற இல்ல.. அவன் இருந்திருந்தா அவனே கூட்டிட்டு போயிருப்பான்... எனக்காக ஒரு தடவ அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வந்திடுப்பா...” என்று அவர் கெஞ்சும் குரலில் கேட்க வேறு வழியில்லாமல் “சரி சரி.... கூட்டிட்டு போய் தொலைக்கிறேன்....” என்றான் வேண்டா வெறுப்பாக...
—————————————————
நிர்மலாவை செக்கப்புக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள் நித்திலா.. அவரை மருத்துவர் பரிசோதித்ததும் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் பாட்டியை விக்ரமுடன் அனுப்பிவிட்டு இவள் ஹாஸ்பிடலில் இருந்து வெளியேற போகும் சமயம் அர்ஜுனும் வெளியே வந்து கொண்டிருந்தான்...
இவளை கண்டதும் முகம் மலர “நித்திலா..!!!!” என்க நித்திலாவும் “அர்ஜுன்!!! என்ன இந்த பக்கம்... ஏதாவது உடம்பு சரியில்லையா???” அவனுக்கு என்னவோ என்று அவள் சற்று பதட்டமாக கேட்க அவனது அடி நெஞ்சு வரை இனித்தது..
“ஹேய் கூல் கூல்.... எனக்கு ஒன்னுமில்ல... தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்ல... அதான் கூட்டிட்டு வந்தேன்... நீ எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்க...” என்று அவன் பதிலுக்கு கேட்க...
“பாட்டிய கூட்டிட்டு வந்தேன் அர்ஜுன்....”
வெகுநாள் கழித்து இருவரும் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்..
அர்ஜுனை காணாமல் தேடி திரிந்த மீரா அவனை கண்டு அருகில் செல்லப்போக அங்கு நித்திலா நின்றிருப்பதை பார்த்ததும் தயக்கத்துடன் அவர்களை நெருங்கினாள்...
“ஆமா இவங்க யாரு..???” அவனுக்கு பின்னால் வந்து நின்ற மீராவை பார்த்து கேட்டாள் நித்திலா...
மீராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “இது... இது எங்க வீட்டுல வேல பார்க்கிற பொண்ணு... இவங்களதான் உடம்பு சரியில்லைனு கூட்டிட்டு வந்தேன்...” குரலில் பிசிர் தட்டாமல் கூறினான்...
நித்திலாவுக்கு மீராவை பார்த்தால் வேலைக்காரி போலவும் தெரியவில்லை... ஒரு வேலைக்காரியை இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு அதுவும் தானே அழைத்து வந்திருக்கிறான் என்பதும் நம்பும்படியாக இல்லை... மனதை எதுவோ உறுத்தினாலும் அர்ஜுன் தன்னிடம் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நினைவில் அவன் சொன்னதை நம்பினாள்...
“ஓகே அர்ஜுன்.... டைம் ஆச்சு நான் கிளம்புறேன்... இன்னொரு நாள் பார்க்கலாம்...” என்று நித்திலா விடைபெற,,,,
“ஹேய் நித்து... ஒன் மினிட்....” என்று அவளை தடுத்தவன் “நானும் அந்த பக்கமாத்தான் போறேன்... நானே உன்ன கூட்டிட்டு போறேன் வா....” என்றான்..
“பரவாயில்ல அர்ஜுன்... நானே போய்க்கிறேன்...”
அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பிடிவாதமாக அவளை தன்னுடன் வருமாறு வற்புறுத்த வேறுவழியின்றி தலையாட்டினாள் நித்திலா....
“பட் இவங்க???” என்று அவள் மீராவை கை காட்ட “அவ ஆட்டோல வீட்டுக்கு போயிடுவா....” என்றான்..
மீராவை நெருங்கி “நீ ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வீட்டுக்கு போயிடு...” என்று சொன்னவன் அதற்குமேல் அவளை திரும்பியும் பாராது நித்திலாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்..
மகனுடன் சென்ற மருமகள் ஆட்டோவில் தனியாக திரும்பி வருவதை கண்ட சரஸ்வதி பதட்டத்துடன் “என்னாச்சு மீராம்மா நீ மட்டும் வர்ர... அர்ஜுன் எங்க??” எனக்கேட்க “ஒரு வேலையா போறாங்க அத்தை....” என்றவள் “ஆட்டோக்கு பணம் கொடுக்கல...” என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்..
“இரு நான் கொடுக்கிறேன்...” என்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தவருக்கு மகன்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது... உடம்பு சரியில்லாத பெண்ணை ஆட்டோவில் தனியாக அனுப்பியதும் இல்லாமல் பணம் கூட கொடுக்காமல் விட்டிருக்கிறானே என்று...
மீரா அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்... கடந்த சில நாட்களாக அவளுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமே இல்லாமல் போயிருந்தது.. அவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விட்டான் அர்ஜுன்...
தினமும் இழிசொல்லும் ஏதோ தரம் தாழ்ந்தவளை பார்ப்பது போன்ற பார்வையும் சின்னச்சின்ன செயல்களில் கூட அவள் மீதான அவனது காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்... அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று நித்திலாவிடம் அவளை வேலைக்காரியென்று கூறியது...
ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது எவ்வளவு கடினம் என்பதை உணராமல் மீராவின் உள்ளத்தை தன்னால் முடிந்தவரை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்....
மீராவை தேடி வந்த சரஸ்வதி அவள் அழுவதை கண்டு ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர் மருமகளின் நிலையை நினைத்து மனம் வருந்தினார் அந்த தாய்...
நித்திலா வீட்டுக்கு வருமாறு அழைத்தும் மறுத்தவன் வேறொரு நாள் நிச்சயம் வருவதாக கூறி அவளை டிராப் செய்துவிட்டு கிளம்பிவிட்டான்...
அவன் சென்றதும் கேட்டை தாண்டி வீட்டுக்குள் செல்லும் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவள் உள்ளுணர்வு உந்த சாரதாவின் வீட்டு பக்கம் பார்வையை திருப்பினாள்... பின்பு ஏமாற்றத்துடன் ஒரு பெருமூச்சை வெளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவளை வரவேற்றது மித்ராவின் குரோதப் பார்வை...
தனஞ்செயன் மற்றும் சந்திரலேகா மித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.. நிர்மலா ஒரு பக்கம் கடுகடுப்புடன் மித்ராவை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்...
அவளது வருகை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. விஸ்வநாதன்தான் தனஞ்செயன் எதிரில் மித்ராவை எதுவும் பேசிவிட வேண்டாம் என்று நிர்மலாவை எச்சரித்து வைத்திருந்ததால் ஒன்றும் பேச முடியாமல் முறைத்துக் கொண்டிருந்தார்....
நித்திலாவை கண்டதும் முகம் மலர “வாடா கண்ணா... ஷாப்பிங் முடிஞ்சதா???” என்று அவள் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை பார்க்க “ம்ம்ம்...” என்றவள் வேறு எதுவும் பேசாமல் மாடியில் இருக்கும் தன்னுடைய அறையை நோக்கி சென்றுவிட்டாள்.. மித்ராவின் குற்றம் சாட்டும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை..
அறைக்குள் வந்து கதவை தாளிட்ட பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது... அன்று முழுக்க வெளியில் செல்லாமல் ரூமுக்குள் அடைந்து கிடந்தவள் இரவு உணவுக்காக விஜயா பலமுறை அழைத்த பிறகுதான் வெளியே வந்தாள்...
பெயருக்கு எதையோ கொறித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவை அடைக்கப்போக கதவை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மித்ரா..
வந்ததும் வராததுமாக நித்திலாவின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டவள் “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.... அங்க ஒருத்தன உயிரோட கொன்னுட்டு இங்க வந்து ஷாப்பிங் அது இதுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கியா??? உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி.???” என்றாள் கோபமாக.
“ஏன்... அவரு எனக்கு செஞ்சததான் நான் திருப்பி செஞ்சேன்...” என்றாள் நித்திலா கலங்கிய விழிகளை மறைக்க வேறுபக்கம் திரும்பியபடி...
“எங்கே என் முகத்த பார்த்து சொல்லு... அவன் உன்மேல உயிரே வெச்சிருக்கான்னு உனக்கு தெரியாது...” அவளது தாடையை பற்றி தன்புறம் திருப்பினாள் மித்ரா..
கலங்கியிருந்த அவளது விழிகளில் என்ன கண்டாளோ “ஏன்டி இப்படி அவனையும் கஷ்டபடுத்தி உன்னையும் கஷ்டபடுத்திக்கிற... நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கனும்னுதானே நான் என் பெயர கெடுத்துக்கிட்டு அத்தனையும் பண்ணேன்....” என்றாள் ஆற்றாமையுடன்..
பின்பு நித்திலாவின் கன்னத்தை தன் இரு கரங்களில் தாங்கியவள் “நித்தும்மா ஆதிகிட்ட போயிடுடா... அவன் மட்டும்தான் உன்ன நல்லபடியா பார்த்துக்குவான்... வேற யாரையும் நம்பாதே... நீ நல்லவங்கனு நினைக்கிறவங்கலாம் நிஜமாவே நல்லவங்க கிடையாது...” ஒரு குழந்தைக்கு கூறுவதை போல் கூறினாள்...
#########################
மறுநாள் காலை ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் நித்திலா, மித்ரா இருவரும் காரில் உட்கார்ந்திருந்தனர்... நித்திலா விரல் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.. ஏனோ அவ்வளவு படபடப்பாக இருந்தது அவளுக்கு...
நொடிகளே யுகங்களாக தோன்றிய ஒருசில நிமிட காத்திருப்புக்கு பிறகு இவர்களை தாண்டிச்சென்ற ஒரு கார் புழுதி பறக்க யு டர்ன் அடித்து இவர்களது காருக்கு எதிரே சற்று தூரத்தில் நின்றது...
நித்திலாவின் தோளை தொட்ட மித்ரா “போ நித்து... போய் பேசிட்டு வா...” என்க மிகுந்த தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினாள் நித்திலா...
அவனும் காரை விட்டு இறங்கினான்... தரையில் பார்வையை பதித்து மெல்லிய எட்டுக்களுடன் தனை நோக்கி நடந்து வருபவளை பார்த்துக் கொண்டே அழுத்தமான நடையுடன் முன்னேறினான் ஆதி...
அவள் எந்த தவறும் செய்யவில்லை... அவன் அவளுக்கு செய்த துரோகத்துக்கு ஒரு மிகச்சிறிய பதிலடியாகத்தான் அவனை விட்டுவிட்டு அவள் வந்தது.. அவள் நினைத்திருந்தால் அதைவிட பெரிதாக கூட அவனை காயப்படுத்தி இருக்கலாம்.. அவளால் அப்படி செய்ய முடியவில்லை...
சொல்லப் போனாள் தான் அவனை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை கூட அவனை பிரிந்து வந்த இத்தனை நாட்களில் அவளால் நன்றாகவே உணர முடிந்தது.. அந்த காதல் கொடுத்த குற்ற உணர்வில்தான் அவனுக்கு ஏதோ பெரிய தவறை இழைத்து விட்டது போல அவளால் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை...
அவனை நெருங்கியதும் தன் நடையை நிறுத்தியவள் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனது ஷூவை பார்த்துக் கொண்டு நிற்க அவன்தான் ஆரம்பித்தான்...
“என்னடா இளைச்சிட்ட... சரியா சாப்பிடலையா???” அவள் தலையை மென்மையாக தடவி வெகு இயல்பாக அவன் கேட்க இப்படி ஒரு கேள்வியை அவன் கேட்பான் என்று அவள் சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை...
கோபத்தில் கத்துவான்,,, தாம்தூம் என்று குதிப்பான் என எதிர்பார்த்து வந்தவள் அவனது இந்த கேள்வியில் மெல்ல விழியுயர்த்தி அவன் முகம் பார்த்தாள்...
சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியும் கறுத்து மெலிந்திருந்த முகமும் அவனும் அவள் நினைவில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பதை பறைசாற்ற “ஐம் சாரி...” என்று அவள் கூறிய அதே நேரம் அவனும் அதே வார்த்தையை அவளிடம் கூறினான்...
இருவரது பார்வைகளும் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன...
அவளது கரங்களை பற்றி தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..
இருவருக்குமே அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை... ஒரு சிறிய மௌனத்திற்கு பின் அவன்தான் தொடர்ந்தான்...
“உன்கிட்ட எதையும் பேசி க்ளியர் பண்ணாம உன்னை தொடனும் நினைச்சது என் தப்புத்தான்..”
நித்திலா அப்போதும் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க அவள் முன் மண்டியிட்டவன் “நீ எனக்கு எந்த வலிய கொடுக்கனும் நினைச்சியோ அதை கொடுத்துட்ட... இனிமேல் இந்த மாதிரி என்னை தவிக்க விட்டுட்டு போயிடாதடி... என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது....” உடைந்த குரலில் வேதனையுடன் கூறினான்...
அப்போதுதான் உணர்வு வந்தவள் போல் அவனது தோளில் கை வைத்தவள் “அத்தான் ப்ளீஸ் எழுந்திருங்க...” என்றாள் கெஞ்சும் குரலில்...
“ஆசையோ கோபமோ உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சி கூட பார்த்ததில்லடி.. எனக்கு எப்பவுமே நீ மட்டும்தான்... நீ என்ன விட்டுட்டு போனப்போ செத்துடலாம் போல இருந்துச்சுடீ....”
“ஏன் அத்தான் இப்படில்லாம் பேசுறீங்க... உங்களுக்கு புரிய வைக்கனும்னு தான் விட்டுட்டு வந்தேன்... நீங்க தேடி வருவீங்கன்னு நினைச்சேன்... நீங்க வராம போனதும் என்னை வெறுத்துட்டீங்களோனு பயமா இருந்துச்சி...” என்றாள்... “முதல்ல எழுந்திருங்க ப்ளீஸ்... இல்லைனா நான் போயிடுவேன்...” என்க உடனே எழுந்துவிட்டான்...
“நான் இல்லாம உன்னாலயும் இருக்க முடியாதுனு தெரியும்... அதை உனக்கு புரிய வைக்கத்தான் இத்தன நாளா வராம இருந்தேன்....”
பின்பு அவளது முகத்தை தன் கரங்களில் தாங்கியவன் “நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல பேபி...” என்றான்.. “அன்னைக்கு நடந்ததுக்கெல்லாம் ஐம் ரியலி ரியலி சாரிடா....”
மித்ரா என் ஃப்ரென்ட்மா... நீயும் சஞ்சயும் எப்படியோ அப்படித்தான் நானும் மித்ராவும்.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ள எந்த தப்பான ரிலேஷன்ஷிப்பும் கிடையாதுடா.... அவ எனக்கு அம்மா மாதிரி...” என்றான் தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்தில்...
“எனக்கு தெரியும் அத்தான்... நான் உங்களையும் மித்ரா அக்காவையும் என்னைக்குமே தப்பா நினைச்சதில்ல...”
“ஆனா இதெல்லாம் ஏன் அத்தான்?? ஏதோ காரணத்துக்காக செஞ்சிருக்கீங்கன்னு தெரியுது... ஏன்??”
அவன் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்... என்னவென்று சொல்வான்.... அதை சொல்ல வேண்டும் என்றால் அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும்... ஆனால் இவள் அதை நம்புவாளா.. நித்திலா அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தால் கூட அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது...
அவனை பெற்ற அன்னை, உயிராக வளர்த்த அவனுடைய தாத்தா... அவர்களே அவன் சொன்னதை கடைசிவரை நம்பவில்லை.... ஏன் மித்ராவே கண்ணால் பார்த்த பிறகுதானே அத்தனையும் நம்பினாள்... நித்திலா எப்படி நம்புவாள்... எதையும் நிரூபிக்கவும் அவனிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை..
அவள் நம்பமாட்டாள் என்று உறுதியாக தெரிந்திருந்ததால் தான் அவன் இத்தனை நாள் இந்தப் பேச்சையே அவளிடம் பேசாமல் தவிர்த்து வந்தான்..
“அதுக்கான நேரம் வரும்போது நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றேன்டா... இப்ப வேண்டாம் பேபி...”
அவனுக்கு சொல்ல இஷ்டமில்லை என்பதை புரிந்து கொண்டவள் “ம்ம்ம்...” என்றாள்...
“ஆனா அன்னைக்கு நான் உன்ன வேற எதுவும் பண்ணலடா... ஒரு பதினேழு வயசு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன்லாம் கிடையாது..... அன்னைக்கு நீ மயங்கினதுக்கு அப்புறம் என் விரல் கூட உன்மேல படல...”
“தெரியும்..” என்றாள் அவள்... “அப்போ தெரியல... அப்புறம் பாட்டி வீட்டுக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன்... நான் ரொம்ப பயந்ததுனால பாட்டிதான் என்னை வெர்ஜினிட்டி டெஸ்ட்.......” சொல்லிக்கொண்டிருக்கும் போதே நித்திலாவை இழுத்து அணைத்துக் கொண்டான்... அவனது கரங்கள் லேசாக நடுங்கின...
தான் செய்த முட்டாள்தனமான செயலின் பாரதூரம் அவளது வாய்மொழியாக கேட்கும்போதுதான் அவனுக்கு புரிந்ததோ என்னவோ... துடித்துப் போய்விட்டான்...
“சாரி... சாரி... சாரி பேபி... என்னை மன்னிச்சிடுடி... அப்போ அன்னைக்கு நான் செஞ்சது எதுவும் உன்ன எந்த அளவுக்கு பாதிக்கும்னு நான் யோசிக்கவே இல்ல... நான் நினைச்சத செய்யனும்னு அது மட்டும்தான் என் மைன்ட்ல ஓடிட்டு இருந்தது.. உன்ன பத்தி நான் யோசிக்கவே இல்ல... ரொம்ப பயந்திருப்ப இல்லடா....” என்றான் விழிகள் கலங்க...
நித்திலாவினால் இல்லையென்று சொல்ல முடியவில்லை... அந்த நேரத்தில் அவள் அனுபவித்த வேதனை அப்படி..
“நான் என்னைக்குமே உன்கிட்ட தப்பா நடந்துக்கனும்னு நினைச்சதே இல்ல பேபி... அப்பப்ப உன் கிஸ் பண்ணனும் மாதிரி ஆசையா இருக்கும்... நீ தூங்கினதுக்கு அப்புறமா உன் ரூமுக்கு வருவேன்... அதையும் உன் அக்காகாரி எப்படித்தான் கண்டுபிடிப்பாளோ தெரியாது.. நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கால் பண்ணி என்னை ஆஃப் பண்ணி விட்டுடுவா....” என்றான் பெருமூச்சுடன்...
“அதுவும் தெரியும்... பால்ல தூக்க மாத்திரை போட்டு கொடுத்துட்டு வருவீங்களாம்...” என்றாள்..
“சௌர்யா சொன்னானா..???”
“ம்ம்ம்..... ஆனா... ஆனா எதுக்கு அவ்வளவு சின்ன வயசுல என் கழுத்துல தாலி கட்டினீங்க அத்தான்.????”
தொடரும்.......
அத்தியாயம் 35 பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.....
சிறிய வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்த மித்ரா தட்டுத்தடுமாறி சென்று மின் விளக்குகளை எரிய விட்டாள்... வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாத்து போல நிசப்தமாக இருந்தது அந்த வீடு... வீட்டை சுற்றி பார்வையை ஓட விட்டவள் அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை நோக்கி சென்றாள்...
கதவை மெல்ல திறந்து பார்க்க அவள் எதிர்பார்த்தது போல் அங்குதான் சோபாவில் சரிந்து கிடந்தான் ஆதி.. உள்ளே சென்று இவள் லைட்டை போட்டதும் விழிகளை மூடி ஏதோ நினைவில் இருந்தவன் கண்திறந்து பார்க்க எதிரில் நின்றவளை கண்டதும் எதுவும் பேசாமல் மீண்டும் கண் மூடிக் கொண்டான்...
அவனது அந்த செயலே அவனது நிலையை எடுத்துக்கூற அவனை நெருங்கியவள் “தேவ்...” என்று அவனை தொடுவதற்காக கரத்தினை நீட்ட கண்ணை திறக்காமலே அவளது கரத்தை பற்றி தன்னை தொட விடாமல் உதறித்தள்ளி விட்டவன் “எதுக்குடி வந்த....” என்றான் கோபமாக.... “நான் இருக்கேனா செத்துட்டேனான்னு பார்க்க வந்தியா....”
“தேவ்.... என்னடா பேசுற.....” அவளுக்கு அழுகையே வந்துவிட்டது...
“வேற என்ன பேச சொல்ற......”
ஆத்திரத்துடன் எழுந்தவன் “இங்க வந்து அழுது சீன் க்ரியேட் பண்றியா... வெளிய போ முதல்ல....” கத்தினான்...
“எனக்கு எதுவும் தெரியாதுடா.... நேத்துதான் அம்மு கூட பேசினேன்.. அவதான் நித்திலா சென்னைக்கு வந்துட்டதா சொன்னா.... நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்கன்னு நினைச்சுத்தானே நான் இத்தனநாள் நிம்மதியா இருந்தேன்.... அப்புறம் எப்படிடா இப்படி ஆச்சு....” என்றவளை கண்களில் தீப்பொறி பறக்க பார்த்தவன்,,,,,
“இப்ப உனக்கு சந்தோசமாடி.....” அவளது தலைமுடியை கொத்தாக பற்றிக் கொண்டான்…. “உன் ஆசைய நிறைவேத்திக்க இவள என் கண்ணுல காட்டி என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டேல்ல....” வெறுப்புடன் கூறினான்...
“அன்னைக்கு மட்டும் நீ என்ன வர வைக்காம இருந்திருந்தா நான் என் வழியில போயிட்டே இருந்திருப்பேன்.... எதுவும் வேணாம்னு தானேடி அத்தன வருஷம் ஒதுங்கி இருந்தேன்... உனக்கு அவன் வேணும்கிற ஒரே காரணத்துக்காக என்னை இப்படி பைத்தியக்காரன் மாதிரி நிக்க வெச்சிட்டேல்ல....” அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன் அதை செய்ய முடியாமல் “சை....” என்றபடி கையை சுவற்றில் ஓங்கி குத்தினான்....
“தேவ் சத்தியமா அன்னைக்கு நான் வேற எந்த ரீசன்காகவும் உன்ன வரவைக்கலடா... உன் நித்திலாவ நீ பார்க்கனும்னு தான் உன்ன வர சொன்னேன்... என்னை மன்னிச்சிடுடா......” கண்ணீருடன் கூறியவளை ஆற்றாமையுடன் பார்த்தவன் “போயிட்டாடி.... மறுபடியும் என்ன விட்டுட்டு போயிட்டா...” என்றவன் தொப்பென்று சோபாவில் விழுந்து முகத்தை மூடிக்கொண்டான்....
“தேவ்...” என்றபடி அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள் மித்ரா... அவளது மடியில் முகம் புதைத்தவன் “அவ வேணும் மித்ரா.... அவ இல்லைன்னா நான் செத்துடுவேன்டி.....” என்க அவனது கண்ணீரை உணர்ந்தவளின் அழுகையும் அதிகரித்தது..
அவனும் ஒருகாலத்தில் இதே வேதனையைத்தான் நித்திலாவுக்கு கொடுத்திருந்தான்.. ஆனால் அதனை இவனிடம் கூறிவிட முடியாது... சொன்னாலும் புரிந்து கொள்ளவும் மாட்டான்... அவனுக்கு அவனது நியாயம்... மித்ராவினால் அப்போதைக்கு ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது....
“வந்திடுவாடா... அவ உன்மேல உயிரே வெச்சிருக்கா... அப்படியெல்லாம் நீ இல்லாம அவளால இருக்க முடியாது.. கண்டிப்பா உன்கிட்ட வந்துடுவா...”
அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவள் பின்பு அவனை சமாதானப்படுத்தி விட்டு உணவு சமைத்து அவன் மறுக்க மறுக்க தானே ஊட்டியும் விட்டாள்...
வேலைக்காரர்களை கூட வீட்டை விட்டு அனுப்பியிருந்தான் அவன்..
அவனை உறங்க வைத்தது வரை இன்னொரு தாயாய் அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவள் மறுநாள் அதிகாலை காலிங்பெல் சத்தத்தில்தான் கண்விழித்தாள்..
தன் மடியில் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை எழுப்ப மனமில்லாது மெல்ல அவனை நகர்த்திவிட்டு எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க அங்கு நின்றிருந்தவனை கண்டதும் அவளது புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது..
“என்ன கனகவேல்... இவ்வளவு தூரம்....???” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து..
“சின்ன முதலாளி இல்லைங்களா... அவர்கிட்ட பேசனும்...” என்க அவன் தூங்குவதாக கூறியவள் கனகவேலை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்...
வெகுநேரம் கழித்து எழுந்து வந்த ஆதியை கண்ட கனகவேல் விழிகள் கலங்கிப்போயின...
“இப்படி இளைச்சி போயிட்டீங்களே சின்ன முதலாளி...” என்று வேதனையுடன் கூறினான்...
ஆதி எதுவும் சொல்லவில்லை.. ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தான்...
“இங்க என்னதான் நடக்குதுங்க... நிர்மலா அக்காவும் சகுந்தலா அக்காவும் என்னென்னமோ பேசிக்கிறாங்களே...”
“என்ன பேசிக்கிறாங்க....” அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரிந்தும் கேட்டான்...
“அது... அது வந்து சீக்கிரமா நித்திலாம்மாவுக்கும் உங்களுக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு ஆர்யா தம்பிக்கு கட்டி வைக்கனும்னு பேசிக்கிறாங்க....” என்று ஆரம்பித்தவன் மேலும் சில விடயங்களை கூற முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி...
மித்ராதான் கொதித்துப் போனாள்.... ஏற்கனவே பாட்டியின் மேல் வெறுப்பில் இருந்தவளுக்கு இப்போது நிர்மலாவை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்தது..
“தேவ்.. இதை சும்மா விடக்கூடாது.. ஏற்கனவே....” என்று கோபமாக ஆரம்பித்தவள் கனகவேல் இருப்பதை உணர்ந்து வாயை மூடிக்கொண்டாள்..
“ஒரு வார்த்த சொல்லுங்கையா நித்திலாம்மாவ தூக்கிட்டு வந்தாவது உங்ககிட்ட ஒப்படைச்சிடுறேன்....” என்றான் கனகவேல்...
அதற்கு “நான் பார்த்துக்கறேன் கனகவேல்...” என்று மட்டும் கூறி வைத்தான் ஆதி...
கனகவேல் அவனுக்கும் அவனுடைய தாத்தாவுக்கும் எப்பேர்ப்பட்ட விசுவாசி என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் நித்திலாவை பற்றி ஒரு மூன்றாம் நபரிடம் எதையும் பேச அவன் விரும்பவில்லை...
கனகவேலை சமாதானப்படுத்தி அவன் மறுக்க மறுக்க பணமும் கொடுத்து அனுப்பி வைத்தான்.. அவன்மீது அதிக பாசம் வைத்திருக்கும் ஒருசில நபர்களில் கனகவேலும் ஒருவன்....
############################
“நித்து சாப்பிட்டாளா....” விஜயாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நிர்மலா...
“அவ எங்க சாப்பிட்டா... ரூம்ல தனியா எதையோ பறிகொடுத்தா மாதிரி உக்கார்த்துக்கிட்டு இருக்கா....” என்றாள் விஜயா... “இதுக்குத்தான் அப்பவே ஆதிகிட்ட சொல்லி அவள மும்பைக்கே கூட்டிட்டு போக சொல்ல சொன்னேன்... நீங்கதான் கேட்கல... ஏதோ சின்னஞ்சிறுசுங்க சண்டை போட்டுகிட்டு இவ புருஷன் வீட்டுல இருந்து கிளம்பி வந்துட்டா அப்படியே விட்டுர்ரதா...” என்றாள் மாமியாரிடம் கோபமாக....
விஜயாவை பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட ஏதோ சண்டையால் நித்திலா கோபித்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நினைத்தாள்...
மருமகளின் பேச்சு நிர்மலாவுக்கு அவ்வளவாக ரசிக்காவிட்டாலும் அவள் சொல்வது போல்தான் நித்திலாவின் நிலையும் இருந்தது... அவள் ஆதியை விட்டுவிட்டு வந்தபோது நிர்மலா மிகவும் சந்தோசப்பட்டார்தான்... ஆனால் அந்த சந்தோசத்திற்கு ஆயுள் வெறும் ஒருநாள் மட்டுமேதான்...
அவனை பிரிந்து வந்ததிலிருந்து இவள் சரியாக சாப்பிடுவதுமில்லை,, தூங்குவதுமில்லை,, மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதுமில்லை... எதையோ பறிகொடுத்தாற்போல சோகமாக வளைய வந்து கொண்டிருந்தாள்....
அவரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்.. அவள் மசிவதாகவே தெரியவில்லை... இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பது போல் இருந்தது நிர்மலாவின் நிலை...
வீட்டிலுள்ள அனைவருக்குமே ஏதோ பிரச்சினை என்று தெரிந்துதான் இருந்தது.. ஆனால் யாராலும் நித்திலாவை நெருங்கி கேள்வி கேட்க முடியவில்லை... ஆதியை பற்றித்தான் அவர்களுக்கு தெரியுமே.. அவள் மனம் புண்படும்படி எதையோ செய்திருக்கிறான் அதனால் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்றுதான் அனைவரும் நினைத்தனர்...
இவளை பேசி சமாதானப்படுத்தி அவனிடம் திரும்ப அனுப்பவும் யாருக்கும் மனமில்லை சாரதா உட்பட... விஜயா மட்டும்தான் அவ்வப்போது நித்திலாவுக்கு புத்திமதி கூறி ஆதியுடன் பேச சொல்லி வற்புறுத்திக் கொண்டிருப்பாள்.. அதையும் அமைதியாக கேட்டுவிட்டு கடந்து போய்விடுவாள் நித்திலா... அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை..
பேத்தியை பற்றியே யோசித்தவண்ணம் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த நிர்மலா எதுவோ தடுக்கி கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டார்... காலில் பயங்கர அடி...
அனைவரும் அடித்துபிடித்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை, அவரை அதிகம் நடக்க விடவேண்டாம் என்று வைத்தியர் கூறியிருந்தார்...
பாட்டிக்கு அடிபட்டதில் இருந்து தன்னுடைய பிரச்சினையை மறந்தவளாக நித்திலாதான் பாட்டியை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.. அது நிர்மலாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது...
அவள் கொஞ்சம் வாடித் தெரிவதை கண்டாலும் காலில் இல்லாத வலியை இருப்பதாக கூறி அவளது எண்ணத்தை திசை திருப்பி விடுவார்...
############################
சேதுபதி மிகுந்த பரபரப்புடன் ஏர்போட்டில் நடந்து கொண்டிருந்தார்... ஏழு ஆண்டுகளாக அவர் தேடிக்கொண்டிருந்த ஒருவன் தற்போது நேபாளில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்திருந்தது...
அவன் இருக்கும் இடம் வரை அத்தனையும் கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும் அவரை உடனே கிளம்பி வருமாறும் அவர் நியமித்து வைத்திருந்த ஆட்கள் கூற தாமதிக்காது கிளம்பிவிட்டார்...
அவனை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் இத்தனை நாளாக விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்... எதையோ நினைத்தவரின் விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன...
ஆனால் அவருக்கு முன்பே வேறொருவன் அவர் தேடிக் கொண்டிருந்த அந்த நபரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதை பாவம் அவர் அறியவில்லை...
வேகமாக சென்று கொண்டிருந்தவர் யார்மீதோ மோதிவிட “சாரி...” என்று நிமிர்ந்தவர் எதிரில் நின்றவனை கண்டதும் எதையோ நியாபக படுத்த முயன்றவாறே “வரதராஜன் பையன்தானே???...” என்றார் கேள்வியாக...
“ஆமா அங்கிள்... அப்பாவ தெரியுமா.???” என்றான் அவன் பதிலுக்கு...
“ஆமாப்பா... பிசினஸ் விஷயமா வரதராஜன பல தடவை சந்திச்சிருக்கேன்...”
“ஓஹ்...”
“அப்பா விஷயம் கேள்விப்பட்டேன்பா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது...” என்றார்....
தந்தையை பற்றி பேசியதும் அர்ஜுன் முகமும் வேதனையை பிரதிபலித்தது...
அதை உணர்ந்தவர் “சந்திக்கலாம்....” என்று அவன் தோளில் லேசாக தட்டி விடைபெற்றவராக சேதுபதி அவர் வழியில் சென்றுவிட அர்ஜுனும் தன்வழியில் சென்றுவிட்டான்.. இருவருக்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு முடிச்சு விழப்போவது இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை..
அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவனிடம் ஓடி வந்த சரஸ்வதி மீராவுக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அதில் கடுப்பானவன்,,,
“டாக்டர வர சொல்லி பார்த்திருக்க வேண்டியதுதான...” என்றான் கோபமாக....
“அதெல்லாம் டாக்டர் வந்து பார்த்திட்டுதான் போனாரு... அவளுக்கு அவங்க அப்பா நியாபகம் வந்துடுச்சி போல.. அப்பாவ பார்க்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... சிவா வேற இல்ல.. அவன் இருந்திருந்தா அவனே கூட்டிட்டு போயிருப்பான்... எனக்காக ஒரு தடவ அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வந்திடுப்பா...” என்று அவர் கெஞ்சும் குரலில் கேட்க வேறு வழியில்லாமல் “சரி சரி.... கூட்டிட்டு போய் தொலைக்கிறேன்....” என்றான் வேண்டா வெறுப்பாக...
—————————————————
நிர்மலாவை செக்கப்புக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள் நித்திலா.. அவரை மருத்துவர் பரிசோதித்ததும் தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் பாட்டியை விக்ரமுடன் அனுப்பிவிட்டு இவள் ஹாஸ்பிடலில் இருந்து வெளியேற போகும் சமயம் அர்ஜுனும் வெளியே வந்து கொண்டிருந்தான்...
இவளை கண்டதும் முகம் மலர “நித்திலா..!!!!” என்க நித்திலாவும் “அர்ஜுன்!!! என்ன இந்த பக்கம்... ஏதாவது உடம்பு சரியில்லையா???” அவனுக்கு என்னவோ என்று அவள் சற்று பதட்டமாக கேட்க அவனது அடி நெஞ்சு வரை இனித்தது..
“ஹேய் கூல் கூல்.... எனக்கு ஒன்னுமில்ல... தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்ல... அதான் கூட்டிட்டு வந்தேன்... நீ எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்க...” என்று அவன் பதிலுக்கு கேட்க...
“பாட்டிய கூட்டிட்டு வந்தேன் அர்ஜுன்....”
வெகுநாள் கழித்து இருவரும் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்..
அர்ஜுனை காணாமல் தேடி திரிந்த மீரா அவனை கண்டு அருகில் செல்லப்போக அங்கு நித்திலா நின்றிருப்பதை பார்த்ததும் தயக்கத்துடன் அவர்களை நெருங்கினாள்...
“ஆமா இவங்க யாரு..???” அவனுக்கு பின்னால் வந்து நின்ற மீராவை பார்த்து கேட்டாள் நித்திலா...
மீராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “இது... இது எங்க வீட்டுல வேல பார்க்கிற பொண்ணு... இவங்களதான் உடம்பு சரியில்லைனு கூட்டிட்டு வந்தேன்...” குரலில் பிசிர் தட்டாமல் கூறினான்...
நித்திலாவுக்கு மீராவை பார்த்தால் வேலைக்காரி போலவும் தெரியவில்லை... ஒரு வேலைக்காரியை இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு அதுவும் தானே அழைத்து வந்திருக்கிறான் என்பதும் நம்பும்படியாக இல்லை... மனதை எதுவோ உறுத்தினாலும் அர்ஜுன் தன்னிடம் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நினைவில் அவன் சொன்னதை நம்பினாள்...
“ஓகே அர்ஜுன்.... டைம் ஆச்சு நான் கிளம்புறேன்... இன்னொரு நாள் பார்க்கலாம்...” என்று நித்திலா விடைபெற,,,,
“ஹேய் நித்து... ஒன் மினிட்....” என்று அவளை தடுத்தவன் “நானும் அந்த பக்கமாத்தான் போறேன்... நானே உன்ன கூட்டிட்டு போறேன் வா....” என்றான்..
“பரவாயில்ல அர்ஜுன்... நானே போய்க்கிறேன்...”
அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பிடிவாதமாக அவளை தன்னுடன் வருமாறு வற்புறுத்த வேறுவழியின்றி தலையாட்டினாள் நித்திலா....
“பட் இவங்க???” என்று அவள் மீராவை கை காட்ட “அவ ஆட்டோல வீட்டுக்கு போயிடுவா....” என்றான்..
மீராவை நெருங்கி “நீ ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு வீட்டுக்கு போயிடு...” என்று சொன்னவன் அதற்குமேல் அவளை திரும்பியும் பாராது நித்திலாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்..
மகனுடன் சென்ற மருமகள் ஆட்டோவில் தனியாக திரும்பி வருவதை கண்ட சரஸ்வதி பதட்டத்துடன் “என்னாச்சு மீராம்மா நீ மட்டும் வர்ர... அர்ஜுன் எங்க??” எனக்கேட்க “ஒரு வேலையா போறாங்க அத்தை....” என்றவள் “ஆட்டோக்கு பணம் கொடுக்கல...” என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்..
“இரு நான் கொடுக்கிறேன்...” என்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தவருக்கு மகன்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது... உடம்பு சரியில்லாத பெண்ணை ஆட்டோவில் தனியாக அனுப்பியதும் இல்லாமல் பணம் கூட கொடுக்காமல் விட்டிருக்கிறானே என்று...
மீரா அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்... கடந்த சில நாட்களாக அவளுக்கு வாழ்வில் ஒரு பிடித்தமே இல்லாமல் போயிருந்தது.. அவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விட்டான் அர்ஜுன்...
தினமும் இழிசொல்லும் ஏதோ தரம் தாழ்ந்தவளை பார்ப்பது போன்ற பார்வையும் சின்னச்சின்ன செயல்களில் கூட அவள் மீதான அவனது காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்... அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று நித்திலாவிடம் அவளை வேலைக்காரியென்று கூறியது...
ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது எவ்வளவு கடினம் என்பதை உணராமல் மீராவின் உள்ளத்தை தன்னால் முடிந்தவரை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்....
மீராவை தேடி வந்த சரஸ்வதி அவள் அழுவதை கண்டு ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர் மருமகளின் நிலையை நினைத்து மனம் வருந்தினார் அந்த தாய்...
நித்திலா வீட்டுக்கு வருமாறு அழைத்தும் மறுத்தவன் வேறொரு நாள் நிச்சயம் வருவதாக கூறி அவளை டிராப் செய்துவிட்டு கிளம்பிவிட்டான்...
அவன் சென்றதும் கேட்டை தாண்டி வீட்டுக்குள் செல்லும் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவள் உள்ளுணர்வு உந்த சாரதாவின் வீட்டு பக்கம் பார்வையை திருப்பினாள்... பின்பு ஏமாற்றத்துடன் ஒரு பெருமூச்சை வெளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவளை வரவேற்றது மித்ராவின் குரோதப் பார்வை...
தனஞ்செயன் மற்றும் சந்திரலேகா மித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.. நிர்மலா ஒரு பக்கம் கடுகடுப்புடன் மித்ராவை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்...
அவளது வருகை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. விஸ்வநாதன்தான் தனஞ்செயன் எதிரில் மித்ராவை எதுவும் பேசிவிட வேண்டாம் என்று நிர்மலாவை எச்சரித்து வைத்திருந்ததால் ஒன்றும் பேச முடியாமல் முறைத்துக் கொண்டிருந்தார்....
நித்திலாவை கண்டதும் முகம் மலர “வாடா கண்ணா... ஷாப்பிங் முடிஞ்சதா???” என்று அவள் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை பார்க்க “ம்ம்ம்...” என்றவள் வேறு எதுவும் பேசாமல் மாடியில் இருக்கும் தன்னுடைய அறையை நோக்கி சென்றுவிட்டாள்.. மித்ராவின் குற்றம் சாட்டும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை..
அறைக்குள் வந்து கதவை தாளிட்ட பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது... அன்று முழுக்க வெளியில் செல்லாமல் ரூமுக்குள் அடைந்து கிடந்தவள் இரவு உணவுக்காக விஜயா பலமுறை அழைத்த பிறகுதான் வெளியே வந்தாள்...
பெயருக்கு எதையோ கொறித்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவை அடைக்கப்போக கதவை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மித்ரா..
வந்ததும் வராததுமாக நித்திலாவின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டவள் “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.... அங்க ஒருத்தன உயிரோட கொன்னுட்டு இங்க வந்து ஷாப்பிங் அது இதுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கியா??? உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி.???” என்றாள் கோபமாக.
“ஏன்... அவரு எனக்கு செஞ்சததான் நான் திருப்பி செஞ்சேன்...” என்றாள் நித்திலா கலங்கிய விழிகளை மறைக்க வேறுபக்கம் திரும்பியபடி...
“எங்கே என் முகத்த பார்த்து சொல்லு... அவன் உன்மேல உயிரே வெச்சிருக்கான்னு உனக்கு தெரியாது...” அவளது தாடையை பற்றி தன்புறம் திருப்பினாள் மித்ரா..
கலங்கியிருந்த அவளது விழிகளில் என்ன கண்டாளோ “ஏன்டி இப்படி அவனையும் கஷ்டபடுத்தி உன்னையும் கஷ்டபடுத்திக்கிற... நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கனும்னுதானே நான் என் பெயர கெடுத்துக்கிட்டு அத்தனையும் பண்ணேன்....” என்றாள் ஆற்றாமையுடன்..
பின்பு நித்திலாவின் கன்னத்தை தன் இரு கரங்களில் தாங்கியவள் “நித்தும்மா ஆதிகிட்ட போயிடுடா... அவன் மட்டும்தான் உன்ன நல்லபடியா பார்த்துக்குவான்... வேற யாரையும் நம்பாதே... நீ நல்லவங்கனு நினைக்கிறவங்கலாம் நிஜமாவே நல்லவங்க கிடையாது...” ஒரு குழந்தைக்கு கூறுவதை போல் கூறினாள்...
#########################
மறுநாள் காலை ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் நித்திலா, மித்ரா இருவரும் காரில் உட்கார்ந்திருந்தனர்... நித்திலா விரல் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.. ஏனோ அவ்வளவு படபடப்பாக இருந்தது அவளுக்கு...
நொடிகளே யுகங்களாக தோன்றிய ஒருசில நிமிட காத்திருப்புக்கு பிறகு இவர்களை தாண்டிச்சென்ற ஒரு கார் புழுதி பறக்க யு டர்ன் அடித்து இவர்களது காருக்கு எதிரே சற்று தூரத்தில் நின்றது...
நித்திலாவின் தோளை தொட்ட மித்ரா “போ நித்து... போய் பேசிட்டு வா...” என்க மிகுந்த தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினாள் நித்திலா...
அவனும் காரை விட்டு இறங்கினான்... தரையில் பார்வையை பதித்து மெல்லிய எட்டுக்களுடன் தனை நோக்கி நடந்து வருபவளை பார்த்துக் கொண்டே அழுத்தமான நடையுடன் முன்னேறினான் ஆதி...
அவள் எந்த தவறும் செய்யவில்லை... அவன் அவளுக்கு செய்த துரோகத்துக்கு ஒரு மிகச்சிறிய பதிலடியாகத்தான் அவனை விட்டுவிட்டு அவள் வந்தது.. அவள் நினைத்திருந்தால் அதைவிட பெரிதாக கூட அவனை காயப்படுத்தி இருக்கலாம்.. அவளால் அப்படி செய்ய முடியவில்லை...
சொல்லப் போனாள் தான் அவனை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை கூட அவனை பிரிந்து வந்த இத்தனை நாட்களில் அவளால் நன்றாகவே உணர முடிந்தது.. அந்த காதல் கொடுத்த குற்ற உணர்வில்தான் அவனுக்கு ஏதோ பெரிய தவறை இழைத்து விட்டது போல அவளால் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை...
அவனை நெருங்கியதும் தன் நடையை நிறுத்தியவள் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனது ஷூவை பார்த்துக் கொண்டு நிற்க அவன்தான் ஆரம்பித்தான்...
“என்னடா இளைச்சிட்ட... சரியா சாப்பிடலையா???” அவள் தலையை மென்மையாக தடவி வெகு இயல்பாக அவன் கேட்க இப்படி ஒரு கேள்வியை அவன் கேட்பான் என்று அவள் சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை...
கோபத்தில் கத்துவான்,,, தாம்தூம் என்று குதிப்பான் என எதிர்பார்த்து வந்தவள் அவனது இந்த கேள்வியில் மெல்ல விழியுயர்த்தி அவன் முகம் பார்த்தாள்...
சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியும் கறுத்து மெலிந்திருந்த முகமும் அவனும் அவள் நினைவில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பதை பறைசாற்ற “ஐம் சாரி...” என்று அவள் கூறிய அதே நேரம் அவனும் அதே வார்த்தையை அவளிடம் கூறினான்...
இருவரது பார்வைகளும் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன...
அவளது கரங்களை பற்றி தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..
இருவருக்குமே அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை... ஒரு சிறிய மௌனத்திற்கு பின் அவன்தான் தொடர்ந்தான்...
“உன்கிட்ட எதையும் பேசி க்ளியர் பண்ணாம உன்னை தொடனும் நினைச்சது என் தப்புத்தான்..”
நித்திலா அப்போதும் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க அவள் முன் மண்டியிட்டவன் “நீ எனக்கு எந்த வலிய கொடுக்கனும் நினைச்சியோ அதை கொடுத்துட்ட... இனிமேல் இந்த மாதிரி என்னை தவிக்க விட்டுட்டு போயிடாதடி... என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது....” உடைந்த குரலில் வேதனையுடன் கூறினான்...
அப்போதுதான் உணர்வு வந்தவள் போல் அவனது தோளில் கை வைத்தவள் “அத்தான் ப்ளீஸ் எழுந்திருங்க...” என்றாள் கெஞ்சும் குரலில்...
“ஆசையோ கோபமோ உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சி கூட பார்த்ததில்லடி.. எனக்கு எப்பவுமே நீ மட்டும்தான்... நீ என்ன விட்டுட்டு போனப்போ செத்துடலாம் போல இருந்துச்சுடீ....”
“ஏன் அத்தான் இப்படில்லாம் பேசுறீங்க... உங்களுக்கு புரிய வைக்கனும்னு தான் விட்டுட்டு வந்தேன்... நீங்க தேடி வருவீங்கன்னு நினைச்சேன்... நீங்க வராம போனதும் என்னை வெறுத்துட்டீங்களோனு பயமா இருந்துச்சி...” என்றாள்... “முதல்ல எழுந்திருங்க ப்ளீஸ்... இல்லைனா நான் போயிடுவேன்...” என்க உடனே எழுந்துவிட்டான்...
“நான் இல்லாம உன்னாலயும் இருக்க முடியாதுனு தெரியும்... அதை உனக்கு புரிய வைக்கத்தான் இத்தன நாளா வராம இருந்தேன்....”
பின்பு அவளது முகத்தை தன் கரங்களில் தாங்கியவன் “நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல பேபி...” என்றான்.. “அன்னைக்கு நடந்ததுக்கெல்லாம் ஐம் ரியலி ரியலி சாரிடா....”
மித்ரா என் ஃப்ரென்ட்மா... நீயும் சஞ்சயும் எப்படியோ அப்படித்தான் நானும் மித்ராவும்.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களுக்குள்ள எந்த தப்பான ரிலேஷன்ஷிப்பும் கிடையாதுடா.... அவ எனக்கு அம்மா மாதிரி...” என்றான் தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்தில்...
“எனக்கு தெரியும் அத்தான்... நான் உங்களையும் மித்ரா அக்காவையும் என்னைக்குமே தப்பா நினைச்சதில்ல...”
“ஆனா இதெல்லாம் ஏன் அத்தான்?? ஏதோ காரணத்துக்காக செஞ்சிருக்கீங்கன்னு தெரியுது... ஏன்??”
அவன் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்... என்னவென்று சொல்வான்.... அதை சொல்ல வேண்டும் என்றால் அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும்... ஆனால் இவள் அதை நம்புவாளா.. நித்திலா அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தால் கூட அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது...
அவனை பெற்ற அன்னை, உயிராக வளர்த்த அவனுடைய தாத்தா... அவர்களே அவன் சொன்னதை கடைசிவரை நம்பவில்லை.... ஏன் மித்ராவே கண்ணால் பார்த்த பிறகுதானே அத்தனையும் நம்பினாள்... நித்திலா எப்படி நம்புவாள்... எதையும் நிரூபிக்கவும் அவனிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை..
அவள் நம்பமாட்டாள் என்று உறுதியாக தெரிந்திருந்ததால் தான் அவன் இத்தனை நாள் இந்தப் பேச்சையே அவளிடம் பேசாமல் தவிர்த்து வந்தான்..
“அதுக்கான நேரம் வரும்போது நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றேன்டா... இப்ப வேண்டாம் பேபி...”
அவனுக்கு சொல்ல இஷ்டமில்லை என்பதை புரிந்து கொண்டவள் “ம்ம்ம்...” என்றாள்...
“ஆனா அன்னைக்கு நான் உன்ன வேற எதுவும் பண்ணலடா... ஒரு பதினேழு வயசு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன்லாம் கிடையாது..... அன்னைக்கு நீ மயங்கினதுக்கு அப்புறம் என் விரல் கூட உன்மேல படல...”
“தெரியும்..” என்றாள் அவள்... “அப்போ தெரியல... அப்புறம் பாட்டி வீட்டுக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன்... நான் ரொம்ப பயந்ததுனால பாட்டிதான் என்னை வெர்ஜினிட்டி டெஸ்ட்.......” சொல்லிக்கொண்டிருக்கும் போதே நித்திலாவை இழுத்து அணைத்துக் கொண்டான்... அவனது கரங்கள் லேசாக நடுங்கின...
தான் செய்த முட்டாள்தனமான செயலின் பாரதூரம் அவளது வாய்மொழியாக கேட்கும்போதுதான் அவனுக்கு புரிந்ததோ என்னவோ... துடித்துப் போய்விட்டான்...
“சாரி... சாரி... சாரி பேபி... என்னை மன்னிச்சிடுடி... அப்போ அன்னைக்கு நான் செஞ்சது எதுவும் உன்ன எந்த அளவுக்கு பாதிக்கும்னு நான் யோசிக்கவே இல்ல... நான் நினைச்சத செய்யனும்னு அது மட்டும்தான் என் மைன்ட்ல ஓடிட்டு இருந்தது.. உன்ன பத்தி நான் யோசிக்கவே இல்ல... ரொம்ப பயந்திருப்ப இல்லடா....” என்றான் விழிகள் கலங்க...
நித்திலாவினால் இல்லையென்று சொல்ல முடியவில்லை... அந்த நேரத்தில் அவள் அனுபவித்த வேதனை அப்படி..
“நான் என்னைக்குமே உன்கிட்ட தப்பா நடந்துக்கனும்னு நினைச்சதே இல்ல பேபி... அப்பப்ப உன் கிஸ் பண்ணனும் மாதிரி ஆசையா இருக்கும்... நீ தூங்கினதுக்கு அப்புறமா உன் ரூமுக்கு வருவேன்... அதையும் உன் அக்காகாரி எப்படித்தான் கண்டுபிடிப்பாளோ தெரியாது.. நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கால் பண்ணி என்னை ஆஃப் பண்ணி விட்டுடுவா....” என்றான் பெருமூச்சுடன்...
“அதுவும் தெரியும்... பால்ல தூக்க மாத்திரை போட்டு கொடுத்துட்டு வருவீங்களாம்...” என்றாள்..
“சௌர்யா சொன்னானா..???”
“ம்ம்ம்..... ஆனா... ஆனா எதுக்கு அவ்வளவு சின்ன வயசுல என் கழுத்துல தாலி கட்டினீங்க அத்தான்.????”
தொடரும்.......
அத்தியாயம் 35 பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.....
பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி
"ஆதியின் நிலா" கதைக்கான கருத்துகளை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com