Shrijo
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 11
“என் போன் மிஸ் பண்ணிட்டேன்... கொஞ்சம் எடுத்துத் தரீங்களா?” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்த்து அதிர்ந்தனர், மானவைத் தவிர.
கண்களில் நீர் வழிய, கையில் சிலம்பில்லாத கண்ணகியென, கோபத்தில் சிவந்த கண்களும், முகமுமாய் ரவுத்திரமாக சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள்.
“சம்யுக்தா” என்று சொல்லிக்கொண்டே பவித்ரா அவளருகேச் செல்ல,
ஒற்றை விரல் நீட்டி அவரை நிற்குமாறு சைகை செய்தவள், “என்னோட போனை உங்க வீட்ல மிஸ் பண்ணிட்டேன் மேம், கொஞ்சம் எடுத்துக் குடுத்திங்கன்னா நல்லா இருக்கும்” என்று,
அவள் சொல்லச் சொல்ல அவளுடைய போன், “சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா” என்று பாட்டுப் பாடி அதன் இருப்பை, வீட்டினுள்ளே உறுதி செய்தது.
அந்த பாடலின் சத்தம் கேட்டு டைனிங் டேபிள் பக்கம் திரும்பிய மானவ், அங்கிருந்த அவளின் போனை வேகமாக எடுக்கச் சென்றான்.
“அம்மாடி உள்ள வாம்மா... எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்” என்று பவித்ரா அவளை அழைக்க, அவளோ சற்றும் இளகாமல் நின்று கொண்டு இருந்தாள்.
சம்யுக்தாவின் போனை எடுத்துக்கொண்டு வந்த மானவ் “இந்தா உன் போன்” என்று அவள் மீது தூக்கி எரிய, அது அவள் மேனியில் பட்டு, அவளது காலடியில் விழுந்தது.
அவனது செயலில் மேலும் கோபம் கொண்ட சம்யுக்தா,
“உன் வீட்டு வாசல்ல நிக்கிறேன்னு டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்ஸ், கிவ் ரெஸ்பக்ட் அண்ட் டேக் ரெஸ்பக்ட்” என்று மானவைப் பார்த்துச் சொல்ல,
“அடச்சீ... நீயெல்லாம் ஒரு பொம்பளை, என்னவோ உத்தமி மாதிரி சவுன்ட் விடற? நீயே ஒரு ஒழுக்கம் கெட்டவ, இதுல உனக்கு மரியாதை தந்து பேசனுமா? நேரத்துக்கு ஒருத்தன் கூட சுத்தற, லண்டன்ல அந்த ரிக்கி, இங்க அந்த பிரித்வி, இதுல புருசன்ன்னு ஒரு கேரக்டர்... ஆமா நீ எதுக்கு இங்க வந்த? எதுக்கு இப்ப கிளம்பற?... இதுல எதுக்காவது பதில் சொல்லுடி பார்க்கலாம்”
“நீ ரொம்ப ஓவரா பேசீட்ட.... தென் நீ சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு, நான் உனக்கு பதில் சொல்ல, நீ எனக்கு யாரு? என்னைப் பத்தி எனக்குத் தெரியும்... உன்கிட்ட நான் உத்தமியா இல்லையான்னு, புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை, தேவையும் எனக்கு இல்லை, அதே நேரம் ஒரு விஷயம் நியாபகம் வைச்சுக்கோ.... இதுக்கும் சேர்த்து, நீ நல்லா அனுபவிப்ப... என்னிக்கு இருந்தாலும், ஒரு நாளைக்கு நீ என் காலடில வந்து விழுவ... அன்னிக்கு இருக்கு உனக்கு...” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய சம்யுக்தா, குனிந்து போனை எடுக்க முயற்சிக்க,
அதற்குள், அவளது போனை மகள் எடுத்திருந்தாள்.
“நீ பெரிய இவ, இதுல நான் உன் கால்ல விழுவேன்ன்னு சவால் வேற, மனசுல கண்ணகின்னு நினைப்பா? உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்டி... எண்ணி பத்தே நாள்... பொறுத்திருந்து பார்...”
அவனுக்கு பதில் சொல்லாமல்,
“வா ஜுவா போகலாம்....”
“ஒரு நிமிசம்மா...” என்றவள், பவித்ராவின் பக்கம் திரும்பி,
“மேம் நீங்க குடுத்த திங்க்ஸ் எல்லாம் வெளிய வைச்சிருக்கேன், எடுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு, மானவின் பக்கம் திரும்பி, “சார், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னிக்காவது ஒரு நாள், கண்டிப்பா என் அப்பா பதில் சொல்வாங்க... டோன்ட் பீ ஜட்ஜ்மேன்ட்டல்” என்று சொல்லிவிட்டு அன்னையின் கரம் பற்றி அவர்களது காருக்கு அழைத்துச் சென்றாள்.
துவண்டிருந்த சம்யுக்தா கூட மகளின் செயலில் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
நடந்த சம்பவங்களில் அனைவரும் திக் பிரம்மை பிடித்து நிற்க, எதையும் கண்டு கண்டு கொள்ளாமல் மானவ் அவனது அறைக்குச் செல்ல மாடியேற,
“நில்லு”
“அப்பா... அவ பேச்சை பேசற மாதிரி இருந்தா ஐ டோன்ட் ரெடி டூ டாக் நவ்... ”
“நான் அவ பேச்சை பேசலை, இந்த வீட்டு விஷயம் பேச கூப்பிடறேன்”
“சொல்லுங்க”
“இந்த வீட்டை விட்டு வெளிய போ”
“அப்பா...” என்று அவன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நிற்க,
“சம்யுக்தா என்னிக்கு இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கிறாளோ, அன்னிக்குத் தான் இந்த வீட்டுக்குள்ள உனக்கு இடம், அதுவரைக்கும் இந்த வீட்ல நீ காலடி எடுத்து வைக்க நான் அனுமதிக்க மாட்டேன், கூடவே எனக்கு விருப்பமும் இல்லை”
“யாரோ ஒருத்திக்காக என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்றீங்களா?”
“யாரோ ஒருத்திக்காக இல்லை... எங்க மகளுக்காக.... எங்க சொந்த ரத்தத்துக்காக.... இந்த வீட்ல அவளுக்கும் ஒரு பங்கு இருக்கு, எப்ப அவ இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க முடியாம போச்சோ... இனி அதுக்கு காரணமான உனக்கும் இங்க இடமில்லை...”
“என்னப்பா சொல்றீங்க? அம்மா என்னமா? அப்பா என்ன சொல்றாங்க?” என்று தந்தையின் கூற்றில் அதிர்ந்தவனாக அன்னையிடம் சென்று அவரை உலுக்க,
அதுவரை நிகழ்ந்த செயல்களில், சிலையென சமைந்து நின்ற பவித்ரா, அவனது உலுக்கலில் நிகழ்வுக்கு வந்தார்.
“உனக்கு விளக்கம் சொல்ற நிலைமைல நாங்க இல்லை, ஒன்னு தெரிஞ்சுக்கோ, அவ என் ரத்தம், எப்ப நீ அவளோட பெண்மையை கேவலப்படுத்தி பேசினியோ, அது என்னைப் பொறுத்த வரைக்கும், நீ அவளை பேசினது இல்லை, என்னை பேசியதுக்கு சமம்.... இனி என் முகத்துல விழிக்காத...” என்றவர் அவரது அறைக்குள் கண்ணீருடன் நுழைந்து கொள்ள,
“அப்பா.... இதென்னப்பா புது கதை... எப்படிப்பா....?” என்று அதிர்ச்சியுடனும், நம்ப முடியாமலும் மானவ் துவண்டு கீழே அமர,
“நித்யா... எங்களை புரிஞ்சுகிட்டு இருப்பன்னு நினைக்கிறேன், உன் மாப்பிள்ளையை நாளைக்கு காலைல நாங்க இந்த வீட்ல பார்க்க கூடாது... மனிஷா இங்க இருக்கறது மனிஷா விருப்பம்... நீ இங்க தான் இருக்கிற, இவனுக்கு மாமியார் ஆகறதுக்கு முன்னாடி, நீ எனக்கு தங்கை... புரிஞ்சுதா”
“நான் நீங்க போக சொன்னா கூட, இங்கதான் இருப்பேண்ணா... தனுவை விடறதும் கூட்டிப்போறதும் அவங்க விருப்பம்”
“மானவ், உன்கிட்ட இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டதில்லை, முதல் தடவையா கேட்கிறேன், சம்யுக்தா எங்க பொண்ணுன்னு அவளுக்கேத் தெரியாது, இன்னும் பத்து நாள்ல இங்க இருந்து கிளம்பப்போறா, அவ நிம்மதி கெடாம பார்த்துப்பேன்னு நினைக்கிறேன், தென் சம்யுக்தா இந்த வீட்டுக்குள்ள வர்ற வரைக்கும் உனக்கு இந்த வீட்ல அனுமதி இல்லை, நான்
“என் போன் மிஸ் பண்ணிட்டேன்... கொஞ்சம் எடுத்துத் தரீங்களா?” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்த்து அதிர்ந்தனர், மானவைத் தவிர.
கண்களில் நீர் வழிய, கையில் சிலம்பில்லாத கண்ணகியென, கோபத்தில் சிவந்த கண்களும், முகமுமாய் ரவுத்திரமாக சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள்.
“சம்யுக்தா” என்று சொல்லிக்கொண்டே பவித்ரா அவளருகேச் செல்ல,
ஒற்றை விரல் நீட்டி அவரை நிற்குமாறு சைகை செய்தவள், “என்னோட போனை உங்க வீட்ல மிஸ் பண்ணிட்டேன் மேம், கொஞ்சம் எடுத்துக் குடுத்திங்கன்னா நல்லா இருக்கும்” என்று,
அவள் சொல்லச் சொல்ல அவளுடைய போன், “சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா” என்று பாட்டுப் பாடி அதன் இருப்பை, வீட்டினுள்ளே உறுதி செய்தது.
அந்த பாடலின் சத்தம் கேட்டு டைனிங் டேபிள் பக்கம் திரும்பிய மானவ், அங்கிருந்த அவளின் போனை வேகமாக எடுக்கச் சென்றான்.
“அம்மாடி உள்ள வாம்மா... எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்” என்று பவித்ரா அவளை அழைக்க, அவளோ சற்றும் இளகாமல் நின்று கொண்டு இருந்தாள்.
சம்யுக்தாவின் போனை எடுத்துக்கொண்டு வந்த மானவ் “இந்தா உன் போன்” என்று அவள் மீது தூக்கி எரிய, அது அவள் மேனியில் பட்டு, அவளது காலடியில் விழுந்தது.
அவனது செயலில் மேலும் கோபம் கொண்ட சம்யுக்தா,
“உன் வீட்டு வாசல்ல நிக்கிறேன்னு டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்ஸ், கிவ் ரெஸ்பக்ட் அண்ட் டேக் ரெஸ்பக்ட்” என்று மானவைப் பார்த்துச் சொல்ல,
“அடச்சீ... நீயெல்லாம் ஒரு பொம்பளை, என்னவோ உத்தமி மாதிரி சவுன்ட் விடற? நீயே ஒரு ஒழுக்கம் கெட்டவ, இதுல உனக்கு மரியாதை தந்து பேசனுமா? நேரத்துக்கு ஒருத்தன் கூட சுத்தற, லண்டன்ல அந்த ரிக்கி, இங்க அந்த பிரித்வி, இதுல புருசன்ன்னு ஒரு கேரக்டர்... ஆமா நீ எதுக்கு இங்க வந்த? எதுக்கு இப்ப கிளம்பற?... இதுல எதுக்காவது பதில் சொல்லுடி பார்க்கலாம்”
“நீ ரொம்ப ஓவரா பேசீட்ட.... தென் நீ சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு, நான் உனக்கு பதில் சொல்ல, நீ எனக்கு யாரு? என்னைப் பத்தி எனக்குத் தெரியும்... உன்கிட்ட நான் உத்தமியா இல்லையான்னு, புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை, தேவையும் எனக்கு இல்லை, அதே நேரம் ஒரு விஷயம் நியாபகம் வைச்சுக்கோ.... இதுக்கும் சேர்த்து, நீ நல்லா அனுபவிப்ப... என்னிக்கு இருந்தாலும், ஒரு நாளைக்கு நீ என் காலடில வந்து விழுவ... அன்னிக்கு இருக்கு உனக்கு...” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய சம்யுக்தா, குனிந்து போனை எடுக்க முயற்சிக்க,
அதற்குள், அவளது போனை மகள் எடுத்திருந்தாள்.
“நீ பெரிய இவ, இதுல நான் உன் கால்ல விழுவேன்ன்னு சவால் வேற, மனசுல கண்ணகின்னு நினைப்பா? உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்டி... எண்ணி பத்தே நாள்... பொறுத்திருந்து பார்...”
அவனுக்கு பதில் சொல்லாமல்,
“வா ஜுவா போகலாம்....”
“ஒரு நிமிசம்மா...” என்றவள், பவித்ராவின் பக்கம் திரும்பி,
“மேம் நீங்க குடுத்த திங்க்ஸ் எல்லாம் வெளிய வைச்சிருக்கேன், எடுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு, மானவின் பக்கம் திரும்பி, “சார், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னிக்காவது ஒரு நாள், கண்டிப்பா என் அப்பா பதில் சொல்வாங்க... டோன்ட் பீ ஜட்ஜ்மேன்ட்டல்” என்று சொல்லிவிட்டு அன்னையின் கரம் பற்றி அவர்களது காருக்கு அழைத்துச் சென்றாள்.
துவண்டிருந்த சம்யுக்தா கூட மகளின் செயலில் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
நடந்த சம்பவங்களில் அனைவரும் திக் பிரம்மை பிடித்து நிற்க, எதையும் கண்டு கண்டு கொள்ளாமல் மானவ் அவனது அறைக்குச் செல்ல மாடியேற,
“நில்லு”
“அப்பா... அவ பேச்சை பேசற மாதிரி இருந்தா ஐ டோன்ட் ரெடி டூ டாக் நவ்... ”
“நான் அவ பேச்சை பேசலை, இந்த வீட்டு விஷயம் பேச கூப்பிடறேன்”
“சொல்லுங்க”
“இந்த வீட்டை விட்டு வெளிய போ”
“அப்பா...” என்று அவன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நிற்க,
“சம்யுக்தா என்னிக்கு இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கிறாளோ, அன்னிக்குத் தான் இந்த வீட்டுக்குள்ள உனக்கு இடம், அதுவரைக்கும் இந்த வீட்ல நீ காலடி எடுத்து வைக்க நான் அனுமதிக்க மாட்டேன், கூடவே எனக்கு விருப்பமும் இல்லை”
“யாரோ ஒருத்திக்காக என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்றீங்களா?”
“யாரோ ஒருத்திக்காக இல்லை... எங்க மகளுக்காக.... எங்க சொந்த ரத்தத்துக்காக.... இந்த வீட்ல அவளுக்கும் ஒரு பங்கு இருக்கு, எப்ப அவ இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க முடியாம போச்சோ... இனி அதுக்கு காரணமான உனக்கும் இங்க இடமில்லை...”
“என்னப்பா சொல்றீங்க? அம்மா என்னமா? அப்பா என்ன சொல்றாங்க?” என்று தந்தையின் கூற்றில் அதிர்ந்தவனாக அன்னையிடம் சென்று அவரை உலுக்க,
அதுவரை நிகழ்ந்த செயல்களில், சிலையென சமைந்து நின்ற பவித்ரா, அவனது உலுக்கலில் நிகழ்வுக்கு வந்தார்.
“உனக்கு விளக்கம் சொல்ற நிலைமைல நாங்க இல்லை, ஒன்னு தெரிஞ்சுக்கோ, அவ என் ரத்தம், எப்ப நீ அவளோட பெண்மையை கேவலப்படுத்தி பேசினியோ, அது என்னைப் பொறுத்த வரைக்கும், நீ அவளை பேசினது இல்லை, என்னை பேசியதுக்கு சமம்.... இனி என் முகத்துல விழிக்காத...” என்றவர் அவரது அறைக்குள் கண்ணீருடன் நுழைந்து கொள்ள,
“அப்பா.... இதென்னப்பா புது கதை... எப்படிப்பா....?” என்று அதிர்ச்சியுடனும், நம்ப முடியாமலும் மானவ் துவண்டு கீழே அமர,
“நித்யா... எங்களை புரிஞ்சுகிட்டு இருப்பன்னு நினைக்கிறேன், உன் மாப்பிள்ளையை நாளைக்கு காலைல நாங்க இந்த வீட்ல பார்க்க கூடாது... மனிஷா இங்க இருக்கறது மனிஷா விருப்பம்... நீ இங்க தான் இருக்கிற, இவனுக்கு மாமியார் ஆகறதுக்கு முன்னாடி, நீ எனக்கு தங்கை... புரிஞ்சுதா”
“நான் நீங்க போக சொன்னா கூட, இங்கதான் இருப்பேண்ணா... தனுவை விடறதும் கூட்டிப்போறதும் அவங்க விருப்பம்”
“மானவ், உன்கிட்ட இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டதில்லை, முதல் தடவையா கேட்கிறேன், சம்யுக்தா எங்க பொண்ணுன்னு அவளுக்கேத் தெரியாது, இன்னும் பத்து நாள்ல இங்க இருந்து கிளம்பப்போறா, அவ நிம்மதி கெடாம பார்த்துப்பேன்னு நினைக்கிறேன், தென் சம்யுக்தா இந்த வீட்டுக்குள்ள வர்ற வரைக்கும் உனக்கு இந்த வீட்ல அனுமதி இல்லை, நான்