All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
இன்றிரவு 10.30 மணிக்க எபியோடு வருகிறேன். அதற்கு முன் சின்ன முன்னோட்டம் ❤️❤️❤️

"கெட்டி மேளம், கெட்டி மேளம்..." என்று அய்யர் சொல்லவும்...


சக்தீஸ்வரன் மங்கலநாணை கரங்களில் எடுத்து அதைச் சகுந்தலா முகத்துக்கு முன்னே விரித்து அவளைப் பார்த்தான். அவளோ முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தாள். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்காக அவள் தலைகுனிந்தும் இருக்கவில்லை. அவளது உணர்வுகளைத் தான் அவன் தனது வார்த்தைகளால் கொன்று விட்டானே! அவளது இறுகிய பாவனையைக் கண்ட சக்தீஸ்வரன் ஒரு பெருமூச்சுடன் அவளது கழுத்தில் மங்கலநாணை அணிவித்துத் தனது மனைவியாக்கி கொண்டான்.

அதன் பிறகு நடந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. அடுத்து மூன்று மணமக்களையும் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கன்னிகா தனது புகுந்த வீட்டினரோடு செல்ல... மற்றவர்கள் தங்களது வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு வந்ததும் நேரே பத்மினி நாராயணனுடன் தனது புகுந்த வீட்டிற்குச் செல்ல... சகுந்தலா சக்தீஸ்வரன் கரம் பற்றி அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கு உதயரேகா, வித்யா இருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

வீட்டினுள் அழைத்துச் சென்ற மணமக்களை நேரே பூஜையறைக்கு அழைத்துச் சென்றனர். உதயரேகா சகுந்தலாவை விளக்கு ஏற்ற பணிக்க... அவளும் விளக்கேற்றி வணங்கினாள். சக்தீஸ்வரன் முகம் இறுக அனைத்தையும் பார்த்திருந்தான். பின்பு மணமக்களுக்குப் பால், பழம் கொடுத்தனர். சகுந்தலா சக்தீஸ்வரனின் எச்சிலை மறுக்கவில்லை. மறுத்தால் அது பெரும் கேலிக்கூத்துக்கு ஆளாகி விடும் என்றெண்ணி அவள் அமைதியாக இருந்தாள்.

"ரொம்ப டயர்டா இருக்கச் சக்கு. போய் ரெஸ்ட் எடு." உதயரேகா சகுந்தலாவிடம் கூறியவள் பின்பு மகன் புறம் திரும்பி, "உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ." என்று கட்டளை போல் கூற...

சக்தீஸ்வரன் ஒன்றும் பேசாது எழுந்தான். சகுந்தலாவும் அமைதியாக எழுந்தாள். இருவரும் மாடிப்படியேறி மேலே போக... சகுந்தலா உடல் தடுமாற அப்படியே பின்னுக்குச் சாயப் போனாள். ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து நிறுத்தியவன் அடுத்த நொடி அவளைத் தனது கரங்களில் ஏந்தி இருந்தான்.

"என்னை விடுங்க." அவள் அவனது பிடியில் இருந்து திமிற... அவளை முறைத்து பார்த்தவன் ஒன்றும் பேசாது தூக்கி செல்ல... அவள் தான் வாயை மூடி கொண்டாள்.

அறைக்குள் சென்றதும் சகுந்தலாவை இறக்கி விட்ட சக்தீஸ்வரன் அங்கிருந்த சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் ஆயாசமாக விழிகளை மூடி கொண்டான். சகுந்தலா என்ன செய்வது? என்று தெரியாது தரையில் அமர்ந்து உடலை சுவற்றில் சாய்த்து கொண்டாள். தனது முழங்காலில் முகம் புதைத்தவள் அதன் பிறகு நிமிரவே இல்லை.

இருவரது எண்ணங்களும் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 22



சக்தீஸ்வரன் மணமகன் கோலத்தில் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவன் அருகில் சகுந்தலா முகத்தில் மகிழ்ச்சி இல்லாது இறுகி போய் அமர்ந்து இருந்தாள். மணமக்களைச் சுற்றி வீட்டினர் அனைவரும் குழுமியிருந்தனர். நாராயணன் பத்மினி, கன்னிகா சஞ்சய் இரு ஜோடிகளும் புதுமணத் தம்பதிகளாய் அங்கே நின்றிருந்தனர். சில மணித்துளிகளுக்கு முன்பு தான் இரு ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. நாராயணன் இறுக்கமான முகத்துடன் நின்றிருக்க... பத்மினி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பின்னே அவளது தோழி சகுந்தலா அவளது அண்ணியாகப் போகின்றாளே. கன்னிகா பொறாமையுடன் அக்காவை பார்த்திருந்தாள். சஞ்சய் தங்களது திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் நின்றிருந்தான்.



முன்பு மகளது வாழ்க்கையை எண்ணி கலங்கிய கணபதி, விஜயா இருவருக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. சர்வேஸ்வரன் அடக்கப்பட்ட கோபத்துடன் நின்றிருந்தான். உதயரேகாவுக்கு மனதில் வருத்தம் இருந்த போதும் சகுந்தலா தனது மருமகளாக வருவது குறித்து மகிழ்ச்சி தான். அவள் மனதிற்குள் கடவுளை மானசீகமாக வணங்கி நன்றி கூறி கொண்டிருந்தாள். கூடியிருந்த இளையோர்கள் இந்திராணி, வினிதா, ஆதித்யா, ஆதிரை எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சியே. எப்படியோ சக்தீஸ்வரன், சகுந்தலா ஒன்று சேர்ந்தனரே என்று...



"கெட்டி மேளம், கெட்டி மேளம்..." என்று அய்யர் சொல்லவும்...



சக்தீஸ்வரன் மங்கலநாணை கரங்களில் எடுத்து அதைச் சகுந்தலா முகத்துக்கு முன்னே விரித்து அவளைப் பார்த்தான். அவளோ முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தாள். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்காக அவள் தலைகுனிந்தும் இருக்கவில்லை. அவளது உணர்வுகளைத் தான் அவன் தனது வார்த்தைகளால் கொன்று விட்டானே! அவளது இறுகிய பாவனையைக் கண்ட சக்தீஸ்வரன் ஒரு பெருமூச்சுடன் அவளது கழுத்தில் மங்கலநாணை அணிவித்துத் தனது மனைவியாக்கி கொண்டான்.



அதன் பிறகு நடந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. அடுத்து மூன்று மணமக்களையும் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கன்னிகா தனது புகுந்த வீட்டினரோடு செல்ல... மற்றவர்கள் தங்களது வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு வந்ததும் நேரே பத்மினி நாராயணனுடன் தனது புகுந்த வீட்டிற்குச் செல்ல... சகுந்தலா சக்தீஸ்வரன் கரம் பற்றி அவனது வீட்டிற்குச் சென்றாள். அங்கு உதயரேகா, வித்யா இருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.



வீட்டினுள் அழைத்துச் சென்ற மணமக்களை நேரே பூஜையறைக்கு அழைத்துச் சென்றனர். உதயரேகா சகுந்தலாவை விளக்கு ஏற்ற பணிக்க... அவளும் விளக்கேற்றி வணங்கினாள். சக்தீஸ்வரன் முகம் இறுக அனைத்தையும் பார்த்திருந்தான். பின்பு மணமக்களுக்குப் பால், பழம் கொடுத்தனர். சகுந்தலா சக்தீஸ்வரனின் எச்சிலை மறுக்கவில்லை. மறுத்தால் அது பெரும் கேலிக்கூத்துக்கு ஆளாகி விடும் என்றெண்ணி அவள் அமைதியாக இருந்தாள்.



"ரொம்ப டயர்டா இருக்கச் சக்கு. போய் ரெஸ்ட் எடு." உதயரேகா சகுந்தலாவிடம் கூறியவள் பின்பு மகன் புறம் திரும்பி, "உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ." என்று கட்டளை போல் கூற...



சக்தீஸ்வரன் ஒன்றும் பேசாது எழுந்தான். சகுந்தலாவும் அமைதியாக எழுந்தாள். இருவரும் மாடிப்படியேறி மேலே போக... சகுந்தலா உடல் தடுமாற அப்படியே பின்னுக்குச் சாயப் போனாள். ஒற்றைக் கையால் அவளைப் பிடித்து நிறுத்தியவன் அடுத்த நொடி அவளைத் தனது கரங்களில் ஏந்தி இருந்தான்.



"என்னை விடுங்க." அவள் அவனது பிடியில் இருந்து திமிற... அவளை முறைத்து பார்த்தவன் ஒன்றும் பேசாது தூக்கி செல்ல... அவள் தான் வாயை மூடி கொண்டாள்.



அறைக்குள் சென்றதும் சகுந்தலாவை இறக்கி விட்ட சக்தீஸ்வரன் அங்கிருந்த சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் ஆயாசமாக விழிகளை மூடி கொண்டான். சகுந்தலா என்ன செய்வது? என்று தெரியாது தரையில் அமர்ந்து உடலை சுவற்றில் சாய்த்து கொண்டாள். தனது முழங்காலில் முகம் புதைத்தவள் அதன் பிறகு நிமிரவே இல்லை.



இருவரது எண்ணங்களும் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது. சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் அதையே தான் நினைத்து கொண்டிருந்தனர்.



இன்று காலையில் நாராயணன் பத்மினி, கன்னிகா சஞ்சய் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சகுந்தலா அங்கும் இங்கும் பம்பரமாக ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். அவளது முகத்தில் சிறிதும் வருத்தம் இல்லை. மாறாக அவள் புன்னகை முகத்துடன் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள். அவளது மொட்டை தலையைக் கண்டு ஒரு சிலர் பரிகாசம் செய்தாலும்... விசயம் தெரிந்ததும் அவர்கள் எல்லோரும் அவளைப் பிரமிப்பாய் பார்த்தனர். அவள் மீதான மதிப்பு அதிகரித்தது. அவள் மீதான எல்லோரின் பார்வையும் மாறியது. தூய அன்பு என்றுமே தோற்காது அல்லவா!



சகுந்தலா எதையும் கண்டு கொள்ளாது ஓடி கொண்டிருந்தாள். சர்வேஸ்வரன், உதயரேகா, கணபதி, விஜயா நால்வரும் அவளைக் கவலையுடன் பார்த்திருந்தனர். இடைப்பட்ட நாட்களில் சர்வேஸ்வரன் சகுந்தலாவுக்காக ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டான். அந்த மணமகன் நல்லவன். சகுந்தலாவை கண்டு விரும்பியே திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அதை அவளிடம் கூற...



"எனக்குக் கல்யாணம் வேண்டாம்." என்று சகுந்தலா அலறி ஆர்ப்பாட்டம் செய்ய... எல்லோரும் செய்வதறியாது விழித்தனர்.



"நீ கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இரு. உன்னைய நெனைச்சு கவலைப்பட்டு நாங்க செத்து போறோம்." விஜயா தலையில் அடித்துக் கொண்டு அழ...



"நீங்க ஒண்ணும் சாக வேண்டாம். நான் செத்து போறேன். என்னால் தான் உங்க எல்லோருக்கும் தொல்லை. நான் செத்து போறேன்." என்று அழுதவளை கண்டு சர்வேஸ்வரன், உதயரேகா தான் துடிதுடித்துப் போயினர்.



"அப்படியாவது எங்க உயிரை வாங்காம செத்து தொலை." விஜயா கோபமும், அழுகையுமாய்ச் சத்தம் போட...



"விஜயா, என்ன பேச்சு பேசுற?" கணபதி தான் அவளை அடக்கினார்.



"கணபதி, விஜயா இனிமேல் சக்கு எங்க மகள். இனி அவளைத் தொந்தரவு பண்ணாதீங்க." என்று சர்வேஸ்வரன் தீர்க்கமாய்க் கூறிவிட... கணபதி, விஜயா இருவரும் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டனர்.



"மாமோய்..." சகுந்தலா சர்வேஸ்வரன் மடியில் முகம் புதைத்து அழ... சர்வேஸ்வரன் அவளை ஆறுதலாய் தட்டி கொடுக்க... உதயரேகா சகுந்தலாவின் கரத்தினை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள்.



சக்தீஸ்வரன் சகுந்தலாவை கடுமையாய் பேசியதில் இருந்து அழுது கரைந்தவள்... ஒரு கட்டத்தில் கண்ணீர் வற்றி தனக்குள் இறுகி அமைதியாகி போனாள். அவள் மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்ட போதும்... அவளது இதழ்களின் புன்னகை அவளது விழிகளை எட்டாது இருந்ததை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். அதனால் தான் சர்வேஸ்வரன் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தது. அதுவும் மணமகன் விரும்பி சகுந்தலாவை பெண் கேட்டது கண்டு அவன் மகிழ்ந்து தான் போனான். ஆனால் திருமணம் வேண்டாம் என்று அழும் சகுந்தலாவின் மனதினை எப்படி மாற்றுவது? என்று அவனுக்குத் தெரியவில்லை.



"எதுக்குக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற சக்கு? இப்படியே தனியா இருக்க முடியுமா? எங்க காலம் வரைக்கும் சரி. அதுக்குப் பிறகு நீ தனியா என்ன பண்ணுவ?" என்று உதயரேகா கவலையுடன் அவளிடம் கேட்க...



"நான் தனியா இருந்துக்குவேன். எனக்கு இது போதும், இது மட்டும் போதும்." அவள் எதையோ தனக்குள் யோசித்தபடி கூறினாள்.



அந்தக் கணம் அவர்களும் அவள் மனம் மாற வேண்டி விட்டு விட்டனர். அதன் பிறகு சகுந்தலாவும் அண்ணன், தங்கை திருமண வேலைகளில் பிசியாகி போனாள். அவள் தனது கவலையை மறந்து விட்டாள் என்று தான் அனைவரும் எண்ணி கொண்டிருந்தனர். ஆனால் அவள் எதையும் மறக்கவில்லை. அவள் எல்லாவற்றையும் மனதில் போட்டு மறுகி கொண்டிக்கிறாள் என்பதை யாரும் அறியவில்லை.



நால்வரும் பழையதை நினைத்தபடி இருந்தனர். கணபதி கரத்தினைப் பற்றிக் கொண்ட சர்வேஸ்வரன், "சக்கு என் பொறுப்பு... என்னைக்கு இருந்தாலும் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் கடமை." என்று உறுதியோடு கூற... அதைக் கேட்டு கணபதி, விஜயா நிம்மதி கொண்டனர். சர்வேஸ்வரன் இருக்கப் பயமேன்.



பத்மினி, கன்னிகா இருவரையும் மணவறையில் அய்யர் அழைப்பதாகக் கூற வந்த சகுந்தலா தனக்குத் தலைச்சுற்றுவது போலிருக்கவும்... அங்கிருந்த கட்டிலில் அப்படியே அமர்ந்து விட்டாள். பெண்ணழைத்துச் செல்லும் பரபரப்பில் இருந்தவர்கள் அவளைக் கண்டு கொள்ளாது சென்று விட்டனர். அறைக்குள் இருந்த சகுந்தலா கண்களை இருட்டி கொண்டு மயக்கம் போட்டுப் படுக்கையில் விழுந்து விட்டாள்.



தாலி கட்டும் நேரம் என்பதால் எல்லோரின் கவனமும் மணமக்களிடம் இருந்தது. சர்வேஸ்வரன் மட்டுமே சகுந்தலா இங்கு இல்லாததைக் கவனித்தான்.



"உதி, இங்கு நீ பார்த்துக்கோ. நான் இப்போ வர்றேன்." என்று அவன் அங்கிருந்து நகரப் போனான்.



"தாலி கட்ட போகிற நேரம் எங்கே போறீங்க? இருங்க." உதயரேகா அவனை வலியுறுத்த...



இன்னும் சில நொடிகளில் மகளின் கழுத்தில் தாலி ஏறிவிடும். பெற்ற தகப்பனாய் மகளது திருமணத்தைக் காண அவனுக்குமே ஆவலாக இருந்தது. ஒரு நிமிடம் தானே என்று அவன் அமைதியாக நின்றான். முதலில் சஞ்சய் கன்னிகா கழுத்தில் மங்கலநாணை அணிவிக்க... அடுத்து நாராயணன் பத்மினி கழுத்தில் மங்கலநாணை அணிவித்தான். தங்கையின் திருமணம் நடைபெறாது தனக்குத் திருமணம் நடைபெறுவது குறித்து அவனுக்குச் சற்று வருத்தம் தான். அதற்காகத் தன்னை நம்பியிருக்கும் பெண்ணவளை ஏமாற்ற அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் நாராயணன் திருமணத்துக்குச் சம்மதித்தது.



தாலியேறிய அடுத்த நொடி சர்வேஸ்வரன் சகுந்தலாவை தேடி ஓடினான். மணமேடையில் இருந்தபடி வந்திருந்த கூட்டத்தில் அவளைத் தேடி நாலாப்புறமும் விழிகளைச் சுழற்றினான். எங்கும் சகுந்தலா இல்லை. அவனுக்குப் பயமாக இருந்தது. சகுந்தலா இறுதியாக எங்கே சென்றாள் என்று அவன் யோசிக்க... அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது, சகுந்தலா மணப்பெண்களை அழைக்க அவர்களது அறைக்குள் சென்றது. சர்வேஸ்வரன் மணமகள் அறையை நோக்கி விரைந்தான்.



சர்வேஸ்வரன் நினைத்தது போல் சகுந்தலா அங்கே தான் இருந்தாள். ஆனால் அவளைக் கண்டு மகிழ முடியாதபடி அவளது நிலை இருந்தது. மயங்கிய நிலையில் இருந்த பெண்ணவளை கண்டு பெறாத அந்தத் தகப்பனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.



"சக்கு..." அவன் அலறிக் கொண்டே அவளைத் தூக்க... அவனின் பின்னேயே வந்த உதயரேகாவும் சகுந்தலாவின் நிலையைக் கண்டு பயந்து போனாள்.



"உதி, அந்தத் தண்ணி பாட்டிலை எடுத்து தா." சர்வேஸ்வரன் சொல்ல... உதயரேகா தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கணவனிடம் கொடுத்தாள்.



சர்வேஸ்வரன் சகுந்தலாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தபடி, "நம்ம டாக்டரை கூட்டிட்டு வா." என்று கூற...



திருமணத்திற்காக வந்திருந்த தங்களது குடும்ப மருத்துவரை அழைத்து வர எண்ணி உதயரேகா பரபரப்புடன் அறையை விட்டு வெளியில் வந்தாள்.



முகத்தில் நீர் பட்டதும் சகுந்தலா மெல்ல விழிகளைத் திறந்தாள். அவள் விழிப்பதை கண்டதும் சர்வேஸ்வரன் அவளிடம், "அம்மாடி, என்ன பண்ணுது? காலையில் சாப்பிட்டியா? இல்லையா?" என்று அக்கறையுடன் கேட்டான்.



"சாப்பிட்டேன் மாமோய். என்னன்னு தெரியலை." சகுந்தலா பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே... உதயரேகா மருத்துவருடன் அறைக்குள் நுழைந்தாள்.



"நம்மைக் காணோம்ன்னு யாராவது கேட்டாங்களா?" சர்வேஸ்வரன் மனைவியிடம் கேட்க...



"வித்யாக்காவிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். அவங்க பார்த்துக்குவாங்க." உதயரேகா பதிலில் அவன் நிம்மதி கொண்டான்.



"டாக்டர், சக்கு திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். என்னன்னு பாருங்க?" சரவேஸ்வரன் எழுந்து மருத்துவர் அமர இடம் கொடுத்தான்.



மருத்துவர் சகுந்தலாவை சோதித்துப் பார்த்தார். அவளது உடல் மாற்றம் அவருக்கு எதையோ அறிவுறுத்தியது. அவர் மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குத் தேவையான கருவிகள் என்று சிலவற்றை எப்போதும் தனது பையில் வைத்திருப்பார்.



மருத்துவர் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியை எடுத்துச் சகுந்தலாவிடம் கொடுத்து, "உள்ளே போய்ச் செக் பண்ணிட்டு வாம்மா." என்று கூற...



"ஐயோ, சக்கு வெகுளி பெண். இது எல்லாம் வேண்டாம்." சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் பதறி போயினர். சகுந்தலா பற்றி அவர்களுக்குத் தெரியாதா!



"உனக்குக் கடைசியா எப்போ பீரியட்ஸ் வந்ததும்மா?" மருத்துவர் கனிவுடன் சகுந்தலாவிடம் விசாரித்தார்.



சகுந்தலா பெருத்த யோசனையுடன் தனக்குள் கணக்கிட்டு பார்த்தவள், "ரெண்டு மாசத்துக்கு முந்தி..." என்று கூற... மருத்துவர் அர்த்த புன்னகையுடன் சர்வேஸ்வரன், உதயரேகாவை பார்த்தவர்,



"போம்மா, போய்ச் செக் பண்ணு." என்க...



"எனக்கு எதுவும் பெரிய வியாதியா? நான் செத்துப் போகப் போறேனா?" சகுந்தலாவுக்குப் பயத்தில் அழுகை வந்தது.



அவளது பேச்சில் இருந்த வெகுளித்தனத்திலேயே அவளது மனம் தெரிந்து விட்டது. எப்படி இப்படி அவளுக்கானது? என்று மூவருக்குமே யோசனை!



"அதெல்லாம் இல்லை சக்கு. சும்மா இது ஒரு டெஸ்ட் அவ்வளவு தான்." உதயரேகா அவளைத் தேற்றினாள்.



"இதை எப்படி யூஸ் பண்ணுறது?" அவள் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.



சர்வேஸ்வரன் இயலாமையுடன் வேதனையோடு அங்கிருந்து வெளியேற... உதயரேகா சகுந்தலாவுக்கு விளக்கி சொன்னாள். சகுந்தலா தலையை ஆட்டி கொண்டு அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்தாள்.



"உதயரேகா, இந்தப் பொண்ணு பார்க்க ரொம்ப வெகுளியா இருக்கிறாள். இவளை இப்படியாக்கியவனைச் சும்மா விடாதீங்க." மருத்துவர் கோபத்துடன் கூற...



"கன்ஃபார்மா இது குழந்தை தானா டாக்டர்?" உதயரேகாவுக்கு வேதனையாக இருந்தது.



"டாக்டர் எனக்குத் தெரியாதா?" அவர் கூறவும்... அவள் உடைந்து போனாள்.




"உதி, மணமக்களை ஆசிர்வாதம் பண்ண நம்மைக் கூப்பிடுறாங்க." என்றபடி சர்வேஸ்வரன் அங்கே வந்தவன் மருத்துவரிடம், "நாங்க வர்ற வரைக்கும் சக்கு கிட்ட எதையும் சொல்ல வேண்டாம். அவளுக்குத் துணையா இருங்க டாக்டர்." என்று வேண்டி கேட்டுக் கொள்ள... அவரும் சரியென்று சம்மதித்தார்.
 

Sasimukesh

Administrator
இருவருமே கலக்கத்துடன் வெளியில் சென்றவர்கள் அதே கலக்க மனநிலையில் மணமக்களை ஆசிர்வதித்தனர். பத்மினி எப்போதும் பெற்றோரும் முகத்தைக் கண்டு அவர்களது அகத்தைக் கண்டு கொள்வாள். இன்று அவள் தனது காதல் கை கூடி திருமணத்தில் முடிந்த சந்தோசத்தில் இருந்தாள். அதனால் பெற்றோரின் முக மாறுதல் அவளது விழிகளுக்குத் தென்படவில்லை.



"என்னாச்சு உதி?" வித்யா தான் குழப்பத்துடன் ஓரகத்தி முகத்தைப் பார்த்தாள்.



"அக்கா, இப்போதைக்கு எதையும் என் கிட்ட கேட்காதீங்க. நீங்களும், மாமாவும் சேர்ந்து வந்திருந்தவங்களைச் சாப்பிட சொல்லி உபசரிச்சு சந்தோசமா வழியனுப்பி விடுங்க. அப்படியே மணமக்களையும் சாப்பிட வச்சிருங்க." என்று உதயரேகா பதட்டத்துடன் கூற...



"நீயும், சர்வாவும் எங்கே போறீங்க?" வித்யாவுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.



"முடிச்சிட்டு மணமகள் ரூமுக்கு வாங்கக்கா. அங்கே நாம பேசிக்கலாம்." என்ற உதயரேகா வித்யாவின் பதிலை எதிர்பாராது கணவனுடன் அங்கிருந்து அகன்றிருந்தாள்.



சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் மீண்டும் மணமகள் அறைக்குள் நுழைய... அங்குச் சகுந்தலா ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்து இருந்தாள். அருகில் மருத்துவர் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியைப் பார்த்தபடி குழப்பத்துடன் அமர்ந்து இருந்தார்.



"என்னாச்சு டாக்டர்?" உதயரேகா பதட்டத்துடன் மருத்துவர் கையிலிருந்த கருவியை வாங்கிப் பார்த்தாள். சர்வேஸ்வரனும் மனைவி கையிலிருந்த கருவியை எட்டிப்பார்த்தான்.



பரிசோதனை கருவியில் சிவப்பு நிறத்தில் இரட்டை கோடுகள் காணப்பட்டுச் சகுந்தலா கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்தது. இருவருக்குமே மயக்கம் வராத குறை தான். அதற்காக அவர்களால் அவளைத் தவறாக நினைக்கவும் முடியவில்லை.



"சக்கு, நீ..." இருவராலும் இந்த விசயத்தை அவளிடம் எப்படிக் கூறுவது? என்று புரியாது தவித்தனர்.



"இருங்க... நானே சொல்றேன்." என்ற மருத்துவர் சகுந்தலாவிடம் திரும்பி, "பெண்ணே, நீ கர்ப்பமா இருக்கிற." என்று கூற...



அதைக் கேட்டு சகுந்தலா அதிரவில்லை. மாறாக விழிகளில் கண்ணீரோடும், இதழ்களில் புன்னகையோடும் தனது வயிற்றினை இறுக பற்றிக் கொண்டாள். அவளது முகத்தில் அத்தனை பரவசம் தெரிந்தது. காணாது கிடைத்த பொக்கிசத்தைக் கொண்டாடும் மனநிலையில் அவள் இருப்பது அவளது முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.



"மிஸஸ் அன்ட் மிஸ்டர் சர்வா, நான் கிளம்பறேன்." என்று மருத்துவர் நாகரீகமாகக் கிளம்ப...



"பீஸ் டாக்டர்?" சர்வேஸ்வரன் தனது பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயல...



"நமக்குள்ள என்ன இருக்கு? நான் வர்றேன்." என்றவர் விடைபெற்று சென்று விட்டார்.



சர்வேஸ்வரன் இந்த விசயத்தை எப்படிக் கேட்பது? என்று தெரியாது குழப்பத்துடன் நின்றிருக்க... உதயரேகா சகுந்தலாவின் அருகே சென்று அமர்ந்தாள்.



"சக்கு, எப்படி இப்படி? என்ன நடந்தது? யார் காரணம்? எங்களுக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு. பயப்படாம நடந்ததைச் சொல்லு." உதயரேகா கேட்க...



"யார்ன்னு சொல்லு சக்கு? அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி போடுறேன்." சர்வேஸ்வரன் கோபத்தில் படபடத்தான்.



"இல்லை, சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு இந்தக் குழந்தை வேணும். இது என்னோட குழந்தை." என்று அவள் தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.



"யாரோ செஞ்ச தப்புக்கு நீ எதுக்கும்மா சிலுவை சுமக்கணும்? இந்தக் குழந்தை வேண்டாம்." பெரியவர்கள் இருவருமே மறுத்தனர். சகுந்தலா வன்கொடுமையில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.



"இல்லை மாமோய், இது என்னோட தப்பு தான். நான் தான் புத்தி கெட்டு போயி..." என்று சகுந்தலா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.



சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். சர்வேஸ்வரனுக்குத் தான் ஏதோ ஒரு விசயம் பளிச்சிட, "சக்கு, உண்மையைச் சொல்? இதுக்குக் காரணம் சக்தியா?" என்று கேட்டான்.



"பிரின்ஸ்..." உதயரேகா கணவனைக் கண்டு திகைத்து போக...



"மாமோய்..." சகுந்தலா அதிர்வுடன் மாமனை பார்த்தாள்.



"உன் விருப்பத்தோடு நடந்திருக்குன்னு நீயே சொல்ற. அப்படின்னா உன்னைத் தொடுற முழு உரிமை சக்திக்கு தான் இருக்கு. அவனை மட்டும் தான் நீ உன்னைத் தொட அனுமதிப்ப." சர்வேஸ்வரன் அவளது மனதினை அழகாகக் கணித்துக் கூறினான்.



"மாமோய்..." சகுந்தலா முகத்தை மூடி கொண்டு அழுதாள்.



"சொல்லு சக்கு... உங்க மாமா கேட்கிறாங்கல்ல. சொல்லு." உதயரேகா பதட்டம் தணியாது அவளிடம் கேட்க...



"இந்தக் குழந்தை என்னோட குழந்தை. இதுக்கு நான் மட்டுமே பொறுப்பு." அப்பொழுதும் அவள் சக்தீஸ்வரனை நோக்கி கை காட்டவில்லை. அவள் தனது சுமையைத் தானே சுமக்க நினைத்தாள்.



"நீ இந்த மாமனை நம்பலைல்ல சக்கு. என் மகனா இருந்தால் நான் உனக்கு நியாயம் செய்ய மாட்டேன்னு நினைச்சியா?" சர்வேஸ்வரன் ஓய்ந்து போன குரலில் கேட்க...



"ஐயோ மாமோய், அப்படி எல்லாம் இல்லை. இந்தக் குழந்தை உங்க மகனோடது தான்." என்று அவள் அழுது கொண்டே சொல்ல...



எதிர்பார்த்த பதில் தான். இருந்தாலும் இருவராலும் இந்த விசயத்தை ஜீரணிக்க முடியவில்லை. இருவருமே அதிர்ச்சியைத் தாங்க இயலாது நின்றிருந்தனர்.



"அவுக எப்போ பணத்துக்காக நான் அவுகளைக் கட்டிக்க நினைச்சேன்னு சொன்னாகளோ... அப்பவே எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. அவுக சொன்ன மாதிரி அவுகளோட அந்தஸ்து, அழகுக்கு முன்னாடி நான் தூசு தான். அவுகளுக்கும், எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அவுக சொன்னதில் இது மட்டும் நெசம். உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இந்தக் குழந்தைக்காக வேண்டி நான் அவுக கால்ல விழுந்து கெஞ்ச மாட்டேன் மாமோய். என் குழந்தையை நான் தனியா வளர்த்துக்குவேன்." என்று தன்னம்பிக்கையுடன் பேசியவளை கண்டு இருவருக்குமே பெருமையாக இருந்தது.



"நீ அவனை மன்னிச்சு விட்டு விடலாம். ஆனா நான் விட மாட்டேன்." சர்வேஸ்வரன் ஆத்திரம் பொங்க கூறினான்.



"மாமோய்..." சகுந்தலா கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.



"இந்த மாமா சொல்வதை நீ கேட்பியா?" சர்வேஸ்வரன் அவளைக் கண்டு கேட்க... அவள் ஆமென்பது போல் தலையசைத்தாள்.



"தேங்க்ஸ் சக்கு." என்று மருமகளுக்கு நன்றி உரைத்தவன் மனைவி புறம் திரும்பி, "சக்குவை பத்திரமா பார்த்துக்கோ. நான் இப்போ வந்திர்றேன்." என்றவன் வெளியில் சென்றான்.



உதயரேகா சகுந்தலாவை ஆறுதலாக அணைத்து கொண்டாள். இத்தனை கெட்டதிலும் மகனுக்கு வாரிசு வருவது குறித்து அந்தத் தாயுள்ளம் மகிழ்ச்சி கொண்டது.



சர்வேஸ்வரன் வெளியில் வந்த போது மண்டபம் முக்கால்வாசி காலியாக இருந்தது. மீதம் இருந்தவர்களும் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அவன் நேரே வித்யாவிடம் வந்து,



"அண்ணி, சாப்பிட்டீங்களா?" என்று கேட்க... அந்த நேரம் ஆகாஷும் அங்கு வந்து விட்டான்.



"அண்ணி, நீங்க உதி, சக்குக்குச் சாப்பாடு எடுத்துட்டு போங்க. மணமகள் ரூமில் இருக்காங்க." என்று அண்ணியிடம் சொன்னவன், அண்ணன் புறம் திரும்பி, "அண்ணா, வந்திருந்தவங்க எல்லோரையும் அனுப்பி விட்டுருங்க. மினி, நாராயணன் குடும்பம், கூடவே சஞ்சய் குடும்பத்தையும் உட்கார வைங்க. நான் இப்போ வந்திர்றேன்." என்றவன் அவரசமாகச் சென்று விட்டான். ஆகாஷுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் தம்பி சொன்னதைச் செய்யப் போனான்.



சர்வேஸ்வரன் மகனது அலைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பு போகவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். ம்ஹூம், அழைப்பு போகாது இருந்தது. அவன் உடனே சக்தீஸ்வரனின் செயலாளருக்கு அழைத்தான். அவர் உடனே எடுத்தார்.



"சக்தி எங்கே?" சர்வேஸ்வரன் படபடப்புடன் கேட்க...



"சார் இப்போ தான் தீவுக்குக் கிளம்பினார்." அவர் சொன்னதும் சர்வேஸ்வரன் சோர்ந்து தான் போனான்.



"எப்போ கிளம்பினான்?"



"இப்போ தான் சார், ஒரு பதினைஞ்சு நிமிசம் இருக்கும்." அவர் சற்றுத் தொலைவில் சக்தீஸ்வரன் சென்ற கப்பலை பார்த்தபடி சொல்ல...



"அப்படின்னா கப்பல் ரொம்பத் தூரம் போயிருக்காது. உடனே பிடிச்சிரலாம். நீங்க ஒரு உதவி பண்ணுங்க. அங்கே மீனவங்க இருப்பாங்க. அவங்கல்ல மோட்டார் படகு இருக்கிறவங்க கிட்ட விசயத்தைச் சொல்லி அந்தக் கப்பலை நிறுத்த சொல்லுங்க."



"எதுக்குச் சார்?"



"சக்தி இப்பவே கல்யாண மண்டபத்துக்கு வரணும். இதைச் சொல்லியே அவனைக் கூப்பிடுங்க. அதுவும் நான் சொன்னதா சொல்லுங்க." என்றுவிட்டு அவன் அழைப்பை துண்டிக்க...



அடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருவித வேகத்துடன் நடந்தது. மீனவர்கள் தங்களது விசைப்படகின் மூலம் அந்தக் கப்பலை பிடித்து விட்டனர். அதுவும் அவர்கள் காட்டிய சிவப்பு கொடியை சக்தீஸ்வரன் தான் முதலில் கண்டது. அவன் உடனே கேப்டனிடம் சொல்ல... அடுத்த நொடி கேப்டன் கப்பலை நிறுத்தி விட்டார். இது அவனது சொந்த கப்பல். விசைப்படகில் இருந்த செயலாளர் கப்பலில் நின்றிருந்த சக்தீஸ்வரனிடம் விசயத்தைச் சொன்னார்.



தன்னை மிரட்டி திருமணப் பந்தத்தில் இணைத்து வைப்பதாக இருந்தால்... இந்த இடைப்பட்ட நாட்களில் தந்தை நினைத்து இருந்தால் அதைச் செய்திருக்கலாம். அப்போது எல்லாம் அவர் இதைச் செய்யவில்லையே. அவர் தான் அவனை வெறுத்து ஒதுக்கி விட்டாரே. இப்போது என்னவாயிற்று? யாருக்கு என்னவானது? நினைக்கும் போதே அவனுக்கு உள்ளமும், உடலும் பதறியது.



"என்னன்னு சொன்னாரா?" அவன் பதட்டத்துடன் கேட்க...



"விசயத்தைச் சொல்லலை சார். நீங்க கல்யாண மண்டபத்துக்கு உடனே வரணுமாம்." செயலாளர் சொன்னது கேட்டு எந்தவித யோசனையுமின்றிச் சக்தீஸ்வரன் கரை திரும்பி விட்டான்.



அடுத்த அரை மணி நேரத்தில் சக்தீஸ்வரன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது அங்கு யாருமில்லை. கன்னிகா, சஞ்சய் குடும்பத்தினருடன் இந்திராணி கணவன், மகளுடன் அமர்ந்து இருந்தாள். அவனது குடும்பத்தினர், சகுந்தலா குடும்பத்தினர் என யாரையும் காணவில்லை. அவன் குழப்பத்துடன் நடந்து வர... ஆதித்யா அவனைக் கண்டு ஓடி வந்தவன்,



"உங்களை அங்கே வர சொன்னாங்க." என்றவன் மணமகள் அறையைக் காண்பித்தான். அவனது முகம் சரியில்லாது இருந்தது.



சக்தீஸ்வரன் பயத்துடன் விரைந்து நடந்தான். மணமகள் அறைக்குள் அவன் நுழைந்த போது அந்தச் சிறிய அறையில் தான் இரு குடும்பத்தினரும் குழுமி இருந்தனர். யாரின் முகத்திலும் தெளிவில்லை. அவன் யாரின் முகத்தையும் பார்க்கவில்லை. அவன் தேடியது சகுந்தலாவை மட்டுமே... அவன் அவளைத் தேடி தனது விழிகள் சுழற்ற... அவளோ படுக்கையில் அமர்ந்து அவனது அன்னையின் தோளில் சாய்ந்திருந்தாள். அவளது முதுகு குலுங்குவதில் இருந்து அவள் அழுகிறாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.



"ஏன் சக்கு அழுகிறாள்? கல்யாணம் நின்று போய்விட்டதா? எங்கே அந்த மாப்பிள்ளை? அவனைக் கூப்பிடுங்க." என்று அவன் கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு சத்தம் போட்டான்.



அங்கிருந்தோர் தங்களுக்கு இருந்த சோக மனநிலையில் அவனது வார்த்தைகளை யாரும் கவனித்துக் கேட்கவில்லை.



சக்தீஸ்வரன் சத்தம் கேட்டும் சகுந்தலா நிமிர்ந்து பார்க்கவில்லை. அவள் தனக்குள் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.



"பண்றது எல்லாம் பண்ணிட்டு... எப்படிடா ஒண்ணுமே தெரியாதது மாதிரி நடிக்கிற?" நாராயணன் கோபத்துடன் சக்தீஸ்வரனின் சட்டையைப் பிடித்துக் கேட்டான்.



"இதோட மூணாவது தடவை நீ என் சட்டையைப் பிடிக்கிற? எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு உன்னைச் சும்மா விடறேன்." என்ற சக்தீஸ்வரன் எச்சரித்தபடி நாராயணனின் கரத்தினைத் தட்டி விட்டான்.



"பண்றது எல்லாம் தப்பு. இதில் பேசுறது வேதாந்தம்." நாராநணன் அவனைக் கண்டு முறைத்தான்.



"தப்பு பண்றவன் ஓடி ஒளிவான். இப்படி வந்து நிற்க மாட்டான். எங்கப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான் திரும்பி வந்திருக்கேன். அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தான் நான் இங்கு வந்திருக்கேன்." என்றவனைக் கண்டு நாராயணன் குழப்பத்துடன் விலகி நின்றான். சக்தீஸ்வரன் கூறுவதும் சரி தானே. என்ன தான் நடக்கிறது? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.



"நீ தப்பு பண்ணலையா? அப்போ சக்கு வயித்தில் வளரும் குழந்தைக்கு அப்பா யாருடா?" சர்வேஸ்வரன் அடிப்பது போல் மகன் மீது பாயப் போனான்.



"என்னங்க..." உதயரேகா குறுக்கே விழுந்து மகனை காப்பாற்றினாள்.



சக்தீஸ்வரன் பேரதிர்ச்சி கொண்டவனாக நிற்க முடியாது அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்தான். அவனால் காதில் விழுந்த விசயத்தை நம்ப முடியவில்லை. அதேசமயம் அவனால் நம்பாது இருக்கவும் முடியவில்லை. அவன் இமைக்காது சகுந்தலாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள். சர்வேஸ்வரன் மகனை திட்டும் சத்தத்தில் தான் அவள் பயந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். வெகுநாட்களுக்குப் பின் பார்த்துக் கொள்ளும் இருவரது விழிகளும் பிரிய முடியாது ஒன்றை ஒன்று இமைக்காது பார்த்துக் கொண்டது.



சகுந்தலாவின் மொட்டை தலையில் லேசாக முடி முளைத்திருக்க, பட்டுப்புடவை கட்டி அந்த அழுத நிலையிலும் அவள் அவனது விழிகளுக்கு அழகாகத் தான் தெரிந்தாள். கூடுதலாக அவனது மகவை வேறு அவள் சுமக்கின்றாளே!



"சக்குவுக்கு என்னடா பதில் சொல்ல போற?" என்ற தந்தையைத் திரும்பி பார்த்தவன்,



"நான் சக்கு கிட்ட தனியா பேசணும்." என்று கூற...



"ஏன் இன்னும் அவளைக் காயப்படுத்தவா?" என்று சர்வேஸ்வரன் கோபம் கொண்டு எகிறினான்.



"அவள் வயித்தில் இருப்பது என் குழந்தை. நிச்சயம் நான் அவளைக் காயப்படுத்த மாட்டேன்." என்றவனைக் கண்டு சர்வேஸ்வரன் அப்படியே அடங்கிப் போனான். மற்றவர்களும் அவனை ஆச்சிரியமாகப் பார்த்தனர்.



சக்தீஸ்வரன் 'இது என்னோட குழந்தை இல்லை' என்று சண்டை போடுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். அவனது இந்தப் பதில் யாருமே எதிர்பாராதது. எல்லோரும் மௌனமாக அறையை விட்டு வெளியேறினர்.



"இப்படியொரு திருப்பத்தை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை." சக்தீஸ்வரன் தனது பார்வையால் சகுந்தலாவை துளைத்து எடுத்தான்!



"என் வாழ்க்கை இது தான்னு கதையாகச் சொல்ல

உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக, என் காத திருக

வழி பாத நிலவா, நீ வேணும் நெடுக"



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 23



சகுந்தலா சக்தீஸ்வரனின் பார்வையைச் சந்திக்க இயலாது தனது பார்வையைத் தழைத்து கொண்டாள். அவன் தனது பார்வையை அவளை விட்டு அங்குமிங்கும் திருப்பவில்லை. அவளைப் பார்த்தபடி நின்றிருந்தவன் ஒன்றும் பேசாதிருந்தான். அவனது அமைதி உணர்ந்து அவள் மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தாள். அவனது பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து அவள் மெல்லிய குரலில்,



"இது உங்க குழந்தை தான். நான் பொய் சொல்லலை." என்று கூற...



"நீ பொய் சொல்றேன்னு நானும் சொல்லலையே. உன் வயித்தில் குழந்தை வந்தால்... அது என் குழந்தையாகத் தான் இருக்கும்." அவனது குரல் அழுத்தமாய், உறுதியாய் ஒலித்தது.



அந்த நொடி அவன் தன்னை நம்பியது கண்டு அவளது மனதின் ஓரம் நிம்மதி தோன்றியது என்னவோ உண்மையே. அடுத்த நொடி, "இல்லை, இல்லை... இது என்னோட குழந்தை." அவள் அவசரமாக இடைமறித்துக் கூறினாள்.



"குழந்தைக்கு அம்மா நீன்னா... அப்பா நான் தான். நான் மட்டும் தான். அப்போ இது நம்முடைய குழந்தை தான்." அவன் மீண்டும் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான்.



"ஏற்கெனவே உங்க பணத்துக்கு ஆசைப்பட்டுத் தான் நான் உங்களைக் கல்யாணம் பண்ண நினைச்சதா நீங்க சொன்னீங்க? இப்போ குழந்தையைக் காரணம் காட்டி உங்களை நான் வளைச்சு போட்டதா நீங்க சொன்னாலும் சொல்லுவீங்க. வேண்டாம், இந்த வீண்பழி... இது என்னுடைய குழந்தையாகவே இருக்கட்டும். நாங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பவில்லை." என்று உறுதியாகச் சொன்னவளின் வார்த்தைகளை அப்போது தான் அவன் ஊன்றி கவனித்தான். முன்பு அவள் தனது ஒவ்வொரு வார்த்தைக்கும் கேப்டன், கேப்டன் என்று அவனை அழைப்பவள்... இப்போது அவள் கேப்டன் என்கிற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்து பேசுவதை அவன் கண்டு கொண்டான். ஏனென்று அவன் கேட்காத போதும் அவனுக்குக் காரணம் தெரியாதா என்ன?



"இங்கே பார், சின்னக் குழந்தை மாதிரி பேசாதே. இப்போ உனக்கே ஒரு குழந்தை வர போகுது. கொஞ்சம் மெச்சூர்டா பேசு. குழந்தையைப் பற்றித் தான் நான் பேச நினைப்பது. குழந்தை உனக்கு வேணும்ன்னா... நீ என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். உனக்கு என்னைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னா... குழந்தையை அழிச்சிரு. அதுக்குப் பிறகு நீ உனக்குப் பிடிச்சவனா பார்த்து வேற கல்யாணம் பண்ணிக்கோ." என்று கடுமையாகப் பேசியவனைக் கண்டு அவள் பதறி போய்த் தனது வயிற்றினை இறுக பற்றிக் கொண்டாள்.



"ஆனா ஒண்ணு, அப்பன் பெயர் தெரியாம என் பிள்ளை பிறக்க கூடாது, வளர கூடாது. என் குழந்தை பிறக்கும் போதே என் பிள்ளையா தான் இந்த உலகத்தில் பிறக்கணும். அப்பவும் நான் வேண்டாம்ன்னு நீ நினைச்சா... என் குழந்தையை என் கிட்ட கொடுத்துரு. நான் என் குழந்தையை ராஜா மாதிரி வளர்த்துக்கறேன். அம்மா கூட இல்லாம பிள்ளை வளர்ந்திரலாம். ஆனா அப்பா இல்லாம ஒரு பிள்ளை வர கூடாது. அப்படி வளர்ந்தால், அது இந்த உலகில் நிறைய அவமானங்களைச் சந்திக்க நேரிடும்." என்றவனைக் கண்டு அவள் அச்சம் கொண்டு பார்த்தாள். வாழ்க்கை பற்றிய அச்சம் அவளுள் முதல் முறையாகத் தோன்றியது,



"குழந்தைப் பிறந்த பிறகு நீ அதை என் கிட்ட கொடுத்துட்டு... நீ தனியா இருக்கணும்ன்னா இருந்துக்கோ. இல்லைன்னா வேற கல்யாணம் பண்ணணும்ன்னா பண்ணிக்கோ. உனக்கு எது விருப்பமோ அதைப் பண்ணு. அது உன் விருப்பம். ஆனா குழந்தை விசயத்தில் என்னோட விருப்பம் மட்டும் தான் செல்லுபடியாகும்." அவன் கட்டளை போன்று கூற...



"ஏன் என் கிட்ட வம்புக்கு வர்றீங்க? எனக்கு இந்த ஒரு குழந்தை தான். உங்களுக்குத் தான் அவங்க... அவங்க, அந்தத் தர்சனா இருக்காங்களே. அவங்க கிட்ட கேளுங்க. ஒரு புள்ள என்ன, பத்து புள்ள பெத்து தருவாங்க. தயவுசெஞ்சு, என்னை விட்டுருங்க." என்று இரு கரம் கூப்பி அழுதவளை கண்டு அவன் சிறிதும் இரங்கவில்லை. இங்கே இரங்கினால் முதலுக்கே மோசமாகி விடும்.



"அவளுக்குத் தான் குழந்தை வரலையே. அது வரப்போ அந்தச் சமயம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் உனக்கு வந்த குழந்தையைப் பத்தி நாம யோசிப்போம்." என்று கேலி குரலில் கூறியவனைக் கண்டு அவள் வெட்டவா? குத்தவா? என்பது போல் முறைத்து பார்த்தாள்.



"இப்போ என்ன பண்ணணும்ங்கிறீங்க?" அவளுக்கும் கோபம் வந்தது. அவள் கோபத்துடன் கத்த...



அவளது கோபத்தினை ஆச்சிரியமாய்ப் பார்த்தபடி அவன், "நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்கிறேன்." என்று சாதாரணமாகச் சொல்ல...



"நீங்க என்னைய கல்யாணம் பண்றதால எதுவும் மாறப் போறதில்லை. நான் பணக்காரி இல்லை. இப்பவும் நான் அதே ஏழை தான். உங்க வீட்டு வேலைக்காரி தான். நீங்க எதிர்பார்க்கிற படிப்பு, அந்தஸ்து, திறமை இப்படி எதுவுமே என் கிட்ட இல்லை. இவ்வளவு ஏன் மத்த பொண்ணுங்க மாதிரி என்னால் சாதாரணமா கூட வாழ முடியாது. என்னால் மாற முடியாது. என்னால் மாற இயலாது. நான் இப்படித்தான். என்னை மாத்த முயற்சிக்காதீங்க. என்னால முடியாது." என்று அவனைக் கண்டு ஆத்திரத்துடன் கத்தியவள் பின்பு ஆற்றாமையுடன் தனது கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.



"சக்கு, சொல்றதை கேளு..." அவன் அவளை அழைக்க...



"என் பெயரை சொல்லி கூப்பிடாதீங்க. அன்னைக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டுட்டு... இப்போ உங்களைக் கல்யாணம் பண்ண சொல்றீங்க? இப்பவும் என் கிட்ட எந்தத் தகுதியும் இல்லை." அவள் கோபத்தோடு சீற...



"என்னோட குழந்தைக்கு அம்மா நீ. இந்த ஒரு தகுதி போதாதா?" ஏனோ அவனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. இல்லை குழந்தை உண்டாகி இருப்பவளிடம் கோபத்தைக் காட்ட கூடாது என்று நினைத்தானோ... அவன் அமைதியாகப் பதில் சொன்னான்.



"குழந்தைக்காக எல்லாம் கல்யாணம் வேண்டாம்." அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



"குழந்தைக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணம்." அவன் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல...



சகுந்தலா மனதிற்குள் உடைந்து போனாள். அவனுக்குக் குழந்தை மட்டும் தான் முக்கியமா? உயிரும், உணர்வுமுள்ள அவள் வேண்டாமா? அவளது காதல் மனம் வேண்டாமா? மீண்டும் ஒரு முறை அவளது காதல் மனம் காயப்பட்டுப் போனது. அதேசமயம் அதை அவனிடம் வாய்விட்டு கேட்கும் அளவிற்குத் தனக்குத் தகுதி இல்லையே என்கிற கழிவிரக்கம் அவளைத் தாக்க... அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.



"உன்னை விட்டால் பேசி கொண்டே போவ. முகத்தைக் கழுவி கொண்டு வா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்." சக்தீஸ்வரன் சொல்லவும்... அவள் கண்ணீரோடு அவனை முறைத்தாள்.



"என்ன லுக் வேண்டி கிடக்கு. நீயே நினைச்சாலும் இந்தக் கல்யாணத்தை எதிர்க்க முடியாது. உன் மாமா இந்தக் கல்யாணத்தை நடத்திட்டு தான் ஓய்வார். எனக்காக இல்லைன்னாலும் உன்னோட மாமா, அத்தைக்காக ஒத்துக்கோ." என்றவன் அவளின் பதிலை எதிர்பாராது விலகி சென்று அறை கதவை திறந்தான்.



சக்தீஸ்வரன் கதவை திறந்ததும் சர்வேஸ்வரன் ஆவலாகத் தனது மகன் முகத்தைப் பார்த்தவன்... பின்பு உள்ளே சகுந்தலா முகத்தைப் பார்த்தான். அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டவன் ஆவேசமாக மகனது சட்டையைப் பிடித்து,



"சக்குவை என்னடா சொன்ன? வாயும், வயிறுமா இருக்கிற பிள்ளையைக் கஷ்டப்படுத்துறியே... நீ எல்லாம் என்ன மனுசன்?" என்று கோபத்துடன் கேட்டான்.



"கல்யாணத்துக்குச் சம்மதம் கேட்டேன். சம்மதம் சொன்னாள். அந்த ஆனந்த கண்ணீர் இது." அந்த நிலையிலும் சக்தீஸ்வரன் நக்கலாய் பதில் சொல்ல...



மகன் சொன்னதைக் கேட்டு சர்வேஸ்வரன் முதலில் மகிழ்ந்தாலும், "நீ செஞ்ச வேலைக்கு உன்னை வெட்டி பொலி போட்டு இருக்கணும். அவளால நீ தப்பிச்ச." என்று சகுந்தலாவை காட்டி சொல்ல...



"குழந்தை ஆண், பெண் இருவரும் சம்பந்தப்பட்டது. என்னமோ நான் மட்டும் தான் தப்பு பண்ணின மாதிரி சொல்றீங்க?" மகனது பேச்சில் சர்வேஸ்வரன் முகம் சிவந்து போனது. அது கோபத்தினாலா? அல்லது லஜ்ஜையினாலா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.



அப்போதும் சர்வேஸ்வரன் மகனை நம்பாது சகுந்தலாவிடம், "உனக்கு இவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?" என்று கேட்டான்.



சகுந்தலா சக்தீஸ்வரனை பார்த்தாள். அவனோ 'நீ சம்மதிக்கவில்லை என்றால்... நான் சொன்னதைச் செய்வேன்.' என்று சத்தம் இல்லாது வாயசைக்க... அவள் பயத்துடன் சர்வேஸ்வரனிடம் ஆமென்பது போல் தலையசைத்தாள். அதன் பிறகே எல்லோரும் நிம்மதியுற்றனர்.



"பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு ஊரை விட்டு ஓட பார்க்கிற. உனக்கு இருக்குடா?" சர்வேஸ்வரன் மகனை கண்டு கோபமாய் முணுமுணுத்துக் கொண்டான்.



"அதான் நீங்க கூப்பிட்டு விட்டதும் வந்து விட்டேனே. இதோ என் கடமையில் இருந்தும் நான் பின்வாங்கவில்லையே." சக்தீஸ்வரன் கூலாகச் சொல்ல... சர்வேஸ்வரனால் மகனை முறைக்க மட்டுமே முடிந்தது.



அடுத்தக் கணமே சகுந்தலாவுக்காகச் சக்தீஸ்வரன் பார்த்து பார்த்துச் செய்யச் சொன்ன மாங்கல்யத்தை வீட்டில் இருந்து எடுத்து வந்தனர். மாங்கல்யம் வந்ததும் இருவரையும் மணவறையில் அமர வைத்துத் திருமணத்தை இனிதே நடத்தி முடித்து விட்டனர்.



இறுதிவரை அவள் தானாகத் திருமணத்திற்குச் சம்மதிக்காதது அவனுக்கு வருத்தம் தான். அவன் மிரட்டி தானே அவளை வழிக்குக் கொண்டு வந்தான். அதனால் அவன் திருமணத்தில் இறுக்கமாக இருந்தான். அவளோ இயலாமையில் இறுதியில் தன்னைப் புறக்கணித்த அவனது காலடியில் விழுந்து விட்டதை உணர்ந்து அவமானத்தில் துடிதுடித்துப் போனாள். குழந்தைக்காக என்றாலும் தன்னை உதாசீனப்படுத்தியவனைத் திருமணம் செய்து கொள்வது என்பது அவளைப் பொறுத்தவரையில் அவமானம் தான். அதனால் தான் அவள் திருமணத்தில் இறுக்கமாக இருந்தாள். அவனுக்கோ வருத்தம், அவளுக்கோ அவமானம்.



இருவரும் இருவேறு மனநிலையில்... இந்த நிலையிலும் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளவில்லை என்பது தான் இங்கு ஆச்சிரியமே!




***********************
 

Sasimukesh

Administrator
பழைய யோசனைகளில் ஆழ்ந்திருந்த இருவரில் சக்தீஸ்வரன் தான் முதலில் தன்னுணர்வு பெற்றான். சகுந்தலா எங்கே? என்று அவன் விழிகளால் அறைக்குள் தேட... அறையின் ஒரு மூலையில் அவள் முழங்காலில் முகத்தைப் புதைத்தபடி தரையில் அமர்ந்து இருப்பதைக் கண்டான். அவளை நோக்கி எழுந்து வந்தவன்,



"சக்கு..." என்று அவளை அழைக்க... அவள் அவனது அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.



"இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கப் போகிற? பெட்ல படுத்து ரெஸ்ட் எடு." அவன் தன்மையுடன் கூற... குழந்தை உண்டாகி இருப்பதால் வந்த தன்மையோ!



சகுந்தலா மறுப்பு சொல்லாது எழுந்தாள். அவளுக்குமே கொஞ்சம் ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சக்தீஸ்வரன் அவள் படுப்பதற்காகத் தலையணையை ஒழுங்குப்படுத்திக் கொடுத்தான். சகுந்தலா படுக்கையில் படுத்து விழிகளை மூடினாள்.



சக்தீஸ்வரன் சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் பின்பு அறையை விட்டு வெளியில் சென்றான். அவன் கீழே வந்த போது வரவேற்பறையில் யாரும் இல்லை. திருமணம் நடந்த வீடு போல் இல்லை. வீடு அத்தனை அமைதியாகக் காணப்பட்டது. வீட்டினர் மனநிலை அவனுக்குமே புரியத்தான் செய்தது. அவனால் எதையும் மாற்ற முடியாது. இது தான் வாழ்க்கை என்பதை முடிவு செய்தவனாய் அவன் தான் முன்பு வசித்த வீட்டிற்குச் சென்று விட்டான்.



நாராயணன் வீட்டில் மணமக்களை விஜயா, இந்திராணி இருவரும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். பழக்கப்பட்ட இடம் என்பதால் பத்மினி இயல்பு போல் தானாக விளக்கேற்றி கடவுளை வணங்கினாள். நாராயணனும் உடன் சேர்ந்து கடவுளை வணங்கினான். பிறகு மணமக்களுக்குப் பாலும், பழமும் கொடுத்தனர். நாராயணன் தான் உண்ணும் முன்னர்ப் பத்மினியிடம் பாலும், பழத்தை நீட்டினான்.



"நானா?" அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.



"ம், நீயே தான். இது நமக்கு என்ன முதல் முறையா?" அவன் கேட்டது கண்டு அவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனது.



நாராயணன் சிறுவயதில் பத்மினி கடித்த தின்பண்டங்களை எத்தனையோ முறை உண்டு இருக்கின்றான். அவளும் அப்படியே... அவர்களுக்குள் எந்தவித வேறுபாடும் இதுவரை இருந்ததில்லை. அதைத் தான் அவன் குறிப்பிட்டுச் சொன்னது. முன்பு சாதாரணமாக இருந்த செயல் இப்போது திருமணத்திற்குப் பிறகு அவளை வெட்கத்தில் ஆழ்த்தியது.



பத்மினி உதடுகள் படாது பால், பழத்தை உண்டு விட்டு அவனிடம் நீட்டினாள். நாராயணன் அவளது செய்கையைப் புன்னகையுடன் பார்த்தவன் அவள் கொடுத்த மீதியை உண்டான். அவன் அதை இயல்பு போல் செய்தான். அவன் மனதில் பத்மினி மீது காதல் இல்லை. ஆனால் அவள் மீது அன்பு இருந்தது, அக்கறை இருந்தது.



"நாராயணா, ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடுங்க." இந்திராணி தம்பியிடம் கூற...



"வா மினி..." நாராயணன் தனது அறைக்கு அவளை அழைக்க...



"இல்லை, நான் கீழே... இங்கேயே..." என்றவள் நாணத்தோடு மறுத்து விட்டாள். அவனும் சிரித்தபடி சென்று விட்டான்.



அதன் பின்னர்ப் பத்மினி பட்டுப்புடவையைக் களைந்துவிட்டு வேறு புடவை மாற்றி விட்டு விஜயா, இந்திராணியுடன் பேசி கொண்டிருந்தாள். இந்திராணி மகள் மதி அவளுடன் ஒட்டி கொண்டாள். திருமணமாகி புது வீடு வந்திருப்பது போன்ற உணர்வு அவளிடம் இல்லை.



நாராயணன் தனது அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு வந்த போது சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் அங்கு வந்தனர்.



"வாங்க மாமா, வாங்க அத்தை." நாராயணன் அவர்கள் இருவரையும் புன்னகையுடன் வரவேற்றான்.



"அங்கே ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வர நேரமாகிருச்சு. மினி எங்கே?" சர்வேஸ்வரன் அவனிடம் கேட்க...



"உள்ளே தான் இருக்கிறாள். வாங்க." அவன் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.



"அப்பா, அம்மா..." பத்மினி அவர்களைக் கண்டதும் சந்தோசத்துடன் எழுந்து வந்தாள்.



"எப்படிம்மா இருக்க?" உதயரேகா மகளது கன்னத்தை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டு கேட்டாள்.



"ம்மா, நான் இங்கே வந்து ஒரு மணி நேரமாகி இருக்குமோ? அதுக்குள்ள என்னதிது?" பத்மினி சலுகையாய் சிணுங்க...



"உங்கம்மாவுக்கு உன்னைக் காணாம ஒரு நொடி கூட இருக்க முடியாது. இதுல ஒரு மணி நேரம் என்பது எல்லாம் அவளால் தாங்கி கொள்ள முடியாது." சர்வேஸ்வரன் விளையாட்டு போல் சொன்னாலும்... அவனது விழிகளும் கலங்கி தான் போனது.



"ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்." இந்திராணி உள்ளே செல்ல போக...



"இருக்கட்டும் இந்து... எங்கே உன் கணவன்?" சர்வேஸ்வரன் கேட்க...



"ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரு மாமா." அவள் சொன்னது கேட்டு அவன் சரியென்று தலையசைத்தான்.



கணபதி, விஜயா இருவருமே சகுந்தலாவை பற்றி எதுவும் கேட்கவில்லை. நாராயணன் மட்டும் தான், "சக்கு எப்படி இருக்கிறாள்?" என்று தயக்கத்துடன் கேட்டான்.



"ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறாள்." உதயரேகா பதிலுரைக்க...



"சக்தி செஞ்சது தப்பு தான். கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கூடத் தப்புத் தப்பு தான். அவன் சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்." சர்வேஸ்வரன் கணபதி, விஜயா இருவரிடமும் மன்னிப்பு கேட்க...



"சார், என் பொண்ணு மேலயும் தப்பு சரிபாதி இருக்கு. அதுக்கு நானும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும். என்னைய மன்னிச்சிருங்க." கணபதி தனது இருகரங்களையும் கூப்பி மன்னிப்பு கேட்டார். விஜயா முகம் கசங்க நின்றிருந்தார்.



சக்தீஸ்வரன், சகுந்தலா இருவரின் திருமணமும் எல்லோருக்கும் சந்தோசம் தான். ஆனால் அவர்கள் இருவரும் செய்த செயல் எல்லோரையும் அவமானத்தில் தலைக்குனிய வைத்திருந்தது. அங்குக் கனத்த அமைதி நிலவியது.



"அப்புறம் நைட் சம்பிரதாயம், மறுவீடு இது பத்தி பேசிட்டு போகலாம்ன்னு வந்தோம்." உதயரேகா அமைதியை கலைக்க...



"நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டோம். இந்தச் சம்பிரதாயம் எல்லாம் வேணுமா? நீங்க நினைச்சப்போ இங்கே வாங்க. நாங்க நினைச்சப்போ அங்கே வர்றோம்." கணபதி பெருந்தன்மையாகக் கூற... சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் நிம்மதி கொண்டனர்.



*************************



சக்தீஸ்வரன் மாலையில் வீடு வந்த போது நாராயணன், பத்மினி இருவரும் அங்கு வந்திருந்தனர். தங்கைக்காக அவன் நாராயணனை கண்டு, "வா நாராயணா, வாம்மா மினி..." என்று புன்னகை முகத்துடன் வரவேற்றான். நாராயணன் ஆமோதிப்பாய் தலையசைத்தபடி அமைதியாகி விட்டான்.



"அண்ணா, இன்னைக்கும் எங்கே போயிட்டு வர்றீங்க?" பத்மினி உரிமையுடன் சக்தீஸ்வரனிடம் கேட்க...



"சின்ன வேலை இருந்தது." என்று பதிலளித்தவன், "இருங்க, இதோ வந்திர்றேன்." என்றவன் தனது அறையை நோக்கி சென்றான்.



சக்தீஸ்வரன் தனது அறை கதவை திறந்து உள்ளே நுழைந்த போது... அங்குச் சகுந்தலா இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். அவள் கை, கால்களை இருபுறமும் பரப்பிக் கொண்டு, வாயில் எச்சில் ஒழுக ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள். அவள் அருகே வந்தவன் ஒரு துண்டை எடுத்து வந்து அவளது வாயில் வடிந்த எச்சிலை துடைத்து விட்டவன், பின்பு அவளது கை, கால்களை நேராக வைத்து போர்வையைப் போர்த்தி விட்டான். அப்போதும் அவள் எழுவதாய் இல்லை. அதனால் அவன் மட்டும் குளித்து விட்டு வேறு உடை அணிந்து கொண்டு கீழே சென்றான்.



"சக்கு எங்கே?" உதயரேகா மகனிடம் கேட்க...



"தூங்கிட்டு இருக்கிறாள்." அவன் அன்னை முகம் பார்க்காது சொல்ல...



"வெறும் வயித்தோட ரொம்ப நேரம் தூங்க கூடாது. நான் ஜூஸ் கொடுக்கிறேன். கொண்டு போய்க் கொடுத்துட்டு, அவளைக் கீழே கூட்டிட்டு வா. உன்னோட ரூமில் தான் அவளுக்குத் தேவையான டிரெஸ் எல்லாம் வச்சிருக்கேன்." என்றவள் சமையலறைக்குச் சென்று பழச்சாறை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள்.



சக்தீஸ்வரன் எந்தவித மறுப்பும் சொல்லாது பழச்சாறை வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் செல்ல... உதயரேகா மகனை யோசனையாய் பார்த்தபடி நின்றிருந்தாள். சர்வேஸ்வரன் மனைவியின் பார்வையைத் தொடர்ந்து பார்த்தவன்,



"என்ன மகன் மேல பாசம் பொங்குது?" என்று கேலி குரலில் கேட்க...



"சக்தி என்னோட மகன். அவன் மேல் பாசம் இல்லாமல் இருக்குமா?" என்றவள், "சக்தி நடவடிக்கை எனக்குக் குழப்பமா இருக்கு. அதான் பார்த்துட்டு இருந்தேன்." என்று சொல்ல...



"எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. குழந்தை பிள்ளையைக் கெடுத்து பிள்ளையைக் கொடுத்து இருக்கிறான். அது மட்டுமா? தப்பு செஞ்சிட்டுத் தப்பிக்கப் பார்த்து இருக்கிறான். இப்போ கையும் களவுமா மாட்டிக்கிட்டதும், உண்மையை ஒத்துக்கிட்டு சக்குக் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான். ஊரை விட்டு ஓடி போகப் பார்த்த இவன் எல்லாம் என் மகன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு." சர்வேஸ்வரன் கோபத்தில் படபடக்க...



"சரி, சரி நீங்க கோபப்படாதீங்க பிரின்ஸ். அதான் எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டதே." அவள் கணவனைச் சமாதானப்படுத்த... மனைவிக்காகச் சர்வேஸ்வரன் வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் அவன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.



சக்தீஸ்வரன் பழச்சாறை கொண்டு வந்து வைத்து விட்டு சகுந்தலாவை எழுப்பினான். அவளோ மறுபுறம் புரண்டு படுத்துக் கொண்டு, "கேப்டன், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே." என்றுவிட்டுத் தூக்கத்தைத் தொடர...



தூக்கத்திலும் தனது குரலை உணர்ந்து கொண்டு பதிலளித்த அவளை இமைக்காது பார்த்தவன்... பின்பு அவளது உடல்நலம் கருதி, "சக்கு, எழுந்திரு. ஜூஸ் குடிச்சிட்டு படுத்துக்கோ." என்று அவளை உலுக்க...



"ஐயோ, தூங்க கூட உரிமை இல்லையா?" என்று அவள் தூக்க கலக்கத்தில் உரிமை குரல் எழுப்பிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள். சகுந்தலாவாவது மாறுவதாவது! அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.



அப்போது தான் அவள் கவனித்தாள், சக்தீஸ்வரனின் முகம் தனது முகம் அருகே இருப்பதை... அவன் தன்னையே பார்ப்பதை கண்டு அவள் பயத்தில் எச்சில் விழுங்கினாள். அவளது விழிகளில் பயத்தைக் கண்டவனுக்குக் குஷியாகி போனது.



"தாம்பத்திய பூ எப்படி மலருதுன்னு செக் பண்ணி பார்க்கலாமா சக்கு?" அவன் புன்னகையுடன் கேட்டபடி அவள் அருகே செல்ல...



"அதெல்லாம் எப்படின்னு எனக்குத் தெரியும். நீங்க திரும்ப விளக்கம் கொடுக்க வேண்டாம்." அவள் கோபமாய் முகத்தைச் சுளித்துக் கொண்டு பதிலளித்தாள்.



"நான் தான் போதையில் இருந்தேனே. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா நீ நல்லா தெளிவா தானே இருந்த. திரும்ப எனக்கு அதை எல்லாம் ஞாபகப்படுத்து, வா..." அவன் தனது இருகரங்களை நீட்டி அவளை அழைத்தான்.
 

Sasimukesh

Administrator
"அதெல்லாம் முடியாது." அவள் பயத்தில் பின்னால் நகர்ந்தாள்.



அவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன் அவள் முன்னே நகைப்பெட்டியை தூக்கி போட்டான். அன்று அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த வைர நகை அடங்கிய பெட்டி அது.



"இதைக் கொடுக்கும் போது தான் நமக்குள்ள தாம்பத்திய பூ மலர்ந்ததா?" அவன் குறும்பாய் கண்ச்சிமிட்டி கேட்க...



"ஆமா..." என்றவள் தனது உதடுகளை இருகைகள் கொண்டு இறுக மூடி கொண்டாள். அவனிடம் இருந்து தனது உதடுகளைக் காப்பாற்றுகிறாளாம்.



"ஹா ஹா, எவ்வளவு பெரிய தடுப்பு வேலி? தாண்ட முடியாத அளவுக்கு?" அவனுக்குச் சிரிப்பு வந்தது. பின்பு சிரிப்பை அடக்கி கொண்டு,



"லூசுத்தனமா நடந்துக்காம ஜூசை குடி... கீழே எல்லோரும் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ரெப்ரெஷ் பண்ணிட்டு வா." என்றவன் அவளிடம் இருந்து விலகி சென்றான்.



சகுந்தலா நிம்மதி பெருமூச்சு விட்டவள் அருகிலிருந்த பழச்சாறை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்திருந்தாள். அவனுடன் பேசி பேசியே அவளுக்குத் தொண்டை வறண்டு போனது. அதனால் அவளுக்குப் பழச்சாறு மிகவும் தேவைப்பட்டது.



"நல்லவேளை அன்னைக்கு மாதிரி உதடும், உடம்பும் புண்ணாகலை." அவள் தனக்குள் முணுமுணுத்தபடி குளியலறையை நோக்கி சென்றாள்.



சகுந்தலா முணுமுணுப்பே அவ்வளவு சத்தமாகப் பால்கனியில் நின்றிருந்த சக்தீஸ்வரன் காதுகளில் விழுந்தது. அதுவரை இறுகி இருந்த அவனது முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை வந்து ஒட்டி கொண்டது. அந்த நொடி அவனது மனதின் இறுக்கம் தளர்ந்தது.



"சரியான வெண்கல குரல்..." அவன் தனக்குள் சிரித்தபடி சொல்லி கொண்டான்.



அத்தனை களேபரத்திலும் அவனுள் ஏதோ ஒருவித நிம்மதி தோன்றுவதை அவன் உணர்ந்தே இருந்தான். அவன் தனது வலக்கை கொண்டு தனது நெஞ்சின் இடது பக்கத்தை வருடி கொண்டான். அன்றைய நாளின் நினைவு அவளிடம் சொன்னது போல் அவனுக்கு ஞாபகம் இல்லாமல் இல்லை. அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.



அதேநேரம் குளியலறையில் முகத்தைக் கழுவி கொண்டிருந்த சகுந்தலா, "இந்தக் கேப்டனுக்குக் கொழுப்பை பாரு. தாம்பத்திய பூ எப்படி மலரும்ன்னு தெரியாதாம். தெரியாம தான் குழந்தை வயித்தில் வந்துச்சாக்கும்." என்று நொடித்துக் கொண்டே தனது வயிற்றைத் தடவியபடி எதிரே இருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தாள்.



இருவருமே அன்றைய நாளின் தாக்கத்தில் மூழ்கி போயினர்.



சக்தீஸ்வரன் தனக்காகக் கொடுத்த வைர நகையைத் திருப்பிக் கொடுக்க நினைத்தாள் சகுந்தலா. பணத்துக்காகத் தான் அவள் அவனைக் கல்யாணம் பண்ண நினைப்பதாக அவன் வாயால் சொல்ல கேட்ட பிறகு... அந்த நகையைத் தான் வைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றெண்ணி அவள் அதை அவனிடம் திருப்பிக் கொடுக்க நினைத்தாள். அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கு அந்த நகையை எடுத்துக் கொண்டு அவள் தைரியமாகக் கிளம்பி விட்டாள். பிரச்சினை வந்த பிறகு சக்தீஸ்வரன் தனியே வேறு ஒரு வீட்டில் தான் தங்கி இருந்தான். அது அவர்களது விருந்தினர் மாளிகை தான். ஏற்கெனவே அவள் அங்கு அடிக்கடி சென்றிருப்பதால் எளிதாக ஆட்டோவில் ஏறி அந்த முகவரிக்குச் சரியாக வந்து சேர்ந்து விட்டாள்.



வாசலில் இருந்த காவலாளி அவர்களது வீட்டிலும் காவல் காப்பவர் தான். எல்லாக் காவலாளிகளும் சுழற்சி முறையில் வேலை பார்ப்பர். அதனால் அவன் அவளைக் கண்டதும் மரியாதையாகக் கதவை திறந்து விட்டான். சகுந்தலா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள். அங்கு வரவேற்பறையில் யாரும் இல்லை. அவள் சக்தீஸ்வரனை தேடி அங்கிருந்த அறையை எட்டிப்பார்க்க... அவன் அங்குத் தான் இருந்தான். அதுவும் அவன் மது அருந்தி கொண்டு...



"அடியாத்தி, இவருக்கு இந்தப் பழக்கம் வேறு இருக்கா? கடவுளே..." அவள் நெஞ்சில் கையை வைத்தபடி அவனையே பார்த்தாள்.



அவளது குரல் தான் உரத்த குரலாயிற்றே. அவள் பேசியது கேட்டு அவன் திரும்பி பார்த்தான். ஒரு நிமிடம் அவன் அவளையே இமைக்காது பார்த்தான். பின்பு அவன் உற்சாகமாக,



"ஹேய் வந்துட்டியா? வா, வா..." என்று அவளை உள்ளே அழைக்க... அவள் மெல்ல உள்ளே வந்தாள். போதையில் இருப்பவனைக் கண்டு அவளுக்குப் பயமாக இருந்தது.



"இந்தாங்க..." என்று நகைப்பெட்டியை அவன் அருகில் இருந்த இடத்தில் வைத்தவள், "இனி இது எனக்கு வேண்டாம்." என்று சொல்லிவிட்டு செல்ல முயல...



"எதுக்குடி வேண்டாம்ன்னு சொல்ற?" அவன் கோபத்துடன் உருமினான்.



"எனக்குப் பரிசு கொடுக்க நீங்க யாரு? உங்க பரிசு எனக்குத் தேவையில்லை." அவள் துடுக்காகப் பேச...



"என்னடி பேசிக்கிட்டே போற?" அவன் அவளது கரத்தினைப் பிடித்துச் சுண்டியிழுக்க... பெண்ணவள் பூ மாலை போல் அவனது மடியில் வந்து விழுந்தாள்.



அவனது திடீர் செயலில் சகுந்தலா அவனைப் பார்த்தபடி மலங்க மலங்க முழித்தாள். அவளது பார்வையில் அவன் என்ன கண்டானோ? அடுத்த நொடி அவன் அவளது முகம் நோக்கி குனிந்து அவளது இதழ்களை அதிரடியாய் சிறை செய்து இருந்தான். அப்படியொரு அழுத்தமான, ஆழமான முத்தம். அந்த முத்தத்தின் மூலம் அவன் அவளது உயிரை உறிஞ்சி குடிக்க முடிவு செய்தானோ என்னவோ! அவன் அவளது இதழ்களை விடவே இல்லை. தன்மான பெண்ணவள் அவனது பிடியிலிருந்து விடுபடப் போராடி தோற்று தான் போனாள். பெண்ணவள் அடங்கியதில் ஆணின் கரம் அவளது மேனியில் அத்துமீற தொடங்கியது.



இப்போதும் அந்த நிகழ்வை நினைத்து சக்தீஸ்வரனுக்கு ஜிவ்வென்று இருந்தது. அவன் தனது உதட்டினை நாவால் வருடி கொண்டான். நினைவே தேனாய்த் தித்தித்தது. இன்று உரிமையுள்ள மனைவியாய் அவள் அவன் அருகே... மீண்டும் அவளது இதழ்களில் புதைந்து அவளது வாசமறிய அவனது மனம் ஆசை கொண்டது.



"இப்போ நீ அவள் பக்கத்துல போன... குரங்கு மாதிரி உன்னைப் பிராண்டி வச்சிருவாள். ஜாக்கிரதை." அவனது மனசாட்சி அவனை எச்சரித்தது. சூழ்நிலையை உணர்ந்து அவன் அப்படியே அமைதியாகி போனான்.



சகுந்தலா பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டு கொண்டாள். அவள் முகத்தில் அவனைப் போன்று கனிவு இல்லை, மகிழ்ச்சி இல்லை. மாறாகப் பழைய நினைவுகளை நினைத்து அவளது முகம் அவமானத்தில் கருத்துப் போயிருந்தது. சகுந்தலா மீண்டும் கண்ணாடி வழியே தனது வயிற்றினைப் பார்த்தாள்.



சக்தீஸ்வரன் அவளை வார்த்தையால் வதைத்த போது உயிரோடு மரித்த சகுந்தலா... தனக்குக் குழந்தை வந்துவிட்டது, அதுவும் அவள் மனதார காதலித்த, இல்லை இல்லை பூஜித்த அவளது கேப்டனின் மகவு தனது வயிற்றில் உதித்து விட்டது என்பதை அறிந்த பிறகு அவள் மீண்டும் உயிர்த்தாள், மீண்டும் ஜனித்தாள். அவள் குழந்தை உண்டாகியதற்காக வருந்தவில்லை. மாறாக மகிழ்ச்சி தான் அடைந்தாள். இதோ இந்த நொடி கூட அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனால்???



சகுந்தலா தனது கழுத்தில் சக்தீஸ்வரன் கட்டிய மங்கலநாணை எடுத்து பார்த்தாள். இது தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. குழந்தைக்காக அவனைத் தொற்றி கொண்டிருப்பதில் அவளுக்குச் சிறிதும் பிடித்தம் இல்லை. தன்மான பெண் சிங்கம் குழந்தைக்காகக் கூட ஆணவனிடம் மண்டியிட விரும்பவில்லை. ஆனால் ராட்சசன் அதே குழந்தையை வைத்து அவளை அவனிடம் மண்டியிட செய்து விட்டானே.



"எல்லாம் உனக்காகத் தான் கண்ணா. இல்லைன்னா இந்தக் கேப்டன் மூஞ்சில கூட முழிக்க எனக்கு ஆசை இல்லை. ரொம்ப அவமானமா இருக்கு. கல்யாணம் நடந்தா ஆச்சா? உன்னை எப்படிப் பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும். நாம யாருக்கும் பாரமில்லை. உனக்கு நான் இருக்கேன். எனக்கு நீ இருக்க. நம்ம உலகத்துல நாம ரெண்டு பேரும் மட்டுமே. உனக்கு நான், எனக்கு நீ. உங்கப்பா நமக்கு வேண்டாம். அவருக்குப் பணம், அந்தஸ்து தான் முக்கியம்." என்று சொல்லும் போதே அவள் ஏதோ யோசனையுடன் அப்படியே இருந்தவள்,



"இல்லையே, உங்கப்பாவுக்கு உன்னைய மட்டும் பிடிக்கும். உனக்காகத் தான் இந்தக் கல்யாணமாம். நீ மட்டும் போதுமாம். இந்த ஏழை, ஒண்ணுத்துக்கும் உதவாத சக்கு வேண்டாமாம். என்னைய யாருக்குமே பிடிக்கலை கண்ணா. முதலில் பெத்த அம்மா, அப்பாவுக்கு என்னைய பிடிக்கலை. பொறவு நான் உயிருக்கு உயிரா நேசிச்ச உங்கப்பாவுக்கு என்னைய பிடிக்கலை. நாளைக்கு வளர்ந்து உனக்கும் என்னைய பிடிக்காம போயிருமோ? மத்த அம்மாங்க மாதிரி நாகரீகமா நான் இல்லைன்னு நீயும் என்னைய வெறுத்துருவியா கண்ணா?" அவள் வயிற்றில் இருந்த குழந்தையிடம் கேட்கும் போதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.



அநாதரவான அவளுக்கு இந்தக் குழந்தை ஒன்றே ஆதரவு என்று அவள் நினைத்தாள். தனது வாழ்க்கைக்கு இந்தக் குழந்தை ஒன்றே பிடிமானமாய் இருப்பதாய் அவள் எண்ணினாள். மொத்தத்தில் அவள் உயிருக்கு உயிராய் நேசித்த சக்தீஸ்வரனின் இடத்தினை அவனது மகவு பிடித்துக் கொண்டது.



"கண்கள் நீயே, காற்றும் நீயே

தூணும் நீ, துரும்பில் நீ

வண்ணம் நீயே, வானும் நீயே

ஊனும் நீ, உயிரும் நீ"



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 24



"சக்கு, சக்கு..." நீண்ட நேரமாகியும் சகுந்தலா குளியலறையில் இருந்து வெளிவரவில்லை என்றதும் சக்தீஸ்வரன் சற்றுப் பதட்டம் கொண்டு குளியலறை கதவினை ஓங்கி தட்டினான்.



அடுத்த நொடி குளியலறை கதவு படக்கென்று திறந்தது. சகுந்தலா கோபமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். அவளை முழுமையாகக் கண்டதும் தான் அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். சகுந்தலா அறை கதவை நோக்கி செல்லவும்...



"சக்கு, உன்னோட டிரெஸ் அங்கே இருக்கு பார். மாத்திக்கிட்டு போ." என்று அவன் கூறவும்...



சகுந்தலா தன்னைக் குனிந்து பார்த்தவள், "ஒண்ணும் தேவையில்லை." என்று கூற...



அவளை நோக்கி விரைந்து வந்தவன் அவளது கைப்பகுதியை சுட்டிக்காட்டி, "நீ வடித்த ஜொள் இங்கே எல்லாம் கறையாக இருக்கிறது. இப்படியேவா வெளியில் போவ?" என்று எடுத்து சொல்ல...



அப்போது தான் சகுந்தலா அவன் சொன்னதைக் கவனித்துப் பார்த்தாள். அதற்கு எல்லாம் அவள் வெட்கவில்லை. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்ததால் இந்தப் பேச்சுகள் எல்லாம் அவர்களுக்கு இடையில் சாதாரணம். அவள் தனது உடையை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குள் சென்றவள் கதவை டொம்மென்று சாற்றிக் கொள்ள...



"அடியேய், கதவு பத்திரம்." என்று அவன் கத்த...



சட்டென்று கதவை திறந்தவள், "கதவு பத்திரமா தான் இருக்கும். நான் ஒண்ணும் கதவை கடிச்சு தின்னுர மாட்டேன்." என்றவள் மீண்டும் டொம்மென்று கதவை சாற்றிக் கொண்டாள்.



"சரியான அராத்து." என்றவன் அவளது வருகைக்காகக் காத்திருக்கலானான். அவன் மட்டும் சென்றால் கேள்வி வரும்.



சகுந்தலா பத்து நிமிடங்களில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தாள். வந்தவள் அவனைக் கண்டு கொள்ளாது செல்ல...



"இங்கே நான் ஒருத்தன் உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்குப் போனால் என்ன அர்த்தம்?" என்றவன் தானும் அவளுடன் சேர்ந்து அறையை விட்டு வெளியில் வந்தான்.



"யாரு காத்திருக்கச் சொன்னா?" அவள் அலட்சியத்துடன் நடந்தாள்.



"யாரும் சொல்ல தேவையில்லை. நான் காத்திருப்பேன்." என்றவனைப் புரியாது ஏறிட்டவள் பின்பு தோள்களைக் குலுக்கி கொண்டு முன்னே செல்ல...



சக்தீஸ்வரன் மனைவியின் பின்னேயே சென்றவன் அவளை ரசித்துக் கொண்டு நடந்தான். சாதாரணப் பருத்தியாலான குர்தி தான் அவள் அணிந்து இருந்தாள். அவளது மேனியில் எப்போதும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கும் குர்தி இன்று ஏனோ தொளதொளவென்று சற்றுப் பெரிதாக இருந்தது. அப்போது தான் அவளது மேனியின் மெலிவு அவனது கண்களுக்குப் புலப்பட்டது. எல்லாம் அவனால் தான் என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது. பழையதை நினைத்தவன் முகம் கருத்துப் போனது.



'முடிந்து போனது முடிந்து போனதாக இருக்கட்டும். பழசை நினையாதே மனமே.' அவன் தனக்குத் தானே சொல்லி கொண்டான். மனதை தேற்றி கொண்டவன் பார்வை மீண்டும் மனைவியவளை ரசிக்கத் தொடங்கியது. அவள் எப்படி இருந்தால் என்ன? அவனது விழிகளுக்கு அவள் பேரழகி தான்.



மாடிப்படியில் சகுந்தலா இறங்கி வருவதைக் கண்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த எல்லோரின் பார்வையும் அவள் மீது படிந்தது. எல்லோரும் சகுந்தலாவை பார்க்க... பத்மினியின் பார்வை மட்டும் சகுந்தலா பின்னால் வந்து கொண்டிருந்த அண்ணன் மீது படிந்தது. சக்தீஸ்வரனின் விழிகளில் தெரிந்த உணர்வினை என்னவென்று தெரியாது அவள் குழம்பி போனாள். ரசனையா? காதலா? பிடித்தமா? என்னவென்று அவளால் அதைப் பிரித்தறிய முடியவில்லை.



"சக்கு, இங்கே வா. ஜூஸ் குடிச்சியா?" உதயரேகா மருமகளைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.



"ம், குடிச்சேன் அத்தைம்மா." அவள் பதில் அளித்துக் கொண்டிருக்க...



சக்தீஸ்வரன் தனியே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். எல்லோரும் சிரித்துப் பேசி கொண்டிருக்க... அவன் மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். யாராலும் அவனிடம் இயல்பாக உரையாட முடியவில்லை. ஏனெனில் அவன் செய்த காரியம் அப்படி. எல்லோருக்குமே அவன் மீது சற்றுக் கோபம் தான். அதை அவனுமே உணர்ந்தே இருந்தான். அதற்காக அவன் ஒன்றும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.



"ம்மா, என்னுடைய புக்ஸ் கொஞ்சம் இங்கே இருக்கு. அதை எல்லாம் எடுத்து வைக்கணும்." என்றபடி பத்மினி எழ...



"உனக்கு உதவியா நானும் வர்றேன்." சகுந்தலாவும் எழுந்து கொண்டாள்.



"சக்கு, இந்த மாதிரி நேரத்தில் நீ ரெஸ்ட் எடுக்கணும். இது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்." பத்மினி கூற...



"அதெல்லாம் ஒண்ணும் செய்யாது." என்றவள் பத்மினியுடன் அவளது அறைக்குச் சென்று விட்டாள்.



சகுந்தலா இந்த வீட்டில் இயல்பாகப் புழங்கினாள். ஏற்கெனவே புழங்கிய வீடு தானே. அதனால் அவளுக்குப் பெரிதாக வித்தியாசமாக இல்லை. அவள் வித்தியாசமாக நினைப்பது தாலி கட்டிய கணவனை மட்டுமே.



பத்மினி தனது அறைக்குள் நுழைந்து அங்கிருந்த அலமாரியில் இருந்து புத்தகங்களை எடுத்து கொடுக்க... சகுந்தலா அதை வாங்கிப் பெட்டியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.



"சக்கு, அண்ணா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதில் எனக்கு ரொம்பச் சந்தோசம்." என்று பத்மினி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த...



"ஆனா எனக்குச் சந்தோசம் இல்லை மினி." சகுந்தலா இறுக்கமான முகத்துடன் கூற...



"சக்கு..." பத்மினி திகைப்புடன் அவளைப் பார்த்தாள்.



"உங்கண்ணே என்னைய எப்படி எல்லாம் கேவலப்படுத்திப் பேசினாரு தெரியுமா? அதெல்லாம் இன்னமும் மறக்காம இங்கே இருக்கு." என்றவள் தனது நெஞ்சினை சுட்டிக்காட்ட...



"மன்னிக்கக் கூடாதா சக்கு?" பத்மினி அந்த இடத்தில் இல்லாததால் அண்ணனின் வார்த்தைகளின் வீரியத்தை அவளால் இன்னமும் உணர முடியவில்லை.



"அவுகளை மன்னிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய மனுசி இல்லை மினி."



"நடந்தது எல்லாத்தையும் மறந்திரு சக்கு. நீ உயிருக்கு உயிராய் நேசிச்ச உன்னோட காதலன் இப்போ உனக்குக் கணவனா வந்திருக்கிறாரு. அந்தச் சந்தோசத்தை மட்டும் நீ அனுபவி. மத்த கசப்பான விசயங்களைத் தூக்கி போடு. இல்லைன்னா ரெண்டு பேருக்குமே வாழ்க்கை நரகமாகிவிடும்." பத்மினி அவளுக்கு அறிவுரை கூறினாள்.



"அவர் பேசியதை நான் மறந்திர்றேன் மினி. நீ சொன்னது போல நடந்தது எல்லாத்தையும் நான் மறந்திர்றேன். ஆனா என் கண்ணு முன்னாடி வேற பொண்ணு கூட அவர் இருந்ததை நான் எப்படி மறக்க முடியும்? நான் தான் அவரைக் காதலிச்சேன். அவர் இல்லையே. அவர் காதலிக்கிற அளவுக்கு நான் இல்லையே. அவர் மனசில் வேற பொண்ணு இருக்கிறாள். நான் இல்லை." சகுந்தலா முகம் கசங்க வேதனையுடன் சொல்ல... பத்மினி அவளது தெளிவான பேச்சை கேட்டு ஒருபக்கம் வியந்தாலும், மறுபக்கம் பெண்ணான அவளது நிலையைக் கண்டு வேதனை கொண்டாள்.



"உங்கண்ணே என்னைய கல்யாணம் பண்ண நினைச்சாரா? இல்லையே... அவர் என்னைய விட்டுட்டு தூரமா ஓடி போகத் தானே நினைச்சாரு. இதோ இந்தக் குழந்தை மட்டும் வரலைன்னா... நான் யாரோ? அவர் யாரோ? எங்களுக்கு இடையில எந்தச் சம்பந்தமும் இருந்திருக்காது. இப்போ இந்தக் குழந்தைக்காக மட்டுமே அவர் என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. குழந்தைக்காக மட்டுமே..." என்று சொல்லும் போதே சகுந்தலா முகத்தில் அத்தனை வருத்தம்.



"சக்கு..." பத்மினி ஆதரவாக அவளது தோளில் கை வைத்தாள்.



"இதில் நான் எப்படிச் சந்தோசப்பட? என் மேல பாசம் வச்சிருக்கிற மாமோய், அத்தைம்மாவுக்காகத் தான் இந்தக் கல்யாணம். அவங்க மனசு நோக கூடாதுன்னு தான் நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்." என்றவளை கண்டு ஒரு பெண்ணாய் பத்மினிக்குப் பாவமாக இருந்தது.



"சரி, நீ சொல்கிறபடி குழந்தைக்காகத் தான் இந்தக் கல்யாணம்ன்னு வச்சிக்கலாம். யாராலயும் கட்டுப்படுத்த முடியாத எங்க அண்ணாவை இந்தக் குட்டி பயல் கட்டுப்படுத்தி, உன் கழுத்தில் தாலி கட்ட வச்சிருக்கிறானே. இதுவே பெரிய சாதனை தான் சக்கு. என் மனசு சொல்லுது, நீயும், அண்ணாவும் மனசொத்து சந்தோசமா வாழ்வீங்கன்னு..." பத்மினி சகுந்தலாவுக்கு ஆறுதல் கூறினாள்.



பத்மினி இப்படிக் கூறுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. குழந்தைக்காக அண்ணன் சகுந்தலாவை திருமணம் செய்து கொண்டான் என்றாலும்... பத்மினி இங்கு வந்த சிறிது நேரத்திலேயே அண்ணனை கவனித்துப் பார்த்தவளுக்கு அண்ணனது மாற்றம் நன்கு புரிந்தது. அதனால் தான் அவள் நம்பிக்கையுடன் இதைச் சொன்னது.



"எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை மினி. இப்போதைக்குக் குழந்தையை நல்லபடியா பெத்து எடுக்கணும். அதுக்குப் பிறகு தான் மத்தது பத்தி யோசிக்கணும்." சகுந்தலா சக்தீஸ்வரன் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடி பதிலளித்தாள்.



"ரொம்ப நல்லது. இப்படித்தான் மனசை ரிலாக்சா வச்சிக்கணும். அப்போ தான் குழந்தை ஆரோக்கியமா பிறக்கும்." என்று சொன்ன பத்மினி, "சக்கு, எங்கண்ணாவை பத்தி நான் உனக்குச் சொல்ல தேவையில்லை. அவருக்குன்னு இந்தச் சொசைட்டியில் தனி மரியாதை இருக்கு. நீ முன்ன மாதிரி சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்கக் கூடாது. மிஸஸ் சக்தீஸ்வரனா கம்பீரமா, கெத்தா நடந்துக்கணும். என்ன புரிஞ்சதா?" என்று சகுந்தலாவிடம் சொல்ல...



"நான் அவுக கூடப் போனால் தானே இதை எல்லாம் நீ சொல்லணும். நான் அவுக கூடப் போகப் போறதும் இல்லை. அவுக என்னைய வெளியே கூட்டிட்டுப் போகப் போறதும் இல்லை. ரெண்டும் நடக்கப் போறது இல்லை."



"மினி..." என்றபடி சக்தீஸ்வரன் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் சகுந்தலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



"என்னண்ணா?" பத்மினி தான் அண்ணனை கண்டு பேசினாள்.



"எல்லாம் எடுத்தாச்சா?" என்று தங்கையிடம் கேட்டவன் மனைவி புறம் திரும்பி, "சக்கு, கிளம்பு... உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திரலாம்." என்று கூற...



"நான் வரலை." சகுந்தலா விறைப்பாகக் கூறினாள்.



"ஏன்?" சக்தீஸ்வரன் அவளைப் புரியாது பார்த்தான்.



"நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. நான் வர்றேன்." பத்மினி அவர்களுக்கு இடையில் தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து நைசாக நழுவி விட்டாள்.



"ஏன்னு கேட்கிறேன்ல?" சக்தீஸ்வரன் குரலை உயர்த்த...



"அது இருக்கு நிறைய ஏன்... நான் குழந்தை உண்டாகி இருக்கேன்னு தெரிஞ்சு இருந்தும்... அவங்க என்னைய ஏன், எப்படின்னு ஒரு வார்த்தை கேட்கலை. உங்கள கல்யாணம் கட்டிக்க எனக்கு விருப்பமான்னு என்னோட விருப்பத்தைப் பெத்தவங்களா அவங்க கேட்கலை. ஏன் கேட்க போறாங்க? அப்பவே நீங்க பேசியதுக்கு என்னைய திட்டுனவங்க தானே அவங்க. இப்போ மட்டும் என் பக்கம் பேசவா போறாங்க? அவங்களுக்கு நான் வேண்டாம்ன்னா... எனக்கும் அவங்க வேண்டாம்." சகுந்தலா இறுகிய மனநிலையில் கூற...



"ப்ச், அது ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்படி நடந்து இருப்பாங்க. இப்போ தான் எல்லாம் சரியாகிருச்சே. இனி உன் கூடச் சுமூகமா இருப்பாங்க. வா..."



"அப்படின்னா அவங்க ஏன் என்னைய பார்க்க வரலை?" என்று கேள்வி கேட்ட சகுந்தலாவுக்குப் பதில் சொல்ல முடியாது அவன் திணறினான். இவள் பழைய மாதிரி மக்காகவே இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மருகினான்.



"என்னால வர முடியாது. அவங்களுக்கு மகள் தேவைன்னா இங்கே வந்து என்னைய பார்க்க சொல்லுங்க." சகுந்தலா வெறுமையான குரலில் உரைத்து விட்டு அவனைச் சுற்றிக் கொண்டு வெளியில் சென்று விட்டாள்.



இந்தச் சகுந்தலா அவனுக்குப் புதிது. அவன் செய்வதறியாது நின்றான்.



****************************



மாலை பொழுது மயங்கி இனிதே இரவு மலர்ந்தது. இரு ஜோடிகளும் வரிசையாக நின்றிருந்த மூன்று ஜோடி பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கினர். பத்மினி, நாராயணன் பாதம் பணிந்த போது மனநிறைவோடு ஆசிர்வசித்த கணபதி, விஜயா தம்பதியினர் தங்களது மகள் மருமகனோடு தங்களது பாதம் பணிந்த போது அதே அன்பான ஆசிர்வாதத்தைக் கொடுக்க மறந்து போயினர்.



"அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே. இப்போ எதுக்கு இந்த ஆசிர்வாதம் எல்லாம்?" என்று விஜயா முணுமுணுத்துக் கொண்டே அட்சதையைத் தூவ...



"பேசாம இரு விஜயா." கணபதி மனைவியைக் கண்டித்தார். அவருக்கும் அதே மனநிலை தான். ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை. முதலாளியாய் இருப்பவன் தங்களை மதித்துக் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றான். அதனால் அவர் அமைதி காத்தார்.



விஜயா பேசியது சர்வேஸ்வரன், உதயரேகா, ஆகாஷ், வித்யா காதுகளில் விழத்தான் செய்தது. ஆனால் எப்படி மறுத்து பேச முடியும்? பேச கூடிய வகையிலா அவர்களை அவர்களது மகன் வைத்திருக்கின்றான்?



சகுந்தலா கூட அமைதியாக எழுந்து ஓரமாக நின்று கொண்டாள். அவள் பெற்றோரை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பேச பிடிக்கவில்லை. புரிந்து கொள்பவர்களிடம் தானே விளக்கம் கொடுக்க முடியும்? ஆனால் இந்தக் கட்டுப்பாடு எதுவும் சக்தீஸ்வரனுக்கு இல்லை போலும்...



"எல்லாம் முடிஞ்சு போச்சுன்னா... இந்த இரவை கொண்டாட கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?" சக்தீஸ்வரன் துடுக்குத்தனமாய்க் கேட்க...



"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை சின்னய்யா." விஜயா முகம் கருத்துப் போய்ப் பதறிப் போனார். மகளைக் கடிந்தவர் கூடவே வணங்கிய மருமகனை எப்படி மறந்தார்?



"இனி இது பத்தி ஒரு வார்த்தை வந்துச்சு. நான் மனுசனா இருக்க மாட்டேன்." என்றவன் தனது அறைக்குச் சென்று விட்டான்.




கணபதி, விஜயா இருவரும் மகன், மருமகளை அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்குச் சென்று விட்டனர்.
 

Sasimukesh

Administrator
சகுந்தலா சக்தீஸ்வரன் அறைக்குச் செல்ல விருப்பம் இல்லாது அங்கிருந்த தோட்டத்தில் வந்து நின்றாள். இதுவரை விளையாட்டு பிள்ளையாய் சுற்றி திரிந்தவளுக்கு இப்போது குழந்தை வந்து பொறுப்பினை கற்றுத் தந்திருக்கிறது. அடுத்து என்ன செய்வது? என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.



"சக்கு..." சர்வேஸ்வரன் குரலில் அவள் திரும்பி பார்த்தாள்.



"மாமோய்..." என்றவளை அங்கிருந்த கல்மேடையில் அமர வைத்தவன், "குழந்தை உண்டாகி இருக்கும் போது இப்படி ரொம்ப நேரம் நிற்க கூடாதும்மா." என்று அவன் அக்கறையுடன் சொல்ல...



"சரி மாமோய்..." என்று அவள் ஏற்றுக் கொள்ள...



அவள் அருகே அமர்ந்தவன், "மாமா மேல் உனக்குக் கோபமா சக்கு?" என்று கேட்க...



"எதுக்கு மாமோய்?" அவள் புரியாது கேட்டாள்.



"சக்தியை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு..." அவன் சொன்னது கேட்டு அவள் அமைதியாக இருந்தாள். அதிலேயே அவளது மனம் அவனுக்குத் தெரிந்து போனது.



"நீ அவன் வேண்டாம், அவன் குழந்தை வேண்டாம்ன்னு முடிவு எடுத்து இருந்தால்... நானே இந்தக் குழந்தையை அழிக்க ஏற்பாடு பண்ணி இருப்பேன்." என்றவனைக் கண்டு அவள் பெரும் அதிர்வுடன் தனது வயிற்றினைப் பற்றிக் கொண்டாள்.



"நீ அவனையும் மறக்கலை. அவன் குழந்தையையும் மறுக்கலை. நிச்சயம் இந்தக் குழந்தை நீயும் விரும்பி தான் வந்ததுன்னு மட்டும் எனக்குப் புரிஞ்சது. அதனால் தான் சக்திக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணினேன். கல்யாணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்ன்னு நினைக்கிற உன்னை... அப்படியே விட்டு விட எனக்கு மனசு இல்லை. உனக்குச் சின்ன வயசு சக்கு. நீ வாழ வேண்டிய பெண். நீ நல்லா வாழணும். அது தான் இந்த மாமனோட ஒரே ஆசை." என்றவனை மறுத்து அவள் என்ன கூறிவிட முடியும்? அவளால் அவனது வார்த்தைகளை மறுக்கவும் முடியாது.



"நீங்க சொல்றபடி நான் நல்லா வாழ்வேன் மாமோய். நீங்க என்னைய நெனச்சு கவலைப்படாதீங்க." அவள் தான் அவனுக்கு ஆறுதல் கூற வேண்டியதாய் போயிற்று.



"சக்கு..." சர்வேஸ்வரன் தயக்கத்துடன் அவளைப் பார்த்தான்.



"சொல்லுங்க மாமோய்?"



"சக்தி வேறொரு பெண்ணோடு..." அவன் மேலே பேசாது தயங்க... ஆனால் அவளுக்கு மாமன் கூற வருவது புரிந்தது. அவள் அமைதியாகத் தலைகுனிந்து இருந்தாள்.



"அவன் உன்னை என்னவெல்லாம் குறையாகச் சொன்னானோ... அதை எல்லாம் நீ நிறையா மாத்தணும். நீ மாறி காட்டணும் சக்கு. அவன் உனக்காக ஏங்கணும். ஒரு பொண்ணு நினைச்சா எதையும் சாதிக்க முடியும்." என்றவனை அவள் குழப்பமாய்ப் பார்த்தாள்.



"நான் அப்படி எல்லாம் மாறினால் தான் அவுக என்னைய ஏத்துப்பாங்கன்னா... அப்படியொரு மாற்றம் எனக்குத் தேவை இல்லை மாமோய்." அவள் தனது நிலையில் பிடிவாதமாய் இருந்தாள்.



"சரி, நீ அவனுக்காக மாற வேண்டாம். எனக்காக, உன் மேல் நம்பிக்கை வச்சிருக்கும் இந்த மாமனுக்காக மாற மாட்டியா? நீ மாறணும்ன்னு எனக்குள் நிறையக் கனவு இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. உன் அத்தைம்மாவுக்கும் இது பத்தி நிறையக் கனவு இருக்கு. உன்னோட சின்ன வயசில் இருந்து உன்னைப் பத்தின கவலை தான் எங்க ரெண்டு பேருக்கும். உன்னை ஏதாவது ஒருவிதத்தில் முன்னேற்றி காட்டணும்ன்னு எங்களுக்குள்ள வெறி இருந்துட்டே இருக்கு. அதுக்கான சந்தர்ப்பம் இப்போ தான் வந்திருக்கு. எங்களுக்காக நீ இதைச் செய்யக் கூடாதா சக்கு?"



சகுந்தலா சர்வேஸ்வரனை இமைக்காது பார்த்தாள். இந்த அன்பு கிடைக்க அவள் என்ன புண்ணியம் செய்தாளோ! தன்னை நம்பும் அவர்களது நம்பிக்கையைக் குலைக்க அவளுக்குமே விருப்பம் இல்லை.



"சரி மாமோய், உங்களுக்காக நான் மாறுகிறேன். ஆனா எனக்குத் தான் படிப்பு வராதே. மத்தது, ம்ஹூம் சுத்தமா வராது." என்று பாவமாய் உதட்டை பிதுக்கியவளை கண்டு அவன் ஆதரவாய் புன்னகைத்தான்.



"எல்லாமே கத்துக்கலாம். நீ ஆர்வமாய்க் கற்று கொண்டாலே போதும்." என்றவனைக் கண்டு அவள் சம்மதமாய்த் தலையசைத்தாள்.



"ரொம்ப நேரம் குளிரில் இருக்க வேண்டாம். ரூமுக்கு போ..." என்றவன் தானும் அவளுடன் நடந்தான்.



சகுந்தலாவை அறைக்கு அனுப்பி வைத்து விட்டு சர்வேஸ்வரன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.



அதேநேரம் சக்தீஸ்வரன் சகுந்தலாவை தேடி வந்தான். சகுந்தலா அறைக்குச் செல்ல எண்ணி மாடிப்படியேறினாள். அவன் அங்கிருந்த மின்விளக்குகளை அணைத்தான். அப்போது தான் அவன் கவனித்தான், அலுவலக அறையில் விளக்கு எரிவதை... அவன் நேரே அங்கே நுழைய... அங்குத் தந்தை நாற்காலியில் விழிகள் மூடி சாய்ந்திருப்பதை அவன் கண்டான்.



"தூங்கலையா?" சக்தீஸ்வரன் தொண்டையைச் செருமி கொண்டு கேட்டான்.



மகனை கண்டதும் சர்வேஸ்வரனின் ஆத்திரம் அதிகரித்தது. அதிலும் சகுந்தலா பேசிய வார்த்தைகள் அவனைக் கொந்தளிக்கச் செய்திருந்தது. சர்வேஸ்வரன் ஆத்திரத்துடன் நாற்காலியில் இருந்து எழுந்து வந்தவன் நேரே மகனின் முன்னே வந்து நின்றான். சக்தீஸ்வரன் தந்தையைக் கண்டு விழிகளைச் சுருக்கினாலும் ஏனென்று கேட்கவில்லை.



"ஏன்டா இப்படிப் பண்ணின? அவள் குழந்தைடா. அவளைப் போய்... நீ எல்லாம் மனுசன் தானா? உன்னை மாதிரி ஒரு மிருகத்தைப் பெத்ததை நினைச்சா... எனக்கு நெஞ்சு எல்லாம் வலிக்குதுடா." என்று ஆவேசத்துடன் கூறியவன்... அடுத்த நொடி மகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு அவனது கன்னங்களில் மாறி மாறி அறைய ஆரம்பித்தான்.



தந்தை கொடுத்த அத்தனை அடிகளையும் தாங்கி கொண்டு இரும்பு தூணாய் இறுகி போய் நின்றிருந்தான் சக்தீஸ்வரன். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரன் தான் மகனை அடித்து, அடித்துச் சோர்ந்து போனான். அவன் ஆயாசமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். சக்தீஸ்வரன் அவன் முன்னே நீர் அடங்கிய கூஜாவை எடுத்து வைத்தான். சர்வேஸ்வரன் மகனை எரித்துவிடுவது போல் பார்த்தான்.



"இப்பவாவது கோபம் குறைஞ்சதா?" என்று சக்தீஸ்வரன் சாதாரணமாய்க் கேட்க...



சர்வேஸ்வரனுக்குத் தான் அவனது அமைதியான நடத்தை கண்டு கோபம் வந்தது. மகன் தன்னைக் கேலி செய்கின்றானோ என்று அவனுக்கு ஆத்திரம் வந்தது. கேலி செய்பவன் அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்திருக்க மாட்டான் என்று அவனுக்குத் தெரியவில்லை.



"என் சொத்துகள் எல்லாத்தையும் என் மருமகள் பெயரில் எழுதி வைக்கப் போகிறேன்." சர்வேஸ்வரன் மகனை பார்க்காது சொல்ல...



"இதை எதுக்கு என் கிட்ட சொல்லுறீங்க? அது உங்க விருப்பம்." மகன் தந்தை சொன்னது கேட்டு அலட்டி கொள்ளவே இல்லை.



"நீ அவளிடம் எது எல்லாம் இல்லைன்னு சொன்னியோ... அதை எல்லாம் நான் அவளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவளை மாற்றிக் காட்டுவேன். அவளைப் பணம், அந்தஸ்துன்னு எல்லாத்திலும் உன்னை விடப் பெட்டரா மாத்தி காட்டுறேன். இது எல்லாம் நீ அவளைக் கேவலமா பேசியதுக்காகத் தான். ஆனால் இது எல்லாத்தையும் விட அவள் கிட்ட ஒண்ணு பொக்கிசமா இருக்கு. யார் கிட்டேயும் இல்லாதது. அது தான் குணம். இதை நீ எங்குத் தேடினாலும் கிடைக்காது." என்ற சர்வேஸ்வரனை கண்டு சக்தீஸ்வரன் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.



"அது உங்க பாடு, உங்க மருமகள் பாடு. என் கிட்ட சொல்லணும்ங்கிற அவசியம் இல்லை. ரொம்ப நேரம் முழிச்சு இருக்காதீங்க. உடம்புக்கு நல்லது இல்லை." என்றவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்.



மகனது போக்கினை கண்டு தகப்பன் தான் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று.



சக்தீஸ்வரன் அறைக்குள் நுழைந்த போது சகுந்தலா படுக்கையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு ஆப்பிள் பழத்தை கடித்து உண்டு கொண்டிருந்தாள்.



"வேறு எங்கும் காண முடியாத யுனிக் பீஸ்..." சக்தீஸ்வரன் முணுமுணுத்துக் கொண்டே அறை கதவை தாழிட்டு விட்டு வந்தான்.



அவன் கதவை தாழிட்ட சத்தத்தில் திரும்பி பார்த்த சகுந்தலா அவனைக் கண்டு கொள்ளாது தனது காரியத்தில் கண்ணாக இருந்தாள். அவன் சாவகாசமாய் அவள் அருகில் வந்தமர்ந்தான். அதற்கும் அவள் அசரவில்லை.



"சக்கு..." அவன் அவளை அழைக்க...



"என்னா?" அவள் வாயில் ஆப்பிளை வைத்து குதப்பியபடி அவனைப் பார்த்தாள்.



"இந்த அலங்காரம் எல்லாம் பார்த்தால் உனக்கு என்ன தோணுது?" அவன் கட்டிலில் அலங்கரித்து இருந்த பூக்களைப் பார்த்தபடி கேட்டான்.



"ஒண்ணும் தோணலை." அவள் சிடுசிடுவென்று பதில் கூற...



"ஒண்ணுமே தோணலையா? நம்ப முடியலையே. ஃபோனில் கிஸ் சீன் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருந்த ஆளு தானே நீ." அவன் அவளைக் கேலி செய்ய...



"நானாவது பார்க்க மட்டும் தான் செஞ்சேன். ஆனா நீங்க? செஞ்சே முடிச்சிட்டீங்களே." அவள் நக்கலாய் அவனைக் கண்டு கேட்க... அதைக் கேட்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவள் விழிகளைச் சுருக்கி அவனை யோசனையாய் பார்த்தாள்.



"உனக்குத் தியரிட்டிக்கலா அனுபவம் இருக்கு. எனக்குப் பிராக்ட்டிக்கலா அனுபவம் இருக்கு. ரெண்டும் சேர்த்து எப்படி இருக்குன்னு பார்த்திரலாமா?" அவன் கிறக்கத்துடன் கூறியபடி அவள் அருகே வர...



"கேப்டன், தள்ளி போங்க." அவள் பயத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவளையும் அறியாது வந்த 'கேப்டன்' என்றழைப்பை அவன் மிகவும் ரசித்தான்.



"எல்லாத்தையும் விட... அலங்கார பதுமையாய் நீ இருக்க. என்னால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? நீயே சொல்லு." அவன் மோகத்துடன் அவளை நோக்கி குனிந்தான்.



"வயித்துல பாப்பா இருக்கு. தள்ளி போங்க." அவள் தனது கைகளால் அவனைத் தள்ளி விட்டாள்.



தன்னை ஸ்பரித்த மனைவியின் கரங்களைப் பற்றிக் கொண்டவன் அதில் தனது உதட்டினை அழுத்தமாகப் பதிக்க... அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அவன் ஒற்றைக் கரத்தால் அவளது இரு கரங்களைப் பிடித்துக் கொண்டு... தனது மற்றொரு கரத்தால் அவளது பின்னந்தலையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன்... அவளது நெற்றியில் அழுத்தமாய்த் தனது அச்சாரத்தைப் பதித்தான். அவள் விக்கித்துப் போய் அவனைப் பார்த்தாள்.



"என் மகளால நீ தப்பிச்ச." என்றவனைக் கண்டு சண்டைக்கோழி மீண்டும் சிலிர்த்துக் கொண்டது.



"எனக்கு மகன் தான் வேணும்." என்று அவள் சொல்ல...



"எனக்கு மகள் தான் வேணும்." என்று அவனும் சொல்ல...



"என்னைய மாதிரி பொண்ணா பொறந்து, என்னைய மாதிரி கஷ்டப்படவா? வேணாம்." அவள் வேதனையில் முகம் கசங்க கூற...



"அப்படி என்னடி உனக்குக் கஷ்டம் வந்திருச்சு?" அவன் அவளை முறைத்தபடி கேட்க...



"உங்களுக்கு எங்கே என் கஷ்டம் புரிய போகுது? அடுத்தவளை காதலிக்கிற ஒருத்தனை புருசனா அடையறது எல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?" அவள் வேதனையுடன் சொல்ல...



"அதனால் என்ன? நீ படிச்ச எத்தனையோ கதைகளில் என்னை மாதிரி ஒரு ஹீரோ கூடவா இருந்திருக்க மாட்டான். நிச்சயம் இருந்திருப்பான். அந்தக் கதையில் வர்ற ஹீரோயின் மாதிரி நீ என்னைய திருத்து." அவன் கூலாகச் சொல்ல...



"போதும், அந்தக் கதைகளைப் படிச்சு நான் நாசமா போனது எல்லாம் போதும். உங்களைத் திருத்த ஒண்ணும் கடவுள் என்னைய படைக்கலை. போங்க அந்தாண்டை... வந்துட்டார், திருத்த அது, இதுன்னு..." அவள் கோபமாய் முணுமுணுக்க...



"சரி, நீ என்னைத் திருத்த வேணாம். ஆனா இனி மேட்டருக்கு நான் உன் கிட்ட தான் வருவேன்." என்றவனைக் கண்டு அவள் திகைப்புடன் பார்த்தாள்.



"உன் கழுத்தில் தாலி கட்டிய பிறகு வேறொருத்தியை தேடி போக முடியுமா? அப்படிப் போயி... அதை யாராவது பார்த்து, மீடியாவில் லீக் பண்ணி விட்டால்... என் கௌரவம் என்னவாகிறது? அதனால் நீ உன் மனசை மாத்திக்கிட்டு என் கூட வாழுற வழியைப் பார்." என்றவனைக் கண்டு அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.



"யார் எப்படிப் போனாலும்... எது எப்படியானாலும்... எனக்குச் சீக்கிரமே தாம்பத்திய பூ மலர்ந்தே ஆகணும். ஹான்..." ராகம் போட்டு சொன்னவன் படுக்கையில் மறுபக்கம் வந்து படுத்துக் கொள்ள...



சகுந்தலா தான் தூக்கம் வராது விழித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி படுத்திருந்தவனின் முகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் ஒருங்கே தோன்றியது.



“நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே”



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 25



நாராயணன் தனது அறையில் பத்மினிக்காகக் காத்திருந்தான். அவன் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். அனுபமா மீதான தனது காதலை பற்றிப் பத்மினியிடம் கூறலாமா? இல்லை வேண்டாமா? என்று அவன் தனக்குள் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தான். பழைய காதலை சொல்வதற்கு அவனுக்குப் பயமில்லை. ஆனால் அதற்கு அடுத்து சக்தீஸ்வரன் செய்த காரியம், அதனால் அனுபமா பிரிந்தது, பத்மினியை திருமணம் செய்ய நாராயணன் சம்மதித்தது, இருவரது ஈகோவிற்கு இடையில் சகுந்தலாவை இழுத்து விட்டது என்று அனுமார் வால் போன்று எல்லாம் நீண்டு கொண்டே போகும்.



இரு ஆண்களின் ஈகோவின் விளைவே இந்தத் திருமணம். இதில் காதல் என்பது சுத்தமாய் இல்லை. இதை எப்படிப் பெண்ணவளிடம் கூறுவது? இது தான் அவனுக்கு இருந்த தயக்கம். அதேசமயம் சொல்லாது பொய்யில் வாழ்க்கையைத் தொடங்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் அவன் அவள் வரவிற்காகக் காத்திருந்தான்.



அலங்கார பதுமையாய் பத்மினியும் அறைக்குள் நுழைந்தாள். நாராயணன் சிறுவயதில் இருந்தே பார்த்து பழகியவன் தான். ஆனாலும் கணவன் என்கிற உரிமையில் இப்படித் தனிமையில் அவனைச் சந்திப்பது குறித்து அவளது உள்ளமும், உடலும் நாணத்திலும், அச்சத்திலும் சிறிது நடுங்கியது. ஒரு மருத்துவராய் ஆண், பெண் உறவு பற்றிப் பாடத்தில் படித்திருந்த போதும்... பெண்ணாய் அவள் அச்சம் கொள்ளத்தான் செய்தாள். அவள் அன்ன நடை நடந்து மெல்ல வந்த போதும்... அந்தச் சிறிய அறையில் எத்தனை அடிகள் எடுத்து வைத்துவிட முடியும்? நாலைந்து எட்டுக்கள் வைத்தாலே கட்டில் வந்துவிடும். அதையே அவள் பத்து எட்டுக்கள் வைத்து மெல்ல நடந்தாள்.



தயங்கி தயங்கி வரும் பத்மினியை கண்ட நாராயணன் கட்டிலில் இருந்து எழுந்து அவளை நோக்கி வந்தான். அவன் வருவதைக் கண்டு அவள் அப்படியே நின்று விட்டாள். அவன் அவளை நெருங்கியவன், "இதைக் கொடு." என்றவன் அவள் கையிலிருந்த பால் சொம்பை வாங்கிக் கொண்டான். பிறகு அவளிடம், "ரிலாக்ஸ்..." என்று கூற...



அவனை நிமிர்ந்து பார்த்தவள், "ம்..." என்று தலையாட்ட...



"வந்து உட்கார்..." அவன் அழைக்கவும்... பதுமை மெல்ல நடந்து வந்து கட்டில் அருகே வந்ததும் உட்காராது நின்றது.



நாராயணன் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.



"காலில் விழ சொன்னாங்க." அவள் மெல்லிய குரலில் கூற...



"அதெல்லாம் எதுக்கு? தேவையில்லை. நீ உட்கார்." அவன் சொன்னதும்... அவள் கட்டிலில் அமர்ந்தாள்.



தலைகுனிந்து அமர்ந்திருந்த பத்மினி வாயை திறக்கவில்லை. சாதாரணமாக இருந்தால் கூட அவள் நாராயணனுடன் சாதாரணமாக உரையாடி கொண்டு இருந்திருப்பாள். முதலிரவிற்கு உரிய அலங்காரத்துடன் இருக்கும் அறை அவளுள் பெருத்த நாணத்தை விதைத்து இருந்தது. அவனே பேசட்டும் என்று அவள் அமைதி காத்தாள்.



"அடுத்து எப்போ வேலைக்குப் போகணும்?" அவன் கேட்டதும்... அவள் திடுக்கிட்டு போய் அவனை ஏறிட்டு பார்த்தவள் பின்பு மெல்லிய புன்னகையுடன்,



"நாளைக்கே கூடப் போகலாம். டாக்டருக்கு ஏது நேரம் காலம்?" என்று கூற...



"அது சரி தான். நாளைக்கேன்னாலும் நீ வேலைக்குப் போகலாம். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." அவன் சொல்லவும்... அவள் ஆச்சிரியமாக அவனைப் பார்த்தவள் ஒன்றும் கூறவில்லை.



"மினி, நான் உன் கிட்ட ஒண்ணும் சொல்லணும்." என்றவனைக் கண்டு அவள் கேள்வியாக அவனது முகத்தைப் பார்த்தாள்.



நாராயணன் அனுபமா பற்றிச் சொல்வதற்காக வாயை திறக்க போனவன்... அப்படியே வார்த்தைகளை விழுங்கி கொண்டான். முதலிரவு அன்று பழைய காதலை பேசி மனைவிக்குக் கசப்பை கொடுக்க வேண்டுமா? வேண்டாம் என்று முடிவு எடுத்தவனாய் அவன்,



"கொஞ்சம் டைம் வேணும்." என்று கேட்டவனை அவள் கண்ணிமைக்காது பார்த்தாள்.



"மினி, நான் சொல்ல வருவது உனக்குப் புரியுதா?" அவன் கேட்கவும்...



"ம், புரியுது. டேக் யுவர் ஓன் டைம் நானா." அவள் புன்னகைக்கவும் தான் அவனுக்குப் பெருத்த நிம்மதியாக இருந்தது.



"நீ தப்பா நினைக்கலையே."



"இதில் தப்பா நினைக்க என்னயிருக்கு? நமக்கான காலம் நீண்டு இருக்கு நானா." அவள் ஆறுதலாகப் புன்னகைக்க...



"தேங்க்ஸ்." அவன் மனதார நன்றி சொன்னவன், "நீ கட்டில்ல படுத்துக்கோ. நான் கீழே படுத்துக்கிறேன்." என்றவன் போர்வை, தலையணையைக் கையில் எடுத்தான்.



"இல்லை நானா. நீங்களும் மேலேயே..." அவள் தயக்கத்துடன் சொல்ல...



"நீ ப்ரீயா இரு." என்றவன் தரையில் போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டான்.



பத்மினி கட்டிலில் படுத்தவள் திருமணக் களைப்பில் உடனே உறங்கி விட்டாள். நாராயணனுக்குத் தான் உறக்கம் வரவில்லை. அவன் எழுந்து அமர்ந்து கொண்டு உறங்கும் மனைவியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.



***************************



அதிகாலையில் சக்தீஸ்வரன் எழுந்து விட்டான். அறையின் தோற்றத்தை கண்டதும் தான் அவனுக்கு நேற்று திருமணமாகிய நினைவு வந்தது. அவன் அருகில் திரும்பி பார்த்தான். அவன் மனைவி குளிருக்கு இதமாய்ப் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கி கொண்டிருந்தாள். கணவன் எழும் முன் எழுந்து குளித்து முடித்துச் சர்வ அலங்காரத்துடன் கையில் காபியோடு மனைவி வந்து தன்னை எழுப்ப வேண்டும் என்று நினைக்கும் சராசரி கணவன் அவன் இல்லை.



அப்படியொரு கெட்டப்பில் அவன் தனது மனைவியை நினைத்துப் பார்த்தான். நினைவே அவனுக்கு அத்தனை நகைச்சுவையாக இருந்தது. அவனுக்குச் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.



"காபிக்குப் பதிலா கழனி தண்ணிய கலக்கி கொடுத்தாலும் கொடுப்பாள். ஏற்கெனவே ப்ரோட்டீன் மிக்சுக்குப் பதிலா புரோட்டா மாவை கலக்கி கொடுத்தவள் தானே. அவளோட சமையல் திறமை தெரிஞ்சு இருந்தும்... நீ இப்படி எல்லாம் ஆசைப்படலாமா?" அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான்.



சக்தீஸ்வரன் குளித்து முடித்து வரும் வரை சகுந்தலா எழுந்திருக்கவில்லை. அவன் அறையை விட்டு வெளியில் வந்தவன் நேரே கீழே சென்றான். அங்கு உதயரேகா பூக்களைப் பறிப்பதற்காகக் கூடையை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். அவளை நோக்கி வேகமாக வந்தவன்,



"ம்மா..." என்றழைக்க... உதயரேகா மகனது குரலில் திரும்பி பார்த்தாள்.



"கொடுங்க... நான் போய்ப் பூ பறிச்சிட்டு வர்றேன்." என்று அவன் கூடையை வாங்க கையை நீட்டினான். உதயரேகா ஒன்றும் பேசாது மகனிடம் கூடையைக் கொடுத்தாள்.



பத்து நிமிடங்களில் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்த சக்தீஸ்வரன் அவற்றை எல்லாம் பூஜையறையில் இருந்த கடவுள் படங்கள் மீது அழகுற வைத்தான். உதயரேகா அமைதியாக மகனது செயலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.



"எல்லாம் முடிஞ்சது... நீங்க சாமி கும்பிடுங்க." அப்போது அங்கு வந்த சர்வேஸ்வரனை கண்டு கூறியபடி சக்தீஸ்வரன் ஒதுங்கி நிற்க...



"நீயும் வா..." உதயரேகா மகனை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றாள்.



உதயரேகா பூஜை முடிந்து கணவனுக்கும், மகனுக்கும் தீபாராதனை காட்டி விட்டு திருநீறு வைத்து விட்டாள். தகப்பனுக்கு அன்னை திருநீறு வைத்து விடும் போது சக்தீஸ்வரனுக்கு அவனையும் அறியாது பெருமூச்சு எழுந்தது. சகுந்தலா இப்படி எல்லாம் நடந்து கொள்வாளா? அவனுக்குத் தெரியவில்லை.



'அவள் செய்யலைன்னா என்ன... அம்மா மாதிரி நான் செஞ்சிட்டு போறேன்.' அவன் கொஞ்சமும் கூச்சம் இல்லலாது தனது மனதினை சமாதானப்படுத்திக் கொண்டான். தன் நினைவை கண்டு அவனையும் அறியாது அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது.



மகனது புன்னகை முகத்தை உதயரேகா கண்டு கொண்டாள். இத்தனை வருடங்களில், அதாவது சக்தீஸ்வரன் தனக்குள் இறுகி போன இத்தனை நாட்களில் அவனது முகத்தில் புன்னகை காண்பது மிகவும் அரிது. அப்படியே அவன் புன்னகைத்தாலும் அது மற்றவர்களுக்காக வெளிப்படும் செயற்கை புன்னகையாகத் தான் இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் இந்தப் புன்னகை. அவன் மனதில் இருந்து ஆத்மார்த்தமாய்த் தோன்றுவது. அந்தப் புன்னகை அவளது மகனுக்கு அத்தனை அழகாக இருந்தது. அவனையும் அழகனாகக் காட்டியது.



மகன் இருப்பதால் சர்வேஸ்வரன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான். சக்தீஸ்வரனும் அதற்கு மேல் அங்கிருக்க முடியாது தனது அறைக்குச் செல்ல எத்தனிக்க...



"சக்தி, இங்கே வந்து உட்கார்." உதயரேகா மகனை அழைத்தாள்.



அன்னையின் அழைப்பில் அவன் ஆச்சிரியமாய்ப் புருவங்களை உயர்த்தினாலும்... அன்னை சொன்னதைத் தட்டாது செய்தான். உதயரேகா மகன் அருகே அமர்ந்து கொண்டு அவனது முகத்தைத் தவிப்புடன் பார்த்தாள். தாயின் தவிப்பை கண்டதும் அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.



"என் கிட்ட எதுவும் சொல்லணுமா? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கம்மா." அவன் தன்மையான குரலில் கேட்டான். மகன் இப்படி அனுசரணையாகப் பேசி எத்தனை நாட்களாகி விட்டது.



"பேசணும், நிறையப் பேசணும். ஆனா உனக்குத் தான் நேரம் இருக்குமான்னு தெரியலை." அன்னையின் பதிலில் அவனது முகம் கருத்துப் போனது. இத்தனை நாட்களாய் வீட்டினரை ஒதுக்கி வாழ்ந்த தன்னைக் குறித்தே அவனுக்கு அத்தனை கோபம் வந்தது.



"பேசுங்க. கேட்கிறேன்." என்றவன் மெல்ல அன்னையின் கரத்தினை எடுத்து தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.



அப்போது அலுவலக அறையில் இருந்து வெளியில் வந்த சர்வேஸ்வரன் இந்தக் காட்சியைக் கண்டு விட்டான். அவனது முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. நேற்று தான் அடித்த அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அசராது நின்றிருந்த மகனை நினைத்து... அவன் இரவு எல்லாம் தூங்கவில்லை. மகன் விசயத்தில் தான் ஏதோ தவறு செய்வது போல் ஒரு தோற்றம் அவனுள்... இப்போது மகனது இந்தச் செயலை கண்டு அவனது மனம் மேலும் பாரமாகி போனது. அவன் மனதில் ஏதோ ஒரு தடுமாற்றம். தாயையும், மகனையும் தொந்தரவு செய்யாது அவன் நேரே சமையலறையை நோக்கி சென்றான்.



"என்னோட வளர்ப்பு எங்கே தவறாகி போச்சு சக்தி? எனக்குத் தெரியலை." என்ற அன்னையைக் கண்டு அவன் அவமானத்தில் முகம் கருக்கத் தலைகுனிந்தான்.




"உனக்கு ஒண்ணு தெரியுமா? உனக்கு எங்க ரெண்டு பேரோட காதல் ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல நீ அடிக்கடி சொல்லுவ, எங்களை மாதிரி நீயும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு... அந்தச் சக்தி எங்கே போனான்? எதுக்கு இத்தனை கோபம், வன்மம் சக்தி? அதுவும் ஒரு பெண் பிள்ளை மீது? நீயா இப்படின்னு... நேத்துல இருந்து எனக்குள் கேள்வி கேட்டு நான் ஓய்ஞ்சு போயிட்டேன். என்னால முடியலை சக்தி." உதயரேகா மனம் வருந்த, கண்கள் கலங்க மகனை கண்டு சொல்ல...
 

Sasimukesh

Administrator
"ம்மா, என்னைக் கண்ணான்னு கூப்பிடுவீங்களே... இப்போ அப்படிக் கூப்பிடுங்களேன்." சம்பந்தம் இல்லாது சொன்ன மகனை கண்டு திகைத்து பார்த்த உதயரேகா,



"கண்ணா..." என்று கதறிக் கொண்டே அவனை அணைத்து கொண்டாள்.



"நான் அதே கண்ணா தான்." என்றவனது குரல் கரகரத்து ஒலித்தது. அவன் சொன்னதன் அர்த்தம் அந்தப் பேதை தாயால் புரிந்து கொள்ள முடியவில்லை. சக்தீஸ்வரன் உடனே அன்னையின் அணைப்பில் இருந்து விலகி கொண்டான்.



"கண்ணா, நடந்து முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். இனி நீ சக்குவை நல்லா பார்த்துக்கோ. அவள் ரொம்ப நல்ல பொண்ணுடா. உன் மேல் அவளுக்கு அத்தனை காதல். உனக்காக அவள் உயிரையும் கொடுப்பாள். அந்தஸ்து என்னடா பெரிய அந்தஸ்து? உங்கம்மா, நான் கூட இந்த வீட்டு வேலைக்காரி தான். ஆனா உங்கப்பா என்னை அப்படி நினைக்கலையே. அவர் என்னை உயிரா நினைச்சார். இதோ இப்போ கூட அப்படித்தான். அது மாதிரி நீ சக்கு கிட்ட இருக்கணும். என்னோட ஆசை அது தான். அவளை நல்லா பார்த்துப்பியா கண்ணா?" அன்னை கேட்டதுக்கு அவன் பதில் கூறவில்லை. ஆனால் அவனது வலதுகரம் அன்னையின் வலதுகரத்தினை இறுக பற்றிக் கொண்டது.



அதற்குள் சர்வேஸ்வரன் மூவருக்கும் காபி கலந்து கொண்டு எடுத்து வந்தான்.



"நான் செஞ்சு இருப்பேன்ல. நீங்க போயி எதுக்கு?" உதயரேகா கணவனைக் கடிந்து கொள்ள...



"இதில் என்ன இருக்கு பேபி?" என்ற சர்வேஸ்வரன் காபி கோப்பையை மனைவி, மகனிடம் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.



சக்தீஸ்வரன் அமைதியாகக் காபியை பருகினான். அவன் தந்தையை நிமிர்ந்து பார்க்கவில்லை.



"நான் சக்குவுக்கு என்னோட சொத்துகளை எழுதி வைப்பதற்கு உனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லைன்னு... நீ ஒரு லெட்டர் எழுதி கொடுக்கணும்." என்ற தகப்பனை கண்டு அவன் நிமிர்ந்து பார்த்தான்.



"பின்னாடி நீ அவள் மீது வழக்கு போட்டால்... அதுக்குத் தான்." தகப்பனது பதிலில்,



"ம், கொடுத்துர்றேன்." அவன் உடனே சம்மதமாகத் தலையாட்டினான். மகன் உடனே சம்மதித்ததைக் கண்டு சர்வேஸ்வரன் யோசனையுடன் மகனை பார்த்தான்.



கணவனது வார்த்தைகளுக்கு உதயரேகா எதுவும் எதிர்த்து பேசவில்லை. மாறாக அவள் அமைதியாகக் கணவனைப் பார்த்திருந்தாள். கணவன் எது செய்தாலும் அதில் நியாயம் இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.



காபி குடித்து முடித்து விட்டு சக்தீஸ்வரன் எழுந்து செல்ல... சர்வேஸ்வரனின் பார்வை மகனை தொடர்ந்து சென்றது.



"பிரின்ஸ், எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு." உதயரேகா மகனை பார்த்தபடி சொல்ல... அதைக் கேட்டு சர்வேஸ்வரன் உள்ளுக்குள் துணுக்குற்றான்.



"ஏன் இப்படிச் சொல்ற?"



"சக்தி தப்பு பண்ணி இருப்பான்னு உங்களுக்குத் தோணுதா?" என்ற மனைவியைக் கண்டு அவன் முறைத்தான்.



"உன் மகன் அந்தத் தர்சனா பொண்ணு கூட நெருக்கமா இருந்தது பொய்யா? இல்லை இப்போ சக்கு வயித்தில் வளரும் அவனது குழந்தை பொய்யா? அவனுக்குச் சாதகமா ஒரு ஆதாரத்தைக் காட்ட சொல்லு. அப்போ நான் அவனை நம்புறேன். இப்போதைக்கு எனக்கு அவன் மேல் நம்பிக்கை இல்லை."



"நம்ம சக்தி பெண்கள் விசயத்தில் தவறானவன்னு எனக்குத் தோணலை." உதயரேகா மனதில் ஏனோ இப்படித் தோன்றியது.



மனைவி சொன்னது கேட்டு சர்வேஸ்வரன் அமைதியாகி போனான். அவனால் இதற்குப் பதில் கூற முடியவில்லை. மனைவியின் நம்பிக்கையை உடைக்க முடியவில்லை.



***************************



இரு வீட்டாரும் மணமக்களுக்கான மறுவீட்டினை பற்றிப் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அப்படியொரு சம்பிரதாயம் வேண்டாமென்று முடிவு எடுத்து விட்டனர். அதனால் புதுமணத் தம்பதிகள் அவரவர் வீட்டில் சாதாரணமாக இருந்தனர். ஆனால் கன்னிகா புகுந்த வீட்டில் அப்படி இல்லையே. அதனால் கன்னிகா, சஞ்சயை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக இந்திராணி தனது கணவனுடன் கன்னிகாவின் புகுந்த வீட்டிற்குச் சென்றாள்.



அதேசமயம் கணபதி, விஜயா இருவரும் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தனர். கன்னிகா, சஞ்சய் தங்களது வீட்டிற்கு வரும் போது சக்தீஸ்வரன், சகுந்தலாவும் அங்கு இருந்தால் நன்றாக இருக்கு என்றெண்ணி... பெரியவர்கள் இருவரும் சிறியவர்களை அழைக்க வந்திருந்தனர். எல்லாப் பெற்றோருக்கும் இருக்கும் ஆசை தான், தங்களது அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக அமர்த்தி வைத்து விருந்து கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று...



அப்போது சக்தீஸ்வரன் வெளியில் சென்றிருந்தான். அதனால் கணபதி சர்வேஸ்வரன், உதயரேகாவிடம் விசயத்தைச் சொன்னார். சகுந்தலா அங்கே தான் இருந்தாள்.



"இங்கே தான் சக்கு இருக்கிறாள். நீங்களே சொல்லிருங்க." என்று கூறி சர்வேஸ்வரன் ஒதுங்கி கொண்டான்.



"சக்கு, இன்னைக்குக் கன்னிகா, சஞ்சய் மாப்பிள்ளை வீட்டுக்கு வர்றாங்க. நீயும், மாப்பிள்ளையும் வந்திருங்க." என்று மகளிடம் சொன்ன கணபதி மனைவியைப் பார்க்க...



"ஆமா சக்கு... நீயும், மாப்பிள்ளையும் வந்தால் நல்லா இருக்கும்." விஜயாவும் சொல்ல...



"அவங்களுக்காக எங்களைக் கூப்பிடுறீங்களா? அப்போ எங்களுக்காக இல்லையா?" சகுந்தலா குதர்க்கமாகக் கேட்க... பெற்றவர்கள் பதில் தெரியாது விழித்தனர்.



"சக்கு, என்னம்மா இது?" சர்வேஸ்வரன் தான் மருமகளிடம் தன்மையாகக் கேட்டான்.



"எனக்குப் போக விருப்பம் இல்லை மாமோய்." சகுந்தலா முடித்துக் கொள்ள...



கணபதி, விஜயா இருவரின் முகமும் தொங்கி போனது.



"சக்தி வந்ததும் விசயத்தைச் சொல்றேன்." என்று சொன்ன சர்வேஸ்வரன் தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தான்.



"சரிங்க சார்..." என்ற கணபதி மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.



சக்தீஸ்வரன் வீடு திரும்பிய போது மதியம் பனிரெண்டு மணியாகி இருந்தது. அவன் வந்ததும் சர்வேஸ்வரன் விசயத்தைச் சொல்ல... சக்தீஸ்வரன் சகுந்தலா எங்கே? என்று விழிகளால் தேடினான்.



"ரூமில் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறாள்." உதயரேகா மகனின் பார்வையை உணர்ந்து சொல்ல... சக்தீஸ்வரன் தனது அறையை நோக்கி சென்றான்.



சக்தீஸ்வரன் அறைக்குள் நுழைந்த போது சகுந்தலா பால்கனியில் அமர்ந்து இருந்தாள். அதைக் கண்டு அவன் அங்கே செல்ல... அவளோ அவனது வரவினை கூட உணராது சற்றுத் தள்ளியிருந்த அவளது வீட்டினை பார்த்து கொண்டிருந்தாள். அவளது விழிகள் இரண்டும் கலங்கி இருந்தது. எப்போதும் துள்ளலுடன், உற்சாகமாய்ச் சுற்றி திரியும் சகுந்தலாவை இப்படிப் பார்ப்பதற்கு அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.



"சக்கு..." அவன் அழைக்கவும்... அவள் திடுக்கிட்டவளாய் திரும்பி பார்த்தாள். அங்குக் கணவனைக் கண்டதும் அவள் தனது கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.



"அழுறியா?" அவன் கேட்கவும்...



"அழாம? என் பொழப்ப நெனச்சு என்னால அழ தானே முடியும்." அவள் நொடித்துக் கொண்டு அறையினுள் செல்ல...



"உங்கப்பா வந்து நம்மளை அழைச்சாராமே?"



"ஆமா, அதுக்கு என்ன?"



"கிளம்பு, நாம போயிட்டு வரலாம்." அவன் சொன்னது கேட்டு,



"வேண்டாம், நான் வரலை." என்று அவள் மறுக்க...



"ஏன் வேண்டாம்? அது உனக்குப் பிறந்த வீடு தானே. அம்மா, அப்பான்னா பேச தான் செய்வாங்க. அதுக்குன்னு கோச்சுக்கிட்டு இருப்பியா?"



"அங்கே போனா கனி தேவையில்லாம பேசுவாள். மனசு கஷ்டப்படும். வேண்டாம்." சகுந்தலா மறுப்பதற்கான காரணம் தெரிந்ததும் அவன் அமைதியாக இருந்தான்.



"கனி எதுவும் பேச மாட்டாள். அப்படிப் பேசினால் நான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்." அவன் சமாதானமாகப் பேச...



"நீங்க என்னத்த பார்க்க போறீங்க? நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம்? எங்கம்மா, அப்பா, தங்கச்சி எல்லோரும் என்னைய கேவலமா பேசுறதுக்கு... நீங்க மட்டும் தான் காரணம். நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். உங்களால என் நிம்மதி போச்சு. என் மானம் போச்சு, எல்லாம் போச்சு." அவள் நீட்டி முழக்கி மூக்கை சிந்த...



"சரி, எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். அதனால் நானே எல்லாத்தையும் சரி பண்றேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ முதல்ல கிளம்பு." அவன் சொல்லவும்...



"என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?" அவள் இடுப்பில் இருகரங்களை வைத்துக் கொண்டு அவனைக் கண்டு முறைத்தாள்.



"எப்படி எல்லாமோ இருக்கு." என்றவன் அவளைக் கண்டு கண்சிமிட்ட... அவள் ஆவென்று வாயை பிளந்தாள்.



சக்தீஸ்வரன் அவள் அருகே நெருங்கி வந்தவன் அவளது பிளந்த வாயை தனது கை கொண்டு மூட... அதில் தன்னுணர்வு பெற்றவள் அவனது கையைத் தட்டிவிட்டு விட்டு அவனிடம் இருந்து விலகி நின்றாள்.



"இந்தா... இதெல்லாம் உனக்காகத் தான் வாங்கியது." அவன் தனது கையிலிருந்த பைகளை அவளிடம் நீட்டினான்.



"என்னது?" அவள் புருவங்களைச் சுருக்கி வினவினாலும்... அதைக் கையில் வாங்கவில்லை.



"உனக்கான டிரெஸ், ஜூவல்ஸ் எல்லாம்."



"நான் கேட்டேனா? எனக்குத் தேவை இல்லை." என்று முறுக்கி கொண்டவளை கண்டு அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.



"எனக்குத் தேவை. இதில் இருந்து ஒரு டிரெசை எடுத்துட்டு போய் மாத்திட்டு வா."



"நான் இப்படித்தான் இருப்பேன். யாருக்காகவும் மாற மாட்டேன்." அவள் பிடிவாதம் பிடிக்க...



"யாருக்காகவும் மாற வேண்டாம். உனக்காக நீ மாறினால் போதும்." என்றவனை அவள் புரியாது பார்த்தாள்.



"முதல்ல நீ உன்னை நேசி. நீ எப்படி இருந்தால் அழகா இருப்பன்னு... நீ நினைக்கிறியோ... அப்படி நீ மாறு. அது தான் உனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும்." என்று சொன்னவனைக் கண்டு,



"ஒரு டிரெஸ் மாத்துறதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் சொன்ன ஒரே ஆளு நீங்க தான்." அவன் சொன்ன அத்தனை அறிவுரைகளையும் ஒரு நொடியில் அவள் காற்றில் பறக்க விட்டாள்.



"நான் சொன்னதை நீ செஞ்சா நான் எதுக்குப் பேச போறேன்?" என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.



சகுந்தலா கணவன் வாங்கிக் கொண்டு வந்திருந்த உடைகளைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.



"இன்னும் என்ன?"



"இதுக்கான பணத்தை நான் சம்பாதிச்சு கொடுத்துருவேன்." அவள் கறார் குரலில் சொல்ல...



"நீயும், நானும் கணவன், மனைவி. இதுக்கு எல்லாம் கணக்கு பார்க்க கூடாது. எல்லாத்துக்கும் பணத்தைப் பைசல் பண்ண கூடாது."



"எனக்காக யாரும் செய்ய வேண்டாம்." அவள் முறுக்கி கொள்ள...




"சரி, நீ எனக்குப் பணமா கொடுக்க வேண்டாம். இது மாதிரி பொருளா வாங்கிக் கொடுத்திரு." அவன் சொன்னதும்... அவள் சம்மதமாகத் தலையாட்டினாள்.
 
Status
Not open for further replies.
Top