Sasimukesh
Administrator
சர்வேஸ்வரன் எப்போதும் போல் அலுவலகத்திற்குக் கிளம்பி வரவேற்பறைக்கு வந்து நின்றான். அவன் வழக்கம் போல் தனது விழிகளைப் பூஜையறை பக்கம் செலுத்த... அங்கே உதயரேகாவையும் காணவில்லை. பூஜை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. அவன் யோசனையுடன் ஒற்றைச் சோபாவில் அமர்ந்தான். அவனது விழிகள் அவனையும் அறியாது சமையலறை வாயிலில் படிந்தது. அவனது எண்ணத்தை அறிந்து கொண்டாளோ அவள்! அவன் எண்ணத்தின் நாயகியே கையில் காபி கோப்பையுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள். அவளது செயலிலேயே அவனுக்குத் தெரிந்து விட்டது. அவளுக்கு மாதாந்திர பிரச்சினை என்று... இத்தனை வருடங்களாய் அவன் அவளைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான். சில விசயங்களைப் பெண்ணவள் சொல்லாமலே அவன் உணர்ந்து கொள்வான்.
'ரெண்டு பேரோட புரிதலும் கண்டு புருசன், பொண்டாட்டி தோத்துருவாங்க.' இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனுக்கு இப்படித்தான் எண்ணம் தோன்றியது. அதை வாய்விட்டு அவர் கூற முடியுமா? அவர் அருகில் இருந்த மனைவியைப் பார்த்தார். மந்தாகினி அலைப்பேசியைத் தன்னை மறந்து பார்த்திருந்தார். அதைக் கண்டு தாமோதரன் பல்லை கடித்தார்.
"குட்மார்னிங் பிரின்ஸ்." என்றவள் புன்னகையுடன் காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.
"குட்மார்னிங்..." அவனும் புன்னகையுடன் காபியை வாங்கிக் கொண்டான். உதயரேகா மீண்டும் சமையலறைக்குச் செல்ல போக...
"பப்ளிமாஸ்..." அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். மேலே செல்லாது நின்றவள் என்னவென்று அவனைப் பார்த்திருந்தாள்.
"மாப்பிள்ளை பார்க்க சொன்னியே... என்ன மாதிரியான மாப்பிள்ளை பார்க்கட்டும்?" என்ற மகனை கண்டு தாமோதரனுக்குப் புரையேறியது. சர்வேஸ்வரன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.
"புரையேறுவதுக்கு எல்லாம் எதுக்குடா முறைக்கிற?" மந்தாகினி மகனை கண்டு முணுமுணுத்தார். அவன் ஒன்றும் பேசாது பார்வையைத் திருப்பி உதயரேகா மீது பதித்தான்.
"நீ சொல்லு?" அவன் அவளிடம் கேட்க...
"அது... அது... நீங்க வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு. அதான் சும்மா சொன்னேன். எனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்க்க வேண்டாம்."
"ஏன்?" அவன் ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாய் உயர்த்த...
"எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. முதல்ல நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. குழந்தைகளைப் பெத்துக்கோங்க. உங்க குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பை நான் பார்த்துக்கிறேன்." உதயரேகா வெள்ளை மனதுடன் சொன்னவள் வெள்ளேந்தியாகச் சிரித்தாள்.
அவள் சொன்னது கேட்டு இப்போது மந்தாகினிக்கு புரையேறியது.
"உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை?" சர்வேஸ்வரன் நேரிடையாகப் பெற்றோரை கண்டு கேட்க... இருவரும் ஒன்று போல் 'ஒன்றுமில்லை' என்பதாய் தலையை ஆட்டினர்.
"நீ சொல்றதுக்காகவே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றவன், "மத்த பொண்ணுங்க மாதிரி உனக்குப் புருசன், குழந்தை, குட்டின்னு வாழ ஆசையில்லையா?" இதைக் கேட்கும் போதே அவனது குரல் உடைந்து ஒலித்ததுவோ!
"ம்ஹூம், அப்படி எல்லாம் இல்லை." என்றவளின் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான். அந்த முகத்தில் பொய் தெரியவில்லை. மாறாக அறியாமையே நிறைந்திருந்தது.
உதயரேகா காலை முதல் இரவு வரை செக்குமாடாக உழைப்பவள். இரவு கிடைக்கும் சொற்ப நேரத்தில் ஓய்வுக்குக் கெஞ்சும் உடல், தூக்கத்தில் சொக்கும் விழிகள் இரண்டுமே அவளை எதைப் பற்றியும் சிந்திக்க விடாது. இப்படியிருக்கும் போது அவள் எங்கே தனிமையில் நிலவை கண்டு கனா காண்பது?
"சரி நீ போ." அவளை அனுப்பி வைத்து விட்டு அவன் விழிகளை மூடி கொண்டு அமர்ந்து விட்டான்.
மந்தாகினி கணவரை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தவர், "என்னங்க, இவன் தெரிஞ்சு பேசுறானா? இல்லை தெரியாம பேசுறானா?" என்று படபடவெனப் பொரிய...
"இப்போ இந்த ஆராய்ச்சி எதுக்கு? நீ சொல்ல வந்த விசயத்தைச் சொல்லு." தாமோதரன் எரிச்சலுடன் கேட்க...
"உதயாவுக்குப் புருசன் அவன் தான்னு சொன்னால்... சர்வாவுக்கு எப்படி இருக்கும்?" மந்தாகினி ஆர்வத்துடன் கணவரை பார்த்தார்.
'ம், சந்தோசமாக இருக்கும்.' மனதிற்குள் சொல்லி கொண்ட தாமோதரன் வெளியில், "எனக்குத் தெரியலை. நீயே சொல்லு." என்று விட்டேற்றியாகக் கூற...
"ஷாக் ஆகிருவான்." அவர் விழிகளை விரித்துக் கொண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூற...
"அப்படியே அவன் ஷாக் ஆகிட்டாலும்..." தாமோதரன் தலையில் அடித்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
மகனின் எண்ணத்திற்குத் தாரிகா, மந்தாகினி இருவரும் வலு சேர்க்கின்றனர் என்று மட்டும் தாமோதரனுக்குப் புரிந்தது. மகன் புத்திசாலி... எதையும் யோசித்துத் தான் முடிவு எடுப்பான். நடப்பதை வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலைக்கு அவர் சென்று விட்டார்.
மந்தாகினி தனது இரு மகள்களிடம் அலைப்பேசியில் இது பற்றி ஆலோசனை நடத்தினார். தாரிகா கன்னித்தன்மை பரிசோதனை செய்ததைக் கண்ட மந்தாகினி முற்றிலும் அவள் பக்கம் சாய்ந்து விட்டார். அவளுக்காக ஏதாவது செய்து வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் தான் தாரிகா சொன்ன திட்டத்திற்கு அவர் சம்மதித்தது. அதையே மகள்களிடமும் கூறிவிட்டார். இருவருக்குமே இதில் உடன்பாடு இல்லை. அதுவும் தாரிகா சொன்னதாய்ச் சொன்னதும் இருவருக்குமே இந்தத் திட்டம் பிடிக்கவில்லை.
"ம்மா, நீங்க எந்தக் காலத்தில் வாழ்ந்துட்டு இருக்கீங்க? ஜாதகம், சோசியம் எல்லாம் இல்லவே இல்லை. எனக்கு என்னவோ தாரிகா பண்றது சரியா தோணலை. அவள் வேண்டாம். பேசாம சர்வாவுக்கு நிலா இல்லை கவியைக் கல்யாணம் முடித்து விடலாம். என்னக்கா நான் சொல்றது? நிலாவை அவனுக்கு முடித்தால்... நான் கோபப்பட மாட்டேன். அதே மாதிரி தானே நீங்களும்?" அமலா அக்காவிடம் கேட்கவும்...
"ஆமாம் அமலா... எனக்குத் தாரிகாவையும் பிடிக்கலை. அவளது யோசனையும் பிடிக்கவில்லை. நீ சொல்றது தான் சரி." மஞ்சரி உடனே ஒத்து கொண்டாள்.
"சரி, நீங்க சொல்றபடி நான் கேட்கிறேன். ஆனால் உங்க நாத்தனார்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் என் தலையைப் போட்டு உருட்டாதீங்க." என்று முடிவாய் மந்தாகினி முடித்துக் கொண்டார்.
"அதுக்குன்னு ரேகாவை போய்... எப்படிம்மா?" இருவருமே அதிருப்தியை காட்டினர்.
"ஊரு, உலகம் தெரிய நடக்கிற கல்யாணம் இது இல்லை. இது வெறும் கண்துடைப்புக் கல்யாணம் தான். ஜஸ்ட் தோச நிவர்த்திக்குப் பண்றது. வெளியில் யாருக்கும் தெரியாது."
"ம்மா, உங்களுக்குக் கொஞ்சமும் மூளை இருக்கிறதா? கல்யாணத்துக்குப் பிறகு உங்க மகன் கையை, காலை வைத்துக் கொண்டு சும்மா இருப்பானா? வேலைக்காரி வயிற்றில் நம்ம வீட்டு வாரிசு வந்துவிட்டால்..." மஞ்சரி கோபத்துடன் அன்னையைக் கண்டு கேட்டாள்.
"என்னடி இப்படிப் பொசுக்குன்னு கேட்டுட்ட?" மந்தாகினிக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
"ம்மா, அக்கா சொல்றது சரி தானே. அதுக்குப் பதில் சொல்லுங்க." அமலா அந்தப் பக்கம் இரைந்தாள்.
"ரேகா, நம்ம பேச்சு கேட்பாள். அவள் கிட்ட நேரம் சரியில்லை, அது இதுன்னு ஏதாவது சொல்லி ரெண்டு பேரையும் தள்ளி இருக்கச் சொல்லலாம். அவள் நம்ம அடிமை. நாம சொல்றதை கேட்பாள்." அன்னை கூறிய அடிமை என்கிற வார்த்தை அக்கா, தங்கை இருவரையும் யோசிக்க வைத்தது. அவர்கள் தங்களது சம்மதத்தை அன்னையிடம் கூறினர்.
அன்னையின் அழைப்பை துண்டித்து விட்டுச் சகோதரிகள் இருவரும் தனியே அலைப்பேசியில் பேசினர்.
"எனக்கு என்னவோ தாரிகா பேச்சு சரியில்லைன்னு தோணுது." மஞ்சரி ஆரம்பித்து வைத்தாள்.
"எனக்கும் அதே தான் தோணுது. ஆனாலும் தோசம்ன்னு வரப்போ கொஞ்சம் பயமா தான் இருக்கு. அதனால் தான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னது. அம்மா சொன்ன மாதிரி ரேகா தான் நமக்கு வாய்த்த சரியான அடிமை." அமலா தனது எண்ணத்தைச் சொன்னாள்.
"ஆமா அமலா... ரேகா நாம என்ன சொன்னாலும் கேட்பாள். தோசம் வேலை செய்யா விட்டால்... நாம ரேகா கிட்ட சொல்லி சர்வாவை விட்டு விலகி போகச் சொன்னால் கூட அவள் மறுபேச்சு பேசாது விலகி போய் விடுவாள். அவளை வச்சு நம்ம காரியத்தைச் சாதிப்பது சுலபம். இதே இது தாரிகான்னா கஷ்டம்."
"அதே தான் நானும் நினைச்சேன்க்கா. ரேகாவை விலக்கி வைத்து விட்டு நம்ம நாத்தானர்கள் இருவரில் ஒருவரை சர்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருவோம். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். தோசம் இருந்தால் அது நீங்கிய மாதிரியுமாச்சு. சர்வாவுக்கு நம்ம நாத்தானாருக்குக் கல்யாணம் பண்ணி வச்சி நம்ம பவரை நிலைநாட்டிய மாதிரியும் ஆச்சு." அமலாவுக்குச் சந்தோசமாக இருந்தது. அதை மஞ்சரியும் ஆமோதித்துச் சிரித்தாள்.
"அப்புறம் ஒரு முக்கியமான விசயம்... சர்வா கல்யாணம் பத்தி முக்கியமா நம்ம புகுந்த வீட்டுக்கு தெரியாம பார்த்துக்கணும்." இருவரும் ஒன்று போல் யோசித்து ஒருசேர கூறினர். தங்களது ஒத்த மனம் கண்டு சகோதரிகளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதே மகிழ்ச்சியோடு இருவரும் அழைப்பை வைத்தனர்.
தாரிகா ஒரு புறம், மஞ்சரி அமலா மறுபுறம் என்று இருபக்கமும் சர்வேஸ்வரனுக்கு எதிராகச் சதி திட்டம் தீட்டப்பட்டது. இதில் பாதிக்கப்படப் போவது என்னமோ அப்பாவி உதயரேகா தான்.
********************************
'ரெண்டு பேரோட புரிதலும் கண்டு புருசன், பொண்டாட்டி தோத்துருவாங்க.' இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனுக்கு இப்படித்தான் எண்ணம் தோன்றியது. அதை வாய்விட்டு அவர் கூற முடியுமா? அவர் அருகில் இருந்த மனைவியைப் பார்த்தார். மந்தாகினி அலைப்பேசியைத் தன்னை மறந்து பார்த்திருந்தார். அதைக் கண்டு தாமோதரன் பல்லை கடித்தார்.
"குட்மார்னிங் பிரின்ஸ்." என்றவள் புன்னகையுடன் காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.
"குட்மார்னிங்..." அவனும் புன்னகையுடன் காபியை வாங்கிக் கொண்டான். உதயரேகா மீண்டும் சமையலறைக்குச் செல்ல போக...
"பப்ளிமாஸ்..." அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். மேலே செல்லாது நின்றவள் என்னவென்று அவனைப் பார்த்திருந்தாள்.
"மாப்பிள்ளை பார்க்க சொன்னியே... என்ன மாதிரியான மாப்பிள்ளை பார்க்கட்டும்?" என்ற மகனை கண்டு தாமோதரனுக்குப் புரையேறியது. சர்வேஸ்வரன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.
"புரையேறுவதுக்கு எல்லாம் எதுக்குடா முறைக்கிற?" மந்தாகினி மகனை கண்டு முணுமுணுத்தார். அவன் ஒன்றும் பேசாது பார்வையைத் திருப்பி உதயரேகா மீது பதித்தான்.
"நீ சொல்லு?" அவன் அவளிடம் கேட்க...
"அது... அது... நீங்க வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு. அதான் சும்மா சொன்னேன். எனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்க்க வேண்டாம்."
"ஏன்?" அவன் ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாய் உயர்த்த...
"எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. முதல்ல நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. குழந்தைகளைப் பெத்துக்கோங்க. உங்க குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பை நான் பார்த்துக்கிறேன்." உதயரேகா வெள்ளை மனதுடன் சொன்னவள் வெள்ளேந்தியாகச் சிரித்தாள்.
அவள் சொன்னது கேட்டு இப்போது மந்தாகினிக்கு புரையேறியது.
"உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை?" சர்வேஸ்வரன் நேரிடையாகப் பெற்றோரை கண்டு கேட்க... இருவரும் ஒன்று போல் 'ஒன்றுமில்லை' என்பதாய் தலையை ஆட்டினர்.
"நீ சொல்றதுக்காகவே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றவன், "மத்த பொண்ணுங்க மாதிரி உனக்குப் புருசன், குழந்தை, குட்டின்னு வாழ ஆசையில்லையா?" இதைக் கேட்கும் போதே அவனது குரல் உடைந்து ஒலித்ததுவோ!
"ம்ஹூம், அப்படி எல்லாம் இல்லை." என்றவளின் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான். அந்த முகத்தில் பொய் தெரியவில்லை. மாறாக அறியாமையே நிறைந்திருந்தது.
உதயரேகா காலை முதல் இரவு வரை செக்குமாடாக உழைப்பவள். இரவு கிடைக்கும் சொற்ப நேரத்தில் ஓய்வுக்குக் கெஞ்சும் உடல், தூக்கத்தில் சொக்கும் விழிகள் இரண்டுமே அவளை எதைப் பற்றியும் சிந்திக்க விடாது. இப்படியிருக்கும் போது அவள் எங்கே தனிமையில் நிலவை கண்டு கனா காண்பது?
"சரி நீ போ." அவளை அனுப்பி வைத்து விட்டு அவன் விழிகளை மூடி கொண்டு அமர்ந்து விட்டான்.
மந்தாகினி கணவரை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தவர், "என்னங்க, இவன் தெரிஞ்சு பேசுறானா? இல்லை தெரியாம பேசுறானா?" என்று படபடவெனப் பொரிய...
"இப்போ இந்த ஆராய்ச்சி எதுக்கு? நீ சொல்ல வந்த விசயத்தைச் சொல்லு." தாமோதரன் எரிச்சலுடன் கேட்க...
"உதயாவுக்குப் புருசன் அவன் தான்னு சொன்னால்... சர்வாவுக்கு எப்படி இருக்கும்?" மந்தாகினி ஆர்வத்துடன் கணவரை பார்த்தார்.
'ம், சந்தோசமாக இருக்கும்.' மனதிற்குள் சொல்லி கொண்ட தாமோதரன் வெளியில், "எனக்குத் தெரியலை. நீயே சொல்லு." என்று விட்டேற்றியாகக் கூற...
"ஷாக் ஆகிருவான்." அவர் விழிகளை விரித்துக் கொண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூற...
"அப்படியே அவன் ஷாக் ஆகிட்டாலும்..." தாமோதரன் தலையில் அடித்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
மகனின் எண்ணத்திற்குத் தாரிகா, மந்தாகினி இருவரும் வலு சேர்க்கின்றனர் என்று மட்டும் தாமோதரனுக்குப் புரிந்தது. மகன் புத்திசாலி... எதையும் யோசித்துத் தான் முடிவு எடுப்பான். நடப்பதை வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலைக்கு அவர் சென்று விட்டார்.
மந்தாகினி தனது இரு மகள்களிடம் அலைப்பேசியில் இது பற்றி ஆலோசனை நடத்தினார். தாரிகா கன்னித்தன்மை பரிசோதனை செய்ததைக் கண்ட மந்தாகினி முற்றிலும் அவள் பக்கம் சாய்ந்து விட்டார். அவளுக்காக ஏதாவது செய்து வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் தான் தாரிகா சொன்ன திட்டத்திற்கு அவர் சம்மதித்தது. அதையே மகள்களிடமும் கூறிவிட்டார். இருவருக்குமே இதில் உடன்பாடு இல்லை. அதுவும் தாரிகா சொன்னதாய்ச் சொன்னதும் இருவருக்குமே இந்தத் திட்டம் பிடிக்கவில்லை.
"ம்மா, நீங்க எந்தக் காலத்தில் வாழ்ந்துட்டு இருக்கீங்க? ஜாதகம், சோசியம் எல்லாம் இல்லவே இல்லை. எனக்கு என்னவோ தாரிகா பண்றது சரியா தோணலை. அவள் வேண்டாம். பேசாம சர்வாவுக்கு நிலா இல்லை கவியைக் கல்யாணம் முடித்து விடலாம். என்னக்கா நான் சொல்றது? நிலாவை அவனுக்கு முடித்தால்... நான் கோபப்பட மாட்டேன். அதே மாதிரி தானே நீங்களும்?" அமலா அக்காவிடம் கேட்கவும்...
"ஆமாம் அமலா... எனக்குத் தாரிகாவையும் பிடிக்கலை. அவளது யோசனையும் பிடிக்கவில்லை. நீ சொல்றது தான் சரி." மஞ்சரி உடனே ஒத்து கொண்டாள்.
"சரி, நீங்க சொல்றபடி நான் கேட்கிறேன். ஆனால் உங்க நாத்தனார்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் என் தலையைப் போட்டு உருட்டாதீங்க." என்று முடிவாய் மந்தாகினி முடித்துக் கொண்டார்.
"அதுக்குன்னு ரேகாவை போய்... எப்படிம்மா?" இருவருமே அதிருப்தியை காட்டினர்.
"ஊரு, உலகம் தெரிய நடக்கிற கல்யாணம் இது இல்லை. இது வெறும் கண்துடைப்புக் கல்யாணம் தான். ஜஸ்ட் தோச நிவர்த்திக்குப் பண்றது. வெளியில் யாருக்கும் தெரியாது."
"ம்மா, உங்களுக்குக் கொஞ்சமும் மூளை இருக்கிறதா? கல்யாணத்துக்குப் பிறகு உங்க மகன் கையை, காலை வைத்துக் கொண்டு சும்மா இருப்பானா? வேலைக்காரி வயிற்றில் நம்ம வீட்டு வாரிசு வந்துவிட்டால்..." மஞ்சரி கோபத்துடன் அன்னையைக் கண்டு கேட்டாள்.
"என்னடி இப்படிப் பொசுக்குன்னு கேட்டுட்ட?" மந்தாகினிக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
"ம்மா, அக்கா சொல்றது சரி தானே. அதுக்குப் பதில் சொல்லுங்க." அமலா அந்தப் பக்கம் இரைந்தாள்.
"ரேகா, நம்ம பேச்சு கேட்பாள். அவள் கிட்ட நேரம் சரியில்லை, அது இதுன்னு ஏதாவது சொல்லி ரெண்டு பேரையும் தள்ளி இருக்கச் சொல்லலாம். அவள் நம்ம அடிமை. நாம சொல்றதை கேட்பாள்." அன்னை கூறிய அடிமை என்கிற வார்த்தை அக்கா, தங்கை இருவரையும் யோசிக்க வைத்தது. அவர்கள் தங்களது சம்மதத்தை அன்னையிடம் கூறினர்.
அன்னையின் அழைப்பை துண்டித்து விட்டுச் சகோதரிகள் இருவரும் தனியே அலைப்பேசியில் பேசினர்.
"எனக்கு என்னவோ தாரிகா பேச்சு சரியில்லைன்னு தோணுது." மஞ்சரி ஆரம்பித்து வைத்தாள்.
"எனக்கும் அதே தான் தோணுது. ஆனாலும் தோசம்ன்னு வரப்போ கொஞ்சம் பயமா தான் இருக்கு. அதனால் தான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னது. அம்மா சொன்ன மாதிரி ரேகா தான் நமக்கு வாய்த்த சரியான அடிமை." அமலா தனது எண்ணத்தைச் சொன்னாள்.
"ஆமா அமலா... ரேகா நாம என்ன சொன்னாலும் கேட்பாள். தோசம் வேலை செய்யா விட்டால்... நாம ரேகா கிட்ட சொல்லி சர்வாவை விட்டு விலகி போகச் சொன்னால் கூட அவள் மறுபேச்சு பேசாது விலகி போய் விடுவாள். அவளை வச்சு நம்ம காரியத்தைச் சாதிப்பது சுலபம். இதே இது தாரிகான்னா கஷ்டம்."
"அதே தான் நானும் நினைச்சேன்க்கா. ரேகாவை விலக்கி வைத்து விட்டு நம்ம நாத்தானர்கள் இருவரில் ஒருவரை சர்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருவோம். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். தோசம் இருந்தால் அது நீங்கிய மாதிரியுமாச்சு. சர்வாவுக்கு நம்ம நாத்தானாருக்குக் கல்யாணம் பண்ணி வச்சி நம்ம பவரை நிலைநாட்டிய மாதிரியும் ஆச்சு." அமலாவுக்குச் சந்தோசமாக இருந்தது. அதை மஞ்சரியும் ஆமோதித்துச் சிரித்தாள்.
"அப்புறம் ஒரு முக்கியமான விசயம்... சர்வா கல்யாணம் பத்தி முக்கியமா நம்ம புகுந்த வீட்டுக்கு தெரியாம பார்த்துக்கணும்." இருவரும் ஒன்று போல் யோசித்து ஒருசேர கூறினர். தங்களது ஒத்த மனம் கண்டு சகோதரிகளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதே மகிழ்ச்சியோடு இருவரும் அழைப்பை வைத்தனர்.
தாரிகா ஒரு புறம், மஞ்சரி அமலா மறுபுறம் என்று இருபக்கமும் சர்வேஸ்வரனுக்கு எதிராகச் சதி திட்டம் தீட்டப்பட்டது. இதில் பாதிக்கப்படப் போவது என்னமோ அப்பாவி உதயரேகா தான்.
********************************