All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2


இனிய தோழி,





புண்ணியம் பேசும் காலத்தில்


கண்ணியம் பேசும் காதல் மகன்


சுயமாய் நின்றாலும்


செதுக்கியவன் கந்தர்வனே!





கந்தர்வன் அறியா காதல்


காவியத்தில் இல்லையே!


அவன் தர்மம் புரியா மோதல்


காதலில் தொல்லையே!





பெற்றவன் எதிர்த்தாலும்


உற்றவன் நான் என்று


ஓங்காரம் செய்யும் காதல்


ரீங்காரம் கண்டால் கூதல்!





தத்தை அவள் தத்தி என்றால்


வித்தைகள் புரிந்த கள்வன்


நத்தையாய் சுருண்ட பெண்ணை


நட்பினால் ஆட்கொண்டாலும்


காதலின் புரிதல் கண்டு


கானலாய் விட்ட நேரம்


தத்தை அவள் தவிப்பில் இன்று


தந்தை அவன் எதிர்க்க...


தாய் அவளோ தவிக்க...


திக்குத் தெரியா காட்டில்


காதலில் வாழ்ந்த நெஞ்சம்


காதலை கரை சேர்க்காதோ...?





நினைவுகள் சுமையானாலும் - அதன்


கனவுகள் சுகம் தான் அன்றோ!


சுமை இறக்க நேரம் வந்தால்


சுகம் தானே வாழ்வில் எல்லை!





வாழ்த்துக்கள் தோழி


நன்றி






நன்றி செல்வி :)
சூப்பர் சூப்பர் மா… அருமையான கவிதை… நினைவுகள் சுமையானாலும் அதன் கனவுகள் சுகமன்றோ! அருமை அருமை… சுகமான சுமை அவர்களது காதல்…
 

Thani

Well-known member
ஆத்மிக்கு ராம் மேலுள்ள மனகசப்பை காதல் பின்னுக்கு தள்ளிவிட்டது 😀இருவருக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ரொம்ப
ரொம்ம்ப...அன்பு ,பாசம் ..நிறைய்ய இருக்கு இருந்தும் விதி இப்படி இருவருக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடுதோ??
 

ஶ்ரீகலா

Administrator
ஆத்மிக்கு ராம் மேலுள்ள மனகசப்பை காதல் பின்னுக்கு தள்ளிவிட்டது 😀இருவருக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ரொம்ப
ரொம்ம்ப...அன்பு ,பாசம் ..நிறைய்ய இருக்கு இருந்தும் விதி இப்படி இருவருக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடுதோ??

நன்றி thani :)
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இருவரும் தங்கள் காதலை உணர்ந்து கொண்ட பதிவு... இருந்தாலும் ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்???

அவள் உண்பதை பறித்து உண்ணும் ராம்.. அவன் பசி என்றவுடன் விட்டு கொடுக்கும் ஆத்மி.. அவளை புரிந்துள்ள போதும் புரியாதது போல் இருக்கும் ராம்... அவள் பசியறிந்து உணவை கொடுக்கும் ராம்.. இப்படி பல பரிமாணங்களில் ஒருவரை ஒருவர் அக்கறை யுடன் பார்த்து கொண்டாலும் சொல்லா காதல் செல்லாது என்பது போல் எத்தனை வருத்தங்கள்...

ராம் நடிக்கிறான் என்று தெரிந்தும் வேறு பெண் பக்கத்தில் இருந்தால் பொறாமை கொள்ளும் ஆத்மி... அர்ஜூனுடன் அவள் பேசி கொண்டிருந்தாலே பொறாமை கொள்ளும் ராம்.. அப்பப்பா! இவர்களல்லோ ஆத்மார்த்த காதலர்கள்...

ஆம் ராம் ஆத்மியை தன் இஷ்டத்திற்கு வளைத்தான் என்பது உண்மையேயல்ல.. அவள் இஷ்டத்திற்கு இவன் தான் வளைந்து கொடுத்துள்ளான்... புரிந்து அவனை ஏற்று கொள்வாளா ஆத்மி??

அழகான பதிவு ்ஆத்மார்த்தமாய் ஸ்ரீ மேம்...

இருவரும் தங்கள் காதலை உணர்ந்தாலும் தம் இணையுடன் பகிர மறுப்பது... தன் கலக்கத்தை மற்றவரிடம் காட்டாமல் உள்ளுக்குள் மறுகும் தங்கள் இணையின் கலக்கத்தையும் அறியாமல் இருப்பது..

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்..
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இருவரும் தங்கள் காதலை உணர்ந்து கொண்ட பதிவு... இருந்தாலும் ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்???

அவள் உண்பதை பறித்து உண்ணும் ராம்.. அவன் பசி என்றவுடன் விட்டு கொடுக்கும் ஆத்மி.. அவளை புரிந்துள்ள போதும் புரியாதது போல் இருக்கும் ராம்... அவள் பசியறிந்து உணவை கொடுக்கும் ராம்.. இப்படி பல பரிமாணங்களில் ஒருவரை ஒருவர் அக்கறை யுடன் பார்த்து கொண்டாலும் சொல்லா காதல் செல்லாது என்பது போல் எத்தனை வருத்தங்கள்...

ராம் நடிக்கிறான் என்று தெரிந்தும் வேறு பெண் பக்கத்தில் இருந்தால் பொறாமை கொள்ளும் ஆத்மி... அர்ஜூனுடன் அவள் பேசி கொண்டிருந்தாலே பொறாமை கொள்ளும் ராம்.. அப்பப்பா! இவர்களல்லோ ஆத்மார்த்த காதலர்கள்...

ஆம் ராம் ஆத்மியை தன் இஷ்டத்திற்கு வளைத்தான் என்பது உண்மையேயல்ல.. அவள் இஷ்டத்திற்கு இவன் தான் வளைந்து கொடுத்துள்ளான்... புரிந்து அவனை ஏற்று கொள்வாளா ஆத்மி??

அழகான பதிவு ்ஆத்மார்த்தமாய் ஸ்ரீ மேம்...

இருவரும் தங்கள் காதலை உணர்ந்தாலும் தம் இணையுடன் பகிர மறுப்பது... தன் கலக்கத்தை மற்றவரிடம் காட்டாமல் உள்ளுக்குள் மறுகும் தங்கள் இணையின் கலக்கத்தையும் அறியாமல் இருப்பது..

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்..

நன்றி சாந்தி :)
இன்று இதற்கு ஒரு முடிவு கட்டி இருக்கிறேன். படித்துவிட்டு சொல்லுங்க…
 
Top