All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கருத்துத் திரி

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-21


மயங்கி விழும் போதே அவளைத் தாங்கி கொண்டவன் கங்காவிடம் தண்ணீர் எடுத்து வர சொல்ல அவளை தண்ணீர் தெளித்து எழுப்பி விட முயலும் போதே மூர்த்தி கோபத்துடன் சஹியின் கையைப் பிடித்து " வாம்மா.. இவன் கிட்ட எதுவுமே உண்மையா இல்லை... அவசரப்பட்டு உன் வாழ்க்கையை பாழ்படுத்திட்டேன்" என்று அந்த இடத்தை விட்டு ஒரு அடி எடுத்து வைக்க அதற்குள் அபிஜித் சஹியின் கையைப் பிடித்து இழுக்க அவனின் நெஞ்சில் மோதி நின்றாள் அவள்….

மூர்த்தி பல்லைக் கடித்து " டேய்! அவ என் பொண்ணு...அவளை நான் யாருக்கு வேண்டுமானாலும் கட்டி வைப்பேன்... அவசரப்பட்டு உன்னைப் பற்றி தெரியாம அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்ச என்னை சொல்லணும்.."என்று கத்தினார்..

தன் காதை குடைந்து கொண்டே" ஸ்ஸ்..என்னா சவுண்டு.. ஹான் எப்படி? எப்படி? உன் பொண்ணா இருக்கறப்ப நீ யாருக்கு வேண்டுமானாலும் அவளை கல்யாணம் பண்ணி தர உனக்கு உரிமை இருக்கு... என் பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி வைக்க உனக்கு உரிமை இல்லை" என்று நிதானமாக கூறினான்..

நடப்பதை எல்லாம் திருமணத்திற்கு வந்திருந்த உறவுகள் சுவாரசியமாகப் பார்த்திருக்க இப்போது பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்த பார்வதி, " டேய்..என்னடா பேசுற…இத்தனை பேரு முன்னாடி… எதுவா இருந்தாலும் மருமகளை கூட்டிட்டு வீட்டுக்கு வா… அங்கே பேசிக்கலாம்" என்று சொல்ல அபிஜித் சஹியின் முகத்தைப் பார்க்க அவளோ மனதில் ' இவ்வளோ நடக்குது.. ஒரு வார்த்தை மன்னிப்பாச்சும் கேட்கறானா? இல்லை ஏதாவது விளக்கம் எதுவும் சொல்றானா?' என்று புகைந்து கொண்டிருந்தாள்…

"ஒரு நிமிஷம்" என்று மூர்த்தி கூறிக்கொண்டே கபிலன் முன் வந்து நின்று " எல்லாமே பொய்யா? நீங்க அபிஜித் அப்பா இல்லையா? நீங்களும் இதுக்கு உடந்தையா? நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றேன்… வா சஹி… இவன் கூட வாழணும்னு உனக்கு அவசியம் இல்லை...வாம்மா போகலாம்" என்று சஹியைக் கூட்டிக் கொண்டு விறுவிறுவென்று நடக்க கங்கா மூர்த்தியின் முன் வந்து நின்று " ஒரு பொண்ணுக்கு தாலி ஏறி அந்த மஞ்சள் கூட காயாது இருக்கறப்ப அவளை வாழாவெட்டியாய் ஆக்க பார்க்கீறீங்களே "என்று ஆக்ரோஷமாக கத்தினார்…

அவரின் ஆக்ரோஷத்தை கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டாலும் அவருக்கு அதைப் பற்றி கவலையில்லாது சஹியை பார்த்து " இனிமேல் நீ நம்ம வீட்டுக்கு வரும்போது உன் புருஷன் கூடத் தான் வர்ற... இல்லைனா வராதே"என்று கூறிவிட்டு ஒரு ஓரமாக நின்றிருந்த பார்வதி மற்றும் நாச்சியாரிடம் சென்று அவர்களின் கைகளை பற்றி " இனி என் பொண்ணு பார்வதிக்கு மருமகளா, நாச்சியார் பேத்தியா தான் இருப்பா...நீ இப்போ அவளைக் கூட்டிப் போ..பார்வதி.. நாங்கள் மூன்றாம் நாள் வந்து மறுவீடு அழைச்சிட்டு வரேன்.."என்று அந்த மண்டபத்தில் இருந்து வெளியேற அவரைத் தொடர்ந்து மூர்த்தியும் வெளியேறினார்…

கபிலன், ஜீவிகா, கதிர் ஒரு புறமும், பார்வதி, நாச்சியார், வானதி, அபிஜித் மறுபுறமும் நிற்க இருவருக்கும் இடையே சஹி நின்றிருந்தாள்…

அனைவரும் திருநெல்வேலிக்கு போகலாம் என்று முடிவு செய்திருக்க அபிஜித் " அம்மா.. நான் திருச்சியிலேயே சொந்த வீடு வாங்கியிருக்கேன்… அங்கே போய் தங்கலாம்.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று சர்வ சாதாரணமாக சொல்ல அனைவரும் அதிர்ந்தாலும் பார்வதி கோபமாக " என்னடா..இது.. என்ன பண்ணி வச்சிருக்க? எல்லாமே உன் முடிவா இருந்தா அப்பறம் நாங்க எதுக்கு? எதுவும் எங்ககிட்ட சொல்றது இல்லை.. எல்லாம் உன் முடிவு தான்" என்று வருத்தமாக சொன்னார்..

அதை அனைவரும் ஆதரித்தாலும் அபிஜித் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க எல்லாரும் காரில் ஏறி அமர சஹியும் அவர்களுடன் அமரப் போனாள்.. அதற்குள் அவளது கையைப் பிடித்த அபிஜித் " நம்ம இரண்டு பேருக்கும் ஸ்பெஷலா புதுக்காரு வாங்கியிருக்கேன்...அதுல தான் நாம் போகணும்..வா.."என்று அவளை இழுக்க அவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு அவளுள் கோபம் இருந்தாலும் அவனுடன் காரில் ஏறினாள்…

டிரைவரிடம் அட்ரெஸை சொல்லிவிட்டு பின்சீட்டில் அமர ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்த சஹி இவனைக் கண்டு இன்னும் தள்ளி அமர்ந்தாள்..அவனோ மனதுக்குள் 'ஹ்க்கும்.. ரொம்பதான்டி' என்று நினைக்கையிலே சிரிப்பு வர அதை மறைத்து விட்டு " ஏன்? காருக்கு வெளியே குஷன் போட சொல்றேன்.. அப்படியே தொத்திட்டு வா.. என் பக்கத்துல நெருங்கி உட்கார்ந்து மேடம் வர மாட்டிங்களாமா? ஹ்ம்ம்" என்று கேள்வி கேட்க சஹி அவனருகில் நெருங்கி அமர்ந்தாள்…

காரின் கதவை மேலோட்டமாக ஏதோ ஒரு நினைவில் அவள் சாத்தியிருக்க அபிஜித் கார் லாக் செய்யாமல் இருப்பதை கவனித்து அவளின் புறம் நகர்ந்து லாக் செய்ய சஹிக்கு அவனின் செய்கையில் மூச்சை அடைத்தது.ஏனெனில் அவள் அவனுக்கு வலதுபுறமாக அமர்ந்திருக்க அவன் கை அவளின் நெஞ்சில் அழுத்தமாக உராய்ந்து கார் கதவை லாக் செய்தது.. அவனின் உராய்வில் சஹிக்கு தன்னிலை அடைய சிறிது நேரம் ஆகவும், அதைப் பற்றி ஏதும் அறியாத அபிஜித் அவளின் முகம் பார்த்து கண் சிமிட்ட அவள் சட்டென்று கண் மூடிக் கொண்டாள்…பின் அவளின் தோளில் கைப் போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டு அவனும் கண் மூடினான்..

அபிஜித்தின் கார் அவனின் வீட்டில் நுழைய அங்கே ஜீவிகா ஆரத்தியுடன் நின்றிருக்க அபிஜித், சஹி இருவரும் சேர்ந்து நிற்க அவர்களுக்கு திருஷ்டி சுத்தி வீட்டின் உள்ளே நுழைய பார்வதி அபிஜித் தை ரெஸ்ட் எடுக்க சொல்ல சஹியை பால் காய்ச்ச வர சொல்ல அவளுக்கு கழுத்தில் இருந்த மாலையை அபிஜித் வாங்கி கொண்டு " போ" என்று தலையாட்ட அவள் அங்கு பாலைக் காய்ச்ச பார்வதி அவளுக்கு உதவ வானதி அவள் கையில் இரு தம்ளரில் பாலை கொடுத்தாள்.

அபிஜித்தின் ரூமிற்கு ஜீவிகா சென்று அவனை அழைத்து ஹாலில் சஹியுடன் அமர வைத்து பாலும் பழமும் கொடுக்க சஹி முதலில் பாலைக் குடித்து விட்டு அவனிடம் குடுக்க அவளை பார்த்துக் கொண்டே குடித்து முடிக்க அதே மாதிரி பழத்தை சஹி வாங்கப் போக அபிஜித் அதைக் கைப்பற்றி முதலில் அவன் சாப்பிட்டு விட்டு கொடுக்க சஹி அதை வாங்கினாலும் சாப்பிடாமல் இருக்க ஜீவிகா அதைப் பார்த்து விட்டு " சீக்கிரம் சாப்பிடுமா.. இதெல்லாம் சம்பிரதாயம்.."என்று சொல்லவும் அபிஜித் " மாம்! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்களேன்..ப்ளீஸ்!" என்று கெஞ்ச அவர் தண்ணீர் எடுத்துவர சென்ற நொடி அவளைப் பார்த்து "என்னடி..தயக்கம்.. என் எச்சிலை நீ சாப்பிட மாட்டியா?" என்று கடுப்புடன் கேட்டான்.

அதற்கு பதிலளித்த சஹி " சாப்பிட முடியாது...இதை தூக்கி போடலாம் என்று நினைக்கிறேன்…" என்று சொல்லிக் கொண்டே கையை தூக்க அதற்குள் அபி அவளின் வாயில் திணித்து விட்டு அவளின் வாயில் மீது இருந்த பழத்தை இவன் கடித்து தின்ன அவள் விழிகள் இரண்டும் விரிய நடந்த நிகழ்வில் அவளும் அதை விழுங்கி இருந்தாள்…

ஜீவிகா தண்ணீர் கொண்டு வர அதை சஹிக்கு குடிக்க தர அதை மடமடவென குடித்தாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவிகா " அவ்ளோ தண்ணீர் தாகமா? இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டாமா?" என்று கேட்டு வானதியை அழைக்க அபிஜித் " அதெல்லாம் வேண்டாம் மாம்! எனக்கு வெளியே வேலை இருக்கு.. நம்ம வீட்டு பழக்க வழக்கத்தை சொல்லிக் குடுங்க.." என்று கதிரை கூட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்…

அவன் வெளியேறிய பின்னர் சஹியை பார்வதி அழைக்க அவர் முன் வந்து நின்றவளை பார்த்து " உன் ரூமுக்கு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு லாமா... உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்று அவளுடன் வானதியையும் அனுப்பி வைத்தார்.

வானதி " அண்ணி! வாங்க... ஏன்? அமைதியா இருக்கீங்க? என் மேல் ஏதும் கோபமா?" என்று சிறு கவலையுடன் கேட்க சஹியோ " அப்படி எல்லாம் இல்லை டா... நடந்தது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு... அதனால் தான் கொஞ்சம் அமைதி..வேற ஒன்னும் இல்லை" என்று கூறிவிட்டு " நீ இங்கேயே இருடா.. நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.." என்று குளியலறைக்குள் நுழைந்தாள்…

அதற்கு பிறகு கபிலன், ஜீவிதா, பார்வதி, நாச்சியார், வானதி என அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க சஹி மட்டும் எதிலும் ஒன்றாமல் இருக்க அவளை அப்படியே விடாது அவளையும் அவர்களுடன் பேச வைத்தனர்… சஹிக்கு பிடித்த மாதிரி அனைவரும் பேச அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அதை உரியவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டு அமர்ந்திருக்க அவளின் முகத்தை பார்த்த நாச்சியார் " அம்மாடி…சஹி! உன் மனசுல கேள்விகள் பல இருந்தாலும் அதற்கு பதில் எங்களுக்கு தெரியும்... ஆனால் இப்போது எதையும் சொல்ற அளவு எங்க மனநிலை இல்லை… நீ இனிமேல் எதுவா இருந்தாலும் உன் புருஷன்ட்ட கேளு! அவன் பதில் சொல்ல கடமைப் பட்டவன்... நீ கேள்வி கேட்க உரிமையுள்ளவள்… அதனால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இப்ப போய் தூங்கு டா…" என்று அவளை ரூமிற்கு அனுப்பினார்.

இரவு மணி எட்டு என்று கடிகாரம் காட்ட நன்கு தூக்கத்தில் இருந்த சஹிக்கு மூர்த்தியின் இருந்து கால் வர அதை எடுத்தவள் மறுபுறம் கேட்ட கங்காவின் குரலில் " அம்மா!" என்று தவிப்புடன் அழைக்க அவரோ நிதானமாக " என்னடா? எதுக்கு இந்த தவிப்பு?"என்று கவலையுடன் கேட்டார்.

" ஏன் மா? என்னை அப்படியே மண்டபத்திலேயே விட்டுட்டு வந்துட்ட? நான் எப்படி ஃபீல் பண்ணேன் தெரியுமா? யாருமே இல்லாத மாதிரி? " என்று அழுகுரலில் சொன்னாள்…

" சஹிமா! அம்மா உன்னை அப்படியே விட்டு வர அளவு நடந்துருக்கேனா உன் புருஷன் வீட்டுக்காரங்க என்னை விட உன்னை நல்லா பார்த்துக்குவாங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கப் போய் தான் நான் வந்தேன்" என்று திடமான குரலில் சொல்ல அந்த குரல் தந்த தைரியத்தை சஹி உணர்ந்தாள்…

" அம்மா! அப்போ உங்களுக்கு என் மாமியை தெரியுமா?" என்று ஆவலாய் கேட்க அவள் கேட்ட கேள்வியில் கங்கா சிறு சிரிப்புடன் " யாரை தேடி இவ்வளோ நாள் நான் இருந்தேனோ, கையில் கிடைத்த வைரத்தை கண்டுக்காம அதைத் தொலைச்சிட்டு தீடிர்னு இப்ப எதிர்பாராத விதமாக உன் மூலமா கிடைச்சிருக்குடா… அவ என்னோட பார்வதி..என்னோட நெருங்கிய தோழி! அவ உன்னை நல்லாவே பார்த்துப்பா… எனக்கு ஏதாவது செய்யணும்னா கடைசி வரை நீ அவளுக்கு மருமகளா அந்த வீட்டுப் பொண்ணா தான் இருக்கணும்..சரியா? " என்று கட்டளையுடன் கெஞ்ச ". ஹ்ம்ம்.. சரி…நான் இங்கே உங்க விருப்பப்படி கவனிச்சிக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து போனை வைத்தாள்…

அதேவேளை சஹி தனது கடைசி வார்த்தையை முடிக்கும் தருவாயில் உள்ளே நுழைந்த அபிஜித் அதைக் கேட்டு விட்டு ' நீ என்னை என்ன கவனிக்கிறது... நான் கவனிக்கிறேன் பாரு உன்னை செமத்தியா..' என்று மனதில் நினைத்து கொண்டே " சாப்பிட வரச் சொல்றாங்க உன்னை..வா" என்று அவளின் கையை பிடித்து கொண்டே ரூமிலிருந்து வெளியேற சஹி அவனின் கையை தட்டிவிட்டு " எனக்கு நடக்க தெரியும்" என்று நடந்தாள்…

அவனோ " என்னடி! இவ்வளோ நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப தைரியமா பேசுற? வா.. எனக்கு ஹாப்பி தான்.." என்று டைனிங் டேபிளில் சென்று அமர இருவருக்கும் பார்வதி பரிமாற அபிஜித் குரலை செருமிக் கொண்டே " அம்மா இனிமேல் இவ தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்யணும்… நீங்க என்னை கவனிக்கிற மாதிரி இவளும் என்னை கவனிக்கணும்" என்று சொல்லி உணவை சுவைத்தான்…

சஹியோ மனதுக்குள்' இவன் பழிவாங்குறேன்னு படுத்தி எடுக்குறானே' என்று நினைத்து கொண்டு சாப்பிட ஆரம்பிக்க அவளருகே அமர்ந்திருந்த நாச்சியார் அபிஜித்திடம் " பெர்ரி! நாளைக்கு காலையில் நாம எல்லோரும் திருநெல்வேலி போகணும்.. சீக்கிரம் போய் தூங்குங்க.."என்று கூற சஹி " ஏன் ? நாம திருநெல்வேலி போகணும்.. அங்கே யாரிருக்கா?" என்று கேட்டு விட்டு அபிஜித்தை பார்க்க அவனோ " ஹ்ம் உன் மாமனோட ஊரு திருநெல்வேலிடி…அப்போ அங்கே தானே போகணும்…" என்று சொல்ல பின் அவளின் காதில் குனிந்து " ஏன்? செழியனா இருந்தப்போ எல்லா விஷயத்தையும் சொன்னேனே.. கவனிக்கலையா?" என்று புருவமுயர்த்தி மெதுவான குரலில் கேட்க அவளோ அதே குரலில் " கவனிச்சிருந்தா.. நீங்க பொய் சொல்றதை அப்பவே கண்டுட்டு விலகிப் போயிருப்பேன்…" என்று வெறுப்பாக கூறினாள்…

அவளது கோபம் அவனுக்கு தன் மீது பட்டு தெறிக்கும் மழைத் துளி போன்றது… ரசனைக்குரியது. ஆனால் அவளது வெறுப்போ மீன் தொட்டியிலிருந்து நழுவி விழுந்த மீன் தண்ணீருக்காக துடிதுடிக்கும் நிலை போன்றது… அவள் ஏன்? எதற்கு? இப்படி செய்தாய்? என்று அவனிடம் கேட்டு சண்டை போடுவாள் என அவன் நினைத்திருக்க இதுவரை அவள் அவனிடம் எதையும் கேட்கவில்லை… அவன் தாலி கட்டும் போது அவன் முகத்தை பார்த்ததோடு சரி.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை... தெரிந்தாலும் அதை அவன் கண்டு கொள்ள போவது இல்லை…

" ஏன்டி? இப்படி முகத்தை வெறுப்பா வச்சிக்கிற…இது மாதிரி என்கிட்ட இருக்காத.. அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே " எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… நான் தூங்க போறேன்.." என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் செல்ல அவள் பின்னாலேயே வந்த அபிஜித் " ஹேய்… என்னடி தூங்கறேன்னு சொல்ற.. இன்னிக்கு நமக்கு.." என்று அவன் ஆரம்பிக்க " என்ன? என்ன நமக்கு? படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு நானே கடுப்புல இருக்கேன்..இதுல இது வேற.." என்று பல்லைக் கடித்து கொண்டே கூறிவிட்டு பட்டென்று படுத்துக் கொண்டாள்... அவனும் காலை சீக்கிரம் எழ வேண்டுமாயின் அவளருகே அவள் முகம் பார்த்து படுத்துக் கொண்டான்... அவள் அவனை பார்த்துவிட்டு திரும்பி படுக்க அவளது இடுப்பில் கைக் கொடுத்து அவனுக்கு இடதுபுறம் இருந்தவளை வலதுபுறமாக தூக்கி படுக்க வைத்து விட்டு அவளை நோக்கி " கடைசியா சொல்றேன்.. என்கிட்ட முகம் திருப்பாத… மீறினால் இதே மாதிரி நிறைய விஷயம் நடக்கும்… ஹ்ம்…. சாம்பிள் இது… தூங்கு.." என்று படுத்து விட்டான்… அவளும் அவனது கூற்றை ஏற்றுக் கொண்டு அவன் முகம் பார்த்தே படுத்தாள்…

மறுநாள் காலை அனைவரும் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு அங்கேயிருந்து தூத்துக்குடிக்கு சென்று திருநெல்வேலி அடைந்தனர்...

அபிஜித், சஹியை வேறொரு காரில் வருமாறு பணித்துவிட்டு மற்றவர்கள் வீட்டிற்கு பயணிக்க அபிஜித், சஹி சில நிமிடங்கள் கழித்து வீட்டை அடைந்தனர்…

சஹிக்கு அதிகாலை சீக்கிரம் எழுந்ததில் தூக்கம் கண்களை சுழற்ற அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் வாகாக தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்… அது அவளை விட அவனுக்கு தான் வாகாக பொருந்தியது…

வீட்டை அடைந்த பொழுது சஹியை எழுப்பிய அபிஜித் " எந்திரிச்சி... அப்பறம் தூங்குவ… வீட்டு உள்ளே போகலாம்.." என்று அவளை எழுப்ப சஹி கண்ணை கசக்கி கொண்டே எதிரில் இருந்த வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்... ஏனெனில் அது அவளது வீட்டைப் போன்று அப்படியே இருந்தது.. அவளது முகபாவனைகளை கவனித்து கொண்டிருந்த அபிஜித் " எதுக்குடி இவ்வளோ ஷாக் ஆகுற? இதுக்கெல்லாம் பதில் உனக்கு சீக்கிரம் தெரிய வரும்.. வா" என்று அவள் காதில் ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு ஆராத்தி எடுக்க வீட்டினுள் நுழைந்தனர்…

அபியின் அறைக்கு சஹியை அவன் கூட்டிச் செல்ல முற்பட ஜீவிகா, நாச்சியார் இருவரும் " டேய்.. மருமகளை எங்க கூட கொஞ்சம் பேச விடுடா" என்று அவனை ரூமிற்கு அனுப்ப அவனை நமட்டு சிரிப்புடன் சஹி பார்க்க " அவள் இல்லாமல் ரூமில நான் என்ன பண்றது?" என்று சட்டென்று கேட்க " அடேய்" என்று நாச்சியார் சத்தமிட ஜீவிகா அவனது தலையில் கொட்டினார்..

சஹிக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்க வழி தெரியாததால் யாரையும் பார்க்காமல் தலை குனிந்து அமர்ந்திருக்க அபிஜித் அவளின் சங்கடம் உணர்ந்து அறைக்குள் சென்றான்…

நாச்சியார் " இங்கே பாருமா.. என் பெர்ரிக்கு இரண்டு அம்மா, அப்பா...ஒன்னு பெத்தவங்க.. இன்னொன்று வளர்த்தவங்க… அதே மாதிரி காலையில் எழுந்து நீதான் வாசல் தெளித்து கோலம் போடணும்... இந்த வீட்டு மஹாலட்சுமி நீதான் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரணும்.." என்று கூற சஹிக்கு அது திக்கென்று இருக்க ஜீவிகா அவளது தலையை தடவிவிட்டு " எதுக்கு மா இப்படி முழிக்கிற? உனக்கு நாங்கள் இருக்கோம்" என்று நம்பிக்கை கொடுத்து அறைக்குள் அனுப்பினார்…

அபிஜித் ரூமிற்குள் சஹி நுழைய அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் " ஹேய்... ஏதாச்சும் கேளுடி… ஏன் இப்படி பண்ணீங்க? என்ன வேண்டும் ? இது மாதிரி ஏதாவது என்கிட்ட கேட்கணும்னு தோணலையா?" என்று கேட்டவன் அவளுக்கு நேராக வந்து நின்று அவளின் கண்களை நேராகப் பார்த்து கேட்க அவளோ " ஏதாவது காரணம் இருக்கப் போய் தானே இப்படி பண்றீங்க… அது எப்போ எனக்கு தெரியணுமோ, அப்ப தெரியட்டும்… " என்று அவனைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள்…

சஹிக்கு தன் எதிரியுடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்த யோகேஷ் அதைக் கேட்க மூர்த்திக்கு அழைத்த நொடி அவனின் அழைப்பை ஏற்று " சொல்லு யோகேஷ்.." என்று தொடங்கிய வேளை அவன் அவரிடம் " உங்களை நம்புனது என் தப்பு தான்… நான் விரும்புனது எதுவும் இதுவரை எனக்கு கிடைக்காம இருந்ததில்லை…. உங்க பொண்ணை ராணி மாதிரி நான் வச்சிக்கலாம்னு இருந்தேன்… கடைசில எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்திட்டு இப்ப வந்து என்ன? ஏதுன்னு கேட்கறீங்க" என்று கோபமாக கேட்டான்…

" உனக்கே தெரியும்... அந்த ஆச்சார்யா தான் அவனுக்கு எல்லா சப்போர்ட்டும்..அவரை மீறி என்ன பண்றது? " என்று ஆதங்கமாக கேட்க யோகேஷ், " ஆச்சார்யா மட்டும் இதுல இல்லை... உங்க கன்ஸ்ட்ரெக்ஷன்லயே ஒரு கருப்பு ஆடு இருக்குது… அதை முதலில் கண்டுபிடிங்க… அப்பறம் என்ன செய்யறதுன்னு நான் சொல்றேன்… இப்ப எனக்கு வேலை இருக்கு…" என்று போனை வைத்தான்….

மூர்த்தி 'அது யாரது தமக்கு துரோகம் செய்தது கூட இருந்து கொண்டே ..அது யாராக இருந்தாலும் அவனுக்கு தண்டனை இந்த மூர்த்தி கிட்ட கிடைச்சே தீரும் ' மனதில் நினைத்து கொண்டார்…

அதேவேளை அந்த கருப்பு ஆடாக யோகேஷால் சொல்லப் பட்டவன் ஒரு பெண்ணின் போட்டோவை வைத்து கொண்டு " உனக்காக தான்டி இதை செஞ்சேன்.." என்று பெண்ணிவளின் பிம்பத்திடம் கூறினான்...

*********************************************
 
Top