ஹாய்.. சகோஸ் இதோ! ஜி(எ)த்தனின் சஹியிவள்... அத்தியாயம் -4 பதிந்து இருக்கிறேன்.... உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... கேட்க ஆவலா இருக்கேன். நன்றி!
அத்தியாயம் -4
அன்றைய நாள் அந்த அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்பாக பைலை எடுத்து கொண்டு மாடியில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தனர்.
மிகப்பெரிய அளவில் கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்டு அதற்குரிய அமௌண்ட் கோட் செய்து அனுப்பி வைத்து இன்று டெண்டர் யார் கைக்கு செல்லப் போகிறது எனப் பார்க்க அனைவரும் காத்திருந்தனர்.
எம்.எம். கன்ஸ்ட்ரக்க்ஷன் சார்பில் மகேஸ்வர மூர்த்தி மற்றும் அவரது பி.ஏ. ஜீவா வந்திருந்தனர். இந்த டெண்டரானது சுமார் 300 கோடி மதிப்புள்ள பிராஜெக்ட்.மிகப்பெரிய மருத்துவ கல்லூரி, ஆய்வகம்,நூலகம் என சகல வசதிகளும் அதில் இருக்குமாறு அமைப்பதற்கு டெண்டர் அரசு சார்பில் விடப்பட்டு உள்ளது.
டெண்டர் அறிக்கை சரிபார்த்து அங்கே அதிகாரி அமர்ந்தவுடன் மூர்த்தி தன் பி.ஏ. ஜீவாவை திரும்பி பார்த்தார்.
ஏனெனில் அமெளண்ட் கோட் செய்த போது அறையில் இருவர் மட்டுமே இருந்ததால் அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. மிகக்குறைந்த அளவிலேயே அமௌண்ட் கோட் செய்யப்பட்டதால் இவர்களை தவிர வேறு யாருக்கும் டெண்டர் தர முடியாது என்று நம்பி இறுமாந்து இருந்தனர்.
ஜீவா, மகேஸ்வரமூர்த்தியின் ஒன்றுவிட்ட அண்ணன் ஈஸ்வர மூர்த்தியின் மகன்.அவனும் கட்டடக்கலை படித்துவிட்டு வேலை தேடும் சமயம் தமக்கு உதவியாக இருக்கும்படிக்கும், அத்தோடு மூர்த்தியிடம் தொழில் கற்றுக்கொண்டு அதில் இருக்கும் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறுவது சுலபம்… ஆகையால், ஈஸ்வரன் தன் மகன் ஜீவாவிடம் ,"மூர்த்தி சொல்கிறப்படி நடந்துக்கொள்… "எனவும் ஜீவா எம்.எம். கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்க ஒத்துக்கொண்டான்…
ஜீவாவிற்கு, முதலில் எம்.எம்.கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு போவதற்கு விருப்பமில்லை…. சாஹித்யா தான் மூர்த்தி, ஒருநாள் வீட்டில் கங்காவிடம் ஒரு நம்பிக்கையான பி.ஏ. என்கூட இருந்தால் நன்றாக இருக்கும்…. என்று சொன்னதை கேட்டுவிட்டு ஜீவாவிடம் கெஞ்சி கொஞ்சி கேட்கவும் ஜீவா வேறு வழியில்லாமல் அங்கே வேலைக்கு போக சம்மதித்தான்….
இப்போது விடப்படும் டெண்டர், பல கோடி ரூபாயில் இருப்பதால் அங்கே நிறைய கான்ஸ்ட்ரக்ஷனின் உரிமையாளர்கள் அனைவரும் ஆஜராகி இருந்தனர்.
மூர்த்தி, டெண்டர் விடப்படும் இடத்திற்கே வரவும் இது எவ்ளோ முக்கியமான டெண்டர் … என அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
மூர்த்தியே,இதில் கலந்து கொண்டதால் அங்கே இருந்த கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் அனைவரும் இந்த டெண்டர் இனி தனக்கு கிடைக்காது என்ற மனநிலையில் இருந்தனர். இந்த டெண்டர் இனி மூர்த்திக்கு தான் சொந்தம்… என கிசுகிசுக்க அதை கேட்ட மூர்த்தி கர்வமாக நிமிர்ந்து அமர்ந்தார்.
அதே நேரம் , அந்த ஹாலில் அமர்ந்து இருந்த ஏ.ஜெ. கன்ஸ்ட்ரக்ஷனில் பி.ஏ. வாக இருக்கும் கதிரவன், பரபரப்போடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நொடிக்கு ஒரு தரம் போனை பார்த்துக்கொண்டு இருக்க அதனின் திரையில் அழைப்பு வந்ததிற்கு அடையாளமாக திரையில் எம்.டி. அழைக்கிறார் என எழுத்துகள் மின்னியது.
அவசரமாக, அதன் அழைப்பை ஏற்று, " குட் மார்னிங் சார் …. சொல்லுங்க.. சார்.. சரிங்க சார்…"வார்த்தைக்கு வார்த்தை பணிவுடன் சார் சொல்லி விட்டு ஒரு பெரு மூச்சுடன் போனை வைக்கவும், டெண்டரின் முடிவுகள் அறிவிக்கப்படவும் சரியாக இருந்தது….
அரசின் சார்பில் விடப்படும் இந்த டெண்டர் மிக குறைந்த அளவில் கோட் செய்த ஏ.ஜெ. கன்ஸ்ட்ரக்க்ஷனுக்கு விடப்படுகிறது என்று அறிவிக்க படுகிறது.அதன் உரிமையாளர் வந்து கையொப்பம் இட வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என அறிவிக்கவும் அவன் அந்த அரங்கில் நுழையவும் சரியாக இருந்தது.
அந்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் ஏ.ஜெ கன்ஸ்ட்ரக்க்ஷன் எம்.டி யை காண ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.ஏனெனில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் அவனின் பி.ஏ. கதிரவன் மட்டும் தான் அவன் சார்பாக கலந்து கொள்வான்.அதனால் அவனை காண காத்திருந்தனர்.
பெரிய அளவில் டெண்டர் கிடைத்த மகிழ்ச்சி ஏதுமின்றி எந்த வித ஆரவாரமும் இல்லாமல் அந்த அரங்கில் நுழைந்தான் ஏ.ஜெ.கன்ஸ்ட்ரெக்ஷன் எம்.டி. அபிஜித்.
இருபத்தி ஏழு வயதான அவன், ஆறு அடி உயரத்தில் கம்பீரமான தோற்றம் கொண்ட அவன் அங்கிருந்த அனைவரையும் சிறிதாக்கி அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தான். சிறு வயதில் நீவி விடப்பட்டதால் நீள் விழிகளும் அதற்கு ஏற்றார் போல் வானவில்லின் வளைந்த புருவங்களும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. மிளகாயின் கூராக மூக்கும் இதுவரை புகை பிடித்ததில்லை என்பதற்கு சான்றாக இளஞ்சிவப்பு நிற உதடுகளும் அவனின் அடர்ந்த மீசைக்கு இன்னும் எடுப்பாக காட்சியளித்தது. அவன் நடந்து வரும் அசைவில் கருத்த அடர்த்தி மிகுந்த தலைமுடி அங்கும் இங்கும் அசைந்து அவன் கைகளுக்கு அடங்க மறுத்தது.
டெண்டரின் முடிவுகளை கேட்டு மூர்த்தி அதிர்ந்து போய் இருந்தார். இதுவரை அரசின் சார்பில் விடும் அனைத்து டெண்டர்களும் மூர்த்திக்கு மட்டும் தான் கிடைக்கும். இதனால் மற்ற கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் தங்கள் விதியை நொந்து கொள்வார்கள். மூர்த்திக்கு மட்டுமே கிடைக்கும் டெண்டர் என தெரிந்த பிறகு எதற்கு மூர்த்தியிடம் மோதி வீழனும்… என ஒதுங்கி கொள்வார்கள்.
ஆனால், இன்றோ நிலைமையே தலைக்கீழாக இருந்தது…..
மூர்த்தி, ' இது எப்படி சாத்தியம்' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவனை கண் அசையாமல் திகைத்துப் போய் பார்த்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் கோட் செய்த தொகையை விட சில ஆயிரங்கள் கம்மி செய்து கொடுத்திருந்தான் அவன். இது எப்படி சாத்தியம் இப்புடி ஒரு அமௌண்ட் இந்த டெண்டர்க்கு யாருமே கோட் பண்ணிருக்க மாட்டாங்களே…. என்று இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டே இருந்தார்.
கையொப்பம் இட்டு விட்டு அபிஜித் மூர்த்தியைத் தாண்டி செல்கையில் அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தாலும் அவன் மனத்துக்குள் ' இதுக்கே இப்புடி ஷாக் ஆனா எப்புடி மூர்த்தி, இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை' என்று நகைத்து கொண்டிருந்தான்.
அங்கிருந்தோர் அனைவரின் வாழ்த்துக்களையும் சிறு சிரிப்புடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.
அப்போது அங்கிருந்த வேறொரு கன்ஸ்ட்ரக்க்ஷன் எம்.டி. ரகு அவனருகில் வந்து "கங்கிராட்ஸ் மிஸ்டர் அபிஜித்! இந்த பிராஜெக்ட் உங்களுக்கு கிடைக்கும்ன்னு நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
உடனே அபிஜித்!.... " ஆனால் நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் ரகு! …. அப்படி சொல்லும் போது அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு
எதிர் பார்த்தீர்களா? எப்படி ? அவ்ளோ நம்பிக்கையா? என்று கேட்கவும் " ஆமாம்….. நம்பிக்கை தான்…. இந்த பிராஜெக்ட்டின் உண்மையான மதிப்பை மட்டுமே நான் அவதானித்து அனுப்பியிருந்தேன்.அதனால் எனக்கு அது கிடைக்கும் என நம்பினேன்…." என்று கூறவும்
ரகுவோ…" எனக்கு மட்டுமில்லை… இங்கிருக்க அனைவர்க்கும் ஆச்சரியம் தான்.... என்று சொல்லும் போதே, அபிஜித் தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி " ஏன் ? எதுக்கு ஆச்சரியம்? என்று கேட்க….
அதற்கு ரகு" மூர்த்தியை டெண்டரில் ஜெயிக்க யாராலையும் முடியாதுன்னு நினைச்சப்ப நீங்க முதன் முதலா ஜெயிச்சு காட்டிருக்கிங்க…. வாழ்த்துக்கள்… மிஸ்டர். அபிஜித்… எனவும்
அபிஜித்தோ, ரகுவிடம்…." உங்க வாழ்க்கையில நீங்க யாரை பார்த்தும் வியக்காதிங்க ரகு… மற்றவங்களை விட ஆற்றலிலும் அதிகாரத்திலும் சிறந்து இருப்பதை விட அறிவில் சிறந்து இருக்கணும்னு அரிஸ்டாட்டில் சொல்லிருக்காரு …. அதை நீங்க முயற்சி பண்ணி பாருங்க…. ஜெய்ப்பிங்க...
அத்தோடு பேச்சு முடிந்தது என தன் பி.ஏ.வோடு கிளம்பி விட்டான் அபிஜித்.
******************************************
கல்லூரி தொடங்கிய ஒரு வாரத்திற்கு பின்னர் சஹியும் அவள் நட்புக்களும் நோட்ஸ் எடுப்பதற்கு லைப்ரரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
"ஹோய்! "என குரல் கேட்கவும் யாரோ யாரையோ கூப்பிடுறாங்க என கடந்து போக நினைக்கவும்
"ஹே! ஆரஞ்சு கலர் அலமேலு உன்னை தான் அப்படியே கூட்டத்தோடு இங்க வாங்க!..... "என்று அங்கே போடப்பட்டு இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சீனியர் மாணவர்கள் அழைத்தனர்.அதில் மாணவிகளும் அடக்கம்.
சஹி, விஷானிடம் "இங்கே பாருடா …. மஞ்ச சட்டை மட்டிக்கு உள்ள கொழுப்பை என்னை பார்த்து அலமேலுங்கறான்"... என்று காதில் மெல்ல கிசு கிசுக்க விஷான் அவளை "ஸ்ஸ்ஸ் சஹி பேசாமல் இரு" என்று அவளை அடக்கி அவர்கள் முன் சென்று நின்றனர்.
கூட்டத்தில் இருந்த சீனியர் பெண்ணொருத்தி "ஹோய்! உங்கள் நேமை ஃபர்ஸ்ட் சொல்லுங்கள்…." என்று கூற பிரியா தன் பெயரை கூறத் தொடங்கும் முன்பே சஹி , அவளிடம்" சீனியர்!.... எங்க பெயர் சாஹித்ய தர்ஷினி பிரியா விஷானு"….என்று நீட்டி முழக்க அந்த சீனியர் பெண்" ஹே ! என்ன கிண்டலா……"என்று சீறவும் உடனே சஹி, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…. சீனியர் ! நாங்கள் நான்கு பேரும் ஒவ்வொருத்தவங்க நேம் சொல்லிட்டு இருந்தா ரொம்பவும் லேட்டாகும்ல…. அப்படி ஆக கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான் சீனியர் "......என்று வெளியில் பம்மியபடி சொன்னாலும் மனத்துக்குள் இனிமேல் எங்களை கூப்பிட்டு வச்சு நேமை கேட்கவே கூடாது என்று நக்கலாக நினைத்து கொண்டாள்.
இவளின் நக்கல் பேச்சை பற்றி நட்புகள் அறிந்திருந்ததால் அவர்களும் தங்களின் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.
சஹியின் நக்கல் பேச்சை சீனியர்களும் கண்டு கொண்டனர்.
அதில் கடுப்பான அந்த சீனியர் பெண், நாலு பேரோட பேக்கை தன்னிடம் தருமாறு கேட்கவும் நட்புகள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அவளிடம் தந்தனர்.
உடனே விஷான், அப்பெண்ணிடம் "சீனியர் நீங்கள் நினைக்கற அளவுக்கு எங்கள் பேக்கில் ஒன்றும் இருக்காது…" என்று சொல்லும்போதே அந்த பெண் தர்ஷினி வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து விட்டாள்.
அதை கண்டு தர்ஷினி, "சீனியர் !.....ப்ளீஸ்... ப்ளீஸ்…. டிபன் பாக்ஸை மட்டும் எடுக்காதீங்க "என்று கெஞ்சவும் அப்பெண் சிரித்து கொண்டே அதை தன் சகாக்களிடம் தந்துவிட்டு தர்ஷினியிடம் …" இன்னிக்கு ஒருநாள் வீட்டு சாப்பாடு சாப்பிடாம இரு... அப்போதாவது உன் குண்டு உடம்பு குறையட்டும்" என்று கிண்டலாக கூற அங்கிருந்தோர் அனைவரும் கொல் என்று சிரித்தனர்.( இதெல்லாம் இப்போ ஜோக்கு…)
சஹி மற்றும் விஷானுக்கு அவளின் பேச்சை கேட்டு கோபம் வந்தாலும் சீனியர்களை பகைத்து கொண்டு இருந்தால் தங்களுக்கு கிடைக்கும் செமினார், அசைன்மெண்ட் எல்லாவற்றிக்கும் ரெப்பாக சீனியர் தயவு வேண்டும் என்பதால் அப்போது அமைதி காத்தனர்.
அவர்கள் நால்வரின் அமைதி கண்டு சீனியர் மாணவர்கள் "இனிமேல் அடிக்கடி எங்க கிட்ட வந்து உங்கள் டிபன் பாக்ஸை கொடுத்துட்டு போகணும் சரியா? …. என்று அனுப்பி வைத்தனர். ஏனெனில் சஹியின் கேங்கை சும்மா கூப்பிட்டு வம்பிழுத்து விட்டு விட தான் சீனியர் மாணவர்கள் நினைத்திருந்தனர். ( ராக்கிங் எல்லாம் அங்கே இல்ல)
ஆனால் சஹியின் நக்கலை கண்டு தர்ஷினி டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கெத்து காட்டினர்.( ஸப்பா என்ன ஒரு கெத்து?)
சீனியர் செய்த செயலால் தர்ஷினி முகம் கசங்க வருவதைக் கண்டு பிரியா ,விஷான் மற்றும் சஹியிடம் கண்ணைக் காட்ட….. மூவரும் தர்ஷினி யை சமாதானம் படுத்த ஆரம்பித்தனர்.
பிரியா, "விடு தர்ஷினி டிபன் பாக்ஸ் தானேடி!...... நாம் கேண்டீனில் சாப்பிட்டுக்கலாம் டோண்ட் ஃபீல் …." என்று சமாதானம் படுத்த" நான் அதுக்கு ஒன்னும் ஃபீல் பண்ணல" என்று தர்ஷினி கூற…. விஷான்" பின்னே எதுக்குடி ஃபீல் பண்ண?" என்று கேட்கவும் அவள் சொன்னதை கேட்டு மூவருக்கும் மயக்கம் வந்தது.
"என்னடி…. சொல்றே … உண்மையாவா? என்று சஹி கேட்க விஷானும், பிரியாவும் கடவுளுக்கு நன்றி என்று வானத்தை நோக்கி கும்பிட்டுக் கொண்டனர். அவர்களின் செயலால்
தர்ஷினி கேள்வியாக பார்க்க அவர்கள் சொன்ன பதிலில் அவர்களை துரத்த ஆரம்பித்தாள்.
அது வேற ஒன்றுமில்லை தர்ஷினி யூடியூப் பார்த்து தன் நட்புக்களுக்காக அன்று சமைத்து கொண்டு வந்திருந்தாள்.(நல்ல விஷயம் தானே)
சமைத்து கொண்டு வந்தது நல்ல விஷயம் தான்.ஆனால் என்ன சமைச்சு கொண்டு வந்தா என்பதே இங்கு பீதியை கிளப்பியது....