All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...
நன்றி ஸ்ரீமா.
வணக்கம் நண்பர்களே அன்பர்களே.
நான் லயா. என்னுடைய மொழிநடையில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். குறைகளை கூறி அவற்றை நிறைகளாய் மாற்ற உதவுங்கள் செல்லங்களே.
கதை பற்றி சொல்லனும்னா என்னத்த சொல்ல எனக்கே தெரில. எல்லோரையும் போல ஒரு காதல் கதை தான்.
நாயகன்: க்ரிஷ்
எப்படிப்பட்டவன்னு அவனை தவிர யாருக்குமே தெரியா.
நாயகி:ஸ்ருதி
சாடிக்கேத்த மூடி. க்ரிஷ் ஓட பேன்.
வாரத்தில் எப்ப ud னு சொல்ல தெரில ஆன வரும். பிழைகள் இருப்பின் மன்னிச்சு drs
இதயம்:01
அழகான கல்லூரிச்சாலை எங்கும் இளமைக்கோலம். ஒரு மரத்தடியில் இளம்சிட்டுக்களின் ஆரவார பேச்சுக்களின் நடுவில் அமைதியின் உருவாய் அவள். இதுவரை அவளின் எண்ணங்களை அறிந்தவர் ஒருவரே. அவளின் உயிர்த்தோழி மித்ரா மட்டுமே. ஏன்டி சுதி எப்போது பார்த்தாலும் அமைதியவே இருக்கியே உனக்கு அலுக்காத? அவளை பற்றி தான் தெரியுமே ராதி பிறகேன் அவளை வம்பிழுக்கிறாய் நீ? அம்மாடி மிட்டு உங்க உயிரை நாங்க எதுவும் சொல்லலைப்பா எங்களை விட்டிரு.
சரி இதெல்லாம் விடுங்கடி நம்ம கடைசி செமிக்கு(semester)வந்துவிட்டோமே ட்ரைனிங் எங்க போக போறீங்க? ஜானு நீ? எனக்கு அப்பா தெரிஞ்ச இடத்தில் எடுத்துவிட்டார்டி. நாங்க எல்லோருமே எடுத்து விட்டோம். நம்ம சுதி மட்டும் எடுக்கல. ஏன் சுதி நான் அப்பாட்டா சொல்லி எடுத்து தரவாடி? இல்லை வேணாம் மிட்டு நான் ஒரு இடத்தில கேட்டு இருக்கேன். அங்க கிடைக்காட்டி சொல்றன். சரிடி வாங்க போகலாம் கிளாஸ் தொடங்க போகுது.
டீஸர்.
ஏன் மாமா பேசாம இருக்க சொல்லுடா
உண்மையா உனக்கு என்ன பிடிக்கலையா? ஏன்னு காரணமாவது சொல்லேன். எனக்கு நீ உயிர். அது உனக்கும் தெரியும்ல. பிறகேன்டா என்ன கொல்ற. ஒருவேளை உனக்கு நான் தப்பான பொண்ண தெரிறனோ, நான் அப்படி எல்லாம் இல்லடா. என்னை புரிஞ்சுக்கோடா. பேசு மாமா. எனக்கு நல்லாவே தெரியும் நான் அனுப்புற எல்லா மெசேசும் நீ பார்க்கிறா என்று. நீ இல்லனா நான் செத்துடுவேன் மாமா.
ஏண்டி ஸ்ருதிலயம் கல்லூரிக்கு போறியா இல்ல அழகு போட்டிக்கு போறியா எத்தனை உடுப்பு மாத்துறடி நீ. மித்து வந்து கால்மணி நேரம் ஆகிட்டுடி. ஏன்மா இப்ப கத்துற நீ என்னை கொஞ்சம் ஒல்லியா பெத்துருக்கலாம்ல இப்ப பாரு எந்த உடுப்பு போட்டாலும் குண்டா காட்டுது. அடியேய் நீ பிறக்கும் போது குண்டு இல்ல. இப்போ வீட்ல எந்த வேலையும் செய்யாம இருந்து இருந்து இப்படி வந்துட்டாய்.
இப்போ எதுக்குடி அம்மாகூட கத்துற. நீ அவளஎல்லாம் குண்டா இல்ல. வீட்ட இந்த வாய். ஆனா வெளிய போன அப்படியே அமைதி. சரி ஆன்ட்டி நாங்க போய்டுவரோம். சரிம்மா பார்த்து பத்திரமா போய்டு வாங்க. ஏன் சுதி உன்னோட வாய் மட்டும் தான் சந்தோசமா பேசுது கண்ணுல அதே சோகம். நீ இன்னும் அவனை மறக்கலயா. நீயும் ஏன் மிட்டு எல்லோரா போலவும் நினைக்குற. அவனுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. அதுவும் லவ் பண்ணி. எனக்கு அவனை நினைக்கவே கொலைவெறி வருது. எப்படி சுதி உன்ன லவ் பண்றன்னு சொல்லி உங்க வீடு வரை ப்ரோப்லேம் பண்ணிட்டு இன்னொருத்தியை லவ் மேரேஜ் பண்ண முடின்சுது. விடு மிட்டு தப்ப நானும் தான் பண்ணன். அந்த வயசில அது லவ் இல்லனு புரியல. எனக்கு இப்ப வரை இருக்குற கவலை அவன் சொன்ன எல்லாத்தையும் நம்பி என் வீட்ல இருக்கவங்க வாய்க்கு வந்த படி பேசினது. நான் எப்படினு அவங்களுக்கு தெரியாதா. சரி கவலை படாத சுதி.
கல்லூரி வளாகம்.என்னங்கடி எல்லாரும் கிளாஸ் போகாம மரத்தடில நிக்கறீங்க?, எல்லாம் நம்ம ட்ரைன்னிங் பற்றின அவசர ஆலோசனை கூட்டம் தான். நாங்க ஏற்கனவே சொன்னது தான். எடுத்தாச்சு. நீ என்ன மாதிரி மிட்டு.எனக்கென்னடி நானும் ரெடி. வாற மாத தொடக்கத்திலே போகவேண்டியது தான். சுதி டியர் நீங்க ஓகேவா. ஹ்ம் ஓகே டி. என்ன எப்படியும் தூர விடமாட்டாங்க. சோ வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு இடம் இருந்துச்சு எடுத்தாச்சு."TC அக்காடமி"ல. அப்போ எல்லாருக்கும் ஓகே நாம மிட்டு மாதிரி வாற மாத ஸ்டார்ட்லயே போவம், அப்போ தான் ஒரே டைம்க்கு கம்ப்ளீட்டும் பண்ணலாம். சரிடி நாங்க கிளாஸ் போறம் வாரீங்களா சுதி மிட்டு. நீங்க போங்கடி வாறோம். ஓகே. சுதி என்னாச்சுடி உண்மையா பிளேஸ் எடுத்துட்டியா இல்லைனா சும்மா சொல்றியா. உண்மையா எடுத்தாச்சு மிட்டு. ஆனா என்னன்னு தெரில போறத நினைச்சா பயமா இருக்கு. இங்க பாரு சுதி நான் வேணும்னா என்னட இடத்திலேயே கதைச்சு பக்காவா. இல்லடி நான் தனியா போன தான் உன்ன சார்ந்து இருக்கமா இருக்க பழகுவேன்.
ஏங்க உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். சொல்லும்மா. நாம நம்ம ஸ்ருதியை ரொம்ப அடங்குறோமோ ஏன்னா இப்பெல்லாம் ரொம்ப அமைதியா இருக்காங்க. உனக்கென்ன கண்ணில்லையா, அவள் நம்மகூட நல்லா சிரிச்சு சந்தோசமா தான் இருக்காள்.அப்படி இல்லைங்க நமக்கு முன்னால அப்படி இருக்காள் தான் ஆனா கொஞ்சத்தால தனியா போய் இருக்கிறாளே. இல்லைம்மா அவள் அப்படியே இருக்கட்டும். நல்லா இருந்து பட்டதெல்லாம் போதும். நாலு இடத்தில மாப்பிளை பாக்க சொல்லி இருக்கேன். அமைந்தா கட்டி குடுத்திடலாம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.