உனை தினம் எதிர்ப்பார்த்தேன் 1
“மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...”
” இளைராஜாவின் இன்னிசை பாட்டை கேட்டுக்கொண்டே தனது காரை ஓட்டிகொண்டிருந்தான் சக்தி.
“ நள்ளிரவு முன்றை தொட்டுகொண்டிருந்த அந்த நேரத்தில், அவன் மட்டும் அந்த சாலையில் பயணத்திக்கொண்டிருந்தான். ஒரு சாலையை கடந்து அடுத்த சாலைக்கு தன் காரை திருப்ப முற்படும் போது யாரோ ஒரு பெண் அவன் காரின் முன் விழ, இவனோ சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான். நல்லவேளை அடுத்த சாலையை கடக்க போவதால் அவன் மெதுவாக ஓட்டினான்.”
“தன் காரின் முன் விழுந்த பெண்ணிற்க்கு ஏதவதென்று ஆகிவிட்டதோ என பயந்துகொண்டு வேகமாக கீழிறங்கினான். கீழே விழுந்த பெண்ணின் அருகில் சென்று அவளை தூக்கி, திருப்பினான். நெற்றியில் கொஞ்சம் பலமான அடி இரத்தம் நிற்க்காமல் வந்துகொண்டிருந்தது. அதை தனது கைக்குட்டையால் அழுத்திப்பிடித்துக்கொண்டு மற்ற இடத்தில் அடிப்பட்டு இருக்கா என அவளின் உடல் முழுவது சோதித்தான்.”
“அப்பொழுது தான் அவளை நன்றாக பார்த்தான். பட்டுசேலை கட்டி இருந்தால். கழுத்தில் சின்ன விநாயகர் டாலருடன் இருந்த ஜெயின். தலை முழுவதும் மல்லிகைப்பூ மட்டும் அதிகமா இருந்தது போல ஆனால் அதுவும் நாறு நாறாக உதிர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்தவன் மனதில் ‘ஒரு வேளை புதுசா கல்யாணம் ஆனா பொண்ணோ, ஆனா ஏன் இந்த நேரத்துல இங்க’ என அவன் குழம்பினான்.
“அதன் பின் தான் கழுத்தில் தாலி இருந்ததா என பார்வையால் சோதித்தான் ஆனால் இல்லை. அப்போ புது பொண்ணும் இல்லை, யாரு இந்த பொண்ணு” அவன் யோசிக்க
”அவன் யோசனையை தடை செய்வது போல அவள் தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவனை உணர்வுக்கு கொண்டு வந்தது.”
“யோசிக்க நேரமில்லை என முடிவு செய்துகொண்டு அவனது ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்தான். அடுத்த நொடி அவன் முன் அவனது ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.”
“அவளை அவன் கைகளிலே தூக்கிகொண்டு அந்த ஆம்புலன்ஸ் டெக்சரில் படுக்க வைத்தான். அவளின் நாடி பிடித்து எல்லாம் சரியாக இருக்கா, இல்லை பல்ஸ் இரங்கி இருக்கா என் ஒரு மருத்துவனாய் சோதிக்க ஆரம்பித்தான்.”
“அவள் உடலில், நெற்றியில் மட்டுமே அடிப்பட்டது தவிர மற்ற இடத்தில் எந்த காயமும் இல்லை. அடிபட்டதில் இருந்து மயக்கத்தில் இருக்கிறால் போல” என எண்ணிக்கொண்டான்.
“ஹாஸ்பிட்டலில், அவள் காயத்திற்க்கு மருந்திட்டு, அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றினான். அப்பொழுது தான் அவளின் முகத்தை பார்த்தான். நிலா போன்ற முகம், வானவில் போன்ற புருவம் வளைந்து அழகாக இருந்தது, இளம் குமரியின் முகம் அவளை இருபத்திரண்டு வயது பெண் என சொல்லாமல சொல்லியது.”
“அடிப்பட்ட பெண்ணை நான் இப்படி ரசிப்பது சரியல்ல. பாவம் அவளே எந்த நிலையில் இருந்தாளோ. ஆனால் இவள் யார், எங்கு இருக்கிறால், என ஒரு தகவலும் எனக்கு தெரியாது. அவளே எழுந்து சொன்னால் தான் உண்டு.” என எண்ணிகொண்டே அவள் அருகில் அமர்ந்திருந்தான்.
“பாவம் அவனும் என்ன செய்வான், காலையில் இருந்து இரண்டு ஆப்ரேஷன் முடித்துவிட்டு, கிளம்பும் சமயத்தில் டீனுடன் மீட்டிங்க் அட்டென் செய்துவிட்டு அவன் கிளம்ப நேரம் பதினெரு மணி. அதன் பின்பு அவன் இல்லத்திற்க்கு செல்ல குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும்.”
“சக்தியின் வீடு பாண்டிசேரியில் இருக்கிறது. அவன் தந்தையின் ஹாஸ்பிட்டலான மற்றொரு ப்ராஞ்ச் தான் சென்னையில் இருக்கிறது. தந்தை வரமுடியாத காரணாத்தால் தான் அவன் வர நேர்ந்தது.”
“சேரில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டான். சூரியன் கிழக்கில் உதிக்க ஆயுத்தமான நிலையில் இருக்க, அவர்களின் அறையில் சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்தது.”
“சூரிய வெளிச்சத்தில் முதலில் கண் முழித்தது, சக்தி தான். எழுந்தது அவளின் நிலையை ஆராய்ந்து பார்த்தான். அதே மயக்க நிலையில் தான் இருக்கிறால்.எந்த முன்னேற்றமும் இல்லை.”
“அவளின் கன்னத்தில் கை வைத்து தட்டின்னான். ‘இங்க பாருங்க... அய்யோ இவ பேருகூட எனக்கு தெரியாதே.’ வாய்விட்டு புலம்பினான்.”
“அவன் புலம்பியது அவளுக்கு கேட்டதோ இல்லையோ, அவன் அன்னைக்கு கேட்டுவிட்டது போல. அவன் கைப்பேசி அழைக்க ஆரம்பித்தது.”
“ நேற்றில் இருந்து, அன்னை இருபது முறை அழைத்துவிட்டார். ஆனால் அவனின் பதில் முக்கியமான வேலை என்றே இருந்தது. இப்போது எந்த வேலையை சொல்லுவான்.”
“சொல்லுங்கம்மா..”
“இல்லைமா, காருல வரும் போது ஒரு பொண்ணை இடிச்சுட்டேன். என நேற்று நடந்தை சொன்னான்.”
“அவளை காப்பாற்றி, நமது மருத்துவமனையில் சேர்த்து, அவளின் பக்கதில் நேற்றில் இருந்து இருப்பதை சொன்னான். ஆனால் அவள் மயக்கம் மட்டும் இன்னும் தெளியவில்லை என்பதையும் கொஞ்சம் தயங்கி கூறினான்.”
“அவன் அன்னையோ, ‘என்ன டாக்டர் டா நீ... ஒரு பொண்ணு எதுக்காக மயக்கமா இருக்கானு கூட தெரியாதவேன் எப்படி படிச்சு கோல்டு மெடல் வாங்குன. உன்னை எல்லாம் டாக்டர்க்கு படிக்க வச்ச உன் அப்பாவ சொல்லனும்.” தனது மகனால் காரில் அடிப்பட்ட பெண்ணிற்க்கு ஏது நேர்ந்துவிட்டால், என பயத்தில் பேசினார்.
“அம்மா... அம்மா... அவளுக்கு ஒன்னு ஆகலை இன்னும் மயக்கத்தில தான் இருக்கா. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க.” அவன் அன்னையை சமாதானம் செய்தான்.
“அவன், அன்னையிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்விழித்தால். அதனை கவனிக்காமல் தன் அன்னையிடமே பேசிக்கொண்டிருந்தான்.”
“முதலில் விழித்தவள் தான் எங்கு இருக்கிறோம் என உணரவே நேரம் பிடித்தது. பின் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பது லேசாக பிடிபட, அடுத்த நொடி எழுந்திரிக்க முயன்றால். அவளின் அசையை உணர்ந்தது போல் அவளின் பக்கம் திரும்பினான்.”
“அம்மா, அவ கண்முழிச்சுட்டா... நான் அப்புறம் கூப்பிடுறேன். அன்னையின் போனை கட் செய்தவிட்டு அவள் அருகில் சென்றான்.”
“இப்போ எப்படி இருக்கு, ஏன் எழுந்திரிக்குற.” என கேட்டபடி அவள் எழுவதற்க்கு உதவி செய்தான்.
“பர... பரவாயில்ல... நீங்க யார்??? நான் எப்படி இங்க வந்தேன்” அவள் கேட்க.
“அதை நான் தான் கேட்கனும். நீ தான் நேத்து என் காருல குறுக்க வந்து விழுந்த. ஜெஸ்ட் மிஸ், லேசா அடிபட்டுச்சு இல்லைனா இன்நேரம் உனக்கு சங்கு தான் ஊதிட்டு இருப்பாங்க” அவன் கொஞ்சம் கேலியாகவும், தீவிரமாகவும் சொன்னான்.
“ நான் நேத்து உங்க காருல வேணுமுனு விழுகல. என்னை துரத்திட்டு வந்தாங்க, அவங்களை திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்ததால உங்க கார் வர்ரத கவனிக்கலை” அவளி நிலை எடுத்துச்சொன்னால்.
“சரி எப்படியோ என் கார் முன்னாடி விழுந்து என் கார்தான் டேமேஜ் ஆகிருச்சு. அதுமில்லாம, அடிப்பட உனக்கு வைத்தியம் பார்த்து, இரவு முழுக்க கண்விழிச்சுருக்கேன் அதுக்கெல்லாம் சேர்த்து எனக்கு பில் கட்டிட்டு போ” அவன் கோவமாக சொல்ல.
“அவன் கோவத்தை பார்த்து பயந்து போனவள். ‘என்கிட்ட காசு இல்லையே,”
“அவளின் பயத்தையும் கொஞ்சம் ரசித்து பார்த்தவன், அவளி பதிலில் இன்னும் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.”
“அவனுக்கு எதுக்குமா, காசு கொடுக்கனும். நானே அவனுக்கு சம்பளம் தர்ரதில்லை.” அவளுக்கு பதில் சொல்லிய படி உள்ளே வந்தார் சசிதரன்.”
“அவரின், பேச்சில் அவள் இன்னும் அதிகமாக பயந்து போனால். இவரு யாரு.” என அவள் யோசிக்க.
“என்னம்மா, நான் யாருனு பார்க்குறையா. இந்த வீனா போன டாக்டர் பெத்தவன் தான்மா”
“அப்பா, நான் வீனா போனவனா. என்னை பற்றி கேட்டுப்பாருங்க ஹாஸ்ப்பிட்டல.” அவன் வீராப்பாய் சொல்ல.
“ நீ பேசாதே டா.. ஒரு பொண்ண ஆக்ஸிடன் பண்ணிருக்க... இப்போ அந்த பொண்ணவே நீ மிரட்டிட்டு இருக்கியா”
“அப்பா, நான் அவளை மிரட்டுனதை நீங்க பார்த்தேங்களா.”
“ நான் பார்க்கலை தான், நான் வரும் போது அந்த பொண்ணுகிட்ட பில் கட்டிட்டு போனும்னு நீ தானே சொல்லிட்டு இருந்த.”
“அய்யோ அப்பா, சும்மா பேசிட்டு இருந்ததை நீங்க மிரட்டுனதா எடுத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா.”
“சரி அந்த பொண்ணுகிட்ட கேட்கலாம், ‘ நீ சொல்லுமா அவன் உன்னை மிரட்டுனான, இல்லையா’ அவளை பார்த்துக்கேட்க.
“சொல்லும்மா, நான் உன்னை மிரட்டுனேனா,” அவள் கண்ணை பார்த்து அவன் கேட்க.
“அவளோ, இருவரிம் முகத்தையும் மாறி மாறி பார்த்துகொண்டு இருந்தால், அதில் உஷரான அவனோ, அவளை பார்த்து இல்லைனு சொல்லு” என வாயசைவில் சொல்லிகொண்டிருந்தான்.
“அவளோ, அவனின் வாயசைவில் அவரிடம், ‘ அவங்க என்னை மிரட்டலைங்க’ என அவனின் தந்தையிடம் பொய் கூறினால்.
“ம்ம்... நீ சொல்லறதால அவனை சும்மா விடுறேன்ம்மா... போடா போய் உன் ரூம்ல ரெப்ரஸ் ஆகிட்டு வா, நான் இந்த பொண்ணை பார்த்துகிறேன்.” அவனை அனுப்பிவைத்தார்.
“மறக்காம அவளை செக் பண்ணுங்கப்பா. நான் இன்னும் அவளை செக் பண்ணலை” போற போக்கில் சொல்லிக்கொண்டு போனான்.
“இப்போ எப்படி இருக்கும்மா, என அவளிடம் கேட்டுக்கொண்டே அவளை பரிசோதனை செய்தார். எல்லாம் நார்மலாக இருந்தது. ஆனாலும் அவளின் உடம்பில் ஏதோ வித்தியாசம் தென்பட்டது. அதை உணர்ந்தவர் அடிப்பட்டதில் ஏற்ப்பட்டு இருக்கும் காயமாக கூட இருக்கலாம் என அவரே முடிவு செய்தார்.”
“ம்ம்.. எல்லாம் நார்மலா இருக்குமா... உன் வீடு எங்கனு சொல்லு அங்க நாங்களே கொண்டு போய் விடுறோம் என அவளிடம் கேட்க.
“என் வீடு... அவள் சிந்திக்கையில் உடல் தூக்கிவாரி போட்டது. இனி எப்படி என் அம்மாவின் முகத்தில் விழிப்பது. அவரின் கேள்வியால் நான் அல்லவா பாதிக்கபடுவேன், நான் மட்டுமா என் குடும்பமே பாதிக்கப்படும்.” அவள் கவலைகொள்ள.
“என்னமா வீடு எங்க இருக்குனு யோசிக்கிறயை??”
“இல்லை... எனக்கு யாரும் இல்லை... ஒருத்தவங்களுக்கு நான் பாரமா இருக்க கூடாதுனு தான் அவங்களைவிட்டு விலகி வந்தேன். இனிமே தான் எங்க போகனும், எந்த வேலை பார்க்கனும் முடிவு பண்ணனும்”
“அவளின் பேச்சில் அவரின் முகம் யோசனையாய் சுருங்கியது. அடுத்த நிமிடம் ‘ சரிம்மா, பராவாயில்ல... நான் உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன், அப்படியே நீ தங்குறதுக்கு ஒரு வீடு இருக்கு நீ எங்க கூட வருவியாம்மா”
அவரின் பதில் மகிழ்ச்சி கொண்டாலும் இந்த காலத்தில் எவரை நம்புவது என தெரியாமல் அமைதி காத்தால்.
“என்னமா, நாங்க எல்லாம் நல்லவங்களா, இல்லையானு யோசிக்கிறையா...”
“அவளும், நேரடியாகவே ஒப்புக்கொண்டால், ஆமாம்” என தலையாட்டினால்.
“எங்கூட ஒரு நாள் வந்து தங்கி பாரம்மா, அப்புறம் உனக்கு பிடிக்கலைனா, நீ பாதுக்காப்பான இடத்துல நானே உன்னை சேர்த்துவிடுறேன்.”
“அவரின் பதிலில், அவர் மீது இருந்த யோசனை எல்லாம் உடைந்து போனது, ‘சரிங்க நான் வரேன்’. அவளின் பதில் அவர் மகிழ்ந்தாரோ இல்லையோ, அவன் மகிழ்ந்தான்.”
“அப்பா, கிளம்பலாம... சரிடா... நீ இந்த பொண்ண கூப்பிட்டு முன்னாடி போ, நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்.” அவளை அவனுடன் அனுப்பி வைத்தார்.”
“ம்ம்...சரிப்பா...”
“சென்னையில் இருந்து, பாண்டிச்சேரிக்கு பயணமானாள். வழி நெடுக்கிலும் பயம் இருந்தாலும், அவளின் பயம் தேவையில்லாதது என சொல்லாமல் சொல்லியது மனது.”
“உன் பெயர் கூட எனக்கு தெரியாதேம்மா... உன் பெயர் என்ன... அவர் காரில் சென்றுகொண்டிருக்கும் போது கேட்க.”
“என் பேர்... ராதா..”
“ரொம்ப அருமையான பெயர்... என் மனைவிக்கு பிடித்தமான பெயர்.” அவர் சொன்னதும், அவளுக்கு வேறு மாதிரியான நினைவலைகள் தாக்கியது.
“உன்னை ராதானு கூப்பிட்டா தான் எனக்கு பிடிக்கும்” ஒருவன் சொல்லியது இன்னும் நீங்கவில்லை அவள் மனதில் இருந்து.
“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தா ராதானு பெயர் வைக்கலாமுனு இருந்தோம் , “ஆனா எங்க வாழ்க்கையில நான் ஒருத்தன் தான் பிள்ளையாய் பிற்ப்பேனு சொல்லிருந்ததால என்னை என் அம்மா, பாரட்டி, சீராட்டி வளர்த்தாங்க. ஆனா என் அப்பா மட்டும் என்னை திட்டிட்டே இருப்பாங்க” சசிதரன் பாதி பேசிகொண்டிருக்கும் போதே இடையிட்டு, பிரகாஷ் மீதிய அவளிடம் சொல்லி முடித்தான்.”
“அவனின் பேச்சில் சின்ன புன்னை வந்தாலும், அதை அவர்களு முன் காட்டாமல் அவளுள்ளே வைத்துகொண்டால்.”
“டேய் உன்னை பத்தி நீயே புகழ்ந்துக்ககூடாது. அதை எல்லாம் நான் சொல்லனும்”
“ஆமா, அப்படியே நீங்க சொல்லிட்டாலும், என்னை நீங்க போட்டியா தானே நினைக்குறீங்க... நீங்க வாங்காத கோல்டுமெடலை நான் வாங்கிட்டேனு உங்களுக்கு புறாமை” துளியும் பொறாமை இல்லாத தனது தந்தை வம்பிழுத்தான்.
”இவன் சொல்லறதை நம்பாதம்மா, என்னை பார்த்தா பொறாமை படுறவன் மாதிரியா தெரியது” என அவளை பார்த்து கேட்டார்.
“அவளோ, இல்லை” என தலையாட்டினால்.
“பார்த்துக்கோடா... அந்த பொண்ணு என்னை தான் நம்புது.” அவர் கூறியதில்.
“முன்னிருக்கையில், அமர்ந்திருந்தவன் அவள் அமர்ந்திருக்கும் பின்னிருக்கை திரும்பி பார்த்தான். அவன் பார்ப்பதை உணர்ந்தவள் தலையை குனிந்துகொண்டால்.”
“இப்படியே அவர்களின் பயணம் முடிவுக்கு வந்தது. சசிதரன் முன்கூட்டியே, அவரின் மனைவிடம் அந்த பெண்ணை அழைத்து வருவதாய் கூறினார். அவர்களுக்காகவே காத்திருந்தார் போல் வாசலிலே அவர்களை வரவேற்றார்.
“காரில் இருந்து தயங்கிகொண்டே இறங்கியவள். அவளின் தயக்கம் தேவை இல்லை என்பது போல் அவள் அருகில் வந்தார் சசிதரனின் மனைவி விசலாட்சி.”
“வாம்மா, வலி அதிகமா இருக்காம்மா, இப்போ உனக்கு ஒன்னும் இல்லையே...” அவரின் பாசத்திலான கேள்வியில் அவள், அவர் மீது மிகவும் மரியதை வந்தது.”
“வலி அதிகமா இல்லைம்மா, இப்போ நல்லா இருக்கு.”
”வா... வாம்மா... வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் வாம்மா” அவளை அணைத்துகொண்டு அழைத்து சென்றார்.
“அம்மா, நேத்திருந்து பிள்ளையை காணமேனு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா, இப்போ வந்த பொண்ணு தான் உங்களுக்கு முக்கியமா போனலா..” அவனை கவனிக்காத அன்னையின் மீது கோவம் கொண்டான்.
“ அதான் நீ காரை விட்டு இறங்கின உடனே பார்த்தேன் டா.. நீ நல்லா இருக்க, உன்னால அடிப்பட்ட பொண்ணு தான் இப்ப எனக்கு முக்கியம்... உள்ள வாடா அரட்டை” அவனின் போலியான கோவத்தை கண்டு கொண்டு பேசினார்.
“ம்ம்ம்… பார்க்கிறேன்... இன்னும் எத்தனை நாள்னு அவ மேல பாசம்னு.” எப்பொழுதும் தன் மேலே பாசம் வைத்திருக்கும் அன்னை, இப்பொழுது இடையில் வந்தவள் மேல் பாசத்தை காட்டினால் அவனுக்கும் கோவம் வரும் தானே.”
” அவர்களுக்கு தெரியாது இவள் எதனால் இவர்களிடம் தஞ்சம் அடைந்தால் என்று. ஆனால் அடுதடுத்த சோதனையில் பெரிது பாதிக்கப்படுவது சக்தியா, ராதாவா???”
எதிர்ப்பார்க்கிறேன்……உன்னை…..???