mekha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-9a)
தன் நண்பனின் துர்மரணம் மாதுரிக்கு மிகுந்த வேதனை அளித்தது. கூடவே ஒரு சந்தேகமும் எழ,
" பிரபா அந்த மக்களுக்காக போராடிய விஷயம் எனக்கே தெரியவில்லை. அதேசமயம் துருவ், கதிருக்கு எல்லாம் தெரியுமா ?..."
"இல்லை... இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு அவர்களுக்கு ஏதாவது ஆகி விடக் கூடாது என்பதில் பிரபா உறுதியாக இருந்தான். "
"இப்போ வரை தெரியாதா ?"
" துருவ்க்கு மட்டும் தெரியும் "
"எப்படி?..."
" உன் பிரண்ட் வெரி ஸ்மார்ட் ...என் முகம் வைத்தே கண்டறிந்து கேட்டான். அன்றைக்கு நான் இருந்த மனநிலையில் உளறி விட்டேன். அப்போதே சந்தோஷைக் கொல்லத் துணிந்தான். நான் தடுக்கவில்லை என்றால் அவன் எப்போதோ அந்த செயலை செய்து முடித்திருப்பான். இன்றளவும் துருவ் கொலைவெறியுடன் தான் இருக்கிறான்.சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை சிதைத்து விடுவான் ."
தன் இன்னொரு நண்பனின் துடிப்பைக் கண்டு கர்வம் கொண்டது மாதுரியின் மனம். மறுநாள் ஒரு முடிவுடன் பட்டு சேலையில் நல்ல நகை அலங்காரத்துடன் மாதுரி தனக்கே உரிய கம்பீரத்துடன் வீறுகொண்ட வேங்கையாய் காரிலிருந்து இறங்கி வந்தாள் சந்தோஷின் வீட்டிற்கு. வாதத்தினால் படுக்கையில் விழுந்த பெரிய மாமனாரைச் சென்று சந்தித்தாள். சந்தோஷ் கிருஷ்ணா குடும்பம் அவனது சகோதரிப் பெண்களாலேயே சூழப்பட்டிருந்தது. அவளை அன்புடன் வரவேற்றனர். அத்துணை பேருக்கும் சந்தோஷ் என்றால் உயிர் என்பதை அங்கு போன பின்பு தெரிந்துக் கொண்டாள். இத்தனை பேரின் வளர்ப்பு எங்கே தவறாகிப் போனது என்று கவனமாக யோசித்தாள். பெரிய மாமனாரின் அறையில் நுழைந்ததும் பெரியவருக்கு பழச்சாறு புகட்டிக்கொண்டிருந்தார் பெரிய மாமியார்.
" கும்பிடுகிறேன் பெரிய மாமா.. பெரிய அத்தை.... "
"வாம்மா "
என்று அழைத்தார் கண்களில் கனிவு காட்டி. உடல் நலம் விசாரித்தவளிடம் வாய் குழறியபடியே பதிலளித்தார் பெரியவர் . பின் அவளை இருக்கையில் அமரச் சொன்னார். அவளோ மறுத்து விட்டு அவரது காலடியில் அமர்ந்து இரு கரம் கூப்பி நேரடியாக தான் குறைந்தது கூறலானாள்
.
"பெரிய மாமா... பெரிய அத்தை நீங்கள் எப்படிப்பட்ட நீதி பரம்பரையில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். உங்கள் மகன் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா?...."
" தெரியும் "
என்பதுபோல் கண்களை மூடி ஆமோதித்த பெரியவரைக் கண்டு அதிர்ந்தாள் ரதி. கலங்கிய விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டே பெரியவரின் மனைவி அமுதவல்லி ,
"இவர் இப்படி நோவில் வாடுவதே அவனால்தான். இது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . அவனது சிறு சிறு தவறுகளை பெற்றவர்களாய் கண்டித்தும் கேட்கவில்லை. அடுக்கடுக்காய் அவனது தவறுகள் தொடர ஒருநாள் எல்லை மீறவே உங்க மாமா ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்.அதில் இவரை கைநீட்டிவிட்டான் பாவி. அன்றிரவே ரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டார் தவமிருந்து என் குலத்தை அழிக்கும் அரக்கனை பெத்தெடுத்தனே அம்மா... உன் மாமனார் உட்பட அத்தனை பேருக்கும் முன்னுதாரணமாய் இருந்த என் சாமிய சாச்சுப்புட்டானே அம்மா...."
என்று கதறினார் அந்தப் பெண்மணி. அவருக்கு ஆறுதல் கூறும் வழி தெரியாது,
" என் கொழுந்தனைக் கொன்ற உங்க மகனை அழிக்கவேண்டி உங்க அனுமதி பெறவே இங்கு வந்தேன்"
என்றவளை பெரியவர்கள் புரியாமல் திகைத்து விழிக்க, பெரியவர் மட்டும்
மெல்ல வாயைத் திறந்து,
" என் மகனை அழிக்க என்னிடமே அனுமதி கேட்க வந்தாயோ மருமகளே...."
என்று கேட்டார் .அந்த நிமிடம் திகைத்தாலும்
"நீங்க நீதிமான் என்று எனக்கு தெரியும் மாமா....அதான் உங்களிடம் அனுமதி பெற வந்தேன் "
தொடர்ந்து பிரபாகர் பற்றி கூற ஆரம்பித்தாள். முழுவதையும் கேட்ட பின் அந்த நிமிடம் இருவரும் சற்றும் யோசிக்காமல்,
" நான் தங்கத்தை பெறவில்லை தகரத்தைத்தான் பெற்றெடுத்தேன். நாங்கள் கலங்கவில்லை தாராளமாக செய். எங்களுக்கு மறுப்பேதும் இல்லை"
என்றனர் . எந்தப் பெற்றோரும் சொல்லத்தகாததை சொல்ல வைத்துவிட்டானே பாவி என சந்தோஷ் கிருஷ்ணா மீது கோபம் வந்தாலும், தர்மம் வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்புவியில் உள்ளனர் என்று அகமகிழ்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி ஆசிப் பெற்றாள் அவ்விருவரிடமும். வீட்டிற்கு வந்ததும் சந்தோஷை எப்படி சாய்ப்பது என்று கணவன் வருவதைக் கூட கவனியாமல் ஆழ்ந்து சிந்தித்தாள் மாதுரி. அப்போது அங்கே வந்த கிருபா மனைவியை அலங்காரத்துடன் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி ரசித்தான். திருமணமான நாளிலிருந்து சேலையே உடுத்தினாலும் இன்று கட்டிலில் கால் மேல் கால் போட்டு, விரல் நகங்களை அழகாய் கடித்துத் துப்பியபடி அமர்ந்து இருந்த மனைவியின் அழகு அவனைக் கிறங்கச் செய்தது. ரொம்ப நேரம் சைட் அடித்தவன் பின் தலையை உலுக்கி விட்டு, நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவளருகில் சென்று நெருங்கி அமர்ந்தான். அதிலும் அவள் சிந்தனையிலிருந்து மீளவில்லை. வேண்டுமென்றே கிருபா அவளுக்கு வலிக்கும்படி இறுக்கி அணைத்தான். அதில் பயந்துபோய் மீண்டவள்,
"நீ எப்போடா வந்த?..."
"நான் வந்தது கூட தெரியாமல் மேடம்க்கு என்ன பலத்தயோசனை"
" சந்தோஷுக்கு எப்படி முடிவு கட்டணும்னு யோசிக்கிறேன்"
" ஏன்டி அயித்தான் அலஞ்சு களைச்சு போய் வந்து இருக்காரே.... ஒரு டீ போட்டுத் தருவோம்.... காலை அமுக்கி விடுவோம்னு இல்லாமல் என்னடி யோசனை வேண்டிக்கிடக்கு"
என்றவனை முறைத்தவள்.
" யார் இந்த அயித்தான் "
என்று நீட்டி முழக்கி கூறினாள்.
"ஹேய்.... நான்தாண்டி உன் அத்தான்"
என்றான் அப்பாவியாய். மேலும் கீழுமாய் அவனைப் பார்த்துவிட்டு
"யார் நீ .... நான் என்னமோ ரகுவை சொல்றியோனு நினைத்து விட்டேன்"
என்று கூறிவிட்டு கணவனின் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தாள். ஒரு கணம் கிருபாகரனின் முகம் சுருங்கினாலும் மறுகணமே அவளருகே வந்து ,
"நெசமா ரகு தான் உன் அத்தானா?...." என்றான் ஏக்கத்தையும் தவிப்பையும் கண்களில் தேக்கி. அவனது தவிப்பு அவளை குதூகலிக்கச் செய்ததால் சன்னமாய் குறும்பு சிரிப்புடன்,
" ஆமாம் "
என்றவளை அடுத்த நொடி அவன் ஆவேசமாய் அணைத்து அவளது இதழ்களை வன்மையாய் சிறை செய்தான். வன்மையாய் இதழ்களைக் களவாடிக் கொண்டாலும் சுகத்தின் தித்திப்பு சற்றும் குறையவில்லை இருவருக்கும் . நெடுநேர இதழொற்றல் மூச்சுவிட இயலாமல் செய்தாலும் அவளை விரும்பி கணவனிடத்தில் மயங்கச் செய்தது. இதழ் சிறையின் நீடிப்பு தொடர உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்து கிருபாவின் நெஞ்சில் தழுவி நழுவி கீழே அமர்ந்து அவளது மோனமயக்கத்தை மறைக்கும் பொருட்டு முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டாள். மனைவி விளையாட்டாகவே ரகுவைப் பற்றி கூறி இருந்தாலும் தன் உரிமையை நிலைநாட்ட நினைத்து இந்தச் செயலைச் செய்தவன் மனைவியின் முகத்தை கண்டதும் அவனது இளமை உணர்வுகள் மேலோங்க அவளது முகத்தை கரம் கொண்டு ஏந்தி மெல்ல அவளது விரல்களை பிரித்து எடுத்து அவளது வதனத்தைக் கண்டான். அது வெட்கத்தின் சாயல் பூசி செம்பூவாய் அலர்ந்து காணப்பட்டதைக் கண்டதும் அவளை வாரி அள்ளி கட்டிலில் கிடத்தி தானும அவள் மேல் படர்ந்தான். அவளிடத்தில் மறுப்பேதுமில்லாத நிலையே சம்மதம் தர பாவையவளை இதமாய் கையாண்டான் அந்த ராட்சசன். தனது இத்தனை வருட காதலை தன்னவளிடத்தில் ஆழமாய் தேடினான். மதுவுண்ட மந்தியாய் மீண்டும் மீண்டும் அவளை நாடி காதலெனும் போதையில் திளைத்தான். ஆம்..... அவர்களிடத்தில் அழகிய இல்லறம் ஆரவாரமின்றி துவங்கியது. இரவு உணவு உண்ணாமலே தங்களின் தேடலைத் துவங்கியதால் நடுச்சாமத்தில் பசி வயிற்றைக் கிள்ளியது. ஆடைகலைந்து அழகோவியமாய் காணப்பட்டவளை மீண்டும் மீண்டும் நாட விரும்பியது மனம். ஆனால் வயிற்றுப் பசியின் குணம் அவளிடத்தில் தெரிய அவன் மட்டும் எழுந்து உடை மாற்றிக் கீழே சென்று உணவருந்தி விட்டு ரதிக்கும் உணவு எடுத்து வந்தான்.சாப்பாட்டு தட்டுடன் வந்தவனை கண்டு எழ முயன்றவளை தடுத்து விட்டு தானே அவளுக்கு சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் ஊட்டி வாய் கழுவி , துடைத்து விட்டான். அவனது இந்த செய்கையில் தன் தந்தையைக் கண்டவள் கை கழுவிவிட்டு வந்தவனின் சட்டையை பற்றி இழுத்து தன் அதரங்களால் கணவனை அர்ச்சனை செய்தாள். இப்போது தேடலின் முறை அவளது ஆயிற்று.
தன் நண்பனின் துர்மரணம் மாதுரிக்கு மிகுந்த வேதனை அளித்தது. கூடவே ஒரு சந்தேகமும் எழ,
" பிரபா அந்த மக்களுக்காக போராடிய விஷயம் எனக்கே தெரியவில்லை. அதேசமயம் துருவ், கதிருக்கு எல்லாம் தெரியுமா ?..."
"இல்லை... இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு அவர்களுக்கு ஏதாவது ஆகி விடக் கூடாது என்பதில் பிரபா உறுதியாக இருந்தான். "
"இப்போ வரை தெரியாதா ?"
" துருவ்க்கு மட்டும் தெரியும் "
"எப்படி?..."
" உன் பிரண்ட் வெரி ஸ்மார்ட் ...என் முகம் வைத்தே கண்டறிந்து கேட்டான். அன்றைக்கு நான் இருந்த மனநிலையில் உளறி விட்டேன். அப்போதே சந்தோஷைக் கொல்லத் துணிந்தான். நான் தடுக்கவில்லை என்றால் அவன் எப்போதோ அந்த செயலை செய்து முடித்திருப்பான். இன்றளவும் துருவ் கொலைவெறியுடன் தான் இருக்கிறான்.சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை சிதைத்து விடுவான் ."
தன் இன்னொரு நண்பனின் துடிப்பைக் கண்டு கர்வம் கொண்டது மாதுரியின் மனம். மறுநாள் ஒரு முடிவுடன் பட்டு சேலையில் நல்ல நகை அலங்காரத்துடன் மாதுரி தனக்கே உரிய கம்பீரத்துடன் வீறுகொண்ட வேங்கையாய் காரிலிருந்து இறங்கி வந்தாள் சந்தோஷின் வீட்டிற்கு. வாதத்தினால் படுக்கையில் விழுந்த பெரிய மாமனாரைச் சென்று சந்தித்தாள். சந்தோஷ் கிருஷ்ணா குடும்பம் அவனது சகோதரிப் பெண்களாலேயே சூழப்பட்டிருந்தது. அவளை அன்புடன் வரவேற்றனர். அத்துணை பேருக்கும் சந்தோஷ் என்றால் உயிர் என்பதை அங்கு போன பின்பு தெரிந்துக் கொண்டாள். இத்தனை பேரின் வளர்ப்பு எங்கே தவறாகிப் போனது என்று கவனமாக யோசித்தாள். பெரிய மாமனாரின் அறையில் நுழைந்ததும் பெரியவருக்கு பழச்சாறு புகட்டிக்கொண்டிருந்தார் பெரிய மாமியார்.
" கும்பிடுகிறேன் பெரிய மாமா.. பெரிய அத்தை.... "
"வாம்மா "
என்று அழைத்தார் கண்களில் கனிவு காட்டி. உடல் நலம் விசாரித்தவளிடம் வாய் குழறியபடியே பதிலளித்தார் பெரியவர் . பின் அவளை இருக்கையில் அமரச் சொன்னார். அவளோ மறுத்து விட்டு அவரது காலடியில் அமர்ந்து இரு கரம் கூப்பி நேரடியாக தான் குறைந்தது கூறலானாள்
.
"பெரிய மாமா... பெரிய அத்தை நீங்கள் எப்படிப்பட்ட நீதி பரம்பரையில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். உங்கள் மகன் எப்படிப்பட்டவர் என்று தெரியுமா?...."
" தெரியும் "
என்பதுபோல் கண்களை மூடி ஆமோதித்த பெரியவரைக் கண்டு அதிர்ந்தாள் ரதி. கலங்கிய விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டே பெரியவரின் மனைவி அமுதவல்லி ,
"இவர் இப்படி நோவில் வாடுவதே அவனால்தான். இது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . அவனது சிறு சிறு தவறுகளை பெற்றவர்களாய் கண்டித்தும் கேட்கவில்லை. அடுக்கடுக்காய் அவனது தவறுகள் தொடர ஒருநாள் எல்லை மீறவே உங்க மாமா ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்.அதில் இவரை கைநீட்டிவிட்டான் பாவி. அன்றிரவே ரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டார் தவமிருந்து என் குலத்தை அழிக்கும் அரக்கனை பெத்தெடுத்தனே அம்மா... உன் மாமனார் உட்பட அத்தனை பேருக்கும் முன்னுதாரணமாய் இருந்த என் சாமிய சாச்சுப்புட்டானே அம்மா...."
என்று கதறினார் அந்தப் பெண்மணி. அவருக்கு ஆறுதல் கூறும் வழி தெரியாது,
" என் கொழுந்தனைக் கொன்ற உங்க மகனை அழிக்கவேண்டி உங்க அனுமதி பெறவே இங்கு வந்தேன்"
என்றவளை பெரியவர்கள் புரியாமல் திகைத்து விழிக்க, பெரியவர் மட்டும்
மெல்ல வாயைத் திறந்து,
" என் மகனை அழிக்க என்னிடமே அனுமதி கேட்க வந்தாயோ மருமகளே...."
என்று கேட்டார் .அந்த நிமிடம் திகைத்தாலும்
"நீங்க நீதிமான் என்று எனக்கு தெரியும் மாமா....அதான் உங்களிடம் அனுமதி பெற வந்தேன் "
தொடர்ந்து பிரபாகர் பற்றி கூற ஆரம்பித்தாள். முழுவதையும் கேட்ட பின் அந்த நிமிடம் இருவரும் சற்றும் யோசிக்காமல்,
" நான் தங்கத்தை பெறவில்லை தகரத்தைத்தான் பெற்றெடுத்தேன். நாங்கள் கலங்கவில்லை தாராளமாக செய். எங்களுக்கு மறுப்பேதும் இல்லை"
என்றனர் . எந்தப் பெற்றோரும் சொல்லத்தகாததை சொல்ல வைத்துவிட்டானே பாவி என சந்தோஷ் கிருஷ்ணா மீது கோபம் வந்தாலும், தர்மம் வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்புவியில் உள்ளனர் என்று அகமகிழ்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி ஆசிப் பெற்றாள் அவ்விருவரிடமும். வீட்டிற்கு வந்ததும் சந்தோஷை எப்படி சாய்ப்பது என்று கணவன் வருவதைக் கூட கவனியாமல் ஆழ்ந்து சிந்தித்தாள் மாதுரி. அப்போது அங்கே வந்த கிருபா மனைவியை அலங்காரத்துடன் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி ரசித்தான். திருமணமான நாளிலிருந்து சேலையே உடுத்தினாலும் இன்று கட்டிலில் கால் மேல் கால் போட்டு, விரல் நகங்களை அழகாய் கடித்துத் துப்பியபடி அமர்ந்து இருந்த மனைவியின் அழகு அவனைக் கிறங்கச் செய்தது. ரொம்ப நேரம் சைட் அடித்தவன் பின் தலையை உலுக்கி விட்டு, நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவளருகில் சென்று நெருங்கி அமர்ந்தான். அதிலும் அவள் சிந்தனையிலிருந்து மீளவில்லை. வேண்டுமென்றே கிருபா அவளுக்கு வலிக்கும்படி இறுக்கி அணைத்தான். அதில் பயந்துபோய் மீண்டவள்,
"நீ எப்போடா வந்த?..."
"நான் வந்தது கூட தெரியாமல் மேடம்க்கு என்ன பலத்தயோசனை"
" சந்தோஷுக்கு எப்படி முடிவு கட்டணும்னு யோசிக்கிறேன்"
" ஏன்டி அயித்தான் அலஞ்சு களைச்சு போய் வந்து இருக்காரே.... ஒரு டீ போட்டுத் தருவோம்.... காலை அமுக்கி விடுவோம்னு இல்லாமல் என்னடி யோசனை வேண்டிக்கிடக்கு"
என்றவனை முறைத்தவள்.
" யார் இந்த அயித்தான் "
என்று நீட்டி முழக்கி கூறினாள்.
"ஹேய்.... நான்தாண்டி உன் அத்தான்"
என்றான் அப்பாவியாய். மேலும் கீழுமாய் அவனைப் பார்த்துவிட்டு
"யார் நீ .... நான் என்னமோ ரகுவை சொல்றியோனு நினைத்து விட்டேன்"
என்று கூறிவிட்டு கணவனின் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தாள். ஒரு கணம் கிருபாகரனின் முகம் சுருங்கினாலும் மறுகணமே அவளருகே வந்து ,
"நெசமா ரகு தான் உன் அத்தானா?...." என்றான் ஏக்கத்தையும் தவிப்பையும் கண்களில் தேக்கி. அவனது தவிப்பு அவளை குதூகலிக்கச் செய்ததால் சன்னமாய் குறும்பு சிரிப்புடன்,
" ஆமாம் "
என்றவளை அடுத்த நொடி அவன் ஆவேசமாய் அணைத்து அவளது இதழ்களை வன்மையாய் சிறை செய்தான். வன்மையாய் இதழ்களைக் களவாடிக் கொண்டாலும் சுகத்தின் தித்திப்பு சற்றும் குறையவில்லை இருவருக்கும் . நெடுநேர இதழொற்றல் மூச்சுவிட இயலாமல் செய்தாலும் அவளை விரும்பி கணவனிடத்தில் மயங்கச் செய்தது. இதழ் சிறையின் நீடிப்பு தொடர உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்து கிருபாவின் நெஞ்சில் தழுவி நழுவி கீழே அமர்ந்து அவளது மோனமயக்கத்தை மறைக்கும் பொருட்டு முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டாள். மனைவி விளையாட்டாகவே ரகுவைப் பற்றி கூறி இருந்தாலும் தன் உரிமையை நிலைநாட்ட நினைத்து இந்தச் செயலைச் செய்தவன் மனைவியின் முகத்தை கண்டதும் அவனது இளமை உணர்வுகள் மேலோங்க அவளது முகத்தை கரம் கொண்டு ஏந்தி மெல்ல அவளது விரல்களை பிரித்து எடுத்து அவளது வதனத்தைக் கண்டான். அது வெட்கத்தின் சாயல் பூசி செம்பூவாய் அலர்ந்து காணப்பட்டதைக் கண்டதும் அவளை வாரி அள்ளி கட்டிலில் கிடத்தி தானும அவள் மேல் படர்ந்தான். அவளிடத்தில் மறுப்பேதுமில்லாத நிலையே சம்மதம் தர பாவையவளை இதமாய் கையாண்டான் அந்த ராட்சசன். தனது இத்தனை வருட காதலை தன்னவளிடத்தில் ஆழமாய் தேடினான். மதுவுண்ட மந்தியாய் மீண்டும் மீண்டும் அவளை நாடி காதலெனும் போதையில் திளைத்தான். ஆம்..... அவர்களிடத்தில் அழகிய இல்லறம் ஆரவாரமின்றி துவங்கியது. இரவு உணவு உண்ணாமலே தங்களின் தேடலைத் துவங்கியதால் நடுச்சாமத்தில் பசி வயிற்றைக் கிள்ளியது. ஆடைகலைந்து அழகோவியமாய் காணப்பட்டவளை மீண்டும் மீண்டும் நாட விரும்பியது மனம். ஆனால் வயிற்றுப் பசியின் குணம் அவளிடத்தில் தெரிய அவன் மட்டும் எழுந்து உடை மாற்றிக் கீழே சென்று உணவருந்தி விட்டு ரதிக்கும் உணவு எடுத்து வந்தான்.சாப்பாட்டு தட்டுடன் வந்தவனை கண்டு எழ முயன்றவளை தடுத்து விட்டு தானே அவளுக்கு சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் ஊட்டி வாய் கழுவி , துடைத்து விட்டான். அவனது இந்த செய்கையில் தன் தந்தையைக் கண்டவள் கை கழுவிவிட்டு வந்தவனின் சட்டையை பற்றி இழுத்து தன் அதரங்களால் கணவனை அர்ச்சனை செய்தாள். இப்போது தேடலின் முறை அவளது ஆயிற்று.