All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘மாயம் செய்தாயோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
❤காரிருள் வானில்
நிலா செய்திடும்
மாயம்..
உன் கனாவில்
உன் மதியாய்
நான் செய்கிறேனடா❤
வானம் இருளை விட்டு கரு நீலத்தில் வண்ணம் தீட்ட ஆரம்பிக்க அதில் வழமையாய் மனதை கொள்ளை கொண்டிடும் சாருவோ இன்று மகிழ்ச்சி ஒரு பக்கம் துக்கம் ஒரு பக்கம் என அறிய முடியா மனநிலையில் கைகளில் பைகளுடன் ஊர் மக்களிடம் விடைபெற்றுக்கொண்டிருந்தாள் தன் பயணத்திற்காய்.
அழக்கூடாது என கொண்ட உறுதியையும் தாண்டி கண்கள் குளமாகிட இருந்தும் புன்னகையோடு அனைவரிடமும் விடை பெற்றவள் பாலுவை நோக்கிட..அவன் அழுகையில் கண்கள் சிவக்க தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான். இவள் அவனருகே சென்று அவன் உயரத்திற்கு குனிந்து தலையை நிமிர்த்த..பாலு விம்மியவாரே
"அக்கா மன்னிச்சிடுக்கா நான் சாக்லேட்டு தரலன்னு தான் நீ சாக்கலேட்டு வாங்க எங்க எல்லாரையும் விட்டு போறியா..நான் உனக்கு இனிமே அண்ணா அனுப்புற எல்லாமே தந்துடுறேன்க்கா போகாதேயேன்."
அவன் பேச்சில் தன்னை மறந்து சில துளி கண்ணீரை கீழே விட்டவள் சட்டென சுதாரித்துக்கொண்டு..
"என்னடா பல்லு இது இப்பிடி அழுதுட்டு இருக்க..உனக்கு சபதம் விட்டேனே மறந்துட்டுதா பிரியாணி சாப்பிட வேணா அதா போறேன்..என்ன அக்கா சொல்லிட்டயே சரி உனக்கும் ஒரு பொட்டளம் இருக்கு பிரியாணி..அக்கா வந்துடுறேன்..அழ கூடாது..சரியா"
அவன் கண்ணை துடைத்துவிட்டு பெரிய ஐயாவிம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவள்..காரில் ஏறப்போக..மீண்டும் திரும்பி ஒரு முறை தன் பெற்றோரை பார்த்து விட்டு வந்த அழுகையை அடக்கியவாறு ஓர் கையசைப்புடன் ஏறிக்கொண்டாள்.
கார் போக ஆரம்பிக்க..ஊரே அவளை வழியனுப்பிட இனிதே ஆரம்பமானது அவள் பயணம்.
சோகமே உருவாய் கண்மூடி அமர்ந்திருந்தாள். கார் பாதையில் ஒரு குழியில் விழுந்து தன்னை மீட்டிட தன்னை சூழ்ந்திருந்த அந்த இறுகிய நிலையில் இருந்து விடுபட்டாள் சாரு. அப்போதுதான் சுற்றி பார்க்க கார் நகர்வதே அப்போதுதான் அவள் கருத்தில் பதிந்தது. தனக்கு பிடித்த கார் தனது கனவுகளில் ஒன்று இந்த கார் பயணம்..எண்ணியவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாய் குதூகலமாய் மாற ஆரம்பிக்க..
ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு வெளியில் இவளை கடந்து பின்னால் பயணிக்க ஆரம்பித்த பாதை, மரங்கள்..தன்னோடு தன்னை பிரிய மனமின்றி காரை சுற்றியே வந்த வானம், மேகம் என ஒவ்வொன்றாய் ஆவல் மேலோங்க கண்களில் நிரப்ப தொடங்கினாள் அவள்.
*****************
அதிகாலைத்தென்றலின் குளிர்ச்சியில் குளித்து அனைவரையும் ஆவலாய்க்காண உதித்தெழும் ஆதவன் முகம் பார்த்திட அதிலும் கடற்கரை உவர் காற்றும் சேர்ந்து குளிர்விக்க கடலிலும் பிரதிபலிப்பாய் வர்ணஜாலம். பார்க்க பார்க்க தெவிட்டாத காலைப்பொழுதை வழமைபோல் இன்றும் கையில் காபி கப்புடன் கண்களில் நிரப்பிவண்ணம் சாய்வாய் கதிரையில் அமர்ந்திருந்தான் சக்தி. ஆங்காங்கே ஈரம் அப்பொழுதுதான் குளித்ததன் அடையாளமாய் அவனை விட்டுப்பிரிய மனமின்றி ஒட்டிக்கொண்டிருக்க இன்று அவனுள் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வு...என்னவென்று தெரியாவிட்டாலும் அதனை கண்மூடி உணரமுயன்று கொண்டிருந்தவனைக் களைத்தது அவனது செல்போன் ஒலி.
"ஹ்ம் ஓகே டேவிட்" ஒற்றைப்பதிலோடே அழைப்பைத்துண்டித்தான்.
அன்று வருடத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரை தெரிவு செய்வது தொடர்பான நிகழ்வு பற்றிய முக்கிய மீடிங் இருக்க என்றும் எதிலும் நேரம் தவறாத சக்தி இன்றும் அதே போல் தயாராகிக்கொண்டிருந்தான்
சக்தி இவ்வாறு இருக்க வீட்டில் மற்றையவர்கள் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். நிலா அதிகாலையோடே சுற்றுலா கிளம்பி போயிருக்க சதீஷோ சக்தியை எவ்வாறு சமாளிப்பது என திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.
வாயிலில் சாவித்ரி தன் கணவன் வருகைக்காக முக்கியமாக அவர் போனில் சாரு பற்றி கூறியவையினால் அவளைப்பார்க்கும் ஆவலிலும் காத்துக்கொண்டிருந்தார்.
கார் வந்து வாயிலில் நிற்கவும் கதவைத்திறந்து கொண்டு இறங்கிய சிவா பின் கதவைத்திறந்து "வாம்மா சாரு" வரவேற்க..தயங்கி தயங்கி மெதுவாக எட்டிப்பார்த்தவள்..தன்னைப்பார்த்து புன்முறுவல் செய்த சாவித்ரியை கண்கள் விரித்துப்பார்த்தவாறே பைகளுடன் இறங்கினாள்.
பாவாடை தாவணியில் அழகோவியமாய் கண்களில் சிறு பயம் கலந்த பதற்றம் இருந்தும் மறைத்துக்கொண்டு சிறு முறுவலுடன் இறங்கி நெளிந்து கொண்டே நின்றவளைப்பார்ததுமே சாவித்ரியிற்குப்பிடித்துவிட்டது..சிறு வயதில் தன்னைப்பார்ப்பது போலே இருக்க சிவாவைப்பார்த்தவர் அவர் கண்களால் ஏதோ கூற..முன்னே சென்று சாருவின் கைபற்றி "உள்ள வாடாம்மா" என அழைத்தார்.
அவரை இன்னும் விழிவிரித்து நோக்கியவள்
" அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதோடு ரொம்ப அழகா பேசுரீங்க"
அவள் பேச்சில் சிரித்தவர்.
"நன்றிடா நீயும் துரு துரு ன்னு ரொம்பவே அழகா இருக்க. சரி வா உனக்கு களைப்பா இருக்கும் வந்து குளிச்சிட்டு சாப்பிடு"
உள்ளே செல்லப்போனவள் ஒரு நிமிடம் நின்று அங்கு கேட்டுக்கொண்டே இருந்த பெரிய இரைச்சல் ஓசை கேட்டு பயம் எட்டிப்பார்க்க மெதுவாக திரும்பி சுற்றிப்பார்த்தவள் அவர்களுடனே சேர்ந்து கொண்டாள்.
உள்ளே நுழைந்து படிக்கட்டுகளில் ஏறி கடைசி அறைக்கு எதிர் அறையை சாவித்ரி திறந்து விடும் வரை கண்களை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிந்து வியந்து கொண்டே வந்தாள் சாரு.
குடிசை மண் வீட்டில் இருந்தவளுக்கு இங்கு எல்லாமே பிரம்மிப்பாய் தான் இருந்தது. சுற்றி சுற்றி அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தவள் எதிலோ மோத நெற்றியைத்தேய்த்துவிட்டுக்கொண்டே பார்க்க அங்கு சாவித்ரி திறந்திருந்த கதவிற்கு எதிர் கதவில் மோதியிருந்தாள். சாவித்ரி உள்ளே சென்றிருக்க இவளும் நெற்றியேத்தேய்த்து விட்டவாறே கதவா இது இப்படி இருக்கு முணுமுணுத்தவாறு அந்த கதவிற்கு எதிரே இருந்த அறையினுள் சென்றாள்.
இவள் உள்ளே சென்ற மறுநிமிடம் சாவித்ரி வெளியில் வந்து கதவை அடைக்க..அவர் பின்னால்.."ம்மா கூப்டிங்களா?" வினவியவாரே கதவைத்திறந்து கொண்டு நின்றான் சக்தி.
"இல்லையேப்பா ஏன்"
"இல்ல யாரோ தட்டினது போல இருந்தது. ஓகேம்மா எனக்கு இன்னக்கி முக்கியமான மீடிங் இருக்கு about 10"
"சரிப்பா வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்."
என்றவாறு கீழே செல்ல சக்தியும் பின்னால் சென்றான்.
சாப்பிட அமர்ந்த சக்தி என்றுமில்லா அதிசயமாய்.."நிலா எங்க" கேட்க திரு திரு என விழித்த சதீஷ்.."நில்லாக்கு எர்ர்லி மார்னிங்ங் extra class சோ போய்டா ஆமா."
"அதுக்கு எதுக்கு நீ இவ்வளோ பம்முற"
அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவாறே சக்தி வினவ..
கடன்காரா எல்லாத்தையும் நோண்டிட்டே இருப்பான்.."அது இட்லி ரொம்ப காரமா இருக்கு அண்ணா"
அவன் பதிலில் சமயலரையில் இருந்த சாவித்ரி தலையிலே அடித்துக்கொள்ள..சக்தி குழம்பியவண்ணம் அடுத்த கேள்வியை கேட்க முன் சுதாரித்த சதீஷ் வராத கோலை "ஹலோ" என பேசியவாறே நகர்ந்தான்.
****************
கம்பனிக்கு சாருவை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிவாவிற்கு அவசரமாய் ஓர் அழைப்பு வர அதனை எடுத்துப்பேசியவர்..
"சாரு என் நண்பன் ஒருத்தனுக்கு ஆக்சிடேன்ட்..யாருமே ஹாஸ்பிடல் போக கூட முன்ன வரல..நான் போகனும் அவசரமா..கம்பனி இங்க பக்கம் தான்.. இங்க இறங்கி நேரா போய் வவது பக்கம் திரும்பு..அங்க RK designers என்று இருக்கும்."
அவளிடம் கூறிவிட்டு அவளை இறக்கிவிட்டு பறந்தது கார்.
முன்னே நடந்தவள் ஒரு இடத்தில் பாதையைக்கடக்க நின்று கொண்டு வாகனம் வராத வேளையை எதிர்பார்த்து இருக்க..சரியாக இருபக்கமும் பார்த்து விட்டு அவள் கடக்கவும் வேகமாய் வந்த ஒரு கார் ஹான்னை அழுத்தியவாறே வந்து சடன் பிரேக் போட்டது.
பதட்டத்தில் கீழே விழுந்து விட்டவள்..தான் கடந்தது பாதசாரிகள் கடவைதானே பின்ன என்ன இவனுக்கு என்ற எரிச்சலில் நிமிரவும்..
"இடியட் பார்த்து வர மாட்ட..இப்படிதான் நடுவுல வந்து பாயிறதா..காலங்காத்தால வந்துட வேண்டியது. எந்திரி"
காரிலிருந்து இறங்கி அவன் திட்ட ஆரம்பிக்கவும் சுரு சுரு என கோபம் தலைக்கேற பதில் பேச போனவள் "ஹ்ம் இல்ல இவனெல்லா வேற முறையில தான் கவனிக்கனும்..பெரிய பணக்காரன்னு திமிரு..எல்லாரும் சிவா ஐயா போல இருப்பாங்கலா என்ன."
"உனக்கு காது கேக்கல.. எனக்கு டைம் ஆச்சி. எந்திரி முதல்ல ஹ்ம் கம் ஆன்."
அதிகாரத்தொனியில் அவன் ஏவவும் சாருவோ சுற்றி கூடியிருந்த கூட்டத்தை ஒரு கண்ணால் பார்த்து விட்டு..அந்த சிடுமூஞ்சியையும் ஒரு பார்வை பார்த்தவள்.. சட்டென தன் வலது காலைப்பற்றிக்கொண்டு...
"அய்யோ அம்மா கால்.. கால் வலிக்கிதே..கால்ல்"
அவள் திடீரென காலைப்பற்றிக்கொண்டு சத்தமிடவும்..
"ஏய் ஏய் நடிக்காத..நான் பிரேக் போட்டுட்டன். அதோட பார்க்காம வந்தது உன்னோட பிழை. என்ன பணம் பறிக்கலாம் பார்க்குரியா.."
அவன் பல்லைக்கடித்துக்கொண்டு பேச கூட்டத்தில் இருந்த ஒருவர்.."தம்பி அந்த பொண்ணு கடந்தது கடக்க வேண்டிய இடத்தில தான்..நீ தான் பார்த்து வந்திருக்கனும். முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ கால்ல எழும்பு ஏதாவது முறிஞ்சி இருக்க போகுது."
அவர் கூற கூட்டத்தில் இருந்த அனைவரையும் அவள் பக்கமே பேசி அவர் கூற்றை ஆமோதிக்க..அதனைக்கண்டு மெல்லியதாய் சாருவின் முகத்தில் தோன்றிய கேலிச்சிரிப்பும் அவன் கண்களில் தப்பாமல் பட்டுவிட்டது.
நெருப்பை கண்களால் கக்கியவாறே அவளருகில் வந்தவன் வா என்க..சாருவோ "வா ன்னா எப்படி வாரது அதா கால்ல அடிபட்டிருக்கில்ல கூட்டத்துல யாரவது" அவள் முழுதாய் கூறி முடிக்கும் முன்னே பட்டென குனிந்து அவளைக்கையில் ஏந்தியிருந்தான் அவன்.
சாருவோ இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. தன் மேல் தவறும் இன்றி இருக்க அவன் அதிகாரமாய் வேறு பேசவும்..அவன் எதற்கோ அவசரமாய் செல்வது புரிய.
அந்த தலை போகிற வேலையில் கொஞ்சம் சீண்டிப்பார்க்கலாம் என்றே இப்படி செய்தாள்..
"ஏய் விடு விடு" அவள் கையிலிருந்து இறங்க திமிர...
"ஷட் அப்" அவன் அதட்டலிலும் முறைப்பிலும் வாயை மூடிக்கொண்டவளை காரில் ஏற்றிவிட்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தவன் ஒரு வார்த்தை பேசாது காரை அதிவேகத்தில் செலுத்தினான்.
காரை மருத்துவமனை முன் நிறுத்தியவன் நேரம் பார்க்க அது மீடிங் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருப்பதைக்காட்டியது.. கோபம் முழுவதையும் காட்டி சீட்டில் அடித்தவன் இறங்கி வந்து அவள் பக்க கதவைத்திறந்து மீண்டும் அவளை கையில் தூக்கிக்கொண்டு நேராக உள்ளே சென்று.. டாக்டர் அறையையே திறந்து.. அவளை பொத்தென அங்கிருந்த நாட்காலியில் போட்டு விட்டு திரும்பிப்பார்க்காது அவன் வெளியேறினான்.
டாக்டர் அதிர்ந்து நோக்க இவன் பின்னால் வந்த நர்ஸும் புரியாது வாசலில் இருந்து விழிக்க இவர்களுக்கு மேலாய் விழித்துக்கொண்டிருந்தாள் சாரு.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ♥ 8 ♥

❤உன் மைவிழி
கொண்டு
கண்டாய் எனை..
நானோ மறந்தேன்
அக்கணம் உலகை..
மாயங்கள் நீள்கிறதோ
என் உயிர் வரை..❤


ஒருவாரு டாக்டரை சமாளித்து விட்டு வெளியில் வந்தவள் ஒருவாரு அங்கிருந்த ஓரிருவரிடம் உதவி கேட்டு ஆட்டோ ஒன்றை பிடித்து RK designers ஐ வந்து சேர்ந்தாள் சாரு.


அங்கும் ஆட்டோ டிரைவரிடம் சண்டையிட்டு வாக்குவாதம் செய்ய.. டிரைவரும் இவளை சமாளிக்க முடியாது தலையில் அடித்துக்கொண்டு கட்டணத்தைக்குறைக்கவே நினைத்ததை சாதித்த திருப்தியில் வீரநடை போட்டு அங்கு உயரமாய் நின்று இருந்த கேட் அருகே சென்றாள் சாருமதி.


நுழைய போனவளை தடுத்தது ஓர் குரல்.."ஏம்மா இங்க வா ஐடி காட்டு.."


திரும்பியவள் கண்டது விறைப்பாய் சாம்பல் நிற ஆடையில் நின்றிருந்த கேட் காவலாளியை தான். அவன் அணிந்திருந்த ஆடை சாருமதியை பொலிஸ் என நினைக்க வைக்க..இருந்தும் அனைவருக்கும் வர வேண்டிய பயம் தான் அவளது அகராதியிலே கிடையாதே..


திரும்பி அவனை போலவே விறைப்பாய் நின்றவள்..
"என்ன என்னான்னு கேட்குறேன்..என்னையவே உள்ள விட மாட்டேன் சொல்றீங்களா.." ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு பாவனையை முகத்தில் ஏற்றி இறக்கி அவள் கேட்க..


"நான் எப்போம்மா உன்ன உள்ள விட மாட்டேன் சொன்னேன்..ஐடிய காட்டு உள்ள போகலாம்.." சற்றே தயங்கி பின்னகர்ந்தவாரு கேட்டான் அவன்.


"என்னத்தைய காட்ட சொல்லுறான் தெரிலயே..சிவா சார் வேற எதுவும் சொல்லல.." எண்ணியவாரு இவள் விழிக்க..


அவள் திரு திரு என விழிப்பதை உற்று பார்த்தவன்.."அப்போ உன்கிட்ட ஐடி இல்ல..நீ உலவு பார்க்க வந்த சாரோட எதிரி கம்பனி ஆளு..கரக்ட்டு..இரு.." அவன் ஓடிச்சென்று அங்கு கேட் அருகே இருந்த ஓர் அறைக்குள் நுழைய போக..


"ஓஹோ அப்போ சிவா ஐயா அனுப்பின ஆளே சந்தேகபடுறிங்களா நீங்க.." சத்தமாய் சாரு கேட்க..


சிவாவின் பெயரை கூறியதும் கையில் எடுத்து டயல் செய்ய போன போனை ஒரு நிமிடம் பார்த்தான் அவன்..


"அப்போ உண்மையா சிவா சார் தான் அனுப்பினாரா ?" சந்தேகமாய் கேட்க சாரு தலையை ஆட்ட இருந்தும் அவனிற்கு நம்பிக்கை வராமல் போக..


அவசரமாய் டயல் செய்து காதில் வைத்தான்..அடுத்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட.."சார் சக்..சார் இருங்க..இங்க உங்..இல்ல சார்..வந்திருக்கது..சார்..அது.." கடைசியாய் காதில் ஒலித்தது என்னவோ டீட் டீட் ஒலி தான்..


இப்போ நாம என்ன செய்தோம்னு இவர் நம்மள இப்படி திட்டிட்டு வச்சாரு..என சோகமாய் போனையே அவன் பார்த்திருக்க யார்கிட்டயோ செம்மயா வாங்கியிருக்கான் நல்லா வேணும் என வாய்மூடி சிரித்த சாரு அவ்விடம் விட்டு ஓசையெழுப்பாது உள்ளே நடந்தாள்.


அந்த மூன்று மாடிக்கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தவாறே வந்து கொண்டிருந்தவள்.."மேடம் மேடம் பார்த்து.." என்ற குரலில் சட்டென நின்று கீழே பார்த்தாள்.


அங்கு பெரிய ஆழமான குழியொன்று ஏதோ கட்டிட வேலைக்காக தோன்றி வைக்கப்பட்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் இளித்து வைத்தாள்.." ரொம்ப நன்றி...." இழுத்தவாறே..அவங்க ஏதோ மோடம் ன்னு சொன்னாங்களே அப்படியே நாமளும் சொல்லிடலாமா சிந்திக்க..


அவளைப்பார்த்து புன்னகைத்தவாறே "ஐம் ரம்யா" என்று கையை நீட்டினாள் அவள்.


நீட்டிய கையை இருகைகளாளும் பற்றிக்கொண்ட சாரு.."நான் சாருமதி"என்க அவள் வெகுளித்தனத்தை இரசித்தவாறே.."சாருமதி அழகான பெயர்..அப்புறம் சாரு யாரவது கை தந்தா இதோ இப்படி நாமளும் வலது கைய பிடிச்சி குளுக்கனும் சரியா.." அவள் செய்முறையுடன் விளக்க..அவளும் "ஓஓஓ..." என்றவாறு சரி என தலையை ஆட்டி விட்டு தன் இருகைகளில் ஒரு கையை எடுத்தாள் சாரு.


ரம்யாவிற்கு ஏனோ அவளைப்பார்க்க சிறுபிள்ளை போல் தான் தோன்றியது..அழகாய் குழந்தை முகத்துடன் அவள் தலையை ஆட்டியதையும் வெகுவாக இரசித்தவள் "ஆமா இங்க எதுக்கு ?"
வினவினாள்.


"சிவா ஐயா இங்க வர சொன்னாங்க."


அவள் கூற "ஓகே ஓகே நீங்களா அது..எங்ககிட்ட சார் சொன்னாங்க.. நேஸ் டு மீட் யூ டியர்..சரி வாங்க உள்ள போகலாம்." ரம்யா முன்னே நடக்க அவள் பேசியதில் ஒவ்வொரு வார்த்தை புரியா விட்டாலும் அவள் பின்னே நடந்தாள் சாரு.


இருவரும் உள்ளே சென்று ரம்யா நேராய் லிப்டினுள் செல்ல இவளும் சுற்றிப்பார்த்தவாறே நுழைந்தாள். இவர்கள் இருவரும் மட்டுமே இருக்க கதவு மூட "wait wait.." இடையில் ஓடி வந்து உள்ளே சேரந்து கொண்டான் வினோத். வந்தவன் பார்வை சாருவின் மேல் விழ.."wow..." என்றான் வெளிப்படையாகவே..


லிப்ட் கதவு தானாக மூடுவதையே அதிசயமாய் பார்த்திருக்க திடுமென ஒலித்த வினோத் குரலில் திரும்பியவள் அவன் தன்னை பார்த்திருப்பதை பார்த்தவள்


"அய்யோ என் பேரு சாருமதிங்க"
முந்திக்கொண்டு பேசவும்..ரம்யாவும் வினோத்தும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சேர்ந்து சிரித்தனர்.


"நைஸ் நேம்" அவன் கூற...சாருவோ பதில் கூற அனிதாவின் அறிவுறையை மனதில் கொண்டவள் எது சொல்வது என இன்கி பின்கி போட்டு பார்த்து அதில் எஞ்சியதை "தாங்ஸ்" என்றாள் சரியாகவே.
அவள் பதிலில் வினோத் புன்னகைக்க..


"வினோ இது தான் சார் சொன்னவங்க..our new team member." ரம்யா அறிமுகப்படுத்த கண்கள் பளிச்சிட வினோத் சாருவைப்பார்த்தான்.


அவளோ லிப்டின் அசைவில் முகம் வெளிற லிப்டின் சுவரில் ஒட்டியவாறு இருந்தாள். வினோத் அவளருகில் செல்ல முன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ரம்யா சென்று அவள் கையைப்பற்றிக்கொண்டு லிப்ட் பற்றி விளக்கிக்கூறினாள்.


மூன்றாம் தளம் வரவும் வினோத்தை இழுத்துக்கொண்டு முதலில் வந்த ரம்யா.."ஏய் எரும உன் வேலை எல்லாம் அவகிட்ட வெச்சிக்காத..she is from village. என்ட் ரொம்ப சின்ன பொண்ணு..பாரு இப்ப கூட நான் உன் கைய பிடிச்சிட்டு வந்தத கூட ஏதோ பெரிய தப்பு பன்னுற ரேன்ஞ்ல பார்த்துட்டு இருப்பா." ரம்யா கூறவும் சாரு பக்கம் பார்வையை திருப்பியவன் சத்தமாகவே சிரித்து விட்டான்.


அவன் சிரிக்கவும் ரம்யாவும் திரும்பி பார்க்க அங்கு சாரு வாயில் கைவத்து கண்களை விரித்து அவர்களின் பிணைந்திருந்த கைகளையே குறு குறு என பார்த்துக்கொண்டிருந்தாள்.


ரம்யா பக்கமாய் வந்த வினோத்.."i like her childish behaviour..இப்ப எல்லாம் இந்த பொண்ணுங்கள்ள அரைவாசியும் படங்கள பார்த்து குழந்தையா இருக்கது ஒரு அழகுன்னு சுத்திட்டு இருக்குங்க as a mental..இயற்கையாகவே மனசளவுள உண்மையா குழந்தையா இருக்க பொண்ண பார்க்கதுக்கு ரொம்பவே அழகா இருக்குல்ல..செம்ம..நான் முடிவு பன்னிட்டன்" அவன் சொல்லிவிட்டு நகர..


"ஏய் ஏய் நில்லுடா.. என்னத முடிவு பன்னிட்ட.." ரம்யா பின்னால் கூவ..


"Life long இந்த குழந்தைய பக்கத்துலே வச்சி இரசிக்கனும் என்று"
நின்று சொல்லி விட்டு ஓடினான் வினோத்.


அவன்போகும் திசை பார்த்தவள்..ஒரு பெருமூச்சோடு சாரு பக்கம் திரும்பி "வாங்க சாரு" அழைத்துக்கொண்டு இவளது இடம் செல்ல அங்கு இவளது குழுவின் ஏனைய மூவரும் கூடி இருந்து ஏதோ சீரியசாக பேசிக்கொண்டு இருந்தனர். இவள் வரவும் முன்னே ஓடி வந்த வினிதா " ஹய் லீடர் வந்தாச்சு..இந்தா இத போய் பாஸ்ட்ட குடுத்துரு" என ஒரு பைல்லை அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட..


"என்னடி ஏதோ என்ன மாட்டி விடப்பாக்குற போல இருக்கு..நீயே போய் கொடுக்கலாமே."
இவள் சந்தேகமாய் அந்த பைலையும் வினிதாவையும் பார்த்து இழுக்க..


"ஈஈஈஈ....உனக்கு உடம்பு புல்லா மூளைடி.. " வினிதா இளித்து விட்டு பதில் கூறாது சமாளித்து வைத்தாள்.


"அது இருக்கடும்..நீ மேட்டருக்கு வா." ரம்யா கைகட்டி நின்று கேட்டாள்.


முன்னே வந்த ராஜேஷ்.."பாஸ் ரொம்பவே கோபமா இருக்காறு ரமி" கையை பிசைந்து கொண்டே கூறவும்..


"அவர் எப்போடா கோபமா இருக்கல்ல.." கூலாய கேட்டாள் ரம்யா.


"அதல்ல ரமி..இன்னக்கி இந்த வருடத்தோட best designer select பன்னுறது தொடர்பா ஒரு முக்கிய மீடிங் இருந்திருக்கு போல என்னமோ தெரில ஒருநாளும் இல்லாம பாஸ் லேட்டா போயிட்டாரு..அதுனால திருப்பி அனுப்பிடாங்க..அதோட நம்ம கம்பனிய இதுல சேர்த்துக்க மாட்டாங்கலாம்..so பாஸ் செம கோபத்துல இருக்காரு. பைல் யாரு கொடுக்குறது..போனால் எப்படியும் கோபம் எல்லாம் கொண்டு போறவங்க மேல தான் பாயும்..அத டைம்க்கு கொடுக்காட்டி வேற இருக்கு."


ராஜேஷ் பேசி முடிக்கவும் இதான் மேட்டரா என சிந்திக்கத்தொடங்கிய ரம்யாவைத்தடுத்தது வினிதாவின் குரல்...


"ஆமா ரமி இவங்க யாரு?"சாருவை பார்த்தாவாரு கேட்டாள் வினிதா.


"ஓஹ் சாரி மறந்துட்டேன்..இவங்க தான் சிவா சார் சொன்னவங்க..நேம் சாருமதி.."


ரம்யா அறிமுகப்படுத்தவும் வினிதா பாய்ந்து வந்து சாருவை கட்டிக்கொண்டாள்..


இவளுக்கு என்னாச்சி என மற்றைய மூவரும் பார்க்க சாருவோ கூச்சமாய் நெளிந்து கொண்டே அவளை விலக்க முயன்று கொண்டிருந்தாள்.


"லூசு அந்த பொண்ண எதுக்கு இப்போ இப்பிடி கட்டி பிடிச்சிட்டு இருக்க." வினோத், வினிதா தலையில் தட்டி அவளை இழுத்து எடுத்தான்..


"டேய் எரும உனக்கெல்லாம் மூளை வேணா.. இவங்க தான் நம்மள காப்பாத்த வந்தவங்க.." என மீண்டும் வினி அவள் பக்கம் நகர போக..


"என்ன புரியலயே." என்றான் அவளை தடுத்தவாரே ரம்யா.


"இப்போ நாம இத கொண்டு போன அந்த பாஸ் திட்டுவான்ல..இதே நம்ம சாரு இன்னக்கி தான் கம்பனில ஜாய்ன் பன்னுறா சோ என்ன காரணம் சொல்லி திட்டுவானாம். சோ சாரு தான் correct person"


அவள் விளக்கவும் அதனை மற்றவர்களும் ஓஹோ ஆமால்ல என ஒத்துக்கொள்ள அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் பாஸின் அறைக் கதவின் முன் பைலுடன் நின்று கொண்டிருந்தாள் சாரு. ரம்யா அவள் செய்ய வேண்டியவைகளை கூறியே அனுப்பி இருக்க அதன் முதற் கட்டமாய் மெதுவாய் கதவில் தட்டினாள்..


உள்ளிருந்து கம் இன் என உறுமலாய் ஒரு குரல் ஒலிக்க..மெதுவாக திறந்து எட்டிப்பார்த்தாள் அறையே ஒருவித இருளினும் புதைந்திருந்தது..


மெதுவாய் தயக்கமாய் இவள் உள்ளே நுழைய கதவு தானாக பின்னால் உள்ளிருந்தவனது உஷ்ணத்தை உணர்ந்தது போல் சட்டென மூடிக்கொண்டது..


கொஞ்ச நேரம் கண்களை விரித்து அந்த மங்கிய ஒளியில் அறையை துளாவி விட்டு மேசையை நோக்கினாள் சாரு..ஆனால் அங்கு யாருமே இல்லை.. கொஞ்சம் பார்வையை நகர்த்த அங்கு இவளிற்கு முதுகு காட்டி நின்றவண்ணம் ஜன்னலினூடு வெளி நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 9 ❤

❤சிதறிடும் மழைத்துளியிலும்
உன் முகம்...
வான் நிலாவிலும்
உன் முகம்...
நிஜங்களும்
நிழலாய் தோன்றிட..
மாயங்கள் செய்கிறாயே
என்னுள்...❤

உள்ளே வந்து நிமிடங்கள் கடந்த போதும் அவன் திரும்பவில்லை..சாரு அவனது விறைத்த உடலையும் முறுக்கிய கைகளையும் பார்த்துவிட்டு போய்விடலாமா என தோன்ற எதற்கும் அழைத்துப்பார்ப்போம் என யோசித்தவள்..

ரம்யா சொல்லிக்கொடுத்தது போல்..
"சார்ர் பைல்"என்று கூற பதிலின்றி சில கணங்கள் கடந்த பின் அவனும் "டேபிள்ள வை" என்று கூறிய அதே வேளை இருவருக்கும் ஒன்றாகவே அந்த குரல் என தோன்ற சட்டென இவள் பக்கமாய் திரும்பினான் சக்தி.

சாருவும் அதிர்ந்து.."கடவுளே இவன்கிட்டயா வந்து மாட்டினம்..அபோ இவன் தான் சிவா ஐயா மகனா..அவருக்கு இப்படி ஒரு மகனா.." என பலவாரும் யோசித்தவள் தீம்பிழம்பாய் எரிந்து கொண்டிருந்த அவன் கண்கள் சட்டென அவள் காலை நோக்கி நகர.. மீண்டும் அங்கிருந்து மீண்டு அவளது முகத்தில் வந்து நிலைத்தது கோபமாய்..

"எதுக்கு இப்போ இப்படி பாக்குறான்.." அவனது பார்வையில் புரியாது யோசித்தவள் அப்போதுதான் கால் பற்றிய நினைவு வர.."ஐயோ காலு மறந்துட்டேனே" என சட்டென ஒரு காலை தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக்கொண்டே நின்றாள் சாரு.

சக்தி நிதானமாய் இவளருகில் வர இவளும் நொண்டிக்கொண்டே பின் நகர்ந்தாள். அவன் முன்னே வர இவள் பின் நகர..ஒரு கட்டத்தில் சுவரில் தட்டி இவள் நிற்க..நெருங்கி வந்த சக்தி ஒரு கையை சுவற்றில் வைத்து அவளருகே குனிந்து.." உனக்கு வலது கால் தான் அடிபட்டதாக எனக்கு ஞாபகம்" அதே நிதானத்தோடு கூறினான்.

அதிர்ந்து விழித்தவள் குனிந்து நோக்க அப்போதுதான் உறைத்தது தான் வலது காலில் நின்று கொண்டிருப்பது. மற்றைய கால் தானாகவே கீழிறங்கிவிட அவனை தயக்கத்துடனே நிமிர்ந்து நோக்கினாள். அவனும் அவன் கூர் விழிகளால் அவள் விழிகளினுள் ஆழ்ந்து நோக்க..அவன் விழிகளுக்கு கட்டுப்பட்டது போல் இவளும் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கணங்கள் நிமிடமாக கடக்க சட்டென அவள் அருகில் சுவரில் பதித்திருந்த கையால் அவளருகில் சுவரில் பலமாக தட்டியவன்.."டேவிட்..." என கர்ஜிக்க அந்த கட்டம் முழுவதுமே எதிரொலித்தது அவன் குரல்.

பயத்தில் நடுங்கியவாரே கைகளால் காதிரண்டையும் மூடிக்கொண்டு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டாள் சாருமதி.. இவன் குரல் கேட்டு டீம் நால்வரும் அறையில் இருக்க..அவர்கள் பக்கம் திரும்பியவன் "என்ன நீங்க எல்லாருமே டேவிட்டா" என்க பயத்தில் தலையை ஒன்றாக ஆட்டிய அனைவரும் அவனது அடுத்த கேள்விக்கு இரையாகும் முன் அங்கு வந்தான் சக்தியின் பி.ஏ டேவிட்...

"சார்.." டேவிட் அங்கிருந்த அனைவரும் குழப்பத்துடனே பார்த்தவாறு மெதுவாக அழைக்க..

"இடியட் உனக்கு என் பி.ஏ ன்னு ஒரு போஸ்ட் எதுக்கு கொடுத்திருக்கேன். இப்பிடி பொறுப்பில்லாம இருக்க. இவள எதுக்கு உள்ள விட்ட..இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் டேவிட்..இதுக்கப்புறம் இது போல் நடந்தா நான் பேசிட்டு இருக்க மாட்டேன்"

டேவிட்டை பேச விடாது தானே பேசி முடித்தவன் சாரு பக்கமாய் திரும்பினான்.
அவள் இன்னும் சுவருடன் ஒன்றியவாரு இருக்க அவள் கையை இறுக்க பற்றிய சக்தி..
"யார்டி உன்ன இங்க அனுப்பினது..பணம் பறிக்க வந்திருக்க..வெக்கமா இல்ல.." தர தர என அவளை அறையில் இருந்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

" விடுங்க கைய..நீங்க நினைக்கிற போல எல்லாம் இல்ல.."
அவள்.. அவன் பின்னே கூறிக்கொண்டே செல்ல..ஆனால் அவனுக்கோ காதிலே விழவில்லை..
இழுத்துக்கொண்டே அவன் போக சாருமதிக்கு பொறுமை பறந்தது.

"ஏய் சிடுமூஞ்சி..கை வலிக்குது விடுடா கைய" அவள் சத்தமாய் குரல் எழுப்ப அங்கு எல்லோருமே அதிர்ந்து தான் போனார்கள் சக்தி உட்பட..

நின்று திரும்பியவன் அவள்பக்கமாய் நெருங்கி "என்னடி மரியாத இல்லாம என்னயே பேசுற..?" கூறியவாறே கழுத்தை பற்றி அவளை சுவரில் சாய்க்க அதேநேரம் அங்கு வந்தார் சிவா.

அங்கு நடப்பதை அதிர்ந்து நோக்கிய சிவா "சக்தி" சத்தமிடவும் அங்கு அப்போது அப்பாவை எதிர்பார்க்காத சக்தி சட்டென அவளை விட்டு விட்டு சிவாவின் பக்கம் திரும்பினான்.

சிவாவைககண்ட சாருமதி ஓடிச்சென்று அவர் பின்னே ஒழிந்து கொண்டு சக்தியை முறைக்க.. அவளை ஆறுதலாய் தோளோடு அரவணைத்துக் கொண்ட சிவா "ஏன்டா அறிவு இல்ல இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட நடந்துகிறதா.?"

"இல்லப்பா இவ.."

கையை உயர்த்தி சக்தியை இடைமறித்த சிவா
"இவ சாருமதி இனிமேல் இங்க டிசைங்னர் குழுவுல இருப்பா..இதுக்கு மேல யாரும் எதுவும் பேச தேவையில்ல..சக்தி உனக்கும் சேர்த்து தான்."
முடிவாய் கூறி முடித்தவர் "நீ வாம்மா" சாருவை அழைத்துக்கொண்டு திரும்ப..அவரிடம் சரி என தலையை ஆட்டிவிட்டு அவர் முன்னே நகரவும் இவள் நின்று பின்னால் திரும்பி சக்தியைப்பார்த்து கண்களை சுருக்கி நாக்கைத்துருத்திக்காட்டி விட்டு ஓடினாள்.

அவளது செயலில் அங்கிருந்த அனைவரும் சக்தி அறியாது சிரிக்க..பொங்கி வந்த சினத்துடன் உள்ளே சென்று கதவை படாரென சாத்தினான் சக்தி.

"வினிதா மேடம் அங்க என்ன பார்வை பாஸ் போய் அரைமணிநேரம் ஆகுது"
வினோத் அவள் தோளில் தட்டி நடப்பிற்கு கொண்டுவர...

"இல்லடா பாரு பாஸயே டா போட்டு பேசிட்டா..அதுல வேற சிடுமூஞ்சின்னு...ஹிஹி நோ வோரி இனிமே நம்மளுக்கு பலமா ஆள் வந்தாச்சுசு"
வினிதா குதிக்க..

"ஓவரா குதிக்காத இதுகப்புறம் தான் புயலே இருக்கு.."
அவன் கூறிவிட்டு நகர..வினிதாவுக்கும் சிந்தனை ஓடியது..

"பாஸ் சின்ன விஷயத்துக்கே மேலயும் கீழயும் குதிப்பாரு ஆனா இந்த விஷயத்துல வந்த கோபம் பத்தாதே..எதுக்கும் நாம இரண்டு பேர்கிட்ட இருந்தும் தள்ளியே இருக்கலாம்"
முடிவோடு அவளும் தன்னிடம் சென்றாள்.

******************

அரைமணிநேரமாக மெத் என அவள் அமர்ந்ததுமே உள்வாங்கிக்கொண்ட அந்த சொகுசு மெத்தையில் அமர்ந்து இருந்த நகத்தை எல்லாம் கடித்து துப்பியாகிவிட்டது..

இருந்தும் இதற்கு வழிதான் அவளுக்கு தெரியவில்லையே..சாவித்ரியும் சிவாவும் சாருவை வெளியே எங்கேயும் அனுப்ப மறுத்தனர்.. இங்கேயே தான் அவள் இருந்து கம்பனி சென்று வர வேண்டும் என்பது அவர்களது அன்பு கட்டளை.. இவர்களுக்கு சிரமம் என்பது ஒரு பக்கம் இருக்க காலையில் பார்த்த அந்த சிடுமூஞ்சு இருக்க அவனோடு ஒரே வீட்டில் எப்படி.. இதையே தான் சாருவின் மனம் ஒளியை சுற்றும் ஈசலென சுற்றி வந்தது.

எதுவோ கழுத்தில் சுள்ளென இழுக்க தடவிப்பார்த்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது காலையில் அவன் பிடியில் சிக்குண்டது.. "சிவா ஐயா மட்டும் வந்தில்லன்னா நம்மலுக்கு சமாதி தான்.. முடியவே முடியாது இதுக்கு மேல.. சாவித்ரி அம்மாகிட்ட சொல்லிடலாம்.." உறுதியாய் எண்ணியவண்ணம் அந்த அறைகதவை திறந்தாள் சாரு.

அவளது கெட்ட நேரமோ இல்லை எரிமலை நெருப்பை வடித்து விட அவளையே காலை முதல் தேடிக்கொண்டிருந்த அவனது நல்ல நேரமோ நேராய் எதிர் அறை கதவை திறந்து உள்நுழைய போய் திரும்பி பார்த்த இருவிழிகள் சக்தியுடையது தான்.

"ஆத்திதி மறுபடியும் இவனா..முருகா காப்பாத்து.. கத்தி வேற வச்சிருக்கானோ.." சக்தி கையில் பாதி வெளிச்சத்தில் மினுங்கிய எதையோ உற்று பார்த்தாள்.

அவள் பார்வையில் ஒரு நிமிடம் குழம்பி சக்தி தன் கையில் இருந்த பேனாவை தூக்கி பார்க்க.."ஓஹ் பேனாவா.." சத்தமாகவே பெருமூச்சு விட்டாள் சாரு.

அவள் செயலில் இது கத்தியாக இருந்திருக்கலாம் என யோசித்த சக்தி வேகமாக சாரு பக்கமாய் நகர அவன் வருவதை ஊகித்த சாரு அடுத்த நிமிடம் அங்கிருந்து சிட்டாய் பறந்திருந்தாள்.

மூச்சை பிடித்துக்கொண்டே படிகளில் தடதட என இறங்கி வந்தவள் முன் அவளை அதிசமாய் பார்த்தவண்ணம் நின்றிருந்தார் சாவித்ரி.

அவரை கண்டதும்.. முதலில் கூறி விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும் பார்வையாலே சாம்பலாக்கிடுவான் போல என..

"அம்மா என்ன எங்காவது தங்குற இடம் பார்த்து சேர்த்து விட்டுறுங்க..இங்க இருக்க முடியாது.." அவர் அன்பு அறிந்தவளாதலால் அவரை நேராய் பார்த்து அவளால் மறுக்க முடியாது போக கீழே குனிந்தவாறு கூறினாள் சாரு.

"சாருமா..சக்திய நினைச்சிதான பயம் உனக்கு.. சிவா என்கிட்ட நடந்தத எல்லாம் சொன்னாரு.. அவன் பார்க்க தான்மா கொஞ்சம் முரடனா தெரிவான்..அவன் மனசு ரொம்ப இளகினது.. அவனால் இந்த வீட்ல உனக்கு எதுவும் தீங்கு நடக்காது..நானும் சிவாவும் இருக்கோம்ல.. இதுக்கு மேல எதுவும் பேச இல்ல போய் தூங்கு போ.." அன்பாய் தொடங்கி பொய் அதட்டலோடு முடித்து விட்டு நகரப்போனவரை மீண்டும் பிடித்துக்கொண்டாள் சாரு..

"போங்கம்மா முடியவே முடியாது. என்ன ஏதாவது ஒரு தங்குற இடத்துல சேர்த்து விடுங்க.."

"சாரு இங்க பாரு..நீ சின்ன பொண்ணு அதோட நான் உங்க அப்பா அம்மாகிட்ட ஏன் உன் ஊர்கிட்டயே உன்ன நல்லா பார்த்துக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன். நீ இங்கதான் இருக்க போற..உனக்கு படிக்கிறதுக்கும் எல்லாம் ஏற்பாடு ஆரம்பிச்சாச்சி..பேசாம போய் தூங்கு போமா" முடிவாக அங்கு வந்த சிவா கூறிவிட்டு செல்ல சாவித்ரியும் அவர் பின்னே சென்றார்.

"படிக்கிறதா..அதுகெல்லாம் நிறைய செலவாகுமே..அதெல்லாம் எப்படி திருப்ப கொடுக்குறது.." புதிதாக முளைத்த பிரச்சனையை தனக்குள்ளே பேசிக்கொண்டு அவள் படியேற இருட்டில் கால் தடுமாறியவள் விழப்போகவும் தாங்கியது இரு கரங்கள்..

கண்களை இறுக்க மூடியிருந்த சாரு.. மெதுவாக திறந்து கீழே பார்த்து விட்டு "நல்லவேள விழல்ல.. ஆமா யாரு பிடிச்சாங்க?" என்றவாறு நோக்க அந்த இருளிலும் அந்த கண்களின் சொந்தகாரன் யார் என சாருவிற்கு தெளிவாய்ப்புரிந்தது.

"என்ன இதுதான் பிளானா.. இப்படி நான் வாரத பார்த்து விழுவது போல நடிச்சி..என்ன வலையில சிக்க வைக்கலாம் பார்க்குறயா.. உன்ன பார்த்தாலே தெரியுதே பணத்த கண்டதும் எங்க அப்பாவ உன் பக்கம் இழுத்து கம்பனிக்குள்ளயே வந்துட்ட...அடுத்து என் அம்மாவ வலைச்சி எங்க வீட்டுக்குள்ள.. then இப்போ என்கிட்ட.. இங்க பாரு என்கிட்ட இதெல்லாம் வேளைக்காகாது. " பல்லைக்கடித்துக்கோண்டு இவள் முகத்தருகில் வந்து பேசினான் சக்தி.

"வலயில சிக்குறதுக்கு நீ என்ன மீனா.. ஆமா இவர் பெரிய இளவரசரு.. இது இவரோட கோட்ட.. நாங்க வலச்சி போட்டுட வந்துட்டம்..நான் நடிச்சி விழுந்தேன்னா நீ எதுக்கு என்ன பிடிச்ச வந்து.?"
அவள் கேட்ட அடுத்த கணம் தொப்பென படியில் இருந்தாள் சாரு..

"மைன்ட் இட் இன்னும் ஒரு வாரத்துல நீ யாருன்னு எல்லாருக்கும் காட்டி உன்ன இங்க இருந்த விரட்டல்ல என் பெயர் சக்தி இல்ல"
அவன் அவளருகில் குனிந்து கையை தட்டி கூறிவிட்டு தொடர்ந்து படியேற..விழுந்ததில் அடிபட்ட வலியில் இருந்தவளுக்கு இன்னும் கோபம் வர..

"ஆமா பேசாமா இடியட்ன்னே மாத்திக்கோ.." இவள் பின்னால் முனுமுனுக்க..நல்லவேளை அவன் அவள் கூறியாது கேட்காத தொலைவிற்கு மேல்தளத்தை அடைந்திருந்தான்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 10 ❤

❤உன் அழகிய விழி
சிமிட்டலில்
ஓர் நிமிடம்
என் உலகம் தான்
சுற்றுதல்
மறந்ததடி❤

முதல் முறையாக தன் பெற்றோர் இன்றி தனிமை என்ற ஒன்றை உணர்ந்தாள் சாரு. தன் வீட்டையே உள்ளடக்கி விடும் அளவு பெரிய அறை.. பிறந்தது முதல் பாயில் படுத்தவளுக்கு பத்து பேர் உறங்கிடும் அளவு பெரிய கட்டில்.. இப்படி பல அவள் கண்டிரா வசதிகளும் அவளுடன் கைகோர்த்திருக்க இருந்துமே எல்லாமே கசந்தது அவளுக்கு தன் பெற்றோர் இன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக ஏதோ பெரிய இரைச்சல் ஒலி அது என்ன என்று இணங்காண முடியாது அவளை பயத்தில் ஆழ்த்தியது.

உருண்டு உருண்டு பார்த்தவள் உறக்கம் வராது போகவே மெல்ல எழுந்து அறையிலிருந்து வெளியே வந்தாள். யாரிடமாவது கேட்கலாமா என சிந்திக்க ஆனால் வீடே இருளில் ஆழ்ந்து இருக்க அனைவரும் தூங்கி இருந்தனர். மெதுவாக படிக்கட்டு வழியே கீழிறங்கினாள் சாரு. அங்கு சாப்பாட்டு அறையில் விளக்கு எறிந்து கொண்டிருக்க..சமயலறையை எட்டிப்பார்த்தாள் சாரு.

அங்கு பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த சதீஷைக்கண்டவள்..
என்னவென்று அழைப்பது என புரியாது அங்கிருந்த கதவில் மெதுவாய் ஒரு முறை தட்ட..

சத்தத்தை கேட்டு திடுகிட்ட சதீஷ் திரும்பாதே "அண்ணா நிலா க்ளாஸ் முடிச்சிட்டு லேட்டா வந்தா..சாப்பாடு ரூம்ல சாப்பிட்டா அப்புறம் தூங்க போயாச்சி.." என படபட என கூறிவிட்டு திரும்பிப்பார்க்க..அங்கு கண்களை அகல விரித்து மேலேயும் கீழேயும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தாள் சாரு.

அவளை பார்த்த சதீஷ் "நம்ம நிலம இப்படி ஆகிரிச்சே ச்சீ.." என தலையிலே அடித்துக்கொண்டு மீண்டும் அவள் பக்கமாய் திரும்பி "நீ தான் சாருவா?" என கேட்க ஆம் என் தலையசைத்தாள் அவள்.

சட்டென முகத்தில் ஒட்டிக்கொண்ட சிரிப்போடு "இன்னக்கி கம்பனில புல்லா உன்ன பற்றி தான் பேச்சு அதோட ஹெட்லைனும் நீ தான்" என்றான்.

அவன் கூறியது முழுதும் புரியாவிட்டாலும் தலையை மட்டும் ஆட்டியவள் எப்படி இவனிடம் கேட்பது என யோசிக்க அதற்கு உதவியாக அவனே ஆரம்பித்தான்.

"என்ன தூங்கல?" என்றான் எதையோ தேடிக்கொண்டே..

"இல்ல சார்.." அவள் இழுத்தவண்ணம் கேட்க முயல..இடைமறித்தான் சதீஷ்.

"ஹேய் வெய்ட் வெய்ட்..சார் எல்லா வேணா நீ சதீஷ்ன்னே கூப்பிடு." என்றான் இலகுவாய்.

"ஹா சத்தீஷ்.." ஒருமுறை சாரு கூறிப்பார்க்க..

இதென்ன நம்ம பேர்க்கு வந்த சோதனை என "சத்தீஷ் ன்னு என் பெயர கொலை பன்னாம ச..தீ..ஷ்.. சதீஷ் ன்னு கூப்பிடு." உச்சரிப்போடு ஒவ்வொரு எழுத்தாய் கூறிக்காட்டினான்.

"சதீஷ்..சரியா.."அவள் தலையை ஆட்டி வினவ சதீஷ் கட்டை விரலை உயர்த்திக்காட்டி விட்டு அவன் பாத்திரம் உருட்டும் வேலையை தொடர்ந்தான்.

"சரி இங்க ஏதோ பெருசா சத்தம் கேட்டுட்டே இருக்கே அது என்னது.?"
பயத்தில் கண்கள் படபடக்க வினவியவளை புரியாது பார்த்தவன்..

ஒரு முறை கூர்ந்து செவிமடுத்து விட்டு..
"எங்கே எத சொல்லுர?"

"இதோ கேட்குதே.." அவள் கூற..

மீண்டும் உற்றுக்கேட்டவன் அவள் கடலை தான் கேட்கிறாள் என புரிந்து கொண்டு "அதுவா இங்க பக்கத்துல தான் கடல் இருக்கு வீட்டுக்கு பின்னாடி"என்றான்.

"என்னது உண்மையாவா?" சாரு அதிசயத்தை கண்களில் பரப்பி கேட்க..

" ஆமா அதுக்கு எதுக்கு நீ இவ்வளோ ஷாக் ஆகுற"

"ஹையா கடல்ல விளையாடலாம்..அப்புறம் அலை வந்துட்டு வந்துட்டு போகும் சொல்லுவாங்கள அதையும் பார்க்கலாமே..."

குதித்துக்கொண்டு ஓடியவளைப்பார்த்த சதீஷ் "நாம தான் பெரிய பைத்தியம்ன்னு இருந்தா..நம்மள விட பெரிய பைத்தியங்கல்லா இருக்கு போலவே.. முதல்ல இந்த நல்ல விஷயத்த நிலாகிட்ட சொல்லனும்.. அவள் வேற எப்ப வருவாளோ..அவளுக்காக இந்த சக்தி கண்ணுல படாம அம்மா கையால சமைச்ச சாப்பாடெல்லாம் தியாகம் பன்ன இருக்கே.." புலம்பியவண்ணம் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான் சதீஷ்.

படிக்கட்டு வரை ஓடியவள் பின்தான் நினைவு வந்தவளாக மீண்டும் சதீஷிடம் ஓடி வந்து
"ஆமா மறந்துட்டேன் ஏன் இப்போ இங்க இருக்கீங்க நீங்க?"

என்னது..என வியந்தவன்.."ஏம்மா இது என்னோட வீடு..என்ன வேற எங்க போக சொல்லுற.." இவ்வளவு நேரம் தேடியும் கோதுமை மா டப்பா கிடைக்காத எரிச்சலும் பதிலில் சேர்ந்து கொண்டது..

"அய்யோ அதில்ல லூசு.." பட்டென அவள் கூறிவிட்டு நாக்கை கடிக்க அவளை முறைத்து வைத்தான் சதீஷ்.

"சரி சரி இங்க சமயலறைல என்ன பன்னுறீங்க..?" அவனுக்கு தெளிய வைத்திடும் நோக்கில் கைகளாலும் இடத்தை காட்டியே கேட்டாள் சாரு.

அவளது கேள்வி மீண்டும் எரிச்சலைக்கிளப்ப "ஹா வேண்டுதல் இன்னக்கி இங்கயே இருக்க.."

"ஓஹ் சரி சரி ஆனால் இங்க தான் சாமி அறை இருக்கே..அப்புறம் எதுக்கு சமயலறைல?" மீண்டும் அவள் கேட்க..அவன் முறைத்த முறைப்பில் "சரி சதீஷ் எனக்கும் சேர்த்து வேண்டிக்கோ அதுவும் நா இங்க இருக்கப்போ அந்த சிடுமூஞ்சிய பார்க்கவே கூடாதுன்னு..டாட்டா"

கடலில் எப்படி எல்லாம் விளையாடலாம் என்று சந்தோஷமாக யோசித்துக்கொண்டு தன் அறை அருகில் வந்தவள் அங்கு எதிர் அறைக்கதவில் சாய்ந்து கொண்டிருந்த உருவத்தைக்கவனிக்கவில்லை.

அறையை திறந்து உள் நுழையப்போனவளைத்தடுத்தது சக்தியின் குரல்.."என்ன என்கிட்ட வேளைக்காகாது என்று..என் தம்பிகிட்ட உன் கைவண்ணத்த காட்ட ஆரம்பிச்சிட்ட போல.." கடுமையான குரலில் அவன் வினவ..அவன் கூற வருவது புரியாது விழித்தவள் பின்தான் புரிய இவனுக்கு வேற வேலையே இல்ல என்று எண்ணிக்கொண்டு
"ஆமா சக்தி மாமா உன் சிடுமூஞ்ச காலம் பூரா பார்க்க முடியாதுல அதனால சதீஷ் மீன வலையில சிக்க வைக்கலாம் இருக்கேன்." கூறிவிட்டு அவன் பதில் கூறும்முன்னே அறையினுள் சென்று கதவை மூடிக்கொண்டாள் சாரு.

*****************

அதிகாலையிலே எழுந்து குளித்து தான் தயாரித்த ஒரு உடையயே அணிந்து கொண்டவள் கீழறங்கி வரவும் சக்தி படிக்கட்டுக்களில் மேலேறிக்கொண்டிருந்தான்.

"ஓஹ் இவ்வளோ நேரங்காலத்தோட எழுந்துருவானோ.." அவனை கண்ணை சுருக்கி பார்த்தவண்ணம் அவள் இறங்க அவனும் பதிலுக்கு தன் எரிக்கும் பார்வையை வீசியவாரு ஏறிக்கொண்டிருந்தான்.

இருவரும் ஒரே படியில் சந்தித்ததும் அவளைக்கண்டவன் மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு ஏதோ தோன்ற சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொள்ள அவனருகில் வந்த சாரு..
"என்ன மாமா இது எப்பிடி? நல்லா இருக்கா சரி சரி ஆனால் நீ சொல்ல கூடாதே..சதீஷ் தான் சொல்லனும்"
என்றவாறு கண்ணடித்து விட்டு நகர கோபத்தில் படிக்கட்டை இறுக்க பற்றிக்கொண்டு அவள் செல்வதைத்திரும்பி பார்த்தான்.

நேற்று முடியை இறுக்க பின்னி இடை வரை விட்டிருந்தாள். இன்று விரித்து விட்டு கொஞ்சமாய் எடுத்து கிளிப் போட்டிருந்தாள். நேற்று பாவாடை தாவணியில் கிராமத்து கிளியாய் வலம் வந்தவள் இன்று...
தன் தலையிலே தட்டிக்கொண்டான் சக்தி.
அங்கு சிவா அவள் ஆடையை பற்றி பாராட்டுவது தெளிவாய் கேட்டது. இவன் தொடர்ந்து மேலேறப்போக கீழறங்கிக்கொண்டிருந்தான் சதீஷ்.

"சதீஷ் நிலா எங்க?"
சக்தி அவன் முகம் பார்த்து கேட்க..
திரு திரு என விழித்த சதீஷ் இவனொருத்தன் தெய்வத்திருமகள் விக்ரம் மாதிரி நிலா எங்க நிலா எங்கன்னே இருக்கான். இப்ப என்னத்த சொல்லுறது..அவன் விழித்துக்கொண்டே இருக்க அங்கே வந்த சாரு..இவர்களைத்தாண்டி மேலே ஏறிக்கொண்டே" அம்மா நிலாவ எழுப்பி விட சொன்னாங்க" கூறிவிட்டு சென்றாள்.

சக்தி உன்கிட்ட யாரு கேட்டா இப்போ என்ற பார்வையை வீசிவிட்டு அவளை தாண்டி மேலேறிச்செல்ல சதீஷ் சாருவைப்பார்த்து நன்றியுடன் புன்னகைத்தான்.

******************

வேலையில் கவனமாய் இருந்தவனைக்களைத்தது செல்போன் ஒலி.. அழைப்பை ஏற்று காதில் வைத்தான் சக்தி.

"என்னடா சக்தி என்ன நினைவு இருக்கா.. ரொம்ப சோகமா இருக்க போல.. அதுக்குதான் சொல்லுறது ஓவரா துள்ளக்கூடாதுன்னு.. எந்த வருடமும் உங்க கம்பனிக்குதான் விருது கிடைக்கும் ச்ச்ச ஆனா பாவம் பாரு இந்த வருடம் லிஸ்ட்லயே இல்ல. "
மறுபக்கம் மகேஷ் பேசிக்கொண்டே செல்ல அவனிற்கு பதில் கூற சக்தி முயலும் போதே அவன் கண்களில் பட்டது அவ்வழியாய் வந்த
சாரு.

சட்டென மகேஷின் அழைப்பை துண்டித்தவன் டேவிட்டிற்கு அழைத்து..சாருவை வருமாறு பணிக்க அடுத்து சில நிமிடங்களில் அவன் அறைக்கதவில் தட்டும் ஓசை கேட்க..வேகமாக எழுந்து கதவைத்திறந்தவன் திறந்த வேகத்திலேயே சாருவை இழுத்து கதிரையில் போட்டான்.

அவன் வேகத்தில் கதிரையில் விழுந்தவள்.. அருகில் வந்த சக்தி கதிரையின் கைகளிரண்டிலும் கை வைத்து அவள் முகத்தருகே குனிந்து நோக்க..அவன் செயலில் குழம்பிய சாரு..
"சார் எதுக்கு இப்போ இப்பிடி கிட்ட வந்து பயமுறுத்துரீங்க" என்றாள் தன் ஒரு கையால் முகத்தை மறைத்து விரல்களின் இடைவெளியூடு பார்த்தவாரே..

"ஷட் அப். நடிக்காத..நீ மகேஷ் அனுப்பின ஆள் தான?"

அவன் கேட்டதில் அதிர்ந்து அவன் முகம் நோக்கினாள் சாரு.

கருத்துக்களை பகிர

 
Last edited:

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 11 ❤

❤உயிர்வரை தீண்டி
செல்கிறது
உன் சுவாசம்...
ஆயிரம் வளிகளுடன்
கலந்திருந்த போதும்
தனியாய் என் இதயவழி
அடைந்து மாயம்
செய்வதால்...❤

"ஷட் அப். நடிக்காத நீ மகேஷ் அனுப்பின ஆள் தான?"
அவன் கேட்டதில் அதிர்ந்து நோக்கினாள் சாரு.

அவளது அதிர்ந்த பார்வையிலேயே அவனது ஊகம் சரிதான் என்பது புலப்பட தலையை சரித்து கண்களை மூடி வெற்றிச்சிரிப்பு சிரித்தவன் மீண்டும் சாருவின் பக்கமாய் திரும்பி அருகில் வந்து..
"ஹ்ம் சொல்லு எவ்வளோ பணம் தந்தான்..என்ன செய்ய சொன்னான்?"மிரட்டலாய் ஒலித்தது அவனது குரல்.

"அய்யோ சார்ர் அவன் பணம் தரல்ல.. நான் தான் அந்த மகேசுக்கு எம்பது ரூவா கொடுக்க இருக்கு.." அவள் மறுத்து தலையசைக்க..குழம்பியவாறு நெற்றியை சுருக்கி "வாட் ?" என்றான் சக்தி.

"வாட் இல்ல சார் அது வாத்து..அவன்கிட்ட ரெண்டு வாத்து குட்டி வாங்கினன். ஒன்னு நாப்பது ரூவா ன்னு தந்தான். எதுவும் ஆகாது நல்லா ஓடியாடி திரியும் சொன்னான் நானும் நம்பி வாங்கினேன்.. ஆனா வாங்கி இரண்டு நாள்ளே செத்து போச்சி.. அதுவும் இரண்டுமே சார்..அதான் பணம் தர முடியாது சொல்லிட்டு கெளம்பி வந்துட்டன்.இப்ப உங்கள்ட போட்டு கொடுத்துட்டான் போல.. இருக்கட்டும் சார் நீங்களே சொல்லுங்க செத்துப்போன வாத்துக்கு பணம் கொடுக்குறது எப்படியாம்? அதுவும் அவன் பொய் சொல்லில தந்திருக்கான்"

சாரு அபிநயத்துடன் நீட்டி முழக்கி கதை பேசி முடித்து விட்டு அவனிடம் நியாயம் வேறு கேட்க.. ஆனால் த க்ரேட் சக்தி தான் முதல்முறையாக தன் தவறுக்கு தலையிலே அடித்துக்கொண்டான்.

"என்ன சார்..நான் சொல்லுறது தான சரி.. ?" அவள் இருந்த கதிரையில் சாய்ந்து அமரந்த நிலையிலேயே குனிந்திருந்த சக்தியின் முகம் காண அவனை நோக்கி குனிந்து அண்ணாந்து அவன் முகம் பார்த்து வினவ..மெதுவாய் அவளிடம் இருந்து விலகி நிமிர்ந்து அவளது முகம் நோக்கினான் சக்தி..

"Get lost" அவன் மெதுவாய்க்கூற..

"ஓஹ் ஓகே சார் தாங்சு" பவ்யமாக அவள் பதில் கூற இவனுக்கோ சாரு தன்னை வைத்து கிண்டல் செய்வதாக தெரிய.." போ இங்க இருந்து" சத்தமிட..அவன் சத்தத்தில் சட்டென் எழுந்தவள்..அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வெளியேறினாள்.

"இவனுக்கு என்ன நடந்திச்சி.. அவனா வர சொல்லி மகேசு பற்றி கேட்டான் அப்புறம் வெளில போன்னு திட்டுது எரும.. எப்ப பாரு சிடு சிடு ன்னே சுத்துது.. நமக்கென்ன..நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும்."
பேசிக்கொண்டே தன் போக்கில் நடந்தவள் முன் வந்து நின்றான் வினோத்.

பேசிக்கொண்டே வினோத்தையும் அவள் கடந்து செல்ல..அவளிடம் பேசுவதற்கு தயாராய் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த வினோத் சுற்றும் முற்றும் திரும்பி யாராவது பார்த்துவிட்டார்களா என பார்க்க..அங்கு ரம்யா வாய்மூடி சிரித்துக்கொண்டிருந்தாள்.

அவளைப்பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்தவன் மீண்டும் "சாரு" என அழைத்துக்கொண்டு அவள் பின்னே சென்றான்.

தன்னை யாரோ அழைப்பது கண்டு நின்று திரும்பியவள் அங்கு வினோத் நிற்பதைக்கண்டாள்.

"குட் மார்னிங் சாரு."
அவன் வாழ்த்த சாருவோ திரு திரு என விழித்தாள்.

ரம்யா கூறியதிலுருந்தும் அவளது நடவடிக்கைகளிலிருந்தும் அவள் பற்றி தெரிந்திருந்த வினோத்..
"சாரு குட் மார்னிங்ன்னா இனிய காலை வணக்கம் என்று அர்த்தம்..அதுக்கு பதில் நீயும் அதையே சொன்னா சரி..."

அவன் விளக்கமளிக்க.."ஓஹ்..சரி..குட்ட் மார்ர்னிங்" என்றாள் சாரு.

"அப்புறம் இன்னும் வேலை ஆரம்பிக்கல்லயா?"
பேச்சுக்கொடுத்தவாரு அவளுடன் சேர்ந்து நடந்தான் வினோத்.

"இல்லை இன்னக்கி தான் முதல் நாள். ஐயா வந்து தான் சொல்லனும்."
அவர்கள் பேசிக்கொண்டே அடுத்தவர்கள் இருக்குமிடம் வந்திருந்தனர்.

"சிவா சார் சொல்லியாச்சி சாரு. உன் முதல் வேலையே பெரிய ஆடர் தான். வாழ்த்துக்கள்." ரம்யா கூறியவாரு சாருவின் அருகில் வந்தாள்.

"பாரு ரோஜா பூ தான் அவங்களோட கல்யாணத்தோட தீம். ஹ்ம் தீம்ன்னா கருப்பொருள் என்று சொல்லலாம். மணமகளுக்கு நீண்ட ட்ரெஸ். இந்த போடோ பாரு இது போல..ரொம்ப வித்தியாசமா அவங்க கருப்பொருள் பார்க்குறவங்க சொல்லுறது போல இருக்கனுமாம். அப்புறம் அதே அலங்காரத்துல ஆனா கொஞ்சம் வித்தியாசமா flower girls ற்கு ட்ரெஸ். Flower girls ன்னா சின்ன பெண் குழந்தைகள் கொஞ்ச பேர மணமகள போலவே அழகா ட்ரெஸ் செஞ்சி பக்கத்துல நிக்க வைப்பாங்க. இவங்க தான். ஓகே சாரு ஆல் தி பெஸ்ட். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ டிசைன்ங் பன்னிடனும். அத இங்கயே நாங்க செஞ்சிடுவோம் மெய்ன் விஷயங்கள.. மத்தத கீழ் தளத்துல இருக்க ட்ரெஸ் தையல் செய்ரவங்க செஞ்சிடுவாங்க. இன்னும் இரண்டு வாரத்துல கொடுத்துடனும் ஆடர." நீண்ட நேரம் பேசியவள் அருகில் வினிதா வந்து தண்ணீரை நீட்ட அவளை முறைத்து விட்டு சாருவை நோக்கினாள் ரம்யா.

"இதவிட விளக்கமா அவளுக்கு புரியிரது போல சொல்ல முடியாது. புரிஞ்சி இருக்குமா.?" எண்ணியவாறு சந்தேகத்துடன் அவளைப்பார்க்க புரிந்ததன் அடையாளமாய் தலையை அசைத்தாள் சாரு.

பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நால்வரும் நிம்மதியாய் புன்னகைக்க..சாருவோ மிகவும் கூலாக.."எல்லா சரி ரம்யா ஆனா இடையில ட்ரேஸ்ன்னு ஏதோ சொன்னீங்களே அப்படின்னா?"
கேட்டு விட்டு அவள் முகம் பார்க்க..இதைக்கேட்ட ரம்யாவின் முகம் போன அழகைக்கண்டு நால்வரும் பலமாக சிரிக்க...சாருவிற்கு பொறுமையாய் விளக்கும் பொறுப்பை ராஜேஷ் எடுத்தான்.

எல்லாம் விளக்கி முடியவும் சந்தோஷமாக தலையை அசைத்தவள் தன் வேலையை அப்போதே தன் அட்டைக்கொப்பியில் ஆரம்பித்தாள்.

****************

"சதீதீதீஷ்ஷ்..." சதீஷை அழைத்தவாறே உள்ளே வந்தாள் நிலா..

"ஹேய் குட்டி வா வா..ட்ரிப் எல்லா எப்படிடா..நல்லா என்ஜோய் பன்னியா..?"
அவளை தோளோடு அணைத்துக்கொண்டே வினவினான் சதீஷ்.

"ஆமா சூப்பர்.. ஆனால் நீ தான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பல்ல..அண்ணாவ எப்படி சமாளிச்ச." அவள் இரகசிய குரலில் வினவ..

"அது ஏதோ சமாளிச்சேன். ஆனா உனக்கு ஒன்னு சொல்லனுமே..இப்படி வா உட்கார்ந்து பேசலாம்." அவளை அழைத்துச்சென்று சோபாவில் அமர்ந்தவன் சாரு பற்றி A to Z எல்லாம் கூற நம்ப முடியாது கதை கேட்டுக்கொண்டிருந்தாள் நிலா.

"வாவ் சூப்பர் சூப்பர் சதீஷ்.. ஆமா இப்போ அவங்க எங்கடா?" கண்கள் அவளை ஆர்வமாய் வீட்டினுள் தேடி அலைந்தது.

"கம்பனிக்கு தான் போயிருக்கா..ஈவ்னிங் ஆகும் வர்ரதுக்கு"

"ஓகே ஓகே நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வாரன்.." என்றவாறே சாரு பற்றி சிந்தித்து கொண்டே சென்றாள் நிலா..

அவள் சிந்தித்துக்கொண்டிருந்த சாருவோ இங்கே சக்தியின் bp ஐ ஒருநாளைக்கு மூன்று தடவையாவது ஏற்றாமல் இருக்க மாட்டேன் என்பது போல தன் அட்டைக்கொப்பியையும் தூக்கிக்கொண்டு அவனறைக்கு சென்று கொண்டிருந்தாள்.

உள்ளே தட்டி விட்டு சென்றவள் அங்கு சக்தி இல்லாது போகவே தன் அட்டைக்கொப்பியை அவன் மேசை மேல் வைத்து விட்டு அறையை சுற்றி நோட்டமிட்டாள். ஆங்காங்கே சில தாள்கள் சுருட்டிய நிலையில் கீழே கிடக்க அதனை எடுத்து குப்பை கூடையில் போட்டவளைக்கவர்ந்தது அவன் மேசையில் இருந்த பொருள்.

"எதுக்கு இந்த சிடு மூஞ்சி இந்த பெரிய செங்கல் எல்லா இங்க வெச்சிருக்கு..பாவம் சிடு சிடுன்னு சுத்துரனால நேரமே இல்ல போல நாம கொஞ்சம் உதவி பன்னலாம்."
எடுத்துக்கொண்டு சென்று எங்கே போடலாம் என யோசித்தவள் கம்பனியின் பழைய பொருட்கள் போடும் அறை நினைவில் வர அங்கு சென்று போட்டு விட்டு கையை தூசு தட்டி விட்டு வந்து மீண்டும் தன் அட்டைக்கொப்பியுடன் தன்னிடம் அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் கழிய இவளும் தன் வேலையில் மும்முரமாக இருக்க..கம்பனி தான் பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருந்தது.

என்னவாக இருக்கும் என யோசித்தவள் அவ்வழியே சென்ற ரம்யாவிடம் வினவ..
"அது பாஸ் போன தொலைச்சிட்டாரு.. ஆனால் ரூம்ல தான் வெச்சாராம். அதான் தேடிட்டு இருக்கோம்."
ஓஹ் என்றதோடு மீண்டும் அவள் தன்வேலையில் மூழ்கிட இங்கு சிசிடிவி ஒளிப்பதிவில் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த சக்தி தான் கொலைவெறியில் சாருவைத்தேடி வந்து கொண்டிருந்தான்.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 12 ❤

❤கடல் அலையின்
நுரைகளும்
விண்மீன்களாய்..
காற்றின் ஓசையும்
பல மொழிகளாய்..
மாயங்கள்
தொடர்ந்திடுதே..❤

வேலையில் கவனமாக இருந்தவளைக்களைத்தது சக்தியின் குரல்.
"சாருமதி"

"யாரு இப்பிடி நீட்டி முழக்குறா பெயர.." எண்ணியவாறு அவள் திரும்பிப்பார்க்க அங்கிருந்த சக்தியைக்கண்டவள்.."ஓஹ் இவன்தானா..இப்ப எதுக்கு நம்மள கூப்புட்ரான். நாம ஒன்னுமே பன்னல்லயே..பார்த்துக்கலாம் வர வர கொழுப்பு கூடி போச்சு…சும்மா எடுத்ததுக்கெல்லாம் சாருமதி சாருமதின்னு.."
மனதில் நினைத்து கறுவியவாரு..எழுந்து அவன் அருகில் வேகமாக சென்றவள்...

"என்ன சார்..எதுக்கு இப்போ சும்மா சும்மா வேலையில கவனமா இருக்க பொண்ண வந்து தொந்தரவு பன்னுறீங்கோ?" படபட என பொரிந்தாள்.

"டேமிட்.." பல்லைக்கடித்துக்கொண்டு அவன் கூற..

"ஹான் டேவிட்ட வந்து என்கிட்ட கேட்டா எனக்கு தெரியுமா.. அவர் என்னோட..
என்னதது மறந்துட்டேனே... ஆஹ் B.A வா இல்ல உங்க B.A வா?"
பேசிக்கொண்டே போனவளின் கையை இறுக்க பற்றினான் சக்தி.

"சார் சார் இப்பிடி பிடிக்கிறீங்க வலிக்குது. விடுங்க கைய..எப்போ பாரு என் கைய பிடிச்சி பிடிச்சி" பேசிக்கொண்டே அவன் பற்றியிருந்த தன் இடது கையை வலது கையால் விலக்க முயன்றவளை அழுந்தப்பற்றி அவனறைக்கு இழுத்துச்சென்றான்.

உள்ளே சென்றவன் அவளை கதிரையில் அமர்த்தி விட்டு.."டேவிட் bring that.." பணிக்க டேவிட் அந்த லேப்டொப்பை கொண்டு வந்து அவள் முன்னே வைத்தான்.

அதில் எதையோ எடுத்த சக்தி அவள் பக்கம் திருப்பிக்காட்டினான்.

இடது கை மணிக்கட்டை தடவிக்கொண்டே என்ன காட்டுகிறான் என கூர்ந்து கவனித்த சாரு..கண்கள் விரிய..
"ஹை சார் இது நானு.. என்ன சார் நீங்க இப்படி சொல்லாம படம் பிடிக்கிறீங்க..இன்னக்கி படம் பிடிக்கிறோம்ன்னு சொல்லிருந்தா நான் கொஞ்சம் நல்லா உடுத்திருப்பேனே." என்றாள் தன் ஆடையை குனிந்து பார்த்தவாறே.

அவள் தான் தன் போனை எடுத்ததை சிசிடிவி ஒளிப்பதிவில் கண்டவன்..கையும் களவுமாக மாட்டிய அந்த ஒளிப்பதிவை அவளிடமே போட்டுக்காட்ட அவளுக்கும் வேறு வழியின்றி அழுதுகொண்டே ஒத்துக்கொள்வாள் அப்போது இங்கிருந்து விரட்டி விடலாம் என்று சக்தி கணக்குப்போட்டிருந்தான்.
ஆனால் அவளது இந்த பதிலை எதிர்பார்க்காதவன்..
"ஏய் போன திருடியது நீ தான்னு தெரிஞ்சு போச்சு. பாரு நீ எடுக்குறது இதுல ரொம்ப நல்லாவே தெரியுது இடியட் மறைக்க ட்ரை பன்னாத இதுக்கு மேலயும். போன தந்துட்டு உன் ஊருக்கே போய்டு வெளில சொல்ல மாட்டன். If not உனக்கு திருடி என்ற பட்டத்தோட வெளில போக வரும்."

லேப்டாப்பிலிருந்து பார்வையை அவன் பக்கம் திருப்பியவள்.. “யாரு போனா சார் எங்க போனா..இப்படி பதறாம மொதல்ல தண்ணிய எடுத்து குடிங்க..எல்லாம் சரி ஆகிடும் எங்க ஊர்ல..”

“டே…விட்”சக்தியின் சத்தத்தில் அந்த தளமே ஆடி நிற்க சாருவோ இதுக்கு இதே தான் வேல என்ற ரேஞ்சில் நின்றிருந்தாள்

பதறிப்போன டேவிட் சாரு அருகில் ஒடி வந்து நடந்ததை அவளுக்கு புரியும் மொழியில் விளக்க
அவன் பேச பேச அந்த வீடியோவைக்கூர்ந்து நோக்கியவள்.."ஓஹோ ஹலோ செல்லா..ஏன் சார் உங்களுக்கு வேற செல்லே கிடைக்கலயா என்ன.. அந்த செங்கல் துண்ட போய் செல்லுன்னு சொல்லுறீங்க.. என்னமோ செய்ங்க.. ஆனா உங்களுக்கு உதவி பன்ன வந்தததுக்கு என்ன திருடின்னு சொல்லுறிங்க பாருங்க..எனக்கு நல்லா வேணும்."
புலம்பியவாறே அவள் எழுந்து கதவு பக்கம் செல்ல.. டேவிட்டோ ஏது செங்கல் துண்டா என மலைத்திருந்தான்.

"டேவிட்.." சக்தி கர்ஜிக்க..

"இதோ சார்.. ஏன்மா சாரு அந்த செங்கல் துண்ட.." சக்தி முறைப்பதைக்கண்டவன்.." ச்ச சாரோட போன எங்கமா வச்ச?"

"அங்க தான் கம்பனி பழைய பொருட்கள் எல்லா போடுற ரூம்ல"
அவள் சொல்லி விட்டு வெளியேறிவிட அவள் பின்னே டேவிட்டும் சென்றான் போனை எடுத்துவர.

சக்தி பலத்த யோசனையில் இருந்தான். சாருவின் வரவின் பின்னிருந்தே சக்திக்கு பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவளை சந்தித்த முதல் நாளே அவனது கம்பனிக்கு கிடைக்க இருந்த விருது பறிபோனது. அவன் முன்னே நின்று பேசக்கூட பயப்படும் அனைவரின் மத்தியிலும் தன்னையே சீண்டிப்பார்க்கிறாள். ஆனால் இதெல்லாம் அவள் திட்டம் போட்டு செய்வது போல் இல்லை கண்டிப்பாக அவளது இயல்பு தான். ஆனாலும் ஏனோ அவளைக்கண்டாலே சக்திக்கு தலைவலி தான். கோபம் வேறு கண் மண் தெரியாது வருகிறது. இருந்தும் அதனை அவனுக்கு வெளிப்படையாக அவளிடம் எதிர்பார்ப்பது போல் காட்ட முடியாததும் புதிர் தான்.
தன்னை சக்தி என்று பெயர் சொல்லி சீண்டுகிறாள். இந்த இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் நடப்பது வேறு தான்...

****************

சாரு கம்பனிக்கு வருவதும் போவதும் சிவாவுடன் தான். வரும் மாத தொடக்கத்தில் வந்து டிசைங்னர் பாடநெறிக்கு சேர சொல்லியிருந்தது அக்கல்லூரி நிர்வாகம். வேலையை முடித்து விட்டு அவள் வெளியே செல்ல முனைய அவ்வழியே வந்த சக்தி.

"அப்பா அவசரமா வெளில போய்ட்டாரு.. வந்து கார்ல ஏறு." தகவல் சொல்லி விட்டு விறு விறு என சென்று விட்டான்.

ஒருவாரு பாக்கிங்கை தேடி பிடித்து வந்து சேர்ந்தாள் சாரு. ஆனால் அடுத்த சவாலாக அங்கு பல கார்கள் இருக்க..தலையில் கைவைத்தவள் "இதுல சக்தி கார் எங்க தேடுறது?" நகத்தைக்கடித்துக்கொண்டே ஒவ்வொரு காரையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென வெகு அருகில் ஒரு கார் வந்து பிரேக் போட பயத்தில் தடுமாறி கீழே விழுந்தாள் சாரு. தலையைத்தடவிக்கொண்டே இவள் எழுந்து அமரவும் காரிலிருந்தவனும் விடாது ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தான்.

கோபமாய் எழுந்து அருகில் வந்தவள் கார் கண்ணாடியில் தட்ட..அது திறந்து கொண்டது. உள்ளிருந்தவனோ ஸ்டைலாக glasses ஐ மேலே உயரத்தி விட்டு ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என வினவ.. கண்களை விரித்து நோக்கியவள் சட்டென ஒன்றுமில்லை என தலையை ஆட்டி பல்லைக்ககாட்டினாள்.

"நீ செஞ்ச வேலைக்கு இருக்குடா உனக்கு..ஆனா இப்ப இல்ல..அப்புறம் அத காரணம் காட்டி இங்கே விட்டுட்டு போனாலும் போய்டுவ.. சும்மா விடுவேனா.. என்கிட்டே முட்டிகிட்டு வாரல்ல.." உள்ளே பொரிந்து கொண்டே வந்து பின்கதவை திறக்கப்போக அதுவோ திறந்தபாடில்லை..முழு பலத்தையும் கொடுத்து இவள் இழுக்க..கண்ணாடியில் தட்டிய சக்தி தன் பக்க மறுபக்க முன் கதவை ஒரு கையால் காட்டினான்.

இவள் அந்த பக்கம் வந்து முதலில் கொடுத்த பலத்தையே கொடுத்து திறக்க அது இது தேவையே இல்லையே என்பது போல் இலகுவாக திறந்து கொண்டது ஆனால் சாருதான் அவள் கொடுத்த வேகத்திற்கு இரண்டடி தள்ளி தரையில் அமர்ந்திருந்தாள்.

கையில் ஆங்காங்கே சிராய்ப்புக்கள் எரியத்தொடங்க அதை வலியில் உதட்டை சுழித்தவாறே இவள் ஆராய்ச்சி செய்யும்முன் மீண்டும் சக்தி ஹார்னை விடாது அழுத்த ஆரம்பித்திருந்தான். கோபம் வந்தாலும் வேறு வழி இல்லாது போக முகத்தைத் தொங்க போட்டவாறே வந்து அமர்ந்தாள் சாரு.

" பெல்ட்ட போடு." நேராய் பார்த்தவாரு வந்தது கட்டளை.

"நான் சல்வார் தானே போட்டிருக்கேன் எனக்கு அது தேவையில்ல.."சாரு கூறிவிட்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள்

திரும்பி அவள் முகம் ஒரு நொடி பார்த்தவன் சட்டென அருகில் வந்து சீட் பெல்ட்டை இழுத்து போட்டு விட..."ஓஹ் இதுவா.. அதுக்கு பெயர் சீல்ட் பேல்ட்டு சக்தி உனக்கு தெரியாதா.. சரி இனிமே அப்படியே சொல்ல பழகிக்கோ...சரியா.." அவள் கூற எல்லாம் தன் நேரம் ஆமா சீல்ட்டு பெல்டடு தான் என முணுமுணுத்தவாறே காரை எடுத்தான் சக்தி.

காரில் அமைதியே ஆட்சி செய்ய சாரு தான் கார் கண்ணாடியில் ஒட்டியவண்ணம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். ஏதேச்சையாக சாரு பக்கம் திரும்பியவன் கண்களில் இந்த காட்சி பட சக்தியின் மனம் அவனையறியாதே அவளுக்கு இலகுவாய் மிதமான வேகத்தில் காரை இயக்க மூளையை பணித்திருந்தது.

கார் வந்து வீட்டு வாசலில் நிற்க "நிலா வந்திருப்பா..அவள பார்க்கனும் அப்பபுறம் இரண்டு நாள் சுற்றுலா எப்படி இருந்திச்சி கேட்கனும் சீக்கிரமா கார திறந்து விடுங்க." பட பட என பேசி முடித்த பின் தான் நினைவில் வர மெதுவாய் சக்தியின் பக்கம் திரும்பினாள் சாரு.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 13 ❤

❤கண்களால் கைது
செய்கிறாய் என்
உயிரை..
பதிலுக்கு
காதலால் கைது
செய்வேனே உன்
உயிரை...❤

மெதுவாக சக்தி பக்கம் திரும்ப நல்ல வேளையாக அவன் யாருடனோ சீரியசாக போனில் கதைத்துக்கொண்டிருந்தான்.

நல்ல வேளை என பெருமூச்செறிந்தவள்..மெதுவாக சார் என சக்தியின் கையை சொறிந்தாள். அவன் சைகையால் பேசாமல் இரு என சொல்லி விட்டு தொடர்ந்து பேச..கொஞ்சம் நேரம் காத்திருந்தவள் கார் கண்ணாடி வழியே எட்டிப்பார்க்க அங்கே நிலா வீட்டினுள் படியேறுவது தெரிந்தது.
மீண்டும் பொறுமையின்றி சக்தி என கையை இழுக்க அவனோ இவள் செய்கைக்கு பதில் இன்றியே அவன் வேலையில் கவனமாக இருந்தான்.

"சக்தி சக்தி சக்தி.." என ஒவ்வொரு சக்திக்கும் அவனை எரிச்சல் கொள்ள வைக்கும் விதமாக இவள் இரு விரல்களால் அவன் கைவிரலில் இருந்து மேல் தோள் வரை முன்னேறிக்கொண்டே சொறிய.. பொறுமையிழந்த சக்தி.."டேமிட் என்ன வேணும் உனக்கு இன்னும் இறங்காம இங்க என்ன பன்னிட்டு இருக்க."

"ஆமா கேளுங்க நல்லா கதவ அடச்சி வெச்சிட்டு." உம் என்று முகத்தை இழுத்துக்கொண்டு கண்களாலே கதவையும் காட்டினாள் சாரு.

"நோ நோ சார் சாரி, உங்கள இல்ல...." அவளை முறைத்துக்கொண்டே கதவை அவன் திறந்து விட சிட்டாய் பறந்தாள் சாரு.
உள்ளே சென்று சில நிமிடங்களிலே நிலாவும் சாருவும் நன்கு நண்பிகளாகி விட..வீடே களைகட்டியது..

போனில் கதைத்து முடித்து விட்டு சக்தி வீட்டினுள் நுழைந்தான். அவனை கண்டதும் நிலாவிற்கு சற்றே பதட்டம் எடுக்க அவனை பார்த்துக்கொண்டே சாருவிடம் கதைத்துக்கெண்டிருந்தாள்.

நேராக சக்தி நிலாவை நோக்கி வரவும் அவளது பதட்டம் அதிகமாக அதே நேரம்...

"அப்புறம் அங்க என்னலாம் இருந்திச்சி நிலா.." உரக்க கேட்டுக்கொண்டிருந்தாள் சாரு.

அவளை நிலா உஷ் உஷ் என வாயை குவித்து அமைதிப்படுத்த அது சாருவின் காதை எட்டவே இல்லை.

நிலாவிற்கு எதிரே சாரு நின்றிருக்க அவளிற்கு பின்னால் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்தான் சக்தி.

"இருந்தாலும் நிலா சதீஷ்தான் ரொம்ப பாவம் நீ வீட்டில இல்லாதத மறைக்க அதுவும் அந்த சிடுமூஞ்சிட்ட மறைக்க எவ்வளோ பாடு பட்டான் தெரியுமா.."

"போச்சு போச்சு.." நிலா பயத்துடன் கையை உதறிக்கொண்டே சக்தியை பார்க்க அவன் சாருவின் பேச்சிற்கு பின்னிருந்து "ஓஹோ" போட்டுக்கொண்டிருந்தான்.

"ஏய் நிலா என்ன ஒன்னுமே பேச மாட்ற.." சாரு நிலாவின் கண்கள் வெறித்துக்கொண்டிருந்த திசையில் திரும்பி பார்க்க..அதே நேரம் மேல்தளத்திலிருந்து.."ஹே நிலா ட்ரிப் போனப்போ என் ஹெட்செட் எடுத்துட்டு போனியே திரும்ப கொடுத்தியா.." என சதீஷ் குரல் கொடுக்க.. நிலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

"உட்காருங்க நிலா.." சக்தி மரியாதையாய் அவளுக்கு இடத்தை காட்ட பயத்திலே அமர்ந்து கொண்டாள். சாரு மெதுவாய் அவ்விடம் விட்டு நழுவபோக நிலா அவளை கைபற்றி இழுத்து அமர வைத்துக்கொண்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் சாரு நிலா சதீஷ் மூவரும் வரிசையாய் தலை குனிந்து அமர்ந்திருக்க சக்தி ஒன்றும் பேசாமல் முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

"பன்னி கொஞ்சம் கீழ எட்டி பார்த்துட்டு பேசிருக்கலாம்லடா.." நிலா தன் இடப்பக்கம் அமர்ந்திருந்த சதீஷிடமும்...

"உனக்கு கண்ணால கண்ணால காட்டினேன்ல அப்போவாது விளங்க வேணாமா.."வலது பக்கம் இருந்த சாருவிடம் முணுமுணுக்க..

"எனக்கு எப்படி தெரியும் நான் நினைச்சேன் உன் கண்ணுல தூசு விழுந்திருச்சி போலன்னு.." சாரு நியாயம் பேச..

"ஷட் அப்.." என கர்ஜித்தான் சக்தி..மூவரும் கப்சிப் என வாயை மூடிக்கொள்ள..ஆழமாய் பார்த்தவன்..சதீஷிடம் பார்வையை வைத்து.."ஸைன்ன காப்பி பன்னுற அளவுக்கு தைரியம் வந்திரிச்சி இல்ல சதீஷ்.."என அவன் உறுமவும் பதிலுக்கு ஏதாவது கூறு என கீழ் கண்ணால் நிலாவை பார்க்க அவளோ என்றும் போல் மூக்கை உறுஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

"சாரு உன்ன பத்தி பேசவே ஒன்னுமில்ல.. எங்க வீட்டுல இருக்கவங்களுக்கு அறிவு இருக்கனும் முதல்ல..டேமிட்.."

வேறு வழியில்லை என சிந்தித்த சாரு மெதுவாய் எழுந்து நின்று அனைவரையும் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு தன் காதிரண்டையும் பற்றி சட்டென தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க நிலாவும் சதீஷும் விழிக்க சக்திக்கோ கோபம் எல்லாம் மறந்து சிரப்பு எட்டிப்பார்க்க இருந்தும் அதை மறைத்துக்கொண்டவன்.."ஸ்டாப் திஸ் நான்சன்ஸ் சாரு.."என்றான் சற்றே சத்தமாய்..

"இல்ல சார் நீங்க மன்னிச்சிட்டேன் சொல்லுங்க.." என்றாள் கண்களை மூடிக்கொண்டு தன் வேலையில் கவனமாய்..

அதே நேரம் வாசற்பக்கமாய் "சக்தி சார்" என்ற குரல் கேட்க தன் ஆபிஸ் விஷயமாய் அவன் வரக்கூறியிருந்தவர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் பார்வை சாரு பக்கம் செல்ல அதனை கவனித்த சாரு இன்னும் வேக வேகமாய் தோப்புக்கரணம் போட்டாள்.

"சாரு ஸ்டாப் திஸ்.." சக்தி அடிக்குரலில் கூற..

"மன்னி..ச்சிட்டே..ன் சொ..ல்லுங்க எங்க..ள.." மூச்சிறைக்க இடையிடையே வந்தது வார்த்தைகள்..

"டேமிட்..சரி மன்னிச்சிட்டேன் நிறுத்து.." சக்தி கூறவும் பட்டென நேராய் நின்றவள்..

"சமத்து சக்தி.." என அவள் ஓட நடப்பதை ஆவென பார்த்திருந்த நிலாவும் சதீஷும் விட்டால் போதும் என அவளோடே சேர்ந்து கொண்டனர்.

நாட்கள் செல்ல செல்ல சாருவும் சாவித்ரிக்கும் சிவாவிற்கும் இன்னொரு மகளாகிப்போனாள். வேண்டா வேலை செய்து விட்டு சக்தி முன் திட்டு வாங்கி தலை குனியும் சங்கத்தில் சதீஷ், நிலா உடன் இப்போது சாருவும் சேர்ந்திருந்தாள். இடையிடையே தன் பெற்றோருடனும் பேசியவள் பல நேரங்களில் " அப்பா சார்கூட பேசுங்க.."என்று சக்தியை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாய்ப்போனது.

கம்பனியில் சக்தியினதும் சாருவினதும் சண்டைகளை பார்ப்பவர் கண்கள் பழக்கப்பட்டிருக்க..இடையில் வினோத் தான் திணறிப்போனான். எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது இவர்களது மோதல் காதலாகி விட்டால்??? ஆனால் வினோத்திற்கு சக்தி மேல் அதீத நம்பிக்கை தான் இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று எனவே தன் காதல் சொல்லிட ஓர் சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தான். ஆனால் அவனிற்கு அப்போது தெரியவில்லை தன் காதல் சொல்லா காதலாகவே போய்விடும் என்று.

இதற்கிடையில் இவள் வடிவமைத்திருந்த ஆடையைக்கண்டு டிசைங்னர் குழு ஏன் சக்தி கூட பிரம்மித்துதான் போனான். ஆடர் கொடுத்தவர்களும் மிகவும் திருப்தியுடனும் பாராட்டுக்களுடனும் பெற்றுக்கொண்டனர் தங்களது ஆடையை. அதே நேரம் சக்தியையும் ஆடை வடிவமைத்த சாருவையும் கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அந்த நாளும் இதோ நாளை என்று வர அன்றிரவு சக்தியை அழைத்தார் சிவா.

" நாளைக்கு எத்தனை மணிக்கு ப்ளைட் சக்தி?"

"காலைல ஏழு மணிக்கு அப்பா.. ஈவ்னிங் ரிசப்ஷன் தான் போறேன்."

"சாரு கிட்ட சொல்லிட்டயா.?"

"அப்பா அவ..ஹ்ம் ஓகேப்பா சொல்லிட்ரன்."

சிவாவிற்கு தெரியும் எப்படியும் சக்தி சாருவிடம் சொல்லியிருக்க மாட்டான் என்று இருவரும் சிறு பிள்ளை போல முட்டிக்கொண்டே இருக்க சக்தி சாருவை சிவா சொல்லாது அழைத்துச்செல்வான் என்றால் அது அதிசயம் தான்.

படியேறிச்சென்ற சக்தி சாரு அறைக்கதவைத்தட்டினான்.

"ஏஸ் காம்மீன்" உள்ளிருந்து குரல் கேட்க.. " இவள் எப்போதான் இப்பிடி english பேசி கொள்ளுறத விட போறாலோ." எண்ணியவாறே உள்ளே செல்ல அங்கு சாரு தன் குட்டி பொம்பைகள் அனைத்தையும் கட்டிலில் கடை பரப்பி வைத்து விட்டு கட்டிலில் அடியில் சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

"சாரு.." சக்தி அழைக்க.. கட்டிலின் அடியில் இருந்தவாறே.."ஆஹ் சொல்லுங்க கேட்குது..அய்யோ அம்மா" வெளியே வரும் வழியில் தலையையும் இடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

"என்ன தேடுற?" அவன் வினவியது தான் தாமதம்..அந்த பொம்மை ஒவ்வொன்றினதும் வரலாறையும் கூறி முடித்தவள்.." இப்போ சுந்தரிக்கு தெரியாம அவ வீட்டுல அவ அலமாரில இருந்து எடுத்த..என்ன பார்க்கிறீங்க அப்பிடி.. நான் ஒன்னும் திருடல்ல அவள் என்னோட ரோஸ் கலரு ரிப்பன் எடுத்தால்ல அதுக்கு பதிலா நான் எடுத்தேன். பச்ச கலரு சட்டை போட்டு ரெட்ட முடி பின்னின பொம்மைய காணோம்."
உதடு பிதுக்கி அவள் முடிக்க..அவனோ ஏன்டா கேட்டோம் என்று வருத்தப்படும் அளவு இருந்தான்.

"ஓகே கிடைச்சிடும். சாரு நாளைக்கு.." அவன் ஒரு அடி எடுத்து வைத்திருப்பான் இவனது shoeற்கு அடியில் எதுவோ மிதிபடவும் காலை தூக்கி பார்த்த சக்தி அடியில் இருந்த பொருளைக்கண்டவன் ஸ்லோ மோஷனில் சாருவைப்பார்த்தான்.

அவன் பார்வையைத்தொடர்ந்து கீழே பார்தத சாரு ஓடி வந்து அந்த பொம்மையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்களை விரித்து ஒரு விரல் நீட்டி சக்தியிடம் "எதுக்கு என் பொம்மைய கொன்னீங்க?" சத்தமாய் பேசுகிறேன் என்ற பெயரில் கீச் கீச் என சத்தமிட்டாள்.

"வாட் கொன்னுட்டேனா.. ஆர் யூ மேட்..அதுக்கு ஒன்னும் ஆகல்ல.. நான் கால வச்சதும் எடுத்துட்டன்.. நான் சொல்ல வந்தத கேளு.. எனக்கு டைம் ஆச்சு நான் தூங்கனும்..நாளக்கி.."

" மாட்டேன் மாட்டேன் நான் கேட்க மாட்டேன். என் பொம்மைய மிதிச்சி... பாருங்க அழுக்கு பட்டிறிச்சி.. இதுக்கு ஒரு பதில் வேணும்.."
கைகளால் காதை மூடிக்கொண்டு அவள் சத்தமிடவும் அந்த நேரம் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்க இவள் சத்தத்தில் பதட்டமடைந்த சக்தி அவள் வாயை கையால் அழுத்த மூடினான்.

"இங்க தான இருக்கேன் இடியட் எதுக்கு இப்படி ஏழு ஊர்க்கு கேக்குறதுக்கு சத்தம் போடுற.. இப்ப உன் பிரச்சனை தான் என்ன?" கண்கள் விரித்து பார்த்தவள் சரி என இருபக்கம் கண்களை சுருக்கி தலையை ஆட்ட..அவள் செய்கையில் சக்தி சில கணங்கள் செயலற்றுப்போனான்.

"ம்ம்ம்...ம்ம..ம்."

"என்ன ம்ம் ம் ன்னு ராகம் பாடுற ஒழுங்க பேசு.."
அவன் கூற அவனை முறைத்தவள் கண்களால் தன் வாயை மூடியிருக்கும் கையை காட்ட அப்போது தான் நினைவு வந்தவனாக ஓஹ் சாரி என்றவாறு கையை விலக்கினான்.

"இதோ பாருங்க என் பொம்மையில அழுக்கு பட்டிரிச்சி" அவள் காட்டிய இடத்தை கூர்ந்து பார்த்தவன் அங்கிருந்த ஒரு புள்ளி அளவு கொஞ்சமாய் இருந்த தூசியைக்கண்டு அவளை முறைத்து விட்டு "சரி கொடு dry clean பன்னிடலாம் " என்க சந்தோஷமாக தலையை ஆட்டியவள் அவனிடம் தந்து விட்டு " சக்தி.. சாரி சார் சார் அவள மட்டும் டிரையர் கிள்..கிள் சரி ஏதோ பன்னினா மத்த பொம்மை எல்லாம் கோவிச்சிக்கிமே"

கடைசியில் உன் பிளான் இது தானா..ஆனால் இப்போது சரி என்று சொல்லாவிட்டாள் சத்தமிட்டு வீட்டையே ஏன் ஊரேயே கூட எழுப்பி விடுவாள் என்பது சக்தி அறிந்தது என்பதால்"சரி பேக் பன்னி எடுத்து வை" சொல்லி விட்டு அவன் நகர அப்போதுதான் நினைவில் வந்தவளாக "சார் ஏதோ நாளைக்கு என்று ஆரம்பிச்சிங்களே..முழுசா சொல்லல.." அவள் எடுத்துக்கொடுக்க அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு..

"நாளைக்கு அந்த ட்ரெஸ் ஆடர் தந்தவங்க ரிசப்ஷன் போறம். பிளைட் ஏழு மணிக்கு. கரக்ட்டா டைம்ற்கு இருக்கனும்." சொல்லிவிட்டு அவன் சென்று விட..."பிளைட்னா கடல்ல போகுமே.. ச்ச அதல்ல ஆஹ் வானத்துல போறது.. ஹை அப்போ நாம வானத்துல பறக்க போறமா..சார் சார் இருங்க அந்த பீளைட்டு.." இவள் அவன் அறைக்கு செல்ல போக அவனது அடைத்த கதவுதான் வரவேற்றது அவளை.

அறைக்கு திரும்பிய சாரு நாளை வானத்தில் பறக்கப்போகும் கனவுகளோடே உறங்கிப்போனாள் தன் வாழ்வின் அடுத்த மாற்றம் அங்கு நிகழப்போவது அறியாது.

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ♥ 14 ♥

❤என் கோபங்களும் விடுப்பு
எடுத்துக் கொள்ளும் என
நம்பவில்லையடி..
ஆனால் நம்பவைத்து
விட்டாய் எனை..
உன் மாயங்களின்
விளிம்பில் நிறுத்தியே..❤

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தயாராகி சக்தியின் அறைக்கதவைத்தட்டிக்கொண்டிருந்தாள் சாரு.

"சக்தி சார் நேரம் ஆச்சு..நம்மள விட்டுட்டு போய்ட போறாங்க..சீக்கிரம் வாங்க..சக்தி சக்தி சார்..சக்தி..சக்திதிதி.."

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக அவள் விடாது தட்டிக்கொண்டிருக்க தூக்கக் கலக்கத்திலே வந்து பட்டென கதவை திறந்து விட்டு சென்று படுத்துக்கொண்டான் சக்தி.

ஒரு முறை போகலாமா வேணாமா என சிந்திதித்தவள் மெதுவாய் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள். அங்கு தயக்கத்துடன் நுழைந்தவளுக்கு படுத்து உறங்கி கொண்டிருந்த சக்தியை கண்டதும் பதட்டம் எல்லாம் ஓடி விட அவனருகில் வேகமாக சென்றாள் சாரு.

"சார் என்ன இது நாம போக வேணா.. இப்பிடி பொறுப்பே இல்லாம தூங்குறீங்க..அவனருகில் சென்று அவனை பிடித்து உலுக்கினாள்.

தூக்கத்திலேயே அவளை இழுத்து கட்டிலில் போட்டவன் "பேசாம தூங்கு போறதுக்கு டைம் இருக்கு" என்று தூக்கக்கலக்கத்திலே கூறிவிட்டு மறுபக்கம் திரும்பி தூங்க..அவன் கையை விலக்க முயன்றவாறே "சக்தி பாருங்க மணி நாலு பதினைந்து இப்ப எழுந்து தயாரானா தான்...ம்ம்ம்ம" அவள் பேசிக்கோண்டிருக்கும் போதே அவள் வாயை கையால் அழுந்த மூடி விட்டு அவன் தன் உறக்கத்தைத் தொடர்ந்தான்.

தன் கைகள் இரண்டாலும் விலக்க முயன்றவள் அது முடியாது போக நறுக்கென கடித்து வைத்தாள். அடுத்த கணமே முற்றாக தூக்கம் கலைய அலறியவாறே எழுந்து அமர்ந்தவன் கையை பார்க்க அதில் இருந்த பற்களின் தடத்தை கண்டவன்.."எலி கடிச்சா இப்படியா இருக்கும். ஆனால் இந்த ரூம் உள்ள எலி எப்படி.." அவன் யோசித்தவாறே திரும்ப அங்கிருந்த சாருவைக்கண்டவன்.." இடியட் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல..இப்பிடி என் ரூம்க்கு வந்து என் பெட் மேலயே உட்கார்ந்திருக்க.. இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறன் இரு. வீட்டுல எல்லாரும் ரொம்பவே தான் உன்ன நம்புறாங்க. அம்..." அவன் பேச பேச முழித்துக்கொண்டிருந்தவள் அம்மா என்று அவன் அழைக்கப்போகவும் பாய்ந்து வந்து அவனை பெட்டில் கீழே தள்ளி அவன் மேலேயே அமர்ந்து தலையணையால் வாயை மூடினாள். பின்னே பழிக்கு பழி என்று கையால் மூடி அவன் கடித்து வைத்து விட்டால் என்ற முன்னெச்சரிக்கையில் தான்.

அவன் அதிர்ந்து பார்க்க சுற்றிப்பார்த்தவள்..பின் அவனைப்பார்த்து " கதவ தட்டினது மட்டும் தான் நான். நீங்க தான் திறந்து விட்டீங்க..நீங்க தான் இப்பிடி கட்டில்ல கூட இழுத்து போட்டீங்க. ரொம்ப பேசினா நானும் மாட்டி விட்டுறுவன் அம்மாகிட்ட...ஹம்" முகத்தைத்திருப்பி விட்டு எழுந்து சென்றாள்.

அவள் சென்ற பின்னும் அதே நிலையில் இருந்த சக்தி சட்டென தலையை உலுக்கிக்கொண்டான்..இந்த ராட்சசியால வர வர நான் நானாகவே இல்ல.. என்னமா பேசுது.. கோபம் கூட மறந்து தான் போகுது. எண்ணியவாறே குளியலரைக்குள் நுழைந்து கொண்டான் சக்தி.

தயாராகி சக்தி கீழே வரவும் அனைவருடனும் வழவழத்துக்கொண்டிருந்த சாருவும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப தயாரானாள்.

"சாருமா நில்லு. இந்த ட்ரெஸ்தான் போட்டுட்டு போக போறியா இல்ல இடையில மாத்துவியா?" சாவித்ரி வினவவும்.."இல்லம்மா இதுதான்" பதிலளித்தாள் சாரு.

"கொஞ்சம் வா மேல.. சக்தி உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன். நிலா கொஞ்சம் எடுத்து கொடு.." சாருவை அழைத்துக்கொண்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து சக்தி அருகில் அமர்ந்திருந்த நிலா ஆ என வாய்பிளந்து மாடியைப்பார்க்க அவளிடம் ஏதோ பேச திரும்பிய சக்தியும் குழம்பியவாறு அவள் பார்வை சென்ற திசையை நோக்கினான்.

மயில்வண்ண சாரியில் மயிலின் தோகை போல் கூந்தல் விரிந்திருக்க அதில் அழகாய் மல்லிகை குடி கொண்டிருக்க காதில் நீட்டமாய் அதே மயில் வண்ணத்தில் மினுங்கிய காதணிகள்..வெற்றுக்கழுத்தை அலங்கரித்திட சிறியதாய் கழுத்தோடு ஒட்டிய ஓர் நெக்லஸ்.. சாவித்ரியிடம் ஏதோ பேசிக்கொண்டு தலையாட்ட அவள் கன்னம் உரசிப்போனது அந்த காதணிகள்.. அதனாலோ அதில் இளம்சிவப்பு ரோஜா நிறம். கருவிழிகளில் கொஞ்சமாய் மை தீட்டியிருக்க அதுவே போதுமாய் இருந்தது சக்தி மையல் கொண்டிட..

"சக்தி சக்தி.."
சாவித்ரி பிடித்து உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தவன்..பார்வையை திருப்பினான்.

"என்னாச்சிடா? சாப்டியா கேட்டேனே.."

மீண்டும் திரும்பி சாருவிடம் பார்வையை பதித்தவாறே தலையாட்டினான்.

"சார் வாங்க போகலாம். நேரமாச்சி.."என்று சாரு முன்னே நடக்க..சக்தியும் பின்னாடியே நடந்தான். இவனுக்கு என்ன ஆகிட்டுது என சாவித்ரி புரியாது பார்க்க..சாரு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பவும் தான் சக்திக்கு நிதர்சனம் உரைக்க கஷ்டப்பட்டு தன்னையே கடிந்து கொண்டு நடப்பிற்கு வந்தான்.

இருவரும் விமான நிலையத்தினுள் உள்நுழைந்து விமானத்தை அடையும் வரை சாரு தான் சக்தியை படுத்தி எடுத்து விட்டாள்.. உட்காரும் இடம் நிற்கும் இடம் என எல்லா இடத்தையும் சார் இதுதான் விமானமா என ஆயிரம் முறையாவது கேட்டிருப்பாள்.

விமானத்தில் இருவரும் தங்களது சீட்டை தேடி உட்கார்ந்ததும் வழமையான தன் கேள்வியை சாரு கேட்க..இல்லை என கூறப்போகிறான் என இருந்தவளுக்கு அவன் ஆம் என தலையாட்டவும் ஒரே சந்தோஷம் தான். மூவர் அமரும் சீட்டில் ஜன்னலோரமாய் சாருவும் அவளருகில் நடு சீட்டில் சக்தியும் அமர்ந்திருந்தான்.

விமானம் புறப்பட தயாராக முதலில் திரும்பி திரும்பி அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தவள் விமானம் மேலே ஏற வேகம் எடுக்கவும் முகம் வெளிற சக்தியைப்பார்த்தாள். அவனோ ஹெட்போனை மாட்டிக்கொண்டு கண்மூடி பின்னால் சாய்ந்திருந்தான். விமானம் மேலே ஏற அந்த அதிர்விலும் சத்தத்திலும் சக்தியின் கையை இறுக்கப்பற்றிக்கொண்டாள் சாரு. சட்டென கண்விழித்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் கை பற்றியிருந்த அவள் கையைப்பார்க்க அவள் மெதுவாக விலக்கிக்கொண்டாள் தன் கையை. பின் என்ன நினைத்தானோ அவனே அவள் கையை எடுத்து ஒரு கையால் பற்றிக்கொண்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். திட்ட போகிறான் என எதிர்பார்த்த சாருவிற்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் விமானம் அசைவு எதுவும் இன்றி சீராக மெதுவாக தன் கையை இழுத்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரம் போக கண்மூடியிருந்த சக்தி மீது யாரோ மோதுவது போல் தோன்ற எரிச்சலடைந்தவன் கண்விழிக்க அங்கு சாருதான் இவனை இடித்துக்கொண்டு ஜன்னல் பக்கமாய் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

"சாரு என்ன பன்னுற? ஒழுங்கா திரும்பி உட்காரு இடியட்."
சுற்றி யாருக்கும் கேட்காத குரலில் மெதுவாய் அவன் கூற..திரும்பிப்பார்த்த சாரு..
"அதெல்லாம் முடியாது எனக்கு இந்த ஜன்னல திறக்க முடியல்ல திறந்து கொடுங்க.முடியாதுன்னா சத்தம் போடாம இருங்க நானே திறந்துக்குறன்"
அவள் கூறி விட்டு மீண்டும் தன் முயற்சியை தொடர்ந்தாள்.

கோபத்தை கைகளை இறுக்க மூடி அடக்கியவன். " சாரு ஆர் யூ மேட்..பேசாம இந்த பக்கம் வான்னு சொல்லுறேன்ல."

அவன் கோபத்தில் பேச முகத்தை சுருக்கி அவனைப்பார்த்தவள்..சரி என்று உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தன் முயற்சியை விட்டு விட்டு சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
நிம்மதியடைந்த சக்தி ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கவும்..இரண்டு நிமிடம் கூட சென்றிருக்காது மீண்டும் அவள் எழுவது தெரிந்தது. புத்தகத்தை மூடி வைத்தவன் அவள் கைபற்றி இழுத்து சீட்டில் போட்டு.."இப்ப என்ன ப்ளைட் கதவ திறக்க போறியா?" நக்கலாய் அவன் வினவ.."ஹை எப்பிடி சார் சரியா சொல்லிட்டீங்க..ஆமா அங்க படியில இருந்து எட்டி பார்த்தா ரொம்ப அழகா இருக்குமாமே அதான்..வாங்க இரண்டு பேரும் போகலாம்." அவள் பதிலில் சக்திக்கு எந்த உணர்வை வெளிப்படுத்துவது என்று கூட தெரியவில்லை..

"என்ன சார் போகலாமா?" அவள் கேட்க அவளருகில் வந்தவன்..தன் வாட்ச்சை பார்த்து விட்டு.." see இன்னும் இருபது நிமிடம் இருக்கு..ஒரு வார்த்தை பேசக்கூடாது..இருந்த இடத்த விட்டு அசைய கூடாது. If not உனக்கு இந்த மாத சம்பளம் கிடையாது." அவன் எச்சரிக்க..வாயை குவித்து கண்களை விரித்து அவன் கூறியதை ஜீரணித்தவள். அதன் பலனாய் கைகளால் வாயை மூடிக்கொண்டு நேராக அமர்ந்து கொண்டாள்.

ஒருவாரு அடுத்த இருபது நிமிடங்கள் தொல்லையின்றி கழிய..விமானத்தில் இருந்து இறங்கிய இருவரும் வெளியே வந்து டாக்ஸி ஒன்றை பிடித்து
ஏற்கனவே சக்தி அடுத்தடுத்து இருவருக்கும் புக் செய்திருந்த ஹோட்டல் அறைக்கு சென்று பகலுணவையும் முடித்துக்கொண்டு கிளம்பினர். அங்கும் சாருவை சமாளிப்பது தான் சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. எடுத்ததற்கெல்லாம் மூட்டை கணக்கில் கேள்வி தான் வைத்திருந்தாள்.

இருவரும் வண்ண விளக்குகளில் மிதந்து கொண்டிருந்த அந்த பெரிய வீட்டின் முன் வந்திறங்கி உள்ளே நுழைந்தனர். சாருதான் பிளந்த வாய் மூடாது வழமை போல் எங்கும் பார்த்துக்கொண்டு வர..அவள் பாவனையை பார்த்த சக்தி அவள் காதருகில் குனிந்து" எலி போகுற அளவு இப்பிடி வாய திறக்காத எல்லாரும் பார்க்குறாங்க." கூறவும் சட்டென மூடிக்கொண்டாள்.

இருவரும் நேராக சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்த வட்ட மேசையில் போடப்பட்டிருந்த இரு கதிரைகளிலும் சென்று அமர்ந்து கொள்ள..திடீரென ஒலித்த பலத்த கைதட்டல் ஒலியிலும்..முழுவதும் இருட்டாகி விட்டு இவர்கள் மேல் மட்டும் விழுந்த சிறிய வட்ட வெளிச்சத்திலும் சாரு திகைத்து சக்தியை நோக்க அவனோ எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாது அழுத்தமாய் அமர்ந்திருந்தான்.

"Congratz Mr & Mrs. Shakthi.." தனியாக ஓர் பெண் குரலோடு கைதட்டல் ஓசையும் ஒலிக்க இருவரும் அத்திசையில் பார்க்க முன்னால் வந்து நின்றவளைப்பார்த்து
" தீக்ஷா.." முணுமுணுத்தன சக்தியின் உதடுகள்.

கருத்துக்களை பகிர
 
Last edited:
Status
Not open for further replies.
Top