Hi friends,
காதலர் தினத்துக்கு புது கதை டீசர் இது..
இது அழுத்தமான கதை இல்லை.. முதல் முறையாக காமெடி டிரை பண்ணி இருக்கேன்.படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்க ஆதரவை பொறுத்து இந்த கதை எழுதலாமான்னு யோசிக்கிறேன்.
மார்ச் 1முதல் இந்த கதை வரும்.
கதைக்கு இன்னும் பெயர் வைக்கலே..
முன்னோட்டம்
" பாட்டி ஏன் தான் என்ன இப்படி உயிரே வாங்குறீயோ..? உனக்கு புதுசா ஆன்ராய்டு போன் வாங்கி கொடுத்ததும் போதும் அதுலே ஃபேஸ் புக் ஓப்பன் செய்து கொடுத்ததும் போதும்.. நீ என்ன படுத்தி எடுக்கிறே..?"
"ஏண்டி இப்படி சலிச்சுக்கிறே.. தெரியலைன்னு தானே கேட்டேன்..?"
"ஆமாம் ..இப்ப மெசன்ஜர்லே யாருக்கு போட்டோ அனுப்பனும்.. காலம் கெட்டு கிடக்கு பாட்டி. எதுக்கு பாட்டி போட்டோ வெல்லலாம் அனுப்புறே..வெறும் சாட் பண்றதோட நிறுத்திக்கோ.."
"ம் அது எல்லாம் எனக்கு தெரியும். நீ நான் கேட்டதை மட்டும் சொல்லி கொடு..!"
"முதல்லே யாருக்குன்னு சொல்லு..!"
"ம் ! என் பாய் ஃப்ரெண்டுக்கு .." என்று ஸ்டைலாக தலையை திருப்பினார் அழகம்மாள் பாட்டி..
பாட்டி சொன்னதைக் கேட்ட பேத்தி ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு பாட்டியைப் பார்த்தாள்.
பேத்தியின் திகைத்த முகத்தைக் கண்டு "எதுக்குடி இப்படி வாய்லே ஈ போறது கூட தெரியாம என்னே பார்க்கிறே..?"
'ம் இந்த வயசுலே உனக்கு இதெல்லாம் தேவையா..?"
"எனக்கு என்னடி பெருசா வயசு ஆகிடுச்சு.. ஜெஸ்ட் 60 ப்ளஸ். இதெல்லாம் ஒரு வயசா..?" என்று அசால்ட்டாக கேட்ட அழகம்மாவை கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தாள் பேத்தி.."
**********************************
"ஏங்க உங்கம்மா செய்யறது வரவர எனக்கு சுத்தமா பிடிக்கலே..?"
" ஏண்டி எங்க அம்மாவே குறை சொல்லாம உனக்கு நாளே விடியதா?அப்படி என்ன பண்றாங்க..?"
"ம்! பாட்டியும் ,பேத்தியும் என்ன தான் பேசிப்பாங்களோ தெரியலே..? எப்ப பாரு குசு
குசுன்னு பேசறது..நான் போனா பேச்சை நிறுத்திக்கிறாங்க.."
"இது தான் உன் பிரச்சினையா..? ஏண்டி பாட்டியும் ,பேத்தியும் தானே பேசிக்கிறாங்க.. என்னவோ லவ்ர்ஸ் பேசிக்கிற மாதிரி புலம்புறே..?"
"ம்! அது மட்டுமா?எப்ப பார்த்தாலும் உங்கம்மா போனை பார்த்ததுட்டே இருக்காங்க..அதிலும் வாய்ஸ் மெசேஜ் வேறே அனுப்பிட்டு..அக்கப்போர் தாங்கலே..?"
"அவங்க போன் பார்த்தா உனக்கு என்ன..? உங்கிட்டயும் போன் இருக்கே ! நீயும் பாரு ! யார் வேண்டாம்ன்னாங்க..?' என்றபடி தன் சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டினார்.
*************************************
"போதும் பாட்டி என்னாலே முடியலே.. காலையில் எத்தனை போட்டோ எடுத்துட்டேன்..
எனக்கு டையேடாகிடுச்சு.."என்று சலித்துக் கொண்ட பேத்தியிடம்..
"என் தங்கமல்ல இன்னும் இரண்டே இரண்டு மட்டும் ஏடு ..!" என்றார் அழகம்மாள் .
"விளையாடுறீயா பாட்டி ? நேரம் ஆகுது அம்மா பேசுவாங்க .."
"உங்க ஆத்தகாரி எப்பத் தான் பேசாம இருந்துருக்கா..? அவ பேசுனா நான் பார்த்துக்கிறேன். நீ எது.. !இந்த ஸ்டைல் நல்லா இருக்கா ? என்று மரத்தை பிடித்துக் கொண்டு ஏட்டி பார்ப்பதைப் போல் போஸ் கொடுத்தார் அழகம்மா..
பேத்தியோ 'பாட்டீ .."என்று பல்லை கடித்தபடி 'இத்தனை போட்டோ எடுத்து வச்சுட்டு நீ என்ன செய்யப் போறே..?என்று கோவமாக கேட்டவளிடம்..
"ம் ! என் பேஸ் புக் ப்ரொபைல்லே தினமும் ஒரு போட்டோ வச்சு லைக்கே அள்ளப் போறேன் .." என்று அசலாக சொன்னார்.
பேத்தியோ கொலைவெறியுடன் தன் பாட்டியை பார்த்தபடி நின்றாள்.
இவர்களின் சம்பாஷனைகளை ரசித்தபடி மரத்தின் அருகில் இருந்த சிமெண்டட் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பாட்டியுடன் பேத்தியையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
**********************************"
"இங்க பாரு பேராண்டி அவளே எப்படி' சம்மதிக்க வைக்கிறதுன்னு சொல்லி கொடுக்கிறேன்.அதுக்குப் பதில நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் பண்ணு.." என்றவரை கேள்வியாக பார்த்துவனிடம்..
"இன்ஸ்ட்டாகிராம்ன்னு ஏதோ இருக்காம் ..அதை மட்டும் எனக்கு ஓப்பன் பண்ணிக் கொடு.." என்றவரை பார்த்தவனுக்கு வாய் கொல்லாத சிரிப்பு வந்தது.
காதலர் தினத்துக்கு புது கதை டீசர் இது..
இது அழுத்தமான கதை இல்லை.. முதல் முறையாக காமெடி டிரை பண்ணி இருக்கேன்.படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்க ஆதரவை பொறுத்து இந்த கதை எழுதலாமான்னு யோசிக்கிறேன்.
மார்ச் 1முதல் இந்த கதை வரும்.
கதைக்கு இன்னும் பெயர் வைக்கலே..
முன்னோட்டம்
" பாட்டி ஏன் தான் என்ன இப்படி உயிரே வாங்குறீயோ..? உனக்கு புதுசா ஆன்ராய்டு போன் வாங்கி கொடுத்ததும் போதும் அதுலே ஃபேஸ் புக் ஓப்பன் செய்து கொடுத்ததும் போதும்.. நீ என்ன படுத்தி எடுக்கிறே..?"
"ஏண்டி இப்படி சலிச்சுக்கிறே.. தெரியலைன்னு தானே கேட்டேன்..?"
"ஆமாம் ..இப்ப மெசன்ஜர்லே யாருக்கு போட்டோ அனுப்பனும்.. காலம் கெட்டு கிடக்கு பாட்டி. எதுக்கு பாட்டி போட்டோ வெல்லலாம் அனுப்புறே..வெறும் சாட் பண்றதோட நிறுத்திக்கோ.."
"ம் அது எல்லாம் எனக்கு தெரியும். நீ நான் கேட்டதை மட்டும் சொல்லி கொடு..!"
"முதல்லே யாருக்குன்னு சொல்லு..!"
"ம் ! என் பாய் ஃப்ரெண்டுக்கு .." என்று ஸ்டைலாக தலையை திருப்பினார் அழகம்மாள் பாட்டி..
பாட்டி சொன்னதைக் கேட்ட பேத்தி ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு பாட்டியைப் பார்த்தாள்.
பேத்தியின் திகைத்த முகத்தைக் கண்டு "எதுக்குடி இப்படி வாய்லே ஈ போறது கூட தெரியாம என்னே பார்க்கிறே..?"
'ம் இந்த வயசுலே உனக்கு இதெல்லாம் தேவையா..?"
"எனக்கு என்னடி பெருசா வயசு ஆகிடுச்சு.. ஜெஸ்ட் 60 ப்ளஸ். இதெல்லாம் ஒரு வயசா..?" என்று அசால்ட்டாக கேட்ட அழகம்மாவை கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தாள் பேத்தி.."
**********************************
"ஏங்க உங்கம்மா செய்யறது வரவர எனக்கு சுத்தமா பிடிக்கலே..?"
" ஏண்டி எங்க அம்மாவே குறை சொல்லாம உனக்கு நாளே விடியதா?அப்படி என்ன பண்றாங்க..?"
"ம்! பாட்டியும் ,பேத்தியும் என்ன தான் பேசிப்பாங்களோ தெரியலே..? எப்ப பாரு குசு
குசுன்னு பேசறது..நான் போனா பேச்சை நிறுத்திக்கிறாங்க.."
"இது தான் உன் பிரச்சினையா..? ஏண்டி பாட்டியும் ,பேத்தியும் தானே பேசிக்கிறாங்க.. என்னவோ லவ்ர்ஸ் பேசிக்கிற மாதிரி புலம்புறே..?"
"ம்! அது மட்டுமா?எப்ப பார்த்தாலும் உங்கம்மா போனை பார்த்ததுட்டே இருக்காங்க..அதிலும் வாய்ஸ் மெசேஜ் வேறே அனுப்பிட்டு..அக்கப்போர் தாங்கலே..?"
"அவங்க போன் பார்த்தா உனக்கு என்ன..? உங்கிட்டயும் போன் இருக்கே ! நீயும் பாரு ! யார் வேண்டாம்ன்னாங்க..?' என்றபடி தன் சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டினார்.
*************************************
"போதும் பாட்டி என்னாலே முடியலே.. காலையில் எத்தனை போட்டோ எடுத்துட்டேன்..
எனக்கு டையேடாகிடுச்சு.."என்று சலித்துக் கொண்ட பேத்தியிடம்..
"என் தங்கமல்ல இன்னும் இரண்டே இரண்டு மட்டும் ஏடு ..!" என்றார் அழகம்மாள் .
"விளையாடுறீயா பாட்டி ? நேரம் ஆகுது அம்மா பேசுவாங்க .."
"உங்க ஆத்தகாரி எப்பத் தான் பேசாம இருந்துருக்கா..? அவ பேசுனா நான் பார்த்துக்கிறேன். நீ எது.. !இந்த ஸ்டைல் நல்லா இருக்கா ? என்று மரத்தை பிடித்துக் கொண்டு ஏட்டி பார்ப்பதைப் போல் போஸ் கொடுத்தார் அழகம்மா..
பேத்தியோ 'பாட்டீ .."என்று பல்லை கடித்தபடி 'இத்தனை போட்டோ எடுத்து வச்சுட்டு நீ என்ன செய்யப் போறே..?என்று கோவமாக கேட்டவளிடம்..
"ம் ! என் பேஸ் புக் ப்ரொபைல்லே தினமும் ஒரு போட்டோ வச்சு லைக்கே அள்ளப் போறேன் .." என்று அசலாக சொன்னார்.
பேத்தியோ கொலைவெறியுடன் தன் பாட்டியை பார்த்தபடி நின்றாள்.
இவர்களின் சம்பாஷனைகளை ரசித்தபடி மரத்தின் அருகில் இருந்த சிமெண்டட் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பாட்டியுடன் பேத்தியையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
**********************************"
"இங்க பாரு பேராண்டி அவளே எப்படி' சம்மதிக்க வைக்கிறதுன்னு சொல்லி கொடுக்கிறேன்.அதுக்குப் பதில நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் பண்ணு.." என்றவரை கேள்வியாக பார்த்துவனிடம்..
"இன்ஸ்ட்டாகிராம்ன்னு ஏதோ இருக்காம் ..அதை மட்டும் எனக்கு ஓப்பன் பண்ணிக் கொடு.." என்றவரை பார்த்தவனுக்கு வாய் கொல்லாத சிரிப்பு வந்தது.