Pramila parasu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9. அழகிய காதல் தீயே
அனைவரும் முதலில் மரகத ஏரிக்கு சென்றனர்.இந்த ஏரி தமிழ் நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.ஏரியின் நடுவில் ஓர் நீரூற்றும் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரிகள் செய்யப்படும். இங்கே இவர்கள் அனைவரும் ஏரியின் அழகை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.அங்காங்கே அமர்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.எனவே அங்கே சென்றவர்கள் இருக்கையில் அமர்ந்து அங்கு ஏற்கனவே படகு சவாரி நடந்து கொண்டிருக்க அதையும் ஏரியை சுற்றியுள்ள இயற்கை எழிலையும் இரசித்தவாறு பேசிக் கொண்டு இருந்தனர்.
அனைவரும் போட்டிங் செல்லலாம் எனவும் விக்கியும், ராகவ்வும் சென்று அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.சிறிது நேரத்தில் இவர்களுக்கான சவாரி நேரம் வரவும் குமார், மாலா, இவர்களோடு சேர்ந்து சிவா ஒன்றிலும் , விக்கி-சாலினி ஒன்றிலும், ராகவ்- கீர்த்தி ஒன்றிலும் , விஜய்- மேகா ஒன்றிலும் என தனித்தனியாக நான்கு படகுகளில் ஏறி அமர்ந்து தங்களது படகு சவாரியை தொடர்ந்தனர்.
இங்கு விக்கி சாலினி சற்று பயத்துடன் இருக்க அவளிடம் என்ன ஆச்சுடா எதுக்காக ஒரு மாதிரி இருக்க என்று கேட்டான்.அவள் அவனிடம் , அது ஒன்னும் இல்லைங்க பஸ்ட் டைம் இப்படி போறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.
அவள் கூறியதும் அவள் கையை பற்றியவன் அவளிடம், நீ ஒன்னும் பயப்படாத நான் தான் உங்கூடவே இருக்கேன்ல அப்புறம் என்ன வேணும்னா நாம கொஞ்சம் சுலோவா போலாம் என அவள் கையை தன் கைக்குள் வைத்தபடியே இருவரும் பேசிக்கொண்டே சவாரி செய்தனர்.
அனைவரும் தங்களது படகு சவாரியை முடித்து வரவும் அனைவரும் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தனர்.பின் அங்கிருந்த பூங்காவிற்கு சென்றனர்.
பூங்காவிற்கு வந்ததும் பெரியவர்கள் இருவரும் அமர்ந்து விட சிறியவர் அனைவரும் பூங்காவை சுற்றி வலம் வந்தனர்.விக்கி சாலினியை அழைத்து கொண்டு தனியாக செல்ல இங்கு கீர்த்தி மேகாவிடம் பேசியவள் அவளது படிப்பை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.அப்போது மேகா அவளிடம் அவர்களது திருமணத்தை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.
கீர்த்தியும் அவளிடம் தனக்கும் ராகவ்விற்கும் இருந்த காதலையும் அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்ல ஆரம்பிக்க ராகவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
கீர்த்தி, ராகவ் இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயதில் இருந்தே இருவரது குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வர இவர்களும் தங்களது நட்பை தொடர்ந்தனர்.இவ்வாறு இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்க கீர்த்தியை முதல் முதலில் சேலையில் கண்டவன் அவளது அழகில் தன் மனதை அவளிடம் தொலைத்திருந்தான். இவன் அவளை ஒன்சைடாக விரும்பி கொண்டிருக்க அவளோ இவனிடம் நண்பன் என்ற முறையிலே இவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
ராகவ் தன் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.அதே சமயம் கீர்த்தியின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய அதை அறிந்த ராகவ் தன்னால் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என வேதனையில் இருந்தான்.கீர்த்தியின் வீட்டில் திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்க அனைவரும் தங்களது வேலையை செய்து கொண்டு இருக்க கீர்த்தியின் அண்ணன் பிரபு ராகவ் வீட்டிற்கு வந்து அவனை அழைத்து வந்தவன் அவனிடமும் திருமண வேலைகளை பார்க்குமாறு கூறினான்.ராகவ் , பிரபு இருவரும் ஒன்றாக படித்ததால் தன் நண்பன் என்ற முறையில் அவனிடம் உரிமையாக அவனிடம் வேலைகளை பார்க்குமாறு கூறினான் பிரபு.
திருமண நாள் அன்று அவளுக்கு பார்த்திருந்த மாப்பிளை அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்னை விரும்புவதாகவும் கூறி லெட்டர் எழுதி வைத்து விட்டு சென்றிருந்தான்.இதை கண்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
திருமணத்திற்கு வந்த அனைவரும் ஏதேதோ பேசி இவர்களை மேலும் நோகடிக்க இதை கண்ட ராகவ் தன் பெற்றோரிடம் சென்று அவன் கீர்த்தியை விரும்புவதாக கூறி தானே அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறவும் , அவனின் பெற்றோரும் அவனை புரிந்து கொண்டு தன் மகனுக்காக கீர்த்தியின் பெற்றோரிடம் சென்று தன் மகனுக்கு அவளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கவும் அவர்களும் யோசித்து இறுதியில் ராகுவிற்கு கீர்த்தியை திருமணம் செய்து வைத்தனர்.
ராகவ்வும் கீர்த்தியிடம் தான் அவளை விரும்பியதை கூறிவிட்டான்.இதை கேட்டவள் அவன் தன்னை காதலித்ததை நினைத்து மகிழ்ந்தாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதை கூறி முடித்து ராகவ்வை பார்க்க அவன் இவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.இவர்களது பார்வையை கண்ட மற்றவர்கள் இருவருக்கும் தனிமையை அளித்து விலகி சென்றனர்.
சிவா, விஜய், மேகா மூவரும் பேசிக் கொண்டு இருக்க சிவாவிற்கு போன் வரவும் அவன் போனை எடுத்து கொண்டு இருவரிடமும் சொல்லி விட்டு போன் பேச சென்று விடவும் இவர்கள் இருவரும் அப்படியே பூங்காவில் சிறிது நேரம் நடக்கலாம் என கூறி நடந்து கொண்டிருக்கும் போது விஜய் அவளை பார்த்து கொண்டு அமைதியாக நடந்து வந்தான்.
அவன் அமைதியாக இருக்கவும் மேகா அங்கிருந்த இருக்கையில் சென்று அமர அவனும் சென்று அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.அவனிடம், என்ன ஆச்சு மாமா எதுக்காக திடீர்னு அமைதியாகிட்டிங்க அப்படி எதப்பத்தி யோசிக்கிறிங்க என கேட்டாள்.
அவள் தன்னிடம் கேட்டதும் அவளிடம் முதலில் ஒன்னுமில்ல சும்மா என்றதும் அவனை நம்பாமல் பார்த்து ஓஓ என்று மட்டும் கூறினாள்.அவள் அவ்வாறு கூறவும் விஜய் அவளிடம் சரி நாம போலாமா எல்லாரும் வந்து இருப்பாங்க எனவும் அவனுக்கு தன்னிடம் எதுவும் கூற விரும்பவில்லை போல என்று நினைத்துக்கொண்டு அவளும் சரி போலாம் என்றான்.
பின் அனைவரும் மாலா- குமார் இருந்த இடத்திற்கு வந்தனர்.மதிய உணவை அங்குள்ள ஹோட்டலில் முடித்தவர்கள் மாலை வரை அங்கிருந்தகுளுமையை அனுபவித்தவாறு பேசிக்கொண்டும் இருந்தவர்கள் அருகில் இருந்த சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்றனர்.சிறியவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகளாக மாறி அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு மரம் அனைத்திலும் மாறி மாறி விளையாடினார்கள்.
மாலை ஐந்து மணிக்கு மேல் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி சென்றனர்.அங்கு சென்றதும் விக்கி சாலினியை அழைத்து கொண்டு ஹோட்டல் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றான்.அங்கு சென்றவன் அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி தந்தான்.அவளும் தன் கணவன் வாங்கி தந்த அனைத்தையும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டாள்.
மாலை மயங்கி இரவு சூழும் நேரம் விக்கி அனைவரையும் ரெடியாகி வருமாறு கூறினான். அனைவரும் ரெடியாகி வரவும் அனைவரையும் அழைத்து கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடிசீட் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு சென்றவர்கள் நுழைவு சீட்டுகள் வாங்கி கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.அங்கு அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
லேடிசீட் இந்த இடம் ஏற்காட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கே தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம்.அதுவும் இரவு நேரங்களில் மலையில் இருந்து பார்த்தால் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.வானிலை சரியாக இருந்தால் இங்கிருந்து மேட்டூர் அணையை கூட பார்க்க முடியும்.
இங்கு இவர்கள் அனைவரும் தொலைநோக்கி மூலம் பார்த்தவர்கள் இரவு நேரத்தில் ஒளி வெளிச்சத்தில் அவ்விடம் ஜொலிப்பதை கண்டு அதனை கண்டு மகிழ்ந்தனர். அவ்விடம் முழுவதும் அவ்வளவு அழகாக காட்சி அளித்தது.பின் அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.
மறுநாள் காலை அருவிக்கு சொல்வதால் தேவையான உடைகளை எடுத்து வைத்து கொள்ளுமாறு கூறவும் அவர்களும் அதனை எடுத்து கொண்டு கீழே வந்தனர்.பின் அனைவரும் கிள்ளியூர் அருவிக்கு சென்றனர்.
கிள்ளியூர் அருவி : இந்த இடம் ஏற்காட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மழை காலங்களில் இங்கு தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும்.அப்போது அங்கு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும்.
அருவிக்கு வந்தவர்கள் ஆர்ப்பரித்த கொட்டும் அருவியை பார்த்து மகிழ்ந்தனர்.அவ்வருவியை பார்த்ததும் அனைவருக்கும் உடனே அதில் சென்று ஆட்டம் போட தோன்றியது.
அங்கிருந்து கிளம்பி பக்கோட பாயிண்ட் என்னும் இடத்திற்கு சென்றனர்.அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அப்படியே சேர்வராயன் மலை கோவில் சென்றனர்.
மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.ஒரு மெல்லிய குகையில் உள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் , சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டது.
அங்கு சென்றவர்கள் கடவுளை வணங்கி விட்டு அங்கிருந்து தெரியும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர்.
இவ்வாறு அங்கிருந்த ஒரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.பின் அனைவரும் ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வரும் போது கீர்த்தி தலை சுற்றி மயக்கம் அடைந்தாள்.அவள் மயக்கம் அடையவும் பதறிய ராகவ் என்ன செய்வது என தெரியாமல் நிற்க மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனதென்று பார்க்குமாறு கூறினார்.அவனும் கீர்த்தியின் நாடியை பிடித்து பார்த்தவன் பின் கீர்த்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளது மயக்கத்தை தெளிய வைத்தான்.
அவள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்ததும் தான் மற்றவர்கள் சிறிதளவு நிம்மதி அடைந்தனர்.மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க அவனோ ராகவ் அருகில் சென்று அவனது கையை பற்றி அவனுக்கு வாழ்த்து கூறினான்.மாலாவிற்கு புரிந்து விட அவர் கீர்த்தியின் அருகில் சென்று அவளிடம் கேட்டு தனது சந்தேகத்தை உறுதி செய்தவர் ராகவ்வை பார்க்க அவன் என்னவென புரியாமல் நிற்க மாலா அவனிடமும் மற்றவர்களிடமும் கீர்த்தி கர்ப்பமாக உள்ளதை கூறினார்.
அவர் கூறியதை கேட்ட ராகவ் தன் மனைவியை அனைத்து கொண்டான்.பின் மற்றவர்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதே மகிழ்ச்சியுடன் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.சாலினி இறுதி ஆண்டும், மேகா இரண்டாம் ஆண்டில் இருந்தனர்.விக்கியும் , சாலினியும் தங்களது வாழ்வை சந்தோசமாகவும்,காதலுடனும் கழித்தனர்.
அன்று காலை எழுந்ததில் இருந்து சாலினி வருத்தமாகவே இருந்தாள்.அனைவரும் காலை ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மாலா சாலினியிடம் ,என்ன ஆச்சுமா எதுக்காக டல்லா இருக்க உடம்பு எதுவும் சரியில்லையா என கேட்டார்.
அவர் கேட்டவுடன் சாலினி அவரிடம் , அது உடம்பு நல்லாதான் இருக்கும்மா என்றாள்.குமார் அவளிடம் அப்புறம் எதுக்காக எப்படியோ இருக்க சாலினிமா என்றார்.உடனே சாலினி இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் அப்பா எனக்கு அம்மா ஞாபகமாக இருக்கு என்றாள்.
விக்கியின் வீட்டில் உள்ள யாரும் இதுவரை சாலினியின் பெற்றோர்களை பற்றி கேட்டதில்லை .அவர்களுக்கு இருவரின் பெற்றோரும் தற்போது உயிரோடு இல்லை என்பது மட்டுமே தெரியும் மற்றபடி அவர்களது பெற்றோர் காதல் திருமணம் செய்ததால் அவர்களுக்கு சுற்றம் என யாரும் இல்லை என்பது மட்டுமே தெரியும்.
ஆனால் இன்று சாலினி தன் அன்னையின் நினைவு நாள் என கூறவும் ஏனோ குமாரின் மனது துடித்தது. அவரோ எதை பற்றியோ நினைத்து கொண்டிருந்தார்.
காதல் தீ வளரும்....
(Tq for your supporting frds)
அனைவரும் முதலில் மரகத ஏரிக்கு சென்றனர்.இந்த ஏரி தமிழ் நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.ஏரியின் நடுவில் ஓர் நீரூற்றும் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரிகள் செய்யப்படும். இங்கே இவர்கள் அனைவரும் ஏரியின் அழகை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.அங்காங்கே அமர்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.எனவே அங்கே சென்றவர்கள் இருக்கையில் அமர்ந்து அங்கு ஏற்கனவே படகு சவாரி நடந்து கொண்டிருக்க அதையும் ஏரியை சுற்றியுள்ள இயற்கை எழிலையும் இரசித்தவாறு பேசிக் கொண்டு இருந்தனர்.
அனைவரும் போட்டிங் செல்லலாம் எனவும் விக்கியும், ராகவ்வும் சென்று அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.சிறிது நேரத்தில் இவர்களுக்கான சவாரி நேரம் வரவும் குமார், மாலா, இவர்களோடு சேர்ந்து சிவா ஒன்றிலும் , விக்கி-சாலினி ஒன்றிலும், ராகவ்- கீர்த்தி ஒன்றிலும் , விஜய்- மேகா ஒன்றிலும் என தனித்தனியாக நான்கு படகுகளில் ஏறி அமர்ந்து தங்களது படகு சவாரியை தொடர்ந்தனர்.
இங்கு விக்கி சாலினி சற்று பயத்துடன் இருக்க அவளிடம் என்ன ஆச்சுடா எதுக்காக ஒரு மாதிரி இருக்க என்று கேட்டான்.அவள் அவனிடம் , அது ஒன்னும் இல்லைங்க பஸ்ட் டைம் இப்படி போறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.
அவள் கூறியதும் அவள் கையை பற்றியவன் அவளிடம், நீ ஒன்னும் பயப்படாத நான் தான் உங்கூடவே இருக்கேன்ல அப்புறம் என்ன வேணும்னா நாம கொஞ்சம் சுலோவா போலாம் என அவள் கையை தன் கைக்குள் வைத்தபடியே இருவரும் பேசிக்கொண்டே சவாரி செய்தனர்.
அனைவரும் தங்களது படகு சவாரியை முடித்து வரவும் அனைவரும் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தனர்.பின் அங்கிருந்த பூங்காவிற்கு சென்றனர்.
பூங்காவிற்கு வந்ததும் பெரியவர்கள் இருவரும் அமர்ந்து விட சிறியவர் அனைவரும் பூங்காவை சுற்றி வலம் வந்தனர்.விக்கி சாலினியை அழைத்து கொண்டு தனியாக செல்ல இங்கு கீர்த்தி மேகாவிடம் பேசியவள் அவளது படிப்பை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.அப்போது மேகா அவளிடம் அவர்களது திருமணத்தை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.
கீர்த்தியும் அவளிடம் தனக்கும் ராகவ்விற்கும் இருந்த காதலையும் அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்ல ஆரம்பிக்க ராகவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
கீர்த்தி, ராகவ் இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயதில் இருந்தே இருவரது குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வர இவர்களும் தங்களது நட்பை தொடர்ந்தனர்.இவ்வாறு இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்க கீர்த்தியை முதல் முதலில் சேலையில் கண்டவன் அவளது அழகில் தன் மனதை அவளிடம் தொலைத்திருந்தான். இவன் அவளை ஒன்சைடாக விரும்பி கொண்டிருக்க அவளோ இவனிடம் நண்பன் என்ற முறையிலே இவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
ராகவ் தன் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.அதே சமயம் கீர்த்தியின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய அதை அறிந்த ராகவ் தன்னால் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என வேதனையில் இருந்தான்.கீர்த்தியின் வீட்டில் திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்க அனைவரும் தங்களது வேலையை செய்து கொண்டு இருக்க கீர்த்தியின் அண்ணன் பிரபு ராகவ் வீட்டிற்கு வந்து அவனை அழைத்து வந்தவன் அவனிடமும் திருமண வேலைகளை பார்க்குமாறு கூறினான்.ராகவ் , பிரபு இருவரும் ஒன்றாக படித்ததால் தன் நண்பன் என்ற முறையில் அவனிடம் உரிமையாக அவனிடம் வேலைகளை பார்க்குமாறு கூறினான் பிரபு.
திருமண நாள் அன்று அவளுக்கு பார்த்திருந்த மாப்பிளை அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்னை விரும்புவதாகவும் கூறி லெட்டர் எழுதி வைத்து விட்டு சென்றிருந்தான்.இதை கண்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
திருமணத்திற்கு வந்த அனைவரும் ஏதேதோ பேசி இவர்களை மேலும் நோகடிக்க இதை கண்ட ராகவ் தன் பெற்றோரிடம் சென்று அவன் கீர்த்தியை விரும்புவதாக கூறி தானே அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறவும் , அவனின் பெற்றோரும் அவனை புரிந்து கொண்டு தன் மகனுக்காக கீர்த்தியின் பெற்றோரிடம் சென்று தன் மகனுக்கு அவளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கவும் அவர்களும் யோசித்து இறுதியில் ராகுவிற்கு கீர்த்தியை திருமணம் செய்து வைத்தனர்.
ராகவ்வும் கீர்த்தியிடம் தான் அவளை விரும்பியதை கூறிவிட்டான்.இதை கேட்டவள் அவன் தன்னை காதலித்ததை நினைத்து மகிழ்ந்தாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதை கூறி முடித்து ராகவ்வை பார்க்க அவன் இவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.இவர்களது பார்வையை கண்ட மற்றவர்கள் இருவருக்கும் தனிமையை அளித்து விலகி சென்றனர்.
சிவா, விஜய், மேகா மூவரும் பேசிக் கொண்டு இருக்க சிவாவிற்கு போன் வரவும் அவன் போனை எடுத்து கொண்டு இருவரிடமும் சொல்லி விட்டு போன் பேச சென்று விடவும் இவர்கள் இருவரும் அப்படியே பூங்காவில் சிறிது நேரம் நடக்கலாம் என கூறி நடந்து கொண்டிருக்கும் போது விஜய் அவளை பார்த்து கொண்டு அமைதியாக நடந்து வந்தான்.
அவன் அமைதியாக இருக்கவும் மேகா அங்கிருந்த இருக்கையில் சென்று அமர அவனும் சென்று அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.அவனிடம், என்ன ஆச்சு மாமா எதுக்காக திடீர்னு அமைதியாகிட்டிங்க அப்படி எதப்பத்தி யோசிக்கிறிங்க என கேட்டாள்.
அவள் தன்னிடம் கேட்டதும் அவளிடம் முதலில் ஒன்னுமில்ல சும்மா என்றதும் அவனை நம்பாமல் பார்த்து ஓஓ என்று மட்டும் கூறினாள்.அவள் அவ்வாறு கூறவும் விஜய் அவளிடம் சரி நாம போலாமா எல்லாரும் வந்து இருப்பாங்க எனவும் அவனுக்கு தன்னிடம் எதுவும் கூற விரும்பவில்லை போல என்று நினைத்துக்கொண்டு அவளும் சரி போலாம் என்றான்.
பின் அனைவரும் மாலா- குமார் இருந்த இடத்திற்கு வந்தனர்.மதிய உணவை அங்குள்ள ஹோட்டலில் முடித்தவர்கள் மாலை வரை அங்கிருந்தகுளுமையை அனுபவித்தவாறு பேசிக்கொண்டும் இருந்தவர்கள் அருகில் இருந்த சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்றனர்.சிறியவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகளாக மாறி அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு மரம் அனைத்திலும் மாறி மாறி விளையாடினார்கள்.
மாலை ஐந்து மணிக்கு மேல் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி சென்றனர்.அங்கு சென்றதும் விக்கி சாலினியை அழைத்து கொண்டு ஹோட்டல் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றான்.அங்கு சென்றவன் அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி தந்தான்.அவளும் தன் கணவன் வாங்கி தந்த அனைத்தையும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டாள்.
மாலை மயங்கி இரவு சூழும் நேரம் விக்கி அனைவரையும் ரெடியாகி வருமாறு கூறினான். அனைவரும் ரெடியாகி வரவும் அனைவரையும் அழைத்து கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடிசீட் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு சென்றவர்கள் நுழைவு சீட்டுகள் வாங்கி கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.அங்கு அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
லேடிசீட் இந்த இடம் ஏற்காட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கே தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம்.அதுவும் இரவு நேரங்களில் மலையில் இருந்து பார்த்தால் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.வானிலை சரியாக இருந்தால் இங்கிருந்து மேட்டூர் அணையை கூட பார்க்க முடியும்.
இங்கு இவர்கள் அனைவரும் தொலைநோக்கி மூலம் பார்த்தவர்கள் இரவு நேரத்தில் ஒளி வெளிச்சத்தில் அவ்விடம் ஜொலிப்பதை கண்டு அதனை கண்டு மகிழ்ந்தனர். அவ்விடம் முழுவதும் அவ்வளவு அழகாக காட்சி அளித்தது.பின் அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.
மறுநாள் காலை அருவிக்கு சொல்வதால் தேவையான உடைகளை எடுத்து வைத்து கொள்ளுமாறு கூறவும் அவர்களும் அதனை எடுத்து கொண்டு கீழே வந்தனர்.பின் அனைவரும் கிள்ளியூர் அருவிக்கு சென்றனர்.
கிள்ளியூர் அருவி : இந்த இடம் ஏற்காட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மழை காலங்களில் இங்கு தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும்.அப்போது அங்கு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும்.
அருவிக்கு வந்தவர்கள் ஆர்ப்பரித்த கொட்டும் அருவியை பார்த்து மகிழ்ந்தனர்.அவ்வருவியை பார்த்ததும் அனைவருக்கும் உடனே அதில் சென்று ஆட்டம் போட தோன்றியது.
அங்கிருந்து கிளம்பி பக்கோட பாயிண்ட் என்னும் இடத்திற்கு சென்றனர்.அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அப்படியே சேர்வராயன் மலை கோவில் சென்றனர்.
மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.ஒரு மெல்லிய குகையில் உள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் , சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டது.
அங்கு சென்றவர்கள் கடவுளை வணங்கி விட்டு அங்கிருந்து தெரியும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர்.
இவ்வாறு அங்கிருந்த ஒரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.பின் அனைவரும் ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வரும் போது கீர்த்தி தலை சுற்றி மயக்கம் அடைந்தாள்.அவள் மயக்கம் அடையவும் பதறிய ராகவ் என்ன செய்வது என தெரியாமல் நிற்க மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனதென்று பார்க்குமாறு கூறினார்.அவனும் கீர்த்தியின் நாடியை பிடித்து பார்த்தவன் பின் கீர்த்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளது மயக்கத்தை தெளிய வைத்தான்.
அவள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்ததும் தான் மற்றவர்கள் சிறிதளவு நிம்மதி அடைந்தனர்.மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க அவனோ ராகவ் அருகில் சென்று அவனது கையை பற்றி அவனுக்கு வாழ்த்து கூறினான்.மாலாவிற்கு புரிந்து விட அவர் கீர்த்தியின் அருகில் சென்று அவளிடம் கேட்டு தனது சந்தேகத்தை உறுதி செய்தவர் ராகவ்வை பார்க்க அவன் என்னவென புரியாமல் நிற்க மாலா அவனிடமும் மற்றவர்களிடமும் கீர்த்தி கர்ப்பமாக உள்ளதை கூறினார்.
அவர் கூறியதை கேட்ட ராகவ் தன் மனைவியை அனைத்து கொண்டான்.பின் மற்றவர்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதே மகிழ்ச்சியுடன் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.சாலினி இறுதி ஆண்டும், மேகா இரண்டாம் ஆண்டில் இருந்தனர்.விக்கியும் , சாலினியும் தங்களது வாழ்வை சந்தோசமாகவும்,காதலுடனும் கழித்தனர்.
அன்று காலை எழுந்ததில் இருந்து சாலினி வருத்தமாகவே இருந்தாள்.அனைவரும் காலை ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மாலா சாலினியிடம் ,என்ன ஆச்சுமா எதுக்காக டல்லா இருக்க உடம்பு எதுவும் சரியில்லையா என கேட்டார்.
அவர் கேட்டவுடன் சாலினி அவரிடம் , அது உடம்பு நல்லாதான் இருக்கும்மா என்றாள்.குமார் அவளிடம் அப்புறம் எதுக்காக எப்படியோ இருக்க சாலினிமா என்றார்.உடனே சாலினி இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் அப்பா எனக்கு அம்மா ஞாபகமாக இருக்கு என்றாள்.
விக்கியின் வீட்டில் உள்ள யாரும் இதுவரை சாலினியின் பெற்றோர்களை பற்றி கேட்டதில்லை .அவர்களுக்கு இருவரின் பெற்றோரும் தற்போது உயிரோடு இல்லை என்பது மட்டுமே தெரியும் மற்றபடி அவர்களது பெற்றோர் காதல் திருமணம் செய்ததால் அவர்களுக்கு சுற்றம் என யாரும் இல்லை என்பது மட்டுமே தெரியும்.
ஆனால் இன்று சாலினி தன் அன்னையின் நினைவு நாள் என கூறவும் ஏனோ குமாரின் மனது துடித்தது. அவரோ எதை பற்றியோ நினைத்து கொண்டிருந்தார்.
காதல் தீ வளரும்....
(Tq for your supporting frds)