8.
அழகிய காதல் தீயே
கல்லூரி விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டனர் மூவரும்.அதன்படி எங்கு செல்லலாம் என யோசித்து ஏற்காடு செல்ல முடிவெடுத்தனர்.அன்று மாலை விஜய் விக்கியின் வீட்டிற்கு வரவும் அவனிடமும் ஏற்காடு போக பிளான் செய்ததை கூறி அவனையும் லீவ் போட முடியும்மா என கேட்டான்.
விக்கி கூறியதைக் கேட்ட விஜய் சிறிது யோசனை செய்ய வீட்டில் இருந்த மற்றவர்களும் அவனை வருமாறு கூறவும் விஜய்யும் வேறு வழியின்றி தான் வேலை செய்யும் மருத்துவமனை நிர்வாகியிடம் ஏதேதோ சொல்லி ஒரு வாரம் விடுமுறை பெற்றான்.இதை அவர்களிடம் சொன்னதும் மகிழ்ந்தனர்.சாலினி தான் விக்கியிடம் ,நாம எப்படியும் டிராவல்ஸ்ல தான வண்டி புக் பன்றோம் அதனால உங்க பிரண்ட்ஸ் சிவா அண்ணா, ராகவ் அண்ணா இரண்டு பேரும் வரங்களானு கேளுங்க அவங்களும் வந்தா நம்ம மேரேஜ் அப்போ போன மாதிரி எல்லோரும் சேர்ந்து ஜாலிய போகலாம் எனவும் மற்றவர்களும் அவள் கூறியதையே அமோதிக்க விக்கியும் தன் நண்பர்களுக்கு போன் செய்தான்.
விக்கி சிவாவிற்கு போன் செய்து அவனிடம் ஏற்காடு செல்வதை பற்றி கூறி அவனிடம் வருகிறானா என கேட்க அவனும் வருவதாக கூற ராகவ்விடம் கேட்டு பிறகு மற்ற டீடெயில்ஸ் சொல்றேன் என சிவாவும் சரி என்றான்.அதே மாதிரி ராகவ்வுக்கும் போன் போட்டு கேட்க அவன் தன் மனைவியிடம் கேட்டு சொல்றேன்டா என்றான்.அவன் சொன்னது போல் தன் மனைவி கீர்த்தியிடம் கேட்கவும் அவளும் சரி என்றாள்.உடனே அதை விக்கிக்கு போன் செய்து இருவரும் வருவதாக சொன்னான்.
விக்கியும் தன் பிரண்ட்ஸ் வருவதாக சொன்னதை வீட்டில் சொல்லவும் அவர்களும் சரி எனவும் எப்போது கிளம்பலாம் என பேசி முடிவெடுத்து டிராவல்ஸ்க்கு போன் செய்து ஏற்காடு போவதை கூறி நாளை காலை வண்டியை வீட்டிற்கு வருமாறு ஏற்பாடு செய்து விட்டு தனது நண்பர்களையும் கிளம்பி காலை தன் வீட்டிற்கு வருமாறு கூறினான்.விஜய்யும் அவர்களிடம் நாளை காலை வருவதாக கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றான்.அவன் சென்றதும் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் தங்களுக்கு தேவையான உடைகளை எடுத்து பேக் செய்து விட்டு உறங்கினார்கள்.
மறுநாள் காலை அனைவரும் ரெடியாக இருக்க விஜய் , சிவா வரவும் பேசிக் கொண்டே ராகவ்விற்காக காத்திருக்க அவனும் தன் மனைவியுடன் வந்து சேர்ந்தான்.அவன் வரவும் சாலினியும் மாலாவும் அனைவரையும் சாப்பிட வருமாறு கூறி சாப்பாட்டை எடுத்து வைத்தார்கள்.அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவும் அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள்.மாலா-குமார் , விக்கி-சாலினி, ராகவ்-கீர்த்தி என மூன்று ஜோடிகள் ஒன்றாக அமரவும் , விஜய் , சிவா இருவரும் ஒரு சீட்டில் அமர மேகா ஒரு சீட்டில் அமரவும் இவர்களது பயணம் ஏற்காடு நோக்கி சென்றது.
வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் மேகா தனது அண்ணியிடம் பாட்டு பாடுமாறு கேட்டாள்.சாலினியும் சரி என பாட ஆரம்பித்தாள்.இப்படியே அனைவரும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக் கொண்டும் நேரம் போவதே தெரியாமல் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.இடையிடையே மாலா அவர்களுக்கு சாப்பிட நொறுக்கு தீனிகளை தர அதையும் சாப்பிட்டு விட்டு தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர்.மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஏற்காடு நோக்கி சென்றனர்.அனைவரும் காலையில் இருந்து போட்ட ஆட்டத்தில் டயர்டாகி உறங்கி விட சாலினியும் , விக்கியும் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஏழு மணிநேர பயணத்திற்கு பின் சேலம் மாவட்டம் வந்தடைந்தனர்.அங்கிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இவர்களது வண்டி பயணித்தது.ஏறக்குறைய இருபது கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது.

ஒரு வழியாக இவர்கள் புக் செய்த ஹோட்டலை வந்தடைந்தனர்.
ஏற்காடு பற்றி : ஏற்காடு இது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகரமாகும்.இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது.ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது.இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.' ஏரிக்காடு 'என்பதே நாளைடைவில் மருவி ' ஏற்காடு 'என மாறிவிட்டது. இது சேலத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டை கண்டறிந்தார்கள்.சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக்பர்ன் இங்கு காப்பிச்செடி ,ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார்.ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும்.சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம்பெற்றுள்ளன.இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம்.இங்குள்ள ஏற்காடு அருவியில் நீர் நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.இங்குள்ள மலைக்கோயில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயில் ஆகும்.
இங்குள்ள பக்கோடா முனை என்னும் இடத்தில் இருந்து பார்த்தால் கீழே உள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கும். ஏற்காட்டில் 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 40,000 பேர் வாழ்கின்றனர்.இதில் பழங்குடி மக்கள் 24,499 பேர் உள்ளனர்.இங்குள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்களே.
இங்குள்ள மக்களின் முக்கிய ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன.1820 ஆம் ஆண்டு திரு MD காக்பர்ன் என்பவரால் காப்பி செடி ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு Grange எஸ்டேட்டில் நடவு செய்யப்பட்டது.பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி ,வாழை ,ஆரஞ்சு ,கொய்யா கருப்பு மிளகு ,ஏலக்காய் போன்றவை இங்கு விளைவிக்கின்றன.சந்தனம் ,தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன.
காலநிலை: குளிர் காலம் செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வரும்.குளிர்காலத்தில் மலைகளில் மூடுபனி படர்ந்திருக்கும்.குளிர்காலத்தில் வெப்ப நிலை 12°C முதல் 24°C ஆகவும், கோடை காலத்தில் 16°C முதல் 30°C ஆகவும் இருக்கும். சராசரி மழை அளவு 1500-2000 மில்லிமீட்டர் ஆகும்.
சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 80 சுற்றுலா இடங்களை ஆங்கில அரசு வெளியிட்டுள்ளது. அதனால் பல இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வரத்தொடங்கினர்.
இவர்களது வண்டி ஹோட்டலை வந்தடைய அனைவரும் இறங்கினர்.இறங்கி ஹோட்டலை பார்த்து இரசித்து கொண்டு இருந்தனர்.

ஹோட்டலை சுற்றி அழகிய மரங்கள் நிறைந்து இருக்க நடுவில் அமைந்திருந்தது அவ்விடம்.அதன் முன்புறம் அழகிய நீச்சல் குளம் அமைந்திருந்தது அதையே பார்த்துக் கொண்டு இருக்க விக்கியும் , விஜய்யும் உள்ளே சென்று தங்களது விவரத்தை கூறி தங்களுக்கு புக் செய்திருந்த அறைகளின் சாவியை வாங்கி கொண்டு வந்தவர்கள் அவர்களை அழைத்து கொண்டு அவரவர் அறையை நோக்கி சென்றனர். அறைக்கு சென்றவர்கள் குளித்து முடித்து இரவு உணவிற்காக அனைவரும் வரவும் அங்கு கீழே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் பின்புறம் பூங்கா போன்று அமைத்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தவர்கள் குளிர் காற்றை அனுபவித்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.பின் அனைவரும் உறங்க சென்றனர்.
தங்களது அறைக்கு வந்த விக்கியும்,
சாலினியும் அங்கிருந்த பால்கனியில் நின்று இயற்கை காற்றை இரசித்தவாறு இருக்க விக்கி சாலினியை அனைத்து கொண்டு அவளிடம் இந்த இடம் பிடித்துள்ளதா என்று கேட்டான்.அவளும் அவன் தன்னை அனைத்ததால் வெட்கத்துடன் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து தன் வெட்கத்தை மறைக்க முயற்சித்து ம்ம்ம் என்று மட்டும் தலையாட்டினாள்.
அவள் வெட்கத்துடன் தன் மீது சாயவும் அவளை இரசித்து பார்த்தவன் அவளை நிமிர்த்தி அவளிடம் என்ன என்பதை போல் புருவம் உயர்த்தினான்.ஏற்கனவே வெட்கத்தில் இருந்தவள் இப்போது தன்னை அவனிடம் இருந்து பிரித்து தன்னையே பார்த்து கொண்டு இருப்பவனை பார்த்து பெண்ணவள் அவனிடம் இருந்து தள்ளி வந்தவள் மீண்டும் வெட்கத்துடன் கீழே குணிந்து கொண்டாள்.தன்னவளின் செய்கையை கண்டு அவளருகில் சென்றவன் தன்னவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அனைத்து விடுவித்தவன் அவளை இயல்புக்கு கொண்டு வர அவளிடம் இயற்கை சூழலைப் பற்றி பேச ஆரம்பித்தான். அவளும் அவன் நினைத்ததை போல் தன்னை சகஜ நிலைக்கு மாற்றி கொண்டு இவனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தாள்.இருவரும் பேசிக்கொண்டே எப்போது தூங்கினார்கள் என்றே தெரியாமல் உறங்கியவர்கள் காலை பறவைகளின் சத்தத்தை கேட்ட விக்கி அப்போது தான் அவளை அனைத்தவாறு இருப்பதையும் தன்னவள் தன் மார்பின் மீது தலை வைத்து உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவன் புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு எழுந்து குளியலறை நோக்கி சென்றான்.
குளித்து முடித்து வந்தவன் தன்னவளை எழுப்பி குளித்து விட்டு வருமாறு கூறினான்.அவள் குளிக்க சென்றதும் காப்பி ஆர்டர் செய்து விட்டு பால்கனியில் நின்று காலை நேரத்தில் பனிபடர்ந்த இயற்கையை பார்த்து இரசித்து கொண்டு இருந்தான்.சாலினி குளித்து முடித்து பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து வர அவளை பார்த்து அவளது அழகில் தன்னை மறந்து நின்று இருந்தவனை அறையின் காலிங் பெல் சத்தம் நிகழ்வுக்கு கொண்டு வந்தது. உடனே சென்று கதவை திறந்தவன் அங்கு நின்றிருந்த வெயிட்டரிடம் இருந்து தான் ஆர்டர் செய்த காப்பியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவன் தனக்கும் தன்னவளுக்கும் சேர்த்து அவனே அதை கப்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கைக்கு சென்றவன் சாலினியையும் அழைத்தான்.
அவள் அங்கு வரவும் அவளிடம், டிரஸ் சூப்பர்டி என்றவன் அவளிடம் காப்பி கப்பை நீட்டினான்.அவளும் பதிலுக்கு புன்னகைத்தவள் அவன் தந்த காப்பியை குடித்து விட்டு இருவரும் காலை நேர அழகை இரசித்து கொண்டு இருந்தனர்.சிறிது நேரம் கழித்து இருவரும் ரெடியாகி கீழே வர மற்றவர்களும் ஒவ்வொருவராக ரெடியாகி கீழே வந்தனர்.
அனைவரும் தங்களது காலை உணவை முடித்ததும் மேகா விக்கியிடம் இன்று எங்கே செல்லலாம் என கேட்க விக்கி அவளிடம் இன்று மரகத ஏரிக்கு சென்று விட்டு அப்படியே அங்குள்ள பூங்காவிற்கு செல்லலாம் என்றான். விக்கி கல்லூரி படிக்கும் போது தன் நண்பர்களுடன் ஏற்கனவே இங்கு வந்து உள்ளதால் விக்கிக்கும் ,சிவாவிற்கும் இங்குள்ள பாதி இடங்கள் தெரியும் என்பதால் முதலில் அங்கு செல்லலாம் என முடிவெடுத்து டிரைவரிடம் அவர்கள் செல்ல இருக்கும் இடத்தை பற்றி கூறினான்.அவருக்கும் அங்குள்ள இடங்கள் தெரியும் என்பதால் அவரும் சரி எனக்கூற இவர்கள் அனைவரும் வண்டியில் ஏறி அமர வண்டி மரகத ஏரியை நோக்கி சென்றது.
காதல் தீ வளரும்.....
(Tq for your support frds
)