AnanyaDev
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..
விழி வழியே சரணடைந்தேன் கதையில் வரும் சித்தார்த் - கனிஷ்கா ஜோடியை மட்டும் வச்சு ஒரு கதை. கதை கரு : மோசமான தாக்குதல்கள். சத்தியமா என் ஹீரோ நல்லவன்.. அது முதல் பாகம் படிச்சா புரியும்..
இப்போலாம் பெண்களுக்கு எதிரா நடக்குற விஷயம் நாம பாத்துட்டு தானே இருக்கோம்.. நிஜத்தில் அய்யோ பாவம்னு சொன்னா கதையிலும் அப்படி கடந்து போகலாம்.. அப்புறம் இது சென்சிட்டிவ் ஸ்டோரி.. அது மனசுக்கு கஷ்டமா இருந்தா அதற்கும் கடந்து போகலாம்..
அடுத்த வாரத்தில் இருந்து கதை வரும்.. இப்போ சின்ன டீசர்.. மனசுக்கு கஷ்டமா இருந்தா ப்ளீஸ் கடந்து போகலாம்
இந்த கான்செப்ட் எடுக்கவே பயம் வருது தான்.. ஆனாலும் ஒரு தைரியம்
ரம்மியமான இரவு பொழுதில் பால்கனியில் தன் மகளை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தவன் "சித்து.. இங்க வாயேன்" என்ற மனைவியின் அழைப்பில் ஏழு மாத மகள் வைஷ்ணவியை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். அறையில் அவளை காணாமல் "கனி.." என்று அழைத்து கொண்டே வெளியே வர "சித்து இங்க மாட்டிக்கிட்டேன்" என்ற குரல் அவனின் கண்ணாடி அறையில் இருந்து வந்தது.
"இன்னுமா டோர் ஓபன் பண்ண தெரியல? சைட்ல இருக்குற செகண்ட் பட்டனை கிளிக் பண்ணு.. ஓபன் ஆகும்" என்று சிரித்து கொண்டே கூற அவசரமாக அவன் சொன்ன பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்து விட அவனிடம் ஓடி வந்தவள் "இப்போ அந்த கதவு தேவை தானா?" என்று கன்னத்தில் கிள்ளி விட்டு மகளை தூக்கி கொண்டு சென்றாள். அவளின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தவன் "கனி இன்னைக்கு நைட் ப்ளீஸ்.." என்று கேட்க அந்த பக்கம் சத்தம் வராமல் போகவும் சென்று பார்த்தவன் மௌனமாக சிரித்து கொண்டான்.
-----
"சார் நாங்க முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிட்டோம்.. பட் அவளை காப்பாற்றுவது கஷ்டம்" என்று மருத்துவர் கூற பெண்ணை பெற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.
"சார் ப்ரோசீஜர்ல அவங்க கையெழுத்து வேணும்" என்று ஒரு பைலை நீட்ட வாங்கி படித்த வக்கீல் "அவனுக்கு வேணும்னா தண்டனை வாங்கி கொடுக்கலாம்.. பட் டீனா உயிரை இனிமேல் காப்பாற்ற முடியாது.. பின்னங்கழுத்தில் பயங்கரமா தாக்க பட்டிருக்கா.. முகத்தில் பல கீறல்கள்.. மோசமா தாக்க பட்டிருக்குறதா டாக்டர் சொல்றாங்க.. உயிருடன் வாழ முடியாத ஒருத்தியோட உடல் பாகங்கள் பலருக்கும் பயன்படலாம் இல்லையா? ப்ளீஸ் சைன்" என்று கூற மகளின் நிலையை நினைத்து கண்ணீர் விட்ட அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர்.
-----
"ப்ளீஸ் லீவ் மி.. ப்ளீஸ்.." அவளின் கெஞ்சல் அந்த கொடூரர் யாரையும் அசைக்கவில்லை.
"ஜேக்.. என்ன பண்ணிட்டு இருக்க? நான்கு பேர் இருக்கோம்.. நீ முடிச்சா தான் நாங்க போக முடியும்" என்று அதில் நடுத்தரமான ஒருவன் சொல்ல "வெயிட் மேன்.. அவளை முழுசா செக் பண்ணிட்டு தான் தொடங்க முடியும்.. எங்கேயாச்சும் கேமரா இருந்தா நாம செத்தோம்" என்று பரிசோதிக்க அவனின் கைகள் அவளிடம் தாராளமாக விளையாட "ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் அந்த பெண்.
"நோ வே மை டியர்.. எங்களுக்கு நீ கண்டிப்பா வேணும்.." என்று அவளை கொள்ளையிட அவள் தடுக்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் பாழாகி போனது. சிறுவயது பெண் என்பதால் நான்கு பேரை சமாளிக்க முடியவில்லை.
"வழக்கமா போடுற இடத்தில் போட்டுடுங்க" என்ற ஒருத்தன் வெளியேறி விட அவளின் சடலம் ஒரு நதிக்கரையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டது.
---
"கனி இப்போ நீ எங்கேயும் போக வேண்டாம்.. பேபிக்கு தேவையான எல்லாம் நானே வாங்கிட்டு வரேன்.. உன் ஹெல்த் கண்டிஷன் தெரியும் தானே" என்ற சித்தார்த் ஷாப்பிங் செல்ல வெளியேறும் சமயம் அவனின் செல்போன் சிணுங்கியது.
"சொல்லு வில்லியம்?"
"...."
"வாட்?" என்று அதிர்ந்தவன் பின் "வில்லியம் நான் போலீஸ் கிடையாது.. ஆனா உனக்கு நான் ஹெல்ப் பண்ண முடியும்.. உனக்கு தேவையான தகவல் எல்லாம் நான் சேகரிச்சு தரேன்.. அவங்க கொலைக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்" என்று கூற "யாருக்கு நியாயம் கிடைக்கணும் சித்து?" என்று வெளியே வந்தாள் கனி.
"ஒன்னும் இல்லடா.. நீ வெளில வராத.. நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்றவன் தன் நண்பன் ராபார்ட்க்கு குறுஞ்செய்தி தட்டி விட்டே சென்றான்.
விழி வழியே சரணடைந்தேன் கதையில் வரும் சித்தார்த் - கனிஷ்கா ஜோடியை மட்டும் வச்சு ஒரு கதை. கதை கரு : மோசமான தாக்குதல்கள். சத்தியமா என் ஹீரோ நல்லவன்.. அது முதல் பாகம் படிச்சா புரியும்..
இப்போலாம் பெண்களுக்கு எதிரா நடக்குற விஷயம் நாம பாத்துட்டு தானே இருக்கோம்.. நிஜத்தில் அய்யோ பாவம்னு சொன்னா கதையிலும் அப்படி கடந்து போகலாம்.. அப்புறம் இது சென்சிட்டிவ் ஸ்டோரி.. அது மனசுக்கு கஷ்டமா இருந்தா அதற்கும் கடந்து போகலாம்..
அடுத்த வாரத்தில் இருந்து கதை வரும்.. இப்போ சின்ன டீசர்.. மனசுக்கு கஷ்டமா இருந்தா ப்ளீஸ் கடந்து போகலாம்
இந்த கான்செப்ட் எடுக்கவே பயம் வருது தான்.. ஆனாலும் ஒரு தைரியம்
ரம்மியமான இரவு பொழுதில் பால்கனியில் தன் மகளை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தவன் "சித்து.. இங்க வாயேன்" என்ற மனைவியின் அழைப்பில் ஏழு மாத மகள் வைஷ்ணவியை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். அறையில் அவளை காணாமல் "கனி.." என்று அழைத்து கொண்டே வெளியே வர "சித்து இங்க மாட்டிக்கிட்டேன்" என்ற குரல் அவனின் கண்ணாடி அறையில் இருந்து வந்தது.
"இன்னுமா டோர் ஓபன் பண்ண தெரியல? சைட்ல இருக்குற செகண்ட் பட்டனை கிளிக் பண்ணு.. ஓபன் ஆகும்" என்று சிரித்து கொண்டே கூற அவசரமாக அவன் சொன்ன பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்து விட அவனிடம் ஓடி வந்தவள் "இப்போ அந்த கதவு தேவை தானா?" என்று கன்னத்தில் கிள்ளி விட்டு மகளை தூக்கி கொண்டு சென்றாள். அவளின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தவன் "கனி இன்னைக்கு நைட் ப்ளீஸ்.." என்று கேட்க அந்த பக்கம் சத்தம் வராமல் போகவும் சென்று பார்த்தவன் மௌனமாக சிரித்து கொண்டான்.
-----
"சார் நாங்க முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிட்டோம்.. பட் அவளை காப்பாற்றுவது கஷ்டம்" என்று மருத்துவர் கூற பெண்ணை பெற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.
"சார் ப்ரோசீஜர்ல அவங்க கையெழுத்து வேணும்" என்று ஒரு பைலை நீட்ட வாங்கி படித்த வக்கீல் "அவனுக்கு வேணும்னா தண்டனை வாங்கி கொடுக்கலாம்.. பட் டீனா உயிரை இனிமேல் காப்பாற்ற முடியாது.. பின்னங்கழுத்தில் பயங்கரமா தாக்க பட்டிருக்கா.. முகத்தில் பல கீறல்கள்.. மோசமா தாக்க பட்டிருக்குறதா டாக்டர் சொல்றாங்க.. உயிருடன் வாழ முடியாத ஒருத்தியோட உடல் பாகங்கள் பலருக்கும் பயன்படலாம் இல்லையா? ப்ளீஸ் சைன்" என்று கூற மகளின் நிலையை நினைத்து கண்ணீர் விட்ட அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர்.
-----
"ப்ளீஸ் லீவ் மி.. ப்ளீஸ்.." அவளின் கெஞ்சல் அந்த கொடூரர் யாரையும் அசைக்கவில்லை.
"ஜேக்.. என்ன பண்ணிட்டு இருக்க? நான்கு பேர் இருக்கோம்.. நீ முடிச்சா தான் நாங்க போக முடியும்" என்று அதில் நடுத்தரமான ஒருவன் சொல்ல "வெயிட் மேன்.. அவளை முழுசா செக் பண்ணிட்டு தான் தொடங்க முடியும்.. எங்கேயாச்சும் கேமரா இருந்தா நாம செத்தோம்" என்று பரிசோதிக்க அவனின் கைகள் அவளிடம் தாராளமாக விளையாட "ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் அந்த பெண்.
"நோ வே மை டியர்.. எங்களுக்கு நீ கண்டிப்பா வேணும்.." என்று அவளை கொள்ளையிட அவள் தடுக்க நினைத்த முயற்சிகள் அனைத்தும் பாழாகி போனது. சிறுவயது பெண் என்பதால் நான்கு பேரை சமாளிக்க முடியவில்லை.
"வழக்கமா போடுற இடத்தில் போட்டுடுங்க" என்ற ஒருத்தன் வெளியேறி விட அவளின் சடலம் ஒரு நதிக்கரையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டது.
---
"கனி இப்போ நீ எங்கேயும் போக வேண்டாம்.. பேபிக்கு தேவையான எல்லாம் நானே வாங்கிட்டு வரேன்.. உன் ஹெல்த் கண்டிஷன் தெரியும் தானே" என்ற சித்தார்த் ஷாப்பிங் செல்ல வெளியேறும் சமயம் அவனின் செல்போன் சிணுங்கியது.
"சொல்லு வில்லியம்?"
"...."
"வாட்?" என்று அதிர்ந்தவன் பின் "வில்லியம் நான் போலீஸ் கிடையாது.. ஆனா உனக்கு நான் ஹெல்ப் பண்ண முடியும்.. உனக்கு தேவையான தகவல் எல்லாம் நான் சேகரிச்சு தரேன்.. அவங்க கொலைக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்" என்று கூற "யாருக்கு நியாயம் கிடைக்கணும் சித்து?" என்று வெளியே வந்தாள் கனி.
"ஒன்னும் இல்லடா.. நீ வெளில வராத.. நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்றவன் தன் நண்பன் ராபார்ட்க்கு குறுஞ்செய்தி தட்டி விட்டே சென்றான்.