saranya R
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிந்திக்கா நினைவுகள்…...
நட்பு
இமை முடிய நொடி
இதழ் தானாய் விரிகிறது
என் நண்பனின் நிழல்
என் இதயம் வழி
விழி முன் வலம் வருவதால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
நட்பு என்னும் மூன்றெழுத்தை
நினைவுகள் என்னும்
ஐந்தெழுத்தில் சேர்த்து வைத்தேன்
விழிகள் காண எண்ணும் நொடி
எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்க…
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அழியாத தடயங்ளாய் என்
நெஞ்சில் உன் நினைவுகள்...
மறவாத நினைவுகளாய்
நம் ஒன்றாய் பயணித்த
பொழுதுகள்...
நகராத பொழுதுகளாய்
மறந்து போகா சில ரணங்கள்
ஆற்ற முடியா ரணங்களாய் சில
வலிகளின் வடுக்கள்
வடுக்கள் போக்கும் வரங்களாய்
மனம் மகிழும் மங்காத நினைவுகள்
அனைத்தையும் சுமந்து நடந்த
நம் கல்லூரி காலங்கள்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
காலம் மறைத்து வைத்த பொக்கிஷம் உனை
கல்விகரையில் கண்டேன்
பார்த்த நொடி இதழ் மலர்ந்தாய்
கரம் நீட்டி
பற்றி கொள் பயணம் செய்யலாம்
என்றாய்
போகும் வழியில்
பாதுகாத்தாய்
என் பசிக்கு உணவு தந்தாய்
சோகம் கொண்டு சோர்வடைய
தோள் தந்து துவலாதே என்றாய்
சண்டைகள் பல சமாதனம் சில
மன்னிப்பு மறந்து போனது
சேட்டைகள் எல்லை தண்டியது
தண்டனை பகிரப்பட்டது
வாழ்வின் நிதர்சனமுரைக்க
கல்விகரை பிரிந்து சொன்றது
பிரிந்தும் பற்றிய கரத்தை விடமால்
இருக்கிறாய் என்று உணர வைக்கிறாய்
உன் நினைவுகளில் நான் மூழ்கி எழும் போது..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நித்தமும் பயணிக்கிறேன்
விழிகளின் செந்நீருடன்
தொலைந்து போனா
உன் நினைவுகளில்….
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு நொடி மலரும்
என் இதழ்கள்
மறுநொடி வாடுகிறது
என் இதயம் மாறவா
உன் நினைவுகளின்
தாக்கத்தில்…..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ என்னை நீங்கிய நொடி
கனவில் மட்டுமே காதல்
கொண்டேனடா
விழிகள் மூடி காணும்
என் கனவுகளுக்கு கால்கள்
இல்லையடா
ஆதலால் தான் விழிச்சிறையில்
இருந்து வெளியேற தெரியாமல்
என்னை போலவே தவிக்குதடா
நித்தமும் என் நெஞ்சம் சுமக்கும்
உன் நினைவுகள்…
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.>>>>>>>>>>
ஒரு நொடியேனும் உன் தேன் குரலில்
கரைந்தவன் நானடி
இன்று கண்ணீரில் கரைகிறேனடி
நிலவின்றி நீலவானமும் கடந்து
செல்லும் இனிய இரவை ஆனால்
உன் நினைவின்றி என் இரவுகள்
நகர மறுக்குதடி
நிஜமாய் என்னுள் வந்தாய்
நிரந்தர நிழலாய்
என்னுள் புதைந்து விட்டாயடி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
காதல்
நினைவுகளும் நிஜங்களும் ஒன்றென
அறிந்தேன்
உன்னை கண்ட கணங்கள் கரையும் நொடி
நிஜங்களை காட்டிலும் நினைவுகள்
சுகமென்று உணர்ந்தேன்
நீ என்னுயிரில் கலந்த நொடி…
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிந்தும் மழையை வெறுத்தவன் நான்
சிறு துளியில் சிலிர்கிறேன்
கடலை கானலாய் கண்டவன் நான்
காலம் மறந்து கால்நனைத்திட நினைக்கிறேன்
இருளில் என்ன இதமென கேட்டவன் நான்
இன்று இரவின் இனிமையில் கரைகிறேன்
எல்லாம் உன் நினைவால் மட்டுமே…..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கன்றிய காயமும்
கன்னம் சிவக்க வைக்கிறது
என்னவா
அது உன் மெய் தீண்டலின்
நினைவாய் இருப்பதால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாடிய மலரை கண்டபோது எல்லாம்
உள்ளம் உவகை கொள்கிறது
என் இதழ்களோ மென் நாண
புன்னகையை சிந்துகிறது
அது என்னவனின் காதல்
நினைவு என்பதால்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இனிய நினைவுகள்
பலதுடன் பயணித்தாலும்
என் இதயம் ஒன்றிய
நினைவு நீயடா...
இன்பமாய் துன்பமாய்
கவலையாய் கனிவாய்
ஊடலாய் கூடலாய்
வலியாய் காதலாய் என
என் வாழ்வின் அனைத்து
நினைவுகளையும் சேர்த்து
வைத்தேன்
தள்ளாடும் வயதில் தலைவன்
கைகோர்த்து
எனக்கே உரித்தான என்னவன்
இதயத்தின் ஓசையை இன்னிசையாய்
கேட்டு கொண்டு
அழகிய காலை மாலை சூரிய சந்திரனை
ரசித்த படி அந்நினைவுகளை உயிர்பித்து
மீண்டும் நினைவால் ஒரு வாழ்க்கை வாழ….
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நினைவுகள் கானல் போன்றது எண்ணும் நொடி
முன் தோன்றும் நெருங்கும் நொடி
காற்றில் கரைந்துவிடும்
என் வரிகளில் சில நினைவுகள்…..
படித்து விட்டு பிழை இருப்பின் கூறுவீர் திருத்தி கொள்கிறேன் சகாக்களே...
இதுவரை என் கவிதை கணைகளை எனக்காய் தாங்கி அழகாய் கருத்து பகிர்ந்த என் சகாக்களுக்கு நன்றி…..
கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/