All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "இதயத்தை திருடி சென்றவளே " கதைத் திரி

Status
Not open for further replies.

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே...



டீஸர் -2


நீ எனக்கு பொண்டாட்டி நான் உனக்கு புருஷன்... அதான் மா உன்னோட பாஷையில் ஏன்னா...

அப்போ எனக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு தான மாமி...


நீ என் மாமி நான் உன் மாமா.. என்று கண்ணில் மின்னலடிக்க அவளை பார்த்து சொன்னான்...


அவன் கண்ணின் மின்னலை பார்த்ததும் அவளுக்கு தெரிந்து விட்டது... ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று..


பயத்தில் வாய் தந்தி அடிக்க .. இ...தோ பாருங்....கோ... நேக்...கு உங்...களை பிடிக்....கலைன்னு முன்...னமே சொல்லி....ருக்கேன்... இப்படி பார்க்....காதேள்... நே ...க்கு பய....மா இரு...க்கு.... என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே...


அவன் கையிலிருந்த போனில் இந்த மாமியோட அப்பா அம்மாவை போட்டு தள்ளுடா... என்ற செய்தி பறந்தது....


ஐயோ வேண்டாம்... என் பெத்தவாள விட்டுடுங்கோ ப்ளீஸ்.. உங்களாண்ட கெஞ்சி கேட்கிறேன்... என்று கண்ணீருடன் கதறினாள்...


கண்களில் கனல் தெறிக்க... நான் உன் கிட்ட என்ன சொன்னேன்... என்னை பிடிக்கலைன்ற வார்த்தை உன் வாயில் வரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா... என்று கர்ஜித்தான்...


அவன் குரலில் பயந்து ஓரடி பின்னால் சென்றவளின் கை கால்கள் நடுங்கியது.... வாயிலிருந்து வார்த்தை வர மறுக்க கண்களால் கெஞ்சினாள்....


அவள் கண்களை பார்த்ததும் ... அவனின் கோவம் எங்கோ பறக்க... அவளின் அருகே வந்தான்... நான் சொல்றதை கேட்காமல் நடந்தால் இப்படி தான் நடக்கும்... என் பேச்சை கேட்டு பழகு... என கடுகடுவென்று தான் கூறினான்... அப்போவும் அவன் குரலுக்கு மென்மை வரவில்லை...


சரி என தலையை உருட்டினாள்...


வாயை திறந்து பதில் சொல்லு... என்றான் காட்டமாக...

ச்... ச...ரி... மன்னி....ச்சி...டுங்கோ... என்றாள் பயத்துடன்...

ஹ்ம்ம்ம் என்று தலையை ஆட்டிவிட்டு வெளியே செல்ல போனவனிடம்...


நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே... என் பெத்தவாள விட்டுட சொல்லுங்கோ... நீங்க சொன்ன மாதிரி கேட்குறேன்... என்றாள் குரலில் தைரியம் திரட்டி...


ஹ்ம்ம்ம்... நீ மன்னிப்பு கேட்டதுமே நியூஸ் போய் இருக்கும்.. இப்போ அவங்க சேப் தான்... என்று திரும்பி செல்ல பார்த்தவனின் கால்கள் அப்படியே அவளை பார்த்து திரும்பியது...


ஆமா.. நீ.. நான் என்ன சொன்னாலும் கேட்பன்னு சொன்னல...என்ன சொன்னாலும் செய்வீயா.. என்று கண்களில் பழைய மின்னலை மீட்டெடுத்தான்...


அவனின் பேச்சில் போன பயம்... உயிர் பயமாக திரும்பியது அவளுக்கு...


அவளை நெருங்கி... எனக்கு பொண்டாட்டியா இரு... என்று அவள் காதோடு சொன்னான்...


அவனின் ஹஸ்கி வாய்சில்.. அவளுக்கு மயக்கம் வராத குறைதான்...


அவளின் இதழை நெருக்கிய அவனின் முகம் அவள் முகத்தில் அருகே வந்ததும்...



எங்கிருந்து தான் அவளுக்கு அந்த தைரியம் வந்ததோ பக்கத்தில் இருந்த பூஜாடியை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள்...
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே...


அத்தியாயம் -2




13132


கண்ணாடி முன் நின்று தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவளிடம்...


வாவ் மாமி நீ அழகுன்னு தெரியும் இவ்ளோ அழகுன்னு இந்த மடிசார்ல்ல தான் தெரியுது... என்று வாசல் கதவில் தலையை சாய்த்து பார்வையால் அவளை களவாடிக் கொண்டிருந்தான்... ஜேக்கப்....


அவன் சொன்னதை கேட்டு திரும்பியவளின் மதிமுகமோ வாடிய மலராய் சுருங்கி... கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது அவளின் கயல்விழியில்...


அதை பார்த்ததும்... அவனின் புன்னகை எங்கோ தொலைந்து.. முகம் கலாய் இறுகியது...


இப்படி நீ அழுதா மட்டும்... நீ நினைச்சது நடந்திடுமா... போய் முகம் கழுவிட்டு லைட்டா மேக்கப் போட்டுக்கோ... என்றான் கடுமையாக...


அவனின் கடுமையான குரலில் அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.. பயத்துடன் சரி என்று தலையை ஆட்டினாள்...


அவளின் பயந்த மான் விழியிலும்... அப்பாவியான தலை ஆட்டலும்... அவள்பால் அவனை ஈர்த்தது... நொடியில் கோவம் எங்கோ பறக்க...அவனின் உள்ளத்தில் உல்லாசம் குடிக்கொண்டது... இது தான் காதலின் விந்தையோ??


நம்ம கல்யாண போட்டோ அழகா வரனும்ல.. இப்போ பிடிக்கலைன்னா கூட உனக்கு பிடிச்சதுக்கு அப்பறமா பார்க்க அழகா ரசிக்கும்படியா இருக்கனும்... அதுமட்டுமில்லை... நம்மளோட பிள்ளைங்க நாளப்பின்ன.. ஏன் அம்மா உம்முனு இருக்காங்கனு கேட்டுடக் கூடாது பாரு அதான்.. போய் மேக்கப் போட்டுட்டு வெளியே வரும்போது உன்னோட முகத்தில் சிரிப்பு மட்டும் தான் இருக்கனும்... புரியுதா... என்றான் குறுப்பு புன்னகையோடு...


அவளோ அவன் பேசியது என்னவோ புரியாத மொழி போல் முழித்துக் கொண்டிருந்தாள்...


கண் எதிரில் ஒரு மாய பிம்பம் தோன்றியது.... ஜேக்கப் கையில் அவளை போல ஒரு குட்டி தேவதையும்... அவள் கையில் அவனை போல வெள்ளையாய் பிரவுன் நிற விழிகளோடு ஒரு குட்டி இளவரசனும் நின்று இவளை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது....


மேக்கப் போடும் பெண் வந்து அவளை தொட்டு அழைத்து போது தான் கனவிலிருந்து கலைந்தாள்.... கலைந்ததும் அவள் உதடுகள் உச்சரித்த முதல் வார்த்தை... "அபச்சாரம் "...


நேக்கு என்ன ஆகிடுத்து... என்ன இது அபச்சாரம்.. அவன் கிட்ட பேசி பேசி அவனை போலவே நினைக்க ஆரம்பித்துடேனா.. பகவானே.. இந்த பாவியை மன்னிச்சுடு... உடனே தலைமுழுகிடுறேன்...என்று குளிக்க சென்றாள்...


மேக்கப் பெண்ணோ ... என்ன இந்த பொண்ணு லூசு மாதிரி பெனாத்துது... கொஞ்ச நேரம் முந்திதான் மேக்கப் போட்டுவிட்டேன்.. இப்போ வந்து திரும்பவும் மேக்கப் போடச் சொல்லுறான் அந்த வெள்ளைகாரன்..இந்த பொண்ணு என்னனா கடவுள்கிட்ட அபச்சாரம்... குளிக்க போறேன்னு சொல்லுது ... 'கடவுளே அதிகமா காசு தராங்கன்னு இந்த காட்டுல பைத்தியங்கள் கிட்ட மாட்டிகிட்டேனோ "என்று தலையை பிடித்துகொண்டாள்


************************************


முதலில் அவள் முறைப்படி பட்டுவெட்டி சட்டையில் அவளுக்கு மூன்று முடிச்சிட்டு தாலியை கட்டியவன்... பின் அவனின் முறைபடி.... அவளும் வெள்ளை நிற பிராக் அணிந்து... வெள்ளை ரோஜாவாக காட்சியளிக்க.. அவனோ மண்ணுலக தேவன் போல கோட் சூட்டில் அசத்தலாக இருந்தான்... பின் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள... திருமணம் இனிதே முடிந்தது... அவளின் அபச்சாரத்தோடு...


அவன் சொன்னது போல் தான் போட்டோ எடுத்தார்கள் அவ்வளவு அழகாகவும்... நேர்த்தியாகவும்... விதவிதமான போஸில் நிற்க சொல்லி போட்டோ எடுத்தார் போட்டோக்ராப்ர்...


அவன் அவர் சொன்னது எல்லாம் இலகுவாக எடுத்துக்கொண்டு போஸ் குடுக்க அவளோ... நெருப்பு மேல் நிற்பது போல் நிற்க... விடாமல் அவளை அந்த போஸில் நிற்கவைத்தே எடுத்தார் போட்டோக்ராபரும்...


அவள் மனதிலோ... இவன் சொல்லியே இந்த போட்டோக்ராபரை கூப்பிட்டுக் கொண்டு வந்தானா... என்று எரிச்சல் பாட்டுக்கொண்டாள்...
சொல்லவா முடியும் எனக்கு பிடிக்கவில்லை என்று...


மதியம் தான் முடிந்தது அவனின் அலப்பறைகள்... இருவரும் சேர்ந்து டைனிங்கில் உட்கார்ந்து சாப்பிட...


அவன் சாப்பிடும் மட்டன் கிரேவியை பார்த்ததும்... வாஷ்ரூம்க்கு ஓடினாள்...


என்னாச்சி... எதுக்கு வாமிட் பண்ற... நான் இன்னும் ஒன்னுமே உன்னை பண்ணலையே என்றான் கண்ணடித்துக் கொண்டே...


ச்ச்சீ நகருங்கோ அந்த பக்கம்... கல்யாண நாள் அதுவுமா அந்த கருமத்தை சாபிட்றேளே...இது உங்களுக்கே நன்னா இருக்கா.. என்றாள் கோவமாக..



அவளின் கோவம் முகம் அவனுக்கு சிரிப்பை தர... இருந்தாலும் அடக்கிக்கொண்டான்...
அவள் கல்யாண நாள் சொன்னது மனதுக்கு இதத்தை தந்ததும்... இதழில் புன்னகை சிந்த... இதுக்கே இப்படின்னா... இன்னும் போக போக ... நீதான் எனக்கு சமைச்சி போட்டு ஊட்டியும் விடணும் என்றான் குறும்போடு...


என்னது நான் சமைச்சி.. அதுவும் இவனுக்கு ஊட்டிவிடணுமா... அப்படி நடக்கும் காட்சி ஓட... மூச்சி பேச்சியில்லாமல் நெஞ்சில் கைவைத்து சிலையாக நின்றாள்...


அவளின் அசையாத தோற்றத்தை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவளின் கன்னத்தை தட்டி போய் உனக்குன்னு வேற டேபிள் போட்டு இருக்கும் பாரு அதுல சாப்பிட்டு... என்றான்...


ஆச்சரியமாக டைனிங் ரூமிற்கு சென்று எட்டி பார்த்தாள்.. அவளுக்கவே இரண்டு பேர் சாப்பிடும் டேபிள் இருந்தது... மனதுக்கு இதமாக இருந்தாலும்.. முகத்தில் காட்டிக்கொள்ளாமல்... உணவருந்த உட்கார்ந்தாள்...


அவள் அமைதியாக உண்ணுவது பிடிக்காமல் அவளுடன் வம்பளக்க நினைத்து " நமக்கு கல்யாண நாள் இன்னைக்கு... பொயும் போயும் தயிர் சாதம் சாப்பிடறியே... அதான் நீ இப்படி மக்கா இருக்க என்றான் நக்கலாக...


அம்பை "தயிர் சாதம் சாப்பிடறவாள் எல்லாம் மக்குன்னா... இந்த மக்கை ஏன் மட்டன் சாப்பிடுற மகான் கல்யாணம் பண்ணிங்கோ..


பரவால்ல நல்லாவே பேசுற என்று ஒரு மார்க்கமாக அவளை பார்த்துக்கொண்டே " இந்த மகானுக்கு இந்த மக்கு மாமியை தான் பிடிச்சிருக்காம்... என்றான் காதலாக..


அவனின் கோவத்தை கூட சமாளித்த அவளால் இந்த காதல் முகம் எரிச்சல் ஊட்டியது அவளுக்கு... முகத்தை திருப்பிக்கொண்டாள்..


அவனும் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக்கொண்டே உண்டுமுடித்தான்...


**************************************


எந்த இரவு வரக்கூடாது என்று நினைத்தேனோ வந்து விட்டதே.... என்று ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவளின் அருகே காலடி சத்தம்...


பயத்துடன் திரும்பி பார்த்தாள்.. அவளை காதல் பார்வை பார்த்துக்கொண்டே நெருங்கினான் ஜேக்கப்..


இப்போ நீ என்னை ஏத்துக்கிட்டு தான்னாகனும்.. முடியாதுன்னு சொல்லமாட்டல்ல... ஏன்னா... நீ எனக்கு பொண்டாட்டி நான் உனக்கு புருஷன்... அதான் மா உன்னோட பாஷையில் ஏண்ணா....


அப்போ எனக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு தான மாமி...
நீ என் மாமி நான் உன் மாமா..
என்று கண்ணில் மின்னலடிக்க அவளை பார்த்து சொன்னான்...


அவன் கண்ணின் மின்னலை பார்த்ததும் அவளுக்கு தெரிந்து விட்டது ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று..


பயத்தில் வாய் தந்தி அடிக்க .. இ...தோ பாருங்....கோ... நேக்...கு உங்...களை பிடிக்....கலைன்னு முன்...னமே சொல்லி....ருக்கேன்... இப்படி பார்க்....காதேள் நே...க்கு பய....மா இரு...க்கு.... என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே...


அவன் கையிலிருந்த போன்னில் இந்த மாமியோட அப்பா அம்மாவை போட்டு தள்ளுடா... என்ற செய்தி பறந்தது....


ஐயோ வேண்டாம்... என் பெத்தவாள விட்டுடுங்கோ ப்ளீஸ்.. உங்களாண்ட கெஞ்சி கேட்கிறேன்... என்று கண்ணீருடன் கதறினாள்...


கண்களில் கனல் தெறிக்க... நான் உன் கிட்ட என்ன சொன்னேன்... என் பிடிக்கலைன்ற வார்த்தை உன் வாயில் வரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா... என்று கர்ஜித்தான்...


அவன் குரலில் பயந்து ஓரடி பின்னால் சென்றவளின் கை கால்கள் நடுங்கியது.... வாயிலிருந்து வார்த்தை வர மறுக்க கண்களால் கெஞ்சினாள்....


அவள் கண்களை பார்த்தது... அவனின் கோவம் எங்கோ பறக்க... அவளின் அருகே வந்தான்... நான் சொல்றதை கேட்காமல் நடந்தால் இப்படி தான் நடக்கும்... என் பேச்சை கேட்டு பழகு... என கடுகடுவென்று தான் கூறினான் அப்போவும் அவன் குரலுக்கு மென்மை வரவில்லை...


சரி என தலையை உருட்டினாள்...
வாயை திறந்து பதில் சொல்லு... என்றான் காட்டமாக...


ச்... ச...ரி... மன்னி....ச்சி...டுங்கோ... என்றாள் பயத்துடன்...


ஹ்ம்ம்ம் என்று தலையை ஆட்டிவிட்டு வெளியே செல்ல போனவனிடம்...


நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே... என் பெத்தவாள விட்டுட சொல்லுங்கோ... நீங்க சொன்ன மாதிரி கேட்குறேன்... என்றாள் குரலில் தைரியம் திரட்டி...



ஹ்ம்ம்ம்... நீ மன்னிப்பு கேட்டதுமே நியூஸ் போய் இருக்கும்.. இப்போ அவங்க சேப் தான்... என்று திரும்பி செல்ல பார்த்தவனின் கால்கள் அப்படியே அவளை பார்த்து திரும்பியது...


ஆமா.. நீ நான் என்ன சொன்னாலும் கேட்பன்னு சொன்னால...என்ன சொன்னாலும் செய்வீயா.. என்று கண்களில் பழைய மின்னலை மீட்டெடுத்தான்...


அவனின் பேச்சில் போன பயம் உயிர் பயமாக திரும்பியது அவளுக்கு...


அவளை நெருங்கி... எனக்கு பொண்டாட்டியா இரு... என்றுஅவள் காதோடு சொன்னான்...


அவனின் ஹஸ்கி வாய்சில்.. அவளுக்கு மயக்கம் வராத குறைதான்...


அவளின் இதழை நெருக்கிய அவனின் முகம் அவள் முகத்தில் அருகே வந்ததும்...


எங்கிருந்து தான் அவளுக்கு அந்த தைரியம் வந்ததோ பக்கத்தில் இருந்த பூஜாடியை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள்...


வலிதாங்க முடியாமல் "அம்மா" என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தான்...


அவன் எழுந்துக்கொள்வான் என்று பார்த்தாள்...அவன் எழுந்துகொள்ளாமல் இருந்ததில் பயம் பிடித்துக்கொண்டது அவளுக்கு...


பயத்தில் அய்யோ பகவானே.. கொன்னுட்டேனே... நான் ஒரு கொலைகாரி.. கொலைகாரி... கொலைகாரி...
என்று கத்திகொண்டே இருந்தாள்...


சட்ரென்று முகத்தில் நீர் பட... கைகள் இரண்டும் ஏதோ இரும்புசங்கிலியில் சிறைப்பட்டதை போல் இருக்க... கண்ணை திறந்து பார்த்தாள்.... கண்ணெதிரில் ஜேக்கப்பின் முகம்...


அய்யையோ பேய்... பேய்... என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள்...


இதயத்தை திருடி செல்வாள்...

இதோ" இதயத்தை திருடி சென்றவளே" அத்தியாயம் 2.. பதித்து விட்டேன்... படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறவாமல் கூறிவிடுங்கள் தோழிகளே... போன பதிவுக்கு
கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் பண்ண அனைத்து தோழிகளுக்கும் நன்றி... 😍😍
 
Last edited:

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே... !

டீஸர் : 3

" என்னாச்சி மாமி எதுக்கு ரெண்டு நாளா சாப்பிடாம இருக்க... ஒரு வேளை நீ உண்ணாவிரதம் இருந்தா உன்னை விட்டுடுவேன்னு பிளான் பண்றியா... அப்படி கனவுல கூட நினைச்சிடாத... கண்டிப்பா நடக்காது... என்னை விட்டு நீ போறதா இருந்தா பொணமா தான் போகணும்.. அதனால ஓழுங்க போய் சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ என்னை சமாளிக்க உனக்கு சத்து வேணாமா... " என்றான் கிண்டலுடன்..

அவன் பேசியதற்கு ஒன்றும் சொல்லாமலே முட்டியில் தன் தலையை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்...

"ஏய் உன் கிட்டத்தான் பேசுறேன்.. பதிலே பேசாம இருந்தா என்ன அர்த்தம்... முதல்ல என்னை நிமிர்ந்து பாரு மாமி... " என்றான் ஏற துடித்த கோவத்தை அடக்கிய குரலில்...

அவன் சொன்ன ஒரு சொல்லை கூட காதில் வாங்காதவள் போல் அதே நிலையிலே இருந்தாள் அம்பை...

அடக்கி வைத்த கோவத்தை அவளின் மதிக்காத செயல் வெளியே கொண்டுவந்ததும் " ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன்... மதிக்காம அப்படியே இருக்க... அவ்ளோ நெஞ்சழுத்தமா உனக்கு... சொல்ல சொல்ல கேக்காம.. உன்னை... என்று அவளின் அருகே சென்று முரட்டு தனமாக கையை பிடித்து இழுத்து தூக்கினான்...

அவன் தூக்கியதும் அவன் கையோடு விழுந்தாள்... முகம் முழுவதும் அவள் முடிகள் நிரம்பி இருந்தது.. என்னவென்று பதறி அவள் முகத்திலிருந்த முடிகளை அகற்றினான்... அந்த மதிமுகத்தழகி மயங்கி விட்டிருந்தாள்...

அவள் மயங்கி இருந்ததை பார்த்ததும் ஜாக்கப்பின் மனம் ஒன்றும் பதைத்து துடித்து விடவில்லை... அவளின் அமைதியான அழகு முகம் ஈர்த்தில் தான் துடித்தது

பிறை நெற்றி... நீள முகம்.. அதில் இரு மான்விழி... செப்பு உதடுகள்... கூர்மையான மூக்கில் ஒற்றை வைரமாய் மூக்குத்தி தான் அவனை மிகவும் ஈர்த்தது...
மென்மையாய் நிமிட்டினான்... மேலும் மேலும் அவனை ஈர்த்த மூக்குத்தியில் ஒற்றை முத்தம் இட்டான் மனதை அடக்கமுடியாமல்... அதிலிருந்து மீண்டும் வர விருப்பம் இல்லாதவன் போல் அங்கேயே குடிருந்தது அவன் உதடுகள்...

இவனின் இலகுத்தன்மையில் இலகுவான கைப்பிடிப்பில் அவள் உடல் கட்டிலில் சாரிந்ததும் தான்... அவள் நிலையை உணர்ந்தான்...

தன் மடத்தனத்தை நினைத்து தலையில் தட்டிக்கொண்டே டாக்டரை கூப்பிட்டான்...

டாக்டர் அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு அவனிடம் " ரெண்டு நாள் சாப்பிடாததால் மயங்கிட்டாங்க... மேலும் அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு நல்ல ஹெல்த்தியான உணவா குடுங்க... இப்போ எடுத்ததும் சாலிட்டான உணவு குடுக்காதிங்க...லீக்யூட் உணவா குடுங்க... "
என்று விட்டு சென்றார்...

அன்று மாலை தான் விழித்தாள்... விழித்ததும் அந்த கடன்காரனின் முகமே அவளுக்கு முதல் தரிசனம்... அவனை பார்த்ததும் அந்த மதிமுகம் சுருங்கித்தான் போய்விட்டது...

எதுவும் பேசாமல் அவள் உட்கார உதவி செய்தான்... அவள் அவன் கையை தட்டிவிட முயற்சித்தும் அதை ஒதுக்கி விட்டு ... சிறிது நேரத்தில் கையில் ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்...

அவளியிடம் நெருங்கி அவள் முகத்தை தூக்கி அவள் உதட்டில் டம்ளரை வைத்தான்... அவனின் செய்கையில் அவள் கண்கள் விரிய... உதடோ இறுக்கமாக இருந்தது...

அவளின் பிடிவாதத்தால் நெற்றி சுருங்கி.. டம்ளரை எடுத்தான்...

"சரி சொல்லு ஏன் சாப்பிடாம இருந்த... "

அவனின் கேள்விக்கு அவளின் பதிலில் அவன் உதடுகள் "வாட் ஆர் யூ மேட்?? " என்ற பதில் தாங்கி வந்தது...
 
Status
Not open for further replies.
Top