அத்தியாயம் 13
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவருக்காக அனைத்தையும்
விட்டுக்கொடு…
உனக்காக யார் வாழ்கிறாரோ
அவரை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்கதே…
ஆர்.வி ஹோட்டல்ஸ் முன்பு தன் காரை நிறுத்தினான்.. ரிஷி. மறுபக்கத்திலிருந்து பூந்தளிர் இறங்கினாள்..
உடனே ஒரு பணியாள் ஓடிவந்து.. காரின் சாவியை வாங்கினான்..
இருவரும் உள்ளே வந்ததும்… ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும்.. பதட்டத்துடனும்… பரபரப்புடனும்.. காணப்பட்டனர்.. ஹோட்டல் மேனேஜர்.. வேகமாக ரிஷியின் முன் வந்து நின்றார்..
“ நாங்க லஞ்ச் சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. என்று சுருக்கமாக கூறினான்..
“ எஸ்.. சார் நீங்க உங்க கேபின்ல வெய்ட் பண்ணுங்க.. நான் டென் மினிட்ஸ் ரெடி பண்ணிடுறேன்.. என்றான்.
“ ஹ்ம்ம்ம்.. என்று மட்டும் தலையசைத்தவன்.. இரண்டாம் தளத்தில் உள்ள தன் அறைக்கு அழைத்துச்சென்றான்..
“ வா தளிர்.. “
“ இது உங்க ஹோட்டலா.. “
‘ஆமா.. ஏன் உனக்கு தெரியாத.. ‘
“ ம்ம்ம் என உதட்டை பிதுக்க்கினாள்.. “
கள்வனின் கண்கள் மாறியது.. சோபாவில் அமர்ந்து.. தளிரின் கைகளை பிடித்து இழுத்தவன்.. அவளை குழந்தை போல் மடியேந்தினான்… ஆரஞ்சு துண்டு போல் உள்ள அவள் இதழையும்.. அதன் சாறையும்.. தன் இதழ்க்குள் இடம் மாற்றினான்… பூந்தளிரும் அவனுக்கு சளைக்காமல்.. தன் இதழ்தேனை கொடுத்து.. எடுத்துக் கொண்டாள்..
“ மூச்சு காற்றுக்கு ஏங்கியவளை பார்த்து மனம் இறங்கி... தன் இணைக்கு விடுதலை அளித்தான்… “
“ம்ப்ச்.. விடுங்கப்பா இன்னைக்கு ஒரு நாளுலேயே என் லிப்ஸ் எப்படி வீங்கிடுச்சு பாருங்க… என்றாள்
ரிஷி குறும்புடன்.. “ ப்ப்பா ஆமா தளிர்குட்டி.. எப்படி வீங்கிடுச்சு.. பாரு.. பொறு நான் உனக்கு உத்தடம் கொடுக்குறேன்.. சரியாயிடும்.. “
“ எப்படி.. என்றாள் சந்தேகமாய்..”
“ இதோ இப்படி.. என்றவன்.. தன் நாவினால் அவள் உதடுகளை மயிலறகு வருடுவது போல்… வருடினான்.. “
“ பெண்ணவள்.. கிறங்கினாள்.. அடுத்து.. மிகவும் மென்மையாக அழுத்தமின்றி சிறு சிறு முத்தம் கொடுத்து.. அவளை பித்தாக்கிக் கொண்டிருந்தவன்.. அவள் செவியில் உத்தடம் எப்படி இருக்கு.. என்றான் கிசுகிசுப்பாக… “
அதில் தெளிந்து.. வெட்கினாள் அவனவள்.. “ ம்ப்ச்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..
“ ஓகே ஓகே.. இந்த ஹோட்டல் அண்ட் கிளாத் பிளானட் ரெண்டுமே என்னோட சொந்த முயற்சி.. இதேமாதிரி.. இன்னும் நிறைய ஹோட்டல்ஸ் நம்மளுக்கு இறுக்கு… “
“ஒஹ்ஹ.. என்றவள் பெருமிதமாக தன்னவனை பார்த்தாள்…. “
“ சரி கார்ல வரும்போது.. என்ன சீரியஸா மெசேஜ் பண்ணிட்டே வந்த… “
“ அதுவா.. என்னோட அண்ணாக்கு மெசேஜ் பண்ணேன்.. அவரும் என்கூட சென்னை வந்துருக்காரு.. ஒரு மீட்டிங்ல இருக்காங்க.. அண்ணா என்ன லஞ்ச்க்கு கூட்டிட்டு போறதா சொன்னாரு… அதான் அவர்க்கு டெக்ஸ்ட் பண்ணேன்.. “
“ அண்ணாக்கு இன்னும் மீட்டிங் முடியலையாம்.. அவங்க கூட சாப்பிட போற மாதிரி இருக்கும்னு பீல் பண்ணாரு… நான் அவர அவங்க கூட போக சொன்னேன்..”
“ ஹ்ம்ம்ம்.. என்றான் “
“ போன் ஒலிக்க.. ரிஷி எடுத்தான்.. மேனேஜர் எல்லாம்.. ரெடி என்றவுடன்.. சரி என போனை வைத்தவன்.. “
“ பூந்தளிரிடம்.. இளவரசி பசியாற… செல்லலாமா… என்றான் கிண்டலாக.. “
போகலாம் சேவகனே.. என்றாள் அவளும் கிண்டலாய்..
அடிங்க.. நான் உன்ன இளவரசி சொன்ன.. நீ என்ன சேவகன் சொல்ற.. என்று சிரித்தவன்.. வா போகலாம்.. உனக்கு பசிக்குதோ இல்லையோ.. எனக்கு பசிக்குது இன்னைக்கு நீ வர.. எக்ஸைட்மென்ட்ல.. காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடல…
“ ப்ப்ச்.. என்ன நீங்க.. சரி சீக்கிரம் வாங்க… “
இருவரும் கீழே சென்றனர்.. அவன் ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு ஒரு முப்பது பேர் சாப்பிடும் அளவுக்கு பெரிய டைனிங் டேபிள் இருந்தது… அதில் ஒன்றில் அவளை அமரவைத்தவன்.. அடுத்ததில் அவன் அமர்ந்தான்…
என்ன சாப்பிடுற..
நான் எப்பவுமே.. ஹோட்டல் வந்தா ப்ராபரா சாப்புடுவேன்… சோ first சூப் ஐட்டம்ஸ்.. நெக்ஸ்ட் சேஷுவான் ஷிரிம்ப் நூடுல்ஸ்.. மட்டன் கபாப்.. பார்பிக்யூ சிக்கன்.. லாஸ்ட் சிஸ்லிங் சாக்லேட் வால்நட் பிரௌனி.. வித் ப்ளூபெரி ஐஸ்கிரீம்.. என நீண்ட பட்டியல் வாசித்தாள்..
ரிஷி வாய் பிளக்காத குறையாய் அவளை பார்த்தான்.. பின் சற்று சுதாரித்து.. அவள் மெல்லிடையை மனதில் கொண்டு.. ‘ தளிர் இதெல்லாம் நாம ரெண்டு பேருக்குமா.. என்றான்..
நோ.. நோ.. எனக்கு மட்டும்தான்.. உங்களுக்கு வேண்டியதை நீங்க ஆர்டர் பண்ணிக்கோங்க ரிஷி.. என்றாலே பார்ப்போம்..
ரிஷியின் மனது.. இவ்வளவு சாப்பிட்டும்.. எப்படி இவ்ளோ ஒல்லியா இருக்கா.. என யோசித்தது… பிறகு ச்ச.. என் செல்லாக்குட்டி மேல நானே கண்ணு வைக்கலாமா.. என தன்னையே கடிந்துக் கொண்டு.. தன்னவள் சாப்பிடும் அழகை ரசித்துப் பார்த்தான்… தளிரோ சாப்பாடு ஒன்றே முக்கியம் என்பது போல் அதுலையே கண்ணாக இருந்தவள்.. தன் மேல் ஒருவன் கண் வைத்திருப்பதை மறந்தாள்….
கடைசியில் அவள் கேட்டது போல் ஹாட் சிஸ்லிங் ப்ரௌனி வித் ப்ளூபெரி ஐஸ்கிரீம்.. கொண்டுவரப்பட்டது… அதை அவள் கண் மூடி ரசித்து உண்ண.. ரிஷியோ அவளை கண்களால் உண்டான்…
சாப்பிட்ட பிறகே ரிஷியை பார்த்தாள்.. ஹி.. ஹி.. நான் சாப்பிட உட்கார்ந்த வேற நினைப்பே என் மைண்ட்ல இருக்காதுங்க.. என்றாள் அசடு வழிய..
தெரியுது.. சரி போகலாமா.. என எழுந்தான்….. ஆனால் அவன் தட்டில் இன்னும் உணவு இருந்தது…
ரிஷி.. இன்னும் ரைஸ் இருக்கு.. சாப்பிடுங்க என்றாள்..
இல்லை போதும்..
ப்ப்ச்… அப்போ உங்களுக்கு போதும்ங்கற அளவுக்கு ஆர்டர் பண்ணிருக்கணும்.. இப்போ எவ்வளவு சாப்பாடு வேய்ஸ்ட் ஆகுது… எனக்கு இது பிடிக்காது… புள்ளா சாப்பிடுங்க.. என்றாள் கண்டிப்பாய்..
அவள் கோபம் உணர்ந்து அமைதியாய் சாப்பிட்டான்..
கடைசியாக ஸ்வீட் பீடா மற்றும் அவர்களே தயாரித்த பாக்கு தரப்பட்டது.. முதலில் ஒன்றை எடுத்து சாப்பிட்ட தளிர்.. அதில் மீதம் உள்ள இரண்டையும் எடுத்துக் கொண்டாள்.. அதைப் பார்த்து ரிஷி முறைக்க.. அவளோ அசடு வழிய சிரித்து… எனக்கு ஸ்வீட் பீடா ரொம்ப பிடிக்கும்ங்க.. அதுவும் இந்த பாக்கு சூப்பரா இருக்கு.. ப்ளீஸ் இன்னும் ரெண்டு தர சொல்றிங்களா அப்புறம் சாப்பிட்றதுக்கு.. என தலையை சாய்த்து கெஞ்சிக் கேட்டாள்..
அவள் கேட்ட அழகில் சொக்கியவனின் தலை தானாக தலையசைத்தது.. பேரரை பார்த்தான்.. அவன் அவர்கள் கண் முன்பே பீடா தயாரித்தான்..
பெரிய வெற்றிலையை எடுத்து.. இரண்டாக மடக்கி காம்பை வி வடிவில் வெட்டினான்.. பின் பக்கம் இலையை திருப்பி சுண்ணாம்பு, தேனை தடவினான்.. பிறகு குல்கந்த், ஸ்வீட் சோம்பு, பப்பாயா டூட்டி ப்ரூட்டி, பதப்படுத்தப்பட்ட தேங்காய், பாக்கு, ஏலக்காய் தூல். முதலியவற்றை வைத்து மடித்து ச்செரி கொண்டு டூத்பிக் குத்தி... ஒரு குட்டி பாக்குவகை பாக்சில் வைத்து கொடுத்தான்..
அவன் செய்வதையெல்லாம்.. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள்.. அவன் கொடுத்ததும் வாங்கி தன் கைப்பையில் வைத்தாள்..மேலும் பத்து பாக்கெட்டுகளை அவளே கேட்டு வாங்கிக்கொண்டு.. ரிஷியை பார்த்து இளித்து வைத்தவள்.. “ ரிஷி இந்த பாக்கு சூப்பரா இருக்கு.. இத நீங்களே தயாரிச்சிங்களா.. என்றாள்
ஆமா.. ஒரு சிலருக்கு பீடா பிடிக்குறதில்ல.. அதுனால இதையும் சேர்த்துக்கிட்டோம்.. இதுல ஸ்வீட் சோம்பு, வெள்ளரி விதை, கற்கண்டு, சீரக மிட்டாய், கிராம்பு, ஏலக்காய்.. இதெல்லாம் இருக்கும்.. இதை தினமும் பிரெஷா தயாரிப்போம்.. என்றான்..
ஒஹ்ஹ.. என்று கண்களை விரித்தாள்…
ரிஷி அவள் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.. இப்பயாவது போகலாமா மேடம்.. என்றவன்.. வா ஹோட்டல சுற்றி பார்க்கலாம்..
ஹ்ம்ம்ம் என்றவள்.. அவனோடு கை கோர்த்து சென்றாள்.. சுற்றியுள்ளவரின் ஆச்சரிய பார்வையை இருவரும் கண்டுகொள்ளவில்லை..