தனு
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UKVN-2:
1
"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா. அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.
"நான் என்ன தப்பு பண்ணுனேன் பேபி.. எதுக்கு நீ என்னை ஏமாத்துனாய்..உனக்கு என்னோட உயிர்தான் வேணும்னா என்கிட்டேயே கேட்டிருக்கலாமே.. நானே சந்தோஷமா உனக்கு என்னோட உயிரை கொடுத்து இருப்பேனே.. போயும் போயும் ஒரு சின்ன குழந்தைகிட்ட உன்னோட கொடூரத்தை காமிச்சிருக்கியே.. நீ
எல்லாம் பொண்ணா.. ராட்சசிடி.." என்று ஏக்கத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடித்தான்..
" அருண்.. பிளீஸ்.. நான் சொல்லவருவதை கேளுங்களே.." என்று தன்னிலை விளக்கம் குடுக்க முயல,
அவனோ ," உன்னை என்னோட கையாலையே கொல்லணும்னு இருந்தேன்..அதுனாலதான் உனக்கு குடுத்த ஜூஸ்ல விஷத்தை கலந்து குடுத்தேன்.. எத்தனை உயிரா உன்னை காதலிச்செனோ இப்போ அந்த அளவிற்கு உன்னை வெறுக்கிறேன்.. " என்று அவளை பார்த்து கத்தினான்..
" நீங்க என்னை வெறுத்தாலும் உங்ககிட்ட என்னோட காதலும் இருக்கு அருண்.. இல்லேன நீங்க நேத்து என்னோட .. என்கிட்ட உரிமை எடுத்திருக்கமாட்டீங்க..இப்பவும் உங்க மனசுல நான் இருக்கேன் ... அதுவே எனக்கு போதும்.. உங்கக்கூட நான் ஒரு நாள் வாழ்ந்துட்டேன்.. உங்க கையால சாகபோறேன்.. அதுவே
எனக்கு நிம்மதி.. நான் பண்ணுனது தப்புதான் ... ஆனால் வருண் விசயத்துல நான் தப்பு பண்ணுலை.. அதை மட்டும் நம்புங்க.." என்று உயிரை கையில் தேக்கியபடி வாயில் ரத்தம் வழிய, திக்கி திணறி ஒருவாறு கூறி முடித்தாள்..
2
அவள் பேசியதை கேட்டவன் மாநாடு காதலின் பால் உருக்கத்தான் செய்தது..இருந்தும் அவள் மேல் உள்ள வெறுப்பு அவள் சொல்வதை , அவளின் காதலை,ஆதங்கத்தை அவனின் மனதில் பதிய மறுத்தது.. விளைவு .. இன்று அவளின் உயிர்க்கு உயிரான காதல் மனைவி , உயிரோடு வதைபடுகிறாள் அவனின் கைகளால்..
அன்று வழிய சென்று தனது காதலை உணர்த்தியவன், இன்றோ அவளின் காதலை உணராமல் வெறுப்புடன் நோக்குகிறான்..அன்று வெறுப்புடன் இருந்தவள் , இதோ இன்று அவனது காதலில் உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறாள்..தனது கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்..
"என்ன கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாயா ... இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?.. காதலர் தினம்.. காதலர்களுக்கு தான் அந்த தினம் எல்லாம்.. உனக்கு எனக்கு அதெல்லாம் இல்லை.. அதுக்கான தகுதி உனக்கில்லை.. உன்னை காதலித்து கல்யாணம் செய்ததால் எனக்கும் அந்த தகுதி இல்லை.. இருந்தாலும் சாகபோற உனக்காக நான் ஒண்ணு வச்சிருக்கேன்.. என்ன தெரியுமா?" என்று அடக்கபட்ட இயலாமை கோபத்துடன் கேட்டான்..
விசத்தின் தாக்கத்தால், கண்கள் மறுகிய நிலையில் , அவனது பிம்பத்தை தனது இதயத்தில் சேமித்துக்கொண்டு இருந்தாள் அந்த பேதையவள்.. அவன் கூறிய விஷயங்கள் அவள் காதை சென்றடைந்தாலும் மனமோ அவனது கோபத்தை ரசித்தது.. 'இந்த நிலையில் என்னால் வருணின் மரணத்தை விளக்க முடியவில்லை.. ஒரு நாள் உண்மை தெரியவரும்.. ஆனால் உனக்கு மட்டும் உண்மை தெரியவேக்கூடாது... அது தெரிஞ்ச நீ தாங்கவே மாட்ட அருண்... ' என்று மனதில் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தவள்.. அவனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை..
3
அவனோ கண்கள் மறுகிய நிலையில் இருக்கும் அவளை கண்டு இளகிய மனத்தினை அடக்கியவன், "பரிசு.. இந்த காதலர் தினத்திற்காக நான் உனக்கு தரும் காதல் பரிசு.. உன்னோட காதலர் தின பரிசு .. நீ இத்தனை நாள் ஆசைப்பட்ட ஒரு பரிசை நானே உனக்கு தருகிறேன்..என்னோட உயிர்.. இதுக்காக என்னோட
காதலை கொச்சை படுத்தி விட்டாய்.இன்னைக்கு நான் உனக்கு அதை பரிசா தருகிறேன் . உன்னோட காதல் பொய்யா இருக்கலாம். என்னோட காதல் உண்மை.. உன்னோட துரோகத்தை என்னால் மன்னிக்க இயலும். ஆனால் உன்னால போன ஒரு உயிரை அவர்களால் மன்னிக்க இயலுமா என்று தெரியவில்லை. அதுனால்
இந்த முடிவு." என்று அவனும் சரிந்து கீழே விழுந்தான்.
அவன் சரிந்து விழுந்ததை கண்டவள், அவன் அருகே செல்ல முயற்சிக்க , அவளால் முடியவில்லை.. உடலில் உள்ள பாகங்களில் விஷம் பரவ கைகளும் கால்களும் மரத்து வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக, இருந்தவள் , அவனை நோக்கி தனது இடுப்பின் மூலம் நகர முயற்சிக்க , அந்தோ பரிதாபம் அதுவும் அவளை சதி செய்தது.. அவளால் நகர முடியவில்லை.. இருந்தும் முயற்சிசெய்தாள்.. அணையபோகும் விளக்கின் ஜோதி போல, அந்த கடைசி நிமிடத்தில் அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உந்த, அவள் அவனின் முகத்தருகே சென்று விழுந்தாள்.. தனதுகைகளை கொண்டு அவனது முகத்தை தடவ, அதில் விழித்தவன் , அவள் இருந்த நிலையை கண்டு கண்ணில் கண்ணீர் பெருக அவளை தன் மடியில் படுக்க வைத்து அழுதான்.. அதற்கு காரணம் அவன் என்பதை மறந்து அவளது முகத்தை வருடி அழுதுகொண்டு இருந்தான்..
என்ன இருந்தாலும் அவனின் காதல் மனைவி அல்லவா.. அவள் மீது இருந்த வெறுப்பு அவளை கொல்ல தூண்டியது.. இப்போது அதே காதல் அவளின் நிலையை நினைத்து வருந்த வைக்கிறது.. அவளது இறுதி சில மூச்சுக்கள் அவனது மடியில் இருந்தபடி விட, கண்கள் சொருக , "யுக்தா.. யுக்தா... யு..க்தா.. " என்று அவளை
தட்டி எழுப்ப, அவனது பின் மண்டையில் இரும்பால் அடி விழுந்தது....'யுக்தா' என அவன் கீழே சாய, அவளோ பதறி, இழுக்க அவளது இறுதி மூச்சு உயிர் எல்லாமே அடங்கியது.. மீண்டும் அவனது மண்டையில் அடி விழ திரும்பி அந்த அடித்த உருவத்தை பார்த்தான்.. அருணின் விழிகள் அங்கே இருந்தவர்களை
மனதில் பதிய வைத்தது.. அவன் வாய் திறக்க , அவனது வாயிலும் அடிக்க , அப்போது உள்ள வந்த
திவ்யா ,"இன்னும் இவன் சாகவில்லையா.. " என்றபடி உள்ளே வந்தாள்..
4
உள்ளே வந்தவள் , அருணை பார்க்க , அருகே இருந்தவன் அவனது முடியை பிடித்து முகத்தை திவ்யாவிற்கு காட்ட, அவளோ குனிந்து , "சோ சேட்.. இதுக்கு நீ உன் கையாலையே உன்னோட ஆசை அருமை காதல் மனைவியை கொன்னுட்ட.. பாவம் அவள் ..இல்லை இல்லை .. பாவம் எல்லாம் இல்லை .. அவளுக்கு
தேவை தான்.. எனக்கு தெரியாம அவ உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்தது அவளோட தப்பு.. நீ ஆசைப்பட்ட பாரு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. அவ சாகணும்.. உன்னோட கையால அவளை கொல்லணும்னு நினைத்தேன் .. அதேமாறி பண்ணிடியேடா.. வெரி குட்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..
அதேமாறி நீ என்னோட சந்தோஷத்தை பார்த்துட்டே செத்து போ.. " என்று இரும்பு தடியால் அடிக்க ,அவனது உயிர் அவனை விட்டு பிரிந்தது..
வேலை முடிந்த திருப்தியில், சோ சேட்.. பாவம் .. ரெண்டு பேருமே செத்து போய்ட்டாங்க.. என்னோட பிளான் வெற்றி அடைந்து விட்டது...இனிமேல் என்னோட ராஜ்ஜியம் தான்.." என்று பேய் போல சிரித்து தனது வெற்றியை கொண்டாடிகொண்டு இருந்தாள் திவ்யா..
தகவல் சொல்லவேண்டியவர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி , மருத்துவமனைக்கு எடுத்து சென்று போஸ்ட் மார்ட்டம் பண்ணியஉடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கினாள் திவ்யா..
அதன் பின் நடைபெறவேண்டிய சடங்குகள் இருவரது வீட்டினரின் முன்னிலையில் நடக்க, வஞ்சத்திலும் சூழ்ச்சியிலும் ஏமாந்து இரு உயிர்கள் பறிபோனது.. இரு உடல்களும் ஒன்றாக வைத்து சிதையூட்ட ஏற்பாடு செய்ய , திவ்யா அதனை தடுத்து தனித்தனியாக சிதையூட்ட செய்தாள்.. இருவரது உடல் கூட ஒன்று
சேரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான் ..
மனதில் காதல் இருந்தும் வெறுப்புடன் இருந்த இருவரும் தங்களது தவறை உணராது உயிரைவிட்டனர்.. அவர்களின் இதயமில்லா உடலும் எரிந்து சாம்பல் ஆனது...
இதோ இத்தோடு அருண் - சம்யுக்தா கதை முடிந்ததாக எண்ணி சந்தோசபட்டுக்கொண்டிருக்கும் திவ்யா, செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பாளா? அதை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்..
1
"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா. அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.
"நான் என்ன தப்பு பண்ணுனேன் பேபி.. எதுக்கு நீ என்னை ஏமாத்துனாய்..உனக்கு என்னோட உயிர்தான் வேணும்னா என்கிட்டேயே கேட்டிருக்கலாமே.. நானே சந்தோஷமா உனக்கு என்னோட உயிரை கொடுத்து இருப்பேனே.. போயும் போயும் ஒரு சின்ன குழந்தைகிட்ட உன்னோட கொடூரத்தை காமிச்சிருக்கியே.. நீ
எல்லாம் பொண்ணா.. ராட்சசிடி.." என்று ஏக்கத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடித்தான்..
" அருண்.. பிளீஸ்.. நான் சொல்லவருவதை கேளுங்களே.." என்று தன்னிலை விளக்கம் குடுக்க முயல,
அவனோ ," உன்னை என்னோட கையாலையே கொல்லணும்னு இருந்தேன்..அதுனாலதான் உனக்கு குடுத்த ஜூஸ்ல விஷத்தை கலந்து குடுத்தேன்.. எத்தனை உயிரா உன்னை காதலிச்செனோ இப்போ அந்த அளவிற்கு உன்னை வெறுக்கிறேன்.. " என்று அவளை பார்த்து கத்தினான்..
" நீங்க என்னை வெறுத்தாலும் உங்ககிட்ட என்னோட காதலும் இருக்கு அருண்.. இல்லேன நீங்க நேத்து என்னோட .. என்கிட்ட உரிமை எடுத்திருக்கமாட்டீங்க..இப்பவும் உங்க மனசுல நான் இருக்கேன் ... அதுவே எனக்கு போதும்.. உங்கக்கூட நான் ஒரு நாள் வாழ்ந்துட்டேன்.. உங்க கையால சாகபோறேன்.. அதுவே
எனக்கு நிம்மதி.. நான் பண்ணுனது தப்புதான் ... ஆனால் வருண் விசயத்துல நான் தப்பு பண்ணுலை.. அதை மட்டும் நம்புங்க.." என்று உயிரை கையில் தேக்கியபடி வாயில் ரத்தம் வழிய, திக்கி திணறி ஒருவாறு கூறி முடித்தாள்..
2
அவள் பேசியதை கேட்டவன் மாநாடு காதலின் பால் உருக்கத்தான் செய்தது..இருந்தும் அவள் மேல் உள்ள வெறுப்பு அவள் சொல்வதை , அவளின் காதலை,ஆதங்கத்தை அவனின் மனதில் பதிய மறுத்தது.. விளைவு .. இன்று அவளின் உயிர்க்கு உயிரான காதல் மனைவி , உயிரோடு வதைபடுகிறாள் அவனின் கைகளால்..
அன்று வழிய சென்று தனது காதலை உணர்த்தியவன், இன்றோ அவளின் காதலை உணராமல் வெறுப்புடன் நோக்குகிறான்..அன்று வெறுப்புடன் இருந்தவள் , இதோ இன்று அவனது காதலில் உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறாள்..தனது கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்..
"என்ன கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாயா ... இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?.. காதலர் தினம்.. காதலர்களுக்கு தான் அந்த தினம் எல்லாம்.. உனக்கு எனக்கு அதெல்லாம் இல்லை.. அதுக்கான தகுதி உனக்கில்லை.. உன்னை காதலித்து கல்யாணம் செய்ததால் எனக்கும் அந்த தகுதி இல்லை.. இருந்தாலும் சாகபோற உனக்காக நான் ஒண்ணு வச்சிருக்கேன்.. என்ன தெரியுமா?" என்று அடக்கபட்ட இயலாமை கோபத்துடன் கேட்டான்..
விசத்தின் தாக்கத்தால், கண்கள் மறுகிய நிலையில் , அவனது பிம்பத்தை தனது இதயத்தில் சேமித்துக்கொண்டு இருந்தாள் அந்த பேதையவள்.. அவன் கூறிய விஷயங்கள் அவள் காதை சென்றடைந்தாலும் மனமோ அவனது கோபத்தை ரசித்தது.. 'இந்த நிலையில் என்னால் வருணின் மரணத்தை விளக்க முடியவில்லை.. ஒரு நாள் உண்மை தெரியவரும்.. ஆனால் உனக்கு மட்டும் உண்மை தெரியவேக்கூடாது... அது தெரிஞ்ச நீ தாங்கவே மாட்ட அருண்... ' என்று மனதில் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தவள்.. அவனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை..
3
அவனோ கண்கள் மறுகிய நிலையில் இருக்கும் அவளை கண்டு இளகிய மனத்தினை அடக்கியவன், "பரிசு.. இந்த காதலர் தினத்திற்காக நான் உனக்கு தரும் காதல் பரிசு.. உன்னோட காதலர் தின பரிசு .. நீ இத்தனை நாள் ஆசைப்பட்ட ஒரு பரிசை நானே உனக்கு தருகிறேன்..என்னோட உயிர்.. இதுக்காக என்னோட
காதலை கொச்சை படுத்தி விட்டாய்.இன்னைக்கு நான் உனக்கு அதை பரிசா தருகிறேன் . உன்னோட காதல் பொய்யா இருக்கலாம். என்னோட காதல் உண்மை.. உன்னோட துரோகத்தை என்னால் மன்னிக்க இயலும். ஆனால் உன்னால போன ஒரு உயிரை அவர்களால் மன்னிக்க இயலுமா என்று தெரியவில்லை. அதுனால்
இந்த முடிவு." என்று அவனும் சரிந்து கீழே விழுந்தான்.
அவன் சரிந்து விழுந்ததை கண்டவள், அவன் அருகே செல்ல முயற்சிக்க , அவளால் முடியவில்லை.. உடலில் உள்ள பாகங்களில் விஷம் பரவ கைகளும் கால்களும் மரத்து வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக, இருந்தவள் , அவனை நோக்கி தனது இடுப்பின் மூலம் நகர முயற்சிக்க , அந்தோ பரிதாபம் அதுவும் அவளை சதி செய்தது.. அவளால் நகர முடியவில்லை.. இருந்தும் முயற்சிசெய்தாள்.. அணையபோகும் விளக்கின் ஜோதி போல, அந்த கடைசி நிமிடத்தில் அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உந்த, அவள் அவனின் முகத்தருகே சென்று விழுந்தாள்.. தனதுகைகளை கொண்டு அவனது முகத்தை தடவ, அதில் விழித்தவன் , அவள் இருந்த நிலையை கண்டு கண்ணில் கண்ணீர் பெருக அவளை தன் மடியில் படுக்க வைத்து அழுதான்.. அதற்கு காரணம் அவன் என்பதை மறந்து அவளது முகத்தை வருடி அழுதுகொண்டு இருந்தான்..
என்ன இருந்தாலும் அவனின் காதல் மனைவி அல்லவா.. அவள் மீது இருந்த வெறுப்பு அவளை கொல்ல தூண்டியது.. இப்போது அதே காதல் அவளின் நிலையை நினைத்து வருந்த வைக்கிறது.. அவளது இறுதி சில மூச்சுக்கள் அவனது மடியில் இருந்தபடி விட, கண்கள் சொருக , "யுக்தா.. யுக்தா... யு..க்தா.. " என்று அவளை
தட்டி எழுப்ப, அவனது பின் மண்டையில் இரும்பால் அடி விழுந்தது....'யுக்தா' என அவன் கீழே சாய, அவளோ பதறி, இழுக்க அவளது இறுதி மூச்சு உயிர் எல்லாமே அடங்கியது.. மீண்டும் அவனது மண்டையில் அடி விழ திரும்பி அந்த அடித்த உருவத்தை பார்த்தான்.. அருணின் விழிகள் அங்கே இருந்தவர்களை
மனதில் பதிய வைத்தது.. அவன் வாய் திறக்க , அவனது வாயிலும் அடிக்க , அப்போது உள்ள வந்த
திவ்யா ,"இன்னும் இவன் சாகவில்லையா.. " என்றபடி உள்ளே வந்தாள்..
4
உள்ளே வந்தவள் , அருணை பார்க்க , அருகே இருந்தவன் அவனது முடியை பிடித்து முகத்தை திவ்யாவிற்கு காட்ட, அவளோ குனிந்து , "சோ சேட்.. இதுக்கு நீ உன் கையாலையே உன்னோட ஆசை அருமை காதல் மனைவியை கொன்னுட்ட.. பாவம் அவள் ..இல்லை இல்லை .. பாவம் எல்லாம் இல்லை .. அவளுக்கு
தேவை தான்.. எனக்கு தெரியாம அவ உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்தது அவளோட தப்பு.. நீ ஆசைப்பட்ட பாரு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. அவ சாகணும்.. உன்னோட கையால அவளை கொல்லணும்னு நினைத்தேன் .. அதேமாறி பண்ணிடியேடா.. வெரி குட்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..
அதேமாறி நீ என்னோட சந்தோஷத்தை பார்த்துட்டே செத்து போ.. " என்று இரும்பு தடியால் அடிக்க ,அவனது உயிர் அவனை விட்டு பிரிந்தது..
வேலை முடிந்த திருப்தியில், சோ சேட்.. பாவம் .. ரெண்டு பேருமே செத்து போய்ட்டாங்க.. என்னோட பிளான் வெற்றி அடைந்து விட்டது...இனிமேல் என்னோட ராஜ்ஜியம் தான்.." என்று பேய் போல சிரித்து தனது வெற்றியை கொண்டாடிகொண்டு இருந்தாள் திவ்யா..
தகவல் சொல்லவேண்டியவர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி , மருத்துவமனைக்கு எடுத்து சென்று போஸ்ட் மார்ட்டம் பண்ணியஉடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கினாள் திவ்யா..
அதன் பின் நடைபெறவேண்டிய சடங்குகள் இருவரது வீட்டினரின் முன்னிலையில் நடக்க, வஞ்சத்திலும் சூழ்ச்சியிலும் ஏமாந்து இரு உயிர்கள் பறிபோனது.. இரு உடல்களும் ஒன்றாக வைத்து சிதையூட்ட ஏற்பாடு செய்ய , திவ்யா அதனை தடுத்து தனித்தனியாக சிதையூட்ட செய்தாள்.. இருவரது உடல் கூட ஒன்று
சேரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான் ..
மனதில் காதல் இருந்தும் வெறுப்புடன் இருந்த இருவரும் தங்களது தவறை உணராது உயிரைவிட்டனர்.. அவர்களின் இதயமில்லா உடலும் எரிந்து சாம்பல் ஆனது...
இதோ இத்தோடு அருண் - சம்யுக்தா கதை முடிந்ததாக எண்ணி சந்தோசபட்டுக்கொண்டிருக்கும் திவ்யா, செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பாளா? அதை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்..