UKVN - 1:
மாலை மங்கி இரவின் தொடக்கத்தில் சென்னை மாநகரின் வெளியே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக வாங்கபட்ட ஆடி கார் சாலையை கிழித்து சென்று கொண்டு இருந்தது.
அதில் உள்ளே இருந்தவனின் மனமோ உலைகலனை விட அதிகமாக கொதித்துக்கொண்டு இருந்தது. அதை தனது விரிந்த புன்னகை முகத்தில் மறைத்தபடி, வேகமாக சென்று கொண்டு இருந்தான்.
அவனது அருகில் அமர்ந்து இருந்தவளோ , அவனது வேகத்தை கண்டு பயப்படாமல், அவனையே காதலாக பார்த்துக்கொண்டு இருந்தாள்..
அவன் திரும்பி பார்க்க, அவளது கண்களில் தோன்றிய காதலில் ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் , அதை அவளது நடிப்பு என்று ஒதுக்கிதள்ளினான்.. அவளை பார்த்து சிரித்துவிட்டு , இன்னும் வேகமாக வண்டியை செலுத்திக்கொண்டு அவனது ரிசார்ட் க்கு சென்றான்..
பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் இறங்கி மறுபக்கம் சென்று அவளை தனது கைகளில் ஏந்திக்கொண்டு அவனது அறைக்கு சென்றான்..
கைகளில் இருந்தவளோ , அவனது அணைப்பில் முகம் சிவக்க அவனை பார்க்க முடியாமல் நெஞ்சிலேயே சாய்ந்து அவனது இதயதுடிப்பை ரசிக்க தொடங்கினாள்..
அவள் மனமோ ,'நான் இறந்தாலும் இந்த இதயத்தை இதன் துடிப்பை கேட்டுக்கொண்டே இறக்கவேண்டும், கடவுளே .. எனது இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றி விடு.' என்று கடவுளிடமும் கோரிக்கை வைத்தாள்..
அறைக்குள் நுழைந்தவன் , அவர்களுக்கென்று தனியாக அழகாக அமைக்கபட்ட முதலிரவு அறையை பார்த்து விட்டு, அவளை பெட் மீது கிடத்தினான்..
அவனது இதயதுடிப்பு தன்னை விட்டு விலகிடுமோ என்ற பயத்தில் விழித்தவள் ,அவன் தன்னை பெட் மீது விட்டவுடன் , அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து , அவனை தனது முகத்தின் அருகே இழுத்தாள்.
அவனது கண்களை நேராக பார்த்து, " அருண் ...ஐ அம் இன் லவ் வித் யு.. ஐ நோ.. நீயும் என்னை லவ் பண்ணுற.." என்று கூறியவள் அவனை பேசவிடாமல் அவனது இதழ்களை சிறை செய்தாள் சம்யுக்தா..
அவளது காதலில் கட்டுண்டவன் கணவனாக அவளிடத்து உரிமை எடுக்க தொடங்கினான் மனதில் உள்ள கோபங்களை மறந்துவிட்டு..அவனது தேடல் தொடங்கி, அவளுள்ளே புதைந்தவன் மனதில் நிம்மதி கூடி
ஏறியது.. அதன் கூடவே அவள் மீது உள்ள வெறுப்பும்..தனது கூடலை முடித்துக்கொண்டு அவளை விடுவித்தவன் உறங்காமல் காலை செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தான்..
மறுநாள் காலை எழுந்தவள் ,அவன் அருகில் இல்லாது, நேற்றைய நிகழ்வை நினைத்து அவளது முகம் செம்மையுற்றது..
அவள் குளித்து தயாராகி வர, அருணோ அவளிடம் ஜூஸ் குடுத்தான்.. அதை வாங்கி பருகியவள் அவனை பார்த்துக்கொண்டே அதை ரசித்து ருசித்து பருகினாள்..
அவனிடம் கண்ணாடி டம்பளரை தந்தவள் , நெருங்கி அவனருகே சென்று,"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா.
அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.
அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.
***********************************************
சென்னை விமான நிலையம்..
வழக்கம் போல , செக்கிங் செக்யூரிட்டி என்று அனைத்தையும் முடித்துவிட்டு வெளியே வந்த விஜய் , அவனது கைபேசிக்கு வந்த கார் நம்பரை தேடிபார்க்க, அதனுள் ஏறினான்..
"டிரைவர் .. கோ டூ சோழ பேலஸ் " என்று கட்டளையிட்டு தனது மொபைலை நோண்ட, வண்டியும் வேகமெடுத்து சென்னை டிராஃப்பிக்கில் மாட்டி ஒருவாறு வந்துகொண்டு இருக்க , காரின் வேகம் மட்டுபட்டு நின்றது.
டிரைவர் அவனிடம் மன்னிப்பு வேண்டி , வண்டியின் பேனட்டை திறந்து அதை சரிபார்க்க , உள்ளே ஏசியின் வழியாக வந்த குளோரோஃபார்ம் உபயத்தில் , விஜய் மயக்கமானான்.. அவனது உடமைகள் எல்லாவற்றையும் வீசி எறிந்துவிட்டு, வேறு உடை அணிய வைத்து அவனை அவர்களது இடத்திற்கு கூட்டிசென்றார்கள்..
அந்த நாள் மாலை... சென்னையில் உள்ள அனைத்து காவலர்களும் முடுக்கிவிடப்பட்டு விஜயை தேடும் பணியினை மேற்கொண்டனர்..பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்..
மறுநாள் அனைத்து செய்திகளிலும் இதே செய்திதான்..
'நேற்று காலை , பிரபல சினிமா நடிகரும், தொழிலதிபருமான விஜய் தேவ் என்னும் VDK சில மறைமுகமான இயக்கங்களால் கடத்தபட்டுள்ளார்.. இதுவரை அவரை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.. '
யார் அவர்கள்... விஜயை எதற்கு கடத்தவேண்டும்?...