Jananiramakrishnan
ஜனனி ராமகிருஷ்ணன்
டேய் ரிஷி! நீ பாட்டுக்கு இவ்வளவு தூரம் நடக்க வைச்சே கூட்டிட்டு வந்துட்ட சாப்பிடுறதுக்கு என்ன பன்னுரது... இதுக்கு மேல என்னால நடக்க முடியாது டா என்று மூச்சு வாங்க சொல்லி கொண்டு இருந்தான் ஆகாஷ்.
பச்.....எனக்கு மட்டும் பசிகாமயா இருக்கு......எனக்கும் அதே தான்!இங்க பக்கத்துல ஏட்டியம் எங்கயாச்சும் இருக்கானு முதல்ல பார்க்கனும்.
டேய் என்கிட்ட ஏட்டியம் கார்டு இல்லை டா.... எல்லாம் கார்லயே வெடிச்சுடுச்சே.....இப்போ என்ன பண்ணுரது என்று ஒன்றும் புரியாமல் ரிஷியை பார்த்து கேட்டான் ஆகாஷ்.
என்கிட்ட என்னோட ஏட்டியம் கார்டு இருக்கு கவலை படாதிங்க, அதுல இருந்து பணம் எடுத்து சாப்பிட்டு அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் யோசிக்கலாம்.
இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தவர்களுக்கு ஏட்டியம் கண்ணில் பட......பணம் எடுக்க ரிஷி போக....தனக்கு கால் வலிப்பதினால் வெளியில் அமர்ந்து கொண்டான் ஆகாஷ்.
ஒரு 40,000ருபாயை ஏட்டியமிலிருந்து ரிஷி எடுத்தவன் பணத்தை பாதியாக பிரித்து ஆகாஷின் சட்டை பாக்கேட்டில் வைத்தவன்..."திடீரென ஏதோ ஓன்று அவனை தாக்க சட்டேன்று கையை எடுத்தவன் ஒன்றும் புரியாமல் ஆகாஷிடமிருந்து சற்று நகர்ந்து விட்டான்".
ஏதோ யோசனையில் அமர்ந்து கொண்டு இருந்த ஆகாஷ் தன் சட்டை பையில் ரிஷி பணம் வைத்தவுடன்,"டேய் என்ன இதுலாம்... இந்தா பணத்த புடி என்றான்".
ஆகாஷ் சார் எதாவது ஆவசரத்துக்கு வேண்டும் என்றால் என்ன செய்வது!"இதுபோல் ஏட்டியம் நாம போற இடத்துல இருக்குமான்னும் தெரியல, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல!...ஆதானால இதை வச்சிகோங்க".
சரி இங்கே பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கு"உட்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன்,வா சாப்பிட்டு போயிடலாம்....இப்பவே நைட் ஆகிடிச்சு டா இதுக்கு மேலே நடக்கனும் நாலும் தேம்பு வேணும் டா".
ம்ம்ம்......என்ற ரிஷி அந்த ஹோட்டலிற்கு ஆகாஷுடன் நடந்தான்.
ஹோட்டலில் மினி சைவ தாலியை தனக்கும் ரிஷிக்கும் ஹந்தியில் ஆர்டர் கொடுத்த ஆகாஷ் ரிஷியின் புறம் திரும்பி என்ன ரிஷி ஏதோ அப்போதிலிருந்து யோசனையாவே இருக்க?
பச்.....உங்க கார் அக்சிடேன்ட் எதார்த்தமா நடக்கல ஆகாஷ் சார்.....யாரோ திட்டம் மிட்டே நடக்க வைத்தது,அதை யார் செஞ்சாங்கன்னு தான் எனக்கு தெரியலை ஆனால் இதுக்கு மேலே இங்கே இருக்குறதும் நமக்கு கண்டிப்பா சேப் இல்லைன்னு மட்டும் தெரியுது, ஆதான் என்ன பன்னுரதுனு யோசிச்சுட்டு இருக்குறேன்.
உனக்கு எப்படி தெரியும்?... என்று ஆகாஷ் ரிஷியை பார்த்து திவிரமான கூறலில் கேட்க.
எனக்கு தலைவலி வந்ததே அதனால தான்...... அப்போ அக்சிடேன்ட் நடக்க போறதுக்கு முன்னாடி மொத்தத்தையும் என் கண் விழியில் தெரிந்தது.உங்ககிட்ட அதை பற்றி சொல்ல வருவதற்குள் தலைவலி உயிரே போற அளவுக்கு வலித்தது. பிறகு அங்கு என்ன நடந்ததுனு உங்களுக்கே தெரியுமே என்று ஆகாஷை பார்த்து கூறினான்.
அதற்குள் இவர்கள் ஆர்டர் பண்ன மினி சைவ தாலி உணவு வந்தவுடன் கடும் பசியில் இருந்த இருவருமே உண்ண ஆரம்பித்தனர்.
மினி சைவ தாலி இதில் சாப்பாத்தி,நான், சென்னா மாசாலா,பச்சடி,டால்,கீ ரைஸ், பாசந்தி,குலோப்ஜாமுன் போன்ற உணவு வகைகள் அடங்கும்.
சரி அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டாங்க நாமோ சீக்கிரமா அவங்களுக்கு முன்னாடி போயிடலாம் இல்லனா நம்மல விட்டுட்டு போயிடுவாங்க இருவருமே......
யப்பா சேம பசி எப்படியோ நல்லா சாப்படாச்சு அடுத்து என்ன செய்வது ஆகாஷ் சார்.
நானும் அதை தான் யோசிக்குறேன் பார்ப்போம்.....சரி வா போய் தண்ணீரும் கொஞ்சம் தின்பண்டங்களும் வாங்கிட்டு அப்படியே நடந்து போவோம்.
இவர்கள் அந்த நெடுஞ்சாலையில் இருக்கும் கடைக்கு செல்ல....
இங்கு கடையின் அருகில்....ஒருவரை சுற்றி நான்கு ஐந்து பேர் மராத்தி மொழியில் சண்டையிட....அந்த தனி நபரோ, அதற்கு சரிசமமாக தானும் தமிழில் சண்டை இட..... என அந்த இடமே இன்னும் சிறிது நேரத்தில் கைகலப்பு ஆகிவிடும் நிலைமையில் இருந்தது.
என்ன டா நீ திருடிட்டு கூட்டம் சேர்க்குரியா?.....என்னங்கடா எங்கக் கூட யாரும் இல்லை ஏமாத்தி புடலாம் நினைச்சியா....என்று கோபம் கொப்பளிக்க தன் வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு நின்றார் ஐயனார் சாமியை போலே இருந்த அந்த பெரிய மனிதர் நமசிவாயம்.
அங்கே என்ன கூட்டம் என்று பார்க்க ஆகாஷும்,ரிஷியும் அந்த இடத்திற்கு சென்றவர்கள்,அங்கே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மனிதர்களை தான் பார்த்தார்கள்!யாரும் அங்கே நடக்கும் தகராரை நிப்பாற்றாமல் அப்படியே நின்றிருந்தனர்.
'இதனை பார்த்த ஆகாஷிற்கு கோபம் தான் வந்தது,எது நடந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று இருக்கும் இந்த சுயநல மனிதர்களை கண்டு அவன் மனம் ரௌத்திரம் கொண்டது,அதே ரௌத்திரத்துடன் தன் அருகில் இருக்கும் ரிஷியை கண்டமேனிக்கு திட்டிக்கொண்டு இருந்தான்'.
இவன் பொழிந்தது வேறு ஒருவரான ஐயனார் சாமியை போல் இருந்தவரின் பக்கத்தில் இருந்தவருக்கு கேட்க....அவர் இவர்கள் இருவரிடம் வந்தவர் அந்த ஐவரான வடநாட்டவரிடம் பேச சொல்லி கேட்க.....
எதை பற்றியும் யோசிக்காமல் ரிஷி அட வாங்க அண்ணே....நம்ம ஊருகாரருக்கு இதைக்கூட செய்யலைனா என்ன அண்ணே வாங்க நாம பேசி பிரச்சினையை முடிச்சி வைப்போம் வாங்க என்று அவர்களிடம் செல்ல......
ஆகாஷ் பல்லைகடித்தான்..... இவன் பேசுவதை தாங்காமல்.
நமசிவாயத்தின் அருகில் நின்று அவர்கள் பேசுவதை கேட்க கேட்க கோபம் வந்தது ரிஷிக்கு,
நமசிவாயத்திற்கும் அவர்கூட இருந்தவருக்கும் அவர்கள் பேசுவது தெரியாமல் இருந்தாலும் ரிஷிக்கு ஆகாஷிற்கும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது,தகாத வார்த்தை எல்லாம் பேசினவர்களை நினைத்து.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த ஆகாஷ் அடிக்க செல்ல,ஆனால் அதர்குள் எல்லாரையும் வெலுத்து வாங்கினான் ரிஷி "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று ஹிந்தியில் சொன்னவன் திருடிய பொருளை வைக்க சொல்ல..."
அப்போதும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டே இருக்க .....கையைகொண்டு திருப்பி அடிக்க செல்ல.... இதற்கு மேல் இங்கே இருந்தால் தங்கள் உடம்பு தாங்காது என்று நினைத்தவர்கள், திருடிய பொருட்களை வைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.
ஆகாஷ் அவனையே அதிசியமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
என்ன சார் சைட் அடிக்கிறிங்கலா என்னை?....
அவன் தலையை தட்டி விட்டவன்,இந்த ஆசை வேறு உனக்கு இருக்கா!....
நமசிவாயம் இவர்கள் அருகில் வந்தவர், ரிஷியின் தோள்பட்டை பிடித்து நன்றி கூறியவர் அவர்களை பற்றி கேட்க
ரிஷி தன்னுடைய தோள்பட்டை பிடித்தவுடனே உடனே அவரிடம் இருந்து விலகியவன் முகத்தை சற்று
சங்கடமாக வைக்கவும்.
என்ன தம்பி என்னாச்சு சண்டைல அவனுங்களாள ஏதாவது உங்களுக்கு காயம் பட்டுடுச்சா தம்பி என்று மனதுவருத்தத்துடன் கேட்டார் சிதம்பரம்.
ஆகாஷும் கேள்வியுடன் பார்க்க?....
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சார்....
சரி தம்பி என்றவர்,லோடு ஏத்திட்டு போகும்மோது இது போல களவானி பயலுவ திருடிட்டு பொயிடுறானுக தம்பி முதாலாலி கிட்ட சொன்னாக்கா அவரு ஏதோ நான் தான் திருடிட்டு பொய் சொல்லுறேன் நினைக்குறாருப்பு, அதான் இந்த தடவ கையும் களவுமா பிடிக்குறதுக்கு ஊரில் இருந்து அண்ணனே கூட்டியாந்தேன்,ஆனால் இவனுக மொசாமானவனுகளா இருக்கானுங்க...அந்த நேரத்துல நீங்க தமிழ் பேச நான் உங்கள கூப்பிட்டன் கோவிச்சுகாதிங்க தம்பி, எனக்கோ மொழி தெரியாத ஊரா.... அதான் தமிழ் ஆளுகளை பார்த்தவுடனே உங்களை அழைத்தேன்.
ஆகாஷ் பாரவாலை சார்.....மனிதனுக்கு மனிதன் உதவுவதுலதான் இன்னும் மனித தன்மை அழியாம இருக்கு.
அவனை பார்த்து ரிஷி "அப்படியா" என்று பார்த்து வைக்க...
அதனனை காணாதவன் போல் இருந்தான் "ஆகாஷ்"
தம்பிங்க இரண்டு பேரும் எங்கே போகுறிங்க?என்று நமசிவாயமும் சிதம்பரமும் கேட்க!
நாங்க இருவரும் குலுமாணலிக்கு டிரிப் போறோம் சார் என்றான் ஆகாஷ்
ரிஷி அப்படியா என்று ஒரு பார்வை பார்க்க......
சிதம்பரம் அட தம்பி நாங்களும் லோடு ஏத்திட்டு அங்கே தானே போயிட்டு இருக்கோம் என்று சந்தோஷத்துடன் சொன்னார்.
நமசிவாயம் அப்ப வாங்க தம்பி நம்ப லாரிலேயே போயிடலாம் என்று அலைப்புவிடுக்க!
ஆகாஷும் ரிஷியும் சம்மதம் தெரிவித்தவர்கள் அவர்களுடன் கிளம்பினர் குலுமாணலிக்கு.
பச்.....எனக்கு மட்டும் பசிகாமயா இருக்கு......எனக்கும் அதே தான்!இங்க பக்கத்துல ஏட்டியம் எங்கயாச்சும் இருக்கானு முதல்ல பார்க்கனும்.
டேய் என்கிட்ட ஏட்டியம் கார்டு இல்லை டா.... எல்லாம் கார்லயே வெடிச்சுடுச்சே.....இப்போ என்ன பண்ணுரது என்று ஒன்றும் புரியாமல் ரிஷியை பார்த்து கேட்டான் ஆகாஷ்.
என்கிட்ட என்னோட ஏட்டியம் கார்டு இருக்கு கவலை படாதிங்க, அதுல இருந்து பணம் எடுத்து சாப்பிட்டு அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் யோசிக்கலாம்.
இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தவர்களுக்கு ஏட்டியம் கண்ணில் பட......பணம் எடுக்க ரிஷி போக....தனக்கு கால் வலிப்பதினால் வெளியில் அமர்ந்து கொண்டான் ஆகாஷ்.
ஒரு 40,000ருபாயை ஏட்டியமிலிருந்து ரிஷி எடுத்தவன் பணத்தை பாதியாக பிரித்து ஆகாஷின் சட்டை பாக்கேட்டில் வைத்தவன்..."திடீரென ஏதோ ஓன்று அவனை தாக்க சட்டேன்று கையை எடுத்தவன் ஒன்றும் புரியாமல் ஆகாஷிடமிருந்து சற்று நகர்ந்து விட்டான்".
ஏதோ யோசனையில் அமர்ந்து கொண்டு இருந்த ஆகாஷ் தன் சட்டை பையில் ரிஷி பணம் வைத்தவுடன்,"டேய் என்ன இதுலாம்... இந்தா பணத்த புடி என்றான்".
ஆகாஷ் சார் எதாவது ஆவசரத்துக்கு வேண்டும் என்றால் என்ன செய்வது!"இதுபோல் ஏட்டியம் நாம போற இடத்துல இருக்குமான்னும் தெரியல, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல!...ஆதானால இதை வச்சிகோங்க".
சரி இங்கே பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கு"உட்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன்,வா சாப்பிட்டு போயிடலாம்....இப்பவே நைட் ஆகிடிச்சு டா இதுக்கு மேலே நடக்கனும் நாலும் தேம்பு வேணும் டா".
ம்ம்ம்......என்ற ரிஷி அந்த ஹோட்டலிற்கு ஆகாஷுடன் நடந்தான்.
ஹோட்டலில் மினி சைவ தாலியை தனக்கும் ரிஷிக்கும் ஹந்தியில் ஆர்டர் கொடுத்த ஆகாஷ் ரிஷியின் புறம் திரும்பி என்ன ரிஷி ஏதோ அப்போதிலிருந்து யோசனையாவே இருக்க?
பச்.....உங்க கார் அக்சிடேன்ட் எதார்த்தமா நடக்கல ஆகாஷ் சார்.....யாரோ திட்டம் மிட்டே நடக்க வைத்தது,அதை யார் செஞ்சாங்கன்னு தான் எனக்கு தெரியலை ஆனால் இதுக்கு மேலே இங்கே இருக்குறதும் நமக்கு கண்டிப்பா சேப் இல்லைன்னு மட்டும் தெரியுது, ஆதான் என்ன பன்னுரதுனு யோசிச்சுட்டு இருக்குறேன்.
உனக்கு எப்படி தெரியும்?... என்று ஆகாஷ் ரிஷியை பார்த்து திவிரமான கூறலில் கேட்க.
எனக்கு தலைவலி வந்ததே அதனால தான்...... அப்போ அக்சிடேன்ட் நடக்க போறதுக்கு முன்னாடி மொத்தத்தையும் என் கண் விழியில் தெரிந்தது.உங்ககிட்ட அதை பற்றி சொல்ல வருவதற்குள் தலைவலி உயிரே போற அளவுக்கு வலித்தது. பிறகு அங்கு என்ன நடந்ததுனு உங்களுக்கே தெரியுமே என்று ஆகாஷை பார்த்து கூறினான்.
அதற்குள் இவர்கள் ஆர்டர் பண்ன மினி சைவ தாலி உணவு வந்தவுடன் கடும் பசியில் இருந்த இருவருமே உண்ண ஆரம்பித்தனர்.
மினி சைவ தாலி இதில் சாப்பாத்தி,நான், சென்னா மாசாலா,பச்சடி,டால்,கீ ரைஸ், பாசந்தி,குலோப்ஜாமுன் போன்ற உணவு வகைகள் அடங்கும்.
சரி அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டாங்க நாமோ சீக்கிரமா அவங்களுக்கு முன்னாடி போயிடலாம் இல்லனா நம்மல விட்டுட்டு போயிடுவாங்க இருவருமே......
யப்பா சேம பசி எப்படியோ நல்லா சாப்படாச்சு அடுத்து என்ன செய்வது ஆகாஷ் சார்.
நானும் அதை தான் யோசிக்குறேன் பார்ப்போம்.....சரி வா போய் தண்ணீரும் கொஞ்சம் தின்பண்டங்களும் வாங்கிட்டு அப்படியே நடந்து போவோம்.
இவர்கள் அந்த நெடுஞ்சாலையில் இருக்கும் கடைக்கு செல்ல....
இங்கு கடையின் அருகில்....ஒருவரை சுற்றி நான்கு ஐந்து பேர் மராத்தி மொழியில் சண்டையிட....அந்த தனி நபரோ, அதற்கு சரிசமமாக தானும் தமிழில் சண்டை இட..... என அந்த இடமே இன்னும் சிறிது நேரத்தில் கைகலப்பு ஆகிவிடும் நிலைமையில் இருந்தது.
என்ன டா நீ திருடிட்டு கூட்டம் சேர்க்குரியா?.....என்னங்கடா எங்கக் கூட யாரும் இல்லை ஏமாத்தி புடலாம் நினைச்சியா....என்று கோபம் கொப்பளிக்க தன் வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு நின்றார் ஐயனார் சாமியை போலே இருந்த அந்த பெரிய மனிதர் நமசிவாயம்.
அங்கே என்ன கூட்டம் என்று பார்க்க ஆகாஷும்,ரிஷியும் அந்த இடத்திற்கு சென்றவர்கள்,அங்கே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மனிதர்களை தான் பார்த்தார்கள்!யாரும் அங்கே நடக்கும் தகராரை நிப்பாற்றாமல் அப்படியே நின்றிருந்தனர்.
'இதனை பார்த்த ஆகாஷிற்கு கோபம் தான் வந்தது,எது நடந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று இருக்கும் இந்த சுயநல மனிதர்களை கண்டு அவன் மனம் ரௌத்திரம் கொண்டது,அதே ரௌத்திரத்துடன் தன் அருகில் இருக்கும் ரிஷியை கண்டமேனிக்கு திட்டிக்கொண்டு இருந்தான்'.
இவன் பொழிந்தது வேறு ஒருவரான ஐயனார் சாமியை போல் இருந்தவரின் பக்கத்தில் இருந்தவருக்கு கேட்க....அவர் இவர்கள் இருவரிடம் வந்தவர் அந்த ஐவரான வடநாட்டவரிடம் பேச சொல்லி கேட்க.....
எதை பற்றியும் யோசிக்காமல் ரிஷி அட வாங்க அண்ணே....நம்ம ஊருகாரருக்கு இதைக்கூட செய்யலைனா என்ன அண்ணே வாங்க நாம பேசி பிரச்சினையை முடிச்சி வைப்போம் வாங்க என்று அவர்களிடம் செல்ல......
ஆகாஷ் பல்லைகடித்தான்..... இவன் பேசுவதை தாங்காமல்.
நமசிவாயத்தின் அருகில் நின்று அவர்கள் பேசுவதை கேட்க கேட்க கோபம் வந்தது ரிஷிக்கு,
நமசிவாயத்திற்கும் அவர்கூட இருந்தவருக்கும் அவர்கள் பேசுவது தெரியாமல் இருந்தாலும் ரிஷிக்கு ஆகாஷிற்கும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது,தகாத வார்த்தை எல்லாம் பேசினவர்களை நினைத்து.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த ஆகாஷ் அடிக்க செல்ல,ஆனால் அதர்குள் எல்லாரையும் வெலுத்து வாங்கினான் ரிஷி "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று ஹிந்தியில் சொன்னவன் திருடிய பொருளை வைக்க சொல்ல..."
அப்போதும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டே இருக்க .....கையைகொண்டு திருப்பி அடிக்க செல்ல.... இதற்கு மேல் இங்கே இருந்தால் தங்கள் உடம்பு தாங்காது என்று நினைத்தவர்கள், திருடிய பொருட்களை வைத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.
ஆகாஷ் அவனையே அதிசியமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
என்ன சார் சைட் அடிக்கிறிங்கலா என்னை?....
அவன் தலையை தட்டி விட்டவன்,இந்த ஆசை வேறு உனக்கு இருக்கா!....
நமசிவாயம் இவர்கள் அருகில் வந்தவர், ரிஷியின் தோள்பட்டை பிடித்து நன்றி கூறியவர் அவர்களை பற்றி கேட்க
ரிஷி தன்னுடைய தோள்பட்டை பிடித்தவுடனே உடனே அவரிடம் இருந்து விலகியவன் முகத்தை சற்று
சங்கடமாக வைக்கவும்.
என்ன தம்பி என்னாச்சு சண்டைல அவனுங்களாள ஏதாவது உங்களுக்கு காயம் பட்டுடுச்சா தம்பி என்று மனதுவருத்தத்துடன் கேட்டார் சிதம்பரம்.
ஆகாஷும் கேள்வியுடன் பார்க்க?....
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சார்....
சரி தம்பி என்றவர்,லோடு ஏத்திட்டு போகும்மோது இது போல களவானி பயலுவ திருடிட்டு பொயிடுறானுக தம்பி முதாலாலி கிட்ட சொன்னாக்கா அவரு ஏதோ நான் தான் திருடிட்டு பொய் சொல்லுறேன் நினைக்குறாருப்பு, அதான் இந்த தடவ கையும் களவுமா பிடிக்குறதுக்கு ஊரில் இருந்து அண்ணனே கூட்டியாந்தேன்,ஆனால் இவனுக மொசாமானவனுகளா இருக்கானுங்க...அந்த நேரத்துல நீங்க தமிழ் பேச நான் உங்கள கூப்பிட்டன் கோவிச்சுகாதிங்க தம்பி, எனக்கோ மொழி தெரியாத ஊரா.... அதான் தமிழ் ஆளுகளை பார்த்தவுடனே உங்களை அழைத்தேன்.
ஆகாஷ் பாரவாலை சார்.....மனிதனுக்கு மனிதன் உதவுவதுலதான் இன்னும் மனித தன்மை அழியாம இருக்கு.
அவனை பார்த்து ரிஷி "அப்படியா" என்று பார்த்து வைக்க...
அதனனை காணாதவன் போல் இருந்தான் "ஆகாஷ்"
தம்பிங்க இரண்டு பேரும் எங்கே போகுறிங்க?என்று நமசிவாயமும் சிதம்பரமும் கேட்க!
நாங்க இருவரும் குலுமாணலிக்கு டிரிப் போறோம் சார் என்றான் ஆகாஷ்
ரிஷி அப்படியா என்று ஒரு பார்வை பார்க்க......
சிதம்பரம் அட தம்பி நாங்களும் லோடு ஏத்திட்டு அங்கே தானே போயிட்டு இருக்கோம் என்று சந்தோஷத்துடன் சொன்னார்.
நமசிவாயம் அப்ப வாங்க தம்பி நம்ப லாரிலேயே போயிடலாம் என்று அலைப்புவிடுக்க!
ஆகாஷும் ரிஷியும் சம்மதம் தெரிவித்தவர்கள் அவர்களுடன் கிளம்பினர் குலுமாணலிக்கு.
Last edited: