“தெரியுமே” என்று பலமாக தலையாட்டினாள் புகழினி.
“சூப்பர் மேடம், அப்புறமென்ன! இஞ்சி இடுப்பழகா பாட்டைப் பாடி அசுத்துங்க! சாருக்கு ஏத்த பாட்டு தான் அது”
“ஆஆ அந்த பாட்டா, அது … எப்புடி நான்…அது”
“என்ன மேடம்? அந்த படத்துல ரேவதி மேடமும் உங்களை மாதிரி வெகுளித்தனமா கிராமத்து பாஷை பேசிட்டு இருப்பாங்க. அவங்க தான் ஹீரோ கமல் சாரை பாத்து வெறும் காத்து தேன் வருதுன்னு பேச முடியாமா தடுமாறுவாங்க. அப்புறம் சூப்பரா பாடி அவரை அசத்திடுவாங்க. எங்க பாஸும் பார்க்க கமலஹாசன் மாதிரி ஏன் அவரை விட செம ஹாண்ட்சமா தானே இருக்காரு! பாருங்க ஜிம் பாடி, என்ன ஷேப்! நோ தொப்பை! சோ நீங்க தாராளமா இஞ்சி இடுப்பழகான்னு பாடலாம் தானே? சார் முதல்ல பாடணும்னு எதிர்ப்பார்க்கிறிங்களா? ”
ஆண்டோவின் கேள்வியில் புகழினி ‘ஙே’ என்று விழித்தாள். “எத்தா மீனாட்சி, இந்த அண்ணென் ஏன் எனக்கு விபூதி அடிக்கிறாய்ங்க. நான் தேவர் மயன் பட ரேவதியா? நெனப்புதேன் இவய்ங்களுக்கு! இவங்க வேற ஒரு மாதிரி பாத்து வைக்கிறாய்ங்களெ!” என்று மனதிற்குள் புலம்பியவள், ஆண்டோவின் கேள்வியை மறுக்கும் பொருட்டு ‘இல்லை’ என்பது போல் பலமாகத் தலையாட்டினாள்.
“என்ன மேடம் எங்க பாஸ் அழகா இல்லையா?”
“எங்க கொல சாமி சத்தியமா நான் அப்புடி நினைக்கலை அண்ணென். நான் அவுங்க மொத பாட வேணாம்னு சொன்னேன்” விட்டால் அழுதுவிடுபவளைப் போல் கூறினாள்.
அவளின் பாவனையில் ஷிவேந்திரனின் முகத்தில் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. “ஆண்டோ” என்ற அவனின் கண்டிப்பான குரலில், ஆண்டோ அமைதியாகப் பின் வாங்கினான். புகழினியின் அருகில் வந்து “உனக்கு இந்தப் பாட்டு ஒகேயா? பாடுறியா?” வினவினான் அவள் கண்களை ஆழ்ந்தபடி. அவன் பார்வையை தாள இயலாதவளாக தலைகவிழ்ந்தவள்,
“ம்ம்ம்ம் சரிங்க” என்று முனகினாள்.
அனைவரும் கைதட்டி அவளை ஊக்கப்படுத்தினர். ஷிவேந்திரன் ஒரு நாற்காலியில் அவளை அமரவைத்து மற்றவர்களைச் சுற்றி உட்காரும்படி செய்தான்.
தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை புகழினியின் கண்கள் ஒருவித கூச்சத்தோட அளவிட்டது. ஷிவேந்திரனைப் பார்ப்பதை கவனமாக தவிர்க்கத் தான் முயன்றாள். ஆனால் வாடிக்கையாளரின் முன் அப்படிச் செய்தால் பின் விளைவகளை எண்ணி பயந்தவளாக தயக்கத்துடன் அவனை நோக்கினாள். அவளது நேரடிப் பார்வைக்காக காத்திருந்தவனைப் போல் அவளது பார்வையை கப்பென்று கவ்விக் கொண்டவன், இமைக்கும் பொழுதில் அவளைப் பார்த்து கண்ணடித்தவன், இதழ் குவித்து முத்தமிட்டு மனையாளுக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான்.
புகழினியோ அவனது செயலில் அதிர்ந்து பதற்றுத்துடன் சுற்றும் முற்றும் நோக்கியவள் மற்றவர்கள் அவர்களை கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் அசுவாசம் அடைந்தாள். அனைவரும் அவளையே ஆர்வமாக நோக்குவதைக் கண்டவள் ‘இவய்ங்க சும்மா பார்த்தாலே எனக்கு வெறும் காத்துதேன் வரும்.. இதுல இவுக பண்ணுற அலப்பரையெல்லாம் பாத்தா எங்க எனக்கு பாட வரும்! எனக்கு நெஞ்சு வலிதேன் வரும்... ஆத்தா மீனாட்சி.. கண்ணை மூடிக்க புள்ள, அப்பதேன் ஒனக்கு பாட்டு வரும்... ஊடுசாலுல அவய்ங்களைப் பாத்துப்புடாத புள்ள.. எதுக்கு கண்ணைத் தொறந்து வச்சிக்கிட்டு? அவய்ங்க பக்கம் திரும்பாம இருந்தா.. அதுக்கும் எதாவது சொல்லிப் புடுவாய்ங்க.. கண்ணை மூடிக்க வேண்டியதுதேன்.. அதேன் சரி...’ மனதிற்குள் புலம்பி ஒருவாறு கண்ணை மூடிக் கொண்டு பாடுவது என முடிவெடுத்தவள், கண்களை இயல்பாக மூடிக் கொண்டு பாடுவதைப் போல் பாடத் துவங்கினாள்.
இஞ்சி இடுப்பழக மஞ்ச செவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான ஆஆஆ …”
கரகோசம் காதைப் பிளந்தது. கரவொலி கேட்டதும் கண்களை மெல்ல மலர்ந்தியவளைக் கண்ட ஷிவேந்திரன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான். அசுவாசப்பட்டவளாக மூச்சை சீராக இழுத்துவிட்டாள் புகழினி.
பெண்கள் கட்டிப் பிடித்தும், ஆண்கள் கைகுலுக்கியும் புகழினியை வாழ்த்தி மனதாரப் பாராட்டினார்கள். தங்கள் நாட்டிற்கு ஒப்பந்தத்தின் மறுபாதியை கையெழுத்திட வரும் பொழுது ஷிவேந்திரன், கண்டிப்பாக மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுத்தனர். பின்னர் எல்லோரும் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தச் சுற்றுப் பயனத்தை தங்களால் மறக்கவே முடியாத நெகிழ்வான நினைவாக மாற்றிய புகழினிக்கு தங்களது நன்றிகளை உதிர்த்த வாடிக்கையாளர்கள் சகல வித மரியாதைகளோடு விடைபெற்றுச் சென்றனர்.
ஷிவேந்திரன் ஏனையோருக்கு சில வேலைகளைச் செய்யுமாறு பணித்துவிட்டு புகழினியோடு வெளியே கிளம்பிவிட்டான். நீலாங்கரை ரோட்டிலிலுள்ள ஆள் அரவமற்ற சாலையின் மர நிழலில் வண்டி நின்றது.
“ம்ம்ம்ம் புகழினி தெய்வமங்கை”
புகழினி கலக்கமாக அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஷிவேந்திரனின் பார்வை யோசனையுடன் அவளை அளவிட்டது.
“ நீ என்ன படிச்சிருக்க?”
“ஆறா(ம்) வகுப்புங்க”
“ஏன் அதுக்கு மேல படிக்கலை? ஃபெயில் ஆகிட்டியா?”
பதில் சொல்ல இயலாதவளாக தொண்டை அடைக்க புகழினி தலை குனிந்தாள்.
“நான் கேள்வி கேட்டா பதில் வரனும்” என்றான் அழுத்தமான குரலில்.
“தெரியலங்க” என்றாள் அவசரமாக. அவளின் பதிலில் அவளை ஊன்றிப் பார்த்துவிட்டு, வினவத் தொடங்கினான்.
“நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியுமா?”
“தெரியாதுங்க”
“சம்யுக்தா யாருன்னு தெரியுமா?”
“ம்ம்ம்ம் தெரியுங்க”
“யாரு?”
“உங்கள கட்டிக்க போறவய்ங்க”
“அப்போ நீ யாரு?”
“உங்க வப்.. இன்னொரு பொண்டாட்டி.”
“ஓ இன்னொரு பொண்டாட்டியா! நல்ல தெளிவா தான் இருக்குறிங்க, இன்னொரு பொண்டாட்டி!” என்றான் கிண்டலான குரலில்.
“நீங்கதேன், நான் அந்த மாதிரி பொண்டாட்டினு சொன்னிக!” என்றுவிட்டாள் ஒரு வேகத்தில். சொல்லி முடித்தப் பின்பே தான் யாரின் முன் அமர்ந்திருக்கோம் என்னக் காரியம் செய்துவிட்டோம், அதன் வீரியம் என்ன என்றுப் புரிந்தது அவளுக்கு. கை கால்கள் வெடவெடத்தன. மனதிற்குள் “சுகி ஆத்தா, சுகி ஆத்தா” என்று மனதிற்குள் ஜபித்து கொண்டிருந்தது எதிரில் அமர்ந்திருந்தவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“ஓ! என்னோட ஒரே பொண்டாட்டியா இருக்க உனக்கு ஆசையா?”
“இல்லய்ங்க. நான் அது மாதிரியெல்லா(ம்) நெனக்கலங்கெ” என்றாள் பதறியபடி.
“வேற என்ன நினைச்செ?”
“உங்களுக்கு யாரோ மந்திரிச்சுப் புட்டாய்ங்கெளோன்னு நினைச்சேன்ங்க!” பாவமானக் குரலில் பரிதாபமாக கூறினாள்.
“மந்தி மந்திரிச்சு…ஹா ஹாஹா” எனச் சத்தமாக சிரித்தான்.
ஆள் அரவமற்ற சாலையில் பூட்டிய காரினுள் சிங்கம் ஒன்று சிலுப்பிக் கொண்டு சிரிக்க மான் குட்டியானது மிரண்டு விழித்தது. அவள் பரிதாபமாக அவனைப் பார்த்து விழித்ததைப் பார்த்துவிட்டு அவளிடமே வினவினான்.
“ஏன் அப்படி சொல்லுற?”
“புலி என்னதேன் பசிச்சாலும் புல்லுககட்ட திங்காதும்பாய்ங்க! நீங்க எங்கிட்ட இப்புடி பேசறது பழகுறதெல்லாம் புலி பசும்புல்ல திங்கிற கதையாத்தேன் இருக்கு.”
“சோ நான் புலின்னு கன்பார்ம் பண்ணிட்ட. இந்த புலிக்கு இப்ப பசிக்குதே, இந்த மான்குட்டிய கடிச்சு சாப்பிடவா!” என்று விஷமமாக வினவினான்.
“மான்குட்டியா! இங்கேதுங்கெ மான்குட்டி? வழி ஊட ஒரு நாய்குட்டிய கூட காணலெயே” என்று கார் கண்ணாடியின் வழியாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“இப்பத்தேன் ஆடு, கோழி, மீனு, காடை, கவுதாரினு ஒன்னு விடாம அள்ளி திண்ணுப்புட்டு இப்போ மான்குட்டி திங்கெ வேணுமின்னு கேக்குறாரே! ஆத்தாடி ஆக்கி போடுறவளுக்கு இடுப்பொடிஞ்சி போயிரும்டியோவ்! ஆமா அவுங்க என்ன உன்னய போல எலிகுஞ்சு கணக்கவா இருக்காங்கெ காட்டெருமை போல இல்லெ இருகாய்ங்கெ! அதுவும் வெள்ள காட்டெருமை! இம்புட்டு பெரிய ஒடம்புக்கு இந்த தீணியெல்லாம் பத்தாதுதேன்!” என்று எப்பொழுதும் போல் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்வழியாக முணுமுணுப்பாக பேசிவிட்டாள்.
“சூப்பர் மேடம், அப்புறமென்ன! இஞ்சி இடுப்பழகா பாட்டைப் பாடி அசுத்துங்க! சாருக்கு ஏத்த பாட்டு தான் அது”
“ஆஆ அந்த பாட்டா, அது … எப்புடி நான்…அது”
“என்ன மேடம்? அந்த படத்துல ரேவதி மேடமும் உங்களை மாதிரி வெகுளித்தனமா கிராமத்து பாஷை பேசிட்டு இருப்பாங்க. அவங்க தான் ஹீரோ கமல் சாரை பாத்து வெறும் காத்து தேன் வருதுன்னு பேச முடியாமா தடுமாறுவாங்க. அப்புறம் சூப்பரா பாடி அவரை அசத்திடுவாங்க. எங்க பாஸும் பார்க்க கமலஹாசன் மாதிரி ஏன் அவரை விட செம ஹாண்ட்சமா தானே இருக்காரு! பாருங்க ஜிம் பாடி, என்ன ஷேப்! நோ தொப்பை! சோ நீங்க தாராளமா இஞ்சி இடுப்பழகான்னு பாடலாம் தானே? சார் முதல்ல பாடணும்னு எதிர்ப்பார்க்கிறிங்களா? ”
ஆண்டோவின் கேள்வியில் புகழினி ‘ஙே’ என்று விழித்தாள். “எத்தா மீனாட்சி, இந்த அண்ணென் ஏன் எனக்கு விபூதி அடிக்கிறாய்ங்க. நான் தேவர் மயன் பட ரேவதியா? நெனப்புதேன் இவய்ங்களுக்கு! இவங்க வேற ஒரு மாதிரி பாத்து வைக்கிறாய்ங்களெ!” என்று மனதிற்குள் புலம்பியவள், ஆண்டோவின் கேள்வியை மறுக்கும் பொருட்டு ‘இல்லை’ என்பது போல் பலமாகத் தலையாட்டினாள்.
“என்ன மேடம் எங்க பாஸ் அழகா இல்லையா?”
“எங்க கொல சாமி சத்தியமா நான் அப்புடி நினைக்கலை அண்ணென். நான் அவுங்க மொத பாட வேணாம்னு சொன்னேன்” விட்டால் அழுதுவிடுபவளைப் போல் கூறினாள்.
அவளின் பாவனையில் ஷிவேந்திரனின் முகத்தில் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. “ஆண்டோ” என்ற அவனின் கண்டிப்பான குரலில், ஆண்டோ அமைதியாகப் பின் வாங்கினான். புகழினியின் அருகில் வந்து “உனக்கு இந்தப் பாட்டு ஒகேயா? பாடுறியா?” வினவினான் அவள் கண்களை ஆழ்ந்தபடி. அவன் பார்வையை தாள இயலாதவளாக தலைகவிழ்ந்தவள்,
“ம்ம்ம்ம் சரிங்க” என்று முனகினாள்.
அனைவரும் கைதட்டி அவளை ஊக்கப்படுத்தினர். ஷிவேந்திரன் ஒரு நாற்காலியில் அவளை அமரவைத்து மற்றவர்களைச் சுற்றி உட்காரும்படி செய்தான்.
தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை புகழினியின் கண்கள் ஒருவித கூச்சத்தோட அளவிட்டது. ஷிவேந்திரனைப் பார்ப்பதை கவனமாக தவிர்க்கத் தான் முயன்றாள். ஆனால் வாடிக்கையாளரின் முன் அப்படிச் செய்தால் பின் விளைவகளை எண்ணி பயந்தவளாக தயக்கத்துடன் அவனை நோக்கினாள். அவளது நேரடிப் பார்வைக்காக காத்திருந்தவனைப் போல் அவளது பார்வையை கப்பென்று கவ்விக் கொண்டவன், இமைக்கும் பொழுதில் அவளைப் பார்த்து கண்ணடித்தவன், இதழ் குவித்து முத்தமிட்டு மனையாளுக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான்.
புகழினியோ அவனது செயலில் அதிர்ந்து பதற்றுத்துடன் சுற்றும் முற்றும் நோக்கியவள் மற்றவர்கள் அவர்களை கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் அசுவாசம் அடைந்தாள். அனைவரும் அவளையே ஆர்வமாக நோக்குவதைக் கண்டவள் ‘இவய்ங்க சும்மா பார்த்தாலே எனக்கு வெறும் காத்துதேன் வரும்.. இதுல இவுக பண்ணுற அலப்பரையெல்லாம் பாத்தா எங்க எனக்கு பாட வரும்! எனக்கு நெஞ்சு வலிதேன் வரும்... ஆத்தா மீனாட்சி.. கண்ணை மூடிக்க புள்ள, அப்பதேன் ஒனக்கு பாட்டு வரும்... ஊடுசாலுல அவய்ங்களைப் பாத்துப்புடாத புள்ள.. எதுக்கு கண்ணைத் தொறந்து வச்சிக்கிட்டு? அவய்ங்க பக்கம் திரும்பாம இருந்தா.. அதுக்கும் எதாவது சொல்லிப் புடுவாய்ங்க.. கண்ணை மூடிக்க வேண்டியதுதேன்.. அதேன் சரி...’ மனதிற்குள் புலம்பி ஒருவாறு கண்ணை மூடிக் கொண்டு பாடுவது என முடிவெடுத்தவள், கண்களை இயல்பாக மூடிக் கொண்டு பாடுவதைப் போல் பாடத் துவங்கினாள்.
“இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா
கள்ளெச் சிரிப்பழகா
மறக்கெ மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமென் எண்ணெம் மயக்குதே பஞ்சவண்ணெம்
மடியிலே ஊஞ்சல் போடெ மானே வா ..
கள்ளெச் சிரிப்பழகா
மறக்கெ மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமென் எண்ணெம் மயக்குதே பஞ்சவண்ணெம்
மடியிலே ஊஞ்சல் போடெ மானே வா ..
இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ளெச் சிரிப்பழகி
மறக்கெ மனம் கூடுதில்லையே
தன்னெந் தனிசிருக்கெ தத்தளிச்சு தானிருக்கெ
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னெ வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நா(ன்) அறிஞ்சேன்
கள்ளெச் சிரிப்பழகி
மறக்கெ மனம் கூடுதில்லையே
தன்னெந் தனிசிருக்கெ தத்தளிச்சு தானிருக்கெ
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னெ வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நா(ன்) அறிஞ்சேன்
ஒங்கழுத்தில் மாலையிடெ உன்னிரண்டு தோளெத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
இஞ்சி இடுப்பழக மஞ்ச செவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான ஆஆஆ …”
கரகோசம் காதைப் பிளந்தது. கரவொலி கேட்டதும் கண்களை மெல்ல மலர்ந்தியவளைக் கண்ட ஷிவேந்திரன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான். அசுவாசப்பட்டவளாக மூச்சை சீராக இழுத்துவிட்டாள் புகழினி.
பெண்கள் கட்டிப் பிடித்தும், ஆண்கள் கைகுலுக்கியும் புகழினியை வாழ்த்தி மனதாரப் பாராட்டினார்கள். தங்கள் நாட்டிற்கு ஒப்பந்தத்தின் மறுபாதியை கையெழுத்திட வரும் பொழுது ஷிவேந்திரன், கண்டிப்பாக மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுத்தனர். பின்னர் எல்லோரும் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தச் சுற்றுப் பயனத்தை தங்களால் மறக்கவே முடியாத நெகிழ்வான நினைவாக மாற்றிய புகழினிக்கு தங்களது நன்றிகளை உதிர்த்த வாடிக்கையாளர்கள் சகல வித மரியாதைகளோடு விடைபெற்றுச் சென்றனர்.
ஷிவேந்திரன் ஏனையோருக்கு சில வேலைகளைச் செய்யுமாறு பணித்துவிட்டு புகழினியோடு வெளியே கிளம்பிவிட்டான். நீலாங்கரை ரோட்டிலிலுள்ள ஆள் அரவமற்ற சாலையின் மர நிழலில் வண்டி நின்றது.
“ம்ம்ம்ம் புகழினி தெய்வமங்கை”
புகழினி கலக்கமாக அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஷிவேந்திரனின் பார்வை யோசனையுடன் அவளை அளவிட்டது.
“ நீ என்ன படிச்சிருக்க?”
“ஆறா(ம்) வகுப்புங்க”
“ஏன் அதுக்கு மேல படிக்கலை? ஃபெயில் ஆகிட்டியா?”
பதில் சொல்ல இயலாதவளாக தொண்டை அடைக்க புகழினி தலை குனிந்தாள்.
“நான் கேள்வி கேட்டா பதில் வரனும்” என்றான் அழுத்தமான குரலில்.
“தெரியலங்க” என்றாள் அவசரமாக. அவளின் பதிலில் அவளை ஊன்றிப் பார்த்துவிட்டு, வினவத் தொடங்கினான்.
“நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியுமா?”
“தெரியாதுங்க”
“சம்யுக்தா யாருன்னு தெரியுமா?”
“ம்ம்ம்ம் தெரியுங்க”
“யாரு?”
“உங்கள கட்டிக்க போறவய்ங்க”
“அப்போ நீ யாரு?”
“உங்க வப்.. இன்னொரு பொண்டாட்டி.”
“ஓ இன்னொரு பொண்டாட்டியா! நல்ல தெளிவா தான் இருக்குறிங்க, இன்னொரு பொண்டாட்டி!” என்றான் கிண்டலான குரலில்.
“நீங்கதேன், நான் அந்த மாதிரி பொண்டாட்டினு சொன்னிக!” என்றுவிட்டாள் ஒரு வேகத்தில். சொல்லி முடித்தப் பின்பே தான் யாரின் முன் அமர்ந்திருக்கோம் என்னக் காரியம் செய்துவிட்டோம், அதன் வீரியம் என்ன என்றுப் புரிந்தது அவளுக்கு. கை கால்கள் வெடவெடத்தன. மனதிற்குள் “சுகி ஆத்தா, சுகி ஆத்தா” என்று மனதிற்குள் ஜபித்து கொண்டிருந்தது எதிரில் அமர்ந்திருந்தவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“ஓ! என்னோட ஒரே பொண்டாட்டியா இருக்க உனக்கு ஆசையா?”
“இல்லய்ங்க. நான் அது மாதிரியெல்லா(ம்) நெனக்கலங்கெ” என்றாள் பதறியபடி.
“வேற என்ன நினைச்செ?”
“உங்களுக்கு யாரோ மந்திரிச்சுப் புட்டாய்ங்கெளோன்னு நினைச்சேன்ங்க!” பாவமானக் குரலில் பரிதாபமாக கூறினாள்.
“மந்தி மந்திரிச்சு…ஹா ஹாஹா” எனச் சத்தமாக சிரித்தான்.
ஆள் அரவமற்ற சாலையில் பூட்டிய காரினுள் சிங்கம் ஒன்று சிலுப்பிக் கொண்டு சிரிக்க மான் குட்டியானது மிரண்டு விழித்தது. அவள் பரிதாபமாக அவனைப் பார்த்து விழித்ததைப் பார்த்துவிட்டு அவளிடமே வினவினான்.
“ஏன் அப்படி சொல்லுற?”
“புலி என்னதேன் பசிச்சாலும் புல்லுககட்ட திங்காதும்பாய்ங்க! நீங்க எங்கிட்ட இப்புடி பேசறது பழகுறதெல்லாம் புலி பசும்புல்ல திங்கிற கதையாத்தேன் இருக்கு.”
“சோ நான் புலின்னு கன்பார்ம் பண்ணிட்ட. இந்த புலிக்கு இப்ப பசிக்குதே, இந்த மான்குட்டிய கடிச்சு சாப்பிடவா!” என்று விஷமமாக வினவினான்.
“மான்குட்டியா! இங்கேதுங்கெ மான்குட்டி? வழி ஊட ஒரு நாய்குட்டிய கூட காணலெயே” என்று கார் கண்ணாடியின் வழியாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“இப்பத்தேன் ஆடு, கோழி, மீனு, காடை, கவுதாரினு ஒன்னு விடாம அள்ளி திண்ணுப்புட்டு இப்போ மான்குட்டி திங்கெ வேணுமின்னு கேக்குறாரே! ஆத்தாடி ஆக்கி போடுறவளுக்கு இடுப்பொடிஞ்சி போயிரும்டியோவ்! ஆமா அவுங்க என்ன உன்னய போல எலிகுஞ்சு கணக்கவா இருக்காங்கெ காட்டெருமை போல இல்லெ இருகாய்ங்கெ! அதுவும் வெள்ள காட்டெருமை! இம்புட்டு பெரிய ஒடம்புக்கு இந்த தீணியெல்லாம் பத்தாதுதேன்!” என்று எப்பொழுதும் போல் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்வழியாக முணுமுணுப்பாக பேசிவிட்டாள்.