“உங்க மருமகளுக்கு 4 மாச முடிவுல இந்தக் குழந்தையைக் கலைக்கத் தானே இங்க வந்திங்க? 4 மாச முடிஞ்தினாலக் கலைக்க முடியல இல்லையா? அப்படித்தான் இங்க இருக்கிற ரிப்போர்ட் சொல்லுது. ஏன் சார் 31/2 மாசத்துக்கு முந்தி அந்தக் குழந்தை உங்கக் குலக் கொழுந்து இல்லையா?” எனத் தனது சுழல் நாற்காலியில் லேசாக சுழன்று கொண்டு நெற்றியடியாக வினவினார் புவனேஸ்வரி. அவர் சொன்ன செய்தி “உன்னை நான் நம்பல, உன்னைப் போல எத்தனப் பேர என் சர்வீஸ்ல நான் பாத்திருப்பேன்! நீயெல்லாம் எனக்கு தூசி, ஃஊனு உன்ன ஊதித் தள்ளிடுவேன்” என்பது தான். அதைப் புரிந்து கொண்ட சற்குணபாண்டியனின் சிவந்த முகம் கருத்து சுருங்கிவிட்டது.
“தென்னை மரத்தில தேள் கொட்டினா,
பனை மரத்தில நெறி கட்டுமாம்“
என்ற வாக்கியத்துக் இணங்க சற்குணபாண்டியனுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் விழுகிற அடிகள் ஒவ்வொன்றும் இடிகளாகப் பிற்காலத்தில் அந்த சின்னஞ்சிறு குருவியின் தலையில் விழப் போகிறது என்பதை டாக்டர் புவனேஸ்வரி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால்! கருவிலே மடிந்துப் போகட்டும் என்றிருப்பாரோ?
அந்த அறையில் மின்விசிறி சுழலும் சத்தம் தான் கேட்டது. புவனேஸ்வரி அந்த பேரமைதியைக் கலைத்தார். “டாக்டர் குணா! சிசேரியனுக்கு தியெட்டர இம்மிடியட்டா ரெடிப் பண்ணச் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி பேஷண்ட்டோட வீட்டுக்காரர் கிட்ட சைன் வாங்கிடுங்க. இப்போ நம்மப் பேஷண்ட்டோடக் கண்டிஷனச் செக் பண்ணனும். மேக் இட் பாஸ்ட் குணா” எனக் கட்டளைகளைப் பிறப்பித்தபடி தனது வெள்ளை அங்கியையும், ஸ்டெத்தஸ்க்கோப்பையும் எடுத்துக் கொண்டு தனது அறையை விட்டு வெளியேறினார்.
“சார் இதுல சைன் பண்ணுங்க. என்ன பாக்குறிங்க? இந்த ஹாஸ்பிட்டல் வாயிலைத் தாண்டினதுக்கு அப்பறம் அந்தக் குழந்தயோட உயிருக்கு உத்திரவாதம் இல்லைனு எனக்கு, ஏன் எல்லாருக்கும் நல்லாவேத் தெரியும். கண்டிப்பாக் கள்ளிப் பால் ஊத்தியோ, விதை நெல்லக் குடுத்தோ பிள்ளையைச் சாகடிச்சிடுவிங்க. அதனால அந்தக் குழந்தையோட உயிருக்கு எதாவது ஆபத்துன்னா, உங்க ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் ஜெயிலுக்குள்ளத் தள்ளுரதுக்கான அத்தாட்ச்சி இந்தப் பேப்பர். இது வெறும் காப்பி தான். ஆல்ரெடி நான் கம்ப்ளைண்ட்ட மேலிடத்திக்கு ஃபாக்ஸ் பண்ணிட்டேன். இது உங்க ஒப்புதல் வாக்கு மூலம். ம்ம்ம் நீங்க முதல்ல சைன் பண்ணிட்டு, உங்க குடும்பவத்தவர் எல்லார்கிட்டேயும் மறக்காம சைன் வாங்குங்க சரியா? டாக்டர் குணா கமான் லெட்ஸ் மூவ்” சத்தமில்லாமல் அணுகுண்டைத் தூக்கி வீசிவிட்டு அமர்த்தலாக நடந்து சென்றார் டாக்டர் புவனேஸ்வரி.
“என்னதூ…” என எகிறிய சிங்கவேலுவை சற்குணபாண்டியன் தடுத்து நிறுத்தினார். பின்னர் டாக்டர் குணாவை ஒரு மௌனப் பார்த்துவிட்டுச் சென்றார். சிங்கவேலு “உனக்கு இருக்குடாக் கச்சேரி” எனக் கோபப் பார்வையொன்றை வீசிவிட்டு தன் மைத்துனரைப் பின் தொடர்ந்தார்.
“அப்பா சொக்கா எனக்கு இன்னைக்கு அறுவா வெட்டு கண்பார்ம்” என்றுத் தனக்குள் பயந்து புலம்பிக் கொண்டு டாக்டர் புவனேஸ்வரியின் அறை வாயிலில் பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்.
“சார் சார் சாஆஆஅர்” என உலுக்கப்படவும், “அய்யோ நான் இல்ல, நான் இல்ல என்ன வெட்டிடாதிங்க” எனப் பயந்து அலறினான் குணா. “சார்ர் சார்ர்ர்ர்ர் நாந்தேன் சார்ர் கண்ணப்பன்” என குணாவைத் தெளியவைக்கும் நோக்கோடுக் கூறினான் வார்ட் பாய் கண்ணப்பன்.
“நீயாப்பா” எனச் சற்று அசுவாசப்பட்டான். “சார் ஒங்களெத்தேன் செந்தூரபாண்டியன் ஐய்யாவும் அவிய்ங்க மச்சாய்ங்களும் தேடிக்கிட்டு இருக்காய்ங்கெ” எனக் கூறி முடிக்கவில்லை.
“என்னது என்னத் தேடறாங்களா, எதுக்குத் தேடறாங்களாம்?” எனப் பதட்டத்துடன் வினவினான் குணா.
“தெரியலெ சார்ர், ஒங்களெ எங்கப் பாத்தாலும் உடனே அழைச்சிட்டு வரச் சொன்னாய்ங்கெ” என்று கூறி அவருக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான் கண்ணப்பன்.
“ஈஸ்வரா” என தீனமானக் குரலில் கூறி வெளிப்படையாகத் தனது நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் டாக்டர் குணா.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈஸ்வரன் தனது பக்தனை சோதனைக்கு ஆளாக்கினாலும், அதற்கு விம்மோச்சனம் கொடுக்கவும் தவறுவதில்லை. நர்ஸ் இன்பவதி ரூபத்தில் அந்தச் சோதனைக்கு விம்மோச்சனமாக வந்தார்.
“டாக்டர் சார் உங்களேத்தேன் இம்புட்டு நேரமாத் தேடிட்டு இருந்தேன், நீங்க இங்கத்தேன் இருக்கிங்களா?” என வினவினாள் நர்ஸ் இன்பவதி.
“என்னது, நீயும் என்னத் தேடுனியா, யாரும்மா உன்ன என்னையத் தேடச் சொன்னது?” என மனதில் கிலிப் பிடிக்கக் கேட்டான் குணா.
அவனை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு “டாக்டர் மேடம் தான் சார் கூப்பிட்டாய்ங்க” எனப் பதிலளித்தாள் நர்ஸ் இன்பவதி.
“உஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப நன்றிம்மா இன்பவதி நான் கும்பிடுற சொக்கன் தான் உன்னை அனுப்பி வச்சிருக்கான்” என அவளுக்கு மனமார நன்றி கூறினார் குணா. நர்ஸ் இன்பவதிக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் தலையை ஆட்டி வைத்தாள்.
“மேடம் அப்ரேஷன் தியெட்டர்ல தானே இருக்காங்க வாம்மாப் போகலாம்” என ஒரு எட்டு எடுத்து வைத்தார். “சார்” என அவரை விளித்தான் கண்ணப்பன். என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த குணாவிடம் “அவிய்ங்க கூப்பிட்டாய்ங்களே சார் மறந்துட்டிங்களெ? என வினவி டாக்டர் குணாவை வெறுப்பேற்றினான்.
டாக்டர் குணா “அதுக்கென்ன கண்ணப்பாப் பாத்துட்டாப் போச்சு, நான் அவங்கிட்டப் போய் பேசிறேன், நீ அப்ரேஷன் தியெட்டருக்குப் போய் மேடமோட சேந்து அப்ரேஷன் பண்ணு, சரியா? மா இன்பவதி, கண்ணப்பனக் கூட்டிட்டுப் போமா” எனக் கேலியுடனும் முகத்தில் கடுப்புடனும் கூறினான்.
கண்ணப்பன் கப்பென்றுத் தன் வாயை மூடிக்கொண்டான். மேலும் ஒரு நர்ஸ் வந்து குணாவை அழைக்கவும் கண்ணப்பனை முறைத்துவிட்டு நர்ஸ்களுடன் சென்றான் டாக்டர் குணா. கண்ணப்பன் “என்னங்கடா இது ஆளாளுக்கு மொறச்சிட்டுப் போராய்ங்க, ஹம்ம்ம். இவரு இப்பத் திட்டிப்புட்டாரு அவய்ங்க என்னெப் பண்ணெப் போறாய்ங்களோ?” எனப் பெரு மூச்சு விரட்டவாரு சற்குணபாண்டியன் குடும்பத்தினரை நோக்கிச் சென்றான்.
“எம்புட்டுத் தெகிரியம் இருந்தா அந்த டாக்டரு சிறுக்கி அப்புடிப் சொல்லியிருப்பா? எங்கெ அவ? அவ நாக்க இழுத்து வச்சி அறுத்துப்புடறேன் அறுத்து” எனக் கோபாவேசமாக தன் விரிந்தத் தலை மயிரை தூக்கிக் கொண்டையிட்டுக் கொண்டே நாசி விடைக்க எகிறினார் சுந்தரவல்லி.
இவ்வளவு நேரம் மகளை நினைத்து விசிம்பிக் கொண்டிருந்த வடிவாம்பாள் கூடத், தனது தமையனுக்கும் கணவனுக்கும் ஒரு அவமானம் என்றதும் கொதித்து விட்டார். “அந்தக் கூலிக்கு மாரடிக்கிற நாய்க்கி அம்புட்டுத் திமரிருந்தா எட்டூரக் கட்டியாளுற எம் மக்களுக்கு எம்புட்டுத் திமிரு இருக்கெனும். எலேய் நான் பெத்தெ மக்கா என்னடா வேடிக்கெப் பாக்குறியெ? போய் அந்தப் பட்டணத்துக்காரி தலை மயித்தெப் புடிச்சி இழுத்துட்டு வாங்கடா இங்கெ” எனத் தன் ஆண் மக்களுக்குக் கட்டளையிட்டார் தன் மகளின் நிலையை மறந்து.
“ஆத்தா! மாமாவையும் ஐயனையும் அந்த சிலுப்பி அவமானப் படுத்திப்புட்டா அவளெயும் அவக் குடும்பத்தெயும் கருவருக்கனும்” எனக் கொடூரமாகக் கத்தினாள் அங்கயற்கண்ணி.
“எவ்வெளவு நெஞ்சழுத்தெமிருந்தா அந்தெ அசலூருக் குட்டி செயிலுக்குள்ளேத் தள்ளுவேனுச் சொல்லுவா, விடக் கூடாதெய்யா அவளக் கண்டந்துண்டமா வெட்டி வீசிப் புடுறேன்” என்றுக் கொக்கரித்தார் சுந்தரபாண்டியன்.
குணாவைப் பற்றிக் கூற வந்த வார்ட் பாய் கண்ணப்பன் அப்படியே சத்தமில்லாமல் பின் வாங்கினான் “ஆத்திக் கொலகாரப் பயெக் கூட்டமால இருக்கு அதேன் குணா சாரு அம்புட்டு பயந்தாரா?” எனத் தனக்குள் பேசிக் கொண்டு ஒடிவிட்டான்.
திடீரென்று சைரன் ஒலியும், பூட்ஸ் காலடி ஓசைகளும் கேட்டன. அஜானுபாகுவான தோற்றத்துடன் சஃபாரி சூட்டில் மெஷின் கன்னை கைகளில் ஏந்தியிருந்த ஸ்பெஷல் ஸ்குவாட் அபிசர்கள் புடைசூழ வந்தார் மத்திய மந்திரி கரிகாலனின் இரண்டாவது பி.எ சங்கர்.
மருத்துவமனையே எதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் அவர்களை வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தது. சற்குணபாண்டியன் குடும்பத்தினர் கையெழுத்திட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தையும், நிலவழகியின் அப்ரேஷனுக்காக சுந்தரபாண்டியனிடம் கையெழுத்தையும் வாங்கி வரச் சொன்னார் டாக்டர் புவனேஸ்வரி. தன் தலையெழுத்தை நொந்தவாரே டாக்டர் குணா பயந்து கொண்டே அப்ரேஷன் தியெட்டர்ல் இருந்து வெளியே வந்தான். அவனுக்கு இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது.
“எப்பா சொக்கா” எனத் தன் இருக் கன்னத்திலும் போட்டுக் கொண்டான்.
“ஹலோ டாக்டர் குணா” என்றார் மந்திரியின் பி.எ சங்கர்.
“ஹலோ ஷங்கர் சார் எப்பிடி இருக்கிங்க?” குணா.
“ஃபைன் டாக்டர் குணா, அப்புறம் உங்க மேடம் இருக்காங்களா?” கண்களால் எதோக் சாடையாகக் கேட்டார்.
“டாக்டர் மேடம் ஒரு எமெர்ஜன்சிக் கேஸ் அட்டென்ட் பண்றாங்க” என குணா புரிந்து கொண்ட பாவத்துடன்.
“சற்குணபாண்டியன் அய்யா, மேடம் உங்கக்கிட்டக் குடுத்தப் பேப்பரக் கேக்குறாங்க. எல்லாரும் சைன் பண்ணிட்டிங்களா? சுந்தரபாண்டியன் சார், உங்க மனைவியோட அப்ரேஷனுக்கான சம்மதத்த இதுலக் கையெழுத்துப் போட்டு உறுதிப் பண்ணுங்க” என மூச்சு விடாமல் பேசினான்.
சற்குணபாண்டியன் குடும்பத்தினரால் துப்பாக்கிய மனிதர்கள் முன் ஒன்றும் செய்ய இயலவில்லை.
“டாக்டர் குணா இவர எங்கயோப் பாத்த மாதிரி இருக்கெ” தாடையை தடவியபடி யோசனையாக வினவினார் சங்கர். குணாவிற்கு புரிந்துவிட்டது.. நாடகம் தொடங்கியாயிற்று இனி நடப்பது ஈசன் இல்லை இல்லை சங்கர் கரங்களில். லேசாக சிரித்துக் கொண்டவன் அசுவாசமாக,
“சங்கர் சார், பெரியகுளம் பாண்டியன் குரூப் கேள்விப்பட்டு இருப்பிங்களே?” என்று ஆரம்பித்தான் குணா.
“ம்ம் யு மீன் பாண்டியன் குரூப் ஒஃப் தேனீ? ரீசண்ட்டா அவங்க எல்லாத் தொழிலும் டவுன் அயிடுச்சே! மினிஸ்ட்ரிலயும் அவங்க ஃபாக்ட்ரிஸ் எதிரா கம்ப்லைண்ட்ஸ் ரெஜிஸ்ட்ர் ஆகிருக்கு எனி டைம் ஆக்ஷன் எடுக்கலாம். இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டும் அவங்க மேலேக் கண்ணு வச்சிட்டாங்க. சிக்கினா சிதைச்சிடுவாங்க! சரி அவங்கள விடுங்க இவங்க யாருனு சொல்லுங்க?” என்றார் சங்கர் கண்களில் சிறு சிரிப்புடன்.
“இவங்க தான் பெரியகுளம் பாண்டியன் குரூப்போட ஓனெர்ஸ்” என்றார் குணா.
“ஓ” என ஒற்றை வார்த்தையில் தன்னுடைய பதிலைக் கொடுத்துவிட்டு அவர்களைக் கண்களால் அளந்தார்.
“சரி என்ன சைன்? என்ன விஷயம்?” என யோசனையோடு வினவினார் சங்கர். டாக்டர் குணா சுருக்கமாக நடந்தவற்றை எடுத்துரைத்தான்.
சங்கர் தன் 6 அடி உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவர், “கொஞ்சம் அந்தப் பேப்பரக் குடுக்கிறிங்களா?” என சற்குணபாண்டியனிடம் தன் வலது கையை நீட்டினார்.
பட்டென்று அந்தப் பேப்பரைப் பரித்துக் கொண்ட ராசவேலு “டாக்டுரே என்னதென் நடக்குது இங்கெ, எங்கக் கிட்டெயெ பம்பாத்து வேலக் காட்டுரியா, யாருய்யா இவென் எங்கூர்லெ எங்களெ நாட்டாமப் பண்றவன்” எனச் சீறினான்.
“சார், கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க! நீங்க யாருக்கிட்டப் பேசுறிங்க தெரியுமா? இவர் மிஸ்டர் சங்கர், டாக்டர் புவனேஸ்வரி மேடத்தோட மாமனார் மத்திய மந்திரி கரிகாலனின் பி.எ. இவரோட அக்கா மகன் தான் நம்ம நிதித் துறை அமைச்சர் ராஜராஜன், புவனேஸ்வரி மேடத்தோட வீட்டுக்காரர்.” அறிமுகப்படுத்தினான் சங்கரை. சாதுர்யமாக நீ யாருடன் மோதுகிறாய் என்றுத் தெரிந்துகொள் மறைமுகமாக அறிவுறித்தினான் குணா.
ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி ஒடி வந்தவள் “டாக்டர் சார் மேடம் உங்கள சீக்கிரம் வரச் சொன்னாங்க, அப்புறம் சைன் பண்ண ஃபார்ம்ஸ் கேட்டாங்க சார்” என்றாள்.
“குணா நீங்க அப்ரேஷனுக்கான ஃபார்ம்ல மட்டும் சைன் வாங்கிங்க மத்த ஃபார்ம்ஸ நான் பாத்துக்குறேன்.” என்றார் சங்கர். “தாங்க்ஸ் அ லாட் சங்கர் சார்” அவருக்கு நன்றித் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் சுந்தரபாண்டியனின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு.
சங்கர் தன் சகாக்களைப் பார்த்தார், மறு நிமிடம் ஒரு நாற்காலிப் போடப்பட்டது, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர்,
“அந்தப் பேப்பர்” என வினவினார். மறு நிமிடம் அது அவரதுக் கைகளில். “மிஸ்டர் சற்குணபாண்டியன் உங்களோட இப்போதய நிலைமை உங்களுக்குத் தெளிவாப் புரிஞ்சிருக்கும் இல்லையா? வந்து சைன் பண்ணுங்க” என்றார் அமர்த்தலாக.
சற்குணபாண்டியன் சங்கரை வெறித்தார், அந்தப் பார்வையை சங்கர் சட்டை செய்யவில்லை. சற்குணபாண்டியனுக்கு ஒன்று மிகத் தெளிவாக விளங்கியது குழந்தையின் உயிர் இவர்களால் பாதுகாக்கப் படும், மீறினால் அதன் பின் விளைவுகளை அவரும் அவரதுக் குடும்பத்துவரும் சந்திக்க வேண்டி வரும்.
“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது”
இந்த வாக்கியத்தை சற்குணபாண்டியன் குடும்பத்திவர் யாவரும் மனதினில் நினைத்துக் கொண்டனர். சற்குணபாண்டியன் மெல்ல நடந்து சென்று ஒப்புதல் வாக்கு மூலத்தில் முதல் ஆளாகக் கையெழுத்திட்டார். குடும்பத்தினர் யாவரும் அவரைப் பின்பற்றினர்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் குழந்தையின் அழுகை ஒலிக் கேட்டது. அன்று வியாழக்கிழமை, பௌர்ணமி தை மாதம் 14 ஆம் தேதி 1994 ஆம் வருடம் (27th January 1994). அடுத்து அரை மணி நேரத்தில் டாக்டர் புவனேஸ்வரியும், டாக்டர் குணாவும் வெளியே வந்தனர்.
“ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிது. பெண் குழுந்தை ஆனா ரொம்ப வீக்கா இருக்கா. எடை ரொம்பக் கம்மி அதனால் இன்குபேட்டர்ல வச்சிருக்கொம் இன்னும் 3 மணி நேரம் கழிச்சி துக்கிட்டு வருவாங்க, அப்ப பாக்கலாம்” எனக் கூறினார் புவனேஸ்வரி.
அப்பொழுது தான் சங்கரைப் பார்த்தவர் “வாங்க சித்தப்பா எப்படி இருக்கிங்க? என்ன திடீர்னு இந்தப் பக்கம்?” என வினவியபடி அவரோடு தன்னுடைய அறைக்குச் சென்றார்.
சற்குணபாண்டியன் குடும்பத்தினர் இறுகியிருந்தனர். எவரும் பேசும் நிலையில் இல்லை. அவர்கள் எண்ணத்தில் வியாபித்து எல்லாம் “பிறந்துவிட்டது மூதேவி பிறந்துவிட்ட்து” என்ற வாக்கியம் தான்.
மூன்று மணி நேரம் கழித்து அனைவரும் நிலவழகி அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்றனர். அங்கு டாக்டர் புவனேஸ்வரி, டாக்டர் குணா, மந்திரி கரிகாலனின் பி.எ சங்கர் காத்திருந்தனர். டாக்டர் புவனேஸ்வரி சிஸ்டர் இன்பவதிக்கு கண் ஜாடைக் காட்டினார். தன் கையில் வெள்ளைப் பூந்துவளையால் சுற்றப்பட்டக் குழுந்தையைக் சற்குணபாண்டியன் வீட்டுப் பெண்டிரிடம் காட்டினாள்.
வேண்டா வெறுப்பாகப் பார்த்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். அங்கயற்கண்ணி “அ ஆஆஆ” எனத் தன்னையும் மீறிக் அலறிவிட்டாள் தன்னுடைய அக்காளின் மகவைக் கண்டு.
“இது எங்க வீட்டுப் புள்ளெ இல்ல” எனக் கத்தினார்கள் சுந்தரவல்லியும், வடிவாம்பாளும்.
“ஷ், இது உங்க வீட்டுப் பிஅள்ளதான், பிளட் டெஸ்ட், மரபணு சோதனை வேணாப் பண்ணிப் பாருங்க, அது மட்டுமில்லை நீங்க ஒழுங்கா கவனிக்காததாலக் குழந்தையோட இடதுக் கால் சூம்பிப் போயிருக்கு, கொஞ்சம் குட்டையாவும் இருக்கு?” அழுத்தமாகக் கூறினார் டாக்டர் புவனேஸ்வரி.
“நொண்டியா” என இளக்காரமாக வினவினார் சுந்தரவல்லி.
இவர்களின் இளக்காரத்துக்குக் காரணம்... பிறந்த அந்த நல்முத்து கறுப்பாக, மொட்டைத் தலையுடன், எலும்புதோல் போர்த்திய உடலுடன், சூம்பிவிட்ட குட்டையான இடதுக் காலுடன் இருந்தது...
அவள் பௌர்ணமியில் பிறந்த அமாவாசை!
கருப்பு அழகி வருவாள்…