All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் முடிவிலி-2

Nanthu Sara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நான் பேசவே இல்ல எதுக்கு என் பேர எழுதுனனு" கேட்டாள் அமுதா

"சரி உன் பேர அழிச்சுடுறேன் ஆனா இப்ப என்கிட்ட பேசுனல அதுக்கு மறுபடியும் எழுதறேன்னு" அவளைக் கடுப்பாக்கினான் கிருஷ்ணன்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.ஒரு முறை நொண்டி விளையாடும் போது அமுதா கிருஷ்ணனை வென்றுவிட்டாள்.நம்ம கிருஷ்ணனுக்கு தான் தோற்றுப்போகிறது பிடிக்காதே.அது அமுதா மேல் ஒரு வெறுப்பை உண்டாக்கியது.அந்த வெறுப்புக்கான பதில் தான் இது.

அமுதா நல்ல நேரம் அன்றைய தினம் ஆசிரியர் பேசியவர்களின் பெயர்களை கண்டுக்கொல்லவில்லை.நேராக பாடத்திற்குள் சென்றுவிட்டார்.

அப்படியே நாட்கள் ஓடியது...

ஐந்தாம் வகுப்பு முடிந்தது.இனி ஆறாம் வகுப்பு முதல் புதிய பள்ளி.முதல்நாள் பள்ளிச் சென்றதும் கிருஷ்ணாவுக்கு ஆச்சரியம் அந்த பள்ளியில் அனைவரும் ஆண்களாக இருந்தனர்.

"அப்பா இந்த பள்ளியில் எல்லாம் பசங்களா இருக்காங்க.பொண்ணுங்க இல்லையா" என்று கேட்டான்.

"இது ஆண்கள் பள்ளி இங்க பொண்ணுங்க எல்லாம் வரமாட்டாங்க" என்றார் அப்பா.

கிருஷ்ணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி இந்த பொண்ணுங்க கிட்ட இனி பேசத்தேவையில்லை என்று.அவன் பள்ளிக்கும் பெண்கள் பள்ளிக்கும் நீண்ட தூரம் இருந்தது.

பசங்க கூட சந்தோஷமா இருந்தான்.அவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.எல்லோருக்கும் கிருஷ்ணாவை ரொம்ப பிடிக்கும்.அங்கும் அவன் தான் முதல் மதிப்பெண்.பத்தாம் வகுப்பு முடிந்தது.பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மகிழ்ச்சியுடன் வேறு பள்ளிக்கு சென்றான்.

இந்த முறை ஆண்கள் பள்ளியும் பெண்கள் பள்ளியும் அருகருகில் இருந்தது.இருப்பினும் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு அருகே பெண்களைப் பார்க்க முடிந்தது.

"டேய் அந்தப் பொண்ணு உன்னத்தான் பாக்குதுனு" கிண்டல் செய்தார்கள்.

கிருஷ்ணாவிற்கு அதெல்லாம் காதில் விழவில்லை.எப்படி பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பது என்பது பற்றி சிந்தனை தான் ஓடியது.

ஆனால் பத்தாம் வகுப்பு போல அவ்வளவு எளிதாய் பன்னிரெண்டாம் வகுப்பு அவனுக்குப் புரியவில்லை.அவனால் மூன்றாம் மதிப்பெண் தான் எடுக்க முடிந்தது.ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் அழுதுக்கொண்டே இருந்தான்.

ஒரு வழியாக அவனது அம்மா அவனை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்.

மூன்றாம் மதிப்பெண் எடுத்த கவலையோடு கல்லூரியில் பெண்களோடு சேர்ந்துப் படிக்கப் போகின்றோம் என்ற கவலையும் சேர்ந்தது....
கல்லூரி செல்லும் காலம் வந்தது...

கல்லூரியில் சந்திப்போம்....
 
Top