All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Mageswari

New member
மிக கணமான பதிவு……. சாரு அப்பா கோபம் நியாயமாக இருந்தால் கூட அதற்கு அவர் அளித்த தண்டனை மிக மிக அதிகம். இந்த செய்கையினால் சாருக்காக அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்த தியாக வாழ்க்கை கூட நியாயப்படுத்த முடியாது. சாரு செய்த தப்புக்கு அவர் தண்டணை வழங்கி விட்டர். ஆனால் அவர் செய்த தவறுக்கு என்ன தண்டனை???? நிச்சயம் சாருவால் சரவணனை மறந்து சந்தோசமாக வாழ முடியாது. தன் கண் முன்னால் மகள் படும் துயரத்தைக் கண்டு தான் தனது ஆணவத்தால் செய்த தவறை எண்ணி நிச்சயம் ரத்தக் கண்ணீர் வடிப்பார். அப்போது எல்லாமே முடிந்திருக்கும். உண்மையிலேயே சாரு பாவம். கவி சிஸ்டர் உங்க எழுத்து நடை மிக அருமை வாழ்த்துக்கள்
 

Chitrasaraswathi

Well-known member
அவன் கொஞ்சம் இல்லை பெரிய முட்டாள். அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டான். நிதானமாக இருந்து சாரு அப்பாவை கையாண்டிருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி கிடைச்சிருக்காது. அவன் அவசரமும் , ஆத்திரமும்தான் அவனுக்கு சத்ரு. வேற யாருமில்லை. இத்தனை நிகழ்வுகளிலும் பாடம் கற்றுக் கொள்ளாத முட்டாள் அவன். அவன் அவசரத்தால்தான் காதலை இழக்கிறான்.சாருவிடமும் பொறுமை பொறுப்பு இரண்டுமில்லை. அவள் தந்தையை நினைக்கவில்லை. சுயபச்சாதாபத்தால் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை தொலைத்தாலும் கிடைத்த வாழ்க்கையையும் தக்க வைக்க முடியாதவர்கள். வாழ்க்கையின் நிதர்சனத்தை இருவரும் உணராமல் போனது பாவமே.
 
Top