தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 1
என்னை ம(று)ற(த்)ந்ததேன் கண்மணியே!!!!!
18 வருடங்களுக்கு முன்….ளின்
பதினோரு வயது தயாவிடம்… நாம விக்கி கூட விளையாடிடலாம் வாங்க என அழைத்து கொண்டிருந்தாள் ஐந்து வயது நித்திலா…
அவனோ, நாம மட்டும் விளையாடலாம்… இல்ல உனக்கு விக்கி கூட விளையாடனும்னா நீ மட்டும் போய் விளையாடு பொம்மா…. நான் வரலை என்றான்….
தன், தயா அத்துவின் பதிலால் முகம் வாடியவள்…. தன் பிஞ்சு விரல்களால் அவன் தாடையை பற்றி…. கெஞ்சி…. கொஞ்சி… கொண்டிருந்தாள்… இது எப்பொழுதும் நடக்கும்… அவன் பொம்மா, அவனிடம் கெஞ்சுவதும்… கொஞ்சுவதும் அவ்வளவு பிடிக்கும் அவனிற்கு... பிடித்தம் என்பதினை விட அவ்வளவு ரசிப்பான் அவளின் அச்செயலை....
அதற்குள் விக்கி வந்துவிட… மீண்டும் அவனிடம் கேட்டாள் … விளையாட போலாமா அத்து என….
அவனோ…. நீ வேணா தனியா போய் அவன் கூட விளையாடு… நான் வரலை என்றான் முடிவாக…
விக்கியோடு விளையாட சென்றாலும்.. தன் தயா அத்துவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்…
அவளின் தயா அத்துவோ, நான் வரலை சொன்னா, என்னை விட்டு அவனோட தனியா விளையாட போவியா பொம்மா… என மனதோடு சொல்லிக்கொண்டவன் பார்வை செல்லும் அவளையே வெறித்து கொண்டிருந்தது….
*********************************
நித்திலா ஸ்ரீ, சென்னையை சேர்ந்தவள்… M.C.A முடித்து…. பெங்களூருக்கு வேலைக்கு வந்துள்ளாள்… வயது 23, பாலில் மஞ்சள் கலந்த நிற மேனி… அழகிய அகன்ற விழிகள்… சிரித்தாள் சிறியதாக குழியும் இடபக்க கன்னம்… ஐந்தாரை அடி உயரம் என பார்ப்பவரை சற்று என்னையும் கவனி என சொல்ல வைக்கும் அழகி….
#################
அவளின் டீம் ஹெட் விஷ்ணு… வயது30, பெயருக்கு ஏற்றது போல் உயரமும் நெடுமாலே… ஆறு அடிக்கும் மேல்… சிவந்த நிறம்…. அகன்று விரிந்த மார்பு… ஒட்டிய வயிறு… போட்டிருக்கும் சட்டையையும் மீறி தெரியும் அவனின் கைகளின் தசைகள்… மொத்தத்தில் பல பெண்களின் கனவு நாயகன் இவன்… ( இவனுக்கு இவ்வளவு வர்ணனை ஏன்னு கதையில் புரியும்)
நித்திலாவிற்கு விஷ்ணு மேல் காதல் இருந்தாலும்… அதை அவனிடம் அவள் வாய்விட்டு சொன்னதில்லை… அவனை தூரத்தில் இருந்தே ரசிப்பாள்… விஷ்ணுவிற்கு அவள் மேல் காதல் உள்ளதா என கேட்டாள் அதுவும் தெரியாது அவளிற்கு…. இவளை பார்க்கும் பார்வையில் ஒருவித பிடித்தமும் உரிமையுணர்வும் அவன் கண்ணில் மின்னலென தோன்றி மறைவதை கண்டிருக்கிறாள்….
*************************
இந்நிலையில் அவர்களின் நிறுவனம் சார்பாக… நால்வர் வெளிநாட்டிற்கு ஒரு ப்ராஜெக்ட்டிற்காக தேர்தெடுக்க பட அவர்களின் தலைமை விஷ்ணு… அந்த குழுவில் நித்திலாவும் அடக்கம்….
ப்ராஜெக்ட் வேலை வெற்றிகரமாக முடிந்து அவர்கள் அனைவரும் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் திரும்ப இருப்பதினால் அனைவரும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார்கள்…
---------------------------
---------------------------
இரவும் குளிரும் தனிமையும் அவர்கள் உறவை வளர்க்க… நித்திலா முழுதாக விஷ்ணுவின் உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்தாள்….
*******************************
அடர்ந்த சிகையோடும், முகத்தில் முக்கால் பகுதியை அவனின் தாடி மறைத்திருக்க… மீதம் உள்ளதை அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி மறைத்திருந்தது… அவன் முகத்தில் தெரிந்தது நெற்றி, நாசி, அவனின் அழுத்தமான உதடுகள்….
அந்த பள்ளியின் புது கரெஸ்பாடெண்ட்டை வரவேற்கும் பொருட்டு அனைவரும் கூடியிருந்தனர்…. நித்திலா ஸ்ரீ… அங்கே பள்ளி அலுவலகத்தில் பணி புரிகிறாள்… அவளின் குழந்தைகள் அங்கே தான் படிக்கின்றனர்..
நெற்றியில் சிறிய பொட்டு…. துடைத்து வைத்த விளக்கு போல் எந்தவித ஒப்பனையும் இல்லாத முகம்…. என துறவி போன்ற தோற்றத்தில் இருத்தவளை கண்டு அவனின் கண்கள் மின்னின….
பின்னே பல வருடங்கள் கழித்து பார்க்கும் அவன் பொம்மாவினை கண்டதும்... அவள் தயா அத்துவின் கண்கள் மின்னதானே செய்யும்… அந்த மின்னல் அன்பின் வெளிப்பாடா… இல்லை அவனின் கோபத்தின் விளைவா என அவனின்றி யார் சொல்லகூடும் ...
அவன் தான் முழு முற்றாக மாறி போயிருந்தானே… அன்று அவளின்
" தயா அத்துவாக" மட்டும் இருந்தவன் இன்றோ… பலபேர் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் "தி கிரேட் சைதன்யா" அல்லவா….
என்னை ம(று)ற(த்)ந்ததேன் கண்மணியே!!!!!
18 வருடங்களுக்கு முன்….ளின்
பதினோரு வயது தயாவிடம்… நாம விக்கி கூட விளையாடிடலாம் வாங்க என அழைத்து கொண்டிருந்தாள் ஐந்து வயது நித்திலா…
அவனோ, நாம மட்டும் விளையாடலாம்… இல்ல உனக்கு விக்கி கூட விளையாடனும்னா நீ மட்டும் போய் விளையாடு பொம்மா…. நான் வரலை என்றான்….
தன், தயா அத்துவின் பதிலால் முகம் வாடியவள்…. தன் பிஞ்சு விரல்களால் அவன் தாடையை பற்றி…. கெஞ்சி…. கொஞ்சி… கொண்டிருந்தாள்… இது எப்பொழுதும் நடக்கும்… அவன் பொம்மா, அவனிடம் கெஞ்சுவதும்… கொஞ்சுவதும் அவ்வளவு பிடிக்கும் அவனிற்கு... பிடித்தம் என்பதினை விட அவ்வளவு ரசிப்பான் அவளின் அச்செயலை....
அதற்குள் விக்கி வந்துவிட… மீண்டும் அவனிடம் கேட்டாள் … விளையாட போலாமா அத்து என….
அவனோ…. நீ வேணா தனியா போய் அவன் கூட விளையாடு… நான் வரலை என்றான் முடிவாக…
விக்கியோடு விளையாட சென்றாலும்.. தன் தயா அத்துவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்…
அவளின் தயா அத்துவோ, நான் வரலை சொன்னா, என்னை விட்டு அவனோட தனியா விளையாட போவியா பொம்மா… என மனதோடு சொல்லிக்கொண்டவன் பார்வை செல்லும் அவளையே வெறித்து கொண்டிருந்தது….
*********************************
நித்திலா ஸ்ரீ, சென்னையை சேர்ந்தவள்… M.C.A முடித்து…. பெங்களூருக்கு வேலைக்கு வந்துள்ளாள்… வயது 23, பாலில் மஞ்சள் கலந்த நிற மேனி… அழகிய அகன்ற விழிகள்… சிரித்தாள் சிறியதாக குழியும் இடபக்க கன்னம்… ஐந்தாரை அடி உயரம் என பார்ப்பவரை சற்று என்னையும் கவனி என சொல்ல வைக்கும் அழகி….
#################
அவளின் டீம் ஹெட் விஷ்ணு… வயது30, பெயருக்கு ஏற்றது போல் உயரமும் நெடுமாலே… ஆறு அடிக்கும் மேல்… சிவந்த நிறம்…. அகன்று விரிந்த மார்பு… ஒட்டிய வயிறு… போட்டிருக்கும் சட்டையையும் மீறி தெரியும் அவனின் கைகளின் தசைகள்… மொத்தத்தில் பல பெண்களின் கனவு நாயகன் இவன்… ( இவனுக்கு இவ்வளவு வர்ணனை ஏன்னு கதையில் புரியும்)
நித்திலாவிற்கு விஷ்ணு மேல் காதல் இருந்தாலும்… அதை அவனிடம் அவள் வாய்விட்டு சொன்னதில்லை… அவனை தூரத்தில் இருந்தே ரசிப்பாள்… விஷ்ணுவிற்கு அவள் மேல் காதல் உள்ளதா என கேட்டாள் அதுவும் தெரியாது அவளிற்கு…. இவளை பார்க்கும் பார்வையில் ஒருவித பிடித்தமும் உரிமையுணர்வும் அவன் கண்ணில் மின்னலென தோன்றி மறைவதை கண்டிருக்கிறாள்….
*************************
இந்நிலையில் அவர்களின் நிறுவனம் சார்பாக… நால்வர் வெளிநாட்டிற்கு ஒரு ப்ராஜெக்ட்டிற்காக தேர்தெடுக்க பட அவர்களின் தலைமை விஷ்ணு… அந்த குழுவில் நித்திலாவும் அடக்கம்….
ப்ராஜெக்ட் வேலை வெற்றிகரமாக முடிந்து அவர்கள் அனைவரும் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் திரும்ப இருப்பதினால் அனைவரும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார்கள்…
---------------------------
---------------------------
இரவும் குளிரும் தனிமையும் அவர்கள் உறவை வளர்க்க… நித்திலா முழுதாக விஷ்ணுவின் உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்தாள்….
*******************************
அடர்ந்த சிகையோடும், முகத்தில் முக்கால் பகுதியை அவனின் தாடி மறைத்திருக்க… மீதம் உள்ளதை அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி மறைத்திருந்தது… அவன் முகத்தில் தெரிந்தது நெற்றி, நாசி, அவனின் அழுத்தமான உதடுகள்….
அந்த பள்ளியின் புது கரெஸ்பாடெண்ட்டை வரவேற்கும் பொருட்டு அனைவரும் கூடியிருந்தனர்…. நித்திலா ஸ்ரீ… அங்கே பள்ளி அலுவலகத்தில் பணி புரிகிறாள்… அவளின் குழந்தைகள் அங்கே தான் படிக்கின்றனர்..
நெற்றியில் சிறிய பொட்டு…. துடைத்து வைத்த விளக்கு போல் எந்தவித ஒப்பனையும் இல்லாத முகம்…. என துறவி போன்ற தோற்றத்தில் இருத்தவளை கண்டு அவனின் கண்கள் மின்னின….
பின்னே பல வருடங்கள் கழித்து பார்க்கும் அவன் பொம்மாவினை கண்டதும்... அவள் தயா அத்துவின் கண்கள் மின்னதானே செய்யும்… அந்த மின்னல் அன்பின் வெளிப்பாடா… இல்லை அவனின் கோபத்தின் விளைவா என அவனின்றி யார் சொல்லகூடும் ...
அவன் தான் முழு முற்றாக மாறி போயிருந்தானே… அன்று அவளின்
" தயா அத்துவாக" மட்டும் இருந்தவன் இன்றோ… பலபேர் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் "தி கிரேட் சைதன்யா" அல்லவா….
Last edited: