All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உன் காதலில் கசிந்துருகி நான்" கதை திரி

Status
Not open for further replies.

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லோஸ்..

இதோ அடுத்த கதையோடு வந்துட்டேன்.. இந்த ஸ்டோரி என்னோட ரெண்டாம் கதை முடித்த பிறகு தான் வரும்.. ஆனாலும் மனசுல கொஞ்சம் வார்த்தைகள் தொந்தரவு பண்ணிட்டே இருந்த காரணத்தால் டீசர் போடுறேன்.. படிச்சிட்டு உங்க கருத்து சொல்லுங்க .. அது வச்சு தான் நான் அடுத்து தொடரனுமான்னு யோசிக்கனும்..

கதையின் பெயர் : உன் காதலில் கசிந்துருகி நான்

நாயகன் நாயகி : ஆரோன், ஆரத்யா

இதோ முதல் டீசர் :

"நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன்" அவன் கண்களை பார்த்து சொன்னாள் அவள்..

"பார்றா இது எப்போதுல இருந்து? நாம பார்த்து ஒரு மூணு மாசம் இருக்குமா? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இதுல என்ன புதுசா ரொம்ப ரொம்ப லவ்" அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம் போல..

"இது புதுசு இல்ல.. கிட்டத்தட்ட ஆறு வருசமா என் மனசுகுள்ளேயே புதைச்சு வச்சிருந்த என் கணவனுக்கு மட்டுமேயான லவ்.. இது இனிமேல் உனக்கு மட்டும் தான்.. நான் உன்னோடவள் மட்டும் தான்.."

அவள் காதலில் அவன் சிலிர்த்து நின்றான்.. எந்த புருஷனும் தன்னவளை தன் உடமை என்று தான் நினைப்பான்.. அதுவும் அவள் அவனுக்காக மட்டுமே அந்த காதலை சேர்த்து கொட்ட போவதாக சொன்னதும் அவனையும் அறியாமல் அவன் கைகள் அவளை தன்னோடு அணைத்து கொண்டது.. அவனுள் புதைந்து கொண்டாள் அவள்..

அவளை தன்னுள் அடக்கி கொண்டே கேட்டான் "அது என்ன ஆறு வருஷ காதல்?"

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள்.. "அப்போ வரைக்கும் எனக்கு வர போற கணவனை பத்தி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.. அதுக்கு அப்புறம் நிறைய காதலர்களை பார்க்கும் போது சில சமயம் தோணும்.. ஆனா அது சட்டுனு வந்துட்டு அப்புறம் வீட்ல சம்மதிக்கலனா விட்டுட்டு போற காதலாகவும் இருக்க கூடாது.. என் வீட்டு சம்மதத்தோட ரெண்டு பேரும் மனசு நிறைஞ்சு வாழ்த்தி என்னை என் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்.. அப்போ தோணுச்சு ஏன் அந்த காதலை சேர்த்து வச்சு என் புருஷனுக்கு குடுக்க கூடாதுன்னு.. அதே தான்.. அப்போ தோணுன நிமிஷத்துல இருந்து ஒவொரு நொடியும் என் வருங்காலத்தை காதலித்தேன்.. இப்போ மொத்தமா உங்ககிட்ட என்னை குடுத்துட்டேன்.. அதுக்காக என் காதல் இனி குறைஞ்சு போகாது.. இன்னும் இன்னும் என் எல்லா ஆசைகளையும் உங்களை என் பக்கத்துல வச்சு நிறைவேத்திப்பேன்.. லவ் யூ சோ மச்"

அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் அவன்..

"இது வரைக்கும் மனைவினா எனக்கு அவ பொறுப்புன்னு நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ உன் பேச்சுலயே என்னை உன்கிட்ட பறிகொடுக்க வச்சிட்டா.. உன் ஆறு வருஷ காதலை அனுபவிக்க நான் ரெடி.. ஐ லவ் யூ டூ மை பொண்டாட்டி.. இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?" என்றவன் அடுத்து பண்ணிய எதையும் நான் பார்க்கல.. 🙈🙈
🙈
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த முன்னோட்டம்

ஹெல்த் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் :
அங்கு அந்த காரிடாரில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆரோன்.. அவன் மனம் முழுவதும் பயம் மட்டுமே.. வியர்வை நெற்றியில் இருந்து வழிய அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அந்த அறையை பார்த்து கொண்டிருந்தான்..

"ஜீசஸ் ப்ளீஸ் என் மனைவியை எப்படியாச்சும் காப்பாத்தி குடுத்துடுங்க.. அவ இல்லாம எனக்கு வாழ்வே இல்ல.. உங்களை மட்டும் தான் நான் நம்பி இருக்கேன்.. உங்களால் தான் அவளை உயிரோட திரும்ப தர முடியும்.. அவளுக்கும் என் குழந்தைக்கும் எதுவும் ஆக கூடாது " என்று அவன் மனம் வேண்டி கொண்டிருக்க
அவன் மனைவி ஆரத்யாவோ வலியில் துடித்து கொண்டிருந்தாள்..

"அம்மா......"

அவள் கதறல் இவன் நெஞ்சில் உதிரத்தை வர வைத்தது.. "ஆரு உனக்கு ஒன்னும் ஆகாது.. நீ நல்ல படியா நம்ம குழந்தையோடு திரும்ப வருவ.." என்று அவன் மனதோடு பேசியது அவளுக்கு கேட்டதோ என்னவோ "அம்மா......" என்ற அவளின் கதறலுடன் அவன் குழந்தையின் அழுகையும் கேட்டது..

அப்போது தான் அவனுக்கு உயிர் வந்தது.. வெளியில் வந்த நர்ஸ் "சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தையை அவன் கையில் கொடுத்ததும் அதன் ஸ்பரிசத்தில் சிலிர்த்தவன் அவள் மென் பாதங்களில் முத்தமிட்டான்..

பின் "சிஸ்டர் என் வைப் நல்லா தானே இருக்கா?" என்று பதறி கேக்க
அந்த சிஸ்டர் அவனை ஒரு பரிதாப பார்வை பார்த்து "சாரி மிஸ்டர் அவங்களுக்கு அதிக பட்ச ரத்த போக்கு இருந்ததால அவங்களை எங்களால் காப்பாத்த முடியல" என்று சொல்ல "நோ....." என்ற அவனின் கதறல் அந்த மருத்துவமனையை உலுக்கியது..

_______________

"ப்பா... ஏஞ்சல் ரெதி..." என்று சொல்லி கொண்டு பெயருக்கேற்ற படி தேவதைகளின் உடை அணிந்து வந்த பிஞ்சு மொட்டை கையில் ஏந்தியவன் "பப்பா ஆல்சோ ரெடி" என்று கூறி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.. பதிலுக்கு அவளும் முத்தமிட அதை தந்தையாய் ரசித்தவன் கண்கள் அங்கு சுவற்றில் மாட்ட பட்டிருந்த படத்தை பார்த்து கண்கள் கலங்கியது..

பின் தன்னை தேற்றியவன் அவளை பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு கூட்டி சென்றான்.. தாய் இல்லாத குறையை எப்போதும் அவள் நினைக்க கூடாது என்று அவனே அவளுக்கு தாயாகி போனான்..

பார்க்கில் அவளை விளையாட விட்டவன் சிறிது நேரத்தில் அவளை அந்த இடத்தில் காணாமல் தேட அவள் ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருப்பது தெரிந்து "நிது பேபி" என அவள் அருகில் சென்றான்..

அவன் குரலில் அதிர்ந்து திரும்பிய அந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ந்து ரெண்டடி பின் சென்ற ஆரோனின் உதடுகள் "ஆரு" என உதிர்த்தது..

"ப்பா தூக்கு.." என்று தன்னை நோக்கி வந்தவளை தூக்கியவன் தன் குழந்தையை தூக்கி கொண்டு விடு விடுவென சென்றான்.. அந்த பெண்ணின் கண்கள் கலங்கி அவள் வாய் "ஆரோன்" என்று சொல்லி பின் "ஏஞ்சலின் நிது.. நைஸ் நேம்.. யூ டிட் நாட் பர்கேட் எனிதிங்" என்று முணுமுணுத்தது..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை எப்போ வரும்னே தெரியல.. ஆனா அடிக்கடி மூளைல மணி அடிக்குறதால முன்னோட்டம் போடுறேன்.. சீக்கிரம் கதையுடன் வருகிறேன்.. 😍 இப்போ கொஞ்சம் மனசு வச்சு படிச்சு பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க டியர்ஸ்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலனை கரம் பிடித்து
காவலன் அவன் துணையோடு
வாழ்க்கை வட்டத்துக்குள்
அடியெடுத்து வைத்து
ஈருடல் ஓருடலாய் கலந்து
தாய்மை எனும் வரம் பெற்று
ஈரைந்து திங்கள் தன் கருவில் சுமந்து
"வீல்.." எனும் சத்தத்தோடு
இந்த மண்ணுலகிற்கு தன் மகவை ஈன்று
அந்த நிம்மதியில்
தன் சோர்வை உணராது
காவலன் கை பிடித்து
அவன் நெற்றியோடு நெற்றி மோதி
அவன் தரும் ஒரு முத்தத்தை
ஆழ்ந்து அனுபவித்து
அவன் கையில் பஞ்சு பொதியாய்
உதட்டை சுளித்து புன் சிரிப்போடு
தூங்கும் தன் மகவை
இருவரும் ரசித்து பின்
இருவரின் கண்ணில் வழியும் கண்ணீரையும் மாறி மாறி துடைத்து
அழகாய் ஒரு சிரிப்பு ❣

எங்கள் வீட்டு இளவரசி இதோ
என காட்டும் அந்த தருணம்
இந்த உலகில் எதை வேண்டுமானாலும்
இழக்க தோன்றும் அந்த தருணம்
ஆழ்ந்து அனுபவித்த தம்பதிகளுக்கே தெரியும்..

❤ ஏஞ்சலின் நிது ❤

images (34).jpeg
 
Status
Not open for further replies.
Top