Anitha Selvam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 9
மனோவிடம் சாரி சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பை தான் காலையிலிருந்து ஆதி தேடிக் கொண்டிருக்கிறான். ம்ஹூம்.. ஆளைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. ப்ராஜெக்டின் முக்கியமான நேரம். வேலை அதிகம்தான். எப்பொழுதும் அவளுடன் நான்கு பேர் இருந்தார்கள். அத்தனை பேர் முன்னிலையிலும் மன்னிப்பு கோர முடியாதே..
நேற்றைய இரவெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில் நடந்ததில் தன் தவறு பெரும்பங்கு இருக்கிறது என்றே ஆதிக்குத் தோன்றியது.
எத்தனை நாட்கள் அதிகப்படியான நேரங்கள் மனோ வேலை செய்திருக்கிறாள். ஒரு நாள், ஒரு மணி நேரம் அதிகமாக உணவு இடைவேளை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு.
இனி இருப்பது, ஒரே வாய்ப்புதான். மனோ கிளம்பும் நேரம். கம்பெனியிலிருந்து ரயில் நிலையம் செல்ல அவர்கள் பயன்படுத்துவது சத்யாவின் வண்டி. பார்க்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு டிரெயினில் போய் அங்கே பார்க்கிங்கில் இருக்கும் மனோ வண்டியில் வீட்டுக்கு போவார்கள். இருவர் வீடும் அருகருகில் இருப்பதால் மனோ மாலையில் சத்யாவை வீட்டில் விட்டு விட்டு போவாள். காலை வரும்போது அழைத்துக் கொள்வாள். இதுதான் மனோ இந்த கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து அவர்களுடைய வழக்கம். இது ஆதிக்கும் தெரியும். அதனால் கிளம்பும் அந்த சமயத்திலும் மனோவுடன் சத்யா இருப்பாள். சாரி சொல்வதென்றால் சத்யா முன்னிலையில்தான் சொல்ல வேண்டும். ம்ம்.. கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. எப்படியும் அவன் அன்று பேசியது சத்யாவிற்கும் தெரியும். அதனால் அவள்முன் கேட்பதில் தவறிருக்காது.
மணி ஆறை எட்டியிருந்தது. அவர்கள் வேலை நேரம் ஐந்து மணிவரை. ' ம்ம்ம்..
.
அவனுக்கு எதிரறை மனோவினது என்றால் பக்கவாட்டு அறை சித்தார்த்தினுடையது. அங்குதான் இப்பொழுது மனோவோடு இன்னும் சிலரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் முன்னிருந்த கணினியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணுமாய் இருந்தவன் சளசளவென்ற சத்தத்தில் நிமிர்ந்தான். அனைவருமே விடைபெற்று முன்னே செல்ல சத்யாவும் சித்தார்த்தும் மனோவின் அறையின் வாசலில் இருக்க, மனோ உள்ளே போய் கைப்பையோடு வெளியே வந்தாள். கவனமாக இவன் அறைப்பக்கம் பார்க்காமல் தவிர்க்கிறாளோ? இதில் சந்தேகம் என்ன? நிஜமாகவே தவிர்க்கத் தான் செய்கிறாள். காலையிலிருந்து இதே நேர் கொண்ட பார்வை; நிமிர்ந்த நன்னடைதான். நியாயமான கோபம்.. ஆதியின் முகம் இளகியது. கடந்த சில வாரங்களாக ஆதி அவளிடம் காட்டிய பாராமுகம் அவளுக்கும் அவனுக்கு இப்போதிருப்பது போல் தானே உறுத்தியிருக்கும்... உறுத்தியிருக்கும்தானே??
தன் பொருட்களோடு கிளம்பியவன் அவர்களை முன்னே போக விட்டு சில அடி தூர இடைவெளியில், பின்னே நடந்து வந்தான்.. கட்டிடத்தின் கீழ் தளத்தில் பிரதான வாசலின் கண்ணாடி கதவு வழியாக அவர்கள் வெளியே செல்ல தன் எட்டு களை கொஞ்சம் வேகமாகப் போட்டுக் கொண்டிருந்தவனை, "வணக்கம் சார்!" என்ற குரல் நிறுத்தியது.
வாசல் கதவைத் திறந்து பிடித்திருந்த வாயிற்காவலர். "வணக்கம் முருகேசன் சார்".
உயரமாக, , சட்டையை இன் செய்து, ஒரு கையைப் பாக்கெட்டிற்குள் விட்டபடி கம்பீரமாக வரும் தன் இளைய முதலாளியை ரசித்துப் பார்த்தார், முருகேசன். அவருக்கு இத்தனை அழகாக தன் முதலாளி போவது மன்னிப்பு கேட்க என்று தெரியாதில்லையா? அவன் தகப்பனார் காலத்திலிருந்து இங்கு வேலை செய்பவர்.
அவர் ஏதோ சொல்ல வருவது போல் தோன்ற, ஆதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் யோசித்தான். நின்று பேசினால், அவர்கள் கிளம்பியிருப்பார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பை இழந்து விடுவான். ஆனால் இவரிடம் என்னவென்று கேளாமல் எப்படி போவது. கேள்வியாய் பார்த்து நின்றான், "சொல்லுங்க முருகேசன்"
"தம்பி.. என் பையன் ஃபர்ஸ்ட் இயர்ல முதல் வகுப்புல பாஸ் ஆயிட்டானாம். காலேஜ்லயே அவன்தான் ஃபர்ஸ்ட் ஆம்."
"ஓ.. சூப்பர்.. ரொம்ப சந்தோசம்"
"ரொம்ப நன்றி தம்பி.. நீங்க மட்டும் படிக்க உதவி செய்யலைனா, இப்போ ஏதாவது கடையில பொட்டலம் போட்டுகிட்டு இருப்பான்."
"நன்றி எல்லாம் என்ன சார்..உங்க பையன் எடுத்த மார்க்குக்கு அவன் மேல படிக்கலைனா, அது பெரிய தப்பு.. நீங்களே வந்து கேட்டிருக்கனும். நல்லவேளை உலகநாதன் சார் சொன்னார்"
"அது தம்பி. நான் சும்மா உலகநாதன் அய்யாகிட்ட புலம்பிகிட்டு இருந்தேன். என்னமோ.. கடவுள் அருள்.. அப்புறம் தம்பி..*
"சொல்லுங்க.."
"எனக்கு ஒரு சின்ன ஆசை.. என் பையன் படிச்சு முடிச்சதும் நம்ம கம்பெனியிலயே வேலை போட்டுக் கொடுங்க தம்பி.. இந்த கையால எத்தனையோ பேருக்கு கேட் திறந்து விட்டிருக்கேன். என் பையனுக்கும் அதே மாதிரி திறக்கனும்"
"கண்டிப்பா.. இதே மாதிரி தொடர்ந்து நல்லா படிச்சு, திறமையோட வெளியே வரட்டும். வேலை அவனுக்காக காத்திருக்கும்"
"ரொம்ப சந்தோசம் தம்பி.. ரொம்ப சந்தோசம்" சிரித்தபடி அவர் விலகி நிற்க, ஆதிக்கு தன் முகத்தை மாற்றாமல் காப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு பெரிய மூச்சை வெளியிட்டவன், கார் பார்க்கிங்கில் தன் கார் நிறுத்தியிருக்கும் இடம் நோக்கி மெதுவாகச் சென்றான். நிச்சயம் சத்யாவும் மனோவும் போயிருப்பார்கள். இன்று வெள்ளி கிழமை. இனி சனி ஞாயிறு போய் திங்களன்றுதான் பார்க்க முடியும். முகம் ரொம்பவும் வாடி, காரைக் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டிருந்த பொழுது, சட்டென்று கால்கள் அனிச்சை செயலாய் பிரேக்கை அழுத்தின. நிஜம் தானா.. நிஜமேதானா? கடவுள் இருக்கிறார்தான் போல.. இல்லையென்றால் இப்படியெல்லாம் நடக்குமா?
நம் ஆதி இப்படி திடீர் பக்தனாய் மாறியதற்குக் காரணம், மனோ இன்னும் போகவில்லை. டூவீலர் பார்க்கிங்கில்தான் நின்று கொண்டிருந்தாள். அதுவும் ச்தயா இல்லாமல் தனியாக.. அதுவும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துக் கொண்டு..
ஆதி.. இதற்கு மேல் உன் திறமையைக் காட்டு..
காரை மனோவின் வண்டியின் அருகில்
செலுத்தியவன், பக்கத்தில் வந்ததும் ஹார்ன் அடித்தான். சத்தத்தில் திரும்பிய மனோவின் முகத்தில் ஆர்வமான புன்னகை ஒரு நொடி தோன்றி பின் மறைந்தது. 'நோ.. நான் இவனிடம் பேசக் கூடாது. நேற்று எப்படி எல்லாம் பேசினான்?'
"ஹாய் மனோ!"
"ஹாய்!" அவன் புறம் திரும்பாமலேயே பதில் வந்தது.
"என்னாச்சி? வண்டி ஸ்டார்ட் ஆகவில்லையா?
"ம்.. ஆமாம்..ஒரு வாரமாகவே பட்டன் ஸ்டார்ட் வேலை செய்யவில்லை. கிக் ஸ்டார்ட் தான். இன்று அதுவும் வேலை செய்யவில்லை.."
இறங்கி உதைத்துக் பார்க்க வேண்டுமா? ஆனால் தப்பித் தவறி ஸ்டார்ட் ஆகி விட்டால்.. நோ.. சத்தமாய் யோசித்தான்," ம்.. ஸ்டார்ட் ஆகலைனா, என்ஜின் ப்ராப்ளமாகத்தான் இருக்கும். என்ன பிரச்சனைன்னு பார்க்க மெக்கானிக் போய் கூப்பிட்டு வர வேண்டும்..பக்கத்தில் மெக்கானிக் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை."
ஆதி இது உனக்கே ஓவராகத் தெரியவில்லையா? இந்த வண்டியை அக்குவேறு ஆணி வேறாகக் கழற்ற உனக்கு அரை மணி நேரமாகுமா? ஆனால் அது மனோவிற்குத் தெரியாதே...
இன்னும் ஒரு சில நொடிகள் யோசிப்பது போல கைகளை ஸ்டியரிங் லீவில் தட்டியவன், "சரி.. வா மனோ.. நான் உன்னை டிராப் செய்கிறேன்.."
"ம்கூம்.. இருக்கட்டும்.. நான் ஆட்டோவில் போய் கொள்கிறேன்""
"ஆட்டோ பிடிக்க, ஸ்டாண்டிற்கு நடப்பதற்கே, இருபது நிமிடத்திற்கும் மேலாகவும். ஏறு மனோ "
மறுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும்.. அதற்காக இவன் காரில் ஏறுவதா?
"கமான் மனோ"
ஒரு மூச்சை உள்ளே இழுத்து விட்டவள், பின் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கைப்பையை இறுகப் பற்றியபடி சுற்றி வந்து முன்கதவைத் திறந்து அமர, ஆதிக்கு இப்போது தன் மகிழ்ச்சி முகத்தில் தெரியாமல் காப்பது ரொம்பவே கடினமாக இருந்தது.
ஆனால் முக்கியமானது முதலில், "வண்டி ஒரு வாரமாக வேலை செய்யவில்லை என்றால் அதை முன்னமே சரி செய்திருக்கவேண்டாமா?" ஏதோ நிகழ்தகவில், இவன் சரியாக அந்த நேரத்தில் அங்கிருந்தான். இல்லாமலிருந்திருந்தால் எத்தனை கஷ்டமாக இருத்திருக்கும்..
"அது டெய்லி, வண்டியை சர்வீஷ் கொடுப்பது பற்றி யோசிக்கிறோம்.. ஆனால் நேரமில்லை"
"ம்ம்.... சத்யா எங்கே?"
".. சத்யாவின் பெரியப்பா பெண்ணிற்கு திருமணம்.. மண்டபம் உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில்தான். அதுதான் சித்தார்த் சார் டிராப் பண்ணுவதாய் கூப்பிட்டு போயிருக்காங்க.."
"ம்ம்"
மனோவின் கைப்பேசி மெல்லியதாய் இசைக்க, யாரென்று பார்த்தவள், சட்டென்று அதை உயிர்ப்பித்தாள், "ஹே.. நிலா.. எப்படி இருக்க? "
"........"
"ம்.. கொஞ்சம் பிஸி தான்"
"......."
"அடுத்த வாரமா? ம்.. ஞாயிற்றுகிழமை ஒரு பங்சன் இருக்கிறது. சனிக்கிழமை ஃப்ரிதான்.."
"......"
"ஓ.. மது வருகிறாளா"? சூப்பர்.. "
"ம்..ஓகே.. நீ சனிக்கிழமை மதுவிற்கு ஓகே வா என்று கேள்.."
"....."
"பை!"
"மது என்றால் அன்று மாலில் பார்த்தோமே அந்த பெண்ணா?"
"பரவாயில்லையே.. நல்லா நியாபகம் வைச்சிருக்கீங்களே! அவளேதான்.."
"காலேஜ் ஃப்ரெண்டா?"
"ம்ஹூம்.. ஸ்கூல் ஃப்ரெண்ட்.."
வியப்பாய் பார்த்தவன், "ஸ்கூல் ஃப்ரெண்ட்சிப் இன்னும் மெயின்டெயின் பண்றீங்களா? சூப்பர்.."
"நாங்க இப்போவும் பயங்கர க்ளோஸ்.. எங்க ஸ்கூல்ல எங்களை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?" அவன் தலையை இடமும் வலமுமாக ஆட்ட , தானே சொன்னாள் "பாண்டவிஸ்.."
சொல்லிவிட்டு கொஞ்சமாய் திரும்பி கண்களில் ஆர்வத்துடன் அவனைப் பார்க்க, சாலையில் கண்களைப் பதித்திருந்தவனின் முகத்தில் புரிந்ததற்கான மென்னகை பரவியது, "ஓ.. ஐந்து பேரா?"
"ம்.. ஆமாம்.. இப்போ ஒவ்வொருவரும் ஒரு இடத்தில். ஆனாலும் எப்போ ஃப்ரியா இருக்கோமோ, அப்போலாம் ஒரு மீட்.. சார்.. நிறுத்துங்க.. நிறுத்துங்க..ஸ்டேசனுக்கு லெஃப்ட்ல போகனும்"
"நம்ம ஸ்டேசனுக்குப் போகலையே.. வீட்டுக்கு தானே போகிறோம்.."
"வீட்டுக்கா? இங்கிருந்து எங்கள் வீட்டுக்குப் போக ஒரு மணி நேரமாவது ஆகும் சார்.."
"எனக்கு அந்த பக்கம் ஒரு முக்கியமான வேலை இருக்கு.."
கொஞ்சம் சந்தேகத்துடன் மனோ கண்கள் சுருக்கி அவனைத் திருப்பி பார்க்க, ஆதி சாலையை விட்டு கண்களை விலக்கவே இல்லையே.. தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தவளிடம்,"அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?"
"ஏதோ போய்க் கொண்டிருக்கிறது.."
"உன் சுப்பீரியர்கிட்ட இப்படிதான் சொல்லுவியா மனோ?"
"நீங்கள் மேனேஜிங் டைரக்டராகவா கேட்டீங்க?"
"சரி.. ப்ரெண்டா கேட்கிறேன். சித்தார்த் உன்னிடம் இப்பொழுது நன்றாக பேசுகிறானா?
இந்த கேள்வியை மனோ எதிர்பார்க்கவில்லைதான். சித்தார்த் எப்படி பேசுகிறான்? உண்மையைச் சொல்வதென்றால் மனோ அதைக் கவனிப்பதேயில்லை. சத்யா தான் அவ்வப்போது நியாபகப்படுத்திக் கொண்டேயிருப்பாள்.. "மனோ.. நீ போ இந்த டிஷ்கஷனுக்கு.. இன்னும் சில நாட்களில் இந்த ப்ராஜெக்ட் முடிந்துவிடும்." என்று அவளே மனோவும் சித்தார்த்தும் தனியாக இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள், அன்று ஹோட்டலுக்கு தாமதமாக வந்தாலே அது போல.
மனோவிற்கு சத்யா செய்வது ரொம்பவே பெரிய உதவியாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது அப்படி தெரியவில்லை. சித்தார்த்தும் ஒரு நல்ல நண்பனாக அவளிடம் பேசுகிறான். அவ்வளவுதான். . அவன் தன் பதவிக்கு புதியவன் என்பதால் நிஜமாகவே அவன் கற்றுக் கொள்ள நிறைய இருந்தது. " அவனோடு இருப்பதற்கான, பேசுவதற்கான வாய்ப்புகளுக்கு ஆசைப்பட வேண்டும், அது வாய்க்காமல் போனால் வருந்த வேண்டும்.. எதுவுமே இல்லையே.. இந்த வாய்ப்பு அவன் அவளைக் புரிந்து கொள்வதற்கா.. இல்லை அவள் தன்னைப் புரிந்து கொள்வதற்கா என்று இப்போதெல்லாம் மனோவிற்கு குழப்பம்தான்.
முன்னிருந்த கூகுள் மேப் போகும் வழியை சிகப்பில் காட்டி போக்குவரத்து நெரிசலைப் பற்றி எச்சரிக்க, "இந்த ரூட்ல ட்ராஃபிக் இருக்கும் போல.. இப்படி போகலாம்" என்றபடி காரை இடப்பக்கமாக வளைத்தான். கூகுள் பெண்ணும் ,'ரீகேல்குலேடிங்' என்று புதுவழியை ஆராயத் தொடங்கியது.
இன்னும் தன் கேள்விக்கு பதில் வராததில் மனோதிடம் ஒரு பார்வையை செலுத்தியவன், "என்ன.. பயங்கர யோசனையாக இருக்கிறது?" என்றான்.
"ம்.. என்ன??
"சித்தார்த் இப்போது உன்னைக் கவனிக்கிறானா என்று கேட்டேன்?"
"தெரியவில்லை.." உண்மையான பதில்தானே..
எதுவும் சொல்லாமல் முகத்தை ரொம்பவே கடினமாக வைத்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், தன் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டாள், "உங்களுக்கு லவ் ,பெயிலியரா சார்?"
"ஏன்?"
"இல்லை.. லவ் இதைப் பற்றி யோசிச்சாலே, இவ்வளோ கோபமா மாறிடறீங்களே? அதான் கேட்டேன்.."
கண்களில் மென்னகையுடன்,, "ஒரு ரூம் இருட்டாய் இருக்குனு சொல்ல உள்ளே போய் பார்க்கனும்னு அவசியமில்லை. வெளியே இருந்து பார்த்தாலே தெரியும்"
"அந்த ரூம் இருட்டாயில்லை.. கலர் கலராய் பளிச்சென்று இருக்கின்றது என்று சொல்கிறேன்.*
"கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டால் அப்படிதான் தெரியும்."
"நான் ஒன்றும் கனவு காணவில்லை. நீங்கள் தான் கண்களை மூடிக் கொண்டு எல்லாமே இருட்டாக இருக்கிறதுனு சொல்றீங்க"
"கண்களை நன்றாக திறந்து பார்ப்பதால்தான் சொல்கிறேன். ஒன்று காதல் ங்கிற பேரில் ஒருத்தர் மற்றவரை ஏமாற்றிராங்க.. ஏமாந்தவங்க வாழ்க்கையையே இழந்ததா நினைச்சி அழுறாங்க; நம்ம சித்தார்த் மாதிரி.. இல்லைனா ரெண்டு பேருமே உண்மையா காதலிக்கிறதா தங்களையே ஏமாத்தி கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து கஷ்டபடுறாங்க சுமி அக்கா மாதிரி"
"சுமி அக்காவா?"
" ம்.. சித்தார்த்தின் அக்கா.. இருபத்திரண்டு வயதிலேயே காதல் என்று வந்த பெண்ணிற்கு எங்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும் புத்தி சொல்லி, புரிய வைக்காமல், நீ சந்தோசமாய் இருந்தால் போதும் அம்மா னு டயலாக் பேசி கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். இப்போ எப்படி கஷ்டபடுறாங்க தெரியுமா?"
நிஜமாகவே மனோவிற்கு வருத்தமாக இருந்தது. கடவுள் ஏன் இவனுக்கு இப்படி தவறான உதாரணங்களாய் காட்ட வேண்டும்? " கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோருமே இந்த இரண்டு வகைகளில் ஒன்றாக இருப்பதில்லை தெரியுமா? நீங்கள் பார்த்தீர்களே மது, என் ஃப்ரெண்ட்.. உண்மையான காதலுக்கு அவளும் அவள் கணவர் அரஜுன் சாரும்தான் உதாரணம். பார்த்த ஒரு மாதத்திலேயே திருமணம் செய்து கொண்டார்கள்.. ஒரு நாள் கூட பிரிந்து இருக்க மாட்டார்கள். அவர் பெரிய பணக்காரர். வெளிநாடுகளிலெல்லாம் ஹோட்டல்கள் வைச்சிருக்கார். எங்கே போனாலும் மதுவோடுதான் போவார்.."
எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டவனைப் பார்த்து, முறைத்தவள், பின் மாறி உற்சாகமான குரலோடே தொடர்ந்தாள் , "நாங்கள் அவளை ப்ரைம் மினிஸ்டர்' என்றுதான் கூப்பிடுவோம் தெரியுமா சார்? '"
அவன் கேள்வியாய் புருவங்களை மேலுயர்த்த, "ஏன் தெரிகிறதா?" என்றாள்.
"ம்கூம்"
"ஏனென்றால் அர்ஜுன் சாரோடு அவள் போகாத நாடே கிடையாது. காலையில் லண்டனில் இருப்பாள். லஞ்ச் மீட்டிங் ஃபிரான்ஸ் என்பாள். இரவு அமெரிக்காவிற்கான ஃப்ளைட்டில் இருப்பாள்.." ஆதியின் முகத்தில் படர்ந்த சிரிப்பைப் பார்த்தவளின் கண்கள் இளகின, "மது கொடுத்து வைத்த பெண்".
ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன், ஒரு சிறு இடைவெளி விட்டு "தாம்பரத்தில் இருக்கும் வண்டியாவது நல்ல கண்டீசனில் இருக்கிறதா? இல்லை அதையும் சர்வீஸ் விடுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?"
பேச்சை மாற்றுகிறானாம். அவளுக்குமே சண்டை போடாமல் சாதாரணமாகச் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. , "அதெல்லாம் சூப்பர் கண்டீசனில் இருக்கிறது.. என்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ஸ்கூட்டர்" பெருமையோடு அறிவித்தாள்.
என்ன மாடல் என்று கேட்டான். பின் அவனுடைய முதல் பைக் பற்றி பேசினார்கள். பைக்கில் சென்ற இடங்கள் பற்றிப் பேசினார்கள். பின் தங்கள் பயண அனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். இதற்கு நடுவில் வண்டியை இருக்கிற எல்லா கிளைச் சாலைகளிலும் வளைத்தவனைப் பார்த்து, கூகுள் பெண் பல முறை 'ரீ கேல்குலேடிங்' 'ரீ கேல்குலேடிங்' என்று பாடி, கடைசியில் இனியொரு முறை வண்டியை வளைத்தால் அவ்வளவுதான். இதற்கு அந்த ரெட் லைனில் வந்திருந்தாலேயே அரை மணி நேரத்திற்கு முன்னாக வந்திருப்பாய்' என்று அது திட்டலாம் என்று முடிவு செய்த நேரத்தில் மனோவின் வீடு வந்துவிட, ரீச்ட் யுவர் டெஷ்டினேசன்' என்று அது முடித்துக் கொண்டது.
மணியைப் பார்த்த மனோ தான், "அச்சோ.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆயிடுச்சு.. உங்களுக்கு பரவாயில்லையா?" என்று கேள்வியாய் பார்க்க, "அதான் சொன்னேனே.. முக்கியமான வேலை இருக்கிறதென்று" என்று சொன்னபடி காரை அவள் வீட்டு வாசலில் நிறுத்தினான்.
காரிலிருந்து இறங்கி சுற்றி வந்து ஸ்டியரிங் வீல் முன்னிருந்தவன் அருகில் வந்தவள், "தாங்க்யூ சார்" என்ற போது, வீட்டுக் கதவு திறந்து, வெளியே வந்த பூர்ணிமா, "என்ன மனோ.. இவ்வளவு நேரமா? லேட் ஆனால் ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?"
மனோ, " அம்மா.. வண்டி ரிப்பேராயிடுச்சி" என்றபடி ஆதியைப் பார்க்க, அப்போதுதான் பூர்ணிமா காரையும் காருக்குள் இருப்பவனையும் பார்த்தார். இது ஓலா காராக இருக்காது. தன் மகளைப் பார்க்க, மனோ அறிமுகம் செய்தாள், 'இது ஆதி சார் மா.. எங்கள் கம்பெனியின் எம்.டி."
"ஓ.. வணக்கம் தம்பி"
இதற்கு மேல் காருக்குள்ளேயே இருந்தால் நன்றாக இருக்காது.. காரிலிருந்து இறங்கியவன், "வணக்கம் ஆன்ட்டி" என்று முடிப்பதற்குள், கணேசன் வந்தார், "ஏன் மனோ லேட்டு? " என்றபடி. அவரிடமும் வண்டி ரிப்பேரானதைக் கூறி ஆதியை அறிமுகப்படுத்த, பூர்ணிமா தன் விருந்தோம்பலைக் காட்டினார், "உள்ளே வாங்க தம்பி.. சாப்பிட்டுட்டு போலாம்"
"அச்சோ.. இல்லை ஆன்ட்டி.. நான் கிளம்புகிறேன். அம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க"
மனோ பூர்ணிமாவின் முகத்தில் பளிச் பளிச் என்று பல்ப் எரிவதைக் கண்முன்னே பார்த்தாள். அம்மாவிற்கு மரியாதை தரும் பையனாம். அரை நொடியில் மனோவையும் குற்றம் சாட்டும் பார்வையையும் செலுத்தி விட்டார். இவள் அப்படி கவலைப்படவில்லையாம்.
கணேசன் ஆரம்பித்தார், "திருப்பி போக நேரமாகுமே தம்பி.. வாங்க.. வந்து ஏதாவது குடிச்சிட்டாவது போங்க"
ஆதி திரும்பி மனோவைக் கேள்வியாய் பார்க்க, பூர்ணிமாவிற்கு கோபம் வந்தது,, கண்களால் முறைத்து"வரச் சொல்லு மனோம்மா.." என்று குரலில் மட்டும் தன்மையாகச் சொன்னார்.
இதென்னடா வம்பாய் போய்விட்டது. இவளென்ன வரவேண்டாம் என்றா சொல்லப் போகிறாள்..இவளை ஏன் கேள்வியாய் பார்க்கிறான். இவனுக்கு சங்கடமாக இருக்குமோ என்றுதான் அமைதியாக இருந்தாள், "உள்ளே வாங்க சார்.."
உள்ளே வந்ததும் சோஃபாவில் அமர்ந்திருந்த செழியனிடம் மறுபடியும் அறிமுகப்படுத்திவிட்டு, தாயோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.
"ஏய் மனோ.. உன் எம்.டி யைக் கூப்பிட்டு வர்றேன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா? வீட்டிலே எதுவுமே இல்லை"
"எனக்கென்ன வண்டி வேலை செய்யாமல் போகுமென்று தெரியுமா?"
"அது தெரியாதுதான். ஆனால் காரில் வரும்போதாவது ஒரு கால் பண்ணியிருக்கலாமே?" பழங்களை வெட்டி மிக்ஸியில் போட்டபடி, "ஐஸ்கட்டி களை ஃப்ரிட்ஜிலிருந்து எடு.."
"அது.. அது தோணவே இல்லைம்மா.. ஆனால் உங்களோட இந்த மிக்ஸட் ஜீஸ் சூப்பரா இருக்கும்.. அவர் வீடு போய் சேரும் வரைக்கும் பசிக்கவும் செய்யாது.. அதனால், நோ கவலை" தாயோடு சேர்ந்து பழக்கலவை செய்து தம்பி, தந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தால், அங்கே ஆதி தனி இருக்கையில் ரொம்பவும் வசதியாக அமர்ந்திருந்தான். சொந்தமாய் கார் வாங்கும் ஆசையில் இருந்த செழியனும் ஆதியும் எல்லா வகைக் கார்களைப் பற்றியும் விலாவாரியாக அலசிக் கொண்டிருக்க, ஆன்மிக சொற்பொழிவு கேட்கும் பக்தன் போல, அப்போதுதான் வந்திருந்த காவியன் கால் சாக்ஸைக் கூட கழற்றாமல் அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணேசனோ, மூவர் பேசுவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பூர்ணிமா, மனோ வந்ததும் எழுந்து டம்ளரை எடுத்துக் கொண்டவன், ஒரு மிடறு விழுங்கி, "ரொம்பவும் நல்லா இருக்கு ஆன்ட்டி" என்று ஒரு ஷொட்டு வைத்துவிட்டு, மீதியிருப்பதைக் கடகடவென்று குடித்தான். அதற்குப் பின் அமரவுமில்லை. "நேரமாயிடுச்சி. கிளம்புகிறேன் ஆன்ட்டி.. வர்றேன் அங்கிள்.. பை!"என்று செழியன் காவியனிடம் சொல்லி, மனோவின் பக்கமும் திரும்பி,"பை" என்று சொல்லிக் கிளம்பினான்.
வழியனுப்ப அவனோடு வெளியே வந்தவள், "நீங்கள் முக்கியமான வேலையிருக்கிறது என்றீர்களே? நிஜமாகவே உங்களுக்கு இங்கே முக்கியமான வேலையிருக்கிறதா? ரொம்பவும் லேட்டாயிடுச்சே?"
"நிஜமாகவே இருக்கு"
"என்ன வேலை?"
திரும்பி அவளை நேருக்கு நேராகப் பார்க்கும்படி நின்றவன், ஒரு நொடி தயங்கி பின் சொன்னான், "உன்னிடம் மன்னிப்பு கேட்கும் வேலை.."
"மன்னிப்பா? எதற்கு? ?"
"நேற்று பேசியதற்கு..". நேற்று என்ன பேசினான் என்று நினைக்க ஆரம்பித்தவளுக்கு, சட்டென்று ஹோட்டல் பேச்சு நினைவு வந்தது. அவள் முகத்தையே பார்த்திருந்தவன், "சாரி மனோ.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நீ என்றுமே நேரக்கணக்கு பார்த்து நம் கம்பெனியில் வேலை செய்யவில்லை என்று எனக்கு தெரியும்.. அப்படி இருக்கும்போது நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது."
இருந்த கோபமெல்லாம் அவனோடு பேசியபடி வந்ததில், வீட்டில் எல்லோரிடமும் அவன் சாதாரணமாய் பழகியதில் , மறைந்திருக்க, ரொம்பவே சாதாரணமாய், "இதுதான் இங்கே ஆக வேண்டிய முக்கியமான வேலையா சார். இதை அங்கேயே கேட்டிருக்கலாமே?" என்று புன்னகையுடனே கேட்டாள்.
கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவன் அவளைப் பார்த்து, "அங்கே சாரி சொல்லியிருந்தால், எதற்கு சாரி என்பதே உனக்கு மறந்திருக்குமா? இல்லை, இத்தனை சுலபமாக என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருப்பாயா?" அவன் புருவம் உயர்த்திக் கேட்க, மனோ கண்கள் விரிய அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். சரியாகத்தான் சொல்கிறான்.
அவள் முகத்தைப் பார்த்தபடி சாவியை அதனிடத்தில் பொருத்தி, காரை உயிர்ப்பித்தவன், தொடர்ந்தான், "ஒரு நல்ல பிஸினெஸ்மேன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்ன தெரியுமா மனோ.. 'கிராப் த ஆப்பர்ச்சுனிட்டிஸ்'.. அதாவது 'வாய்ப்புகளை பிடித்துக் கொள்ள வேண்டும். அதான் கெட்டியாய் பிடிச்சுகிட்டேன்.. பை" என்று புன்னகைத்தபடி காரைக் கிளப்பினான்.
அன்றிரவு முழுக்க நம் மனோவின் கனவில் அந்த அனுபமாதான் வந்தாள்.
மனோவிடம் சாரி சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பை தான் காலையிலிருந்து ஆதி தேடிக் கொண்டிருக்கிறான். ம்ஹூம்.. ஆளைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. ப்ராஜெக்டின் முக்கியமான நேரம். வேலை அதிகம்தான். எப்பொழுதும் அவளுடன் நான்கு பேர் இருந்தார்கள். அத்தனை பேர் முன்னிலையிலும் மன்னிப்பு கோர முடியாதே..
நேற்றைய இரவெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில் நடந்ததில் தன் தவறு பெரும்பங்கு இருக்கிறது என்றே ஆதிக்குத் தோன்றியது.
எத்தனை நாட்கள் அதிகப்படியான நேரங்கள் மனோ வேலை செய்திருக்கிறாள். ஒரு நாள், ஒரு மணி நேரம் அதிகமாக உணவு இடைவேளை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு.
இனி இருப்பது, ஒரே வாய்ப்புதான். மனோ கிளம்பும் நேரம். கம்பெனியிலிருந்து ரயில் நிலையம் செல்ல அவர்கள் பயன்படுத்துவது சத்யாவின் வண்டி. பார்க்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு டிரெயினில் போய் அங்கே பார்க்கிங்கில் இருக்கும் மனோ வண்டியில் வீட்டுக்கு போவார்கள். இருவர் வீடும் அருகருகில் இருப்பதால் மனோ மாலையில் சத்யாவை வீட்டில் விட்டு விட்டு போவாள். காலை வரும்போது அழைத்துக் கொள்வாள். இதுதான் மனோ இந்த கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து அவர்களுடைய வழக்கம். இது ஆதிக்கும் தெரியும். அதனால் கிளம்பும் அந்த சமயத்திலும் மனோவுடன் சத்யா இருப்பாள். சாரி சொல்வதென்றால் சத்யா முன்னிலையில்தான் சொல்ல வேண்டும். ம்ம்.. கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. எப்படியும் அவன் அன்று பேசியது சத்யாவிற்கும் தெரியும். அதனால் அவள்முன் கேட்பதில் தவறிருக்காது.
மணி ஆறை எட்டியிருந்தது. அவர்கள் வேலை நேரம் ஐந்து மணிவரை. ' ம்ம்ம்..
.
அவனுக்கு எதிரறை மனோவினது என்றால் பக்கவாட்டு அறை சித்தார்த்தினுடையது. அங்குதான் இப்பொழுது மனோவோடு இன்னும் சிலரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் முன்னிருந்த கணினியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணுமாய் இருந்தவன் சளசளவென்ற சத்தத்தில் நிமிர்ந்தான். அனைவருமே விடைபெற்று முன்னே செல்ல சத்யாவும் சித்தார்த்தும் மனோவின் அறையின் வாசலில் இருக்க, மனோ உள்ளே போய் கைப்பையோடு வெளியே வந்தாள். கவனமாக இவன் அறைப்பக்கம் பார்க்காமல் தவிர்க்கிறாளோ? இதில் சந்தேகம் என்ன? நிஜமாகவே தவிர்க்கத் தான் செய்கிறாள். காலையிலிருந்து இதே நேர் கொண்ட பார்வை; நிமிர்ந்த நன்னடைதான். நியாயமான கோபம்.. ஆதியின் முகம் இளகியது. கடந்த சில வாரங்களாக ஆதி அவளிடம் காட்டிய பாராமுகம் அவளுக்கும் அவனுக்கு இப்போதிருப்பது போல் தானே உறுத்தியிருக்கும்... உறுத்தியிருக்கும்தானே??
தன் பொருட்களோடு கிளம்பியவன் அவர்களை முன்னே போக விட்டு சில அடி தூர இடைவெளியில், பின்னே நடந்து வந்தான்.. கட்டிடத்தின் கீழ் தளத்தில் பிரதான வாசலின் கண்ணாடி கதவு வழியாக அவர்கள் வெளியே செல்ல தன் எட்டு களை கொஞ்சம் வேகமாகப் போட்டுக் கொண்டிருந்தவனை, "வணக்கம் சார்!" என்ற குரல் நிறுத்தியது.
வாசல் கதவைத் திறந்து பிடித்திருந்த வாயிற்காவலர். "வணக்கம் முருகேசன் சார்".
உயரமாக, , சட்டையை இன் செய்து, ஒரு கையைப் பாக்கெட்டிற்குள் விட்டபடி கம்பீரமாக வரும் தன் இளைய முதலாளியை ரசித்துப் பார்த்தார், முருகேசன். அவருக்கு இத்தனை அழகாக தன் முதலாளி போவது மன்னிப்பு கேட்க என்று தெரியாதில்லையா? அவன் தகப்பனார் காலத்திலிருந்து இங்கு வேலை செய்பவர்.
அவர் ஏதோ சொல்ல வருவது போல் தோன்ற, ஆதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் யோசித்தான். நின்று பேசினால், அவர்கள் கிளம்பியிருப்பார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பை இழந்து விடுவான். ஆனால் இவரிடம் என்னவென்று கேளாமல் எப்படி போவது. கேள்வியாய் பார்த்து நின்றான், "சொல்லுங்க முருகேசன்"
"தம்பி.. என் பையன் ஃபர்ஸ்ட் இயர்ல முதல் வகுப்புல பாஸ் ஆயிட்டானாம். காலேஜ்லயே அவன்தான் ஃபர்ஸ்ட் ஆம்."
"ஓ.. சூப்பர்.. ரொம்ப சந்தோசம்"
"ரொம்ப நன்றி தம்பி.. நீங்க மட்டும் படிக்க உதவி செய்யலைனா, இப்போ ஏதாவது கடையில பொட்டலம் போட்டுகிட்டு இருப்பான்."
"நன்றி எல்லாம் என்ன சார்..உங்க பையன் எடுத்த மார்க்குக்கு அவன் மேல படிக்கலைனா, அது பெரிய தப்பு.. நீங்களே வந்து கேட்டிருக்கனும். நல்லவேளை உலகநாதன் சார் சொன்னார்"
"அது தம்பி. நான் சும்மா உலகநாதன் அய்யாகிட்ட புலம்பிகிட்டு இருந்தேன். என்னமோ.. கடவுள் அருள்.. அப்புறம் தம்பி..*
"சொல்லுங்க.."
"எனக்கு ஒரு சின்ன ஆசை.. என் பையன் படிச்சு முடிச்சதும் நம்ம கம்பெனியிலயே வேலை போட்டுக் கொடுங்க தம்பி.. இந்த கையால எத்தனையோ பேருக்கு கேட் திறந்து விட்டிருக்கேன். என் பையனுக்கும் அதே மாதிரி திறக்கனும்"
"கண்டிப்பா.. இதே மாதிரி தொடர்ந்து நல்லா படிச்சு, திறமையோட வெளியே வரட்டும். வேலை அவனுக்காக காத்திருக்கும்"
"ரொம்ப சந்தோசம் தம்பி.. ரொம்ப சந்தோசம்" சிரித்தபடி அவர் விலகி நிற்க, ஆதிக்கு தன் முகத்தை மாற்றாமல் காப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு பெரிய மூச்சை வெளியிட்டவன், கார் பார்க்கிங்கில் தன் கார் நிறுத்தியிருக்கும் இடம் நோக்கி மெதுவாகச் சென்றான். நிச்சயம் சத்யாவும் மனோவும் போயிருப்பார்கள். இன்று வெள்ளி கிழமை. இனி சனி ஞாயிறு போய் திங்களன்றுதான் பார்க்க முடியும். முகம் ரொம்பவும் வாடி, காரைக் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டிருந்த பொழுது, சட்டென்று கால்கள் அனிச்சை செயலாய் பிரேக்கை அழுத்தின. நிஜம் தானா.. நிஜமேதானா? கடவுள் இருக்கிறார்தான் போல.. இல்லையென்றால் இப்படியெல்லாம் நடக்குமா?
நம் ஆதி இப்படி திடீர் பக்தனாய் மாறியதற்குக் காரணம், மனோ இன்னும் போகவில்லை. டூவீலர் பார்க்கிங்கில்தான் நின்று கொண்டிருந்தாள். அதுவும் ச்தயா இல்லாமல் தனியாக.. அதுவும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துக் கொண்டு..
ஆதி.. இதற்கு மேல் உன் திறமையைக் காட்டு..
காரை மனோவின் வண்டியின் அருகில்
செலுத்தியவன், பக்கத்தில் வந்ததும் ஹார்ன் அடித்தான். சத்தத்தில் திரும்பிய மனோவின் முகத்தில் ஆர்வமான புன்னகை ஒரு நொடி தோன்றி பின் மறைந்தது. 'நோ.. நான் இவனிடம் பேசக் கூடாது. நேற்று எப்படி எல்லாம் பேசினான்?'
"ஹாய் மனோ!"
"ஹாய்!" அவன் புறம் திரும்பாமலேயே பதில் வந்தது.
"என்னாச்சி? வண்டி ஸ்டார்ட் ஆகவில்லையா?
"ம்.. ஆமாம்..ஒரு வாரமாகவே பட்டன் ஸ்டார்ட் வேலை செய்யவில்லை. கிக் ஸ்டார்ட் தான். இன்று அதுவும் வேலை செய்யவில்லை.."
இறங்கி உதைத்துக் பார்க்க வேண்டுமா? ஆனால் தப்பித் தவறி ஸ்டார்ட் ஆகி விட்டால்.. நோ.. சத்தமாய் யோசித்தான்," ம்.. ஸ்டார்ட் ஆகலைனா, என்ஜின் ப்ராப்ளமாகத்தான் இருக்கும். என்ன பிரச்சனைன்னு பார்க்க மெக்கானிக் போய் கூப்பிட்டு வர வேண்டும்..பக்கத்தில் மெக்கானிக் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை."
ஆதி இது உனக்கே ஓவராகத் தெரியவில்லையா? இந்த வண்டியை அக்குவேறு ஆணி வேறாகக் கழற்ற உனக்கு அரை மணி நேரமாகுமா? ஆனால் அது மனோவிற்குத் தெரியாதே...
இன்னும் ஒரு சில நொடிகள் யோசிப்பது போல கைகளை ஸ்டியரிங் லீவில் தட்டியவன், "சரி.. வா மனோ.. நான் உன்னை டிராப் செய்கிறேன்.."
"ம்கூம்.. இருக்கட்டும்.. நான் ஆட்டோவில் போய் கொள்கிறேன்""
"ஆட்டோ பிடிக்க, ஸ்டாண்டிற்கு நடப்பதற்கே, இருபது நிமிடத்திற்கும் மேலாகவும். ஏறு மனோ "
மறுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும்.. அதற்காக இவன் காரில் ஏறுவதா?
"கமான் மனோ"
ஒரு மூச்சை உள்ளே இழுத்து விட்டவள், பின் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கைப்பையை இறுகப் பற்றியபடி சுற்றி வந்து முன்கதவைத் திறந்து அமர, ஆதிக்கு இப்போது தன் மகிழ்ச்சி முகத்தில் தெரியாமல் காப்பது ரொம்பவே கடினமாக இருந்தது.
ஆனால் முக்கியமானது முதலில், "வண்டி ஒரு வாரமாக வேலை செய்யவில்லை என்றால் அதை முன்னமே சரி செய்திருக்கவேண்டாமா?" ஏதோ நிகழ்தகவில், இவன் சரியாக அந்த நேரத்தில் அங்கிருந்தான். இல்லாமலிருந்திருந்தால் எத்தனை கஷ்டமாக இருத்திருக்கும்..
"அது டெய்லி, வண்டியை சர்வீஷ் கொடுப்பது பற்றி யோசிக்கிறோம்.. ஆனால் நேரமில்லை"
"ம்ம்.... சத்யா எங்கே?"
".. சத்யாவின் பெரியப்பா பெண்ணிற்கு திருமணம்.. மண்டபம் உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில்தான். அதுதான் சித்தார்த் சார் டிராப் பண்ணுவதாய் கூப்பிட்டு போயிருக்காங்க.."
"ம்ம்"
மனோவின் கைப்பேசி மெல்லியதாய் இசைக்க, யாரென்று பார்த்தவள், சட்டென்று அதை உயிர்ப்பித்தாள், "ஹே.. நிலா.. எப்படி இருக்க? "
"........"
"ம்.. கொஞ்சம் பிஸி தான்"
"......."
"அடுத்த வாரமா? ம்.. ஞாயிற்றுகிழமை ஒரு பங்சன் இருக்கிறது. சனிக்கிழமை ஃப்ரிதான்.."
"......"
"ஓ.. மது வருகிறாளா"? சூப்பர்.. "
"ம்..ஓகே.. நீ சனிக்கிழமை மதுவிற்கு ஓகே வா என்று கேள்.."
"....."
"பை!"
"மது என்றால் அன்று மாலில் பார்த்தோமே அந்த பெண்ணா?"
"பரவாயில்லையே.. நல்லா நியாபகம் வைச்சிருக்கீங்களே! அவளேதான்.."
"காலேஜ் ஃப்ரெண்டா?"
"ம்ஹூம்.. ஸ்கூல் ஃப்ரெண்ட்.."
வியப்பாய் பார்த்தவன், "ஸ்கூல் ஃப்ரெண்ட்சிப் இன்னும் மெயின்டெயின் பண்றீங்களா? சூப்பர்.."
"நாங்க இப்போவும் பயங்கர க்ளோஸ்.. எங்க ஸ்கூல்ல எங்களை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?" அவன் தலையை இடமும் வலமுமாக ஆட்ட , தானே சொன்னாள் "பாண்டவிஸ்.."
சொல்லிவிட்டு கொஞ்சமாய் திரும்பி கண்களில் ஆர்வத்துடன் அவனைப் பார்க்க, சாலையில் கண்களைப் பதித்திருந்தவனின் முகத்தில் புரிந்ததற்கான மென்னகை பரவியது, "ஓ.. ஐந்து பேரா?"
"ம்.. ஆமாம்.. இப்போ ஒவ்வொருவரும் ஒரு இடத்தில். ஆனாலும் எப்போ ஃப்ரியா இருக்கோமோ, அப்போலாம் ஒரு மீட்.. சார்.. நிறுத்துங்க.. நிறுத்துங்க..ஸ்டேசனுக்கு லெஃப்ட்ல போகனும்"
"நம்ம ஸ்டேசனுக்குப் போகலையே.. வீட்டுக்கு தானே போகிறோம்.."
"வீட்டுக்கா? இங்கிருந்து எங்கள் வீட்டுக்குப் போக ஒரு மணி நேரமாவது ஆகும் சார்.."
"எனக்கு அந்த பக்கம் ஒரு முக்கியமான வேலை இருக்கு.."
கொஞ்சம் சந்தேகத்துடன் மனோ கண்கள் சுருக்கி அவனைத் திருப்பி பார்க்க, ஆதி சாலையை விட்டு கண்களை விலக்கவே இல்லையே.. தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தவளிடம்,"அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?"
"ஏதோ போய்க் கொண்டிருக்கிறது.."
"உன் சுப்பீரியர்கிட்ட இப்படிதான் சொல்லுவியா மனோ?"
"நீங்கள் மேனேஜிங் டைரக்டராகவா கேட்டீங்க?"
"சரி.. ப்ரெண்டா கேட்கிறேன். சித்தார்த் உன்னிடம் இப்பொழுது நன்றாக பேசுகிறானா?
இந்த கேள்வியை மனோ எதிர்பார்க்கவில்லைதான். சித்தார்த் எப்படி பேசுகிறான்? உண்மையைச் சொல்வதென்றால் மனோ அதைக் கவனிப்பதேயில்லை. சத்யா தான் அவ்வப்போது நியாபகப்படுத்திக் கொண்டேயிருப்பாள்.. "மனோ.. நீ போ இந்த டிஷ்கஷனுக்கு.. இன்னும் சில நாட்களில் இந்த ப்ராஜெக்ட் முடிந்துவிடும்." என்று அவளே மனோவும் சித்தார்த்தும் தனியாக இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள், அன்று ஹோட்டலுக்கு தாமதமாக வந்தாலே அது போல.
மனோவிற்கு சத்யா செய்வது ரொம்பவே பெரிய உதவியாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது அப்படி தெரியவில்லை. சித்தார்த்தும் ஒரு நல்ல நண்பனாக அவளிடம் பேசுகிறான். அவ்வளவுதான். . அவன் தன் பதவிக்கு புதியவன் என்பதால் நிஜமாகவே அவன் கற்றுக் கொள்ள நிறைய இருந்தது. " அவனோடு இருப்பதற்கான, பேசுவதற்கான வாய்ப்புகளுக்கு ஆசைப்பட வேண்டும், அது வாய்க்காமல் போனால் வருந்த வேண்டும்.. எதுவுமே இல்லையே.. இந்த வாய்ப்பு அவன் அவளைக் புரிந்து கொள்வதற்கா.. இல்லை அவள் தன்னைப் புரிந்து கொள்வதற்கா என்று இப்போதெல்லாம் மனோவிற்கு குழப்பம்தான்.
முன்னிருந்த கூகுள் மேப் போகும் வழியை சிகப்பில் காட்டி போக்குவரத்து நெரிசலைப் பற்றி எச்சரிக்க, "இந்த ரூட்ல ட்ராஃபிக் இருக்கும் போல.. இப்படி போகலாம்" என்றபடி காரை இடப்பக்கமாக வளைத்தான். கூகுள் பெண்ணும் ,'ரீகேல்குலேடிங்' என்று புதுவழியை ஆராயத் தொடங்கியது.
இன்னும் தன் கேள்விக்கு பதில் வராததில் மனோதிடம் ஒரு பார்வையை செலுத்தியவன், "என்ன.. பயங்கர யோசனையாக இருக்கிறது?" என்றான்.
"ம்.. என்ன??
"சித்தார்த் இப்போது உன்னைக் கவனிக்கிறானா என்று கேட்டேன்?"
"தெரியவில்லை.." உண்மையான பதில்தானே..
எதுவும் சொல்லாமல் முகத்தை ரொம்பவே கடினமாக வைத்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், தன் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டாள், "உங்களுக்கு லவ் ,பெயிலியரா சார்?"
"ஏன்?"
"இல்லை.. லவ் இதைப் பற்றி யோசிச்சாலே, இவ்வளோ கோபமா மாறிடறீங்களே? அதான் கேட்டேன்.."
கண்களில் மென்னகையுடன்,, "ஒரு ரூம் இருட்டாய் இருக்குனு சொல்ல உள்ளே போய் பார்க்கனும்னு அவசியமில்லை. வெளியே இருந்து பார்த்தாலே தெரியும்"
"அந்த ரூம் இருட்டாயில்லை.. கலர் கலராய் பளிச்சென்று இருக்கின்றது என்று சொல்கிறேன்.*
"கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டால் அப்படிதான் தெரியும்."
"நான் ஒன்றும் கனவு காணவில்லை. நீங்கள் தான் கண்களை மூடிக் கொண்டு எல்லாமே இருட்டாக இருக்கிறதுனு சொல்றீங்க"
"கண்களை நன்றாக திறந்து பார்ப்பதால்தான் சொல்கிறேன். ஒன்று காதல் ங்கிற பேரில் ஒருத்தர் மற்றவரை ஏமாற்றிராங்க.. ஏமாந்தவங்க வாழ்க்கையையே இழந்ததா நினைச்சி அழுறாங்க; நம்ம சித்தார்த் மாதிரி.. இல்லைனா ரெண்டு பேருமே உண்மையா காதலிக்கிறதா தங்களையே ஏமாத்தி கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து கஷ்டபடுறாங்க சுமி அக்கா மாதிரி"
"சுமி அக்காவா?"
" ம்.. சித்தார்த்தின் அக்கா.. இருபத்திரண்டு வயதிலேயே காதல் என்று வந்த பெண்ணிற்கு எங்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும் புத்தி சொல்லி, புரிய வைக்காமல், நீ சந்தோசமாய் இருந்தால் போதும் அம்மா னு டயலாக் பேசி கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். இப்போ எப்படி கஷ்டபடுறாங்க தெரியுமா?"
நிஜமாகவே மனோவிற்கு வருத்தமாக இருந்தது. கடவுள் ஏன் இவனுக்கு இப்படி தவறான உதாரணங்களாய் காட்ட வேண்டும்? " கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோருமே இந்த இரண்டு வகைகளில் ஒன்றாக இருப்பதில்லை தெரியுமா? நீங்கள் பார்த்தீர்களே மது, என் ஃப்ரெண்ட்.. உண்மையான காதலுக்கு அவளும் அவள் கணவர் அரஜுன் சாரும்தான் உதாரணம். பார்த்த ஒரு மாதத்திலேயே திருமணம் செய்து கொண்டார்கள்.. ஒரு நாள் கூட பிரிந்து இருக்க மாட்டார்கள். அவர் பெரிய பணக்காரர். வெளிநாடுகளிலெல்லாம் ஹோட்டல்கள் வைச்சிருக்கார். எங்கே போனாலும் மதுவோடுதான் போவார்.."
எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டவனைப் பார்த்து, முறைத்தவள், பின் மாறி உற்சாகமான குரலோடே தொடர்ந்தாள் , "நாங்கள் அவளை ப்ரைம் மினிஸ்டர்' என்றுதான் கூப்பிடுவோம் தெரியுமா சார்? '"
அவன் கேள்வியாய் புருவங்களை மேலுயர்த்த, "ஏன் தெரிகிறதா?" என்றாள்.
"ம்கூம்"
"ஏனென்றால் அர்ஜுன் சாரோடு அவள் போகாத நாடே கிடையாது. காலையில் லண்டனில் இருப்பாள். லஞ்ச் மீட்டிங் ஃபிரான்ஸ் என்பாள். இரவு அமெரிக்காவிற்கான ஃப்ளைட்டில் இருப்பாள்.." ஆதியின் முகத்தில் படர்ந்த சிரிப்பைப் பார்த்தவளின் கண்கள் இளகின, "மது கொடுத்து வைத்த பெண்".
ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன், ஒரு சிறு இடைவெளி விட்டு "தாம்பரத்தில் இருக்கும் வண்டியாவது நல்ல கண்டீசனில் இருக்கிறதா? இல்லை அதையும் சர்வீஸ் விடுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?"
பேச்சை மாற்றுகிறானாம். அவளுக்குமே சண்டை போடாமல் சாதாரணமாகச் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. , "அதெல்லாம் சூப்பர் கண்டீசனில் இருக்கிறது.. என்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ஸ்கூட்டர்" பெருமையோடு அறிவித்தாள்.
என்ன மாடல் என்று கேட்டான். பின் அவனுடைய முதல் பைக் பற்றி பேசினார்கள். பைக்கில் சென்ற இடங்கள் பற்றிப் பேசினார்கள். பின் தங்கள் பயண அனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். இதற்கு நடுவில் வண்டியை இருக்கிற எல்லா கிளைச் சாலைகளிலும் வளைத்தவனைப் பார்த்து, கூகுள் பெண் பல முறை 'ரீ கேல்குலேடிங்' 'ரீ கேல்குலேடிங்' என்று பாடி, கடைசியில் இனியொரு முறை வண்டியை வளைத்தால் அவ்வளவுதான். இதற்கு அந்த ரெட் லைனில் வந்திருந்தாலேயே அரை மணி நேரத்திற்கு முன்னாக வந்திருப்பாய்' என்று அது திட்டலாம் என்று முடிவு செய்த நேரத்தில் மனோவின் வீடு வந்துவிட, ரீச்ட் யுவர் டெஷ்டினேசன்' என்று அது முடித்துக் கொண்டது.
மணியைப் பார்த்த மனோ தான், "அச்சோ.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆயிடுச்சு.. உங்களுக்கு பரவாயில்லையா?" என்று கேள்வியாய் பார்க்க, "அதான் சொன்னேனே.. முக்கியமான வேலை இருக்கிறதென்று" என்று சொன்னபடி காரை அவள் வீட்டு வாசலில் நிறுத்தினான்.
காரிலிருந்து இறங்கி சுற்றி வந்து ஸ்டியரிங் வீல் முன்னிருந்தவன் அருகில் வந்தவள், "தாங்க்யூ சார்" என்ற போது, வீட்டுக் கதவு திறந்து, வெளியே வந்த பூர்ணிமா, "என்ன மனோ.. இவ்வளவு நேரமா? லேட் ஆனால் ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?"
மனோ, " அம்மா.. வண்டி ரிப்பேராயிடுச்சி" என்றபடி ஆதியைப் பார்க்க, அப்போதுதான் பூர்ணிமா காரையும் காருக்குள் இருப்பவனையும் பார்த்தார். இது ஓலா காராக இருக்காது. தன் மகளைப் பார்க்க, மனோ அறிமுகம் செய்தாள், 'இது ஆதி சார் மா.. எங்கள் கம்பெனியின் எம்.டி."
"ஓ.. வணக்கம் தம்பி"
இதற்கு மேல் காருக்குள்ளேயே இருந்தால் நன்றாக இருக்காது.. காரிலிருந்து இறங்கியவன், "வணக்கம் ஆன்ட்டி" என்று முடிப்பதற்குள், கணேசன் வந்தார், "ஏன் மனோ லேட்டு? " என்றபடி. அவரிடமும் வண்டி ரிப்பேரானதைக் கூறி ஆதியை அறிமுகப்படுத்த, பூர்ணிமா தன் விருந்தோம்பலைக் காட்டினார், "உள்ளே வாங்க தம்பி.. சாப்பிட்டுட்டு போலாம்"
"அச்சோ.. இல்லை ஆன்ட்டி.. நான் கிளம்புகிறேன். அம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க"
மனோ பூர்ணிமாவின் முகத்தில் பளிச் பளிச் என்று பல்ப் எரிவதைக் கண்முன்னே பார்த்தாள். அம்மாவிற்கு மரியாதை தரும் பையனாம். அரை நொடியில் மனோவையும் குற்றம் சாட்டும் பார்வையையும் செலுத்தி விட்டார். இவள் அப்படி கவலைப்படவில்லையாம்.
கணேசன் ஆரம்பித்தார், "திருப்பி போக நேரமாகுமே தம்பி.. வாங்க.. வந்து ஏதாவது குடிச்சிட்டாவது போங்க"
ஆதி திரும்பி மனோவைக் கேள்வியாய் பார்க்க, பூர்ணிமாவிற்கு கோபம் வந்தது,, கண்களால் முறைத்து"வரச் சொல்லு மனோம்மா.." என்று குரலில் மட்டும் தன்மையாகச் சொன்னார்.
இதென்னடா வம்பாய் போய்விட்டது. இவளென்ன வரவேண்டாம் என்றா சொல்லப் போகிறாள்..இவளை ஏன் கேள்வியாய் பார்க்கிறான். இவனுக்கு சங்கடமாக இருக்குமோ என்றுதான் அமைதியாக இருந்தாள், "உள்ளே வாங்க சார்.."
உள்ளே வந்ததும் சோஃபாவில் அமர்ந்திருந்த செழியனிடம் மறுபடியும் அறிமுகப்படுத்திவிட்டு, தாயோடு சமையலறைக்குள் நுழைந்தாள்.
"ஏய் மனோ.. உன் எம்.டி யைக் கூப்பிட்டு வர்றேன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா? வீட்டிலே எதுவுமே இல்லை"
"எனக்கென்ன வண்டி வேலை செய்யாமல் போகுமென்று தெரியுமா?"
"அது தெரியாதுதான். ஆனால் காரில் வரும்போதாவது ஒரு கால் பண்ணியிருக்கலாமே?" பழங்களை வெட்டி மிக்ஸியில் போட்டபடி, "ஐஸ்கட்டி களை ஃப்ரிட்ஜிலிருந்து எடு.."
"அது.. அது தோணவே இல்லைம்மா.. ஆனால் உங்களோட இந்த மிக்ஸட் ஜீஸ் சூப்பரா இருக்கும்.. அவர் வீடு போய் சேரும் வரைக்கும் பசிக்கவும் செய்யாது.. அதனால், நோ கவலை" தாயோடு சேர்ந்து பழக்கலவை செய்து தம்பி, தந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தால், அங்கே ஆதி தனி இருக்கையில் ரொம்பவும் வசதியாக அமர்ந்திருந்தான். சொந்தமாய் கார் வாங்கும் ஆசையில் இருந்த செழியனும் ஆதியும் எல்லா வகைக் கார்களைப் பற்றியும் விலாவாரியாக அலசிக் கொண்டிருக்க, ஆன்மிக சொற்பொழிவு கேட்கும் பக்தன் போல, அப்போதுதான் வந்திருந்த காவியன் கால் சாக்ஸைக் கூட கழற்றாமல் அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணேசனோ, மூவர் பேசுவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பூர்ணிமா, மனோ வந்ததும் எழுந்து டம்ளரை எடுத்துக் கொண்டவன், ஒரு மிடறு விழுங்கி, "ரொம்பவும் நல்லா இருக்கு ஆன்ட்டி" என்று ஒரு ஷொட்டு வைத்துவிட்டு, மீதியிருப்பதைக் கடகடவென்று குடித்தான். அதற்குப் பின் அமரவுமில்லை. "நேரமாயிடுச்சி. கிளம்புகிறேன் ஆன்ட்டி.. வர்றேன் அங்கிள்.. பை!"என்று செழியன் காவியனிடம் சொல்லி, மனோவின் பக்கமும் திரும்பி,"பை" என்று சொல்லிக் கிளம்பினான்.
வழியனுப்ப அவனோடு வெளியே வந்தவள், "நீங்கள் முக்கியமான வேலையிருக்கிறது என்றீர்களே? நிஜமாகவே உங்களுக்கு இங்கே முக்கியமான வேலையிருக்கிறதா? ரொம்பவும் லேட்டாயிடுச்சே?"
"நிஜமாகவே இருக்கு"
"என்ன வேலை?"
திரும்பி அவளை நேருக்கு நேராகப் பார்க்கும்படி நின்றவன், ஒரு நொடி தயங்கி பின் சொன்னான், "உன்னிடம் மன்னிப்பு கேட்கும் வேலை.."
"மன்னிப்பா? எதற்கு? ?"
"நேற்று பேசியதற்கு..". நேற்று என்ன பேசினான் என்று நினைக்க ஆரம்பித்தவளுக்கு, சட்டென்று ஹோட்டல் பேச்சு நினைவு வந்தது. அவள் முகத்தையே பார்த்திருந்தவன், "சாரி மனோ.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நீ என்றுமே நேரக்கணக்கு பார்த்து நம் கம்பெனியில் வேலை செய்யவில்லை என்று எனக்கு தெரியும்.. அப்படி இருக்கும்போது நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது."
இருந்த கோபமெல்லாம் அவனோடு பேசியபடி வந்ததில், வீட்டில் எல்லோரிடமும் அவன் சாதாரணமாய் பழகியதில் , மறைந்திருக்க, ரொம்பவே சாதாரணமாய், "இதுதான் இங்கே ஆக வேண்டிய முக்கியமான வேலையா சார். இதை அங்கேயே கேட்டிருக்கலாமே?" என்று புன்னகையுடனே கேட்டாள்.
கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவன் அவளைப் பார்த்து, "அங்கே சாரி சொல்லியிருந்தால், எதற்கு சாரி என்பதே உனக்கு மறந்திருக்குமா? இல்லை, இத்தனை சுலபமாக என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருப்பாயா?" அவன் புருவம் உயர்த்திக் கேட்க, மனோ கண்கள் விரிய அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். சரியாகத்தான் சொல்கிறான்.
அவள் முகத்தைப் பார்த்தபடி சாவியை அதனிடத்தில் பொருத்தி, காரை உயிர்ப்பித்தவன், தொடர்ந்தான், "ஒரு நல்ல பிஸினெஸ்மேன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்ன தெரியுமா மனோ.. 'கிராப் த ஆப்பர்ச்சுனிட்டிஸ்'.. அதாவது 'வாய்ப்புகளை பிடித்துக் கொள்ள வேண்டும். அதான் கெட்டியாய் பிடிச்சுகிட்டேன்.. பை" என்று புன்னகைத்தபடி காரைக் கிளப்பினான்.
அன்றிரவு முழுக்க நம் மனோவின் கனவில் அந்த அனுபமாதான் வந்தாள்.
Last edited: