வெண்பனி மலரே
கிழக்கே சூரியன் அனைவருக்கும் தன் கம்பீரமான முகத்தை தரிசனம் கொடுக்க, பறவைகள் தன் நண்பன் கதிரவனை கண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். " மலையரசியும் தன்னவனை தனக்குள் சிறையிட்டது போதுமென்று கண்ணீருடன்
(கதிரவனின் கதிர் பட்டவுடன் பனி உருகுதல்
) விடுவித்தாள்..."
நீலகிரியின் விடிந்தும் விடியா காலைப்பொழுதில் மலர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூக்களை பறித்து கொண்டிருந்தாள். அப்பபொழுது காற்று வேகமாக வீசுவதை கண்டு தானாக அவள் மனது கவிதை எழுதியது.
"எங்கு எதை
தொலைத்ததோ தெரியவில்லை;
யார் கண்ணுக்கும் தெரியாமல்,
எதையோ தேடி திரிகிறது"
காற்று…
"ஏய் மலர்... " என்ற தன் தாயின் குரலை கேட்டதும் தன் கவிதை உலகில் இருந்து மீண்டு இந்த உலகிற்கு வந்து சேர்ந்தாள். "இதோ வந்துட்டேன் மா..." என்று ஓடினாள்.
"இன்னும் என்னடி பண்ணுற.. நேரமாயிடுச்சி சீக்கிரமா பூவை பறிச்சிட்டு வேலைக்கு போவ வேணாமா ?.. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வெரசா கிளம்புடி". என்று மலரை பார்த்து அவள் தாய் கத்தினாள்.
"முடிஞ்சிருச்சுமா பூக்களை வண்டியில ஏத்துறது மட்டும் தான் பாக்கி, மாரி அண்ணா இன்னும் வரல."
"இவனுக்கு இதே வேலையா போச்சு வரட்டும் இன்னைக்கு வசிக்கிறேன் கச்சேரிய" என்று கோவமாக கத்த ஆரம்பித்தாள் பார்வதி. உடனே மலர் "போச்சு இன்னைக்கு தொலைஞ்சாங்க மாரி அண்ணா" என்று மனதில் நினைத்துக்கொண்டாள்...''
ராமன்,பார்வதி தம்பதியினரின் தவப்புதல்வி தான் பனிமலர்.[ நம் கதையின் நாயகி பனிமலரின் தந்தை சற்று வெகுளி, தன் குடும்பத்தின் மேல் மிகுந்த பாசம் வைத்து இருப்பவர்.... பனிமலர் பார்க்கறதுக்கு நம்ப பக்கத்துக்கு வீட்டு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்தா எப்படி இருப்பாங்க அந்த மாறி இருப்பா...
ராமன் தன் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் Asters, coral spray roses, Arabianjasmine,Salvia, dahlia, marigold, போன்ற அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தும் மலர்களை வளர்த்து வருகிறார்.வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பூக்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பமுடியும். ஏனெனில் சிறிய இடத்தில தான் பூக்களை வளர்த்து வருகிறார்... ஆகையால் இதில் சிறு வருமானம் மட்டும் தான் அவருக்கு கிடைத்தது.
பார்வதி சற்று தைரியசாலி,புத்திகூர்மை அதிகம் உள்ளவர்.மேலும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து தன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பவர். [அறுவை தாங்க முடில கதையை ஆரம்பினு நீங்க என்ன திட்டுறது கேட்குது மக்களே; மன்னிச்சிபையிங்]
''பார்வதி வேலைக்கு நேரமாவதை உணர்ந்து தேவையான பொருட்களை எடுத்து வைக்க தொடங்கினார்..உணவுகளை டப்பாக்களில் வைத்துவிட்டு மழைக்காகிதம்,உப்பு,சுருட்டு,சிறிய கத்தி,சாக்குப்பைகள் போன்றவற்றை எடுத்து வைத்தார்..
மகளுக்கு காலை உணவையும் சேர்த்து வைத்தார்.ஏனென்றால் மலர்க்கு சாப்பிட நேரம் இருக்காது. தன்னுடைய கணவனுக்கு காலை உணவை மாரியிடம் கொடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்..
ராமன் காலையில் ஐந்து மணிக்கே அதுவரை பறித்த பூக்களை எடுத்து கொண்டு பூ சந்தைக்கு சென்றுவிடுவார்.அதன்பிறகு பறிக்கும் பூக்களை மாரி எடுத்து செல்வான்.. ராமன்,பார்வதி சீக்கிரமே எழுந்து பூ பறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.மலர் 5.30 மணிக்கு தான் எழுவாள்.மலர் வந்ததும் பார்வதி சமைக்க போய் விடுவாள்.மீதம் இருக்கும் பூக்களை மலரும் மார்ரியும் பறிப்பார்கள்..
பனிமலர் தன்னுடைய உணவுப்பையை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.. "அம்மா எனக்கு நேரம் ஆகிருச்சு நான் கிளம்புறேன் மாரி அண்ணா வந்தா நீங்களே பாத்துகோங்க " என்று சொல்லிவிட்டு தன் உணவு பையுடன் கிளம்பிவிட்டாள்
"பாத்து சூதானமா போய்ட்டு பனி இறங்குறதுக்குள்ள வந்துடு டி, பனி காலத்துல ஓவர் டைம் எல்லாம் பாக்க வேண்டாம், என்ன புரிஞ்சுதா?" ‘’சரிம்மா’’ என்று விடை பெற்றாள் மலர்.
"ஏய்….பன்னி மலரு நில்லுடி" என்று குரல் கேக்கவே திரும்பி பார்த்து முறைத்தாள்." என்னடி முறைப்பு என்னை விட்டுட்டே போறியா போகத்தான் விட்டுருவேனா?" என்று கண்ணடித்து கொண்டே கேட்டாள் வெண்ணிலா. இவள் தான் நம்ம பனி மலரின் உயிர் தோழி.
"வெள்ள எருமை ஏண்டி என் பேரை இப்படி அசிங்க படுத்துற !"
"அத விடுடி இன்னைக்கு உங்க வீட்ல என்ன குழம்பு டி, இன்னைக்கு குழம்பு வைக்க டைம்மே இல்லடி சோறு மட்டும் தான் கொண்டாந்துருக்கேன் "
அவளை நினைத்து பனிமலருக்கு பாவமாக இருந்தது வெண்ணிலாவுக்கு பெற்றோர் கிடையாது. தம்பியும் தாய் வழி பாட்டியும் மட்டும் தான். அவளது பெற்றோர்கள் தொழிற்சாலை விபத்தில் இறந்துவிட்டனர்.
அதற்க்காக தொழிற்சாலையில் இருந்து ஒரு கணிசமான தொகை கிடைத்தது. அதை வைத்து தான் தன் தம்பி யை CIT (coimbatore institute of technology )college யில் படிக்க வைக்கிறாள்.பாட்டியின் மருந்து செலவிற்கும் தங்களின் சாப்பாட்டிற்கும் தான் வேலைக்கு செல்கிறாள்.
மலரை விட வெண்ணிலா இரண்டு வயது மூத்தவள். வீட்டில் அமைதியாக இருக்கும் நம்ம மலர் வெண்ணிலாவுடன் சேர்ந்தால் போதும் வாய் ஏழு மீட்டருக்கு நீளும்..
இருவரும் பேசிக்கொண்டே அந்த மேட்டை ஏறி முடித்தனர். வெண்ணிலா "இவனுங்க இந்த மேட்டை ஏறுறதுக்கே நமக்கு தனி சம்பளம் தர சொல்லணும்டி நீதான் உன் சூப்பர்வைசர் மச்சான் கிட்ட கொஞ்சம் ரெகமண்ட் பண்ணேன் டி".
பனிமலர் அவளை முறைத்துக்கொண்டே "கொஞ்சம் மூடிட்டு வரியா ஏற்கனவே லேட் அவன் என்ன கத்து கத்தப்போறானோ" என்று புலம்பினாள்.
ஒரு வழியா
''ஸ்ரீராம் டீ ப்ளண்டஷன்ஸ் & பேக்டரி '' கேட்டிற்குள் நுழைந்து தங்களுடைய
ID கார்டை காட்டி விட்டு வேகமாக உள்ளே ஓடினர்.
பனிஉருகும்…..!!!