Hi sis, சந்திரா வடுகனின் சண்டை அற்புதம். ஒரு குன்றை ஒரு வீர மங்கை ஒட ஒட விரட்டியது அருமை. (வானில் வால் நட்சத்திரம் தோன்றுவது , நான்கு சரம் தொடுப்பது ,போரில் எருதுகளை பயன்படுத்துவதில் பாகுபலி , மகதீரா effect) அதையும் தாண்டி ஒரு வீர மங்கையாக சந்திராவின் ஒரு கையில் வாளும் மறு கையில் உருமியும் என சுழல வைத்து கிட்டிய போர் வெற்றியை மணி மகுடமாக சூட வைத்தது பேரழகு. சிம்மன் & சந்திராவின் வீரதிலும் தீரதிலும் மிளிர்ந்து பேராண்மை... வெற்றி சந்திராவை கொன்றான் என்பதை நம்ப முடியவில்லை sis... அவன் வடுகன் / நாக ஜெயந்தன் சந்திராவை கொள்வதற்கு துணை போவான் என நினைத்தேன். வடுகன் எப்படி அங்கு வந்தான்? அவனை நிச்சயம் சந்திரா தான் கொன்று இருப்பாள். வெற்றியை கொன்றது யார் sis?? நாக ஜெயந்தன் என்னவானான் ??? வீரா சிறு பொழுது நகர்ந்ததால் அன்று சந்திரா உயிர் போக காரணமானதால் இப்பிறவியில் தன்னுயிர் தந்து மதியை காக்க விழைந்தானா ??? சிம்மன் எவ்வளவு ஆசையுடன் தன் இளவரசன் பட்டம் துறந்து தன்னவளை மணக்க தாலியுடனும் சேலையுடனும் வந்தான், அவனது ஆசை நிராசை ஆனது வேதனை. சந்திராவின் வார்த்தைக்காக 4 நாடுகளுக்கும் அரணாக துறவு வாழ்க்கை வாழ்ந்த சிம்மன் அருமை. சந்திரா ஆசைப்படி இந்த பிறவியில் சிம்மனுடன் இணைந்தது மகிழ்ச்சி..