Uma Thamizh
Member
Niceகடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
தாய் மடி தேடிய
மழைமகள் நெஞ்சம்...
ஆயர் குலக் கண்ணன்
மடி சாய்ந்த அழகு...!
வாய் மூடி ஓடிய
மதுமகள் தஞ்சம்...
சாகர் அவன் கள்வன்
மடி வேய்ந்த அழகு...!
சாகரன் புகழில்
மழையின் வேகம்...
சாகசக் காரனின்
மதுமழை மோகம்!
கணத்தில் மாறும்
மழையவள் வேகம்...
குணத்தில் மீறும்
மது மகள் விவேகம்...!
துவாரக கிருஷ்ணனின்
ஓவியம் கண்டு
சாகர கண்ணனின்
காவியம் பாட...
கிருஷ்ணாஷ்டமி காண
கூடிய பெண்கள்
ராதேகிருஷ்ணனை
தேடிய கண்கள்!
வித்தக சாகரன்
மதியூகம் கண்டு...
வியந்திட்ட மழையும்
மயக்கத்தில் சீற...
புரியாத மொழிக்கு
புடம் போடாமல்
இயல்பான வழிக்கு
தடம் சொன்னதென்ன...!
தயக்கத்தில் தவித்த
மழைச் சாரல் மெல்ல...
இயக்கத்தில் வந்தது
மதுச் சாரல் கொல்ல...!
இக்கரையும் அக்கரையும்
அன்பெனும் நதியில்
உறவாடும் நேரம்...
அக்கறை ஒன்றே
அலைமோதும் கானம்!
கடல்களின் சங்கமம்
கண்ணாறக் கண்டு...
பூத்திட்ட கண்களை
என்னென்று சொல்ல...!
காட்டுப் பயலின்
காதலின் வேகம்...
சாகர பிரவாகத்தில்
மழையவள் மோகம்...!
கடல் தேடும் மழைக்கு
கட்டுக்கள் இல்லை...!
கடிவாளம் இல்லா
கடல் போலிக் குதிரை...
இவண்...
கட்டுக்குள் அடங்கா
மலைக் நாட்டுக் குதிரை!
ஊமையாய் நின்றாலும்
உரிமையாய் கொன்றாலும்
ஒற்றை முறைப்புக்கு
இலக்கணம் கண்ட
சாகரத் தலைவன்!
ஒப்புமை இல்லா
காவிய நாயகன்
சான்றோன் எனவும்
ஏற்றிய நடையில்...
பெற்றவர் பெருமை
உணர்த்திட்ட வழியில்...
தாமரை மகளின்
கதைக் கரு கண்டால்...
சாயாத மனமும்
சாய்ந்திடுமன்றோ...?
கிருஷ்ணபலராமரின் வரவில்...
மது மழை ராதையின் அதிர்வில்....
'கிருஷ்ணாஷ்டமி' களைகட்டும் பேரழகே!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி