கண்களில் காதல் மொழிகள்
முன்னுரை :
அமரேஷ்ஷா வத்சால்ய (வயது 25) :: சரபேஷ் வத்சால்ய - ஸ்வர்ணமாலியா தம்பதிகளின் முதல் புத்திரன்.
நிஹாரிகா (வயது 20) இருவரின் புதல்வி மருத்துவம் பயின்று வருகிறாள்.
அமர் - 6.2” அடி உயரம் , மா நிறம், ஆண்களுக்கு ஏற்ற கட்டான உடல், கோபம் அவனுடைய உயிர் நண்பன். தன் நண்பர்களுக்கு ஒன்று என்றால் எதுவும் செய்பவன். பெண்கள் மீது அவ்வுளவாக இவனுக்கு பிடித்தம் கிடையாது.
அமர் தன் தந்தையுடன் சேர்ந்து அவர்களது குடும்பத் தொழிலை கவனித்து வருகிறான். S.S.A group of constructions, S.S.A. Soft Tech.Solutions என்று இவர்களுக்கு கம்பெனிகள் சென்னையில் உள்ளது. உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
அது மட்டும் அல்லாது S.S.A பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று.
ஈஷாணி (வயது - 18) :: சுந்தரம் - வைஷ்ணவி தம்பதிகளின் செல்ல புத்திரி குழந்தை பருவம் மாறாத முகம், பால் நிறம், பெரிய குண்டு கண்கள் . தோழிகளுக்கு மட்டும் முண்டக்கண்ணி. தன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்து கொண்டு இருப்பவள். வீட்டில் அமைதி மாதிரி ஆன அமைதி இல்ல . அவளின் வம்பு மற்றும் சேட்டைகள் எல்லாம் அன்னையிடம் , தம்பி சரணிடமும் தோழிகளிடமும் மட்டும்.
சுந்தரம் நேர்மையான அரசாங்க அதிகாரி. இப்பொழுது சென்னைக்கு பணி உயர்வுடங்கூடிய மாற்றம் கிடைத்து உள்ளது.
அமரின் கோபமும் - ஈஷாணியின் சேட்டையும் சேர்ந்த பயணம் தான் இந்த கதை.
இவர்களுடன நம் கதையில நரேன், சுதீப் , நிகிதா மற்றும் அனீஷ் (குட்டீஸ்) , விவேக் , கிரண் , தமிழ் , சிவா (அமரின் தோழர்கள்) மற்றும் சில வில்லங்கமான ஆட்களும் உள்ளனர்……..