All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
"கேப்டன், யூட்யூப் பார்த்து தான் சட்னி வச்சேன்." என்று சிணுங்கியவள், "இட்லி நல்லா வரலைன்னா... காரணம் நானில்லை. நீங்க தான். ஏன்னா மாவு அரைச்சது நீங்க தானே." என்று கூறி அவள் கலகலவெனச் சிரிக்க...



"எப்படி இருந்த என்னை இப்படி மாத்தி வச்சிருக்கியே சக்கு. எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்த என்னை... இப்படி மாவு ஆட்ட விட்டுட்டியே." அவன் சோகம் போன்று சொல்ல...



"அதெல்லாம் வெளியே. வீட்டுக்குள்ள எல்லாம் செய்யணும்." அவள் அலட்டலாகச் சொல்ல...



"நல்லா பண்ற..." என்று சிரித்தவன் அவளையும் அமர வைத்து, தானும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.



பரவாயில்லை, சகுந்தலா நன்றாகத் தான் சட்னி அரைத்து இருந்தாள். அவள் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் கற்று கொள்கிறாள். அதுவும் அவனுக்காக அவள் கற்று கொள்கிறாள். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளது இந்த மாற்றமே அவனுக்குப் போதுமானது.



இரவு படுக்கப் போகும் முன் சக்தீஸ்வரன் தனது மடிகணினியை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தான். அவன் யூட்யூப்பில் சகுந்தலாவுக்கு என்று தனியே ஆரம்பிக்கப்பட்ட சேனலை திறந்தான். அதில் இந்த ஒரு மாத காலமாக ஏகப்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. சகுந்தலா சிறு குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும் காணொளிகள், ஸ்டேண்டப் காமெடி காணொளிகள் என்று எல்லாம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.



முதலில் சக்தீஸ்வரன் விளையாட்டாக ஒரு காணொளியை தான் பதிவேற்றம் செய்தான். அதற்கு வந்த வரவேற்பு அவனே எதிர்பாராதது. அதனால் அவன் அடுத்தடுத்து நிறையக் காணொளிகளைப் பதிவேற்ற தொடங்கினான். இப்போது சகுந்தலாவின் காணொளியை உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் பார்த்து பாராட்டினர். சகுந்தலா தமிழில் பேசுவதை, அவன் தான் மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் கீழே சப்டைட்டிலாகப் போட்டு விடுவான்.



இன்றும் அதே போன்று காணொளிக்கு வந்த கருத்துகளைச் சக்தீஸ்வரன் மனைவிக்குப் படித்துக் காட்டி கொண்டிருக்க... அவளோ அதைக் கேட்டுக் கொண்டே உறங்கி போனாள்.



"உன்னோட சேனலுக்கு இந்த மாச வருமானம் எவ்வளவு தெரியுமா?" என்றவன் அவளது மாத வருமானத்தைச் சொல்லி, "அதுவும் டாலரில் வருது." என்று கூற... அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராது போனதும், அவன் அவளைத் திரும்பி பார்த்தான். அவள் அவனது தோளில் சாய்ந்து உறங்கி போயிருந்தாள்.



மனைவியைக் கண்டு தனக்குள் சிரித்தவன் அவளை நேராகப் படுக்க வைத்து போர்வையால் அவளை மூடினான். என்ன தான் அவன் அவளின் திறமைகளை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்தாலும்... அவள் இன்றும் அதே வெகுளி சகுந்தலாவாகத் தான் இருந்தாள். அவளுக்கு வரும் பாராட்டு, புகழ், பணம் எதுவும் அவளை மாற்றவில்லை. அவளுக்கு என்று ஒரு உலகம். அதில் அவள் சந்தோசமாக இருந்தாள். அவளது உலகத்தில் அவனுக்கு மட்டும் தனி இடம் உண்டு. அது காதலினால் மட்டுமே என்பதை அவன் அறிவான்.



"நாளுக்கு நாள் நீ என்னை ஈர்க்கிற சகி. சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்லி... உன்னை அள்ளி அணைத்து முத்தாடணும் சகி." என்று காதலோடு சொன்னவன் அவளது முன்நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.



மறுநாள் காலையில் சகுந்தலா எழுந்ததும் சக்தீஸ்வரன் அவளிடம் பாலை குடிக்கச் சொல்லியவன்... பிறகு அவளது விழிகளை மூடி அவளை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றான்.



"கேப்டன், எங்கே கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க, சொல்லுங்க..." அவள் ஆர்வமாய்க் கேட்டபடி துள்ளி குதிக்க...



"எங்கேன்னு சொன்னால் தான் வருவியா?" அவன் கேட்கவும்...



"அப்படி எல்லாம் இல்லை." அவள் இழுக்க...



"அப்போ சத்தம் போடாம வா." அவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.



வீட்டின் பின்பக்கம் வந்ததும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் விழிகளைத் திறந்தான். அவள் மெல்ல விழிகளை மலர்த்தியவள், "என்ன கேப்டன்? கடலை பார்க்கவா கூட்டிட்டு வந்தீங்க?" எதிரே தெரிந்த கடலை பார்த்தபடி கேட்டாள்.



"கீழே குனிஞ்சு பாருடி என்னருமை பொண்டாட்டியே..." அவன் அவளது காதோரம் குனிந்து ரகசியம் பேச...



அவனது உதடுகள் அவளது காதோரம் குறுகுறுப்பை ஏற்படுத்தும் முன்... அவளது விழிகள் கீழே இருந்ததைக் கண்டு வியப்பில் விரிந்தது.



"ஐய், கலர் கோழி குஞ்சு..." அவள் கீழே குனிந்து ஆசையுடன் அந்தக் கோழி குஞ்சுகளைக் கரங்களில் தூக்கினாள்.



சக்தீஸ்வரன் மனைவியவளின் மகிழ்ச்சியைக் கண்டு புன்னகைத்தபடி அங்கிருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து விட்டான்.



அகலமான பிளாஷ்டிக் பாத்திரத்தின் உள்ளே முப்பது கோழி குஞ்சுகள் பல வண்ணங்களில் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. சகுந்தலா கணவனை மறந்தவளாய் அந்தக் கோழி குஞ்சுகளுடன் விளையாடினாள். அதைக் கரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் சிறிய அலகில் அவள் தனது இதழ்களால் முத்தமிட... அவனோ மனைவியை ஏக்கத்துடன் பார்த்திருந்தான். அந்தக் கோழி குஞ்சுகளாகத் தான் இருக்கக் கூடாதா என்று...



"கேப்டன், அன்னைக்கு ஏமாத்தியதுக்கு இப்போ பரிகாரம் பண்றீங்களா?" அவள் சிரித்தபடி அவனைப் பார்த்து கேட்க...



அவளையே பார்த்திருந்தவன், "ஆமா..." என்று கூற...



"அன்னைக்கு என்னைய ஏன் வெயிலில் காய விட்டீங்க கேப்டன்? கால் எல்லாம் சுட்டு, புண்ணாகி போச்சு." அவள் பாவம் போல் கூற...



சக்தீஸ்வரன் என்ன பதில் கூறுவது என்று தெரியாது விழித்தான்.



"நானும் அப்படி நினைச்சிருக்கக் கூடாது தான். நான் நினைச்சதும் தப்பு." அவள் போகிற போக்கில் சொல்ல...



"அப்படி என்ன தப்பா நினைச்சீங்க மேடம்?" அவன் கேலியாய் அவளைக் கண்டு வினவினான். அவளது செயல், சொல் அனைத்திற்கும் பொருள் அறிந்தவனுக்கு அன்றைய அவளது நினைவு என்னவென்று தெரியாது இருக்குமா? அவன் தெரிந்து கொண்டே கேட்டான்.



"அது..." என்று மேலே சொல்ல வந்தவள் பின்பு முகம் சிவக்க வாயை இறுக மூடி கொண்டாள். அவளது முகச் சிவப்பை கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.



"சிரிக்காதீங்க கேப்டன்." அவள் வெட்கத்தை மறைத்துக் கொண்டு சொல்ல... அவனோ விடாது சிரிக்க...



"சிரிக்காதீங்கன்னு சொல்றேன்ல கேப்டன்." எழுந்து நின்றவள் இடையில் இரு கரங்களை வைத்துக் கொண்டு அவனைக் கோபமாய் முறைக்க... அவளது முறைப்பில் அவன் சிரிப்பு அடக்க முயல... அது முடியாது, அவன் மேலும் சிரிக்கத் தொடங்கினான்.



"அன்னைக்கு ஏன் என்னைய வெயிலில் கட்டி போட்டீங்க? அதுக்குப் பதிலை சொல்லிட்டு சிரிங்க." அவள் மீண்டும் கோபமாய்க் கத்த...



அடுத்த நொடி சக்தீஸ்வரனின் சிரிப்பு ஸ்விட்ச் போட்டார் போன்று நின்று போனது. அவனது பேயறைந்த முகத்தைக் கண்டு இப்போது சிரிப்பது அவளது முறையாயிற்று.



"பயந்துட்டீங்களா கேப்டன்? சும்மா விளையாடி பார்த்தேன்." என்றவள் கோழி குஞ்சுகளுடன் விளையாட வேண்டி கீழே குனிய போக...



சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினைப் பிடித்துத் தடுத்தான். அவள் கேள்வியாக அவனைப் பார்த்தவள், "என்ன கேப்டன்?" என்று கேட்க...



"அன்னைக்கு நீ மட்டும் தான் வெயிலில் காய்ஞ்சியா? நானும் தான்டி வெயிலில் காய்ஞ்சேன். நீயாவது ஒருநாள். நான் தினம் தினம்..." என்றவனது குரல் கமறியது.



சகுந்தலாவுக்குத் தண்டனை கொடுத்த சக்தீஸ்வரன் தானும் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சென்று அன்று நாள் முழுவதும் வெயிலில் நின்றான். அன்று மட்டுமா அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்... அவளுக்குக் கொடுத்த தண்டனையை அவன் வட்டியும், முதலுமாக அனுபவித்தது அவளுக்குத் தெரியுமா? அப்போது தான் தர்சனா அவனது கருத்த தோற்றத்தை கண்டு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது போன்று பேசினாள். அதே தோற்றத்தை தான் சகுந்தலா அவனது நலன் மீது அக்கறை கொண்டு விசாரித்தாள்.



சகுந்தலா கணவனைத் திகைப்பாய் பார்த்தாள். அன்றொரு நாள் அவள் அவனுக்காக வேலை நடக்கும் இடத்திற்குச் சாப்பாடு கொண்டு போன போது... அவனது தோற்றம் கண்டு தான் வருந்தியது எல்லாம் அவளது ஞாபகத்தில் வந்தது.



"அதனால தான் அன்னைக்கு நீங்க கருத்து போய் எப்படியோ இருந்தீங்களோ கேப்டன்?" அவள் கேட்டதும் அவன் ஆமென்பது போல் தலையசைக்க...



"ஏன் கேப்டன்?" அவள் புரியாது கேட்க...



சக்தீஸ்வரன் ஒரு நொடி தனது காதலை சொல்லிவிடலாமா? என்று யோசித்தான். ஆனால் உண்மையைச் சொல்லாது எப்படிக் காதலை சொல்வது? உண்மையை அவளிடம் கூற அவனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. இருக்கிற இந்த இனிமையான பொழுதுகளும் இல்லாது போய்விடுமோ? என்கிற பயம் அவனுக்கு... அவன் தனது வாயை இறுக மூடி கொண்டான். அவன் தனது காதலை சொல்ல முடியாது தவிப்பாய் மனைவியவளை பார்த்திருந்தான்.



“சொல்லாமத்தானே… இந்த மனசு தவிக்குது, இந்த மனசு தவிக்குது

கண்ணால தானே... இந்தக் காதல் வளருது, இந்தக் காதல் வளருது

உள்ளமோ நினைக்குது, உதடுதான் மறைக்குது”



தொடரும்...!!!

 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 33



"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர் காதலியே

இன்னிசை தேவதையே"



சக்தீஸ்வரன் கிட்டார் வாசித்துக் கொண்டே அழகாகப் பாடி கொண்டிருந்தான். அவனது விழிகள் பூக்களைச் சுற்றி வரும் வண்டு போன்று தன்னவளையே சுற்றி வந்தது. அவனது மனதில் இருந்த காதல் அவனது விழிகளின் வழியே வழிந்தோடியது. பாடல் பாடிய அவனது குரலில் அவனது நேச உணர்வு கலந்து ஒலித்தது. மொத்தத்தில் அவன் மனைவியிடம் மயங்கி, கிறங்கி மெய்மறந்து இருந்தான். மெய் தீண்டினால் மட்டும் தான் மயக்கம், கிறக்கம் எல்லாம் வருமா? இங்கு ஒருவனின் மனதினை காதல் தீண்டியதில் அவனது உயிர் உருகி கொண்டிருந்தது.



சகுந்தலா கணவன் பாட்டு பாடுவதை இமைக்க மறந்து பார்த்து இருந்தாள். அந்தி நேர இதமான தென்றல் காற்று, அழகிய கடற்கரை, பாடலுக்குப் பின்னணி இசையாக ஒலித்த ஓயாத அலைகளின் ஓசை என்று எல்லாம் சேர்த்து அவளை மாயலோகத்தில் சஞ்சரிக்க வைத்தது. அவளது கேப்டனுக்குப் பாட வரும் என்று இப்போது தான் அவளுக்குமே தெரிய வந்தது. சிடுமூஞ்சி சிங்காரமாகக் கடுகடுவென்று சுற்றி கொண்டிருந்தவனின் மென்மையான பக்கங்களை அறிந்து அவள் மெய்மறந்து அமர்ந்து இருந்தாள்.



'உன்னிடம் மயங்குகிறேன்' இறுதியாகப் பாடலின் வரிகளைச் சக்தீஸ்வரன் பாடி முடித்த போது அவனது மனைவி, அவனது நண்பர்கள் மட்டும் அல்லாது, அங்குக் கூடியிருந்தவர்களும் கைத்தட்டி அவனைப் பாராட்டினர்.



"கேப்டன், சூப்பரா பாடினீங்க." சகுந்தலா அவனது கையைப் பற்றிக் குலுக்கி பாராட்ட... சக்தீஸ்வரன் அவளது கரத்தினை இறுக பற்றிக் கொண்டான்.



"நல்லா பாடிய எனக்குக் கிப்ட் எதுவும் கிடையாதா சக்கு?" அவன் அவளிடம் இரகசியமாகக் கேட்க...



"அச்சோ, என் கிட்ட எதுவும் இல்லையே." அவள் தனது கையை விரித்துப் பார்த்துக் கொண்டே சொல்ல...



"நீ நினைத்தால் கொடுக்கலாம்." அவனது விழிகள் மோகத்துடன் அவளது இதழ்களை மொய்த்தது.



"எப்படி?" அவள் யோசிக்க...



"இப்படி..." என்றவன் தனது கன்னத்தை அவளிடம் காட்டினான்.



"ஆங்..." அவள் திகைப்புடன் விழி விரிய அவனைப் பார்த்தாள்.



"டேய், நாங்களும் இங்கே தான்டா இருக்கோம்." கமல் அவனைக் கலாய்க்க...



"வேணும்ன்னா நீ கண்ணை மூடிக்கோடா." சக்தீஸ்வரன் கமலிடம் சொல்ல...



"ஆமான்டா மச்சான், நீ கண்ணை மூடு." வருண் தனது மனைவி பிருந்தாவை பார்த்தபடி கண்ணைச் சிமிட்டினான்.



"ஐயோ சாமி... இந்த அங்கிள்களோட தொல்லை தாங்க முடியலை." கமல் சலித்துக் கொள்ள...



"யாருடா அங்கிள்? நீ தான்டா." சக்தீஸ்வரன், வருண் இருவரும் கமலை அடிக்கப் பாய்ந்தனர்.



நண்பர்கள் மூவரும் கடற்கரை மணலில் கட்டிப்புரண்டு சண்டை போட... பெண்கள் இருவரும் அவர்களைக் கண்டு சிரித்தனர். காதல் பூமி கலவர பூமியாகி போனது.



"அண்ணாவுக்கு உன் மேல் ரொம்பக் காதல் போலிருக்கு." பிருந்தா சொல்லவும்...



"அப்படியா?" என்று வெகுசாதாரணமாகக் கேட்ட சகுந்தலாவை பிருந்தா அதிசயமாகப் பார்த்தாள்.



"உனக்குத் தெரியாதா?" பிருந்தா சந்தேகமாக அவளைப் பார்க்க...



"தெரியாதே... அவருக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியலை. ஆனா எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்." அவள் முகம் பூரிக்கச் சொல்ல...



"அவர் கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியது தானே." பிருந்தா கேட்கவும்,



"நான் கேட்டு... கேப்டன் காதல் இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா... அதான் பயமாயிருக்கு. முதலில் குழந்தைக்காகத் தான் இந்தக் கல்யாணம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அப்படி இல்லைன்னு இப்போ புரியுது. இருந்தாலும் கேட்க யோசனையா இருக்கு." என்று சகுந்தலா பதில் சொன்னாள்.



"நீ கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அங்கே பார்... அண்ணாவோட பார்வை முழுவதும் உன் மீது தான். இது போதாதா பெண்ணே?" பிருந்தா அவளைக் கேலி செய்யவும்...



"அச்சோ பிருந்தா, என்ன இது? இப்படி எல்லாம் கேலி பேசுற?" சகுந்தலா வெட்கத்தில் முகம் சிவந்தாள். கணவனது பார்வையை அவளும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். எங்கே இருந்தாலும் அவனது பார்வை அவளையே சுற்றி வந்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



அப்போது வருண் தனது சட்டையைக் கழற்றி மனைவியிடம் கொடுத்து விட்டு, "நாங்க வாலிபால் விளையாட போறோம்." என்று கூறி விட்டுச் சென்றான்.



சக்தீஸ்வரன், வருண், கமல் மற்றும் சிலர் இணைந்து கைப்பந்தாட்டத்தை விளையாடினர். அங்கிருந்தவர்களில் சற்று உயரமாய் இருந்த சக்தீஸ்வரன் அழகாகப் பந்தை அடித்து விளையாடினான். சகுந்தலா முதலில் விளையாட்டைப் பார்க்கும் ஆர்வத்தில் தான் கணவனைப் பார்த்தாள். ஆனால் போகப் போக அவள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள். அவளது மனதில் இருந்த காதல் அதற்குத் தூபம் போட்டது.



காற்றில் அசைந்தாடிய சக்தீஸ்வரனின் தலைமுடியின் உள்ளே கைவிரல்களை அலைய விட்டு, அந்தக் காற்றைப் போன்று அவனது தலைமுடியில் விளையாட வேண்டும் என்று அவளது காதல் மனம் ஏங்கியது. அவன் ஒவ்வொரு முறை பந்தை அடிக்கும் போதும் அவனது திண்ணிய தோள்கள் இரண்டும் புடைத்துக் கொண்டு நிற்பதை காணும் போது... அவளது விழிகள் இரண்டும் வியப்பில் தெறித்து விடுவது போல் விரிந்தது.



'ப்ச், வருண் அண்ணா மாதிரி கேப்டனும் சட்டை போடாம விளையாட வேண்டியது தானே.' அவள் எரிச்சலுடன் தனக்குள் முணுமுணுத்து கொண்டாள். அவனது உறுதியான பரந்த நெஞ்சினை காணும் ஆவல் அவளுக்கு... மொத்தத்தில் அவளது காதல் மனம் கணவனது அழகில் சொக்கி தான் போனது.



சும்மாவே சகுந்தலாவுக்குக் காதல் பிடிக்கும். இப்போது கணவனின் பார்வை அவளது காதலை மீண்டும் தூண்டி விட்டிருந்தது. பெண்ணவளுக்குக் கணவனைக் காதல் செய்ய மிகவும் பிடித்திருந்தது.



"வாவ், சக்தி செம ஹாட்டா இருக்காரே? அவரோட சட்டை பட்டன்களைக் கழட்டி விட்டுட்டு விளையாடினால்... இன்னும் செக்சியா இருக்கும்." திடுமென ஒரு பெண்ணின் குரல் கேட்டது.



'எவ அவ?' சகுந்தலா கோபத்துடன் திரும்பி பார்த்தாள்.



பிருந்தா அருகே ஒரு அழகிய இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் தான் சக்தீஸ்வரனை கண்டு ஜொள்ளு வடித்தது போலும்...



"ஹேய் சகி, வா வா... எப்போ ஊரில் இருந்து வந்த?" பிருந்தா அவளை வரவேற்று அமர சொன்னாள்.



பிருந்தாவின் 'சகி' என்றழைப்பில் சகுந்தலாவின் உள்ளும் துணுக்குற்றது.



"இப்போ தான் வந்தேன். வந்ததும் உங்களை எல்லாம் தேடி வந்து விட்டேன்." அந்தப் பெண்ணின் கவனம் முழுவதும் சக்தீஸ்வரன் மீதே...



"சகுந்தலா, இது சாகித்யா. என்னோட பிரெண்ட். நம்ம ஹாஸ்பிட்டலில் மேனேஜ்மென்ட்டில் வொர்க் பண்ணுகிறாள்." பிருந்தா சகுந்தலாவிடம் சாகித்யாவை அறிமுகம் செய்து வைத்தாள். சகுந்தலா ஆமோதிப்பாய் தலையாட்டி வைத்தாள்.



"சகி, இது சகுந்தலா. சக்தி அண்ணாவோட வொய்ப்." என்று பிருந்தா சகுந்தலாவை சாகித்யாவிடம் அறிமுகப்படுத்த...



"இவளா?" சாகித்யா இளக்காரமாய்ச் சகுந்தலாவை மேலும் கீழுமாய்ப் பார்த்து வைத்தாள்.



சகுந்தலா எதுவும் பேசாது தனது கணவனைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டாள். அவள் எப்போதுமே இது போன்ற எண்ணங்களுக்கு வண்ணம் கொடுப்பது இல்லையே.



"ஏய் சகி, மரியாதையா பேசு." பிருந்தா அடிக்குரலில் சாகித்யாவை எச்சரித்தாள்.



சாகித்யா அதைக் கண்டு கொள்ளவில்லை. அவள் சகுந்தலாவை கண்டு கொள்ளாது சக்தீஸ்வரனை சைட் அடித்தபடி அவனைப் பற்றிக் கருத்துகளைச் சொல்லி கொண்டே இருந்தாள்.



'பட்டு திருந்து...' என்று பிருந்தாவும் விட்டு விட்டாள்.



மூவரும் விளையாடி முடித்து விட்டு வந்தனர். சாகித்யா ஓடி சென்று சக்தீஸ்வரன் முன்னே வந்து கையை நீட்டியபடி, "ரொம்ப நல்லா விளையாடினீங்க சக்தி. கங்கிராட்ஸ்." என்று அவனை வாழ்த்த...



"தேங்க்ஸ்." என்றவன் மறந்தும் அவளது கரத்தினைப் பற்றிக் குலுக்கவில்லை. அவனது புறக்கணிப்பில் சாகித்யா முகம் விழுந்து விட்டது.



எல்லாவற்றையும் பார்த்தபடி சகுந்தலா அமைதியாக அமர்ந்து இருந்தாள். சக்தீஸ்வரன் சாகித்யாவை விலக்கி விட்டு மனைவியை நோக்கி வந்தான். சாகித்யா பொறாமையுடன் சகுந்தலாவை பார்த்தாள்.



"அப்புறம் சகி, எப்ப ஊரில் இருந்து வந்த?" வருண் அவளிடம் வழிந்து கொண்டே கேட்க...



"இப்போ தான் வந்தேன்." அவள் சொல்லவும்...



"ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் சௌக்கியமா இருக்காங்களா? சகி, நீ எப்படி இவ்வளவு அழகா இருக்க? அதன் ரகசியம் என்னவோ?" வருண் லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விட்டான்.



"அதே ரகசியத்தை இங்கேயும் கேட்கலாம் மச்சான்." கமல் அவனது காதினை கடிக்க...



"யாருடா அந்தப் புதுப் பிகர்?" வருண் ஆர்வத்துடன் திரும்ப... அங்கே பிருந்தா உக்கிரத்துடன் கணவனைப் பார்வையால் எரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.



"ஏன்டா இப்படி? நல்லா வருவடா." வருண் நண்பனிடம் புலம்ப...



"உனக்கு ஒரு கல்யாணம் போதாதா? இன்னொன்னு கேட்குதா? நல்லா அனுபவிடா மகனே." கமல் வில்லன் போல் சிரிக்க...



"பிந்தும்மா, சகி கூடச் சும்மா பேசிக்கிட்டு இருந்தேன்." வருண் மனைவி அருகே சென்று விளக்கம் கொடுக்க...



"ச்சீ, இன்னும் நீ திருந்தவே இல்லை." என்ற பிருந்தா வேகமாக நடக்கத் தொடங்க...



வருண் அவளின் பின்னேயே கெஞ்சி கொண்டே சென்றான். அதைக் கண்டு கமல் வாய் விட்டுச் சிரித்தான்.



"கமல், ஹவ் ஆர் யூ?" சாகித்யா வழிந்து கொண்டு கேட்க...



"புலி பசிச்சாலும் புல்லை திங்காது." என்றவன் அவளைத் திரும்பி பார்க்காது நடக்கத் தொடங்கினான்.



"என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலை?" அவள் உதட்டை பிதுக்க...



"நீ அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னேன்." கமல் திரும்பி பார்த்தபடி கத்தி சொல்ல... சாகித்யா முகம் கோபத்தில் செந்தணலானது.



சக்தீஸ்வரன் சகுந்தலா இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். சகுந்தலா அமைதியாக எதையோ யோசித்தபடி வந்தாள்.



"சக்கு, என்ன செய்யுது? உடம்பு சரியில்லையா?" சக்தீஸ்வரன் சற்று பதட்டத்துடன் கேட்டான்.



"இல்லையே கேப்டன். நான் நல்லா தானே இருக்கேன்."



"நீ அமைதியா வந்தியா... அதான் கேட்டேன்."




"உங்க சகி அவங்க தானா?" சகுந்தலா தூரத்தில் நின்று கொண்டிருந்த சாகித்யாவை சுட்டிக்காட்டி கேட்க... சக்தீஸ்வரனுக்கு உள்ளுக்குள் தூக்கிவாரி போட்டது.
 

Sasimukesh

Administrator
"அச்சோ, சகின்னா தோழின்னு அர்த்தம். அவ்வளவு தான். இவ்வளவு ஏன்... நீ கூட எனக்குச் சகி தான். சகிங்கிறது உன்னையும் குறிக்கும்." அவன் அவசரமாக மறுத்து சொல்ல...



"என்ன கேப்டன், பயந்துட்டீங்களா? சும்மா விளையாண்டு பார்த்தேன்." சகுந்தலா கண்ணைச் சிமிட்டியபடி கூற...



"அடப்பாவி, கொஞ்ச நேரத்தில் என்னைக் கதிகலங்க வச்சிட்டியே." இப்போது தான் அவனுக்கு உயிர் திரும்ப வந்தது.



"என் கிட்ட அவ்வளவு பயமா?" என்று கூறி அவள் கலகலவெனச் சிரித்தாள்.



"பயம் இல்லைடி பெண்ணே. என்னால் திரும்ப உன்னை இழக்க முடியாதுன்னு அர்த்தம்." அவனது வார்த்தைகள் எதையோ அவளுக்கு உணர்த்த முற்பட்டது. அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் கணவனே சொல்லட்டும் என்று அவள் அமைதி காத்தாள்.



இருவரும் வீடு வந்து விட்டனர். சக்தீஸ்வரன் நேரே குளிக்கச் செல்ல... அவனின் பின்னேயே சகுந்தலாவும் சென்றாள்.



"என்ன சக்கு? நீயும் குளிக்கப் போறியா? நான் வேணா வெளியில் இருக்கும் பாத்ரூமை யூஸ் பண்ணிக்கிறேன்."



"கேப்டன், சட்டையைக் கழட்டுங்களேன்." அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஜெர்க்கானான்.



"எதுக்கு?" அவனது கரம் சட்டையை இறுக பற்றிக் கொண்டது.



"உங்க எக்சர்சைஸ் பாடியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு." அவள் சொன்னதும் தான் அவனுக்கு நிம்மதியானது.



"அதான் விளையாடும் போது அப்படிப் பார்த்துட்டு இருந்தியா?" அவன் அவளை நெருங்கி கொண்டே கேட்க...



"பார்த்துட்டீங்களா?" அவள் பின்னால் நகர்ந்து கொண்டே கண்கள் அலைபாய ஹஸ்கி குரலில் மெல்ல கேட்டாள்.



"ம், பார்த்தேன் பார்த்தேன்..." என்றவன் தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து அவளது கழுத்தில் போட்டு அவளைத் தன் பக்கமாய் இழுத்தான்.



"எனக்கும் ஆசையா இருக்கு." அவன் சொன்னதும்... அவள் என்னவென்று விழிகளால் கேட்க...



"உன்னையும்..." என்றவன் அவளது காதில் ரகசிய குரலில் ஏதோ சொன்னவன், "அப்படிப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு." என்று கிறக்கத்துடன் சொல்ல...



"அச்சோ, அசிங்கமா பேசாதீங்க கேப்டன்." அவள் கைகள் கொண்டு காதினை மூடி கொண்டாள்.



"நீ மட்டும் அசிங்கமா பேசலாமா?"



"நான் எங்கே..." என்று மேலே பேச போனவளுக்கு அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து சட்டென்று வாயை மூடி கொண்டாள்.



"நீ கேட்டது ஆசையில் என்றால்... நான் கேட்டதும் ஆசையில் தான்டி." அவளது முகவாயை ஒற்றை விரலால் நிமிர்த்தியவனின் விழிகளில் அத்தனை காதல் வழிந்தோடியது. காதலுடன் சற்று காமமும் கலந்திருந்ததுவோ!



"புருசன் கிட்ட ஆசையா கேட்டது ஒரு குத்தமா சாமி. இனி நான் வாயை திறக்கலை போதுமா?" அவள் வெளியில் சலித்துக் கொண்டாலும்... உள்ளுக்குள் வெட்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.



"நானும் என்ன அடுத்தவள் கிட்டேயா கேட்கிறேன்? நான் தொட்டு தாலி கட்டிய என் பொண்டாட்டி கிட்ட தானே கேட்கிறேன். இதில் என்ன தப்பிருக்கு?" அவன் விடாது வாதாட...



"கேப்டன், இதுக்கு மேல முடியலை." அவள் பாவம் போல் பார்க்க...



சக்தீஸ்வரன் அவளது கழுத்தில் போட்டிருந்த துண்டினை விலக்கியவன், "முதலில் நீ என்னோட ஆசையை நிறைவேத்துடி. அதுக்கு அப்புறம் நான் உன்னோட ஆசையை நிறைவேத்துறேன்." என்றவனைக் காண இயலாது சகுந்தலா நாணத்துடன் ஓடி விட்டாள்.



சக்தீஸ்வரன் வாய்விட்டு சிரித்தபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.



சகுந்தலா வெட்கத்துடன் ஜன்னல் அருகே வந்து நின்றாள். வானில் நிலா வலம் வந்து கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே நடந்த முதல் அந்நியோன்ய பேச்சு இது. மீண்டும் மீண்டும் கணவன் பேசிய வார்த்தைகளை நினைத்து அவளது தேகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்தது.



"சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாசைகள்

என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்"



*******************************



"விக்கி, இங்கே பார்... நானும் உன்னைய மாதிரி வரைஞ்சிட்டேனே." சகுந்தலா சிறு குழந்தை போன்று கைத்தட்டி குதூகலித்தாள்.



"இல்ல... நீ தப்பூஊஊஊ." விக்ரம் வேகமாகத் தலையாட்டி அவளது கூற்றை மறுத்தான்.



"இல்லை விக்கி, இங்கே பார்... நீ வரைஞ்ச மாதிரி அப்படியே வரைஞ்சு இருக்கேன்." அவள் இருவரும் வரைந்த காகிதத்தை ஒன்றாக வைத்து அவனின் முன்னே காட்டினாள்.



"நீ தப்பூஊஊஊ.... நா ரைட்டூஊஊஊ." விக்ரம் திரும்பத் திரும்பத் தான் சொன்னதையே சொல்ல...



"ஆமான்டா தங்கம்... நீ தான் ரைட்டு. அக்கா தப்பு தான்." சகுந்தலா விக்ரமை அணைத்து கொண்டாள்.



"அக்காஆ குட் கேர்ளு." விக்ரம் சொல்லியபடி பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்டான்.



விக்ரம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பத்து வயது சிறுவன். அவனது பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் அவனைப் பள்ளியில் விட்டு விட்டு சென்று விடுவர். அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். எல்லோரிடமும் கோபமாய், முரட்டுத்தனமாய் நடந்து கொள்ளுவான். அதனால் அவனைச் சமாளிப்பது பெரும்பாடு. அப்படிப்பட்டவன் சகுந்தலாவிடம் மட்டும் நெருங்கி பழகினான். அன்பை பொழிந்தான். ஏனெனில் சகுந்தலா அவனைத் தங்களது உலகத்திற்கு அழைத்து வர எண்ணாது... தான் அவனது உலகத்திற்குச் சென்று அவனை மகிழ்ச்சியுற செய்தாள். அவனுக்கு அது தான் பிடித்திருந்தது. சகுந்தலா இங்கு வந்ததில் இருந்து அவனிடம் மிகப் பெரிய மாற்றங்கள். அதனாலேயே அவள் அவனிடம் கூடுதல் கவனம் எடுத்து கொண்டாள்.



சக்தீஸ்வரன் சற்றுத் தொலைவில் காரை நிறுத்தி விட்டு மனைவியைப் பார்த்தபடி காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவள் விக்ரமுடன் விளையாடி கொண்டிருப்பதைக் கண்டு அவனுக்குச் சந்தோசமாக இருந்தது. அவனது விழிகளுக்கு அவளும் ஒரு குழந்தையாகவே தெரிந்தாள். வாழ்வின் இறுதிவரை மனைவியைக் குழந்தையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளது குழந்தைத்தனம் அவளை விட்டு போகாது கவனமாகக் கையாள வேண்டும் என்று அவன் உறுதி பூண்டு கொண்டான்.



விக்ரமோடு விளையாடி கொண்டிருந்த சகுந்தலா ஏதேச்சையாக நிமிர்ந்த போது தான் கணவனைப் பார்த்தாள்.



"விக்கி, மாமா வந்துட்டாங்க. நான் கிளம்பவா?"



"வேணாம்." அவன் வேகமாக மறுத்து தலையாட்ட...



"அக்கா வயித்துல ஒரு குட்டி பாப்பா இருக்குது. இன்னைக்குப் பாப்பாவை செக் பண்ண போகணும். அதுக்குத் தான் மாமா என்னைய கூட்டிட்டு போக வந்திருக்காங்க."



"பாப்பா?" விக்ரமின் விழிகள் மலர்ந்தது.



"ஆமா..."



"அப்போ சரி... நீ போ." விக்ரம் அனுமதி கொடுக்க... சகுந்தலா அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்பினாள்.



சகுந்தலா கணவன் அருகே வர... "ஒருவழியா உத்தரவு கொடுத்துட்டானா?" என்று சக்தீஸ்வரன் புன்னகையுடன் கேட்டான்.



"ஆமா, பாப்பா பத்தி சொன்னதும் விக்கி சரின்னு சொல்லிட்டான்." சகுந்தலா சிரித்தபடி கூறியவள் ஜீப்பில் ஏறினாள். சக்தீஸ்வரன் மறுபுறம் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன் காரை கிளப்பினான்.



மருத்துவமனை வரும் வரை சகுந்தலா அன்று நடந்த விசயங்களைப் பேசி கொண்டே வர... சக்தீஸ்வரன் அமைதியாகப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டு வந்தான். மனைவியைப் பிருந்தாவிடம் காட்டும் முன் அவனே பிருந்தாவிடம்,



"ரொம்ப அந்தரங்கமான கேள்விகளைக் கேட்க வேண்டாம் சிஸ்டர். சக்கு பயந்து போயிருவாள்." என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டான்.



அதனால் பிருந்தா சகுந்தலாவிடம் அந்தரங்கமான கேள்விகளைக் கேட்பதை தவிர்த்து விட்டாள். வழக்கம் போல் பரிசோதனைகள் முடிந்ததும் பிருந்தா இருவரிடமும்,



"பேபி நல்ல ஹெல்தியா இருக்கு. ஏற்கெனவே டாக்டர் கொடுத்த டேப்லெட்களையே ஃபாலோ பண்ணு சகுந்தலா. நத்திங் டூ வொர்ரி." என்று புன்னகையுடன் சொல்ல...



"பிருந்தா, நீ தான் நல்ல டாக்டர். அந்த டாக்டர் இருக்காரே, அசிங்கமா..." சகுந்தலா மேலே பேசும் முன்,



"சிஸ்டர், நாங்க கிளம்பறோம்." என்றவன் மனைவியை இழுத்துக் கொண்டு வந்து விட்டான்.



பிருந்தா சிரித்தபடி தலையாட்டி கொண்டவள் அடுத்தப் பேசண்ட்டை பார்க்கலானாள்.



இரவு உணவு முடித்து விட்டு சக்தீஸ்வரன், சகுந்தலா இருவரும் வீட்டின் முன்னே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பிருந்தா வாயிற்கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.



"ஹேய் பிருந்தா, வா வா... என்ன இந்நேரம் வந்திருக்க?" சகுந்தலா பிருந்தாவை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள்.



பிருந்தா பதிலுக்குப் பேசவும் இல்லை. சிரிக்கவும் இல்லை. அவள் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.



"வருண் எங்கே சிஸ்டர்?" சக்தீஸ்வரன் கேட்டதற்குக் கூடப் பிருந்தா பதில் கூறவில்லை. அவள் தனக்குள் யோசித்தபடி அமர்ந்து இருந்தாள்.



ஏதோ பிரச்சினை என்று சக்தீஸ்வரனுக்குப் புரிந்தது. அவன் மனைவியிடம் கண்ணைக் காட்டி விட்டு தனது அலைப்பேசியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.



"பிருந்தா சாப்பிட்டியா?" சகுந்தலா கேட்டதற்கு... பிருந்தா மறுப்பாகத் தலையசைத்தாள்.



சற்று நேரத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருந்த பிருந்தாவா இது? என்பது போலிருந்தது அவளது ஓய்ந்த தோற்றம். பிருந்தாவை கண்டு சகுந்தலாவுக்குக் கவலையாக இருந்தது.



"முதல்ல சாப்பிட வா. பிறகு யோசிக்கலாம்." சகுந்தலா அவளது கையைப் பிடித்து அழைத்தாள். பிருந்தா மறுப்பு சொல்லாது அவளுடன் நடந்தாள்.



சக்தீஸ்வரன் நண்பனுக்கு அலைப்பேசியில் அழைத்தான். வருணோ அவனது அழைப்பினை எடுக்கவில்லை. சக்தீஸ்வரன் பொறுமையற்றவனாகச் 'சிஸ்டர் இஸ் ஹியர்' என்று வருணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அடுத்த நொடி வருணிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.



"ஃபோன் கூட எடுக்காம அப்படி என்ன பெரிய பு...ங்கிற வேலை பார்த்துக்கிட்டு இருக்க?" சக்தீஸ்வரன் கோபத்தில் காய்ந்தான்.



"டேய், என்னைய அப்புறமா திட்டிக்கோடா. பிந்து அங்கேயா இருக்கிறாள்." அவன் பதட்டத்துடன் கேட்க...



"இப்போ நீ எதுக்கு இத்தனை பதட்டப்படுற? அப்படின்னா நீ சிஸ்டரை என்ன சொன்ன?" சக்தீஸ்வரன் நண்பனிடம் கோபமாய்க் கேட்க...



"டேய், நீயே பேசிக்கிட்டு இருந்தால் எப்படி? முதல்ல நான் சொல்லுறதை கேளுடா. நான் பிந்துவை கூப்பிட தான் ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன்." என்றவனைக் கண்டு,



"பிறகு ஏன் சிஸ்டர் தனியா வந்திருக்காங்க?" சக்தீஸ்வரன் சந்தேகமாய்க் கேட்டான்.



"அது வந்து..." வருண் இழுக்க...



"என்னத்த பண்ணி வச்ச... சொல்லி தொலைடா?" சக்தீஸ்வரன் எரிச்சலுடன் கத்தினான்.



"வந்த இடத்தில் சகியை மீட் பண்ணினேன்னா... அப்படியே அவள் கூடக் கடலை போட்டுட்டு இருந்தேன்."



"அவள் கூடக் கடலை போட்டுட்டு நீ சிஸ்டரை டீல்ல விட்டுட்ட... அப்படித்தானே?" சக்தீஸ்வரன் கேள்விக்கு வருணால் பதில் கூற முடியவில்லை.
 

Sasimukesh

Administrator
"டேய், உனக்குக் கல்யாணமாகிருச்சுடா. கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்கோ. ஆனா உன்னை நம்பி, அதுவும் உன் பழைய கதைகளைக் கேட்டும், ஒருத்தி நம்பி உன்னைக் கைப்பிடிச்சுப் பின்னால் வந்திருக்கிறாங்க என்றால்... அவங்க உனக்குக் கிடைச்ச பொக்கிசம்டா. தேவையில்லாத விசயங்களைப் பண்ணி சிஸ்டரை வருத்தப்பட வைக்காதே. தங்கத்தைத் தேடுறேன்னு வைரத்தை தொலைச்சிராதே." சக்தீஸ்வரன் கோபமும், ஆதங்கமுமாய் நண்பனை கடிந்தான்.



"அந்தளவுக்கு எல்லாம் இல்லை மச்சான். சும்மா ஜாலியா பேசிக்கிட்டு தான் இருந்தேன். சும்மா பேச்சு மட்டும் தான் மச்சான். செயல்ல எதுவும் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதாடா." வருண் வருத்தத்துடன் சொல்ல...



"முதல்ல கிளம்பி இங்கே வா."



"உன் கிட்ட பேசிக்கிட்டே அங்கே தான் வந்துக்கிட்டு இருக்கேன்டா. பிந்துவை பார்த்துக்கோடா. பத்து நிமிசத்தில் வந்துர்றேன்." வருண் சொன்னதும் அலைப்பேசியை அணைத்த சக்தீஸ்வரன் யோசனையாய் நெற்றியை நீவி கொண்டான்.



"பிருந்தா, இன்னும் ஒரு தோசை வச்சுக்கோ." சகுந்தலா தோசையைச் சுட்டுக் கொண்டு வந்து பிருந்தா தட்டில் வைத்தாள்.



"போதும் சகுந்தலா." பிருந்தா வேண்டாமென்று மறுத்து விட்டு எழுந்தாள். சகுந்தலா மேலும் அவளை வற்புறுத்தாது விட்டு விட்டாள்.



"இந்தப் பாலையாவது குடி." சகுந்தலா பாலை கொடுக்கவும்... பிருந்தா மறுக்காது குடித்தாள்.



அதுவரை பொறுமையாக இருந்த சகுந்தலா பிறகு, "என்ன பிரச்சினை பிருந்தா? அண்ணா கூடச் சண்டையா?" என்று கேட்க...



ஆமென்பது போல் தலையாட்டிய பிருந்தா சட்டென்று சகுந்தலாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளது விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகளின் ஸ்பரிசத்தை உணர்ந்த சகுந்தலா அவளது முகத்தை நிமிர்த்தி,



"பிருந்தா, அழுறியா? ஏன்? அண்ணா உன்னைய அடிச்சிட்டாங்களா?" என்று பதறி போய்க் கேட்க...



"வருண் என்னை அடிச்சிருந்தால் கூட எனக்கு வலிச்சிருக்காது. ஆனா அவன் இங்கே..." என்று இதயத்தைச் சுட்டிக்காட்டியவள், "அடிச்சிட்டான். ரொம்ப வலிக்குது." என்று கூறி அழுதாள்.



"ஐயோ, அண்ணா அப்படி என்ன பண்ணினாங்க?" சகுந்தலாவுக்குப் பதற்றமாக இருந்தது.



"வருண் முன்பே அப்படித்தான்..." என்றவள் வருணின் லீலைகளை ஒன்று விடாது சொன்னாள்.



ஏனோ பிருந்தாவால் சகுந்தலாவை அந்நியமாகப் பார்க்க முடியவில்லை. அவள் சகுந்தலாவை தனது மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தாள். இதற்குக் காரணம் சகுந்தலாவின் வெகுளி குணமாகக் கூட இருக்கலாம். மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்று பேசும் மக்களிடையே சகுந்தலா பிருந்தாவிற்கு வித்தியாசமாகத் தெரிந்தாள் போலும். சகுந்தலாவின் இந்தக் குணம் தான் பிருந்தாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் பிருந்தா அவளிடம் மனசு விட்டு பேசி அழுதாள்.



"அப்படிப்பட்டவன் என் பின்னாடி சுத்தி வந்து, என்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா இப்போ..." என்றவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.



சகுந்தாலவுக்கு வருணின் கடந்த காலம் பிடிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரையில் கதையில் கூட நாயகன் கிருஷ்ணன் போன்று இருந்தால்... அவனைக் கரித்துக் கொண்டே தான் கதையைப் படிப்பாள். அதற்கு ஆன்டி ஹீரோ கதை எவ்வளவோ தேவலை என்பது அவளது கருத்து. அப்படிப்பட்டவளுக்கு வருணின் நடத்தை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.



"இப்போ என்னாச்சு பிருந்தா?" அவள் கவலையுடன் கேட்க...



"வருண் என்னைக் கூப்பிட தான் ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். ஆன நான் வர்றது கூடத் தெரியாம அவன் சகி கூட இளிச்சி, இளிச்சி பேசிக்கிட்டு இருந்தான்." பிருந்தா கோபத்துடன் கூற...



"சும்மா பேசிக்கிட்டு தானே இருந்தாங்க." சகுந்தலா நிம்மதி கொண்டவளாய் கூற...



"என்ன பேசினாங்க தெரியுமா? வருண் அவளை டேட்டிங்குக்குக் கூப்பிடுறான். அவளும் ஈன்னு பல்லை காட்டிட்டு வர்றேன்னு சொல்கிறாள். கேட்கிற எனக்கு எப்படி இருக்கும்? அதான் சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டேன். கல்யாணமாகியும் திருந்தாம இருக்கானே. அது தான் வலிக்குது. நான் அவனுக்கு என்ன குறை வச்சேன்?" என்று பிருந்தா மீண்டும் அழ தொடங்கினாள்.



பெற்றோர் இங்கே இருந்திருந்தால் பிருந்தா அங்கே சென்று அழுது இருப்பாள். இங்கு அவர்கள் யாரும் இல்லாததால் அவள் சக்தீஸ்வரன் வீட்டிற்கு வந்து விட்டாள்.



"அழாதே பிருந்தா... எத்தனை நாளானாலும் நீ இங்கேயே இரு. அண்ணா வந்தால், நீ சேர்த்துக்காதே. நல்லா சுத்தல்ல விடு. நீ எவ்வளவு முக்கியம்ன்னு அவர் உணரணும். அதுக்குப் பிறகு நீ போ." சகுந்தலா வருண் மீதான கோபத்தில் பேசினாள். அதற்குப் பிருந்தாவும் சம்மதமாய்த் தலையாட்டி வைத்தாள்.



வருண் காரை நிறுத்தி விட்டு வேகமாகக் கீழே இறங்கியவன், "பிந்து எங்கேடா?" என்று சக்தீஸ்வரனிடம் பதட்டத்துடன் கேட்க...



"உள்ளே இருக்கிறாள்." சக்தீஸ்வரன் பதில் கூற...



"கோபமா இருக்கிறாளாடா?" வருண் பாவம் போல் கேட்க...



"பண்றது எல்லாம் பண்ணிட்டு... இப்போ பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிருமா? நான் உள்ளேயே போகலை. எந்த முகத்தோடு சிஸ்டரை பார்ப்பது?" சக்தீஸ்வரன் நண்பனை கடிந்தான்.



"இதை முதல்லேயே சொல்றதுக்கு என்னடா?" வருண் வீட்டின் உள்ளே ஓடினான்.



சக்தீஸ்வரன் நண்பனை தொடர்ந்து உள்ளே வந்தான்.



"பிந்து, நீ இங்கே இருக்கியாம்மா? நான் உன்னைத் தேடி ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தேன்." வருண் ஒன்றும் அறியாதவன் போல் பேசினான்.



"என்னைத் தேடி தான் வந்தியா?" பிருந்தா சட்டென்று கேட்க...



"அது..." வருண் என்ன பதில் கூறுவது என்று தெரியாது திகைக்க...



"இப்போ கூட உன்னால பதில் சொல்ல முடியலைல்ல." பிருந்தா கோபமாய்ச் சீற...



"அப்படி எல்லாம் இல்லை பிந்து. உன்னைக் கூப்பிட தான் வந்தேன்." வருண் கெஞ்சுதலாய் கூற...



"என்னைக் கூப்பிட வந்தவனுக்குச் சகி கூட என்ன பேச்சு வேண்டி கிடக்கு?" பிருந்தா கோபத்துடன் கத்த... வருண் மானசீகமாகத் தலையில் கை வைக்க... சக்தீஸ்வரன் நண்பனை பரிதாபத்துடன் பார்த்தபடி தலையில் கை வைத்தான்.



"சும்மா பேசிட்டு இருந்தேன்." வருண் பல்லை காட்ட...



"திரும்பத் திரும்பப் பொய் சொல்லாதே. நீ அவள் கிட்ட டேட்டிங் போகிறதை பத்தி பேசிக்கிட்டு இருந்ததை நானே என் காதால் கேட்டேன்." சொல்லும் போதே பிருந்தா விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது.



"சும்மா ஜாலிக்குச் சொன்னது பிந்து. அது உண்மை இல்லை." வருண் பாவமாய்க் கூற...



"எதுண்ணா ஜாலி? இப்படிப் பொண்டாட்டி மனசை உடைக்கிறது தான் உங்களை மாதிரியான ஆண்களுக்கு ஜாலியா? இதே இது பிருந்தா உங்களை மாதிரி வேற ஒரு ஆம்பளை கிட்ட டேட்டிங் பத்தி பேசினால்... நீங்க சும்மா இருப்பீங்களா?" சகுந்தலா ஆவேசத்துடன் கேட்க... வருண் வாயடைத்துப் போனான்.



"சக்கு, நீ எதுவும் பேசாதே. அவங்க பிரச்சினையை அவங்களே பேசி தீர்த்துக்கட்டும்." சக்தீஸ்வரன் நண்பனை காப்பாற்றும் பொருட்டு மனைவியைத் தன்பக்கமாய் இழுத்து நிறுத்தி வைத்துக் கொண்டான். நாளைக்கு அவனுக்கும் இதே கதி தானே.



"அண்ணா, சகுந்தலா பேசியதில் என்ன தவறு இருக்கு? வருணுக்கு உள்ள நியாயம் தானே. எனக்கும்... அவனைப் பதிலை சொல்ல சொல்லுங்க." பிருந்தா கணவனை முறைத்தபடி நிற்க...



"சாரிடி, நான் அவள் கிட்ட பேசியது தப்பு தான். உன் காலில் விழவா?" வருண் மனைவியின் காலில் விழ போக... பிருந்தா சட்டென்று நகர்ந்தாள்.



"நீங்க மாற மாட்டீங்க. எனக்கு நம்பிக்கை இல்லை." பிருந்தா முறுக்கி கொண்டு நிற்க...



வருண் மனைவியிடம் பேசி பேசி அவளைச் சமாதானப்படுத்தினான். சக்தீஸ்வரனும் தன் பங்கிற்குப் பிருந்தாவிடம் பேசி அவளைச் சமாதானப்படுத்தி வருணுடன் அனுப்பி வைத்தான். போகும் முன் வருண்,



"எல்லாம் உன் மனைவியால் தான்டா. இல்லைன்னா பிருந்தா இவ்வளவு அடம்பிடிக்கும் பெண் இல்லை. சிஸ்டர் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊத்தி விட்டுருக்காங்க. ஆமா, நீ உன்னைய பத்தி சிஸ்டர் கிட்ட சொல்லிட்டியா?" என்று கேட்க... சக்தீஸ்வரன் இல்லையென்று தலையசைக்க...



"நல்லா மாட்டின மச்சான். வாழ்த்துகள்டா." என்றபடி வருண் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.



சக்தீஸ்வரன் திகிலுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அங்குச் சகுந்தலா கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.



"தூங்க போகலாம் சக்கு..." அவன் பேச்சை மாற்ற எண்ணி கூற...



"நான் கோபமா இருக்கேன் கேப்டன்." அவள் கோபித்துக் கொள்ள...



"எதுக்கு?" அவன் உள்ளுக்குள் நடுங்கி கொண்டே வெளியில் சாதாரணமாகக் கேட்டான்.



"பிருந்தா பாவம். உங்க பிரெண்ட் ரொம்ப மோசம். கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது... கொரங்கு அவ கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு?" அவள் கோபமாய்க் காய...



"அதுக்கு நான் என்ன பண்ண?" அவன் பரிதாபமாக மனைவியைப் பார்த்தான்.



"இனி நீங்க அவர் கூடச் சேராதீங்க. நீங்க அவர் கூடச் சேர்ந்தால், அவரை மாதிரியே கெட்டு போயிருவீங்க."



"வருண் என்ன தப்பு பண்ணிட்டான்? ஒரு பொண்ணு கூடச் சாதாரணமா பேசிக்கிட்டு இருந்தான். அதைப் போய்ப் பெருசுப்படுத்திக்கிட்டு..."



"டேட்டிங் போறது உங்களுக்குச் சாதாரணமா?"



"உனக்கு டேட்டிங்ன்னா என்னன்னு தெரியுமா?"



"ம், தெரியும், பிருந்தா சொன்னாள்."



"ரொம்ப நல்லது." அவன் முணுமுணுக்க...



"என்னது?" மனைவி கோபமாய் அவனைப் பார்க்க...



"சும்மா..." அவன் ஈயென்று இளிக்க...



"சிரிக்காதீங்க கேப்டன். எனக்குக் கோபமா வருது." என்றவள் கோபத்துடன் அறைக்குச் செல்ல...



மனைவியின் கோபம் கண்டு சக்தீஸ்வரன் விழி பிதுங்கி நின்றான். தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தால் மனைவியின் நிலை என்னவோ? அவனது எதிர்காலம் இப்போதே அவனுக்குப் பிரகாசமாகத் தெரிந்தது. அதில் அவனது முகம் இருண்டு போனது.



“மான் விழி தேன் மொழி

என் கிளி நான் பலி

காதலி காதலி என் பிகர் கண்ணகி”




தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 34



மருத்துவமனை வாயிலில் நின்று கொண்டு கணவனுக்காகக் காத்திருந்தாள் பத்மினி. அரை மணி நேரமாக வைத்த கண் வாங்காது அவள் வாயிலையே பார்த்துக் கொண்டு இருந்தாள். இன்று நாராயணன் காலையில் அவளை விடும் போதே தான் அழைக்க வருவதாகக் கூறியிருந்தான். ஏனெனில் பத்மினிக்கு இன்று நேரமே வேலை முடிந்து விடும் என்பதால்... அவளும் கணவனுடன் செல்லும் ஆசையில் ஆவலுடன் அவனுக்காகக் காத்திருந்தாள்.



'நானாவுக்காக என்னாச்சு? ஏன் இன்னும் வரலை? ஃகால் பண்ணி பார்ப்போமா? இல்லை வேண்டாம். நானா வண்டி ஓட்டிக்கிட்டு இருப்பாங்க. தொந்தரவு பண்ண வேண்டாம்.' அவள் தனக்குள் சிந்தித்தப்படி நின்று கொண்டிருந்தாள்.



அப்போது நாராயணன் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததைக் கண்டு பத்மினியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஆனால் அடுத்த நொடி அவளது முகம் பதறிப் போனது. ஏனெனில் நாராயணன் தனது வாகனத்தில் வராது நடந்து வந்து கொண்டிருந்தான். அத்தோடு அவனது நடை ஒரு புறமாய்ச் சாய்ந்தபடி இருந்தது. அவன் தாங்கி தாங்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான். ஏதோ விபரீதம் என்று அவளுக்குப் புரிந்ததில்... அவள் அவனை நோக்கி வேகமாக ஓடினாள்.



பத்மினி கணவன் அருகில் சென்று பார்த்த போது தான் அவனது கரங்களில் இருந்து இரத்தம் வழிந்ததைக் கண்டாள். அதே போல் அவன் அணிந்திருந்த பேண்ட்டும் கிழிந்து, அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.



"நானா என்னாச்சு?" அவள் பதட்டத்துடன் கேட்க...



"இங்கே வர்ற வழியில் சின்ன விபத்து." என்று அவன் சொல்ல...



"ஐயோ..." என்றவளின் விழிகள் கலங்கி போனது.



"வரும் போது கார்க்காரன் குறுக்கே வந்து இடிச்சிட்டான். நான் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருச்சு. அந்த நேரம் பார்த்து போலீசும் வந்துட்டாங்க. கார்க்காரன் தான் தப்பா வந்தது. பஞ்சாயத்து முடிய லேட்டாகிருச்சு. சாரி மினி, லேட்டா வந்ததுக்கு..." நாராயணன் மன்னிப்பு கேட்க...



"இப்போ மன்னிப்பு ரொம்ப அவசியமா? வாங்க, காயத்துக்கு மருந்து போடலாம்." அவள் கவலையுடன் சொல்லியபடி அவனது இடுப்பில் கரம் கொடுத்து அவனைத் தாங்கியபடி நடந்தாள்.



"சின்னா காயம் தான். பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை."



"காயம் சின்னதா? பெருசான்னு? டாக்டர் நான் பார்த்து சொல்றேன். நீங்க வாங்க." அவள் அவனை முறைத்தபடி கூறினாள்.



"சரிங்க டாக்டரம்மா." அவன் போலி பணிவுடன் சிரித்தபடி கூற... அதைக் கண்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது.



"ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திருக்கலாமே. எதுக்கு அவ்வளவு தூரம் நடந்து வந்தீங்க?"



"ரொம்பத் தூரம் இல்லை. இங்கே தெருமுனையில் தான்." அவன் சொன்னதும் அவள் அமைதியாகி போனாள்.



நாராயணனை உள்ளே அழைத்துச் சென்ற பத்மினி... தானே அவனது காயங்களைச் சுத்தம் செய்து, மருந்து வைத்து கட்டு போட்டாள். பின்பு அவனை அங்கேயே இருக்கச் சொன்னவள், தான் மட்டும் சென்று அவனுக்கு வேண்டிய மாத்திரைகளை அங்கே இருந்த மருந்தகத்தில் வாங்கிக் கொண்டு வந்தாள்.



இருவரும் இணைந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தனர். வரும் வழி எல்லாம் பத்மினியின் விழிகள் கலங்கி கொண்டே வந்தது. அதை நாராயணனும் கவனித்துக் கொண்டு தான் வந்தான்.



"இந்தச் சின்ன விசயத்துக்காக நீ ஏன் கண்கலங்குற?" அவன் அவளைக் கடிய...



"உங்களுக்கு இது சின்ன விசயம் தான். ஆனா எனக்கு இது உயிர் போகிற விசயம்." அவள் படபடப்புடன் சொன்னதும்... அவளது காதலை கண்டு அவன் வாயடைத்துப் போனான். அதன் பிறகு அவன் அமைதியாக வந்தான்.



வீட்டிற்குச் சென்று இறங்கியதும் பத்மினி நாராயணனை தாங்கலாகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளது அணைப்பை வேண்டாம் என்று சொல்லாது அவளது கரங்களில் தன்னை ஒப்பு கொடுத்தபடி நடந்தான். பெண்ணவளின் காதல் அந்தக் கணம் ஆண்மகன் அவனுக்கும் வேண்டி இருந்தது.



வீட்டு வாயிலில் நின்றபடி பேசி கொண்டிருந்த சர்வேஸ்வரன், கணபதி இருவரும் இவர்களைப் பார்த்து விட்டனர். அதிலும் நாராயணன் கை, கால்களில் இருந்த கட்டினை கண்டு இருவரும் பதைபதைப்புடன் அவர்களை நோக்கி வந்தனர்.



"நாராயணனுக்கு என்னாச்சு மினி?" சர்வேஸ்வரன் மகளிடம் கேட்க...



"நாராயணா என்னாச்சு?" கணபதி மகனிடம் கேட்டார்.



"பெரிதாக ஒண்ணும் இல்லை. கார்க்காரன் இடிச்சுப் பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டேன். சின்ன அடி தான். பயப்பட வேண்டாம்." அவன் பெரியவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் சாதாரணமாகக் கூறினான்.



"எதுக்கு ஆட்டோவில் வந்தீங்க? எங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி இருக்கலாமே. நானும், கணபதியும் வந்திருப்போமே." சர்வேஸ்வரன் மகளிடம் கடிந்து கொண்டான்.



"ப்பா, நீங்க அங்கே வந்து சேர எப்படியும் அரை மணி நேரமாகும். அதுவரை நானாவை காத்திருக்க வைக்க முடியாதே. அதான் நாங்களே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்திட்டோம்." பத்மினி அழகாக நிலைமையைச் சமாளித்தாள்.



மாமனார் வீட்டுச் சலுகைகள் கணவனுக்குப் பிடிக்காது. அதேசமயம் தந்தையை வருந்த வைக்கவும் அவளால் முடியாது. அதனால் தான் அவள் சமாளிப்பாகப் பதில் கூறினாள்.



"அதுவும் சரி தான். மாப்பிள்ளையைக் கூட்டி போய் ரெஸ்ட் எடுக்க வை." சர்வேஸ்வரன் சொல்லவும்... பத்மினி நாராயணனை அழைத்துக் கொண்டு செல்ல... உடன் கணபதியும் சென்றார்.



வீட்டிற்கு வந்ததும் விஜயா மகனை கண்டு பதறிப் போய்விட்டார். எப்படியோ நாராயணன் அவரைச் சமாளித்துச் சமாதானப்படுத்தி விட்டான். அவனைக் கீழே இருந்த அறையில் தங்க சொல்லி விட்டாள் பத்மினி. அப்போது தான் அவளுக்கு அவனைக் கவனித்துக் கொள்ள எளிதாக இருக்கும் என்று... அவனும் சரியென்று விட்டான்.



இரவு சமையலை கவனித்தபடி பத்மினி கணவனைப் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து எட்டிப்பார்த்து கொண்டிருந்தாள். அவளது அதிகப்படி அன்பு, அக்கறை அனைத்தும் நாராயணனுக்கு அடிக்கரும்பாய்த் தித்தித்தது.



இரவு உணவு முடித்து விட்டு படுக்க வந்த பிறகு பத்மினி நாராயணனை தூங்க சொன்னவள்... தான் மட்டும் உறங்காது அவனது கரத்தினைப் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள்.



"தூங்கு மினி." நாராயணன் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கூட அவள் உறங்க மறுத்து விட்டாள்.



நாராயணன் மருந்தின் வீரியத்தில் உறங்கி போனான். ஆனாலும் வலியில் அவனது முகம் சுருங்கி இருந்தது. அதைக் கண்டவள் அவனது புருவங்களை நீவி விட்டபடி அவனையே பார்த்திருந்தாள். அவனுக்கு லேசாக அடிப்பட்டால் கூட அவளுக்கு இங்கே உயிர் பதறுகிறது. அவனுக்கு மட்டும் ஏதேனும் ஒன்றாகி இருந்தால்... நினைக்கும் போதே அவளது விழிகளில் கண்ணீர் வழிந்தது.



உறக்க கலக்கத்தில் இருந்த நாராயணன் தனது நெற்றியில் யாரோ கை வைப்பதை உணர்ந்து விழிகளைத் திறந்தான். அவனது மனையாள் தான் அவனது நெற்றியில் கை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.



"என்ன பண்ணிக்கிட்டு இருக்க மினி?" அவன் கேட்டதும்... தனது கையை எடுத்துக் கொண்ட பத்மினி,



"பீவர் இருக்கான்னு செக் பண்ணுகிறேன்." என்று சொல்ல...



"லேசா அடிப்பட்டதுக்கு எல்லாம் காய்ச்சல் வருமா? எனக்கு இது மாதிரி முன்பு அடிப்பட்டது இல்லையா? நீ எதுக்குத் தூங்காம உன் உடம்பை கெடுத்துக்கிற? முதல்ல தூங்கு." மனைவியின் உறங்காது சிவந்த விழிகளைப் பார்த்தபடி அவன் கடிய...



"சரி, தூங்கறேன்." என்றவள் படுத்து கொண்டாள்.



கணவன் சொன்னதுக்காக விழிகளை மூடி படுத்தவள்... அடுத்தச் சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள். நாராயணன் தான் உறக்கம் இல்லாது மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான். அவளது கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீரின் தடம் அவளது மனத்தவிப்பினை அவனுக்குச் சொல்லாது சொல்லியது.



மனைவிக்குத் தன் மீது காதல் என்ற சொன்ன போது கூட அவன் அதைப் பெரிதாக உணரவில்லை. ஆனால் இப்போது அவளது துடிப்பு, அக்கறை எல்லாம் பார்க்கும் போது அவளது காதலின் ஆழம் அவனுக்குத் தெரிந்தது, புரிந்தது. அதுவும் இப்போது அவள் அவன் மீது கோபத்தில், வருத்தத்தில் இருக்கிறாள். அப்படி இருந்தும் அவளது காதல் சிறிதும் குறையவில்லை. அவன் அவளைப் புரிந்து கொண்ட இந்த நொடி அவள் அவனது மனதில் ஆழமாய்ப் பதிந்து போனாள்.



அடுத்தநாள் பத்மினி மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்து விட்டு கணவனை உடனிருந்து கவனித்துக் கொண்டாள். தனக்குக் கட்டினை பிரித்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்திருந்த நாராயணன் அவளிடம்,



"உனக்கு ப்ராக்டீஸ் முடிய இன்னும் எத்தனை மாசம் இருக்கு?" என்று கேட்க...



"இன்னும் மூணு மாசம் இருக்கு."



"அதுக்குப் பிறகு என்ன பண்ண போற?"



"மேலே படிக்கணும்."



"இங்கேயா?"



"முதலில் வெளிநாட்டுக்கு போய் மேல்படிப்பு படிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். இப்போ முடியுமான்னு தெரியலை."



"ஏன்?" அவன் புரியாது விழிகள் சுருக்கினான்.



"உங்களைப் பிரிஞ்சு இருக்க முடியுமான்னு தெரியலை நானா." அவள் முகம் சிவக்க வெட்கத்துடன் கூற... மனைவியின் வெட்கத்தினைக் கணவனவன் ரசித்துப் பார்த்திருந்தான்.



"ரெண்டு, மூணு வருசம் தானே. சமாளித்துக் கொள்ளலாம்." என்றவனை அவள் வியப்பாய் பார்த்தாள்.



"எத்தனை வருசமானாலும் நான் உனக்காகக் காத்திருப்பேன் மினி." அவனது வார்த்தைகளில் அவள் மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்திருந்தாள்.



"நீ எப்படி என்னை விட்டுட்டு போவியோ... அதே இடத்தில் அப்படியே நான் உனக்காகக் காத்திருப்பேன்." அவன் புரிதலுடன் சொன்னான்.



'காலம் நம்மைப் பிரித்தாலும்... நான் மாறாது அதே அன்போடு உனக்காகக் காத்திருப்பேன்.' என்று கூறும் கணவனது வார்த்தைகளில் பத்மினியின் விழிகளில் ஈரம் கசிந்தது.



"தேங்க்ஸ் நானா." அவளது இதழ்கள் மெல்ல முணுமுணுத்தது.



"அப்போ நானும் பதிலுக்குத் தேங்க்ஸ் சொல்லவா?" அவனது பார்வை அவளது இதழ்களைக் குறுகுறுவென்று பார்த்தது. அவனது பார்வையில் அவள் மூச்சடைத்து நிற்க...



நாராயணன் சிரித்தபடி அவளது கரத்தினை எடுத்து அதில் தனது உதட்டினை மென்மையாகப் பதித்தான். கணவனது செய்கையில் பத்மினி பனிக்கட்டியாய் உறைந்து போனாள்.



********************************



வார இறுதியில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் எல்லோரையும் ஒன்றிணைத்துக் கூட்டம் நடத்தப்படும். மருத்துவமனையின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால்... அது பேசி தீர்க்கப்படும். நல்லது நடந்து இருந்தால், சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பாராட்டி புகழ்வர். இது எப்போதும் நடைமுறையில் இருப்பது தான். அது போன்று தான் இன்றும் சக்தீஸ்வரன், சகுந்தலா, வருண், பிருந்தா, கமல் எல்லோரும் கூட்டத்திற்காக மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர். வருணுக்கும், கமலுக்கும் மருத்துவமனையில் சிறுபங்கு இருந்தது. மருத்துவமனை என்று இல்லை, தீவில் அவர்களது நிறுவனம் சார்பாக வேலை செய்த போதும், அவர்களும் இங்குச் சிறு முதலீடு செய்திருந்தனர்.



இன்னமும் கூட்டம் ஆரம்பிக்கவில்லை. சக்தீஸ்வரன் அருகே அமர்ந்திருந்த சகுந்தலா வருணை கண்டு முறைத்துக் கொண்டு இருந்தாள். வருண் பிருந்தாவை அழ வைத்து விட்டான் என்று அவளுக்கு அவன் மீது கோபம். வருணோ அவள் முறைப்பதை கண்டு கொள்ளாது சிரித்துக் கொண்டு இருந்தான். அதைக் கண்டு சக்தீஸ்வரன் தான் கடுப்பாகி விட்டான்.



"என் பொண்டாட்டியை பார்த்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா? அவளே கோபமா உன்னை முறைச்சிக்கிட்டு இருக்கிறாள். நீ என்னடான்னா லூசு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்கிற? என்ன கிண்டலா?" சக்தீஸ்வரன் கோபத்தில் பல்லை கடித்தான்.



"பொண்டாட்டிக்குச் சப்போர்ட் பண்ணிக்கிட்டு நண்பனை லூசுன்னு சொல்றியே... உன்னை எல்லாம்..." வருண் போலி கோபத்தோடு சொல்லி கொண்டே பல்லை கடித்தான். ஆனால் அவனது விழிகள் சிரித்ததைச் சக்தீஸ்வரன் கண்டு கொண்டான்.



"பின்னே உனக்கா சப்போர்ட் பண்ண முடியும்? இப்போ எதுக்குடா நீ சக்குவை பார்த்து சிரிச்ச? அவள் உன் மீது கொலை காண்டுல இருக்கிறாள்." சொல்லும் போதே சக்தீஸ்வரனுக்கும் சிரிப்பு வந்து தொலைத்தது. மனைவியை நினைத்து அவன் சிரிப்பை அடக்கி கொண்டான்.



"இல்லை... எனக்கே இந்தக் கதின்னா... உன்னை நினைச்சேன், சிரிச்சேன்." என்ற வருணை கண்டு சக்தீஸ்வரனுக்குத் தூக்கிவாரி போட்டது. அவன் வேகமாக மனைவி புறம் திரும்பி பார்த்தான். நல்லவேளை சகுந்தலா பிருந்தாவிடம் பேசி கொண்டிருந்தாள். அவன் நிம்மதி பெருமூச்சு விட்டபடி வருணை கண்டு முறைத்தான்.



கமல் இருவரையும் கண்டு வாய்விட்டுச் சிரித்தான். அவனுக்குத் தான் எந்தத் தளைகளும் இல்லையே.



"எங்க பொழைப்பு உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?" சக்தீஸ்வரன், வருண் இருவரும் சேர்ந்து வருணை மொத்தினர்.



ஆண்களின் அடிதடியில் பெண்களின் கவனம் அவர்கள் மீது திரும்பியது. சகுந்தலா வருணை முறைத்துக் கொண்டே,



"பிருந்தா, அடுத்தவக் கூடக் கடலை போட்ட உங்க புருசர் வாய்க்குத் தண்டனை கொடுத்தீங்களா?" என்று வில்லி போன்று கேட்டாள்.



சகுந்தலா கேட்டது கண்டு பிருந்தா திகைப்புடன் திருதிருவென விழித்தாள். கணவனது வாய்க்கு அவள் தண்டனை கொடுத்தாள் தான். ஆனால் அது முத்தமாக மாறி போனதே. கணவன், மனைவி ஊடல் பற்றிச் சகுந்தலாவுக்குச் சரியான புரிதல் இல்லையே. அதனால் அவள் சாதாரணமாகக் கேட்டாள்.



"ஆமா, ஆமா... ரொம்பப் பெரிய தண்டனை கொடுத்தாள். இங்கே பாருங்க சிஸ்டர், என் உதட்டில் இருக்கிற காயத்தை..." வருண் உதட்டை பிதுக்கி காட்டினான்.



வருணின் உதட்டில் இருந்த காயம் எதனால் என்று சக்தீஸ்வரன், கமல் இருவருக்கும் புரிந்து போனது. இருவரும் நமட்டு சிரிப்புடன் அமர்ந்து இருந்தனர். பிருந்தா யாரையும் ஏறிட்டு பார்க்க முடியாதபடி தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள். ஆனால் சகுந்தலாவோ,



"சபாஷ், இப்படித்தான் தண்டனை கொடுக்கணும்." என்று ஆர்ப்பரித்தபடி தோழியைக் கட்டி கொண்டாள். பிருந்தா அவளது அணைப்பில் சங்கடமாக நெளிந்தாள்.



"சக்தி..." வருண் நண்பனின் காதினை கடித்தான்.



"என்னடா?" வருணை போன்றே சக்தீஸ்வரனும் மெல்லிய குரலில் கேட்க...



"உங்களுக்கு எப்படிடா குழந்தை உண்டாச்சு? டவுட்டா இருக்கே?" வருண் சந்தேகத்தோடு தாடையைத் தடவ...



"நீ அடிவாங்க போற..." சக்தீஸ்வரன் நண்பனை முறைக்க...



"ஹா ஹா, இப்படி அப்பாவியா சிஸ்டர் இருக்காங்களே. அதான் கேட்டேன். அங்கே உதட்டை கடிச்சு வைக்கிற பழக்கம் எல்லாம் இல்லையா? ஆனா சிஸ்டரை பார்த்தால் டெரர் பீசா தெரியுதே." வருண் சகுந்தலாவை யோசனையாய் பார்த்தபடி சொல்ல...



"அதெல்லாம் இல்லைடா. அவள் ரொம்பச் சாப்ட்." என்று கூறி சக்தீஸ்வரன் சமாளித்தான்.



"என்னமோ நீ சொல்ற... நான் நம்பறேன்." வருண் சிரித்துக் கொண்டே சொன்னான்.
 

Sasimukesh

Administrator
ஐவரும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு முதலாளி ஸ்தானத்தில் ஐவரும் மேடையில் அமர்ந்திருக்க... சாகித்யா தொழிலாளர்களுடன் தொழிலாளியாகக் கூட்டத்தினருடன் அமர்ந்து இருந்தாள். அவளது தோழியான பிருந்தாவை கண்டு அவளுக்குப் பொறாமையாக இருந்தது. தன்னைப் போல் இருந்தவள் இப்போது இப்படி வசதியாக இருப்பதைக் கண்டு அவளுக்கு வயிறு காந்தியது. அதைவிடச் சகுந்தலாவை கண்டு அவள் உள்ளுக்குள் பொருமினாள். போயும் போயும் இவள் தான் சக்தீஸ்வரனுக்கு மனைவியாகக் கிடைத்தாளா? என்று அவளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.



மருத்துவமனையில் நடந்த நல்லவைகளைப் பட்டியலிட்டு கூறிய சக்தீஸ்வரன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பாராட்டினான். அடுத்து அதே போன்று அவன் குறைகளைக் கேட்க தொடங்கினான்.



அப்போது முதல் ஆளாக எழுந்த சாகித்யா, "யாரும் ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறாங்க சக்தி. நீங்களே என்னன்னு கேளுங்க." என்று கொஞ்சி கொண்டே பேச...



"என்னமோ இவள் தான் பெயர் வச்ச மாதிரி பேசுறதை பாரேன்." பிருந்தா சகுந்தலாவிடம் முணுமுணுக்க...



"விடு பிருந்தா... கேப்டனை பத்தி உனக்குத் தெரியாது. அவர் என்னையவே அந்த விரட்டு விரட்டுவாரு. இவளை சும்மா விட மாட்டாரு." என்று சகுந்தலா கணவனைப் பற்றிப் புரிந்தவளாய் கூற... அவள் கூறியது போன்று தான் அடுத்து சக்தீஸ்வரன் நடந்து கொண்டான்.



"இது மீட்டிங்... ஃகால் மீ சார்." சக்தீஸ்வரன் அமர்த்தலான குரலில் சொல்லிவிட்டு... சாகித்யாவை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான் அவனது பார்வையில் சாகித்யாவுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.



"ஓகே சார். நான் என்ன சொன்னாலும்... யாரும் என் பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க." சாகித்யா சிணுங்கலாய் சொல்ல...



"அவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நீங்க கொடுத்து... வேலையைச் செய்யச் சொல்லியிருந்தால் அவங்க ஒழுங்கா வேலையைச் செஞ்சிருப்பாங்க. நீங்க அவங்களை அதட்டி, உருட்டி, மிரட்டினால்... அவங்க எப்படி வேலை செய்வாங்க? உங்களுக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுப்பாங்க? இங்கே பாருங்க மிஸ் சாகித்யா... இது எல்லாம் உங்கள் மீது வந்த புகார்கள்." சக்தீஸ்வரன் கற்றைக் காகிதங்களை எடுத்து மேசை மீது போட்டான்.



அதைக் கண்ட சாகித்யா அடுத்த நொடி, "சாரி சார். இனி இது மாதிரி நடக்காது." என்று பம்மி கொண்டு அமர்ந்து விட்டாள்.



"நான் சொன்னேன்ல." சகுந்தலா பிருந்தாவை புன்னகையுடன் பார்த்தாள்.



"உண்மை தான்." என்று ஆமோதித்த பிருந்தா, "இவளை போய் என்னோட பிரெண்டா நினைச்சேன் பாரு. ச்சைய்..." என்று உதட்டை சுழித்தாள்.



"விடு பிருந்தா... பார்த்துக்கலாம்." சகுந்தலா அவளைத் தேற்றினாள்.



கூட்டம் முடிந்து எல்லோரும் வெளியேறினர். இறுதியாகச் சக்தீஸ்வரன், சகுந்தலா, வருண், பிருந்தா, கமல் வெளியேறினர். அவர்கள் செல்வதைக் கண்ட சாகித்யா வேண்டுமென்றே அவர்களுடன் இணைந்து நடந்தாள். இப்போது அவள் சக்தீஸ்வரனை விட்டு விட்டு வருணை பிடித்துக் கொண்டாள். வருண் தானே அவளிடம் பல்லை காட்டி கடலை போடுவது... சாகித்யா தன்னருகில் நடந்து வருவதை வருண் உணர்ந்தாலும்... அவன் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. ஏற்கெனவே பட்ட அனுபவம் போதாதா?



சாகித்யா வருணின் கவனத்தைத் திசை திருப்ப எண்ணி அங்கிருந்த நாற்காலியில் வேண்டுமென்றே காலை இடித்துக் கொண்டு, "ஆ..." என்று வலியில் கத்தினாள்.



அப்போது வருண் பதட்டத்துடன் திரும்ப... சாகித்யா ஆசையுடன் அவனைப் பார்த்தாள். அவனோ பதறியவனாய் தனக்கு மறுபக்கம் வந்த மனைவியைத் தனது கரங்களில் தாங்கி கொண்டான். ஆம், பிருந்தா தான் மயங்கி விழுந்து இருந்தாள். அதைக் கண்டு சாகித்யா திகைத்து விழித்தாள்.



வருண் பிருந்தாவை தூக்கி கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு ஓடினான். அவன் பின்னேயே சக்தீஸ்வரன், கமல் இருவரும் ஓடினர். சகுந்தலாவுக்கும் பதட்டம் இருந்த போதும்... அவள் சாகித்யாவை திட்ட வேண்டி அவள் புறம் திரும்பினாள்.



"இது தான் காதல். கணவன் மனைவி புரிதல். அவருக்குப் பிந்து தான் முக்கியம். நீ இல்லை. இனி நீ யார் கிட்டேயாவது, அதுவும் கல்யாணமான ஆம்பிளைங்க கிட்ட நீ பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன். அடுத்த நொடி உன்னை வேலையை விட்டு தூக்கிருவேன். ஜாக்கிரதை..." என்று சகுந்தலா சாகித்யாவை மிரட்டினாள்.



"அதைச் சொல்ல நீ யாரு?" சாகித்யா அவளிடம் எகிற...



"இதை உங்க பாஸ் சக்தீஸ்வரன் கிட்ட போய்க் கேளு." என்று விட்டுச் சகுந்தலா பிருந்தாவின் நலனை விசாரிக்க ஓடிவிட்டாள்.



சகுந்தலா அங்கே சென்ற போது எல்லோரின் முகமும் மலர்ந்து இருந்தது. அதைக் கண்டு குழம்பி போன சகுந்தலா,



"பிருந்தாவிற்கு என்னாச்சு? அவளைப் பத்தி கவலைப்படாம... நீங்க மூணு பேரும் சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?" என்று கோபம் கொள்ள...



"வருணுக்கும், பிருந்தாவுக்கும் நம்மளை மாதிரியே பாப்பா வர போகுது." சக்தீஸ்வரன் சொன்னதும் சகுந்தலாவின் முகமும் மலர்ந்தது.



"இனியாவது பிருந்தா மனசை நோகடிக்காம இருங்க அண்ணா. அவளை நோகடிச்சால்... உங்க குழந்தையும் நோகும். பார்த்து நடந்துக்கோங்க." சகுந்தலா மிடுக்காக வருணுக்கு அறிவுரை கூற...



"அம்மா தாயே, என்னை. ரெண்டு அடி கூட அடிச்சிக்கோ. ஆனா இப்படி அட்வைஸ் பண்ணி என்னைக் கொல்லாதே." வருண் தலைக்கு மேல் கும்பிடு போட்டு சொல்ல...



"நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க. நான் பிருந்தாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்." சகுந்தலா முறுக்கி கொள்ள...



"அச்சோ, அப்படி எல்லாம் செஞ்சிராதேம்மா. இனி இந்த அண்ணன் உன் சொல் பேச்சு கேட்டு தான் நடப்பான்." வருண் வாயை மூடி கொண்டு நிற்க...



"சத்தியமா?" சகுந்தலா தனது கரத்தினை அவன் முன்னே நீட்ட... மனைவி மீதான சகுந்தலாவின் அன்பு கண்டு வருணின் மனம் நெகிழ்ந்தது.



"பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு மேல சத்தியம் பண்ண கூடாதும்மா. வேணும்ன்னா உன் புருசன் மேல சத்தியம் பண்றேன். இனி எந்தப் பொண்ணு கூடவும் பேச மாட்டேன்னு..." வருண் சொல்லவும் தான் சகுந்தலா அவனை விட்டாள்.



பின்பு சகுந்தலா பிருந்தாவை பார்த்து வாழ்த்து சொன்னாள். அப்படியே பிருந்தா உடன் இருந்து அவளைப் பார்த்து கொண்டாள்.



வருண் பிருந்தாவிற்கான மருந்துகளை வாங்க வேண்டி மருந்தகம் சென்றுவிட... கமல் வேலை நடக்கும் இடத்திற்குச் சென்று விட்டான். சக்தீஸ்வரன் மட்டும் தனியே வந்து கொண்டு இருந்தான். அவன் தனியே வருவதைக் கண்ட சாகித்யா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி அவனை நோக்கி ஓடி வந்தாள்.



தன் முன்னே மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற சாகித்யாவை கண்டு சக்தீஸ்வரன், "என்ன?" என்று கடுமையாகக் கேட்டான். நண்பனின் வாழ்க்கையில் விளையாட நினைத்த அவளைக் கண்டு அவனுக்கு எரிச்சலாக இருந்தது.



"சகுந்தலா..." என்று அவள் ஆரம்பிக்க...



"மேம்ன்னு மரியாதையா கூப்பிடுங்க மிஸ் சாகித்யா. அவங்க உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிற முதலாளி." சக்தீஸ்வரன் கண்டிப்புடன் சொல்ல... அதைக் கேட்டு சாகித்யா முகம் இஞ்சி தின்ற குரங்கு போன்று மாறிப் போனது. இருந்தாலும் அவள் சமாளித்துக் கொண்டு,



"அவங்க என்னை வேலையை விட்டு தூக்கிருவேன்னு சொல்றாங்க சார்." என்று அவள் போலியாய் கண்களைக் கசக்கினாள்.



"என் மனைவியைப் பத்தி என் கிட்டேயே புகாரா? இதுக்கே உங்களை வேலையை விட்டு தூக்கணுமே." சக்தீஸ்வரன் ஒரு மாதிரியான குரலில் கூற...



"ஐயோ சார், அப்படி எல்லாம் செஞ்சிராதீங்க." சாகித்யா அவனிடம் பணிந்து போக...



"இனி என் மனைவியைப் பத்தி என் கிட்டேயே குறை சொல்ல கூடாது. என் மனைவி தான் இந்த ஹாஸ்பிட்டல் நிர்வாகி. சோ அவள் சொன்னால் நோ அப்பீல்." என்று அவன் சொல்ல...



சாகித்யா முகம் கருக்க நின்றிருக்க... அப்போது சகுந்தலா கைத்தட்டியபடி அங்கு வந்தாள். அவளைக் கண்டு சாகித்யா முகம் இன்னமும் கருத்துப் போனது.



"சூப்பரா சொன்னீங்க கேப்டன். சிலருக்கு சொன்னாலும் புரியாது. செயல்ல காட்டினால் தான் புரியும்." சகுந்தலா சாகித்யாவை கண்டு முறைத்தபடி சொன்னவள் கணவனை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.



சக்தீஸ்வரன், சகுந்தலா இருவரும் வீட்டிற்கு வரும் வரை அமைதியாக வந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் சக்தீஸ்வரன் மனைவியிடம்,



"அந்தப் பெண் அவளாகத் தான் வந்து பேசினாள். நான் இல்லை." என்று சுய விளக்கம் கொடுத்தான்.



அவன் தான் வருண் விசயத்தில் மனைவி நடந்து கொண்டதை பார்த்துக் கொண்டு இருந்தானே. அதனால் அவன் தானே முன்வந்து விசயத்தைச் சொன்னான்.



"நான் ஒண்ணும் கேட்கலையே." சகுந்தலா அசால்ட்டாகத் தோள்களைக் குலுக்க...



"என் மேல் கோபம் இல்லையே."



"எதுக்குக் கேப்டன்?" அவள் புரியாது விழிகளைச் சுருக்கினாள்.



"வருண் அந்தப் பொண்ணு கூடப் பேசியதுக்குக் கோபப்பட்டியே. அது மாதிரி என்னையும்..." அவன் இழுக்க...



"போங்க கேப்டன். நீங்களும், அவரும் ஒண்ணா? நீங்க ரொம்ப நல்லவரு." அவள் சிரித்துக் கொண்டே சொல்ல...



சக்தீஸ்வரன் மனைவியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "அப்போ நீ ஏன் அன்னைக்கு அப்படி அழுத?" அவன் கேட்க...



"என்னைக்கு?" அவளுக்கு அவன் கூற வருவது புரியவில்லை.



"அன்னைக்குத் தர்சனா கூட என்னைப் பார்த்தப்போ அப்படி அழுதியே. ஏன்?" அவன் கேட்டதும் அவள் திகைப்பாய் அவனைப் பார்த்தாள்.



"இந்த நம்பிக்கை அப்போ எங்கே போயிருந்துச்சு?" அவன் கேட்டதும் அவள் அதிர்ந்து நிற்க..



"கொஞ்சம் கூடவா என் மேல் நம்பிக்கை இல்லை?" அவனது குரல் உடைந்து ஒலித்தது.



"இல்லை கேப்டன். அன்னைக்கு நான் குழம்பி போயிட்டேன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன். நீங்க எந்தத் தப்பும் பண்ணலை. அந்தத் தர்சனாவே என்னை நேரில் பார்த்து சொன்னாள்." சகுந்தலா அவனிடம் படபடப்புடன் உளறி கொட்டினாள்.



"நீ எப்போ தர்சனாவை பார்த்த?" அவன் சரியாகப் பாயிண்ட்டை பிடித்து விட்டான்.



"அது அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்குச் செக்கப் போயிருந்தோமே... அப்போ..." என்றவள் அன்று நடந்த அனைத்தையும் அவனிடம் ஒன்று விடாது கூறினாள்.



"அதான் இந்த இணக்கமோ?" அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...



"கேப்டன்..." அவள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது விழிக்க...



"தர்சனா சொல்லி தான் என் மீது உனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அப்படித்தானே."



"அப்படி இல்லை கேப்டன்." அவள் பேச வர... அவன் கையை நீட்டி பேச விடாது நிறுத்தினான்.



"என் மேல் கோபமா?" அவள் பாவம் போல் கேட்க...



"இல்லை வருத்தம் தான்." என்றவனின் மனமோ, எவளோ சொல்லி தனது மனைவி தன்னை நம்பி இருக்கிறாளே என்று ஆதங்கம் கொண்டு தவித்தது.



அந்த நொடி அவன் தனது தவறுகளை மறந்து தான் போனானோ! என்னமோ ஆண்டாண்டு காலமாய்க் காதலித்தது போன்று அவன் நடந்து கொண்டான்.



சக்தீஸ்வரன் மனைவியை விட்டு விலகி வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விழிகளை மூடி கொண்டான். அவனது வார்த்தையில் சகுந்தலா தான் அதிகம் தவித்துப் போனாள். அவள் அவன் அருகே வந்து அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள்,



"எனக்குப் புத்தி கிடையாதுன்னு உங்களுக்கே தெரியும்ல கேப்டன். நான் அந்தளவுக்கு எல்லாம் யோசிக்கலை. எனக்கு அப்படி யோசிக்கவும் தெரியாது. உங்களை வேற பொண்ணு கூடப் பார்த்த அந்த நொடி..." அன்று கண்ட காட்சியை இன்று கண்டது போல் அவளது விழிகளில் இருந்து விழிநீர் தாரை தாரையாக வழிந்தோடியது.



அவளது வார்த்தைகள் சக்தீஸ்வரன் காதுகளில் விழவில்லை. அவன் அன்றைய நிகழ்வில் ஆழ்ந்து விட்டான். அன்று அவன் உருவாக்கிய நாடகம் தான் அது. அதற்குத் திரைக்கதை எழுதியதும் அவன் தான். அதன் விளைவுகள் அனைத்தும் அவனுக்கும் தெரியும். ஒன்றும் தெரியாது அவன் தனது நாடகத்தை அரங்கேற்றவில்லை. அப்படி இருந்தும் ஏனோ ஒருவித வலி அவனது நெஞ்சில் தோன்றி அவனை வதைத்தது.



யாரும் தன்னை நம்பவில்லையே என்கின்ற ஆதங்கமா? நம்பிக்கை கொடுக்கும் அளவிற்குத் தான் நடந்து கொள்ளவில்லையோ என்கிற கழிவிரக்கமா? எல்லாம் சேர்ந்து அவனை உருக்கியது.



அவனது பழைய வாழ்க்கை சரியில்லை தான். ஆனால் காதல் வந்த பிறகு அவன் முழுதாய் மாறி போனானே. அதனால் தான் குடும்பத்தினர், முக்கியமாகச் சகுந்தலா தன்னை நம்பாது அழுதது கண்டு அவனுக்கு வருத்தமாக இருந்தது. அன்று அவள் உயிர் போவது போல் அழுதாளே. இதைக் காண தானா அவன் உயிரோடு இருந்தான்? அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.



'தவறு எல்லாம் உன் மீது வைத்துக் கொண்டு... ஒன்றும் அறியாத அப்பாவியை நீ ஏன்டா திட்டின? பாவம் சகி.' அவனது மனசாட்சி அவனைத் திட்டியது.



'அச்சோ, ஆமாம்ல... என்ன பேசி வைத்திருக்கிறேன்?' அவன் பதட்டத்துடன் விழிகளைத் திறந்தான்.



மனைவி எங்கே? என்று அவன் தேடிய போது... அவனது மனைவி அவனது காலுக்கு அருகில் அமர்ந்த நிலையில் சோபாவில் தலை வைத்து உறங்கி இருந்தாள். அவன் நேரத்தை பார்க்க... அவர்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரமாகி இருந்தது.



'இவ்வளவு நேரமாகவா யோசிச்சிக்கிட்டு இருப்ப?' அவன் மானசீகமாகத் தன்னைத் தானே திட்டி கொண்டான்.



"சகி..." அவன் மனைவியை எழுப்ப...



"ம்..." தூக்கத்தில் பதிலளித்த மனைவியைக் கண்டு அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது.



"நீ தான் சகின்னு உனக்குத் தெரியுமா?" அவன் புன்னகையுடன் கேட்டவன் அவளைத் தனது கரங்களில் ஏந்தி கொண்டான்.



அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்ட சகுந்தலா உறக்கத்திலும் அவனை உணர்ந்தாளோ!



"கேப்டன், சாரி கேப்டன்." என்று அவளது இதழ்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டு முணுமுணுத்தது. அதைக் கேட்டு அவனுள் வருத்தம் எழுந்தது.



"நான் தான்டி சாரி கேட்கணும். தெரியாம பேசிட்டேன்." என்றவன் அவளது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.



"விழியோரமாய் ஓர் நீர்த்துளி

வழியுதே என் காதலி

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்

போதும் போதும் போதும்"



தொடரும்...!!!

 
Status
Not open for further replies.
Top