Sasimukesh
Administrator
"கேப்டன், யூட்யூப் பார்த்து தான் சட்னி வச்சேன்." என்று சிணுங்கியவள், "இட்லி நல்லா வரலைன்னா... காரணம் நானில்லை. நீங்க தான். ஏன்னா மாவு அரைச்சது நீங்க தானே." என்று கூறி அவள் கலகலவெனச் சிரிக்க...
"எப்படி இருந்த என்னை இப்படி மாத்தி வச்சிருக்கியே சக்கு. எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்த என்னை... இப்படி மாவு ஆட்ட விட்டுட்டியே." அவன் சோகம் போன்று சொல்ல...
"அதெல்லாம் வெளியே. வீட்டுக்குள்ள எல்லாம் செய்யணும்." அவள் அலட்டலாகச் சொல்ல...
"நல்லா பண்ற..." என்று சிரித்தவன் அவளையும் அமர வைத்து, தானும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.
பரவாயில்லை, சகுந்தலா நன்றாகத் தான் சட்னி அரைத்து இருந்தாள். அவள் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் கற்று கொள்கிறாள். அதுவும் அவனுக்காக அவள் கற்று கொள்கிறாள். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளது இந்த மாற்றமே அவனுக்குப் போதுமானது.
இரவு படுக்கப் போகும் முன் சக்தீஸ்வரன் தனது மடிகணினியை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தான். அவன் யூட்யூப்பில் சகுந்தலாவுக்கு என்று தனியே ஆரம்பிக்கப்பட்ட சேனலை திறந்தான். அதில் இந்த ஒரு மாத காலமாக ஏகப்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. சகுந்தலா சிறு குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும் காணொளிகள், ஸ்டேண்டப் காமெடி காணொளிகள் என்று எல்லாம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
முதலில் சக்தீஸ்வரன் விளையாட்டாக ஒரு காணொளியை தான் பதிவேற்றம் செய்தான். அதற்கு வந்த வரவேற்பு அவனே எதிர்பாராதது. அதனால் அவன் அடுத்தடுத்து நிறையக் காணொளிகளைப் பதிவேற்ற தொடங்கினான். இப்போது சகுந்தலாவின் காணொளியை உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் பார்த்து பாராட்டினர். சகுந்தலா தமிழில் பேசுவதை, அவன் தான் மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் கீழே சப்டைட்டிலாகப் போட்டு விடுவான்.
இன்றும் அதே போன்று காணொளிக்கு வந்த கருத்துகளைச் சக்தீஸ்வரன் மனைவிக்குப் படித்துக் காட்டி கொண்டிருக்க... அவளோ அதைக் கேட்டுக் கொண்டே உறங்கி போனாள்.
"உன்னோட சேனலுக்கு இந்த மாச வருமானம் எவ்வளவு தெரியுமா?" என்றவன் அவளது மாத வருமானத்தைச் சொல்லி, "அதுவும் டாலரில் வருது." என்று கூற... அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராது போனதும், அவன் அவளைத் திரும்பி பார்த்தான். அவள் அவனது தோளில் சாய்ந்து உறங்கி போயிருந்தாள்.
மனைவியைக் கண்டு தனக்குள் சிரித்தவன் அவளை நேராகப் படுக்க வைத்து போர்வையால் அவளை மூடினான். என்ன தான் அவன் அவளின் திறமைகளை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்தாலும்... அவள் இன்றும் அதே வெகுளி சகுந்தலாவாகத் தான் இருந்தாள். அவளுக்கு வரும் பாராட்டு, புகழ், பணம் எதுவும் அவளை மாற்றவில்லை. அவளுக்கு என்று ஒரு உலகம். அதில் அவள் சந்தோசமாக இருந்தாள். அவளது உலகத்தில் அவனுக்கு மட்டும் தனி இடம் உண்டு. அது காதலினால் மட்டுமே என்பதை அவன் அறிவான்.
"நாளுக்கு நாள் நீ என்னை ஈர்க்கிற சகி. சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்லி... உன்னை அள்ளி அணைத்து முத்தாடணும் சகி." என்று காதலோடு சொன்னவன் அவளது முன்நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
மறுநாள் காலையில் சகுந்தலா எழுந்ததும் சக்தீஸ்வரன் அவளிடம் பாலை குடிக்கச் சொல்லியவன்... பிறகு அவளது விழிகளை மூடி அவளை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றான்.
"கேப்டன், எங்கே கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க, சொல்லுங்க..." அவள் ஆர்வமாய்க் கேட்டபடி துள்ளி குதிக்க...
"எங்கேன்னு சொன்னால் தான் வருவியா?" அவன் கேட்கவும்...
"அப்படி எல்லாம் இல்லை." அவள் இழுக்க...
"அப்போ சத்தம் போடாம வா." அவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
வீட்டின் பின்பக்கம் வந்ததும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் விழிகளைத் திறந்தான். அவள் மெல்ல விழிகளை மலர்த்தியவள், "என்ன கேப்டன்? கடலை பார்க்கவா கூட்டிட்டு வந்தீங்க?" எதிரே தெரிந்த கடலை பார்த்தபடி கேட்டாள்.
"கீழே குனிஞ்சு பாருடி என்னருமை பொண்டாட்டியே..." அவன் அவளது காதோரம் குனிந்து ரகசியம் பேச...
அவனது உதடுகள் அவளது காதோரம் குறுகுறுப்பை ஏற்படுத்தும் முன்... அவளது விழிகள் கீழே இருந்ததைக் கண்டு வியப்பில் விரிந்தது.
"ஐய், கலர் கோழி குஞ்சு..." அவள் கீழே குனிந்து ஆசையுடன் அந்தக் கோழி குஞ்சுகளைக் கரங்களில் தூக்கினாள்.
சக்தீஸ்வரன் மனைவியவளின் மகிழ்ச்சியைக் கண்டு புன்னகைத்தபடி அங்கிருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து விட்டான்.
அகலமான பிளாஷ்டிக் பாத்திரத்தின் உள்ளே முப்பது கோழி குஞ்சுகள் பல வண்ணங்களில் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. சகுந்தலா கணவனை மறந்தவளாய் அந்தக் கோழி குஞ்சுகளுடன் விளையாடினாள். அதைக் கரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் சிறிய அலகில் அவள் தனது இதழ்களால் முத்தமிட... அவனோ மனைவியை ஏக்கத்துடன் பார்த்திருந்தான். அந்தக் கோழி குஞ்சுகளாகத் தான் இருக்கக் கூடாதா என்று...
"கேப்டன், அன்னைக்கு ஏமாத்தியதுக்கு இப்போ பரிகாரம் பண்றீங்களா?" அவள் சிரித்தபடி அவனைப் பார்த்து கேட்க...
அவளையே பார்த்திருந்தவன், "ஆமா..." என்று கூற...
"அன்னைக்கு என்னைய ஏன் வெயிலில் காய விட்டீங்க கேப்டன்? கால் எல்லாம் சுட்டு, புண்ணாகி போச்சு." அவள் பாவம் போல் கூற...
சக்தீஸ்வரன் என்ன பதில் கூறுவது என்று தெரியாது விழித்தான்.
"நானும் அப்படி நினைச்சிருக்கக் கூடாது தான். நான் நினைச்சதும் தப்பு." அவள் போகிற போக்கில் சொல்ல...
"அப்படி என்ன தப்பா நினைச்சீங்க மேடம்?" அவன் கேலியாய் அவளைக் கண்டு வினவினான். அவளது செயல், சொல் அனைத்திற்கும் பொருள் அறிந்தவனுக்கு அன்றைய அவளது நினைவு என்னவென்று தெரியாது இருக்குமா? அவன் தெரிந்து கொண்டே கேட்டான்.
"அது..." என்று மேலே சொல்ல வந்தவள் பின்பு முகம் சிவக்க வாயை இறுக மூடி கொண்டாள். அவளது முகச் சிவப்பை கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
"சிரிக்காதீங்க கேப்டன்." அவள் வெட்கத்தை மறைத்துக் கொண்டு சொல்ல... அவனோ விடாது சிரிக்க...
"சிரிக்காதீங்கன்னு சொல்றேன்ல கேப்டன்." எழுந்து நின்றவள் இடையில் இரு கரங்களை வைத்துக் கொண்டு அவனைக் கோபமாய் முறைக்க... அவளது முறைப்பில் அவன் சிரிப்பு அடக்க முயல... அது முடியாது, அவன் மேலும் சிரிக்கத் தொடங்கினான்.
"அன்னைக்கு ஏன் என்னைய வெயிலில் கட்டி போட்டீங்க? அதுக்குப் பதிலை சொல்லிட்டு சிரிங்க." அவள் மீண்டும் கோபமாய்க் கத்த...
அடுத்த நொடி சக்தீஸ்வரனின் சிரிப்பு ஸ்விட்ச் போட்டார் போன்று நின்று போனது. அவனது பேயறைந்த முகத்தைக் கண்டு இப்போது சிரிப்பது அவளது முறையாயிற்று.
"பயந்துட்டீங்களா கேப்டன்? சும்மா விளையாடி பார்த்தேன்." என்றவள் கோழி குஞ்சுகளுடன் விளையாட வேண்டி கீழே குனிய போக...
சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினைப் பிடித்துத் தடுத்தான். அவள் கேள்வியாக அவனைப் பார்த்தவள், "என்ன கேப்டன்?" என்று கேட்க...
"அன்னைக்கு நீ மட்டும் தான் வெயிலில் காய்ஞ்சியா? நானும் தான்டி வெயிலில் காய்ஞ்சேன். நீயாவது ஒருநாள். நான் தினம் தினம்..." என்றவனது குரல் கமறியது.
சகுந்தலாவுக்குத் தண்டனை கொடுத்த சக்தீஸ்வரன் தானும் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சென்று அன்று நாள் முழுவதும் வெயிலில் நின்றான். அன்று மட்டுமா அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்... அவளுக்குக் கொடுத்த தண்டனையை அவன் வட்டியும், முதலுமாக அனுபவித்தது அவளுக்குத் தெரியுமா? அப்போது தான் தர்சனா அவனது கருத்த தோற்றத்தை கண்டு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது போன்று பேசினாள். அதே தோற்றத்தை தான் சகுந்தலா அவனது நலன் மீது அக்கறை கொண்டு விசாரித்தாள்.
சகுந்தலா கணவனைத் திகைப்பாய் பார்த்தாள். அன்றொரு நாள் அவள் அவனுக்காக வேலை நடக்கும் இடத்திற்குச் சாப்பாடு கொண்டு போன போது... அவனது தோற்றம் கண்டு தான் வருந்தியது எல்லாம் அவளது ஞாபகத்தில் வந்தது.
"அதனால தான் அன்னைக்கு நீங்க கருத்து போய் எப்படியோ இருந்தீங்களோ கேப்டன்?" அவள் கேட்டதும் அவன் ஆமென்பது போல் தலையசைக்க...
"ஏன் கேப்டன்?" அவள் புரியாது கேட்க...
சக்தீஸ்வரன் ஒரு நொடி தனது காதலை சொல்லிவிடலாமா? என்று யோசித்தான். ஆனால் உண்மையைச் சொல்லாது எப்படிக் காதலை சொல்வது? உண்மையை அவளிடம் கூற அவனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. இருக்கிற இந்த இனிமையான பொழுதுகளும் இல்லாது போய்விடுமோ? என்கிற பயம் அவனுக்கு... அவன் தனது வாயை இறுக மூடி கொண்டான். அவன் தனது காதலை சொல்ல முடியாது தவிப்பாய் மனைவியவளை பார்த்திருந்தான்.
“சொல்லாமத்தானே… இந்த மனசு தவிக்குது, இந்த மனசு தவிக்குது
கண்ணால தானே... இந்தக் காதல் வளருது, இந்தக் காதல் வளருது
உள்ளமோ நினைக்குது, உதடுதான் மறைக்குது”
தொடரும்...!!!
"எப்படி இருந்த என்னை இப்படி மாத்தி வச்சிருக்கியே சக்கு. எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்த என்னை... இப்படி மாவு ஆட்ட விட்டுட்டியே." அவன் சோகம் போன்று சொல்ல...
"அதெல்லாம் வெளியே. வீட்டுக்குள்ள எல்லாம் செய்யணும்." அவள் அலட்டலாகச் சொல்ல...
"நல்லா பண்ற..." என்று சிரித்தவன் அவளையும் அமர வைத்து, தானும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.
பரவாயில்லை, சகுந்தலா நன்றாகத் தான் சட்னி அரைத்து இருந்தாள். அவள் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் கற்று கொள்கிறாள். அதுவும் அவனுக்காக அவள் கற்று கொள்கிறாள். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளது இந்த மாற்றமே அவனுக்குப் போதுமானது.
இரவு படுக்கப் போகும் முன் சக்தீஸ்வரன் தனது மடிகணினியை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தான். அவன் யூட்யூப்பில் சகுந்தலாவுக்கு என்று தனியே ஆரம்பிக்கப்பட்ட சேனலை திறந்தான். அதில் இந்த ஒரு மாத காலமாக ஏகப்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. சகுந்தலா சிறு குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும் காணொளிகள், ஸ்டேண்டப் காமெடி காணொளிகள் என்று எல்லாம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
முதலில் சக்தீஸ்வரன் விளையாட்டாக ஒரு காணொளியை தான் பதிவேற்றம் செய்தான். அதற்கு வந்த வரவேற்பு அவனே எதிர்பாராதது. அதனால் அவன் அடுத்தடுத்து நிறையக் காணொளிகளைப் பதிவேற்ற தொடங்கினான். இப்போது சகுந்தலாவின் காணொளியை உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் பார்த்து பாராட்டினர். சகுந்தலா தமிழில் பேசுவதை, அவன் தான் மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் கீழே சப்டைட்டிலாகப் போட்டு விடுவான்.
இன்றும் அதே போன்று காணொளிக்கு வந்த கருத்துகளைச் சக்தீஸ்வரன் மனைவிக்குப் படித்துக் காட்டி கொண்டிருக்க... அவளோ அதைக் கேட்டுக் கொண்டே உறங்கி போனாள்.
"உன்னோட சேனலுக்கு இந்த மாச வருமானம் எவ்வளவு தெரியுமா?" என்றவன் அவளது மாத வருமானத்தைச் சொல்லி, "அதுவும் டாலரில் வருது." என்று கூற... அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராது போனதும், அவன் அவளைத் திரும்பி பார்த்தான். அவள் அவனது தோளில் சாய்ந்து உறங்கி போயிருந்தாள்.
மனைவியைக் கண்டு தனக்குள் சிரித்தவன் அவளை நேராகப் படுக்க வைத்து போர்வையால் அவளை மூடினான். என்ன தான் அவன் அவளின் திறமைகளை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்தாலும்... அவள் இன்றும் அதே வெகுளி சகுந்தலாவாகத் தான் இருந்தாள். அவளுக்கு வரும் பாராட்டு, புகழ், பணம் எதுவும் அவளை மாற்றவில்லை. அவளுக்கு என்று ஒரு உலகம். அதில் அவள் சந்தோசமாக இருந்தாள். அவளது உலகத்தில் அவனுக்கு மட்டும் தனி இடம் உண்டு. அது காதலினால் மட்டுமே என்பதை அவன் அறிவான்.
"நாளுக்கு நாள் நீ என்னை ஈர்க்கிற சகி. சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்லி... உன்னை அள்ளி அணைத்து முத்தாடணும் சகி." என்று காதலோடு சொன்னவன் அவளது முன்நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
மறுநாள் காலையில் சகுந்தலா எழுந்ததும் சக்தீஸ்வரன் அவளிடம் பாலை குடிக்கச் சொல்லியவன்... பிறகு அவளது விழிகளை மூடி அவளை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்றான்.
"கேப்டன், எங்கே கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க, சொல்லுங்க..." அவள் ஆர்வமாய்க் கேட்டபடி துள்ளி குதிக்க...
"எங்கேன்னு சொன்னால் தான் வருவியா?" அவன் கேட்கவும்...
"அப்படி எல்லாம் இல்லை." அவள் இழுக்க...
"அப்போ சத்தம் போடாம வா." அவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
வீட்டின் பின்பக்கம் வந்ததும் சக்தீஸ்வரன் சகுந்தலாவின் விழிகளைத் திறந்தான். அவள் மெல்ல விழிகளை மலர்த்தியவள், "என்ன கேப்டன்? கடலை பார்க்கவா கூட்டிட்டு வந்தீங்க?" எதிரே தெரிந்த கடலை பார்த்தபடி கேட்டாள்.
"கீழே குனிஞ்சு பாருடி என்னருமை பொண்டாட்டியே..." அவன் அவளது காதோரம் குனிந்து ரகசியம் பேச...
அவனது உதடுகள் அவளது காதோரம் குறுகுறுப்பை ஏற்படுத்தும் முன்... அவளது விழிகள் கீழே இருந்ததைக் கண்டு வியப்பில் விரிந்தது.
"ஐய், கலர் கோழி குஞ்சு..." அவள் கீழே குனிந்து ஆசையுடன் அந்தக் கோழி குஞ்சுகளைக் கரங்களில் தூக்கினாள்.
சக்தீஸ்வரன் மனைவியவளின் மகிழ்ச்சியைக் கண்டு புன்னகைத்தபடி அங்கிருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து விட்டான்.
அகலமான பிளாஷ்டிக் பாத்திரத்தின் உள்ளே முப்பது கோழி குஞ்சுகள் பல வண்ணங்களில் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. சகுந்தலா கணவனை மறந்தவளாய் அந்தக் கோழி குஞ்சுகளுடன் விளையாடினாள். அதைக் கரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் சிறிய அலகில் அவள் தனது இதழ்களால் முத்தமிட... அவனோ மனைவியை ஏக்கத்துடன் பார்த்திருந்தான். அந்தக் கோழி குஞ்சுகளாகத் தான் இருக்கக் கூடாதா என்று...
"கேப்டன், அன்னைக்கு ஏமாத்தியதுக்கு இப்போ பரிகாரம் பண்றீங்களா?" அவள் சிரித்தபடி அவனைப் பார்த்து கேட்க...
அவளையே பார்த்திருந்தவன், "ஆமா..." என்று கூற...
"அன்னைக்கு என்னைய ஏன் வெயிலில் காய விட்டீங்க கேப்டன்? கால் எல்லாம் சுட்டு, புண்ணாகி போச்சு." அவள் பாவம் போல் கூற...
சக்தீஸ்வரன் என்ன பதில் கூறுவது என்று தெரியாது விழித்தான்.
"நானும் அப்படி நினைச்சிருக்கக் கூடாது தான். நான் நினைச்சதும் தப்பு." அவள் போகிற போக்கில் சொல்ல...
"அப்படி என்ன தப்பா நினைச்சீங்க மேடம்?" அவன் கேலியாய் அவளைக் கண்டு வினவினான். அவளது செயல், சொல் அனைத்திற்கும் பொருள் அறிந்தவனுக்கு அன்றைய அவளது நினைவு என்னவென்று தெரியாது இருக்குமா? அவன் தெரிந்து கொண்டே கேட்டான்.
"அது..." என்று மேலே சொல்ல வந்தவள் பின்பு முகம் சிவக்க வாயை இறுக மூடி கொண்டாள். அவளது முகச் சிவப்பை கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
"சிரிக்காதீங்க கேப்டன்." அவள் வெட்கத்தை மறைத்துக் கொண்டு சொல்ல... அவனோ விடாது சிரிக்க...
"சிரிக்காதீங்கன்னு சொல்றேன்ல கேப்டன்." எழுந்து நின்றவள் இடையில் இரு கரங்களை வைத்துக் கொண்டு அவனைக் கோபமாய் முறைக்க... அவளது முறைப்பில் அவன் சிரிப்பு அடக்க முயல... அது முடியாது, அவன் மேலும் சிரிக்கத் தொடங்கினான்.
"அன்னைக்கு ஏன் என்னைய வெயிலில் கட்டி போட்டீங்க? அதுக்குப் பதிலை சொல்லிட்டு சிரிங்க." அவள் மீண்டும் கோபமாய்க் கத்த...
அடுத்த நொடி சக்தீஸ்வரனின் சிரிப்பு ஸ்விட்ச் போட்டார் போன்று நின்று போனது. அவனது பேயறைந்த முகத்தைக் கண்டு இப்போது சிரிப்பது அவளது முறையாயிற்று.
"பயந்துட்டீங்களா கேப்டன்? சும்மா விளையாடி பார்த்தேன்." என்றவள் கோழி குஞ்சுகளுடன் விளையாட வேண்டி கீழே குனிய போக...
சக்தீஸ்வரன் சகுந்தலாவின் கரத்தினைப் பிடித்துத் தடுத்தான். அவள் கேள்வியாக அவனைப் பார்த்தவள், "என்ன கேப்டன்?" என்று கேட்க...
"அன்னைக்கு நீ மட்டும் தான் வெயிலில் காய்ஞ்சியா? நானும் தான்டி வெயிலில் காய்ஞ்சேன். நீயாவது ஒருநாள். நான் தினம் தினம்..." என்றவனது குரல் கமறியது.
சகுந்தலாவுக்குத் தண்டனை கொடுத்த சக்தீஸ்வரன் தானும் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சென்று அன்று நாள் முழுவதும் வெயிலில் நின்றான். அன்று மட்டுமா அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்... அவளுக்குக் கொடுத்த தண்டனையை அவன் வட்டியும், முதலுமாக அனுபவித்தது அவளுக்குத் தெரியுமா? அப்போது தான் தர்சனா அவனது கருத்த தோற்றத்தை கண்டு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது போன்று பேசினாள். அதே தோற்றத்தை தான் சகுந்தலா அவனது நலன் மீது அக்கறை கொண்டு விசாரித்தாள்.
சகுந்தலா கணவனைத் திகைப்பாய் பார்த்தாள். அன்றொரு நாள் அவள் அவனுக்காக வேலை நடக்கும் இடத்திற்குச் சாப்பாடு கொண்டு போன போது... அவனது தோற்றம் கண்டு தான் வருந்தியது எல்லாம் அவளது ஞாபகத்தில் வந்தது.
"அதனால தான் அன்னைக்கு நீங்க கருத்து போய் எப்படியோ இருந்தீங்களோ கேப்டன்?" அவள் கேட்டதும் அவன் ஆமென்பது போல் தலையசைக்க...
"ஏன் கேப்டன்?" அவள் புரியாது கேட்க...
சக்தீஸ்வரன் ஒரு நொடி தனது காதலை சொல்லிவிடலாமா? என்று யோசித்தான். ஆனால் உண்மையைச் சொல்லாது எப்படிக் காதலை சொல்வது? உண்மையை அவளிடம் கூற அவனுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது. இருக்கிற இந்த இனிமையான பொழுதுகளும் இல்லாது போய்விடுமோ? என்கிற பயம் அவனுக்கு... அவன் தனது வாயை இறுக மூடி கொண்டான். அவன் தனது காதலை சொல்ல முடியாது தவிப்பாய் மனைவியவளை பார்த்திருந்தான்.
“சொல்லாமத்தானே… இந்த மனசு தவிக்குது, இந்த மனசு தவிக்குது
கண்ணால தானே... இந்தக் காதல் வளருது, இந்தக் காதல் வளருது
உள்ளமோ நினைக்குது, உதடுதான் மறைக்குது”
தொடரும்...!!!