All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் 'கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!' - மூன்றாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 44



மறுநாளே உதயரேகா மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி கண்டுபிடித்து விட்டாள். அன்றே பெண் பார்க்க செல்ல வேண்டும் என்று அடம்பிடித்த உதயரேகா அதை மகனிடம் கூற... சக்தீஸ்வரனோ 'உங்க விருப்பம்' என்று விட்டேற்றியாகக் கூறிவிட்டு சென்று விட்டான். இதோ குடும்பமே சக்தீஸ்வரனின் பெண் பார்க்கும் படலத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.



இதில் இளையவர்களுக்குச் சிறிதும் உடன்பாடில்லை. அவர்கள் சகுந்தலாவிற்கு அழைத்து விவரங்களைச் சொல்ல... அவளோ இந்தச் செய்தியை கேட்டு வருத்தபடாது மகிழ்ந்தாள். அவளே ஒன்றும் கூறாத போது... மற்றவர்களால் என்ன கூறிவிட முடியும்?



இதற்கு இடையில் உதயரேகா சகுந்தலாவிற்கு அழைத்துப் பெண் பார்க்க உடன் வருமாறு கூறினாள்.



"அவங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க அத்தைம்மா. நான் நேரே அங்கே வந்து விடுகிறேன்." என்றவளை கண்டு,



"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இங்கே தாம்பாள தட்டு தூக்க ஆள் குறையுது. நீ நேரா இங்கே வந்துரு." என்று கண்டிப்புடன் கூறிவிட்டு உதயரேகா அழைப்பை துண்டித்து விட்டாள்.



'என் புருசனுக்குப் பெண் பார்க்க போறதுக்குத் தாம்பாள தட்டு தூக்க நான் போகணுமா?' சகுந்தலாவுக்குச் சற்றுக் கோபம் எட்டிப்பார்த்தது.



'புருசனா? எந்த உரிமையில் நீ கேப்டனை புருசன்னு சொல்லுற?' அவளது மனசாட்சி அவளைக் கேலி செய்தது. அவளையும் அறியாது அவளது கரம் அவளது வெறும் கழுத்தினை வருடியது.



அதற்கு மேல் அவள் எதையும் யோசிக்காது கிளம்பி விட்டாள்.



மகனுக்குப் பெண் பார்க்கும் படலத்திற்காகத் தடபுடலாக எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க... உதயரேகாவோ அறையில் அமர்ந்து சாவகாசமாக ஆப்பிளை வெட்டி கொண்டிருந்தாள்.



"எதுக்கு இந்த நாடகம்?" சர்வேஸ்வரன் மனைவியிடம் கேட்டுக் கொண்டே அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.



"என்ன நாடகம் பிரின்ஸ்?" உதயரேகா ஒன்றும் தெரியாத அப்பாவியாக விழித்தாள்.



"நெஞ்சுவலி, அப்புறம் இந்தப் பெண் பார்க்கும் படலம்? இதுக்கு எல்லாம் என்ன காரணம்?" அவன் மனைவியை உறுத்து விழித்தான்.



"ஐயோ, நெஞ்சுவலி உண்மை தான்ங்க." உதயரேகா வேகமாக இடைமறித்துக் கூற...



"அப்போ இந்தப் பெண் பார்க்கும் படலம்? வெறுமனே பெண் பார்க்க போறதுக்கு எதுக்கு இத்தனை தடபுடல்?" சர்வேஸ்வரன் மனைவியை விடுவதாக இல்லை.



"ஒருவேளை சக்திக்குப் பொண்ணைப் பிடிச்சு போச்சுன்னா? காலத் தாமதம் பண்ணாம அங்கேயே நிச்சயம் பண்ணிட்டு வந்திரலாம்ன்னு தான்." உதயரேகா பல்லை காட்டினாள்.



"இது உண்மை மாதிரி தெரியலையே." சர்வேஸ்வரன் ஒருமாதிரியாக மனைவியைப் பார்த்தான்.



"ஹி ஹி கண்டுபிடிச்சிட்டீங்களா? சும்மா கண் துடைப்புக்குங்க. அப்படியாவது மனசு மாறி சக்தி, சக்கு ஒண்ணா சேர்றாங்களான்னு ஒரு நப்பாசை தான்." என்ற உதயரேகாவின் முகத்தில் அதிக ஆர்வம் இருந்தது.



"நீ ஹாஸ்பிட்டலில் வச்சு சக்குவை பார்த்து ஓவர் ரியாக்ட் பண்ணும் போதே எனக்கு லேசா டவுட் வந்துச்சு." சர்வேஸ்வரனுக்கு மனைவியை நினைத்துச் சிரிப்பு வந்தது.



"ஓ, சொதப்பிட்டேனா?" உதயரேகா அப்பாவியாய் விழித்தாள்.



"லைட்டா... சக்தி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சு இருப்பான். ஆனா சக்கு தான் பாவம். நீ திட்டியதும் அவளோட முகம் ஒரு மாதிரியா மாறி போச்சு." சர்வேஸ்வரன் மருமகளுக்காக வருத்தப்பட்டான்.



"மாறிட்டும், மாறட்டும்... அவள் பேசாம மும்பையில் போய் உட்கார்ந்துக்கிட்டா. இந்தச் சக்தி என்னடான்னா அவள் என்னமோ உலகத்தோடு மறு மூலையில் இருக்கிற மாதிரி... அவள் இருக்கும் திசை பக்கம் எட்டி கூடப் பார்க்க மாட்டேங்கிறான். பின்னே எப்படி ரெண்டு பேரும் ஒண்ணு சேர முடியும்? இப்படி ஏதாவது நாடகம் போட்டால் தான் நல்லது நடக்கும்."



"நீ சொல்றதும் சரி தான். ஆனா இப்பவும் சக்தி சக்குவை பார்த்து பெருசா ரியாக்ட் பண்ணலை. நீ செய்ற காரியம் ஒருவேளை தோல்வியில் கூட முடியலாம். எதுக்கும் தயாரா இரு."



"என் மகனை பார்த்து எல்லோரும் ஆம்பிளை இல்லைன்னு சொல்றதை கேட்ட பிறகும்... இந்த உயிர் உடம்புல ஒட்டிட்டு தான் இருக்கு. எனக்கு ஒண்ணும் ஆகாது." என்று விழிகளைத் துடைத்துக் கொண்ட உதயரேகா, "சக்தி ஆம்பிளை இல்லைன்னு தான் சக்கு ஓடி போனாள்ன்னு எல்லோரும் நாக்குல நரம்பு இல்லாம பேசுறாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படியா தெரியுது? அவங்க ரெண்டு பேரும் உடம்பு சுகத்துக்கு அலையறவங்க கிடையாது. அவங்க ரெண்டு பேரும் மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலகி இருக்காங்க. இது தெரியாம எல்லோரும் வாய்க்கு வந்ததைப் பேசுறாங்க. ஒரு அம்மாவா எனக்கு இது ரொம்பக் கஷ்டமா இருக்கு." என்று வேதனை கொள்ள...



"ம், உன்னோட மனசு புரியுது உதி. நமக்கு நம்ம பிள்ளைங்களைப் பத்தி நல்லா தெரியும். கவலையை விடு. ஆனா எனக்கு விஜயா பேசியது தான் மனசு ஆறலை." சர்வேஸ்வரன் ஆற்றாமையுடன் கூற...



"ஐய்யே, பிரின்சுக்கு இதில் வருத்தமோ? விஜயா என் கூடக் கூட்டு... ரெண்டு பேரும் சேர்ந்து தான் நடிச்சோம். விஜயா அவளோட மகனுக்காக நடிச்சா. நான் என் மகனுக்காக நடிச்சேன்." உதயரேகா கண்சிமிட்டி சிரித்தாள்.



"சம்பந்தி ரெண்டு பேரும் நல்லா கூட்டு சேர்ந்து இருக்கீங்க." சர்வேஸ்வரன் நிம்மதியுடன் வாய்விட்டுச் சிரித்தான். கணவனது புன்னகை மனைவிக்கும் தொற்றிக் கொண்டது.



"ஆனாலும் பேபி... நீ உன்னை ரொம்ப வருத்திக்காதே. சக்தி சின்னப் பையன் இல்லை. அவன் வாழ்க்கையை அவன் நல்லா அமைச்சுக்குவான். எனக்கு நம்பிக்கை இருக்கு."



"எனக்கு என்ன... நான் நல்லா தான் இருக்கேன்." உதயரேகா கணவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



"அப்போ எதுக்கு நெஞ்சுவலி வந்தது?" சர்வேஸ்வரனின் குரல் கமறியது.



"அது என்னோட பிரெண்ட் பேசியது ரொம்ப வேதனையா இருந்தது. அவள் பேசிய வார்த்தைகள் அப்படி." உதயரேகாவுக்கு இன்னமும் அந்த வேதனை இருக்கத்தான் செய்தது.



"இனி அப்படிப்பட்ட பிரெண்ட்ஸ் உனக்குத் தேவையில்லை. முதல்ல அவங்களை எல்லாம் கட் பண்ணு." சர்வேஸ்வரன் கோபத்துடன் சொல்ல...



"பிரின்ஸ் சொன்னால் இந்த உதி கேட்பாள்." உதயரேகா பளிச்சென்ற புன்னகையுடன் கூற... அதைக் கண்டு சர்வேஸ்வரன் நிம்மதி கொண்டான்.



சகுந்தலா வாடகை காரிலிருந்து இறங்கினாள். பல நாட்களுக்குப் பிறகு அவள் இங்கு வருகிறாள். அவளுள் அத்தனை பரவசம். தாயின் மடி சேர்ந்த நிம்மதி. அவள் எங்கே பிறந்தாளோ? அது அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் இந்த வீடு தான் அவளது பிறந்தவீடு. அவள் எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லி கொள்வாள், இது தான் அவளது வீடு என்று...



ஒரு சிலர் அவளை இந்த வீட்டுப் பணிப்பெண் என்று கேலி செய்து அவளது மனதினை புண்படுத்தி இருக்கின்றனர். அப்போது எல்லாம் அவளது முகம் வாடி போகும். அந்த நேரம் சர்வேஸ்வரன் 'இது உன் வீடு தான் சக்கு' என்று கூறி அவளை உற்சாகப்படுத்துவான். அந்த மாமனின் அன்பை அவளால் மறக்க முடியுமா? சொந்த மகன் பக்கம் நிற்காது எப்போதும் அவள் பக்கம் துணை நிற்கும் மாமனின் அன்புக்கு ஈடு இணை உண்டோ! மாமனின் அன்பில் அவளது விழிகள் கசிந்தது.



'சக்கு, நீ எதுக்கு வந்திருக்க? வந்த வேலையை மட்டும் பார். தேவையில்லாத சென்ட்டிமென்ட்டில் சிக்கி கொள்ளாதே.' மனசாட்சி அவளைக் கடிந்து கொண்டது.



சகுந்தலா தன்னைத் தேற்றிக் கொண்டு மகிழ்ச்சியை முகத்தில் தேக்கி, புன்னகையை இதழ்களில் தாங்கி கம்பீரமாக அந்த வீட்டின் வாயிலினுள் நுழைந்தாள். அவள் வாயில் பபிள்கம்மை மென்று கொண்டிருக்கும் விதமே அவளுக்குத் தனித் திமிரை கொடுத்தது. கெத்தாக உள்ளே நுழைந்தவள் அங்கு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சக்தீஸ்வரனை கண்டதும் அவளது கால்கள் தடுமாறத் தொடங்கியது. கால்கள் மட்டுமா? அவளது மனமும் சேர்ந்தல்லவா தடுமாறியது.



'சக்கு கன்ட்ரோல், கன்ட்ரோல்...' அவள் தனக்குத் தானே உறுதியாகச் சொல்லி கொண்டு அவனை நோக்கி, இல்லை இல்லை வீட்டின் வாசலை நோக்கி சென்றாள்.



சக்தீஸ்வரன் அலைப்பேசியில் கவனத்தை வைத்து இருந்தாலும்... அவனது விழிகள் சகுந்தலாவை கண்டு கொண்டது. பின்பு யோசனையாய்ச் சுருங்கியது. அவள் அருகே வந்ததும் சக்தீஸ்வரன் அலைப்பேசியை அணைத்து விட்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.



"இன்னைக்கு உங்களுக்குப் பெண் பார்க்க போறங்களாம்." என்ன முயன்றும் அவளது வார்த்தைகள் அவனைக் கண்டால் தந்தி அடிக்கத்தான் செய்தது.



அதற்கும் அவன் எந்தவித எதிர்வினையும் ஆற்றாது விழிகளைச் சுருக்கி கொண்டு அவளைப் பார்த்திருந்தான்.



'வாயை திறந்து பேசினால் தான் என்னவாம்?' அவள் மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.



"அத்தைம்மா என்னையும் வர சொன்னாங்க." அவள் தான் வந்த விசயத்தைச் சொல்ல...



'ஓ' என்பது போன்ற பாவனை அவனது முகத்தில்...



"இப்போ நான் போகலாமா?" அவள் கேலியாய் கேட்க...



"போக விடாம நான் என்ன உன் கையைவா பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கேன்?" அவனும் பதிலுக்கு அவளை நக்கலடித்தபடி சென்று விட்டான்.



கணவனது வார்த்தைகளில் அவள் தான் ஆவென்று வாயை பிளந்தாள். அப்போது அங்கு வந்த ஆதித்யா, ஆதிரை இருவரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.



"சாரி சக்கு, நேத்துக் கவலையில் உன்னைப் பத்தி யோசிக்காம கிளம்பி வந்துட்டோம்." என்று மன்னிப்பு வேண்ட...



"இதுல என்னயிருக்கு? ஹோட்டல் கார் வந்துச்சு. நான் அதில் போயிட்டேன்." அவள் சொன்னதும் தான் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.



"நீ இங்கேயே வந்திருக்கலாம்." இருவரும் குறைப்பட்டுக் கொள்ள...



"அதான் இப்போ வந்துட்டேனே." அவள் சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.



"உண்மையில் நீ அண்ணாவை விட்டு பிரிய போறியா?" ஆதிரைக்குச் சற்று வருத்தம் தான்.



"கோர்ட்டில் கேஸ் போயிக்கிட்டு இருக்கு. நாலு மாசத்தில் விவாகரத்து கிடைச்சிரும். இப்போ போய் இது என்ன பேச்சு ஆரி?" சகுந்தலா கண்டிப்புடன் கேட்டாள்.




"ஆரி சும்மா இரு." ஆதித்யா உடன்பிறந்தவளை அதட்டினான்.
 

Sasimukesh

Administrator
சகுந்தலா வீட்டினுள் நுழைந்தும் எல்லோரும் எப்போதும் போல் அவளை வரவேற்று பேசினர். அதனால் அவளுக்கு வேற்று இடம் போன்று வித்தியாசமாகத் தோன்றவில்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம், அவளது அன்பு அத்தைம்மா உதயரேகா மட்டும் அவளை முறைத்துக் கொண்டு இருந்தாள். அது தான் அவளுக்குச் சற்று வருத்தத்தைக் கொடுத்தது.



கணபதி, விஜயாவும் தவிர மற்ற எல்லோரும் பெண் பார்க்க கிளம்பினர்.



"ம்மா, இவள் இப்படியேவா வர போகிறாள்?" சக்தீஸ்வரன் மனைவியைச் சுட்டிக்காட்டி கேட்டான்.



'இவளாம் இவள்... எனக்குப் பெயர் இல்லையா? இல்லை என்னோட பெயர் மறந்து போச்சா?' சகுந்தலா மனதிற்குள் முணுமுணுவென முணுமுணுத்து கொண்டாள்.



"ஆமான்டா சக்தி... நாளை பின்னே உன்னோட முதல் கல்யாணத்தை வச்சுப் பிரச்சினை வந்திர கூடாதுன்னு தான்... முன் எச்சரிக்கையா கூடவே இவளை கூட்டிட்டு போறேன்." உதயரேகா மகனுக்கு நீளமாக விளக்கம் கொடுக்க...



"நான் என்ன எல்கேஜி குழந்தையா? எனக்கு இவள் ரெக்கமெண்ட்டேசன் கொடுப்பதற்கு?" சக்தீஸ்வரன் கோபமாய்ச் சிடுசிடுத்தான்.



"என்ன செய்ய சக்தி... இப்போ உன் நிலைமை அப்படித்தான்டா இருக்கு." உதயரேகா அங்கலாய்க்க...



சர்வேஸ்வரன் சிரிப்பை அடக்கி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியின் திட்டம் பலித்துவிடும் என்றே அவனுக்குத் தோன்றியது. அதற்குச் சாட்சி மகனது இந்தக் கோபம்.



"இப்பவும் இவள் என் மனைவி தானே?" சக்தீஸ்வரன் சகுந்தலாவை பார்த்தபடி அன்னையிடம் கேட்டான்.



"இதில் உனக்கு என்ன சந்தேகம்ப்பா?"



"சமுதாயத்தில் எனக்குன்னு ஒரு மரியாதை, மதிப்பு இருக்கு. இவள் இப்படி டிரெஸ் போட்டுட்டு வந்து என் மரியாதையைக் கெடுக்கக் கூடாது. அவளை ஒழுங்கா புடவையைக் கட்டிட்டு வர சொல்லுங்க." என்று கறார் குரலில் கூறியவன், "லம்பாடி மாதிரி இது என்ன டிரெஸ்?" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.



கணவன் முணுமுணுத்தது சகுந்தலா காதுகளில் தெளிவாக விழுந்தது. அவள் குனிந்து தன்னைப் பார்த்து கொண்டாள். பால் வண்ண நிறத்தில், சிவப்பு நிறத்தில் பெரிய பூக்கள் போட்ட ஷிபான் கவுன் தான் அவள் அணிந்திருந்தது. அதற்குத் தகுந்தார் போன்று அவள் முத்து அணிகலன்களை அணிந்து இருந்தாள். பார்ப்பதற்கு எளிமையாகவும், அதேசமயம் கம்பீர அழகினையும் ஒருங்கே கொடுத்தது அந்த உடை. அப்படிப்பட்ட உடையை அவன் குறை சொல்வானா? அவள் கணவனை உறுத்து விழித்தாள்.



"அதான் சக்தி சொல்றானே... போய்ப் புடவையை மாத்திட்டு வா." உதயரேகா மருமகளிடம் கட்டளையிட...



"என் கிட்ட ஏது புடவை?" சகுந்தலா முணுமுணுக்க...



"அதான் ஏகப்பட்டது வாங்கிப் போட்டது என் ரூமில் இருக்கே." சக்தீஸ்வரன் அவளது முகம் பார்க்காது சொன்னான்.



"ம்..." என்று அவளால் முனங்க மட்டுமே முடிந்தது.



"ம்மா, அவளைக் கூட்டிட்டு போங்க." சக்தீஸ்வரன் அன்னையிடம் சொல்ல...



"என்னால் முடியாது. நீயே கூட்டிட்டு போப்பா." உதயரேகா சட்டமாய் அமர்ந்து கொண்டாள்.



சக்தீஸ்வரன் வேறுவழியில்லாது மனைவியை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்குச் சென்றான். வெகுநாட்கள் கழித்துச் சகுந்தலா அறைக்குள் நுழைகின்றாள். இந்தக் கதைகளில் சொல்வது போன்று கணவன் தனது புகைப்படத்தைச் சுவர் எங்கும் மாட்டி வைத்திருப்பானோ! அவள் மனதில் பொங்கிய ஆர்வத்துடன் அறைக்குள் அடி எடுத்து வைத்தாள். அடுத்த நொடி அவளது ஆர்வம் அனைத்தும் தண்ணீர் தெளித்த பொங்கிய பால் போன்று புஸ்ஸென்று அடங்கிப் போனது. அறை எப்போதும் போல் சுத்தமாக இருந்தது. எங்கும் இவளது புகைப்படங்கள் இல்லை. இவ்வளவு ஏன் இவர்களது திருமணப் புகைப்படங்கள் கூட இல்லை. அனைத்தையும் தூக்கி போட்டு விட்டான் போலும். அவளுள் ஏதோ ஒரு கசப்பு உணர்வு.



சக்தீஸ்வரன் அலமாரியை திறந்து ஒரு புடவையை எடுத்து உருவியவன் அவளைக் காணாது படுக்கையில் தூக்கி போட்டான்.



"கட்டிக்கோ..." என்றவன் அடுத்த நொடி விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்.



இதே அறையில் தான் சக்தீஸ்வரன் அவளுக்குப் புடவை கட்டி விட்டான். கண்ணும் கருத்துமாய்த் தனது காரியத்தில் கண்ணாய் அவன் இருந்த விதம், அவனது கண்ணியம் எல்லாமே இப்போது அவளது ஞாபகத்தில் வந்து அவளை இம்சித்தது. அடுத்த நொடி அவள் தனது யோசனைகளை ஒதுக்கி வைத்து விட்டுக் கையில் இருந்த புடவையைக் கட்டலானாள்.



புடவையைக் கட்டி விட்டுக் கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவளுக்குத் திருப்தியாக இருந்தது. அப்போது தான் அவள் அதைக் கவனித்தாள். அவள் அணிந்திருந்த அணிகலன்களுக்குப் பொருத்தமாக அந்தப் புடவை இருந்தது. அவளது இதழ்களில் புன்னகை தோன்றியது.



சகுந்தலா தயாராகிக் கீழே வந்ததும் அவளது விழிகள் கணவனைத் தேடியது. அவனோ அவளைக் கண்டு கொள்ளாது முதல் ஆளாய் காரில் போய் அமர்ந்து கொண்டான். சகுந்தலா நாராயணன், பத்மினியுடன் சென்று அமர்ந்து கொண்டாள். மூன்று கார்களில் அனைவரும் பெண் பார்க்க சென்றனர்.



பெண் ராதா, சக்தீஸ்வரனின் தோழன் சாய்ராமின் தங்கை தான். அவனும், சாய்ராமும் இணைந்து தான் விளம்பர நிறுவனம் நடத்தி வருகின்றனர். பெண் வீட்டின் வாயிலில் சாய்ராமை கண்டதும் சகுந்தலா ஆச்சிரியத்தில் விழி விரிய புன்னகைத்தாள். அவனும் பதிலுக்குப் புன்னகைத்தபடி,



"வாம்மா தங்கச்சி..." என்று உற்சாகமாய் அவளை வரவேற்றான்.



எல்லாம் நல்லபடியாகத் தான் சென்று கொண்டிருந்தது, ராதா வரும் வரை... ராதா சர்வ அலங்காரத்துடன் தேவதை போன்று அங்கு வந்து நின்றாள். அவளைக் கண்டதும் சகுந்தலா விழிகளில் திருப்தி தோன்றியது.



'கேப்டனுக்குப் பொருத்தமானவங்க தான்.' அவள் சந்தோசப்பட்டுக் கொண்டாள். அதையும் மீறி அவளது இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி எழத்தான் செய்தது. அவள் அந்த வலியை புறக்கணித்தாள்.



சக்தீஸ்வரனோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து இருந்தவனின் விழிகள் அலைப்பேசி மீதே பதிந்து இருந்தது.



"இதுவும் நாடகமா?" சர்வேஸ்வரன் மனைவி காதினை கடிக்க...



"இல்லை பிரின்ஸ்... உண்மை தான். அப்பவாவது இவங்க ரெண்டு பேரும் அவங்க மனசை உணர்றாங்களான்னு பார்ப்போம்." உதயரேகா கணவனது காதில் கிசுகிசுத்தாள்.



"அதுக்குன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாட வேண்டாம்." சர்வேஸ்வரன் ராதாவை பரிதாபமாகப் பார்த்தான்.



"பொண்ணை நிச்சயம் பண்ண வரலை. ஜஸ்ட் பார்க்க தானே வந்திருக்கோம். சோ நோ ப்ராப்ளம்." உதயரேகா கணவனைத் தேற்றி விட்டு நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.



"நான் கொஞ்சம் பேசலாமா?" ராதா பேச்சை ஆரம்பித்து வைத்தாள்.



"என்ன பேசணுமோ பேசும்மா?" உதயரேகா அனுமதி கொடுத்தாள்.



"நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. எனக்கு உங்க மகனை கட்டிக்க விருப்பம் இல்லை. எங்கப்பா, அம்மா, அண்ணா கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். அவங்க என் பேச்சை கேட்க மாட்டேங்கிறாங்க." ராதா ஆதங்கத்துடன் சொல்ல...



சகுந்தலா சக்தீஸ்வரனை பார்த்தாள். அப்போதும் அவன் அலைப்பேசி மீதிருந்த விழிகளை எடுக்கவில்லை. அவளுக்கு எரிச்சலாக வந்தது.



"எங்க வீட்டு பையனுக்கு என்ன குறை?" உதயரேகா புரியாது கேட்டாள்.



"இவள் தானே அவரோட முதல் மனைவி. இவள் உங்க வீட்டு வேலைக்காரி தானே. வேலைக்காரியே உங்க மகனை வேண்டாம்ன்னு விட்டு விட்டு போய்விட்டாள். அப்படின்னா உங்க மகன் கிட்ட என்ன குறையோ? ஒருவேளை உங்க மகனால மனைவியைத் திருப்தி படுத்த முடியாதோ? இல்லைன்னா, அவரால் அப்பாவாக முடியாதோ?" ராதா கிண்டலாய் சக்தீஸ்வரனை பார்த்தாள்.



"ஐயோ..." சகுந்தலா அதிர்வுடன் எழுந்து நின்றுவிட்டாள். ஏனெனில் இந்த வார்த்தைகளை அவள் இன்று தான் முதல் முறையாகக் கேட்கின்றாள். சக்தீஸ்வரனை சுற்றி வரும் இந்தச் சர்ச்சை இன்னமும் அவளது காதினை வந்தடைந்து இருக்கவில்லை. அதனால் அவளுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.



எல்லோரும் திகைப்புடன் ராதாவை பார்த்தனர். ராதாவின் பேச்சை கேட்டு சக்தீஸ்வரன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. அவன் அலைப்பேசியை அணைத்துச் சட்டைப்பையில் போட்டு விட்டு நாற்காலியில் இருந்து எழுந்தான். இப்போது எல்லோரும் சக்தீஸ்வரனை புரியாது பார்த்தனர்.



சக்தீஸ்வரனோ யாரையும் கண்டு கொள்ளாது ராதாவை மட்டும் பார்த்தபடி முன்னால் நடந்தவன், "பெரியவங்க எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க." என்று சொல்ல...



பெரியவர்கள் என்னவோ ஏதோவென்று குழப்பத்துடன் விழிகளை மூடி கொள்ள... சின்னவர்கள் ஒன்றும் புரியாது விழித்தனர். சகுந்தலாவை பற்றிச் சொல்லவும் வேண்டாம்... அவள் திருதிருவென விழித்தபடி சக்தீஸ்வரனையும், ராதாவையும் மாறி மாறி பார்த்தாள்.



சகுந்தலா பக்கம் வந்ததும் சக்தீஸ்வரனின் நடை நின்றது. இவ்வளவு நேரம் ராதாவை பார்த்தபடி வந்தவனின் பார்வை இப்போது மனைவி மீது பதிந்தது. அதுவும் அழுத்தமாக... அடுத்த நொடி சக்தீஸ்வரன் தனது இடது கரத்தினைக் கொண்டு மனைவியின் இடையினை வளைத்துப் பிடித்துத் தன்னருகே கொண்டு வந்தவன்... தனது வலக்கரத்தால் அவளது முகவாயை நிமிர்த்தி அவளைத் தன்னைப் பார்க்க செய்தான். சகுந்தலா திகைப்புடன் கணவனைப் பார்த்தபடி அவனது செயல்களைத் தடுக்க இயலாது நின்று இருந்தாள்.



அடுத்த நொடி சக்தீஸ்வரன் யாரையும் கண்டு கொள்ளாது மனைவியின் செப்பு இதழ்களில் தனது முரட்டு உதடுகளை அழுத்தமாய்ப் பதித்திருந்தான். கணவனது அதிரடியில் சகுந்தலா உறைந்து போய் நின்றாள்.



நிதானமாய் ஆரம்பித்த முத்தம் நேரம் செல்ல செல்ல ஆழமாய் மாறிப் போனது. உதட்டின் வழியே உயிரை உறிஞ்சி எடுப்பது என்பது இது தானோ!!! மொத்தத்தில் ஒற்றை இதழொற்றல் மூலம் ஆணவன் பெண்ணவளின் உயிரினை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான்.



"வான் வழங்கும் அமுத கலசம்... வாய்

வழியே ததும்பி ததும்பி வழியுதோ

தேன் பொங்கும் தெய்வ வடிவம்... தோள்

தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ"



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 45



எதிர்பாராத விதமாய்க் கணவன் கொடுத்த முத்தத்தினைக் கண்டு அதிர்ந்து போன சகுந்தலா அவனது பிடியில் இருந்து திமிறினாள். அவள் தனது தளிர் கரங்களால் கணவனை விலக்கிவிட முயற்சித்தாள். முயற்சி மட்டுமே அவளால் செய்ய முடிந்தது. அவளது எந்த முயற்சியும் ஆணவனிடத்தில் பலிக்கவில்லை. அதன் பின் அவள் அவனது கரங்களில் அடங்கிப் போனாள்.



கணவனது முத்தத்தில் முதலில் முரண்டு பிடித்த சகுந்தலா ஒரு கட்டத்தில் சற்று தடுமாறி தான் போனாள். காதல் கொண்ட நெஞ்சம் கணவனது அருகாமையில் தடுமாறத் தான் செய்தது. அவளது காதல் கொண்ட மனமே அவளுக்கு எதிரியாக மாறிப் போனது. அதன் விளைவு அவள் கணவனின் முத்தத்தில் மயங்கி அவனோடு ஒன்றி போனாள். கிடைக்கவே கிடைக்காது என்றெண்ணி ஏங்கிய கணவனின் அருகாமையை அவள் ரசித்து அனுபவித்தாள்.



முதலில் மென்மையாய் ஆரம்பித்த சக்தீஸ்வரனின் இதழொற்றல் நேரம் செல்ல செல்ல வன்மையாய் மாறிப் போனது. ஆணவனின் மென்மையை விட அதிரடி தான் பெண்ணவளுக்குமே பிடித்து இருந்தது. அவள் சும்மாவே காதல் பைத்தியம். இப்போது ஒற்றை அதிரடி முத்தத்தில் முற்றிலும் கணவன் பைத்தியமாகி போனாள்.



ஓரு காலத்தில் திருட்டுத்தனமாய் முத்த காட்சிகளைப் பார்த்து ரசித்தவள் அவள்... அப்படிப்பட்டவள் அதே முத்தத்தை அனுபவிக்கும் நாளும் வந்தது. ஆனால் அன்று சக்தீஸ்வரன் போதையில் இருந்தான். அவளோ பயத்தில் இருந்தாள். அதனால் அன்று அவளால் முத்தத்தை ரசித்து அனுபவிக்க முடியவில்லை. ஆனால் இன்று சகுந்தலா கணவனது முத்தத்தை ரசித்து ருசித்தாள்.



இடையைப் பற்றியிருந்த கணவனது இடக்கை இதமாய் அவளது இடையை வருடிவிட, அவளது முகத்தைத் தாங்கியிருந்த அவனது வலக்கை கரத்தின் கட்டை விரல் அவளது கன்னத்தை மிருதுவாய் வருடியது. இது போதுமே பெண்ணவளின் ஊனையும், உயிரையும் உருக செய்வதற்கு... அந்த நொடி அவள் யாரை பற்றியும் கவலை கொள்ளவில்லை. யாருக்காகவும் வெட்கி தலைகுனியவில்லை. அவளுக்கு அவன் வேண்டும். அது மட்டுமே அவளது நோக்கமாக இருந்தது.



சில நிமிடங்கள் நீண்ட முத்தத்தைச் சக்தீஸ்வரனே முடிவுக்குக் கொண்டு வந்தான். அவன் சகுந்தலாவின் இதழ்களில் இருந்து விலகிய போது... அவள் கால்கள் வலுவிழந்து கீழே விழ போனாள். அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்த அவனது இடக்கை அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டது. சகுந்தலா உணர்வுகளின் தாக்கமோ அல்லது மயக்கமோ ஏதோ ஒன்று... அவள் விழிகள் மூடி கணவனது நெஞ்சில் சுகமாய்ச் சாய்ந்து கொண்டாள்.



இருவரது முத்த காட்சியைக் கண்டு நாராயணன், பத்மினி இருவரும் வெட்கத்துடன் விழிகளை மூடி கொண்டனர். ஆதித்யா ஆதிரையின் விழிகளையும், ஆதிரை ஆதித்யாவின் விழிகளையும் மாறி மாறி மூடி கொண்டனர். சின்னப்பிள்ளை கெட்டு போய்விடும் என்று இருவருக்கும் மற்றவரை பற்றி நினைப்பு... சாய்ராம் நண்பனின் அதிரடியில் திகைத்து பின்பு திரும்பி நின்று கொண்டான். ராதாவும் திகைப்புற்றவளாய் விழிகளை மூடி கொண்டாள். தனது பேச்சிற்குச் சக்தீஸ்வரனின் இந்த அதிரடி பதிலை அவளும் எதிர்பார்க்கவில்லை.



"எல்லோரும் கண்களைத் திறங்க..." சக்தீஸ்வரனின் குரலில் எல்லோரும் விழிகளைத் திறந்தனர்.



சக்தீஸ்வரனின் குரலில் தன்னுணர்வு பெற்ற சகுந்தலா அவனிடம் இருந்து விலக முற்பட... அவனோ அவளைக் குனிந்து பார்த்தபடி, "உன்னால் தான்டி அவள் அவ்வளவு பேச்சு பேசுகிறாள். இப்போ மட்டும் நீ விலகின... உன்னைக் கொன்னு போட்டுருவேன்டி." என்று அடிக்குரலில் மிரட்டினான். சகுந்தலா பேவெனக் கணவனைத் திகைத்து பார்த்தாள்.



சக்தீஸ்வரன் அவளது திகைப்பினை கண்டு கொள்ளாது தனது வாயில் இருந்த பபிள்கம்மை பலூன் போன்று ஊதி விளையாட... சகுந்தலா அவனை அதிர்வுடன் பார்த்தாள். தான் மென்று கொண்டிருந்த பபிள்கம் எப்படிக் கணவனது வாயிற்குள் போனது? அப்போது அவன் தனது இதழோடு இதழ் பொருத்தி முத்தம் கொடுத்தது அவளது ஞாபகத்தில் வர... அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போனது. சகுந்தலா கணவனைப் பார்க்க முடியாது வேறு எங்கோ தனது பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.



சாய்ராமின் குடும்பத்தினரை தவிர... மற்றவர்கள் அனைவரும் சக்தீஸ்வரன் மென்று கொண்டிருந்த பபிள்கம்மை ஆவென்று பார்த்தனர். ஏனெனில் சற்று நேரம் முன்னர் வரை சகுந்தலா தான் பபிள்கம்மை மென்று கொண்டிருந்தாள். சின்னவர்களுக்கு விசயம் தெரிந்ததில் அவர்கள் நமட்டு சிரிப்புடன் சக்தீஸ்வரன், சகுந்தலாவை பார்த்தனர். பெரியவர்களுக்கு மெல்ல விசயம் புரிந்தது.



"இதுக்குத் தான் உன் மகன் நம்மளை கண்ணை மூட சொன்னானா?" சர்வேஸ்வரன் மனைவியின் காதினை கடித்தான்.



"அப்படித்தான் போலிருக்கு." உதயரேகா சங்கடமாய்ப் பதிலளித்தாள்.



"இன்னைக்கே நானும் பபிள்கம் வாங்கிட்டு வர்றேன் பேபி. நாமளும் இதை டிரை பண்ணி பார்க்கலாம்." சர்வேஸ்வரன் சரசத்துடன் சொல்ல...



"பேரன், பேத்தி எடுக்கும் வயதில் இது என்ன பேச்சு?" உதயரேகா செல்லமாய்க் கணவனைக் கடிந்தாள். ஆனாலும் இந்த வயதிலும் அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போனது, கணவனது விவஸ்தை கெட்ட பேச்சில்...



"ம், சக்தி கொடுத்து வச்சவன்..." நாராயணன் பெருமூச்சு விட்டான்.



"நீங்க பேசிய பேச்சுக்கு இந்த ஜென்மத்தில் உங்களுக்கு இது எல்லாம் கிடையாது." பத்மினி அவனைக் கண்டு முறைத்தாள்.



"ஹி ஹி... சும்மா சொன்னேன் மினி." நாராயணன் பல்லை காட்டி இளித்தான். வேறவழி...



சக்தீஸ்வரன் சகுந்தலாவை அணைத்தபடி ராதாவின் முன் வந்து நின்றான். ராதா இன்னமும் திகைப்பு மாறாது அவனைப் பார்த்தாள்.



"என் மனைவி கிட்ட கேட்டு பாரு. நான் ஆம்பிளையா? இல்லையான்னு? ஒரு முத்தத்தில் குழந்தையை உண்டாக்கும் அளவுக்கு நான் ஆண்மை மிக்கவன்." அவன் கடுமையான குரலில் சொன்னான்.



சக்தீஸ்வரன் தன்னைக் கலாய்க்கிறானா? அல்லது அவனது புகழ் பாடுகின்றானா? என்று தெரியாது சகுந்தலா திகைத்து போய் அவனைப் பார்த்தாள். அவளுக்கு அவளது அறியாமையை நினைத்து ஒரே வெட்கமாகி போனது. அந்த நொடி அவளுக்குத் தான் மண்ணில் புதைந்து போய்விட மாட்டோமா என்று இருந்தது.



"பிடிக்கலைன்னா... பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாம். அதை விட்டுட்டு இது என்ன பேச்சு ராதா?" சக்தீஸ்வரன் நேரே அவளிடம் கேட்க... அவளோ பேவென அவனைப் பார்த்தாள்.



"ரொம்பப் பேசிட்ட ராதா. நீ பேசியதை உன் கிட்ட செயல்படுத்த எனக்கு ரொம்ப நேரமாகாது. ஆனா எனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை நான் தொட என்ன, நினைத்து கூடப் பார்க்க மாட்டேன். அதனால் தான் எனக்கு உரிமையான என் மனைவிக்கு முத்தம் கொடுத்து என் ஆண்மையை நிரூபிக்க முயற்சித்தேன்." என்றவன்,



"என்ன சொன்ன? நான் ஆண்மை இல்லாதவன், ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதவன் என்றா... இதை எல்லாம் நான் சீக்கிரமே பொய்ன்னு நிரூபிக்கிறேன். அதுக்குப் பிறகு நான் உன்னிடம் வந்து பேசுகிறேன்." என்று அவன் சவால் விட...



கணவனது சவாலில் சகுந்தலா தான் பேயறைந்தார் போன்று காணப்பட்டாள். இதற்கு அர்த்தம் என்ன? அவள் குழம்பி போய் நின்றிருந்தாள். கணவனை அசிங்கமாய்ப் பேசிய ராதாவின் முன்னே அவனது அணைப்பில் இருந்து விலகி செல்லவும் அவளுக்கு மனம் இல்லை. அவள் அப்படியே அசையாது நின்று இருந்தாள்.



"சவால்ன்னா இது தான் சவால்... என்ன பிரின்ஸ்?" உதயரேகா வாயெல்லாம் பல்லாகக் கணவனைப் பார்த்தாள்.



"நீ கோடு போட்டால்... உன் மகன் ரோடே போடுகிறான்." சர்வேஸ்வரனுக்கு மகனை குறித்து நிம்மதி, மகிழ்ச்சி.



"சாய், உன் தங்கை கிட்ட சொல்லி வை." சக்தீஸ்வரன் நண்பனிடம் மிரட்டலாய் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். அப்போதும் அவன் சகுந்தலாவை விடவில்லை.



சக்தீஸ்வரன் கிளம்பியதும் எல்லோரும் அவனைப் பின்தொடர்ந்து வெளியில் வந்தனர். வெளியில் வந்ததும் சக்தீஸ்வரன் சகுந்தலாவை கண்டு கொள்ளாது தனது காரிலேறி அமர்ந்து கொண்டான். சகுந்தலா கலக்கத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.



"சக்கு வா..." நாராயணன் தங்கையை அழைத்தான்.



"நீங்க கிளம்புங்கண்ணே. நான் ஹோட்டலுக்குப் போறேன்." நடந்ததை ஜீரணிக்க அவளுக்குத் தனிமை தேவைப்பட்டது.



"சக்கு..." நாராயணன் ஏதோ சொல்ல வர...



"ப்ளீஸ்ண்ணே..." என்றவள் விறுவிறுவென வீட்டின் வாயிலை நோக்கி நடந்தாள்.



வீட்டை விட்டு வெளியில் வந்த சகுந்தலா சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி கொண்டாள்.



சகுந்தலா சென்ற ஆட்டோவை காரின் கண்ணாடி வழியே பார்த்த சக்தீஸ்வரனின் கார் ஆட்டோவிற்கு எதிர் திசையில் சென்றது.



அறைக்கு வந்த பிறகும் சகுந்தலாவின் நடுக்கம் குறையவில்லை. அவள் அங்கிருந்த கண்ணாடி முன்னே வந்து தனது பிம்பத்தைப் பார்த்தாள். அவளது பார்வை அவளது உதட்டின் மீது நிலைத்தது. கணவன் கொடுத்த அழுத்தமான, ஆழமான அதிரடி முத்தம் அவளது ஞாபகத்தில் வந்து அவளைப் பெரிதும் இம்சித்தது. அவள் தனது கணவனிடம் இருந்து இப்படியொரு அதிரடியை எதிர்பார்க்கவில்லை. அவளது கரம் அவளையும் அறியாது உதட்டினை வருடியது.



இப்போதும் கணவன் அவளை முத்தமிடுவது போன்று ஒரு உணர்வு. அந்த உணர்வே அவளுள் தித்திப்பை ஏற்படுத்தியது. சக்தீஸ்வரன் ஒரே ஒரு முத்தத்தில் அவளை அடியோடு சாய்த்து விட்டான்.




அதேநேரம் ராதா சக்தீஸ்வரனை கண்டு பேசிய வார்த்தைகள் சகுந்தலாவின் ஞாபகத்தில் வந்தது. அடுத்த நொடி அவள் கலங்கி போய்க் கட்டிலில் அமர்ந்தாள். தன்னால் தானே கணவன் இத்தகைய பழிச்சொல்லுக்கு ஆளாகி போனான். கடவுளே, எந்த ஆண்மகனாலும் இந்தப் பழிச்சொல்லை தாங்க முடியாது. சக்தீஸ்வரன் எப்படித்தான் இதைத் தாங்கினானோ. அவளுக்குக் கணவனை நினைத்துப் பாவமாக இருந்தது. அவளால் அவனைக் கண்டு பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. பெண்ணவளால் வேறென்ன செய்துவிட முடியும்?
 

Sasimukesh

Administrator
இப்படி ஒரு பழிச்சொல் கணவன் மீது விழும் என்று சகுந்தலா கனவிலும் நினைத்து பார்க்கவில்லையே. அவள் தனது நிலையை மட்டுமே எண்ணி விலகி சென்றாள். அவள் கணவன் பக்கம் இருந்து யோசிக்கவில்லை. யோசித்து இருக்க வேண்டுமோ? காலம் கடந்து அவள் இப்போது யோசித்தாள்.



அப்படியே யோசித்து இருந்தாலும்... அவளால் அவனுடன் மனமொத்து வாழ முடியுமா? நிச்சயம் முடியாது. அந்த மக்குச் சகுந்தலா சக்தீஸ்வரனின் வாழ்க்கையை அடியோடு அழித்து இருப்பாள். அவள் அவனுக்கேற்ற பெண் இல்லை.



"கேப்டன், உங்களுக்கு நான் வேண்டாம். என்னைப் போன்ற மக்குப் பெண் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். என்னால் உங்களுக்கு அசிங்கம், அவமானம், தலைக்குனிவு தான் ஏற்படும். நான் ஒரு லூசு..." அவள் தனது தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.



அவளுள் கடந்த காலம் படமாக ஓடியது.



******************************



அன்று சக்தீஸ்வரன் மனோகர் பற்றிச் சொன்ன போது சகுந்தலா அவனிடம் கோபித்துக் கொண்டு இருந்தது என்னவோ உண்மை தான்.



அந்த நேரத்தில் தான் சகுந்தலா மருத்துவமனையில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டாள். அந்தப் பெண்ணை அவள் சிகிச்சைக்குப் பின் கண்டிருந்தால் அவள் இத்தனை தூரம் துன்பப்பட்டு இருக்க மாட்டாள். ஆனால் சகுந்தலா அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்கு முன்னே பார்த்து விட்டாள். அந்தப் பெண் உடுத்தியிருந்த உடை எல்லாம் கிழிந்து, அவளது உடம்பில் ஆங்காங்கே ரத்தம் கட்டி கன்றிப் போயிருந்தது. அதைவிட அவளது கால்களுக்கு இடையில் இடைவிடாது வழிந்த குருதி... அந்தப் பெண் மீது போர்த்தியிருந்த துணியை நனைத்து, ஸ்ட்ரெச்சரையும் நனைத்து இருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து அங்கே சேர்ந்து இருந்தார்.



கிழிந்த நாராய் இருந்த பெண்ணைக் கண்டு சகுந்தலா அச்சத்தில் கத்தி கதறி துடித்தாள். அவளுக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இதுநாள் வரை அவள் ஒரு அழகிய கூட்டில் பாதுகாப்பாய் இருக்கின்றாள். அப்படிப்பட்டவள் இந்த அசம்பாவத்தைக் கண்டு கதிகலங்கி போனாள்.



"சக்கு, ஒண்ணும் இல்லை. நீ பதட்டப்படாதே." என்று பத்மினி தான் அவளைத் தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினாள்.



"அந்தப் பொண்ணு காலுக்கு இடையில் ரத்தம் வழிஞ்சிச்சு. எவ்வளவு ரத்தம்?" அவள் அதிர்வு நீங்காது பத்மினியை பார்த்தாள்.



"ஆமாம், ஐஞ்சு பேர் சேர்ந்து ரேப் பண்ணினால் அந்தப் பெண்ணின் உடல் என்னவாகும்? மிருகங்கள்... மிருகங்களுடன் கூட ஒப்பிட முடியாத ஜந்துக்கள்." பத்மினி கோபமும், ஆற்றாமையுமாகச் சொன்னாள்.



"ஏன் அப்படியாகும்?" சகுந்தலா அப்பாவியாகக் கேட்டாள்.



அப்போது தான் பத்மினி சில அந்தரங்க ரகசியங்களைச் சகுந்தலாவிடம் கூறினாள். பத்மினிக்கு தெரியாதே, சகுந்தலாவுக்கு இது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது என்று... சகுந்தலா குழந்தை உண்டாகி இருப்பதால்... அவளுக்கு எல்லாம் தெரியும் என்று பத்மினி நினைத்து விட்டாள் போலும். அப்படி இருந்தும் பத்மினி ஒரு மருத்துவராய் தான் விளக்கம் கொடுத்தது. பத்மினி கூறியதை தொடர்ந்து சகுந்தலாவுக்கு அதில் நிறையச் சந்தேகங்கள் எழுந்தது. அதை எல்லாம் தோழியாக இருந்தாலும் பத்மினியிடம் கேட்க மனம் வரவில்லை. ஏனெனில் அவளது விசயத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது சக்தீஸ்வரனும் அல்லவா! அதனால் அவள் வாயை இறுக மூடி கொண்டாள்.



அதற்குள் பத்மினிக்கு ஒரு அவசர கேஸ் வந்துவிட்டது. அப்படி இருந்தும் பத்மினி சகுந்தலாவை வீட்டில் கொண்டுவிட எண்ணி கிளம்ப... சகுந்தலா அவளை வேண்டாம் என்று மறுத்து விட்டு கிளம்பினாள். அவளுக்கு இன்னமும் அதிர்ச்சி மறையவில்லை.



அடுத்து சகுந்தலா நேரே சென்ற இடம், அன்று சக்தீஸ்வரன் அவளைப் பரிசோதிக்க அழைத்துச் சென்ற மருத்துவமனைக்குத் தான். ஆம், பத்மினியிடம் அவள் கேட்க நினைத்த சந்தேகங்களை அந்த மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள நினைத்தாள். ஏனெனில் அவர் தானே ஏற்கெனவே அவளிடம் இது மாதிரியான கேள்விகளைக் கேட்டது. அதனால் தான் அவளுக்கு அவரது ஞாபகம் வந்தது.



மருத்துவரின் முன்னே சென்று சகுந்தலா அமர்ந்தாள். மருத்துவர் அவளை ஒரு மாதிரியாய் பார்த்தார். அன்று பைத்தியம் போல் பேசிவிட்டுச் சென்றது அவள் தான் என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.



"என்னம்மா விசயம்?" அவர் மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டபடி அவளிடம் கேட்க...



"டாக்டர் தாம்பத்தியம்ன்னா என்ன?" சகுந்தலா பாவம் போல் கேட்க...



"என்னம்மா விளையாடுறியா? இது கூடத் தெரியாம எப்படிக் குழந்தை உண்டாகின?" அவர் கோபத்துடன் அவளைப் பார்த்தார்.



"சத்தியமா எனக்கு இது பத்தின அறிவு இல்லை டாக்டர். எனக்குக் கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?" என்றவளை மருத்துவர் உற்று நோக்கினார். அவள் உண்மையாகத் தான் கேட்கின்றாள் என்பதை அவளது அப்பாவி தோற்றத்தை கண்டு அவர் உறுதி செய்தார்.



மருத்துவர் சகுந்தலாவுக்கு எல்லாவற்றையும் விளக்கி கூறினார். பத்மினி கூறியதைவிட அவர் இன்னமும் ஆழமாய்ச் சென்று அனைத்தையும் அவளிடம் சொன்னார். அதைக் கேட்டுச் சகுந்தலா திக்பிரம்மை பிடித்தார் போன்று அமர்ந்து இருந்தாள்.



"என்னம்மா நான் சொன்னது எல்லாம் உனக்குப் புரிஞ்சதா?"



"புரிஞ்சது டாக்டர். ஆனா எனக்கு இப்படி எதுவும் நடக்கலையே." அவள் பரிதாபமாக அவரைப் பார்த்தார்.



"உங்க கணவர் உங்க கூட..." மருத்துவர் தயக்கத்துடன் நிறுத்த...



"இல்லை..." அவள் மறுப்பாய் தலையை ஆட்டினாள். கணவன் கொடுத்த இதழொற்றல் அவளது ஞாபகத்தில் வந்தது. அதைத் தாண்டி அவன் அவளிடத்தில் முன்னேறவில்லையே.



"பிறகு எப்படி நீ பிரெக்னெட்டான?" மருத்துவர் குழம்பி போனார்.



"அதான் டாக்டர் எனக்கும் புரியலை? எனக்கு எப்படிக் குழந்தை உண்டாகிச்சுன்னு தெரியலை. நான் ரொம்பக் கெட்ட பொண்ணா டாக்டர்?" என்று கேட்டவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.



மருத்துவருக்கே அவளது அறியாமையைக் கண்டு பாவமாக இருந்தது.



"பயப்படாதே சகுந்தலா. உனக்குச் சில டெஸ்ட்கள் எழுதி கொடுக்கிறேன். அதைக் கொடுத்துட்டு நீ வீட்டுக்கு போ. நாளைக்கு ரிப்போர்ட் வந்ததும்... நீ என்னைப் பார்க்க வா." என்று மருத்துவர் அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.



சகுந்தலா மருத்துவர் சொன்ன பரிசோதனைகளைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தாள். நேரே தங்களது அறைக்கு வந்தமர்ந்தவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. எந்தத் தவறும் செய்யாத கணவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி அல்லவா... அவள் அவனது கரங்களால் தாலி வாங்கிக் கொண்டாள். எவ்வளவு பெரிய மாபாதகத்தை அவள் அவனுக்குச் செய்து இருக்கிறாள்.



'அவள் வயித்தில் இருப்பது என் குழந்தை' அன்று கணவன் சொன்ன வார்த்தைகள் இப்போது அவளது காதுகளில் ஒலித்து... அவளை மெய் சிலிர்க்க செய்தது. அவனது காதலை நினைத்து உயிர் உருக செய்தது. ஆம், காதலே தான்... திருமணத்திற்குப் பிறகு சக்தீஸ்வரன் அவள் மீது காட்டும் அன்பு, அக்கறை அனைத்தும் காதல் இல்லாது வேறு எதுவாம்? அவள் அவனது காதலை நன்கு உணர்ந்து இருந்தாள். அதிலும் குழந்தையைக் காரணம் காட்டி மிரட்டி தன்னைத் திருமணம் செய்த சக்தீஸ்வரன் அவளது மனதில் வானளவு உயர்ந்து போனான்.



சகுந்தலா சக்தீஸ்வரனின் காதலை உணர்ந்து இருந்ததால் தான்... இப்போது அவள் குற்றவுணர்வில் தவிக்கின்றாள். காதலை அள்ளி கொடுத்தவனுக்குப் பதிலுக்கு அவள் பச்சை துரோகம் அல்லவா செய்து இருக்கிறாள். துரோகி என்று தெரிந்தும் அவன் தனது கழுத்தில் தாலி கட்டி இருக்கின்றான் என்றால்... அவள் மீதான அவனது காதல் அதற்கும் அப்பாற்பட்ட தூய்மையான அன்பு அல்லவா! அவள் தனது கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பற்றிக் கொண்டு அழுதாள்.



'நீ எங்கேயும் தப்பிச்சு ஓடிவிடக் கூடாது இல்லையா? அதுக்குத் தான்...' சக்தீஸ்வரன் இந்தத் தாலி சங்கிலியை அணிவித்து விட்டுப் புன்னகைத்தது இப்போதும் அவளது நினைவில் பசுமையாய்...



"நான் அப்படி என்ன உங்களுக்குச் செய்தேன்னு... நீங்க என்னைய இந்தளவுக்குக் காதலிக்கிறீங்க? நான் உங்களுக்குத் தகுதியானவள் இல்லை." அவள் வாய்விட்டு கதறியழுதாள்.



ஒரு கட்டத்திற்கு மேல் சகுந்தலாவின் அழுகை நின்று போனது. அடுத்து என்ன செய்வது? என்று அவள் யோசித்தாள். இனியும் கணவனுக்குத் துரோகம் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. அவன் குற்றமே செய்யாது தண்டனையை அனுபவிப்பது சரியல்லவே!



"தாம்பத்தியம் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாம... வெறும் முத்தம் கொடுத்தால் குழந்தை வந்திரும்ன்னு நினைச்சிட்டு... நான் உங்க வாழ்க்கையைப் பாழாக்கிட்டேன் கேப்டன். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத மக்கு சகுந்தலா உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு நான் பொருத்தமானவள் இல்லை. என்னால் உங்களுக்குக் கேவலம் தான். எவ்வளவு கேவலமா நான் உங்களைக் குற்றம் சாற்றி இருக்கேன். ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட என்னைய தப்பா பேசலையே. என் குழந்தையை நீங்க உங்க குழந்தைன்னு சொன்னீங்களே. உங்க உயர்ந்த மனசு யாருக்கும் வராது. அப்படிப்பட்ட உங்களுக்குத் துரோகம் பண்ண என்னால் முடியாது." என்று உறுதியாய் சொன்னவள் இறுதியில் ஒரு முடிவு எடுத்தாள்.



அதாவது சகுந்தலா சக்தீஸ்வரனை விட்டு பிரிந்து செல்வது என்று... அவளது கேப்டனை பிரிந்து செல்வது அவளுக்கும் வலி தான். அதற்காக அப்பாவி அவனை இன்னமும் வேதனைப்படுத்துவது சரி இல்லையே. கணவன் அவனுக்கு ஏற்றார் போன்று நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வேண்டும். அவள் தனது காதலை கொன்று புதைத்து கணவனது வாழ்க்கையைச் சரி செய்ய நினைத்தாள். அவனது வாழ்க்கையே அவள் தான் என்பதை அவள் அந்தக் கணம் உணரவில்லை.



சகுந்தலா உறுதியாய் முடிவு எடுத்த போது தான்... சக்தீஸ்வரன் வந்து அவளிடம் மனம் விட்டு பேசியது.




தொடரும்…!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 46



கணவன் 'சகி' என்று அவளை அழைத்த போது அவள் இனிமையாய் அதிர்ந்து போனாள். அவள் எத்தனை முறை அவனிடம் கேட்டு இருப்பாள், சகி யாரென்று? அந்தச் சகி அவள் தானா? அவனது சகி அவள் தானா? ஆனால் அவளால் அதை நினைத்து மகிழ முடியவில்லை. மாறாக அவள் மனதிற்குள் துக்கம் கொண்டு அமர்ந்து இருந்தாள்.



அவனுக்கு அம்மை போட்ட போது தான் அக்கறையுடன் கவனித்துக் கொண்டது, பிறகு அத்தைம்மாவிடம் தான் பேசியது வைத்து, அவன் தன்னைக் காதலிப்பதாய் சொன்ன போது... அவள் உள்ளுக்குள் உடைந்து போய் அழுதாள். அவனது காதலுக்கு அவள் அருகதை இல்லாதவளாகி போய்விட்டாளே என்று...



சக்தீஸ்வரன் அவள் மீதான காதலை பட்டியலிட்டு சொன்ன போது... அவன் தன்னைக் கஷ்டப்படுத்தியது கூட அவளுக்குப் பின்னுக்குப் போய்விட்டது. ஏனெனில் தன்னைத் துடிக்க வைத்து விட்டு அவனும் அல்லவா துடிதுடித்து இருக்கின்றான். அதில் அவனது அதீத காதலை உணர்ந்து அவள் வாயடைத்து போனாள்.



அவளை ஒதுக்கி வைக்க அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான். அதாவது அவன் தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டான், அவமானப்படுத்திக் கொண்டான். அதை அவன் கூறி கேட்ட போது... அவளுக்கு ஐயோவென்றாகி போனது. ஆனால் எதற்காக இப்படி? என்று அவளது மனம் அவனுக்காகத் தவிக்கத் தான் செய்தது.



அவன் தன்னைத் திருமணம் செய்ததை விவரித்த போது... 'குழந்தை என்னுடையதுன்னு நீ சொல்லும் போது... என்னால் உன்னைக் கைவிட முடியலை. இது தான் சான்சுன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.' என்று அவன் விளக்கிய போது... இதைவிடத் தன்னலமற்ற காதலை யாரும் நிரூபித்திருக்க முடியுமோ? முடியவே முடியாது. தன்னவன் தனக்காகத் தீக்குளித்து இருக்கின்றான். அவன் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டு அவளது மானத்தைக் காப்பாற்றி இருக்கின்றான். அவன் தனது பெயரை கெடுத்துக் கொண்டு அவளுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கின்றான். மக்கு மண்ணாந்தை சக்கு உண்மையைப் புரிந்து கொண்டு மனம் மறுதலித்துப் போய் அமர்ந்து இருந்தாள்.



அவளுக்காகத் தனித்தீவே வாங்கி இருப்பதாய் அவன் சொன்ன போது அவள் அகமகிழ்ந்து விடவில்லை. அவன் தான் ஏற்கெனவே அவனது காதலை நிரூபித்து விட்டானே. அதனால் அவளுக்கு அவனது காதல் கர்வத்தைத் தான் தந்தது.



அப்போது தான் சக்தீஸ்வரன் அவளது மனதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் என்பதை அடித்துச் சொன்னான். அவள் புரியாது அவனைப் பார்த்தாள். அதற்கு ஆதாரமாய் அவளது அலைப்பேசியில் இருந்த அவனது விதம் விதமான புகைப்படங்களைப் பற்றி அவன் சொன்ன போது தான் அவளுக்குமே அந்த விசயம் உறைத்தது. ஆம், அவன் சொன்னது போல், தினமும் அவள் அவனைப் பல கோணத்தில் புகைப்படங்கள் எடுத்து விடுவாள். ஏன், எதற்கு? என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவனைப் புகைப்படங்கள் எடுப்பது அவளுக்குப் பிடிக்கும். ஒருவேளை தான் படிக்கும் கதைகளில் இருக்கும் நாயகனை அவனில் தேடினாளா? இல்லை அந்த நாயகர்கள் போன்று ஆறடி உயரத்தில், அம்சமான அழகோடு கம்பீரமாக இருக்கும் அவனை அவளையும் அறியாது ரசித்தாளோ? அது அவளுக்கே தெரியவில்லை.



இறுதியாகத் தான் சக்தீஸ்வரன் தனது பெண்கள் சகவாசத்தை அவளிடம் சொன்னது. அதைக் கேட்டு அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. ஆனால் அப்படிக் கோபப்பட அவளுக்கு என்ன அருகதை இருக்கிறது? அந்த நொடி அவளது கோபம் அப்படியே அடங்கி விட்டது. அப்போது தான் அவள் 'நாம பிரிஞ்சிரலாம்' என்று சொன்னாள்.



அப்படி இருந்தும் தன்னிடம் கெஞ்சிய கணவனைக் கண்டு அவளது காதல் மனம் இளகத்தான் செய்தது. அவளது இளகல் அவனுக்கு நல்லது செய்யும் என்றால் சரி... ஆனால் அது அவனுக்குக் கெடுதலே... அதனால் தான் அவள் தேவையில்லாத கடும்சொற்களைக் கூறி அவனை விலக்கி வைத்தது. அதைக் கேட்டு அவன் அடைந்த வலி, வேதனை அவனது முகத்தில் பிரதிபலித்தது. அவள் அதைக் காணத்தான் செய்தாள். ஆனால் கையறுநிலை அவளது நிலை...



மறுநாள் சகுந்தலா மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு மருத்துவர் அவளது பரிசோதனை முடிவுகளைக் கையில் வைத்தபடி பலத்த சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். அவள் பயத்துடன் அவரின் முன்னே சென்று அமர்ந்தாள்.



"நீ குழந்தை உண்டாகி இருப்பது அரிதான ஒன்று." என்று பீடிகையோடு மருத்துவர் ஆரம்பித்தார். அவள் புரியாது மருத்துவரை பார்த்தாள்.



"பார்த்தீனோஜெனீசிஸ் (PG) என்பது ஒரு பாலின இனப்பெருக்கம் ஆகும். இதில் ஒரு பெண் கருமுட்டையுடன் ஆண் விந்தணுவை இணைத்து கருவுற செய்யாமல்.. கருவினை, அதாவது குழந்தையை உருவாக்க முடியும். கிரேக்க மொழியில் இதற்குக் கன்னிப் படைப்பு என்று பொருள். விப்டைல் பல்லி போன்ற சில தாடை முதுகெலும்புகளில் இது இயற்கையாகவே நிகழ்கின்றது." என்று மருத்துவர் அவளுக்கு விளக்கம் கொடுக்க...



சகுந்தலாவுக்கு மருத்துவர் கூறியது கேட்டு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவள் புரியாது விழித்தாள்.



"உனக்குப் புரியும்படி சொல்றேன். நீ ஒரு கன்னிப்பெண். நீ வன்கொடுமைக்கு ஆளாகலை." மருத்துவர் சொன்னது கேட்டு அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நிம்மதி தோன்றியது. அப்போது கூடச் சகுந்தலா கன்னிப்பெண்ணான தான் எப்படிக் குழந்தையைச் சுமக்கின்றோம்? என்று யோசிக்கவில்லை. அந்தளவிற்குத் தான் அவளது அறிவு இருந்தது.



மருத்துவர் அவளுக்குப் புரியும்படி விளக்கி கூறியவர் அருகிலிருந்த கணிணியில் 'ஒரு பக்க கதை' என்ற திரைப்படத்தினைப் போட்டு விட்டார். குறிப்பாக அந்தத் திரைப்படத்தின் மருத்துவமனை காட்சிகள்... அந்தப் படத்தின் நாயகி சகுந்தலா மாதிரி தான் குழந்தை உண்டாகி இருப்பாள். சகுந்தலா அந்தப் படத்தில் மருத்துவர் கூறியதை உன்னிப்பாகக் கவனித்தாள். சிலருக்குப் பாடம் புகட்டுவது புரியாது. அதே இது அந்தப் பாடத்தைக் காணொளியாகக் காட்டினால் சட்டென்று புரிந்து விடும். அப்படித்தான் சகுந்தலாவுக்கும் இந்த விசயம் மெல்ல புரிந்தது.



ஆணின் உதவியின்றிப் பெண்ணவள் தனக்குத் தானே கருத்தரித்துக் கொள்வது தான் இதன் பொருள். இது அரிதான ஒன்று... அதாவது ஒரு கரு உண்டாகத் தேவையான கரு முட்டை, விந்தணு இரண்டுமே அவளுள் தானே உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. அவளது கருமுட்டை, விந்தணு இணைந்ததன் விளைவு தான் இந்தக் குழந்தை. இந்தக் குழந்தையின் டிஎன்ஏக்கு சொந்தக்காரி அவள் மட்டுமே. ஆம், அன்னையின் டிஎன்ஏ மட்டுமே கொண்ட குழந்தை இது. இதில் தகப்பனது டிஎன்ஏ இருக்காது. அதை அறிந்து கொண்ட சகுந்தலா தனக்குள் மரித்துப் போனாள். அதன் பின்னர் மருத்துவர் கூறியது எதுவும் அவளது காதில் ஏறவில்லை. அவள் மருத்துவமனையை விட்டு உயிரற்ற உடலாய் வெளிவந்தாள்.



கடவுள் கூட அவளது வாழ்க்கையில் சதி செய்துவிட்டார். கடவுள் எல்லோரையும் போன்று தன்னைப் படைக்காது இப்படி மக்காய் அவளைப் படைத்ததே பெரிய தவறு. இப்படிக் குழந்தை விசயத்திலும் கடவுள் அவளை ஏமாற்றி விட்டாரே. கடவுளின் தவறுகள் கூடி கொண்டே போனது. மக்குவுக்குக் காதல் எதற்கு? முட்டாளுக்கு வாழ்க்கை எதற்கு? அவள் வாழ்வே முடிந்து போனார் போன்று விரக்தி அடைந்தாள். கால் போன போக்கில் நடந்து சென்றவளை தர்சனா அழைத்து வந்து வீட்டில் விட்டதாக ஆதித்யா, ஆதிரை கூறி அவள் கேட்டு இருந்தாள்.



ஏதேதோ நினைத்து மருகியவளுக்கு அன்றிரவே கரு கலைந்து போனது. அது தெரியாது மருத்துவமனையில் கண்விழித்த அவள் பத்மினியிடம் குழந்தை பற்றிக் கேட்க... பத்மினி குழந்தை கலைந்து விட்டதாகக் கூற... அடுத்த நொடி சகுந்தலா வயிற்றினை இறுக பற்றிக் கொண்டாள். குழந்தை எப்படி வந்தாலும்... அது அவளுடைய குழந்தை அல்லவா! அவளுக்கு இருந்த ஒரே பிடிமானம் இந்தக் குழந்தை மட்டும் தானே!



அன்றே அவள் சக்தீஸ்வரனிடம் விவாகரத்து வேண்டும் என்று கேட்டு விட்டாள். அவள் தனது முடிவில் உறுதியாக இருந்தாள்.



அன்றிரவு அவளுக்குத் துணையாக அவன் உடன் இருந்தான். இடையில் உறக்கம் கலைந்து எழுந்த சகுந்தலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனது தலையை வருடி விட்டபடி வெகுநேரம் அழுது கொண்டிருந்தது... அவனுக்குத் தெரியாது.



குழந்தைக்காக நடந்த திருமணம்... இப்போது குழந்தை இல்லாததால் செல்லாதாகி விட்டது என்று கூறி... அவள் தனது முடிவில் உறுதியாக இருந்தாள். அதன் பிறகு அவள் கணவனைப் பிரிந்து ஆதித்யா, ஆதிரையுடன் மும்பை சென்று விட்டாள்.



*********************



நடந்ததை எல்லாம் எண்ணி பார்த்த சகுந்தலா தன்னை நினைத்து வேதனை கொண்டதை விட... கணவனை நினைத்து தான் அதிக வேதனை கொண்டாள். தான் அவனுடன் இருந்தால் அவன் இன்னமும் அவமானப்பட நேரிடும் என்று எண்ணி தான் அவள் விலகி சென்றது. ஆனால் அதைவிடப் பெரும் அவமானத்தை அல்லவா அவன் தாங்கி கொண்டு இருக்கின்றான். அதை நினைத்து அவளுக்கு வேதனையாக இருந்தது.



கணவனைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியவளாய் சகுந்தலா சக்தீஸ்வரனின் அலைப்பேசிக்கு அழைத்தாள். வெகுநாட்களுக்குப் பிறகு அவள் அவனுக்கு அழைக்கின்றாள். சில நொடிகளுக்குப் பிறகு அவளது அழைப்பு ஏற்கப்பட்டது. ஆனால் மறுபக்கம் இருந்த சக்தீஸ்வரன் எதுவும் பேசாது அமைதி காத்தான்.



"நான் உங்களைப் பார்க்கணும்." அவள் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தது.



"ஆபிசில் தான் இருக்கிறேன்." என்று மட்டும் அவன் சொன்னான். அதாவது அவன் அவளை வாவென்று கூட அழைக்கவில்லை.



மானம், ரோசம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த சகுந்தலா, "வருகிறேன்." என்று பதிலளித்தவள் அழைப்பை துண்டித்தாள்.
 

Sasimukesh

Administrator
சகுந்தலா சக்தீஸ்வரனை காண்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த போது... அறியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவள் எடுத்ததும் மறுபக்கம் இருந்து நாட்காட்டி விளம்பர நிறுவனத்தின் சென்னை கிளையில் இருந்து பேசினார்கள்.



"மேடம், நீங்க சகுந்தலா தானே?" அவர்கள் கேட்டதும்... அவள் ஆமென்க...



"இப்போதே உங்களைச் சந்திக்க வேண்டும். வரலாமா?" என்று அவர்கள் கேட்க...



"இப்பவா?" அவள் தயங்கினாள். அவள் சக்தீஸ்வரனை காண செல்ல வேண்டுமென்று...



"ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் மேடம். வந்து பேசுறோம். உங்களுக்கு ஓகேன்னா அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணுங்க." அவர்கள் சொன்னதும் அவளுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவள் கற்றுக் கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்று.



சகுந்தலா சக்தீஸ்வரனுக்குத் தான் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகும் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட... அதை அவன் பார்த்ததற்கான அறிகுறியாக நீல நிற குறி வந்தது. ஆனால் அவன் எதுவும் பதில் அளிக்கவில்லை.



"ரொம்பத்தான் பண்றார்." அவள் உதட்டை சுழித்துக் கொண்டாள்.



சொன்னது போல் பத்து நிமிடங்களில் விளம்பர நிறுவனத்தார் வந்து அவளிடம் பேசினர். அவர்கள் தரப்பினை விளக்கி அவர்கள் சொல்ல... சகுந்தலாவும் தனது கொள்கையை, அதாவது அதீத கவர்ச்சி காட்ட முடியாது என்று அவர்களிடம் நேரிடையாகச் சொல்லி விட்டாள். பிறகு இதனால் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாதே. அவர்களும் உடனே ஒத்து கொண்டனர். இந்த முறை தாங்கள் வித்தியாசமாக விளம்பரம் செய்யப் போவதாகக் கூறினர். அது அவளுக்குத் தேவை இல்லாதது. தனது விருப்பத்திற்கு அவர்கள் சம்மதித்ததே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.



அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த ஒப்பந்த கோப்பை அவளிடம் நீட்டினர். சகுந்தலா மிகவும் கவனமாக அதைப் படித்துப் பார்த்து கையெழுத்து போட்டு கொடுத்தாள்.



"மேடம், இன்னைக்கே நீங்க கிளம்ப வேண்டியது இருக்கும்." என்று அவர்கள் சொல்ல...



"இன்னைக்கேவா?" என்று திகைத்தவள், "யோசிச்சுச் சொல்கிறேன். உடனே என்றால் என்னால் முடியாது." என்று அவள் பணிவுடன் கூறுவது போல் தனது கருத்தினை அழுத்தி சொன்னாள்.



"ஓகே மேடம். இன்னைக்குக் கிளம்பினால் நல்லது. இல்லைன்னா அடுத்தச் செட் ஆட்கள் போகும் போது... அவங்களோட நீங்க போகலாம்." என்று அவர்களும் பெருந்தன்மையுடன் முடித்துக் கொண்டனர்.



சகுந்தலா அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு அடுத்த இருபதாவது நிமிடங்களில் சக்தீஸ்வரன் அலுவலகத்தில் இருந்தாள். அவனது அறைக்குள் அனுமதி கேட்டு அவள் நுழைந்தாள். அவளது வரவினை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த சக்தீஸ்வரன் அவளையே பார்த்திருந்தான். சகுந்தலாவுக்குத் தான் அவனைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. காலையில் அவன் கொடுத்த முத்தத்தின் தாக்கம் இன்னும் அவளுள் மிச்சம் இருந்தது. அவள் தலையைக் குனிந்து கொண்டு அவன் முன்னே வந்து நின்றாள்.



சில நொடிகள் சென்ற பிறகும் சக்தீஸ்வரன் தன்னை அமர சொல்லாததைக் கண்டு அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளது பார்வைக்காகக் காத்திருந்தார் போன்று அவன் பார்வையால் நாற்காலியை சுட்டிக்காட்டினான்.



'வாயை திறந்தால் முத்து உதிர்ந்து விடுமாக்கும்?' அவள் தனக்குள் நொடித்துக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள்.



அவன் அவளே பேசட்டும் என்றெண்ணி அமைதியாக இருந்தான். வேறுவழியின்றிச் சகுந்தலா தான் பேச்சை தொடங்கினாள்.



"இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை." அவள் சங்கடத்துடன் ஆரம்பித்தாள்.



"எப்படி?" அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி அவளைப் பார்த்தான்.



'ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கிறதை பார்.' அவள் மனதிற்குள் அவனை வசைபாடினாலும்... அவன் புருவத்தை உயர்த்திய விதத்தை அவள் மனதிற்குள் ரசிக்கத்தான் செய்தாள். காதல் கொண்ட மனம் தன்னவனை வஞ்சனை இல்லாது சைட் அடித்தது.



"நான் என் பக்கம் இருந்து தான் யோசிச்சேனே தவிர. உங்க பக்கம் இருந்து யோசிக்கலை." என்றவளை அவன் வெட்டும் பார்வை பார்த்தான்.



"அது தெரிந்த கதை தானே." அவன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினான். அவனது அலட்சியத்தில் அவள் தான் எச்சிலை விழுங்கினாள்.



"நான் பண்ணியது தப்பு தான்."



"ஹப்பாடா, இப்பவாவது உன் தவறை உணர்ந்தாயே." என்று நிம்மதி போன்று சொன்னவனின் வார்த்தைகளில் இருந்த நிம்மதி கிஞ்சித்தும் அவனது முகத்தில் இல்லை. அவனது முகத்தில் அப்படியொரு எள்ளல் வழிந்தது.



"சும்மா சும்மா கிண்டல் பண்ணாதீங்க கேப்டன்." அவளுள் இருந்த பழைய சகுந்தலா சிணுங்கலாக வெளிப்பட்டாள்.



கணவன் தன்னை ஆழ்ந்து பார்ப்பதை கண்டதும் தான்... அவளுக்குத் தான் பேசிய விதம் மூளையில் உறைத்தது.



"சாரி..." என்றவள் பேச்சை தொடர்ந்தாள். அதற்கும் அவன் பதில் பேசவில்லை.



"நம்ம பிரிவுக்குப் பின்னாடி எல்லோரும் உங்களை இப்படி எல்லாம் அவமான படுத்துவாங்கன்னு எனக்குத் தெரியாம பேச்சு. என்னைய மன்னிச்சிருங்க." அவள் மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.



அவனது அவமானம் பெரியது. அவனது காயம் பெரியது. அதனால் அவள் வலிய சென்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னால் அவன் சுமக்கும் பழி சாதாரணமானது இல்லை. அது ஒரு ஆணுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வார்த்தைகள். அவள் அவன் பக்கம் யோசித்து மன்னிப்பு கேட்டாள்.



"மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிருமா?" அவன் கையிலிருந்த அலைப்பேசியைச் சுழற்றியபடி அவளைப் பார்த்தான்.



"என்னால் வேறென்ன செய்ய முடியும்?" அவள் வருத்தத்துடன் சொல்ல...



"ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாதவன், ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதவன்... இது தானே சமுதாயம் என் மீது சுமத்தி இருக்கும் பழி. இந்தப் பழி தீர வேண்டுமென்றால்... இது எல்லாம் நடக்க வேண்டும்." என்றவனை அவள் புரியாது பார்த்தாள்.



"உன்னால் ஏற்பட்ட பழி... உன்னால் தீர வேண்டும்." என்றவனைக் கண்டு அவள் விழிகளைச் சுருக்கி பார்த்தாள்.



"எப்படி?"



"என் ஆண்மையை நிரூபிக்க நீ வேண்டும். நீ என் குழந்தைக்கு அம்மாவாக வேண்டும்." என்றவனைக் கண்டு அவள் திகைத்து விழித்தாள். இதெல்லாம் நடக்கின்ற காரியமா?



"உன்னால் ஏற்பட்ட களங்கத்தை நீ தான் போக்க வேண்டும்." என்று அவன் முடித்துக் கொள்ள...



"இல்லை, என்னால் முடியாது." அவள் அவசரமாகச் சொல்லியபடி நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ள...



"அப்படி என்றால் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது." அவன் உறுதியான குரலில் கூற...



சகுந்தலா எதுவும் பேசாது, கணவனைக் கூடக் காணாது அங்கிருந்து ஓடி வந்து விட்டாள்.



விடுதி வந்த பிறகும் சகுந்தலாவால் திகைப்பில் இருந்து மீள முடியவில்லை. அவள் வேகமாய்த் துடிக்கும் இதயப் பகுதியை நீவி விட்டபடி அமர்ந்தாள். என்னவெல்லாம் பேசுகின்றான்? அவள் கணவனை நினைத்துக் கோபம் கொண்டாள்.



சகுந்தலா வெகுநேரம் யோசித்தவள் பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த விளம்பர நிறுவனத்தைத் தொடர்பு கொண்டாள். அவர்களிடம் இன்று கிளம்புவதற்குச் சம்மதம் என்று அவள் கூறி விட்டாள். அதன் பிறகே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.



சகுந்தலா இரவோடு இரவாகச் சென்னையை விட்டு கிளம்பினாள். அவளுக்கு இருந்த பதற்றத்தில் எங்குச் செல்கின்றோம்? என்று கூடக் கவனிக்காது கிளம்பி விட்டாள். ஏனெனில் தாஸ் அவளது பயணத்தை உறுதி செய்திருந்தான். அதனால் வந்த நம்பிக்கை.



தொலைதூரத்தில் வெளிச்ச புள்ளிகளாய் தெரிந்த சென்னை மாநகரத்தை பார்த்தபடி சகுந்தலா கப்பலில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கும், சக்தீஸ்வரனுக்குமான இடைவெளியை இது குறித்தது. இது தற்காலிகமான இடைவெளி தான். விளம்பர படப்பிடிப்பு முடிந்த பிறகு அவள் மீண்டும் இங்குத் தான் வர வேண்டும். அவனைச் சந்திக்கத் தான் வேண்டும். அவள் தனக்குள் யோசனையில் மூழ்கி இருந்தாள்.



"ஹலோ சகுந்தலா மேடம்..." பழக்கப்பட்ட குரல் கேட்கவும் அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.



சக்தீஸ்வரன் அவளுக்கு வெகு அருகாமையில் நின்று கொண்டிருந்தான். அவனது விழிகள் அவளை அழுத்தமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது. எதிர்பாராது அவனை இங்குக் கண்டதும் அவள் திகைத்து விழித்தாள். அவளது திகைப்பை கண்டு அவன் இரு புருவங்களையும் கேள்வியாய் ஏற்றி இறக்கினான்.



"எனக்குப் பதில் சொல்லாம எங்கே தப்பிச்சு போறீங்க மேடம்?" அவனது குரலில் அத்தனை எள்ளல்...



அவள் வார்த்தைகளை மறந்தவளால் திகைப்பில் நின்றிருந்தாள்.



"அப்படி எல்லாம் நீங்க தப்பிச்சு போக விட மாட்டேன் மேடம்." என்றவன் தனது இருகரங்களையும் அவளது இருபுறம் அணைவாக வைத்து தனது உடலை முன்னுக்கு வளைத்து அவள் புறமாய்க் குனிந்து இருந்தான்.



கணவனது மூச்சுக்காற்றைச் சகுந்தலாவின் முன்நெற்றி உணர்ந்தது. அவனது அருகாமை அவளை இம்சித்தது. அவன் முத்தமிட்ட கணங்கள் அவளுள் தோன்றி அவளை உயிர் வரை வதைத்தது.



அடுத்த நொடி சக்தீஸ்வரன் அவளை நோக்கி குனிந்தவன்... அவளது முகம் எங்கும் ஆவேசமாக முத்தமிட... அவனது ஆவேசத்தில் சகுந்தலா பிடிமானம் இல்லாது பின்னால் சாயப் போனாள். அங்கு வெறும் கம்பிகளே பாதுகாப்பு அரணாய் இருந்தது. கப்பல் வேறு கடலலையின் தாக்கத்தில் அங்குமிங்கும் ஆடி கொண்டிருந்தது. அவள் இன்னும் கொஞ்சம் பின்னால் வளைந்தால்... அவள் நேரே கடலில் சென்று தான் விழ வேண்டும். அவளது இரு கரங்களும் சட்டென்று அவனது சட்டையை இறுக பிடித்துக் கொண்டது. அவளது மென்மையான தேகம் அவனது வலிய தேகத்தோடு ஒட்டி உறவாடி கொண்டிருந்தது.



பெண்ணவள் வலிய வந்து உரசும் போது ஆணவனின் கரங்கள் சும்மா இருக்குமா! கம்பியை பற்றியிருந்த அவனது கரங்கள் மனைவியை ஆரத்தழுவி கொண்டது. ஆணவனின் கரங்களின் அழுத்தம் சொல்லாது சொல்லியது, பெண்ணவளை அவ்வளவு எளிதில் விட்டு விடப் போவதில்லை என்று...



“பறந்தாலும் விடமாட்டேன்

பிறர் கையில் தர மாட்டேன்

அன்று நான் உன்னிடம் கைதியானேன்

இன்று நான் உன்னையே கைது செய்வேன்

எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்”



தொடரும்...!!!

 
Status
Not open for further replies.
Top