All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பொம்முவின் - முன்னோட்ட திரி

Status
Not open for further replies.

aishu

Bronze Winner
பிரவீன், வருணிகா - விழிகள் தேடும் மொழிகள்

"முதலாவது பொண்ணு


ஹாய் நண்பர்களே

விழிகள் தேடும் மொழிகள் ஹிரோயின் என்ட்ரி டீசேரோட வந்திருக்கேன்

பொம்மு

***************

தன் நண்பி கார்த்திகாவுடன் நடந்து வந்த நாச்சிமுத்துவை அந்த வழியால் சைக்கிளில் வந்த ஒருத்தன் வேணுமென்றே கையை அவள் தோளில் தட்ட எரிச்சலடிந்தவள் " டேய் நில்லுடா " என்றபடி தாவணியை சொருகியவள் பாய்ந்து ஓடி போய் அவன் சைக்கிள் கரியலை பிடித்து இழுக்க அவனோ தடுமாறி கீழே விழுந்தான். பக்கத்தில் இருந்த கம்பை எடுத்தவள் கண் மூக்கு பாராமல் அடித்து விட்டு " என் மேலயே கை வைக்கிறியா? நான் யாரு தெரியுமா? சிங்கம் பெருமாளோட பொண்ணுடா " என்றாள்.

அவள் செய்கையில் அதிர்ந்த கார்த்திகா " நாச்சி வேணாம்டி வாடி " என்றாள். " அடியை என்ன நாச்சி என்று கூப்பிடாதே என்று எத்தனை தடவ சொல்லி இருக்கேன் " என்று அந்த ரணகளத்திலயும் கார்த்திகாவுக்கு திட்டினாள்.

அடி வாங்கியவன் " என்னையே அடிச்சிட்டியா? " என்று வலியிலும் எகிற ' டேய் நீ அடங்காமடியா ?? இருடா வாறன் " என்றவள் தேடி பிடித்து ஒரு பெரிய கல்லை தூக்கி அவன் மேலே போடுவதற்கு " டேய்.. உன்ன கொள்ளாம விடமாட்டேன் டா " என்றபடி ஓடி வர அவனோ " ஐயோ காப்பாத்துங்க " என்றபடி எழுந்தவன் ஓட தொடங்கினான். அவளும் விடாமல் துரத்த அவன் பெரிய ஆஜானுபாகுவான ஒருதனில் மோதி நின்றான். அவனோ " என்னாச்சு?? " என்று அக்கறையாக கேட்க " காப்பாத்துங்க அண்ணா " என்றவன் அவன் பின்னல் போய் ஒளிந்து கொண்டான். கல்லை தூக்கியபடி ஓடி வந்தவள் அங்கு நின்றவனை கண்டதும் சற்று நிதானித்தவள் மீண்டும் " ஒளிஞ்சா விட்டு விடுவேனா??" என்றபடி " டேய் நீ என்ன மறச்சுட்டு நிக்க பாக்கி பயலே . தள்ளுடா" என்று அந்த உயர்ந்தவனிடம் சீரியவள் மேலும் " சும்மா தானே நிக்க.. இத பிடி ..எனக்கு கை வலிக்குது " என்று கல்லை அவனிடம் கொடுத்து விட்டு " முன்னுக்கு வாடா " என்று அடி குரலில் கத்தினாள்.
" கொஞ்சம் பொண்ணு மாதிரி நடந்துக்கோ " என்று அவளை திட்டியவன் " என்ன தம்பி நடந்திச்சு ? " என்று அவனிடம் கேட்க
" பார்த்திங்களா அண்ணா எப்படி பஜாரியா இருக்கா என்று. இவளுக்கெல்லாம் அவங்க வீட்ல நல்லா சாத்தி வளத்திருக்கணும். சும்மா தெரியாம கை பட்டிச்சு " என்றதும் " என்ன தெரியாம பட்டதா ?? பொய் சொல்லாதடா" என்று மீண்டும் நான்கு வீட்டிற்கு கேட்குமாறு எகிறினாள்.

" சரி வேணும் என்று தாண்டி வச்சேன்.. என்ன பண்ணுவ ? " என்று அவ்வுயர்ந்தவன் இருக்கும் தைரியத்தில் எகிற அவனை நோக்கி திரும்பியவன் " தம்பி ஊருக்கு புதுசா " என்றான். " ஆம் அண்ணா " என்றதும் தான் தாமதம் கல்லை கீழே போட்டு எட்டி அவன் ஷர்ட் கோளாறை பிடித்தவன் அவனுக்கு சரமாரியாக அறைய அவனோ " அண்ணா ஏன் அடிக்கீங்க? " என்று அலறினான். " நான் அண்ணா என்ற அவ உன் தங்கச்சிடா. அவ மேலயே கை வைக்கிறியா? நான் யார் தெரியுமா சிங்கம் பெருமாளோட புள்ள மாறன்டா " என்றதும் அடி வாங்கியவன் மனதுக்குள் " அண்ணன் தங்கச்சியா ? " என்று கேட்ட படி ஓட தொடங்கினான். அந்நேரம் அங்கு வந்த கார்த்திகா மனதுக்குள் " இன்னைக்கு அண்ணனுக்கும் தங்கச்சிக்கு ஒருத்தன் மாட்டிட்டான் " என்று நினைத்து கொண்டாள்.

அடி வாங்கியவன் தெறித்து ஓடி அவ்வழியால் குடையுடன் வந்த ஒரு பெரியவர் முன்னே விழுந்தான். அப்பெரியவரை பார்த்த மாறனும் நாச்சியும் u turn அடித்து திரும்பி சென்றனர்.

அவரோ " எழுந்திருப்பா என்னாச்சு ? " என்று கேட்க அவன் " யாரோ சிங்கம் பெருமாளோட புள்ளைங்க என்று சொல்லிட்டு என்ன துரத்தி வருதுங்க " என்றான். மேலும் அவன் " என்ன புள்ளைங்கள பெத்து வச்சிருக்கோ அந்த சிங்கம் பெருமாள் " என்று சொல்ல குடையை மடக்கியவர் சரமாரியாக அவனை குடையால் அடிக்க கீழே விழுந்தவன் முனகியபடி " யோவ் நீயும் ஏன் யா குடையால அடிக்க ? லூசாயா நீ? " என்று கேட்க கோபமடைந்தவர் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைக்க அவனோ " ஐயா மன்னிச்சிருங்க ஐயா.. என்ன ஒன்னும் பண்ணாதீங்க. ஏன் அடிக்கீங்க என்றாவது சொல்லுங்க " என்று சொல்ல எழுந்து நின்று வேட்டியை கட்டியவர் " நான் தாண்டா சிங்கம் பெருமாள் " என்றார்.

உடனே அவன் மனதுக்குள் " அடி ஆத்தி ஒரே குடும்பத்துகிட்டயா அடி வாங்கிட்டு இருக்கோம் " என்று அதிர்ந்தவன் " ஐயா மன்னிச்சிருங்க என்றபடி சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான்.
 

aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே,

பொங்கல் வாழ்த்துக்கள்.... உங்களுக்கு ஒரு டீஸர் இலவச இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பொம்மு


அறைக்குள் நீண்ட நேரத்தின் பின் நுழைய கட்டிலில் படுத்து கால் ஆட்டியபடி ஆப்பிள் சாப்பிட்டு கொண்டு இருந்தவளை பார்த்து அதிர்ந்தவன் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவளோ "ஏன் லேட்? " என்று கேட்க அவளை முறைத்தவன் பதிலேதும் பேசாமல் அவளை பார்த்தப்படி இருந்தான். " சரி சரி அந்த பால் இருக்கு எடுத்து குடி" என்றதும் அவன் பொறுமை காற்றில் பறந்தது. " ஏய் நீ மரியாதையாவே பேச மாட்டியா? எவ்வளவு கற்பனையில் இருந்தேன். எல்லாத்தையும் கெடுத்திட்டியேடி " என்று ஆற்றாமையில புலம்ப " எனக்கு மட்டும் கற்பனை இல்லையா? மகேஷ் போல பிளாக் பெல்ட்டை கல்யாணம் பண்ணனும் என்று இருந்தேன்..அவன் கட்டுடல் அழகென்ன , " என்றவள் மேலும் " உன்ன பார்த்தா சண்டை என்று சொல்லவே பயப்படுவ போல இருக்கே.. " என்று அவன் பூர்வீகமறியாமல் பேசியவளை விசித்திரமாக பார்த்தான். அவள் கதையில் சலிப்படைந்தவன் " அவன் தப்பிச்சிட்டான் " என்றதும் அவள் கடித்து கொண்டிருந்த ஆப்பிள் அவன் நெற்றியை பதம் பார்த்தவன் "ஐயோ " என்று அலறியவனை பார்த்தவள் " இந்த அடியே தாங்காத நீயெல்லாம் " என்று நெற்றியில் அடித்தவள் " வெள்ளை பன்னி போல இருந்திட்டு பேசுற பேச்ச பாரு. இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்கிட்டே வச்சுக்காதே " என்றவள் " அதெல்லாம் விடு எனக்கு பத்து மாசத்துல புள்ள வேணும்..உன்னால இப்ப ஏற்பாடு பண்ண முடியுமா? பூங்கொடி கிட்ட சபதம் போட்டிருக்கேன் " என்றவள் கேள்வியில் அதிர்ந்தவன் " என்ன பேச்சு பேசுற?? நீயெல்லாம் பொண்ணா? " என்று கேட்க " இங்க பாரு முடியுமா முடியாதா என்று மட்டும் சொல்லு. நான் ஆணா பொண்ணா என்று அப்புறம் பார்த்துக்கலாம் " என்றாள் சாதாரணமாக. " என்ன பேச்சுடி பேசுற? முடியாது போடி " என்றவனிடம் " ரைட்டு விடு .. நான் நினைச்சது சரியா தான் இருக்கு "என்றபடி அவன் கட்டிலில் படுத்தவள் " அங்க சோபாவில படுத்துக்கோ " என்றாள். அவனோ எழுந்து வந்து அவளருகில் நின்று " என்னடி நினைச்ச ? " என்று கேட்க " அதெல்லாம் உனக்கெதுக்கு ? " என்றவள் திரும்பி படுத்தாள். " உன்னை " என்று எரிச்சலடைந்தவன் அவளை தூக்க " விடுடா " என்று அலற அப்படியே தூக்கி சோபாவில் போட்டவன் நடந்து வந்து கட்டிலில் படுத்தான். அவன் செயலில் கோபமடைந்தவள் " இருடா வரேன் " என்றபடி எழுந்து சென்றவள் அவன் மேல் பாய்ந்து ஏறி இருந்து அவன் தலை முடியை கொற்றாக பற்றி சுழட்டினாள். " விடுடி" என்று அலறியவன் அவளை கட்டிலியேயே தள்ளி விட்டு " நீயே படு ராட்சசி " என்றபடி போய் சோபாவில் படுக்க அவளோ " அசிங்கப்பட்டான் ஆட்டோ காரன் " என்று சத்தமாக சிரித்தவள் திரும்பி படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவன் கதவை திறந்து வெளியேற போனவனிடம் " ஏய் நில்லு " என்று சொல்ல திரும்பி பார்க்க எழுந்து அவளருகில் வந்தவன் தனது பூ பொட்டை களைந்தாள். அதை பார்த்தவன் " இவ லூசா இருப்பாளோ ? " என்று நினைக்க திடீரென அவன் ஷிர்டில் கை வைக்க போனாள். அவள் கையை அவன் பிடித்து " என்னடி பண்ண போற? " என்று கேட்க " ஐயே பெரிய ஆணழகன் பாரு. அம்மாஞ்சி போல இருக்கிற உன் கூட எல்லாம் ரொமான்ஸ் வராது "என்றவளை எரிச்சலுடன் பார்த்தான். பிறகு பட்டனை கழட்டாமலே ஷிர்டில் இருந்து கையை எடுத்தவள் தனது குங்குமத்தை அவன் ஷிர்டில் தேய்த்து அவன் கன்னத்தில் தேய்க்க அவனே அறியாமல் அவள் மென்மையான வருடலில் அவன் உடல் சிலிர்த்தது. அவள் கையை தட்டி விட்டவன் " என்னடி இதெல்லாம் ? " என்றபடி கன்னத்தை துடைக்க போக அவன் கையை பிடித்தபடி " நீ படம் பார்க்க மாட்டியா? இதெல்லாம் இருந்தா தான் முதலிரவு நடந்த என்று நம்புவாங்க " என்றாள். கைகளை கட்டி அவளை பார்த்தபடி " இவ எந்த ஜெனெரேஷன் ல இருக்காளோ" என்று நினைத்தான்.

பொம்முவின் "விழிகள் தேடும் மொழிகள் " கருத்து திரி
 

aishu

Bronze Winner
"பிரவீன்.." என்று அலறினாள் வருணிகா. அவனோ கேட்டும் கேட்காமல் டிவி பார்த்து கொண்டிருந்தான். கோபத்துடன் அறையிலிருந்து வெளியே வந்தவள் "உனக்கென்ன செவிடா?" என்று கேட்க அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை. "ஓ ஐயா நம்ம கூட பேசுறல என? மறந்துட்டேன். சரி அத விடு எனக்கு இந்த மாசம் குழந்தை தங்கல.. என்ன பண்ணலாம்?" என்று கேட்டாள். "ஏதாவது பண்ணி இருந்தா தானே"என்று மனதில் நினைத்தவன் எதுவும் பேசாமல் இருக்க "சரி பேச தேவல முத்தம் கொடு அப்போ அடுத்த மாசம் குழந்தை வந்திரும்" என்றாள் பாவமாக. "என்ன?" என்று அதிர்ந்தவன் அவளை பார்க்க. "அப்படி என்ன கேட்டுட்டேன் இப்படி அதிர்ச்சியாகிறா ...முத்தம் கொடு" என்று சின்ன பிள்ளை போல அவள் கேட்க வந்த சிரிப்பை அடக்கியவன் முடியாது என்று தலை ஆட்டினான்.

"நான் கொடுத்தாலும் குழந்தை பிறக்குமா ?" என்று கேட்க "போன பிறவில ஏதோ பெரிய பாவம் செய்திருக்கேன் " என்று நினைத்தவன் எதுவும் பேசவில்லை. அருகே வந்து அமர்ந்தவள் "அப்போ நான் தரவா?" என்று கேட்க அதிர்ந்து அவளை பார்த்தான். அவன் முகம் அருகே அவள் நெருங்கி வர ஆவலாய் இருந்தவன் "நூலளவு இடைவெளியில் "எனக்கு தெரியல " என்று சொல்லி விலக அவன் முகம் காற்று போன பலூன் போல ஆனது. "இதுக்கு நானே கொடுத்திருக்கலாம்" என்று மனதில் நினைத்து கொண்டான்.
 

aishu

Bronze Winner
விலகி சென்றவேளை ஏக்கத்தோடு பார்த்தவன் பெருமூச்சோடு எழும்பி அவள் முன்னே வந்து நின்றான். அறைக்குள் சோகமாக போக போனவள் அவனை பார்த்து "வழி விடு நான் போகணும் " என்றாள். " இல்லை என்று தலையாட்டியவன் " உனக்கு குழந்தை வேணாமா? " என்று கேட்க " வேணும் .. ஆனா நீ தான் முத்தம் தர முடியாது என்று சொல்றியே " என்றவளை அழுத்தமாக பார்த்தவன் " இன்னைக்கு நான் கொடுக்கன் ஆனா ஒவ்வொரு நாளும் நீ தரணும் அப்போ தான் குழந்தை பிறக்கும் " என்றான்.

" நானா " என்று வாய் பிளக்க அவள் இடையை வலது கையால் சுற்றி தன்னை நோக்கி இழுத்தவன் இடது கையால் தாடையை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன் விரிந்திருந்த அவள் செவ்விதழ்களை கவ்வி கொண்டான்.

ஏற்கனவே விரிந்திருந்த அவளது கண்கள் அதிர்ச்சியில் இன்னும் விரிந்தன. ஆனால் அவன் கண்களோ தன்னால் மூடி கொள்ள முதன் முதலில் அவள் ஹோர்ர்மோன்கள் வேலை செய்ய அவள் கண்களும் தானாக மூடியது.

ஆனால் அவன் கைகளோ அவன் சொல் கேட்காமல் அவள் முகத்திலிருந்து இறங்கி மேனியில் உலா வர விழித்து கொண்டாள். அவளிடம் சுரந்த காதல் ஹோர்மோன்கள் அனைத்தும் வடிந்து சினம் துளிர்த்தது. முடியுமான வரைக்கும் அவனை தள்ளி விட எரிச்சலடைந்தவன் " என்னடி " என்று கேட்டான். " இப்போ என்ன பண்ணின?? " என்று அவள் சீற " நீ தானே கேட்ட இப்போ எதுக்கு திட்டுற? " என்று அவன் மாறி கேட்டான். " நான் கேட்டது என்ன நீ பண்றது என்ன?? இனி கண்ட இடத்துல கை வச்ச உன் கை இருக்காது." என்றதும் தான் அவனுக்கு தான் செய்த வேலை விளங்கியது. " அது " என்று அவன் தொடங்க கை நீட்டி தடுத்தவள் " இப்போ வாய கழுவனும் " என்றபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவளை வெறித்து பார்த்தபடி சோபாவில் இருந்தவன் "தர்மா.. இப்போ சந்தோஷமா? " என்று தன் தந்தைக்கு திட்டிவிட்டு அவள் மேனியில் உலாவந்த கையை தூக்கி முகத்தின் நேரே கொண்டு வந்து " அது தான் செமயா வாங்கி இருக்கியே.. உனக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லையா?? .. தூ " என்று தன் கையை பார்த்து திட்டி அதுக்கு துப்பி கொண்டிருக்கும் போது வாயை கழுவி விட்டு வெளியே வந்தவள் வாயை முந்தானையால் துடைத்தபடி " யார் கூட பேசிட்டு இருக்க பைத்தியம் மாதிரி?? " என்று கேட்டாள். அவளை முறைத்தவன் " இது வரைக்கும் பைத்தியம் ஆகல இனி கண்டிப்பா ஆயிருவன்" என்றான்.

வாயில் துடைப்படாமலே இருந்த நீர் துளிகளை பார்த்தவன் " நல்லா கழுவியச்சா ? " என்று கேட்க " ஆமா.. நீ கழுவலயா? " என்று கேட்க " எனக்கு உன்ன போல அருவருப்பில்லை" என்றான். அவளோ " எனக்கு ஒண்ணும் அருவருப்பில்லை.. கையால் எவ்வளவு வேலையும் செய்வன்.. எங்க ஊருல கேட்டு பாரு ஆனா உன் எச்சி என்றதும் ஒரு மாதிரி இருக்கு. " பக்கத்தில் இருந்தவளை முறைத்து பார்த்தவன் எதிர் பாராமல் அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவள் இதழ்களை கவ்வி அவள் திமிர திமிர மீண்டும் முத்தமிட்டான். அவன் விட்டதும் அடிக்க வந்த அவள் கையை பிடித்தவன்" நீ எத்தனை தரம் கழுவினாலும் இப்படி தான் கிஸ் பண்ணுவேன். கழுவாம இருந்தா உனக்கு நல்லது " என்றவன் " கழுவின எனக்கு நல்லது " என்று மனதில் நினைத்து கொண்ட படி அவளை பார்க்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.
 

aishu

Bronze Winner
என்னை அறியா என்னுயிரே

முன்னோட்டம்

சுற்றி நேத்ராவின் ஆட்கள் நிக்க கம்பெனியின் அனைவர் முன்னிலையிலும் கீழே வாயில் ரத்தம் வடிய கிடந்தான் அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் இஷானின் ஒற்றன் கணேஷ். அவன் முன்னால் கால் மேல் கால் போட்டு இருந்த நேத்ரா முறைத்தபடி எழுந்து தனது ஹீல் போட்ட காலினை அவன் கை மேல் வைத்து அழுத்தியவள் "இந்த கை தானே கோடேஷனை திருடி கொடுத்திச்சு?" என்று பற்களுக்கு நடுவில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

"மேடம் விட்டிருங்க.. தெரியமா பண்ணிட்டேன்.. வலிக்குது" என்று அவன் அலற சிரித்தபடி "உன் பாஸ் கிட்ட பேசிட்டு விடுறதா இல்லையா என்று யோசிக்கலாம்" என்றவள் சொடக்கிட்டு "மாயா கால் ஹிம்" என்றாள். "மேடம் கை " என்று அவன் கதற "கொஞ்சம் வெயிட் பண்ணு buddy " என்றவள் காலில் அழுத்தத்தை கூட்ட அவன் உயிர் போகும் வலியில் துடித்தான்.

அங்கு கதிரையில் இருந்த இஷானின் தொலைபேசி சிணுங்க அதை எடுத்து நம்பரை பார்த்தவன் அதை தூக்கி தனது பி எ விடம் கொடுத்து "ஸ்பீக்கர் ல போடு" என்றான். மறு முனையில் "நான் மாயா, நேத்ரா மேடத்தோட பி எ " என்றதும் "சோ வாட்?" என்றான் இஷான். "உங்க கூட மேடம் பேசணுமாம்" என்று அவள் சொல்ல"sure " என்று சிரித்தபடியே சொன்னான்.

மாயா தொலைபேசியை நேத்ராவிடம் கொடுக்க அதை காதில் வைத்தவள் "ஹெலோ Mr இஷான்.. உங்க ஸ்பை இப்போ என் கால் கீழே " என்று சிரித்தவள் "கொஞ்சம் ட்ரெயின் பண்ணி அனுப்ப மாட்டிங்களா? ரொம்ப ஈஸியா மாட்டிகிட்டான்" என்றதும் சத்தமாக சிரித்தான் இஷான். "வெல் அதயே தான் உங்க கிட்டயும் கேட்கிறேன்" என்றவனின் வலது கை அவன் கால் கீழ் விழுந்து கிடந்த பெண்ணின் தலைமுடியை கொற்றாக பற்றியது.

அவன் சிரித்ததில் அதிர்ந்த நேத்ரா தலைமுடியை இழுத்த வலியில் கதறிய பெண்ணின் குரல் கேட்டு "ரீமா" என்று முணு முணுத்தவள் மேலும் இஷானிடம் "அவளை விட்டிரு ப்ளீஸ் " என்று கெஞ்ச தொடங்கினாள். "அட உன் friend க்கு உன் மேல பாசம் இருக்கும்மா" என்று ரீமாவை பார்த்து சொன்ன இஷான். "உன் கால் கீழ கிடக்குறவன் ஜஸ்ட் மை ஸ்பை , ஆனா இவ உன் உயிர் தொழி ரைட்?" என்றவன் மேலும்"எப்போவும் நெருக்கமானவங்கள இப்படி critical jobs செய்ய விட கூடாது பேபி..எப்போ வேணும்னாலும் மாட்டிக்கலாம் இந்த ரீமா போல" என்றான்.

"அவளை விடு.. அவ பாவம்" என்ற நேத்ராவிடம் "இப்போ நீ என் ஸ்பை கை மேல இருக்கிற காலை எடுப்பியாம்" என்றதும் காலை விரைவாக எடுத்தவளுக்கு எப்படி அவனுக்கு இதெல்லாம் தெரியும் எனறு யோசித்து சுத்தி சுத்தி பார்த்தாள். "இப்போ எதுக்கு நாலு பக்கமும் சுத்தி பார்க்குற?" என்று கேட்டு அவளை இன்னும் அதிர செய்தவன் "உன் friend ஐ விடுறதுல ஒன்னும் பிரச்சன இல்ல.. but ஷி இஸ் லுக்கிங் ஹாட்" என்றதும் நேத்ராவுக்கு தூக்கி வாரி போட்டது.

"ப்ளீஸ் அவளை ஒண்ணும் பண்ணாத. நீ என்ன சொன்னாலும் செய்றன் " என்றாள் நேத்ரா. "பேபி அவசரப்பட்டு வார்த்தையை விடாதே.. அப்புறம் ஏன் அப்பிடி சொன்னோம் என்று பீல் பண்ணுவ பரவாயில்லையா?"என்று கேட்க "இட்ஸ் ஓகே " என்று அடுத்த கணம் யோசிக்காமல் விடை சொன்னவளை நினைத்து இரு புருவங்களையும் தூக்கியவன் "தட்ஸ் குட் .. உனக்கு உண்மையாவே பாசம் வைக்க தெரிஞ்சிருக்கு. நொட் பேட் " என்றான்.

அவன் கேள்வியில் வெளி வந்த உணர்ச்சிகளை அடக்கியவள் "என்ன பண்ணனும்?" என்று இறுகிய குரலில் கேட்க அவனோ "நீ மட்டும் தனியா என் ஆபீஸ்க்கு வா" என்றவன் மேலும் "அப்படி வரலைன்னா உன் ரீமா உயிர் இருக்கும் ஆனா கற்பு இருக்காது. அத ஆள் எல்லாம் வச்சு பண்ண மாட்டேன்.நானே straight ஆ அந்த வேலையில இறங்கிருவேன். understand ?" என்று அவள் காயப்பட வேண்டும் என்றே அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை கத்தி கொண்டு கிழித்தது.

தொலைபேசியை அணைத்தவள் தனது உயிர் நண்பிக்காக சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க தனியாக புறப்பட்டாள்.

பொம்முவின் "என்னை அறியா என்னுயிரே " -கருத்து திரி
 
Last edited:

aishu

Bronze Winner
என்னை அறியா என்னுயிரே

முன்னோட்டம்

தூங்கி எழுந்தவள் அருகில் அவனை பார்க்க அவனோ அவளுக்கு முதுகு காட்டியபடி சிகெரட் பிடித்து கொண்டிருந்தான்.

இருமியபடி எழுந்தவளை திரும்பி பார்த்தவன் சொடக்கிட்டு " அவுட் " என்றான். அவளும் அவனை முறைத்தபடி எழுந்து உடைகளை சரி செய்து விட்டு வெளியேற போக " உன் friend வீட்ட போய் சேர்ந்துட்டா " என்றான்.

அவனை முறைத்தபடி கதவை திறந்தவள் முதுகில் அவள் ஹீலால் எறிய " ஆ " என்றபடி திரும்பியவளிடம் " இதெல்லாம் எடுத்துட்டு போ " என்றான்.

அவனின் செய்கையில் கோபம் எகிற அவன் எறிந்த ஹீல்சை எடுத்து அவனுக்கே எறிந்தவள் கதவை திறந்து கொண்டு ஓட ஆயத்தமானாள்.

கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தவன் வெறும் காலுடன் ஓடியவளின் தலைமுடியை எட்டி பிடித்து இழுக்க அவளும் " ஆ விடு " என்று அலற " எனக்கே செருப்பை ஏறியிற அளவுக்கு உனக்கு தைரியமா? " என்று கேட்டவன் ஒற்றை கையால் அவள் தலைமுடியை பிடித்தபடி அவள் திறந்த வாயில் சிகரெட்டை வைக்க அவளோ இரும தொடங்கினாள்.

அப்படியே அவளை தள்ளி விட்டவன் கீழே விழுந்தவளை சுட்டு விரல் காட்டி எச்சரித்து விட்டு சிகரெட்டை ஊதியபடி உள்ளே சென்றான்.

அவள் அழுதால் தான் நேத்ரா இல்லையே. அனல் பறக்கும் கோபத்துடன் வெறும் காலுடன் நடந்து வந்து வெளியே இருந்த அவள் பையை எடுத்தவள் போனை ஒரு நம்பருக்கு போட்டு " அவன் தங்கச்சிய தூக்கிடு " என்று சொல்லி விட்டு தனது காரில் ஏறி கொண்டாள். ஸ்டேரிங் வீலை அழுத்தி பிடித்தவள் மனம் கோபத்தில் உலையாக கொதித்து கொண்டு இருந்தது.

பொம்முவின் "என்னை அறியா என்னுயிரே " -கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top