Niviaju
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 23
அடுத்த நாள் காலை...
"கவின் உனக்கு வர சண்டே ஒரு வொர்க் இல்லைதான", வேணி.
"இல்லைமா. ஏன் கேக்குறீங்க", கவின்.
"உனக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்... அதான்", மதி கூறி சிரிக்க..
"மதி", உதய் அவனை அதட்ட..
"என்ன சொல்றீங்க... உதய்க்கு தான நிச்சயம்... எனக்கு என்ன", கவின்.
"மதி சும்மா சொல்றான்டா.. எனக்கு தான் நிச்சயம்.. அதான் அம்மா கேட்டாங்க.. அன்னைக்கு முழுவதும் நீ வீட்டில் தான் இருக்கனும் ", உதய்.
"நான் வராமல் இருப்பேனா.. ஆனால் நான் முழுவதும் அங்கே இருந்து என்ன செய்யப் போறேன்.. எனக்கு வேலை இருக்கு.. கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்", என்றவன் அந்த இடத்தில்கொஞ்ச நேரம் இருப்பதே கடினம் என்று உணர்ந்தான். இதில் எப்படி வாழ் நாள் முழ்வதும் ஒரே வீட்டில் என்று நினைக்கும் பொழுதே முகம் சிவந்தது...
"நீ இருந்து தான் ஆக வேண்டும்... அதை அன்று பார்க்கலாம்.. இப்பொழுது சாப்பிடு",மதி.
ஹம்சிக்கு அன்று காலை எழவே முடியவில்லை. நிலா விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கூற... அவளும் சரி என்று கூறி விட்டாள்.
நிலா மட்டும் ஆபிஸ் வரக் கண்ட மதி என்னவெனக் கேட்க... உடல்நிலை சரியில்லை எனக் கூற... அவனும் சென்றுவிட்டான்.
கவினுக்கு ஹம்சி வராததால் 1மணி நேரம் அமைதியாக இருந்தவன் அதன் பின் தாங்காமல் ஹம்சி எங்கே என்று ராஜுவிடம் கேட்க..
"அவளுக்கு உடலுக்கு முடியலைனு நிலா சொன்னானு மதி சொன்னான்டா..", ராஜு.
"ஓ... அதை இன்பார்ம் பண்ண மாட்டாங்களா மேடம். சரி. மதி கேண்டின் வரியா...", கவின்.
"இதோ.. இந்த பைல் சேவ் பன்னிட்டு வரென் டா. நீ போ.. நான் வரென்..", மதி.
"ம்ம்ம்.. சீக்கிரம் வாடா", கவின்.
"டீ சொல்லிருக்கேன் டா", கவின்.
"சரி.. என்ன பிரச்சினை சொல்லு... ", மதி.
"அது... அதுவந்து.. எனக்கு", கவின்.
கவின் கூற வரவும் மதியின் மொபைலில் அலறல் சத்தம். மதி ஒரு நிமிடம் என்றவன் அட்டண்டு செய்தவன் மறுபுறம் சொன்னதும் உடனே... ஹம்சிக்கு ரொம்ப உடலுக்கு முடியல போல டா.. நிலாக்கு இன்பார்ம் பண்ண சொல்றா.. நான் போய் சொல்லிட்டு வரென்..
"என்ன.. ஹம்சிக்கு என்ன ஆச்சு... வேண்டாம் நான் போய் பார்க்குறேன்... நீ ஆபிஸ் ல இரு ",என்று கூறிய கவின் வேகமாக பைக் எடுத்துச் சென்று விட்டான். கவின் போவதினையே பார்த்துக் கொண்டு இருந்த மதிக்கு கவினின் செயலில் சிறிது யோசனை. ஆனால் அதன் பின் வேலையினைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
விரைவில் வீட்டினை அடைந்த கவின் வெளியில் கதவைத் தட்ட.. கதவுத் தானாக திறந்தது.. உள்ளே செல்ல.. ஹம்சி கையில் மொபைலுடன் குறுகிப் படுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க ஜுரம் வந்திருக்க... அவளை எழுப்ப முயற்சிக்க.. அவள் முனங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் உடையினைச் சரி செய்தவன் அவளினை எழுப்ப முயற்சிக்க... அவள் முனங்கியவாரே இருக்க... கவின் குடும்ப மருத்துவருக்கு அழைத்து வர சொல்லியவன்... அவளை சுத்தம் செய்து காத்திருந்தான். டாக்டர் ஊசி போட்டவர் மாத்திரையும் கொடுக்கச் சரி ஆகிவிடும் என்றார். அவரும் சென்றுவிட.. கவின் ஹம்சிக்கு மாத்திரையினைக் கொடுத்து உறங்க வைத்தான்.
ஹம்சி துயில் கொண்டு இருக்க... கவின் அவள் முகத்தினையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஹம்சி தான் உயிர் என்றிருக்க.. வேறு ஒருவளை எப்படி மணமுடிக்க முடியும்... அது சாத்தியமே இல்லை. வீட்டில் திரும்பப் பேசும்பொழுது வேண்டாம் எனக் கூறிவிட வேண்டும் என நினைத்தவன்... அவளின் மேஜை அருகில் இருந்த கடித முகப்பினைப் பார்த்தான். அதன் மேல் போட்டோ என்று இருக்க...
அதனைக் கையில் எடுத்துப் பார்த்தான். உள்ளே இரண்டு போட்டோ இருக்க... அதில் ஒன்றைக் கையில் எடுத்தவன் அதில் இருந்த உருவத்தினைப் பார்த்து விரக்தியாய் சிரித்தான். அதன் பின்னர் உதய் வெட்ஸ் ஹம்சி என்றிருக்க கோவத்தில் தூக்கி எறியப் போக.. நிலா ஹம்சி என்றவாறு உள்ளே நுழைந்தாள்.
"ப்ரோ ஹம்சி இப்போ எபப்டி இருக்கா....",நிலா.
"ஒன்னும் இல்லை. டாக்டர் ஒன்னும் இல்லை சொல்லிட்டாங்க.. ",கவின்.
கவினின் கையில் இருந்த போட்டோவினைப் பார்த்தவள் .. "ஓ.. கல்யாண மாப்பிள்ளை போட்டோ வந்திடுச்சா... ", நிலா.
"சரி நான் வரென் நிலா. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு", கவின்.
"சரிங்க அண்ணா... பை", நிலா.
தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி
அடுத்த நாள் காலை...
"கவின் உனக்கு வர சண்டே ஒரு வொர்க் இல்லைதான", வேணி.
"இல்லைமா. ஏன் கேக்குறீங்க", கவின்.
"உனக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்... அதான்", மதி கூறி சிரிக்க..
"மதி", உதய் அவனை அதட்ட..
"என்ன சொல்றீங்க... உதய்க்கு தான நிச்சயம்... எனக்கு என்ன", கவின்.
"மதி சும்மா சொல்றான்டா.. எனக்கு தான் நிச்சயம்.. அதான் அம்மா கேட்டாங்க.. அன்னைக்கு முழுவதும் நீ வீட்டில் தான் இருக்கனும் ", உதய்.
"நான் வராமல் இருப்பேனா.. ஆனால் நான் முழுவதும் அங்கே இருந்து என்ன செய்யப் போறேன்.. எனக்கு வேலை இருக்கு.. கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்", என்றவன் அந்த இடத்தில்கொஞ்ச நேரம் இருப்பதே கடினம் என்று உணர்ந்தான். இதில் எப்படி வாழ் நாள் முழ்வதும் ஒரே வீட்டில் என்று நினைக்கும் பொழுதே முகம் சிவந்தது...
"நீ இருந்து தான் ஆக வேண்டும்... அதை அன்று பார்க்கலாம்.. இப்பொழுது சாப்பிடு",மதி.
ஹம்சிக்கு அன்று காலை எழவே முடியவில்லை. நிலா விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கூற... அவளும் சரி என்று கூறி விட்டாள்.
நிலா மட்டும் ஆபிஸ் வரக் கண்ட மதி என்னவெனக் கேட்க... உடல்நிலை சரியில்லை எனக் கூற... அவனும் சென்றுவிட்டான்.
கவினுக்கு ஹம்சி வராததால் 1மணி நேரம் அமைதியாக இருந்தவன் அதன் பின் தாங்காமல் ஹம்சி எங்கே என்று ராஜுவிடம் கேட்க..
"அவளுக்கு உடலுக்கு முடியலைனு நிலா சொன்னானு மதி சொன்னான்டா..", ராஜு.
"ஓ... அதை இன்பார்ம் பண்ண மாட்டாங்களா மேடம். சரி. மதி கேண்டின் வரியா...", கவின்.
"இதோ.. இந்த பைல் சேவ் பன்னிட்டு வரென் டா. நீ போ.. நான் வரென்..", மதி.
"ம்ம்ம்.. சீக்கிரம் வாடா", கவின்.
"டீ சொல்லிருக்கேன் டா", கவின்.
"சரி.. என்ன பிரச்சினை சொல்லு... ", மதி.
"அது... அதுவந்து.. எனக்கு", கவின்.
கவின் கூற வரவும் மதியின் மொபைலில் அலறல் சத்தம். மதி ஒரு நிமிடம் என்றவன் அட்டண்டு செய்தவன் மறுபுறம் சொன்னதும் உடனே... ஹம்சிக்கு ரொம்ப உடலுக்கு முடியல போல டா.. நிலாக்கு இன்பார்ம் பண்ண சொல்றா.. நான் போய் சொல்லிட்டு வரென்..
"என்ன.. ஹம்சிக்கு என்ன ஆச்சு... வேண்டாம் நான் போய் பார்க்குறேன்... நீ ஆபிஸ் ல இரு ",என்று கூறிய கவின் வேகமாக பைக் எடுத்துச் சென்று விட்டான். கவின் போவதினையே பார்த்துக் கொண்டு இருந்த மதிக்கு கவினின் செயலில் சிறிது யோசனை. ஆனால் அதன் பின் வேலையினைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
விரைவில் வீட்டினை அடைந்த கவின் வெளியில் கதவைத் தட்ட.. கதவுத் தானாக திறந்தது.. உள்ளே செல்ல.. ஹம்சி கையில் மொபைலுடன் குறுகிப் படுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க ஜுரம் வந்திருக்க... அவளை எழுப்ப முயற்சிக்க.. அவள் முனங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் உடையினைச் சரி செய்தவன் அவளினை எழுப்ப முயற்சிக்க... அவள் முனங்கியவாரே இருக்க... கவின் குடும்ப மருத்துவருக்கு அழைத்து வர சொல்லியவன்... அவளை சுத்தம் செய்து காத்திருந்தான். டாக்டர் ஊசி போட்டவர் மாத்திரையும் கொடுக்கச் சரி ஆகிவிடும் என்றார். அவரும் சென்றுவிட.. கவின் ஹம்சிக்கு மாத்திரையினைக் கொடுத்து உறங்க வைத்தான்.
ஹம்சி துயில் கொண்டு இருக்க... கவின் அவள் முகத்தினையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு ஹம்சி தான் உயிர் என்றிருக்க.. வேறு ஒருவளை எப்படி மணமுடிக்க முடியும்... அது சாத்தியமே இல்லை. வீட்டில் திரும்பப் பேசும்பொழுது வேண்டாம் எனக் கூறிவிட வேண்டும் என நினைத்தவன்... அவளின் மேஜை அருகில் இருந்த கடித முகப்பினைப் பார்த்தான். அதன் மேல் போட்டோ என்று இருக்க...
அதனைக் கையில் எடுத்துப் பார்த்தான். உள்ளே இரண்டு போட்டோ இருக்க... அதில் ஒன்றைக் கையில் எடுத்தவன் அதில் இருந்த உருவத்தினைப் பார்த்து விரக்தியாய் சிரித்தான். அதன் பின்னர் உதய் வெட்ஸ் ஹம்சி என்றிருக்க கோவத்தில் தூக்கி எறியப் போக.. நிலா ஹம்சி என்றவாறு உள்ளே நுழைந்தாள்.
"ப்ரோ ஹம்சி இப்போ எபப்டி இருக்கா....",நிலா.
"ஒன்னும் இல்லை. டாக்டர் ஒன்னும் இல்லை சொல்லிட்டாங்க.. ",கவின்.
கவினின் கையில் இருந்த போட்டோவினைப் பார்த்தவள் .. "ஓ.. கல்யாண மாப்பிள்ளை போட்டோ வந்திடுச்சா... ", நிலா.
"சரி நான் வரென் நிலா. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு", கவின்.
"சரிங்க அண்ணா... பை", நிலா.
தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி