All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 8

சந்தியா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. விக்ரம் அவளை பலமுறை அழைத்தான். அது அவளது செவிகளை எட்டவில்லை. கடைசியாக அவளை வேகமாக உலுக்கினான்.

“என்னடி ப்ரீஸ் ஆயிட்ட. அதுக்குள்ள எந்த உலகத்துக்கு போயிட்ட” அவன் நக்கலாக கேட்க, அவள் முகத்திலோ சிரிப்பை காண முடியவில்லை.

“எதுக்காக டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்தாங்கனு உனக்கு தெரியுமா விக்ரம்”

“ஹ்ம்ம்.. தெரியும்” என்றதும் எதற்கு என்ற கேள்வியை கொண்டு அவனை பார்த்தாள்.

“லெவன் – ‘சி’ பையன் அரவிந்த். அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணும் இவனை பிடிச்சிருக்குங்கற மாதிரி தான் இருந்திருக்கா. இப்ப திடீர்னு கௌதமை தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாளாம். அதுக்கு கௌதி என்ன பண்ணுவான். கௌதிய ரிவென்ஜ் எடுக்கறதா நினைச்சி அவன் தான் அந்த டேரை தந்திருக்கான். சரியான லூசு பையன். இவனும் என்ன சொல்லப் போறான்னே தெரியாம என்ன சொன்னாலும் செய்வேன், இல்ல ஸ்கூலை விட்டு போய்டுறேன்னு சொல்லிருக்கான்”

“டேய் இதெல்லாம் எனக்கு தெரியும்டா. அதான், இவன் வின் பண்ணிட்டான்ல. அப்புறம் எதுக்கு போனான். இப்ப எதுக்கு ஆக்‌ஷன் எடுத்திருக்காங்க” அவன் சொல்வதை முழுவதாக கேட்கும் பொறுமை கூட அவளிடத்தில் அப்போதில்லை.

“ஒண்ணு இவன் டேர் பண்ணாம ஸ்கூலை விட்டு போயிடுவான். இல்ல எதாவது பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்லி அவ இவன் பேருல கம்ப்லைன் பண்ணி அதுக்கு ஸ்கூல் சைட்ல இருந்து டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணனும்ங்கறது தான் அவன் பிளானே” விக்ரம் சொல்ல

“ஆனா நான் தான் கம்ப்லைன் பண்ணலையே விக்ரம்” அப்பாவி தனமாக கேட்டாள்.

“ஹேய் முதல்ல கேளுடி. கௌதமுக்கு வேற ஆளெல்லாம் சூனியம் வைக்க தேவையில்ல. அவனே வச்சிப்பான். அரவிந்த் பிளான் ஒண்ணும் சக்ஸஸ் ஆகல. நீயா போயிட்டனால பெருசுப்படுத்தாம விட்டுட்ட. இப்ப கௌதம் வின் பண்ணிட்டான், அதனால ஸ்கூலை விட்டும் போகமாட்டான்னு அடுத்த நாளே எங்கிட்ட வந்து போட்டு கொடுத்துட்டான்”

“என்னடா சொல்ற. அவனா உங்கிட்ட சொன்னான்” கண்களை விரித்து கேட்டாள்.

“ஆமா, கௌதம் ப்ரொபோஸ் பண்ணினான் சந்தியா சைலண்டா அழுதிட்டே போயிட்டானு அவன் தான் எங்கிட்ட சொன்னான். இத நான் கௌதம்கிட்ட சொன்னேன். சொன்னவுடனே அவனை அப்படியே விட்டுடுன்னும் சொன்னேன். கேட்கற ஆளா அவன். சாயந்திரமே கிரவுண்ட்ல வச்சி அவனை அடி அடின்னு அடிச்சிருக்கான். என்னமோ அவன் அடிக்கலனு அன்னைக்கு கவலைப்பட்டீயே. நாளைக்கு போய் அரவிந்த பாரு எப்படி அடிச்சிருக்கான்னு தெரியும். கண்ணுக்கு கீழ இன்னமும் வீக்கம் குறையல. அதப் பார்த்துட்டு ஸ்டாஃப், பிரின்சிபெல்கிட்ட கூட்டிட்டு போயிட்டாங்க. ப்ரின்ஸி உடனே ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” விக்ரம் நடந்ததை சொல்ல சந்தியாவிற்கு அதிர்ச்சியில் கண்களே வெளியே வந்துவிட்டது.

“ஏன் விக்ரம் இப்படி பண்ணான். அவன் தான் பைத்தியம், ஒரு பொண்ணுக்காக இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டான்னா. இவன் எதுக்கு அவனை அடிக்கணும்”

“என்னை கேட்டா”

“நீ பேசினியா”

“நான் அவன்கிட்ட பேசல. பிரச்சனை வேண்டாம்னு குழந்தைக்கு சொல்றமாதிரி சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு போய் அடிச்சி வச்சிருக்கான். பிரின்சிபெல் ரூம்ல இருக்குற நம்ப சுரேந்திரன் சார் சொல்றாரு, பிரின்சிபெல் ரெண்டுபேரயும் நிக்க வச்சி இப்படி அடிச்சிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனைனு கேட்டாங்களாம். அவன் கௌதிக்கு டேர் சொன்னேன்னு சொன்னா வீட்டுக்கு தெரிஞ்சி திட்டப் போறாங்கனு எதுவும் சொல்லலையாம். இவன்கிட்ட ஏன் அடிச்சனு கேட்டதுக்கு வாயயே திறக்கலயாம். அதான் ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க” விக்ரமுக்கு கௌதம் மீது கோபம் அதனால் இவன் அவனுக்கு அழைக்கவே இல்லை. கௌதமும் ஒன்றிரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு விட்டு விட்டான்.

“அவனை அசிஸ்டன்ட் ப்யூப்பெல் லீடர் போஸ்ட்க்கு எலேக்‌ஷன்ல நிக்க வைக்கலாம்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம். அவ்ளோ தான் எல்லாம் போச்சு. இந்த வருஷம் எதுவுமே பண்ணமுடியாது. பெரிய பிளாக் மார்க்” விக்ரம் ஆதங்கத்தில் புலம்ப

“இவன் ஏன் இப்படி பண்றான். அவனுக்கு கால் பண்ணு” சந்தியா வருத்தத்தில் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு விக்ரமும் கௌதமுக்கு அழைத்து கைபேசியை ஸ்பீக்கரிலும் போட்டான்.

“சொல்லு விக்கி” குரலில் எந்த ஒரு வருத்தமுமின்றி சொன்னவன் மீது இருவருக்கும் கோபம் தான் வந்தது.

இருந்தும் அதை அடக்கிக்கொண்டு “எங்க இருக்க கௌதி” என்று விக்ரம் கேட்டான்.

“வீட்ல தான். இப்ப தான் எங்க அம்மாவ கொஞ்சி நைஸ் பிடிச்சி கேசரி செஞ்சித் தர சொன்னேன். அவங்க அத செஞ்சிக்கிட்டு இருக்காங்க நான் பக்கத்துமேடைல உட்கார்ந்து எப்போ கேசரி ரெடி ஆகும்னு பார்த்துட்டு இருக்கேன்” அவன் சொன்னதை கேட்டு விக்ரமுக்கு சிரிப்பு வந்தது. சத்தமாக சிரிக்கவும் செய்தான்.

சந்தியாவிற்கோ எரிச்சலாக இருந்தது ‘என்னமோ பெரிய சாதனை பண்ணி அவார்ட் வாங்கின மாதிரி எவ்ளோ சந்தோசமா கேசரி கேட்டிருக்கான். ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ணிருக்காங்கனு கொஞ்சமாவது கவலை இருக்கா’ மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா, விஷயம் வீட்டுல தெரியுமா” விக்ரம் கேட்க சமையலறையில் இருந்து மெல்ல நகர்ந்தவன்

“அத சொன்னா எங்க அம்மா கேசரி செஞ்சிட்டு இருப்பாங்களா. உடம்பு சரியில்லாம லீவ் போட்ட மாதிரி செட் பண்ணிருக்கேன்” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான். சந்தியாவிற்கு வெறுத்தேவிட்டது. நீ பேசுகிறாயா என்று விக்ரம் கண்ஜாடை காட்ட அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

“ஏன்” என்று சத்தம்வராமல் வாயசைத்து கேட்க

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” என்று அவள் கையசைவாலே பதிலளித்தாள்.

“டேய் லைன்ல இருக்கியா” அதற்குள் கௌதமின் குரல் ஒலிக்க “இருக்கேன்டா. ஏன்டா வீட்டுல இருந்து வர சொல்லிருப்பாங்களே. அப்புறம் எப்படி வீட்டுக்கு தெரியாம” புரியாமல் விக்ரம் கேட்க

“ஆமா சொன்னாங்க. அதுக்கு தான கார்த்தி அக்கா இருக்கா. கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினேன்ல. அக்காவ தவிர வீட்டுல வேற யாருக்கும் தெரியாதுடா” என்ற கௌதமின் மீது சந்தியாவிற்கு கோபம் எல்லையை கடந்திருந்தது.

“அவனை இங்க வரச் சொல்லு” அவள் சத்தம் வராமல் வாயசைத்து சொன்னாள்.

“கௌதி. எங்க வீட்டுக்கு இப்ப வர்றீயா” இவர்களுக்கு நடுவில் நான் என்ன தூதா என்றெண்ணி கொண்டே சொன்னான்.

“டேய் அதெல்லாம் முடியாது. இந்த நேரத்துல அவ்ளோ தூரமெல்லாம் கஷ்டம்”

“ரொம்ப பண்றடா நீ. என்னமோ நைட்ல ஊரே சுத்தாத மாதிரி. உனக்கு போட்கிளப்ல இருந்து மயிலாப்பூர் வர கசக்குதா. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா”

“அது இல்லடா எனக்காக கேசரி வேற ரெடியாகிட்டு இருக்கு” என்று குறும்பு சிரிப்பு சிரித்தவன் “சரி அவ இருக்காளா. அவ இருந்தா நான் வரல. தேவையில்லாம அவளை வேற பார்க்கறா மாதிரி இருக்கும்” அவன் சொல்ல இங்கே விக்ரமை முறைத்துக் கொண்டிருந்தவள் “நான் இங்க இல்லனு சொல்லு” என்று வாயசைத்தாள்.

“அவ இங்க இல்லடா” அவனும் அதையே சொன்னான்.

“அதெப்படி. பூஸ்ட்டும் ஈவ்னிங் ஸ்னாக்ஸும் வந்திருக்குமே” அவன் கேட்க, இங்கே எரிச்சலோடு சந்தியா விக்ரமை முறைக்க, அவன் தான் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.

“அதெல்லாம் கொடுத்துட்டு போயிட்டா. அவ வீட்ல இல்ல. வெளில போயிருக்கா”

“ஓ அப்போ சரி. நான் வரேன்” என்றவன் அழைப்பைக் கூட துண்டிக்காமல் “அம்மா கேசரி கேன்சல். நான் ப்ரண்ட் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்ம்மா” என்று சொன்னது இங்கே சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் கேட்க தவறவில்லை.

“அவனுக்கு திமிற பார்த்தியா விக்ரம். என்ன வேற பார்க்கறா மாதிரி இருக்குமாம். எப்படி விக்ரம் உனக்கு இப்படி ஒரு ப்ரண்ட். சஸ்பெண்ட் ஆன கவலை கொஞ்சமாச்சும் இருக்கா. கேசரி செய்ய சொன்னானாம்” அவனிடம் காட்ட வேண்டியதையும் சேர்த்து இவனை அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தவளை பார்த்த விக்ரம், தான் வாய் திறக்காமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவெடுத்தான்.

சந்தியாவிற்கு இப்படி சட்டென கோபம் வராது. அவளது கோபத்தை அவன் தூண்டிக் கொண்டு தான் இருந்தான். அது விக்ரமுக்கும் புரிந்து தான் இருந்தது. அதே கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அடிக்க, கதவை அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் மாரியப்பன் திறந்துவிட நேராக படியேறி விக்ரம் அறைக்கு சென்றான்.

வந்தவன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் “மச்சான் ரொம்ப தேங்க்ஸ். நல்லவேளை, நிஜமாவே அவ இல்ல. சஸ்பெண்ட் வேற ஆயிட்டேனா, அவ முகத்துல முழிக்கவே ஒருமாதிரி இருக்கு. எங்கிட்ட பேசமாட்டா. ஒருவேளை அட்வைஸ் எதாவது பண்ணானா. நமக்கு இந்த அட்வைஸ்யெல்லாம் செட்டே ஆகாது” கௌதம் பேசிக் கொண்டிருக்க சந்தியா கதவிற்கு அருகில் தான் நின்றுக் கொண்டிருந்தாள். கௌதம் விக்ரமை நேர்கொண்டு அமர்ந்திருந்ததால் அவனுக்கு தெரியவில்லை. கீழே மாரியப்பனை கதவை திறக்கச் சொன்னதே அவள் தான். அதுமட்டுமா அவனுக்கு பின்னால் அவளும் படியேறி வந்தாள். அதையும் அவன் கவனிக்கவில்லை. இப்போதும் அவன் பின்னால் இருக்கிறாள் என்று விக்ரம் பலமுறை ஜாடை செய்தான். இவனோ கவனிக்காமல் பேசினான்.

பின் விக்ரமே “கௌதி கொஞ்சம் திரும்பி பாரேன்” என்று சொல்ல, திரும்பியவன் அதிர்ந்துப் போனான். சந்தியா அவனை கண்களாலே எரித்துவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தட்டில் மூன்று கிண்ணத்தில் கேசரி இருந்தது. அவன் வருகிறான் என்று தான் செய்து எடுத்து வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

எதுவும் பேசாமல் உள்ளே வந்தவள் “விக்ரம் எடுத்துக்கோ” என்றாள். விக்ரம் எடுத்ததும் “அவனையும் எடுத்துக்க சொல்லுடா” கௌதமிடம் தட்டை நீட்டி சொன்னாள்.

“எனக்கு வேண்டாம்டா” அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சொன்னான்.

“எடுத்துக்கோ கௌதி. சாரிடா, நீ பேசிக்கிட்டு இருந்தப்போ அவளும் இங்க தான் இருந்தா. வீட்ல சாப்பிடாம வந்துட்டேனு உனக்காக தான் செஞ்சிருக்கா” தட்டை நீட்டியவள் இன்னும் அவனிடமிருந்து அதை நகர்த்தவில்லை.

“இவ யாரு எனக்கு கேசரி செஞ்சி தர. எங்க அம்மா இருக்காங்க எனக்கு செஞ்சிக் கொடுக்க” அன்று ஆட்டோவிற்கு கொடுத்த எண்பது ரூபாயை அவள் நீ யார் எனக்கு கொடுக்க என்று சொல்லித் தானே திருப்பித் தந்தாள் அதையே அவனும் இன்று சொன்னான்.

சந்தியாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர “விடு விக்ரம் எடுத்தா எடுக்கறான் இல்லாட்டி விடு நாம சாப்பிடலாம்” என்று தன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தட்டை அவன் அருகிலேயே வைத்துவிட்டாள். அவளுக்கு கௌதமை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. அவனுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அவன் தான் பிடிவாதத்திற்கு மூத்த பிள்ளையாயிற்றே.

இருவரும் சாப்பிட கௌதம் அதை கண்டுக்கொள்ள கூட இல்லை. அறையே அமைதியாக இருந்தது. விக்ரம் தான் அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு பேச ஆரம்பித்தான்.

“ஏன்டா அதான் பிரின்ஸி எதுக்கு இப்படி பண்ணனு கேட்டாங்கல. அப்பவாவது சொல்லிருக்கலாம்ல அவன் செஞ்ச வேலைய. சஸ்பென்ஷன் அளவுக்கு போயிருக்காது ஜஸ்ட் ரெண்டுபேரையும் வார்ன் பண்ணி விட்டிருப்பாங்க”

“சொல்லிருக்கலாம். அவன் ஏற்கனவே அடிபட்டவன். நான் டேரை பத்தி சொல்ல அவன் கௌதம் டேரை பண்ணான் அதுவும் மேடமுக்கு தான் ப்ரொபோஸ் பண்ணான்னு சொல்லிட்டான்னா. தேவையில்லாம அவளை வேற இந்த பிரச்சனைல இழுத்துவிட்டா மாதிரி ஆகிடும். அதான் பர்சனல் ப்ராப்ளம்னு மட்டும் சொன்னேன். என்னனு சொல்லலைனா நீதான் அவனை அடிச்சிருக்க, உன்மேல தான் தப்புனு சஸ்பென்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. சரி சஸ்பென்ட்டே பண்ணிகட்டும்னு விட்டுட்டேன்” சந்தியாவை பற்றி யோசித்து தான் அமைதியாக இருந்திருக்கிறான். அது அவளுக்கு அவன்மீது நல்ல அபிப்ராயத்தையே கொடுத்தது.

“அதுவும் கரெக்ட் தான். ஆனா எனக்கு இன்னும் கோவம் குறையல. நான் தான் பிரச்சனைய அத்தோட விடுன்னு சொன்னேன்ல அத அப்படியே விடாம அவனை அடிச்சி கேஸாகி சஸ்பெண்ட் ஆகியிருக்க. தேவையா இதெல்லாம்” விக்ரம் கேட்க, சந்தியாவின் கண்களும் அதையே தான் கேட்டுக் கொண்டிருந்தது. அதை கௌதம் தான் கவனிக்கவில்லை.

“அப்படி விட்டுட்டு போனா அவன் கௌதமே இல்லயே” என்றுவிட்டு சிரிக்க சந்தியாவிற்கு கோபத்தில் கிண்ணத்திலிருக்கும் கேசரியை அவன் தலையில் கொட்டலாம் என்றிருந்தது.

“பெரிய கௌதம்” என்று தனக்குள்ளேயே சொன்னாலும் அது அவனுக்கும் கேட்டது, விக்ரமும் கேட்டிருந்தான்.

“விக்ரம் எரிச்சலா இருக்கு” என்று எரிச்சலை காட்டியும் விட்டாள்.

“எரிச்சலா இருந்தா, தண்ணிக் குடிக்க சொல்லுடா. இவ செஞ்ச கேசரில காரம் அதிகமோ எரிச்சலெல்லாம் வருது” அவனை தான் சொல்கிறாள் என்பதை புரிந்து பதிலளித்தான் கௌதம்.

“கேசரி எங்கயாவது காரமா இருக்குமா விக்ரம்”

“கேசரி ஸ்வீட்டா தான் இருக்கும் விக்கி. சிலர் முகத்தை காரமா வச்சிக்கிட்டு சமைச்சா அவுட்கம் அப்படி தான் இருக்கும். நீ கூட இனிமே பூஸ்ட் குடிக்கறப்போ பார்த்து குடிடா” என்றான்.

அதற்குள் விக்ரம் இவர்கள் இருவருக்கும் இடையில் நேரடியான பேச்சுக்கள் இல்லை என்பதை உணர்ந்தான். அதற்கு அவர்கள் தனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக இருக்குமோ என்றெண்ணியவன், அதை உடனே சரி செய்ய முடிவெடுத்தான்.

“ஆமா நீங்க ரெண்டுபேரும் என்ன என்னை மத்தளமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசுங்க” அவன் சொன்ன அடுத்த நொடி

“நான் அவகிட்ட பேசமாட்டேன்”

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” இருவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக சொன்னார்கள்.

“எதுக்காக” விக்ரம் புரிந்தும் புரியாதது போல் கேட்டான்.

“உனக்கு தெரியாதா விக்ரம்” அதைமட்டுமே சந்தியா சொன்னாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் சொன்னதால் தான் கௌதம் அவளிடம் பேசாமல் இருக்கிறான் என்று. ஆனால், அவள் சொல்வதற்கு முன்பே கௌதம் விக்ரமிடம் பேசியது அவளுக்கு தெரியாது.

சந்தியா அவளைப் பற்றி மட்டும் கூறுகிறாள் என்பதை புரிந்த விக்ரம் “உனக்கு தெரியாதுல, நீ அன்னைக்கு ஈவ்னிங் இனி நான் கௌதம்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னியா. அடுத்தநாள் காலைல கௌதியும் உங்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று விளக்கினான். இது அவளுக்கு புதுத்தகவல். அந்த தகவல் அவளுக்கு வருத்தத்தை தந்தது. அவள் சொன்னபோது ஏற்படாத வலி அவனும் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டபோது வந்தது. திரும்பி அவனை பார்த்தாள் அவன் இவளை பார்க்கவில்லை. வேறெங்கோ பார்த்திருந்தான்.

“ஏன் ரெண்டுபேரும் இப்படி பண்றீங்க. எனக்காக தான அப்படி ஒரு முடிவை எடுத்தீங்க. அதான் ப்ராப்ளம் இப்ப சால்வ் ஆகிடுச்சுல. ரெண்டுபேரும் கைகொடுத்து பேசிக்கறீங்க” என்றான் விக்ரம்.

“எனக்கு அவன்கிட்ட பேசறதுல எந்த ப்ராப்ளமும் இல்லடா” சந்தியா சொல்ல

“எனக்கு இருக்குடா. நான் அவகிட்ட பேசறதா இல்ல” கௌதம் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்ல அவளுக்கு முகமே வாடியது.

“டேய் ஏன்டா” விக்ரம் அதிர்ந்துக் கேட்க

“பிடிக்கல. நான் முடிவு பண்ணா பண்ணது தான். நான் இவகிட்ட எப்பவும் பேசப் போறதில்ல” இவ்வளவு தீர்க்கமாக சொல்லும் அளவிற்கு தான் என்ன செய்தோமென்று சந்தியாவே குழம்பிப் போனாள்.

“என்னடா எனக்கு தெரியாம எதாவது ஓடிக்கிட்டு இருக்கா. சண்டை எதாவது போட்டுக்கிட்டீங்களா” விக்ரம் புரியாமல் கேட்க

“நீ உடனே ஆரம்பிக்காத. ஓடுற அளவுக்கோ, சண்டைபோடுற அளவுக்கோ இங்க ஒண்ணுமில்ல” கௌதமின் பேச்சு சந்தியாவிற்கு கோபத்தைத் தூண்டியது. தான் பேச தயாராக இருக்கும்போது அவன் இப்படி சொல்வது அவளை அலைக்கழிப்பது போல் தோன்ற

“போதும் விக்ரம். யாரும் பேசணும்னு நான் காத்துக்கிட்டு இல்ல” சந்தியாவும் சொல்ல, விக்ரம் அவளை அடக்கப் பார்த்தான்.

அதற்குள் கௌதம் “கேட்டுக்கிட்டியா” என்றான்.

“பின்ன பேசமாட்டேன் பேசமாட்டேன்னு சீன் போடறவன்கிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவளும் அமைதியாவதாக தெரியவில்லை.

கௌதமிற்கும் இப்போது கோபம் வர “நீயும் நானும் இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல. அப்படி இருக்கப்பவே உன்னால என் லைஃப்ல இவ்ளோ பிரச்சனை வந்திடுச்சு. இன்னும் நீயும் நானும் பேசிக்கிட்டோம்னா என்னென்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்குனு சொல்றவகிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவனும் பதிலுக்கு சொல்ல, அப்போது தான் சந்தியாவிற்கு தான் செய்த தவறே புரிந்தது.

“என்னடா சொல்ற. சந்தியாவா அப்படி சொன்னா” விக்ரம் கேட்க கௌதம் அவளை பதிலாக பார்த்தான்.

“சொன்னியாடி” விக்ரம் இம்முறை நேரடியாக அவளிடமே கேட்க

“அது அன்னைக்கு இருந்த கோவத்துல சொல்லிட்டேன். அத இவன் பெரிய இஸ்யூ ஆக்குவானாம். இவன் ஒண்ணும் எங்கிட்ட பேச தேவையில்ல. யாரும் பேசணும்னு நான் ஒண்ணும் ஏங்கிட்டு இல்ல” அவள் மறுபடியும் வார்த்தையை விடுகிறாள் என்பதை உணராமலே சொன்னாள்.

“அவ்ளோ தான் மச்சான். மேட்டர் சால்வ்ட். ரெண்டுபேருமே பேசணும்னு ஏங்கல” கௌதம் திடமாக சொல்ல அவளுக்கு கோபம் தான் வந்ததே தவிர தான் மறுபடியும் தவறாகப் பேசினோம் என்பதே புரியவில்லை.

“போதும் ரெண்டுபேரும் நிறுத்துறீங்களா. நான் ஒருநாள் லூசுதனம் பண்ணா, நீங்க டெய்லி பண்றீங்க. பெரியவன் சொல்றத ரெண்டுபேரும் கேட்கற வழிய பாருங்க. ஒழுங்கா பேசிக்கோங்க” விக்ரம் இடைமறிக்க

“யாரு விக்கி பெரியவன்” கௌதம் சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்க

“நான் தான்டா. உன்னோட ஒரு மாசம் பெரியவன். இவளோட எட்டு மாசம் பெரியவன். அதனால நான் சொன்னா கரெக்டா தான் இருக்கும். ரெண்டுபேரும் பேசிக்கோங்க”

“போ மச்சான் சும்மா காமெடி பண்ணாத. பெரியவனாம் பெரியவன்” கௌதம் மறுபடியும் சிரிக்க இம்முறை எரிச்சலானது சந்தியாவே.

“நான் கிளம்பறேன் விக்ரம். அம்மா தேடுவாங்க” என்று எழுந்தவளை “இரு சந்து” என்று நிறுத்தினான் விக்ரம். முதல்முறையாக அவன் சந்தியாவை சந்துவென்று அழைப்பதை அப்போது தான் கவனித்தான் கௌதம். அவர்களுக்குள் அப்படி கூப்பிட்டு கொள்ளும் வழக்கம் இருக்கிறது போல் என்றெண்ணிக் கொண்டவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் உங்க ரெண்டுபேரையும் கம்பெல் பண்ணல. ஆனா, சீக்கிரம் உங்க பிரச்சனைய சால்வ் பண்ணிக்கோங்க. கௌதி, அவ எதோ கோவத்துல வார்த்தைய விட்டுட்டா. யோசிச்சுப்பாரு நீ அவகிட்ட ஐ லவ் யு சொன்னதுக்கே அவ உன்னை ஒண்ணும் சொல்லல. அத பெருசும் பண்ணல. அவகிட்ட போய் இப்படி நடந்துக்கலாமா அண்ட் சந்தியா, நீ அவன்கிட்ட அன்னைக்கு பேசினது, இன்னைக்கு பேசினது எல்லாம் தப்பு. அதனால மேல மேல பேசி பெருசாக்காத” இருவருக்கும் சரியானதை சொல்ல அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது. இருந்தும் வாயைத் திறந்து பேசிக்கொள்ள தான் இல்லை.

இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று காத்திருந்து ஓய்ந்துப்போன விக்ரம், ஓர் ஆழ பெருமூச்சை வெளியே விட்டு “சரி பேசிக்க வேண்டாம். ஆனா, இனி நாம மூணு பேரும் ப்ரண்ட்ஸ். எங்க போனாலும் ஒண்ணா தான் போறோம் வரோம். வந்து பேசாம இருப்பீங்களோ இல்ல பேசி சண்டைப் போடுவீங்களோ அது உங்க பிரச்சனை. பட் டோன்’ட் ஃபர்கெட், மூணு பேரும் ஒண்ணாதான் இருக்கோம். காட் இட்” இருவருக்கும் பொதுவாக சொன்னவன் கௌதம் பக்கம் திரும்பி “கௌதி நாளைக்கு கடைல இருப்பீயா” என்றான். சந்தியாவிற்கு எந்தக் கடை எதை பற்றிப் பேசுகிறான் என்று புரியவில்லை.

“இல்லடா. நித்தி என்னை வெளில கூட்டிக்கிட்டு போக சொல்லிருக்கா. எதோ வாங்கனுமாம். கார்த்தி அக்கா தான் இருப்பா. தி.நகர்ல தான சொல்ற” என்றான் பதிலுக்கு. சந்தியாவிற்கு ஒன்றும் புரியாமல் ‘இவனுங்க ரெண்டுபேரும் எதப்பத்திடா பேசிக்கிறாங்க’ என்று இருவர் வாயையே பார்த்திருந்தாள். அத்தோடு யாரந்த நித்தி என்ற சந்தேகம் வேறு.

“ஆமா எதுக்கு கேட்கற. நீ வர போறியா” அடுத்த கேள்வியையும் கௌதம் கேட்க

“ஆமான்டா. அம்மாக்கு பர்த்டே வருது, சாரீ எடுக்கணும். நீ கூட இருந்தா நல்லா செலக்ட் பண்ணி தருவ. குட்டி பொண்ண தான வெளில கூட்டிட்டு போற பேசாம அவளையும் கூட கூட்டிட்டு வந்திடு. நாம பர்ச்சேஸ் பண்ண வேண்டியதை பண்ணிட்டு, அவ கேட்டத வாங்கிட்டு வீட்டுக்கு போய்டலாம். உனக்கு ஞாபகம் இருக்கா நம்ப ஹர்ஷினி பர்த்டேக்கு போனப்போ உன் தங்கச்சிய கூட்டிட்டு வந்தீயே. அவளோட செம்ம ஃபன். சரியான வாயாடி” விக்ரம் சொன்னத்தை கேட்ட பிறகே தங்கையா என்று நிம்மதியானாள்.

“அதுவும் சரிதான். அப்படியே பண்ணிடலாம். நீ சொல்ற டைம்ல நான் அங்க இருப்பேன்டா” விக்ரம் சொன்னதை கௌதமும் ஆமோதித்து சொன்னான்.

“சந்து, நீயும் வர தான” சந்தியாவையும் விக்ரம் சேர்த்துக் கொள்ள

“எங்க” என்றாள்.

“செல்வராணி சில்க்ஸ்” என்றவன் கௌதமை பார்த்து “சாயந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு ஒரு அஞ்சரை மணிக்கு அங்க வந்திடறோம்டா. உனக்கு ஓகேவா” என்று கேட்கவும்

“ஓ.. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் இருக்குல. எனக்கு எந்த ப்ராப்..” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்லவந்தவன் அவள் முறைப்பதை பார்த்ததும் சட்டென்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ச் நீங்கயெல்லாம் ஸ்கூலுக்கு போறீங்க. நான் மட்டும் பாரு” என்றான் பரிதாபமாக.

‘அப்படியே வருத்தப்படற மாதிரி தான்’ சந்தியா முணுமுணுத்தாள்.

“நாம ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம்டி. அப்போ தான் கௌதி அங்க இருப்பான். அப்புறம் கிளம்பிடுவான்” என்று சந்தியாவிடம் சொல்ல

“இவன் அந்த டைம்ல செல்வராணி சில்க்ஸ்ல என்ன பண்றான்” என்றவளை இதுவரை கோபத்தில் இருந்த கௌதம் இப்போது தன்னை மீறி ரசித்தான். என்னவொரு உரிமையான பேச்சு. அவளுக்கு அது அவர்களுடைய கடை என்று தெரியாது. விக்ரம் நாளை அவன் கடையில் இருப்பானா என்று விசாரித்தது. அதுவும் இவன் போகும் நேரம் அவன் இருக்க வேண்டும் என்று சொன்னது, இதையெல்லாம் வைத்து அரைகுறையாகவே புரிய அதை வைத்து அப்படி ஒரு அதிகார கேள்வியை கேட்டாள்.

“என்னடீ உனக்கு தெரியாதா. அவங்களுது தான் செல்வராணி சில்க்ஸ்” அவளை ஆச்சர்யமாக பார்த்து விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு ஐயோவென்று ஆனது. இது தெரியாமல் இவனுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டுவிட்டோமே என்ற உணர்வில் கண்களை அழுந்த மூட அதில் அவள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டது. கையை வைத்து ஒருபக்க முகத்தையும் மறைத்துக் கொண்டாள். பின் அசட்டுசிரிப்பு சிரித்துக் கொண்டே கையை விலக்கி கண்களை திறந்தாள். அவளை பார்த்தவனுக்கு பிடித்திருந்தது. ரசித்தும் கொண்டிருந்தான்.

“சரி நாளைக்கு போகலாமா” விக்ரம் அவளிடம் மறுபடியும் உறுதிச் செய்ய கேட்க “ஹ்ம்ம்” என்றாள்.

“சரிடா நாளைக்கு பார்க்கலாம்” கௌதம் கிளம்பும் நேரத்தில் அவளுக்கு ஒன்று நினைவிற்கு வர

“ஒரு நிமிஷம்” என்று அவள் சொல்ல அந்த வார்த்தைகள் தனக்கானது, தன்னிடம் தான் பேசுகிறாள் என்ற ஆவலில் அவனும் திரும்ப அதற்குள் கிண்ணத்தில் ஆறிக் கிடந்த கேசரியை பார்த்தவளுக்கு மறுபடியும் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள “ஒரு நிமிஷம் நிக்க சொல்லு விக்ரம்” என்றாள்.

இவனும் பதிலுக்கு “ஹ்ம்ம். சொல்ல சொல்லுடா” என்றான். மறுபடியும் இரண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறி இருந்தது.

‘இவங்க ரெண்டுபேருக்கும் இருக்க திமிறும் கொழுப்பும் இருக்கே’ மனதிற்குள் நினைத்து நொந்துக் கொண்டான் விக்ரம்.

“செல்வராணி சில்க்ஸ் இவங்க கடை தான” விக்ரமிடம் அவள் கேட்க

“ஆமா டி” என்றான் அவனும் பதிலுக்கு.

“டி.நகர்ல இருக்கே அதுவா” என்றாள். அதற்கும் ஆமாமென்று தலையை ஆட்டினான் விக்ரம். கௌதம் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

“நான் இவங்க கடைக்கு போயிருக்கேன். சாரீ எடுக்க” என்றாள். அவ்வளவு தான் இப்போது கௌதமிற்கு கிலி பற்றிக் கொண்டது. கண்டுப்பிடித்து விட்டாளோ என்ற எண்ணத்தில் அவன் இதயத்தின் தாளங்கள் அவனுக்கே குத்துப்பாட்டாக கேட்டது. அத்தோடு அன்று ஆட்டோவிற்கு கொடுத்தப் பணத்தை திருப்பி தந்ததும் நினைவிற்கு வர வியர்க்கவே தொடங்கிற்று.

“சரி அதுக்கு என்ன” என்றான் இது எதுவும் அறியாத விக்ரம்.

அவள் “நான் அங்க ஒரு பையனை பார்த்தேன்” என்றது தான் மிச்சம் ‘செத்தான்டா சேகரு’ என்று ஓட்டம் பிடிக்கும் நோக்கத்தில் “நான் கிளம்பறேன்டா விக்கி. இவ சொல்ற கதையே கேட்க எனக்கு டைம் இல்ல” என்று ஓடப் பார்த்தான்.

“இப்ப அவன் நிப்பானா மாட்டானா விக்ரம்” ஓடுப்பவனை கையால் மட்டும் தானா பிடிக்கமுடியும். அவளது வார்த்தையாலே பிடித்து நிறுத்தினாள்.

“சரி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்ல சொல்லுடா. வீட்ல அம்மா தேடுவாங்க” என்றான். அம்மா தேடுவதற்கெல்லாம் பயப்படுப்பவனா அவன். அவன் சொன்னதை பின் நினைத்து பார்த்தால் அவனுக்கே சிரிப்பு வரும்.

“சொல்லத்தான் போறாங்க. இவனை பிடிச்சி வச்சிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா” உரத்த குரலிலேயே சொன்னவள் “அன்னைக்கு நாங்க சாரீ எடுக்க போனப்போ அந்த பையன் தான் எனக்கும் அம்மாக்கும் சாரீ காட்டினான் விக்ரம். ரொம்ப வயசு இருக்காது. மேபி நம்ப வயசு தான் இருக்கும். ஆனா வேலை செய்யறான். இப்ப எனக்கு அவன் முகம் கூட ஞாபகமில்ல” இப்போது தான் கௌதமுக்கு போன உயிரே திரும்ப வந்தது.

நிம்மதி பெருமூச்சை விட்டவன் “சரி மேல சொல்ல சொல்லு விக்கி” அவன் சொல்ல, அவனை முறைத்துவிட்டு

“படிக்க வைக்க வீட்டுல வசதி இல்லாம தான வேலைக்கு வந்திருக்கான். அவனை இவங்களால படிக்க வைக்க முடியுமா” என்றாள். கௌதமுக்கு இப்போது புறக்கை ஏறியது. மாலை செல்வராணி ஊட்டிவிட்டு அனுப்பியதெல்லாம் தலைக்கு ஏறி கண்களில் தண்ணீர் நின்றது.

“டேய் என்னடா நீ. இந்தா தண்ணி குடி” தலையில் தட்டி தண்ணீர் பார்ட்டிலை விக்ரம் அவனிடம் நீட்டினான். அதை வாங்கிக் குடித்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“இவன் என்ன வேணும்னு பண்றானா” அதற்கும் அவள் அவனை விடவில்லை.

“எங்களுக்கு வசதி இல்ல. அப்பா உங்ககிட்ட டிரைவரா இருக்காரு. எனக்கும் சக்திக்கும் பீஸ் கட்டுற அளவுக்கு அப்பாகிட்ட காசு இல்ல. அப்ப நீ சொல்லி லாயர் அய்யாதான், நீ படிக்கற ஸ்கூல்லயே என்னையும் சேர்த்து படிக்க வச்சு பீஸூம் கட்டிக்கிட்டு இருக்காரு. சக்தி படிப்புக்கும் மெய்ன் டர்ம் பீஸ் அவர் தான் கட்டுறாரு. அதேமாதிரி பாவம் அந்த பையனுக்கு என்ன குடும்பக் கஷ்டமோ, இந்த வயசுல வேலைக்கு வந்துட்டான். அவனை இவங்க பேமிலி படிக்க வைக்கலாம்ல. இருக்குறவங்க தான எங்கள மாதிரி இல்லாதவங்களுக்கு உதவி பண்ணனும். படிப்பு கொடுக்கறது ரொம்ப பெரிய புண்ணியம் விக்ரம். முதல்ல இந்தமாதிரி சின்ன பசங்களுக்கு வேலை தரவேணாம்னு அவங்க அப்பாகிட்ட சொல்ல சொல்லு விக்ரம்” விக்ரமிடம் சொல்வதாக அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

முதல்முறையாக சந்தியா தன் வீட்டை பற்றியும் தங்களது நிதி நிலையை பற்றியும் சொன்னாள். அத்தோடு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் தானே என்று நினைக்காமல் அவனுக்கு படிப்பு கொடுக்கக் கேட்பது அவளது உயர்ந்த உள்ளத்தை காட்டியது. அதையெப்படி அவனால் ரசிக்காமல் இருக்கமுடியும்.

‘இந்த வியாக்கானம் எல்லாம் நல்லா பேசுவா. அந்த பையனை படிக்க வைக்கணுமாம். இல்லாதவங்களுக்கு படிப்பு தர்றது பெரிய புண்ணியமாம். ஆனா அந்த பையன் முகத்தை மட்டும் மறந்திடுவா. இவ மறந்ததும் ஒரு விதத்துல நல்லது தான். இதுல சின்னப் பசங்கள வேலைக்கு வைக்ககூடாதுன்னு நான் அப்பாகிட்ட சொல்லணுமாம். எங்க கடைல வேலை பார்த்த ஒரே சின்னபையன் நான் தான். அதுவும் பதினாலு வயசுக்கு அப்புறம் தான். எது எப்படியோ யாரோ ஒருத்தனுக்காக இவ்ளோ அக்கறைப்படறாளே இதுதான் இவளை எனக்கு தனியா காட்டுது. ஐ லைக் ஹர்’ கடந்த சில நாட்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ணினான். இன்றோ அனைத்தும் திரும்ப பெற்றுவிட்டதாக தோன்ற, சந்தோசத்தில் சிரிக்க உதடுகள் பிரிய ‘ஐயோ வேண்டாம் கௌதம். இப்ப மட்டும் சிரிச்ச அந்த பையன் கஷ்டம் உனக்கு சந்தோசமா இருக்கானு கேட்பா. கன்ட்ரோல் யுவர்செல்ஃப்’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவனை பதிலுக்காக பார்த்திருந்தாள். அவன் தனக்குள் பேசிக் கொண்டிருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

“என்ன விக்ரம் நான் சொன்னதுக்கு பதிலை காணோம்” கிட்டத்தட்ட மிரட்டினாள்.

‘பதிலா.. நான் என்னனு சொல்லுவேன். என்னை நானே எப்படி படிக்க வச்சிக்க முடியும். இவளுக்கு இத நான் எப்படி புரிய வைப்பேன். சரி படிக்க வைக்கறேன்னு சொல்றது கூட பரவாயில்ல. அப்புறம் அவனை காட்டுன்னு சொன்னா’ என்று யோசிக்க ‘டேய் கௌதம் நீதான் அவகிட்ட பேசலயே. அப்படியே யெஸ் ஆகிடு. அதான் பெஸ்ட்’ திட்டத்தை உருவாக்கியவன்

“நான் கிளம்பறேன்டா விக்கி. வீட்டுல தேடுவாங்க. நாளைக்கு கிளம்பறப்போ மெசேஜ் பண்ணு. நான் அங்க இருப்பேன். கிளம்பறேன்னு சொல்லிடுடா” என்றுவிட்டு அவளை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவனுக்கு புரியவில்லை அவனது இச்செயல் அவளுக்கு கோபத்தை தான் தூண்டுமென்று.

“திமிருப்பிடிச்சவன். நான் என்ன எனக்காகவா கேட்டேன். அந்த தம்பிக்காக தான கேட்டேன்” வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள். நல்லவேளை ‘தம்பி’ என்ற சொல்லை கௌதமிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் துடித்துப் போயிருப்பான்.

“நானும் கிளம்பறேன் விக்ரம்” என்றுவிட்டு அவளும் கிளம்பினாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 9

அடுத்தநாள் விக்ரமும் சந்தியாவும் டி.நகரில் இருக்கும் செல்வராணி சில்க்ஸை வந்தடைந்தனர். வந்ததும் கௌதமிற்கு அழைக்க அவன் புடவைகள் இருக்கும் தளத்திற்கு வந்துவிட சொன்னான். உள்ளே சென்றால் கார்த்தியாயினி பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருக்க உடன் குட்டிப்பெண் நித்திலா இருந்தாள். கௌதம் அங்கே பில் கௌன்டரின் மீது சாய்ந்து நின்று அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தான்.

விக்ரமும் சந்தியாவும் வர “அக்கா. இது என் ப்ரண்ட் விக்ரம், ஞாபகம் இருக்கா. அவங்க அவன் ப்ரண்ட்” இருவரையும் கௌதம் கார்த்தியாயனிக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தியாயினியும் இருவரையும் பார்த்து சிறுப் புன்னகையுடன் தலையசைக்க

“ஹலோ க்கா. ஹலோ குட்டி” கார்த்தியாயினி, நித்திலா இருவருக்கும் சேர்த்து விக்ரம் சொல்ல உடன் நின்றிருந்த சந்தியா தலையை மட்டும் மரியாதை நிமித்தமாக அசைத்தாள்.

“நான் இவங்க கூட போயிட்டு வரேன்க்கா” கௌதம் சொல்லிவிட்டு கிளம்ப “நானும் அண்ணன் கூட போறேன்க்கா” சொல்லிக் கொண்டே நித்திலா ஓடிவந்து கௌதம் கையை பிடித்துக் கொண்டாள்.

புடவைகளை பார்த்தனர். கௌதம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான். உள்ளே சென்று ஒவ்வொரு புடவையையும் எடுத்துக்காட்ட ஆசை தான். அதை பார்ப்பவள் கண்டு பிடித்துவிட்டால்? அதனால் பணிபுரிபவரை எடுத்து பிரித்துக்காட்ட சொல்லிவிட்டு அவன் விக்ரம் அருகிலேயே நின்றான். கௌதம், இது இப்படியிருக்கும் அது அப்படியிருக்கும் என்று ஒவ்வொரு புடவையையும் காட்டி சொல்ல விக்ரமும் அவனுக்கு பிடித்ததை தேர்வு செய்தான். பின் பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று பணத்தை செலுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் சந்தியாவை காணவில்லை.

“அந்த அக்கா இந்த சைடு போனாங்கண்ணா” நித்திலா சொல்ல கௌதமும் விக்ரமும் நித்திலாவை ஆளுக்கு ஒரு கையில் பிடித்துக் கொண்டு நித்தி சொன்ன பக்கம் போனார்கள். அவள் அந்த பகுதிக்கு பின்னால் இருந்த பட்டுப்புடவை பகுதியில் அன்றைக்கு புடவை பார்த்த இடத்தில் நின்றிருந்தாள். விக்ரமுக்கு புரியவில்லை, ஆனால் கௌதமுக்கு நன்றாக புரிந்தது.

வேகமாக அவளிடம் சென்றவன் “மேடம் எதுக்கு இங்க நிக்கறாங்க விக்கி” என்றான்.

“நான் சொன்னேன்ல விக்ரம். அந்த பையன் இங்க தான் இருந்தான். இன்னைக்கு காணோம்” வருத்தப்பட்டு சொன்னவள், அங்கே தள்ளி நின்றிருந்த பணியாளரை அழைக்க உடன் கௌதம் நின்றிருப்பதை பார்த்து அவரும் ஓடிவந்தார்.

“இங்க எங்க வயசுல எதாவது சின்ன பையன் வேலை செய்யறானா” அவரிடம் அவள் கேட்க

“சின்ன பையனா. அந்த மாதிரி யாரும் வேலை பார்க்கலைங்களே. இந்த கடைல ரொம்ப சின்னப்பசங்கள வேலைக்கு வைக்க எங்க அய்யா விரும்ப மாட்டாருங்க. படிப்பு தான் முக்கியம்னு சொல்லுவார். எங்க பசங்களயே அய்யா தான் படிக்க வைக்கறாரு” அவர் சொல்ல சந்தியா குழம்பிப் போய் அவரை பார்த்தாள்.

“இல்ல மூணு மாசம் முன்னாடி இங்க ஒரு தம்பிய நான் பார்த்தேன்”

‘தம்பியா’ கௌதம் அதிர்ந்துப் போனான். அது தான் தான் என்று முன்பே சொல்லியிருந்தால் அவள் இந்தளவிற்கு போயிருப்பாளா?

இம்முறை அந்த பணியாளர் “ம்மா, நீங்களே சின்னப்பொண்ணு மாதிரி தான் தெரியறீங்க. உங்க தம்பின்னா நம்ப சின்னம்மா வயசுல தான் இருப்பாங்க” நித்திலாவை காட்டி சொல்லியவர் “அந்த வயசுல இருக்கவங்கள ஏன் எங்க அய்யா வேலைக்கு வைக்கப் போறாரு” என்று சிரித்தார். கௌதமும் விக்ரமும் அடக்கமுடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தனர்.

“சந்து, என்னடி இங்க கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்க. அதான் யாருமில்லனு சொல்றாங்கல. அதோட நீ அந்த பையன் முகத்தை வேற மறந்துட்டேனு சொல்ற. அப்புறம் எதுக்குடி அவரை வேற படுத்தற” விக்ரம் பணியாளரை காட்டிச் சொல்ல

“இல்லடா நான் பார்த்தேன்” பாவமாக சொன்னவளை ரசிக்கும் எண்ணத்தில் இருந்தானே தவிர, தான் தான் அது என்று உண்மையை சொல்லும் எண்ணத்தில் இல்லை.

“கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாரு. அந்த பையன் எப்படி இருந்தான். என்னை மாதிரி, இல்ல நம்ம கௌதிய மாதிரி” விக்ரம் அவளுக்கு அவன் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சிச் செய்ய

‘அடப்பாவி டேய். நீ வேற ஏன்டா இப்படி பண்ற. அவ தான் மறந்துட்டால. அப்புறம் எதுக்கு உனக்கிந்த வேண்டாத வேலை’ தன் மனதிற்குள்ளேயே விக்ரமுக்கு பூஜை செய்தான்.

“ஐயோ நான் அன்னைக்கு அவன் முகத்தையே பார்க்கலைடா. அவன் பாட்டுக்கு புடவை காட்டினான் நான் வெறும் புடவைய தான் பார்த்தேன். அவன் அப்பியரன்ஸ் வச்சி அவனுக்கு நம்ம ஏஜ் தான் இருக்கும்னு சொல்றேன்”

‘அடிப்பாவி, அப்ப நீ என் முகத்தையே பார்க்கலையா. நான் இவ முகத்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இவன் என்னனா என் அப்பியரன்ஸ் பார்த்தாளாம். இதுல அவனை படிக்க வை கலெக்டராக்குனு டயலாக் பேசிக்கிட்டு இருக்கா’ இப்போது மனதிலேயே சந்தியாவிற்கும் சேர்த்து பூஜை செய்தான்.

“ஒழுங்கா கிளம்பு சந்தியா. டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. மீனாம்மாகிட்ட யார் திட்டு வாங்கறது. அடுத்து நித்தி பாப்பாவுக்கு வேற எதோ திங்ஸ் வாங்கணும்” விக்ரம் சந்தியாவை இழுத்துச் செல்ல

அந்நேரத்தில் அந்த பணியாளர் “அம்மா ஒருவேளை நீங்க எங்க சின்ன அய்யா..” என்று ஆரம்பித்தவரை ஒன்றை பார்வையிலேயே நிறுத்தினான் கௌதம்.

‘முதல்ல அவ, அப்புறம் விக்கி, இப்போ இவரா. டேய் கௌதம், என்னடா உன் பொழப்பு இப்படி ஓவர்டைமா போகுது’ மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான்.

நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள். நித்திலாவிற்கு வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அவள் ஐஸ்கிரீம் கேட்டதால் நால்வரும் ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தனர்.

“அக்கா உங்களுக்கு ஹேர் ரொம்ப லாங்கா இருக்கு. நானும் பெருசான இந்தமாதிரி லாங்கா வளர்த்துப்பேன்” ஐஸ்கிரீமை நக்கிக் கொண்டே நித்திலா சொல்ல அவளது கன்னத்தை செல்லமாக கிள்ளி முத்தமிட்டாள்.

நித்திலா கௌதமிடம் பன்மையில் பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சக்தி அவளை அக்காவென்று அழைத்தாலும் ஒருமையில் தான் பேசுவான். அதனாலேயே நித்திலாவை அவளுக்கு பார்த்தது முதலே பிடித்துப் போனது.

அந்நேரத்தில் கௌதமுக்கு அழைப்பு வர “டேய் அக்காடா. இப்ப வந்திடுறேன்” என்று எழுந்துப் போனான்.

அவன் தமையென்று சொன்னதை கேட்ட நித்திலா, கேட்காத தகவலாக “எங்க தமையா அக்கா. டாக்டர் படிக்கறாங்க” என்றுச் சொன்னாள்.

அவளது கன்னத்தைப் பிடித்து “அப்படியா, சோ க்யூட். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க வீட்டுக்கு வந்துறியா” என்றாள்.

“ம்ஹூம்.. பெரியப்பா பெரியம்மா இல்லாம நான் வரமாட்டேன்” அவள் சொல்ல என்ன இவள் யாரை பெரியப்பா பெரியம்மா என்று சொல்கிறாள் என்ற குழப்பம் வந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“செம வாயாடி. லாஸ்ட் டைம் இவளோட செம ஃபன். என்ன நித்திலா, என்னை மறந்துட்டியா” விக்ரம் கேட்க

“ஆமா நீங்க யாரு. எனக்கு ஞாபகம் இல்லயே” என்று சொன்னவள் “எனக்கு இந்த அக்காவ மட்டும் தான் தெரியுது. இவங்களுக்கு செம லாங் ஹேர். ஃபேரிடைல் பிரின்சஸ் ரபன்ஸல் மாதிரி” என்றாள் நித்திலா. அத்தோடு,

“ரபன்ஸல்! ரபன்ஸல்! லெட் டோவ்ன் யுவர் ஹேர், தட் ஐ மே கிளைம் யுவர் கோல்டன் ஸ்டேர்!”

அந்த கதையை படித்தவள் அதில் வரும் பாடலைப்பாடி “ஐ லைக் யு அக்கா” என்று சந்தியாவிற்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாயாலேயே ஒரு முத்தமும் கொடுத்தாள்.

“ஐ லைக் யு டூ நித்தி” இவளும் பதிலுக்கு முத்தம் கொடுத்தவள் “டேய், சம்மந்தமே இல்லாம ஒரு அக்கா. சம்மந்தமே இல்லாம ரைம்ஸ் சொல்ற குட்டி தங்கச்சி, நடுவுல இவனா. இப்ப யாரோ ஃபோன் பண்ணாங்க. நான் கூட அக்காவ தான் தமைனு சொல்றான்னு நினைச்சேன். ஆனா இந்த குட்டிப் பொண்ணு ‘தமையா அக்கானு’ சொல்லுது. நேத்து கார்த்தி அக்கானு சொன்னமாதிரி ஒரு ஞாபகம். இவனை உனக்கு எத்தனை வருஷமா தெரியும். உண்மையிலேயே இவன் நல்லவன் தானா. ஒருவேளை எல்லாம் பொண்ணுங்களையும் அக்கானு சொல்லிட்டா இவனை நல்லவன்னு நம்பிடுவாங்கனு நினைக்கறானோ” விக்ரமிடம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஏன்டி எப்பவும் எங்க வந்தாலும் சைலண்ட்டா தான இருப்ப. இன்னைக்கு இந்த குட்டிப் பொண்ணு நித்தியோட மோசமா இருக்க” விக்ரமால் இன்று சந்தியாவை சமாளிக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் சொன்னான்.

அந்நேரத்தில் கௌதம் அங்கு வந்தமர்ந்து “நித்தி, ஐஸ்கிரீம் போதுமா இன்னும் வேணுமா” என்றான்.

“சும்மா குழந்தைய கெடுக்க வேணாம் விக்ரம். அவ ஏற்கனவே நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டா” அதட்டல் குரலில் சொன்னவள் டிஸ்சு பேப்பரை எடுத்து நித்திலாவின் கை, வாயை துடைத்துவிட வழக்கம் போல் அதையும் அவன் ரசித்தான்.

“அண்ணா இந்த அக்காக்கு நீங்க நல்லவங்களானு டவுட் வந்துச்சாம்ண்ணா” என்று நித்தி போட்டு கொடுக்க, அவளெதிரில் பேசியது தவறென அப்போதே சந்தியாவிற்கு புரிந்தது.

அவளை தன் ஒரு புருவத்தை உயர்த்திப் கௌதம் முறைக்க, அவளுக்கோ என்ன சொல்லவென்றே புரியாமல் “இந்த குட்டி நான் முன்னாடி சொன்னத விட்டுடுச்சு” என்றவள் “இப்ப தான என்னை பார்த்து ஐ லைக் யு அக்கானு சொன்ன அதுக்குள்ள உன் அண்ணன பார்த்ததும் போட்டு தர” நித்திலாவிடம் குழந்தைப் போல் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.. முன்னாடி வேற சொன்னீயா” கௌதம் விடாமல் பேச்சிற்கு வந்தான்.

“நான் முன்னாடி என்ன சொன்னேன்னா. உனக்கு ஒரு பெரிய அக்கா அப்புறம் ஒரு ரொம்ப சின்ன தங்கச்சி. நடுவுல தமைனு யாரோ ஃபோன் பண்ணாங்க. நீ போனதும் அது உங்களோட தமையா அக்கானு நித்தி சொன்னா. அவங்க டாக்டர்க்கு வேற படிக்கறாங்கனு சொல்றா இந்த குட்டிப்பொண்ணு.. ஆனா உங்க அக்கா.. கடைல.. அவங்க கார்த்தி தான.. அதான் ஒரே குழப்பமா இருக்கு.. ஒருவேளை.. நீ நல்லவனானு.. டவுட்.. அதோட உங்க கடைல வேற எல்லாம் மர்மமா இருக்கு” மென்று முழுங்கிச் சொல்லி முடித்தாள்.

இப்போது அவன் இரு புருவத்தையும் உயர்த்தி முறைக்க “சும்மா சும்மா முறைக்காத. சஸ்பீசியஸா இருந்தா அப்படிதான் கேட்க தோணும்” என்றுவிட்டாள்.

“வாட்? சஸ்பீசியஸா தெரியறோமா” அவள் சொன்னதில் அவனுக்கு கோபம் தலைகேறியது. அதுவும் அவனது தாய், தந்தை, குடும்பம், அவர்களது கடையை பற்றி யாராவது ஏதாவது சொன்னால் முடிந்தது கதை. அவனை அடக்கவே முடியாது.

“ஆமா” என்றவள் மீது கோபம் எல்லையை கடந்திருந்தது. அருகில் நித்திலா இருப்பதை உணர்ந்தவன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“என்னை, எங்க கடைய சஸ்பெக்ட் பண்ற அளவுக்கு என் குடும்பத்தை பத்தி அப்படி என்ன குழப்பம் வந்துச்சு உனக்கு. எனக்கு மொத்தம் மூணு அக்கா, ரெண்டு தங்கச்சி. பெரிய அக்கா கார்த்தியாயினி தான் கடைல இருந்தாங்க. அடுத்த அக்கா அருந்ததி. லா படிக்கறாங்க. இன்னொரு அக்கா தமயந்தி. நான் தமைனு கூப்பிட்டது அவங்கள தான். டாக்டருக்கு படிக்கறாங்க. அருந்ததியும் தமயந்தியும் டிவின்ஸ். அப்புறம் நிரஞ்சனா நயன்த் படிக்கறா. குட்டி நித்தி..”

அவன் சொல்லவும் குட்டி நித்திலா “ஃபோர்த் படிக்கறா” என்று அவளே தன்னை பற்றி மழலை குரலில் சொன்னாள். “நிரஞ்சனாவும் நித்திலாவும் என் சித்தப்பா பொண்ணுங்க. எல்லாம் ஒண்ணா தான் இருக்கோம். இப்ப நான் நல்லவனா தெரிஞ்சிட்டேனா” என்றவன்

“அப்புறம் கடை மர்மமா இருக்கா. எங்க கடைய பத்தி இப்படி சொன்ன முதல் ஆள் நீதான். இப்ப என்ன, அந்த பையனை படிக்க வைக்கனும். சரி படிக்க வச்சு டாக்டரோ.. இல்ல இல்ல வேண்டாம். டாக்டர் வேண்டாம். இன்ஜினீயர் ஓகேவா. அவனை இன்ஜினீயர் ஆக்கிடுறேன். இல்ல வேற எதாவது ஆக்கணும்னாலும் சொல்லு, பண்ணிடலாம்” அவன் கோபமாக பேசுகிறான் என்று நித்திலாவிற்கு தெரியவில்லை ஆனால் விக்ரமிற்கும் சந்தியாவிற்கும் நன்கு புரிந்தது.

“உனக்கு தான் ஒரு தம்பி இருக்கான்ல அப்புறம் எதுக்கு ஊருல இருக்கிறவனெல்லாம் தம்பியா எடுத்துக்கற. பாவம் அவங்களை விட்ரு” அவன் பேசி முடிக்கவும் அவளுக்கே தான் அதிகபடியாக பேசி அவனை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

“சாரி கௌதம். அது.. சாரி” தயங்கி தயங்கி அவனிடம் மன்னிப்பும் கேட்டாள்.

“இத நீ வீட்டுக்கு வந்து கேட்டிருந்தா, நானே சொல்லிருப்பேன். ஏன்டி இப்படி மானத்தை வாங்கற. சாரி கௌதம்” விக்ரம் சொன்ன பிறகு தான் கவனித்தவன்

“ஆமா நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டீங்க தான” விக்ரம் சொல்ல, அப்போது தான் இருவருக்குமே நடந்த வாக்குவாதத்தில் அவர்கள் பேசிக்கொண்டது புரிந்தது.. அதை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அதை புரிந்து விக்ரமும் புரியாமல் நித்திலாவும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்த நால்வருக்கும் விதி என்னென்ன திட்டத்தைப் போட்டு வைத்துள்ளது என்பதை அறியாதவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தனர். நித்திலாவும் விக்ரமும் இன்று போல் பின்வரும் காலத்திலும் சந்தியாவிற்கும் கௌதமிற்கும் தெரிந்தும் தெரியாமலும் நிறைய உதவிகளை செய்துக்கொண்டே தான் இருந்தனர். அவர்களே முடிவெடுக்க முடியாமல் திணறியபோதும் இவர்களின் முடிவு அவர்களுக்கு உதவியுள்ளது.

விக்ரம் தானே அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் மூவரும் ஒன்றாக தான் இருக்கவேண்டும் என்று சொன்னான். இங்கே குட்டி நித்தி அண்ணனிடம் சந்தியாவை மாட்டிவிட சொல்லி, அவர்களை பேச வைத்துவிட்டாள். நிகழ்காலத்திலும் நித்திலா தானே பெரிய அன்னையை அண்ணனிடம் அனுப்பியிருக்கிறாள்.

நித்தியும் அவளுடைய ரபன்ஸலை எப்படி மறந்தாள் என்று தான் தெரியவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் நிச்சயம் அண்ணன் காதலிக்கும் பெண் அவளென்று உறுதி செய்திருப்பாள். விக்ரமிடம் அவளை பற்றி கேட்டும் இருப்பாள்.

அதுமட்டுமா உண்மையில் சந்தியா சொன்ன வார்த்தைகள் நிஜம் தானோ? அவள் அவனிடம் பேசாமல் இருந்திருந்தால் அவள் வாழ்க்கை இல்லையில்லை அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்திருக்குமோ என்னவோ.


*****
அந்த ஐஸ்கிரீம் பார்லரில் கோபத்தில் தங்களை மறந்து இருவரும் பேசிக் கொண்டார்கள். இதுதான் சந்தியாவும் கௌதமும். பொறுமையாக இருக்கும் வரையே இருவரும் ‘பூ’. கோபம் வந்து இருவரும் பேச ஆரம்பித்தால் புயலாக மாறி தங்களையே மறந்து ‘உண்மையை பேசுபவன் தெய்வத்திற்கு சமம்’ என்று அனைத்தையும் கக்கி விடுவார்கள்.

முதலில் நம்பர் மாற்றி கொள்ளப்பட்டது. சந்தியா அப்போது விக்ரம் அவளுக்கு வாங்கிக் கொடுத்த கைபேசியை தான் வைத்திருந்தாள். பக்கத்துக்கு வீட்டில் தானே இருக்கிறேன், கூப்பிட்டால் வரப் போகிறேன். இதற்கு எதற்கு கைபேசி என்று தான் அவன் வாங்கிக் கொடுத்த போது சந்தியா சொன்னாள். அவன் கைபேசி வாங்கி தந்தது அவனுக்கு உதவியாக இருந்ததோ என்னவோ கௌதமுக்கு நன்கு உதவியது. சந்தியா கௌதமுடைய ‘குட் மார்னிங்’ குறுஞ்செய்தியை பார்த்தே எழுவாள். காலையில் நேரத்தில் எழுவது அவனது வழக்கம். எழுந்ததும் அவளுக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு தான் அடுத்த வேலையே.

குட் மார்னிங்கில் ஆரம்பித்து வீட்டு பாடத்தை செய்தாயா, தேர்விற்கு படித்தாயா, அந்த மேத்ஸ் சம்மிற்கு என்ன விடை வந்தது போன்றதாகவே பேச்சுக்கள் இருக்கும். கௌதமுக்கும் அதற்குமேல் வேறு மாதிரியான பேச்சுக்களை வைத்துக் கொள்ள தோன்றவில்லை.

கௌதம் நிறைய பேசுவான். அவன் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும். கண்களிலும் வார்த்தைகளிலும் உயிர் இருக்கும். எதை சொன்னாலும் கோர்வையாக கதையாக சொல்லுவான். அவன் பேசுவதை கேட்கவே சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும். அதற்காக அவள் பேசமாட்டாள் என்று நினைக்க வேண்டாம். அது என்னவோ மற்றவர்களிடம் அதிகம் பேசாதவள், விக்ரம் கௌதம் என்று வந்துவிட்டால் அதிகமும் பேசுவாள் அதிகாரமும் செய்வாள். அவர்கள் தவறு செய்தால் அதட்டவும் செய்வாள் கோபமும் படுவாள்.

ஆம், இப்போது விக்ரம், சந்தியா மட்டுமல்ல கௌதமோடு சேர்ந்து அவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தனர். விக்ரம் கௌதமை அழைப்பது போல் சந்தியாவும் ‘கௌதி’ என்றே அவனை அழைப்பாள்.

மூவரும் அரட்டை அடிப்பதும், விடுமுறை நாட்களில் வெளியே செல்வதும் என அந்த பள்ளியிருந்த மந்தவெளியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஒரே கலாட்டா செய்து வந்தனர்.

சந்தியா வீட்டில் விக்ரம் உடன் இருப்பதால் அவனுடன் சென்று வருகிறாள் என்று எதுவும் சொல்ல மாட்டார்கள். விக்ரம் வீட்டில் சொல்ல ஆளே இருக்க மாட்டார்கள். கௌதம் வீட்டில் சொல்லவே மாட்டான். அவன் முதலிலிருந்தே வீட்டில் சொல்லிவிட்டு எதையும் செய்பவன் அல்லவே. நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்று தகவலாக மட்டுமே சொல்வான்.

கௌதம் டிரைவரை வைத்து கார் எடுத்து வந்தால் அட்டகாசம் இன்னும் பலமடங்கு அதிகமாகும். சந்தியா முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர காரில் ஏறினாள் என்றால் அது அவனது காரே. சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு ஜன்னலை திறந்துக் கொண்டு லாங் டிரைவ் போவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே முத்துகிருஷ்ணன் ஆட்டோவிலும் வாடகைக்காரிலும் அழைத்துச் சென்று அதை பிள்ளைகளுக்கு பழகியிருக்கிறார்.

“கௌதி நம்ப ப்ரண்ட்ஷிப் சாங் போடேன்” சந்தியா கேட்க காரில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கௌதமும் போட்டான்.

‘வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
ப்ரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோ ஹோ

ப்ரண்ட்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே

நாட்டில் உள்ள கூட்டணிப் போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீற மாட்டோமே

நண்பா வா ஹே ஹே ஹே ஹே
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ

கடல் கொண்ட மழை நீரை
இதை காண முடியாது

கடல் கொண்ட நதி நீரை
அடையாளம் தெரியாது’

மூவரும் வானில் பறந்து சந்தோசமாக திரிந்தனர். ஒரு பெண்ணிற்கு தந்தை, சகோதரன், பின்னாளில் கணவன், மகன். இவர்கள் தான் அவள் வாழ்வின் பாதுகாவலர்கள் என்றிருந்த பழையகாலம் மாறி இப்போது ஒரு நல்ல ஆண் நண்பனும் அவளை பாதுகாப்பான் என்று உலகம் மாறித் தான் இருந்தது. அது சந்தியா விசயத்திலும் பொய்யில்லை. அதுவும் அவளுக்கு ஒன்றல்ல, அவளுக்காக எதையும் செய்யும் இரண்டு ஆண் நண்பர்களாக விக்ரமும் கௌதமும் இருந்தனர்.

அதற்காக பாதுகாப்பது மட்டும் அவர்களது பணி என்று இருந்துவிடவில்லை. அவளை படுத்துபவர்களும் அவர்கள் இருவரே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் கையில் கிடைத்த பொம்மை அவள். அவளை சீண்டி பார்ப்பதும், கிண்டல் செய்வதும், சமயத்தில் அவர்களது கேலியால் அவளை அழ வைப்பதும் அவர்களே. இதுவெல்லாம் அவர்கள் நட்பில் சகஜமே.

எங்கு வெளியே சென்றாலும் கேமராவை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுக்கவும் மூவரும் தவறியதில்லை. அன்றும் மூவரும் அவர்களது மற்ற நண்பர்கள் பீட்டர், தினேஷ், சரவணன், செல்வம் மற்றும் விக்னேஷுடன் வெளியே சென்றிருந்தனர்.

“ஹேய், சீக்கிரம் ஒழுங்கா போஸ் கொடுடி. எவ்ளோ நேரம் குனிய வைப்ப” பொறுமையை இழந்த கௌதம் சொன்னான். கௌதமும் விக்ரமும் தரையில் முட்டிப் போட்டிருக்க, கௌதம் மீது ஒரு காலையும் விக்ரம் மீது மற்றொரு காலையும் வைத்து அவர்கள் மீது ஏறி நின்றிருந்தாள்.

“நான் என்னடா பண்ணுவேன் காத்துல முடி பறக்குது. ரெண்டுபேரும் நல்ல கடோர்கஜன் மாதிரி தான இருக்கீங்க. கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணமுடியாதா. இதோ சரி பண்ணிட்டேன். தினேஷ் அண்ணா இப்ப எடு” என்றாள்.

ஆம், இப்போது விக்ரம் கௌதமை தவிர அவர்களது மற்ற நண்பர்களை சந்தியா ‘அண்ணா’ என்றே அழைக்கிறாள். கௌதம் தான் அவள் யாரிடத்திலும் அதிகம் பேசுவதில்லை என்று அவர்களின் நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தான். அவளோ அவர்களை அண்ணாவென்று அழைக்க துவங்கிவிட்டாள்.

சந்தியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த உலகத்திலேயே அவள் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றெண்ண தொடங்கினாள். அப்படி தான் விக்ரமும் கௌதமும் அவளை தாங்கினார்கள். இந்த நிமிடம் இந்த நொடி அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பின்னாளில், ஒருவன் தனக்காக எதையும் இழக்கும் உயிர்தோழனாகவும், இன்னொருவன் தனக்காக உயிரையே கொடுக்கும் காதலனாகவும் மாறப் போகிறார்கள் என்று.

எது எப்படி நடந்தால் என்ன, இந்த நொடி அவர்கள் மூவரும் அடுத்த நாளை பற்றி யோசிக்காமல் இந்த நாளை மகிழ்ச்சியாக கழித்தார்கள். இதில் கௌதம், தான் எதற்கு இந்த பள்ளியில் சேர்ந்தோம் என்பதையே முற்றிலுமாக மறந்திருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவன் தேவதை கடைசிவரை அவனுடன் இருக்கவேண்டும். இப்போது சந்தியா அப்படி தான் அவனுக்கு இருந்தாள். அவனை பொறுத்தவரை அந்த நட்பே போதுமென்று எண்ண ஆரம்பித்தான். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அவள் தான் அவனது தேவதை. அதில் எந்த மாற்றமும் அந்நாளிலும் இந்நாளிலும் எந்நாளிலும் வந்ததில்லை, வரப் போவதுமில்லை.

அவள் அவனுடன் இருக்கிறாள். அதுபோதும் என்றெண்ணி திருப்தி அடைந்தவன் அதற்கே மோசம் வரும்போது என்ன முடிவெடுப்பான் என்பது அவனுக்கே தெரியாத ஒன்று.

இப்படியே பதினோறாம் வகுப்பு இறுதியை வந்தடைந்தனர். அப்போது தான் அந்த நிகழ்வு நடந்தேறியது.

விக்ரம், கௌதம், சந்தியா மூவரும் விக்ரமின் வீட்டில் கூடி ஒன்றாக படிப்பது, விளையாடுவது, அரட்டை அடிப்பது வழக்கமான ஒன்றே. அன்றும் அது தான் நடந்துக் கொண்டிருந்தது.

“ரெண்டுபேரும் ஆன்வல் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணப்போறேன்னு வந்ததுல இருந்து பிளே ஸ்டேஷன்ல கேம் தான் விளையாடிட்டு இருக்கீங்க” காலையிலிருந்து இருவரும் படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள். சந்தியாவும் அவள் வீட்டுற்கு சென்று அன்னைக்கு வீட்டு வேலையில் உதவி செய்துவிட்டு வந்துப் பார்த்தால் அப்போதும் விளையாடிக் கொண்டு தான் இருந்தனர்.

அவள் சொன்னதை காதில் வாங்கினார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. கீழே சென்று இருவருக்கும் பூஸ்ட் மற்றும் மாலை சிற்றுண்டி செய்து எடுத்து வந்தாள்.

“விக்ரம் டைம் ஓவர் எழுந்து வா” அவள் வார்த்தைக்கு ஜாய் ஸ்டிக்கை அப்படியே போட்டுவிட்டு அவன் எழுந்து வந்தான். கௌதம் மட்டும் வரவில்லை. இன்னும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

“கௌதி, உனக்கு தனியா சொல்லணுமா. எழுந்து வா” அவ்வளவு தான். விக்ரமுக்கு நேற்று நடந்தது நினைவிற்கு வந்தது.

விக்ரமின் வகுப்புத் தோழன் சபரீஷ் செய்த வேலையே அது. ‘டேய் மச்சான். நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ. எனக்கென்னமோ சந்தியாவும் கௌதமும் லவ் பண்றாங்கனு தோணுது. அது எப்படிடா, அவ அவனை மட்டும் கௌதினு கூப்பிடறா உன்னை விக்ரம்னு சொல்றா. என்னமோ தப்பா தெரியுதுடா பார்த்துக்கோனு’ சொல்லியிருந்தான். சபரீஷை கௌதமுக்கும் நன்கு தெரியும். அவனுக்கும் அவன் நண்பனே. இருந்தும் நாம் சிலர் மீது கூடுதல் அன்பும் அக்கறையும் காட்டுவோம். சபரீஷிக்கு விக்ரம் அப்படித்தான்.

அவன் பேசியது விக்ரமின் மனதில் நிறைந்திருக்க “நில்லு சந்து. அது என்ன நான் மட்டும் விக்ரம், அவன் கௌதியா” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கௌதம் விளையாடுவதை நிறுத்திவிட்டு அவனை திரும்பிப் பார்த்தான்.

“இது என்னடா புதுசா. நான் உன்னை எப்பவுமே அப்படி தான கூப்பிடுவேன். ஆனா, அவன்கிட்ட பேச ஆரம்பிச்சப்பவே நீ கௌதினு கூப்பிடறத பார்த்து நானும் அவனை அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்” சந்தியா அவனுக்கு பொறுமையாக விளக்கினாள்.

“அப்ப அவனும் தான் என்னை விக்கினு கூப்பிடறான். நீ அப்போ என்னை விக்கினு கூப்பிட வேண்டியது தான” விக்ரம் புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

“டேய், அப்ப நீ கூட தான் அவளை சந்துனு கூப்பிடற. நான் சந்தியான்னு தான கூப்பிடறேன். இதெல்லாமா பெருசு பண்ணுவாங்க” கௌதம் சந்தியாவிற்கு பரிந்துப் பேச அவள் அவனை குறுக்கே பேசாதே என்று கண் ஜாடை காட்ட, அதில் கோபம் வந்து வெடுக்கென்று எழுந்து

“நான் கிளம்பறேன்டா” விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கௌதம்.

அன்று முழுவதும் எந்த குறுஞ்செய்தியும் கௌதமிடம் இருந்து வரவில்லை. அடுத்தநாளும் மறுநாள் தேர்வு இருந்ததால் அதை படித்துவிட்டாயா இதை முடித்துவிட்டாயா என்பது போன்ற குறுஞ்செய்திகளே அவனிடமிருந்து வர இவளும் ஆம் இல்லை என்று அவன் பெயரை எங்கும் குறிப்பிடாமல் ஓரிரண்டு வார்த்தையிலேயே பதிலளித்தாள். அது அவனுக்கு புரிந்தும் இருந்தது. ஒரு தக்க சமயத்திற்காக காத்திருந்தான்.

காலையில் அவனுக்கும் அவளுக்கும் வேறு வேறு வகுப்பில் தேர்வு. தேர்வுக்கு செல்வதற்கு முன்பு பயாலஜி பரீட்சையை தவிர மற்ற பரீட்சைகளுக்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமுறை படித்ததை நினைவுக் கூர்ந்துவிட்டு செல்வர். அன்று அவர்களுக்கு வேதியியல் பரீட்சை.

“இது இம்பார்ட்டண்ட் டாபிக்டா. வர வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. படிச்சிட்டியா” விக்ரமிடம் தான் முதலில் கேட்டான் கௌதம்.

“படிச்சிட்டேன் கௌதி. சந்து தான் நோட்ஸ் தந்தா” விக்ரம் சொல்ல

“ஐயோ.. நான் அந்த நோட்ஸை எப்படியோ மிஸ் பண்ணிட்டு இருக்கேன்டா. உன் நோட்ஸ் கொடு சந்தியா” என்றான்.

“இதோ ஒரு நிமிஷம். இந்தா கௌதம்” என்றாள். அந்த கௌதம் என்ற விளிப்பில் அவனுக்கு கண்கள் சிவந்து கோபம் தலைக்கு ஏறியது. நிமிர்ந்து அவளை அவன் பார்த்த பார்வையிலேயே அவன் அவள் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

இது விக்ரமுக்கு புரியாமல் இல்லை. புரிந்துக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தான். சொல்லப்போனால் அவனுக்கு அவளற்ற மகிழ்ச்சியே. அவள் தான் அவனை சரிசெய்ய அன்றே அவனிடம் சொல்லிவிட்டாளே, இனி தான் கௌதமை கௌதி என்று அழைக்கமாட்டேன் என்று. இப்போது அதை நடைமுறை மட்டுமே படுத்தியிருக்கிறாள்.

அதற்குமேல் அவளிடம் பேச தனக்கு ஒன்றுமில்லை என்று தோன்ற, அங்கிருந்து எழுந்த கௌதம் “இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு. நான் கிளாஸுக்கு போறேன் விக்கி” என்று விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு தன்னுடைய பையை மாட்டிக் கொண்டு விடுவிடுவென நடந்தான். சந்தியாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் அந்த நண்பன் கோபித்துக் கொள்கிறான். அந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் இவன் கோபித்துக் கொள்கிறான். மீண்டும் அவளுக்கு இக்கட்டான நிலையாகி போனது.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 10

விக்ரமின் தேர்வுக்கூடம் முதல் தளம். சந்தியாவிற்கும் கௌதமிற்கும் மூன்றாவது தளத்தில் தேர்வுக்கூடம்.

கௌதம் கோபமாக சென்றுவிட்டதை பார்த்து அதிர்ந்தவள் “வா விக்ரம், நாமளும் கிளம்பலாம்” என்று நண்பனையும் இழுத்து வந்து முதல் தளத்தில் அவனிடமிருந்து விடைபெற்று மூன்றாம் தளத்தை நோக்கி படிகளை ஏறவில்லை, படிகளில் ஓடினாள்.

கௌதம் உயரமானவன் என்பதால் இரண்டு படிக்கு ஒரு அடியென்று ஏறி இருந்தான். அதுவும் இப்போதிருந்த கோபத்தில் இன்னும் வேகமாக ஏறிச் சென்றிருந்தான். அவனது வேகத்திற்கு அவளால் ஈடுத்தர முடியவில்லை. ஏறி வந்தவள், கௌதம் அவனது தேர்வறை வாசலில் நிற்பதை பார்த்தாள். உடன் சரவணனும் நின்றிருந்தான். சரவணனும் சந்தியாவும் வரிசைப்படி அடுத்தடுத்த பெயர் என்பதால் இருவருக்கும் ஒரே தேர்வு வகுப்பு.

நேராக கௌதமிடம் வந்தவள் “கௌதம்” என்று மறுபடியும் அழைக்க, அவன் கோபம் குறையுமா என்ன, ஏறவே செய்தது. கைகளை அவள் முகத்திற்கு நேராக நீட்டியவனின் செயலில் பேசவேண்டாம் என்ற அர்த்தம் இருக்க அதை புரிந்து அவளும் கண்ணீரோடு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள்.

“சரவணன் அண்ணா, நீயும் வர்றியா” என்றதும் அவனும் கௌதமிடம் விடைபெற்று சந்தியாவுடன் சென்றான். அவளால் அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரும்பி திரும்பி அவனை பார்த்தபடியே அவளது வகுப்பிற்குள் சென்றாள். ஆனால் கௌதம் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

எப்போது தேர்வு முடியும் என்று காத்திருந்தவள், தேர்வறையை விட்டு வெளியே வந்ததும் கௌதம் பின் ஓடினாள்.

“நில்லுடா. இப்படி வேக வேகமா நடந்தா உன் ஸ்பீட்க்கு நான் எப்படி மேச் பண்றது” அவள் சொல்ல அவன் பதிலேதும் பேசாமல் முன்னோக்கி நடந்தான்.

“நான் இன்னைக்கு உன் கூட தான் வரப் போறேன். விக்ரம்கிட்ட சொல்லிட்டேன். அவனும் கிளம்பி போயிட்டான்” இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆன நாளிலிருந்தே மூவரும் ஒன்றாக தான் வீட்டிற்கு செல்வார்கள். காலையில் எப்போதும் விக்ரம் தான் சந்தியாவை அழைத்து வருவான். மாலை வீட்டிற்கு திரும்பும்போது மூவரும் ஒன்றாக பள்ளியிலிருந்து கிளம்ப, சந்தியா ஒன்று விக்ரம் அல்லது கௌதமின் பைக்கில் ஏறிக் கொள்வாள். ஒன்றாக நண்பர்களின் வீடுவரை வரும் கௌதம், அவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றதும் அங்கிருந்து அவன் வீட்டிற்குச் செல்வான். சந்தியா, ‘எனக்காக சுற்றிக் கொண்டு வராதே. நான் விக்ரமுடனே செல்கிறேன்’ என்று கௌதமிடம் பலமுறை சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.

ஒன்று அவன் வண்டியில் ஏறவேண்டும் இல்லையென்றால் விக்ரம் வண்டியில். அதைவிட்டு நடந்து செல்வதோ இல்லை பஸ், ஆட்டோவில் செல்வதையோ வைத்துக்கொள்ள கூடாதென்று தெளிவாக சொல்லிவிட்டான்.

அத்தோடு ஆட்டோவில் செல்கிறோமோ இல்லையோ வீட்டை விட்டு வெளியில் வரும்போது கையில் பணம் இல்லாமல் வெளியே வரகூடாது. குறைந்தபட்சம் ஒரு இருநூறு ரூபாயாவது வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையும் இட்டான். இப்போது அவள் கையில் காசிருக்கும் என்று நன்கு தெரியும் அதற்காக அவளை விட்டு சென்று விடுவானா. அது அவளை மனதளவில் பாதிக்கும் என்று உணர்ந்தவன் பைக்கின் அருகில் நின்றவளை “ஏறு” என்றான்.

என்ன, வழியெங்கும் எதுவும் பேசத்தான் இல்லை. வீட்டுவாசலில் நிறுத்தும் நேரத்தில் “என்னடா பேசமாட்டீயா” என்றாள்.

அவன் அமைதியாகவே இருப்பதை பார்த்தவள் “ப்ளீஸ் கௌதம், பேசு” என்றும் சொன்னாள்.

“கௌதம்னு கூப்பிடாத. எனக்கு வெறி ஏறுது” கோபத்தில் அவன் கண்கள் சிவக்க, கை விரல்களை அழுந்த மடக்கிக் கொண்டான்.

“அதுதானடா உன் பேரு. அதுக்கு ஏன் வெறியாகுற. அவனுக்கு தான் புரியல. நீ மெச்சூர்ட்னு நினைச்சேன். நீயுமா”

“அதுக்காக அவன் சொன்னான்னு நீ என்னை கௌதினு கூப்பிடறத நிறுத்திடுவியா. சொல்ல வேண்டியது தான அப்படி தான் கூப்பிடுவேன்னு. அவன் உன்னை சந்து பொந்துனு கூப்பிடறானே நான் எதாவது குறுக்க வந்திருக்கேனா” கோபத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“பேசி முடிச்சிட்டியா. அவன் சொன்னான்னு மட்டும் நான் உன்னை கௌதினு கூப்பிடறத நிறுத்தல. எனக்கும் உன்னை கௌதம்னு கூப்பிட தான் பிடிச்சிருக்கு” இவனை சமாதானம் செய்யும் பொருட்டுச் சொன்னாள்.

“பொய் சொல்லாத. அப்புறம் இத்தனை நாளா கூப்பிட வேண்டியது தான. இப்ப எதுக்கு திடீர்னு மாத்தணும்” அவன் கோபம் குறையவே இல்லை.

“அது பர்ஸ்ட்ல இருந்தே நான் உன்னை கௌதினு கூப்பிட்டுட்டேனா, அப்புறம் திடீர்னு மாத்தினா நீ கோவப்படுவியோனு தான் அப்படி கூப்பிடல. உண்மையிலேயே எனக்கு கௌதிய விட கௌதம் தான் பிடிச்சிருக்கு. அதனால தான் அவன் சொன்னதும் சட்டுனு மாத்திக்கிட்டேன். நீ என்னை அவனை மாதிரி சந்துனு கூப்பிடலனாலும் நான் உன் பெஸ்ட் ப்ரண்ட் தான. அப்படிதானடா நீயும் எனக்கு. கூப்பிடறதுல என்ன ஆகிடபோகுது” ஆம் அவனும் அவளை சந்தியாவென்று எல்லோரும் அழைப்பது போல் தானே அழைக்கிறான். அதில் என்ன மாறிவிட்டது. அவள் அவனது அருமைத்தோழி தானே.

இது தான் கௌதமின் குணம். அவனுக்கு வேண்டியதை பெற்றே தீருவேன் என்ற வைராக்கியம் கொண்டவன் தான். இருந்தும் ஒன்று சரியென்றுபட்டால் புரிந்து ஏற்றுக் கொள்வான். அதற்குமேல் வீம்பு பிடிக்கமாட்டான். ஐந்து சகோதரிகளுடன் ஒரேவீட்டில் இருப்பதால் இந்த பக்குவம் அவனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது.

பின் நல்லபடியாக விடைபெற்று சென்றவனையே பார்த்திருந்தவள் “சாரி கௌதம். விக்ரமுக்காக தான் ஸ்டாப் பண்ணேன். என்னால உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதேநேரத்துல நான் சொன்னதும் பொய் இல்ல. எனக்கு கௌதமும் பிடிச்சி இருந்துச்சு. அதான், அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். இனி எப்பவும் அப்படி தான் கூப்பிடுவேன். நீயாவது என்னை புரிஞ்சிக்கோ” தன் மனதிலேயே எண்ணினாள்.

ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனுக்கு மிகப்பெரிய தவறு தான் செய்தாள். இருந்தும் அவளிடத்தில் வேறு வழி என்ன இருக்கக்கூடும். அன்றே விக்ரமிடம் இனி கௌதமை ‘கௌதி’ என்று அழைக்கமாட்டேன் என்று சொல்லித் தானே அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள். அது அவளுக்கும் விக்ரமுக்கும் இருக்கும் நட்பையும், விக்ரம் மற்றும் கௌதமின் நட்பையும் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு. அப்படியென்றால் அவளுக்கும் கௌதமுக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி அவள் யோசிக்கவே இல்லையா?

தேர்வுகள் அனைத்தும் முடிந்தது. முழு ஆண்டு விடுமுறையில் ஒருநாள் கௌதம் சந்தியாவை எங்கோ அழைத்து சென்றுக் கொண்டிருந்தான்.

“என்னை எங்க கூட்டிட்டு போற கௌதம்” வெகுநேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் பைக்கை இயக்கிக் கொண்டிருந்தான்.

“டேய், கேட்டுட்டு தான இருக்கேன். என்னை எங்கடா கூட்டிட்டு போற. வீட்ல அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். நீ என்னனா வந்தா தான் ஆச்சுன்னு அடம்பிடிச்சி இழுத்துட்டு போயிட்டு இருக்க”

“உன்னை கடத்திட்டு போறேன். போதுமா” கௌதம் சொல்ல

“ஓ.. அப்படியா. என் தொல்லை தாங்காம நீயே திரும்ப கொண்டுப் போய் விட்டுடுவ” அவள் சொல்லிச் சிரித்தாள்.

“தெரிஞ்சா சரி” வாய்க்குள்ளேயே முணுமுணுத்து கொண்டவன் வண்டியின் வேகத்தை கூட்டினான்.

“இப்படி வேகமா போகாதனு எத்தனை தடவை சொல்றது கௌதம். நான் பின்னாடி இருக்கப்பவே இவ்ளோ வேகமா போறன்னா தனியா போறப்போ எவ்ளோ ஸ்பீட்ல போவ. இந்த ஏஜ்ல பைக் ஓட்டுறது தப்புனு உங்கிட்டயும் அவன்கிட்டயும் நிறைய டைம் சொல்லிட்டேன். அவனாவது பரவாயில்ல, பார்த்துப் போவான். நீ கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுற. முதல்ல உங்கிட்ட இருந்து பைக்கை பிடுங்கி வைக்கணும்” என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை தொடர்ந்து இயக்கினான்.

வண்டியை நேராக கொண்டுப் போய் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நிறுத்த காவலாளி அவனுக்கு சல்யூட் அடித்து கதவை திறந்தார். மேலே நிமிர்ந்து பார்த்தவளுக்கு அந்த பெயர்ப்பலகை தெரிந்தது. அதில் ‘செல்வராணி அறக்கட்டளை’ என்றிருந்தது.

உள்ளே சென்றதும் “இதுதான் எங்க டிரஸ்ட் ஆபீஸ். இதோட சேர்ந்து பசங்க படிக்கற ஸ்கூலும் இருக்கு. இங்க எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்னு யோசிக்கிறீயா” கௌதம் கேட்க

“இல்லயே.. எனக்கு தான் தெரியுமே” என்று சொன்னவளை ஆச்சர்யப்பட்டு திரும்பிப் பார்த்தான்.

“அந்த பையனை இங்க தான வச்சி படிக்க வைக்கறீங்க. அவனை எனக்கு காட்ட தான” என்று சொன்னவளை

‘அதானே. என்னடா ரொம்ப மாசமா அவனை பத்தி எதுவும் பேசலயேனு பார்த்தேன்’ தன் மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான். ஆம், அவனை படிக்க வைக்கிறேன் என்று சொல்லியும் பலமுறை கேட்டிருக்கிறாள் அவன் பள்ளிக்கு செல்கிறானா, நன்றாக படிக்கிறானா, மறுபடியும் வேலை செய்ய கடைக்கு சென்றுவிடவில்லையே என்று. சில மாதங்களாக தான் அவனைப் பற்றி கேட்பதை விட்டிருக்கிறாள். கௌதமை அவள் நம்ப ஆரம்பித்து விட்டாளோ?

“இல்ல. எங்க மேல நம்பிக்கை இல்லாம தான அந்த பையனைப் பத்தி அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்க. அதான் அதுக்கு ஒரு எண்ட்கார்ட் போடலாம்னு. சரி வா உள்ள போகலாம்”

“ஒரு நிமிஷம் கௌதம். அந்த பையன் முன்னாடி கொண்டுப் போய் நிறுத்தி நான் தான் அவனை படிக்க வைக்க சொன்னேனுனெல்லாம் சொல்லிடாத. இந்த வயசுல யாரும் வேலை செய்யக் கூடாது, அவன் படிக்கணும் அவ்ளோ தான் எனக்கு வேணும். மத்தபடி அவனை நேர்ல பார்க்கணும்னுலாம் ஒண்ணுமில்ல. சரி, என்னை வேற கூட்டிட்டு வந்துட்ட. அதனால நான் கிட்ட வரல தூரத்துல இருந்தே அவனை பார்த்துக்கறேன். நான் வேற கடைல அன்னைக்கு பார்க்காம விட்டுட்டேன்” அவள் பேச பேச அவளையே அசந்து பார்த்திருந்தான்.

‘ரொம்ப தான் தன்னடக்கம். ஆமா, யார் இவளுக்கு பேச தெரியாதுனு சொன்னது. எவ்ளோ பேசறா பாரு. இதுல அந்த பையனை தூரத்துல இருந்து பார்க்கணுமாம். என்னால முடியல’ மனதில் நினைத்துக் கொண்டிருந்தவனை ‘கௌதம்’ என்று உலுக்கியவள்

“போகலாமா” என்றாள்.

“போலாம். அதுக்கு முன்னாடி நான் சொல்றத முதல்ல கேளு. அந்த பையனை நீ இப்ப பார்க்கப் போறதில்ல. அவன் டுவெல்த்ல நல்ல மார்க் எடுத்து, மெரிட்ல நல்ல காலேஜ்ல சேர்ந்து, இன்ஜினீயர் ஆகி, நல்ல வேலைக்கு போய் அவன் லைஃப்ல ஒரு நல்ல நிலைமைக்கு வரப்போ தான் உன் முன்னாடி வருவானாம். அதுவரைக்கும் உன்னை பார்க்கமாட்டானாம்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட

“அவனே சொன்னானா. நீ என்னைப் பத்தி அவன்கிட்ட சொன்னியா” அவள் உடனே கேட்க, அவன் ஆமென்று தலையாட்ட “ஏன்டா. இதுக்கு தான் தெரியவேண்டாம்னு சொன்னேன். இப்ப பாரு, நீ சொன்னதுனால அவன் இப்படி சொல்லிருக்கான்” என்றவளுக்கு முகமே வாடிப்போனது.

“சரி வா, நாம மத்த பசங்கள பார்க்கலாமா” அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“நானே கேட்கணும்னு நினைச்சேன். செல்வராணி யாரு கௌதம். அவங்க நேம்ல எல்லாம் இருக்கு”

“இதுவே உனக்கு தெரியாதா. செல்வராணி என் ஸ்வீட் அம்மா” என்றான் ஆச்சர்யத்தோடு.

“ஓ, உன் அம்மா பேரா. அப்போ வேணி பொன்மாளிகை. உன் சிஸ்டர்ஸ் நேம் கூட வேணினு இல்லயே”

“அது எங்க அத்தை, அம்சவேணி. அத்தைய அப்பா தான் வளர்த்தாரு. அவருக்கு அத்தைனா உயிர்” என்றவுடன்

“சே.. நான் உன்னைப் பத்தி எதுவுமே தெரிஞ்சிக்காம இருந்திருக்கேனே” வருத்தப்பட்டு சொன்னாள்.

“தெரிஞ்சிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லன்னு நினைச்சிருப்ப” என்றதும் அவள் அவனை முறைக்க “சரி அட்லீஸ்ட் எங்க அப்பா நேம் தெரியுமா” என்று அவளிடம் விளையாட

“தெரியும் கௌதம் செல்வராஜ்” என்றாள் மிடுக்காக.

“பரவாயில்லடி. உனக்கும் அப்பப்போ கிட்னி ஒர்க் பண்ணுது” அவன் அவளை கேலி செய்ய ‘டேய்ய்ய் உன்னை’ என்ற முறைப்போடு அவனைப் பார்த்தாள். இருவரும் மற்ற பிள்ளைகளை பார்த்து அவர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தையும் செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அது தான் தான் என்று சொல்லவிடாமல் அவனை எது தடுத்தது. புடவை விசயத்தை பற்றி பயப்படுகிறான் என்றால் அதை தவிர்த்து மற்றதை சொல்லியிருக்கலாமே. எதற்கு இந்த பிடிவாதம். எதற்காக ஒரு சின்ன விசயத்தை மறைக்க இத்தனை பொய்கள். அது அவன் மட்டுமே அறிந்தது. எது எப்படியோ இன்னும் பல வருடங்களுக்கு கடையில் வேலை செய்த அவனை அவளிடம் காட்டுவதிலிருந்து தள்ளிப் போட்டான். உண்மை ஒருநாள் சந்தியாவிற்கு தெரிய வரும்போது அவளதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது யாரும் அறியாத ஒன்று.

நாட்கள் செல்ல செல்ல மூவரது பிணைப்பும் வலுவாகி கொண்டே போனது. மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தார்கள். இம்முறை பள்ளி விளையாட்டு தலைவனாக கௌதம் தேர்ந்தெடுக்க பட்டிருந்தான். விக்ரம் அவனது ஸஃபயர் (நீளம்) அணியின் விளையாட்டு தலைவன். போட்டிகளும் நடந்து இருவரும் பரிசுகளை வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர். பள்ளி கால்பந்து அணியிலும் கௌதம் தலைவனாகவும் விக்ரம் துணைத் தலைவனாகவும் இருந்தார்கள். விளையாட்டிலும் கௌதம் தாக்குதல் முறையிலே ஃபார்வார்ட் விளையாடுவான். விக்ரம் அதற்கு நேர்மாறு. அவன் டிஃபென்ட்(Defend) செய்து விளையாடுவான். இப்படி விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் இரண்டு நண்பர்களும் சிறந்து விளங்க சந்தியாவிடம் படிப்பை தவிர வேறேதிலும் பங்களிப்பு இருக்காது. அது அவளுக்கு விளையாட தெரியாது என்றில்லை. அவளுடைய தயக்கமே அவளை எதிலும் பங்குபெற விடாது.

இத்தனைக்கும் பாட்டு கற்றிருக்கிறாள். இரண்டு வருடம் நாட்டியமும் கற்றிருந்தாள். ஆனால் இதுவரை மேடை ஏறியதுமில்லை எந்த போட்டியிலும் கலந்துக் கொண்டதுமில்லை. இம்முறை கௌதம் அவளை எதிலாவது ஈடுப்படுத்தியே ஆகவேண்டும் என்ற முடிவோடு ஸ்போர்ட்ஸ் கேப்டன் என்ற பொறுப்பிலிருந்து அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் நிச்சயம் பங்குபெற வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தான்.

அதுமட்டுமில்லாமல் அவள் நன்றாக கோ-கோ விளையாடுவாள். மூன்று வருடத்திற்கு முன் யாரோ இரண்டு மாணவர்கள் கேலி செய்ததால் இப்போது அணியில் இல்லை. அவளை மறுபடியும் கோ-கோ அணியில் சேர ஊக்குவித்தான். பரிசு கிடைப்பது இரண்டாம் பட்சம் ஆனால் பங்குபெறுவது முக்கியம், அதனால் நூறு மீட்டர், இருநூறு மீட்டர் ஒட்டப் பந்தயத்திலும் பங்குபெற சொன்னான். அவளது கோ-கோ அணி வெற்றியும் பெற்றது. இதுதான் சந்தியா அவள் வாழ்வில் வாங்கும் விளையாட்டு சம்மந்தமான முதல் பரிசு.

கௌதமும் வெறும் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக மட்டும் இல்லாமல் அவனது ரூபி (சிவப்பு) அணிக்காகவும் விளையாடினான். எப்போதும் விதி விக்ரமை விலக்கி சந்தியாவையும் கௌதமையும் இணைக்கும். இம்முறையும் அதுவே நடந்தது. இருவரும் ரூபி அணியில் இருந்தனர். விக்ரம் மட்டும் ஸஃபயர் அணியில்.

ஆன்வல் ஸ்போர்ட்ஸ் மீட்டில் நிறைய பரிசுகளை ரூபி அணி குவித்து ஓவரால் சாம்பியன் பட்டம் வாங்கியது. சிறந்த மார்ச்ஃபாஸ்ட்டக்கான பரிசை விக்ரம் ஸஃபயர் அணி சார்பாக வாங்கினான். ரூபி அணிக்கு அடுத்து ஸஃபயர் அணியே புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கௌதமும் விக்ரமும் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருந்தனர்.

“அத்லெடிக்ஸ் இண்டிவியூஜுவள் சாம்பியன்ஷிப் – பாய்ஸ் - கௌதம் செல்வராஜ்” கௌதம் அந்த பரிசை வாங்க ஓட சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.

கௌதமுக்கோ அவன் வாங்கிய சாம்பியன்ஷிப்பை விட அதிக நிறைவை கொடுத்தது அன்றைக்கு சந்தியா தன் கோ-கோ அணியோடு மேடையேறி பரிசு வாங்கியது. அவள் தன்னை வெளியே காட்டிக் கொள்பவள் அல்ல. அவளை வெளிக்காட்டவே அவன் விரும்பினான். அதுமட்டுமா வாழ்வில் அவள் சென்ற ஒவ்வொரு இடமும் அங்கே அவள் பெற்ற பேரும் புகழும் அவன் கொடுத்த தைரியதால் வந்ததே. அதை அவளாலும் மறுக்கமுடியாது.

எல்லாம் முடிந்து காலாண்டு தேர்வும் வந்தது. மூவரும் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதற்கு நடுவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஓணம் பண்டிகை வந்தது.

ஆம், சந்தியாலஷ்மி கேரளத்தை சேர்ந்தவள். அவளது தாத்தா அதாவது முத்துகிருஷ்ணனின் தந்தை கேரளாவில் தன் வீட்டுப் பக்கத்தில் இருந்த தமிழ் பெண்ணை விரும்பி அவரை காதல் திருமணமும் செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன்பின் முத்துகிருஷ்ணனுக்கு தமிழ்மரபு சொல்லித்தந்தே தாயும் தந்தையும் வளர்த்தனர். ஆனால், விதி விடுமா. நிறைய வருடங்களுக்கு பிறகு தன் பத்தொன்பது வயதில் ஒரு திருமணத்திற்கு சொந்தமண்ணுக்கு தாய் தந்தையுடன் சென்ற முத்துகிருஷ்ணனனை பார்த்ததும் பிடித்துவிட்டது அவரது தூரத்து சொந்தக்கார பெண் மீனாட்சிக்கு. அப்போதே மீனாட்சி பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்திருந்தார். முத்துகிருஷ்ணனோ படிப்பேறாமல் பத்தாவதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முதலில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்தார். பின் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். மீனாட்சி குடும்பமோ நல்ல வசதி. இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்து இருந்தது. என்ன இருந்து என்ன, அவருக்கு பிடித்தது முத்துகிருஷ்ணனையே. கல்லூரி படிப்பை முடித்த கையோடு கேரளாவில் இருந்து இரயிலேறி சென்னை வந்துவிட்டார். திருமணமும் ஆனது. ஆனால் மீனாட்சியின் வீட்டில் தான் அவரை தலை முழுகிவிட்டனர். மீனாட்சி வந்த பிறகே அந்த வீட்டில் விஷு, திருவோணம் எல்லாம் அனுசரிக்கப்பட்டது.

முத்துகிருஷ்ணனின் தாயும் மருமகளாவது கணவர் வீட்டுமுறைகளை இந்த வீட்டிற்கு கொண்டுவரட்டும் என்று விட்டுவிட்டார். அதிலிருந்து அந்தவீட்டில் தமிழ் பண்டிகைகளும் அனுசரிக்கப்படும் கேரளத்து பண்டிகைகளும் அனுசரிக்கப்படும். முத்துகிருஷ்ணனுக்கு மலையாளம் தெரியாது. அதனால் வீட்டில் தமிழிலேயே பேசிக் கொண்டாலும் சக்திக்கும் சந்தியாவிற்கும் மலையாளம் நன்கு தெரியும். அவ்வப்போது தாயிடம் பேசிக்கொள்வதும் உண்டு.

அன்றைய பரீட்சையை முடித்துவிட்டு மூவரும் வண்டி நிறுத்துமிடத்திற்கு நடந்து வந்துக் கொண்டிருக்க, சந்தியா “குரூப் ஸ்டெடிஸ்க்கு ப்ரண்ட் வீட்டுக்கு போற. நாளைக்கு என்னனு ஞாபகம் இருக்குல. மறக்காம வந்திடுடா. அப்புறம் உன் மீனுக்குட்டி மனசு உடைஞ்சிடும்” விக்ரமிடம் சொன்னாள்.

“அது எப்படி நான் வராம ஓணம் ஃபங்ஷன் நடக்கும்” விக்ரமும் சொல்ல

“என்னதுடா ஓணம் ஃபங்ஷன்” என்றான் புரியாமல் கௌதம்.

“ஓ உனக்கு தெரியாதா. நம்ப கேரள நாட்டு கிளி சந்தியாலஷ்மி வீட்டுல நாளைக்கு திருவோணம் ஃபங்ஷன். நான் போனாதான் ஓணம் சத்யா நடக்குமாம்”

‘என்ன இவ மலையாளியா’ என்பது தான் கௌதமின் பார்வையாக இருந்தது. இதுவரை அவனுக்கு அது தெரியாது. தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. கடையில் ஓணப் புடவைகள் விற்பதை பார்த்து ஓணம் வரப் போகிறது என்று தெரியும். ஆனால் அதை இவள் அனுசரிப்பவள் என்று அவனுக்கு தெரியாது.

“அது என்னடா ஓணம் சத்யா. ஆமா மீனுக்குட்டி யாரு” என்றான் விக்ரமிடம்.

“அடப்பாவி ஓணம் சத்யா தெரியாதா. இட்ஸ் ஓணம் பீஸ்ட்(feast). வாழையிலைல நிறைய வகை கேரளா டிஷ்ஷ சமைச்சி வச்சி சாப்பாடு போடுவாங்கடா. செமையா இருக்கும். அதுவும் என் மீனுக்குட்டி கையால. சொல்லல பாரு, மீனுக்குட்டி என் டார்லிங். இவளோட அம்மா. எனக்கும் அம்மா தான். அவங்கள செல்லமா அப்படி தான் கூப்பிடுவேன்” விக்ரம் சொல்லும்போதே அவனுக்கும் அவள் வீட்டிற்கும் இருக்கும் பந்தம் அழகாக தெரிந்தது.

“சரி, இவ என்ன உன்னை மட்டும் கூப்பிடறா. நானெல்லாம் இவளுக்கு ஆளா தெரியலையா” இதையும் அவளிடம் கேட்காமல் விக்ரமிடமே கேட்டான்.

“விளையாடாத கௌதம். அவனை எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். அவன் எங்க வீட்டுல ஒருத்தன் மாதிரி. அவன் மேல எங்க அம்மாவுக்கு தனி பாசம். அவனுக்கு பிடிக்கும்னு ஓணத்துக்கு சம்மந்தமே இல்லாம பொங்கல் செய்வாங்க. எனக்கும் சக்திக்கும் கூட அப்படி பண்ணமாட்டாங்க. நான் உன்னை என்னனு கூட்டிட்டு போறது” அவள் நேராக அவனிடமே கேட்டுவிட்டாள்.

“நான் உனக்கு என்ன. ப்ரண்ட் தான. அதையே சொல்லு”

“அதெல்லாம் முடியாது. தேவையில்லாத பிரச்சனை வரும்”

“என் கூட பைக்ல வாசல்ல போய் இறங்கறப்போ இல்லாத பயம் இப்ப மட்டும் வருதோ. இத்தனை நாள் வாசல்ல இறக்கிவிட்டவன் இன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டான்னு சொல்லு” கடுமையான குரலில் சொல்ல அவன் பேசியது அவளுக்கு கோபத்தை கிளறியது

“என்ன கௌதம் சொல்லிக்காட்டறீயா. நான் வரமாட்டேன்னு சொன்னப்போ நீ தான் வம்புப் பண்ணி கூட்டிட்டு வந்த. இனி, உன் பைக்ல ஏறினா என்னனு கேளு”

“என்ன சொன்ன அவனை மட்டும் கூப்பிடறேனா. அவன் வீட்டுக்கு நான் உரிமையா போவேன். என்னை லாயர் அய்யா, அம்மா எதுவும் சொன்னதில்ல. கிளம்பு என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நான் உனக்கு ஆளா தெரியறேனா இல்லயானு காட்டு. அப்புறம் நான் கூட்டிட்டு போறேன்” அவளும் பதிலுக்கு வார்த்தைகளை விட்டாள்

“என்னடீ இப்ப நீ சொல்லிக்காட்டறீயா. உங்க வீடு வேற எங்க வீடு வேற. உனக்கும் அவனுக்கும் இருக்குற பிரண்ட்ஷிப்பை உங்க ரெண்டு வீட்டுலயும் மதிக்கறாங்க. எங்க வீடு அப்படியில்ல. எங்க வீட்டுக்கு நான் உன்னை இல்ல, எந்த பொண்ணையும் கூட்டிட்டு போனதில்லனு உனக்கும் தெரியும் தான” என்று சீறினான்.

செல்வராஜிற்கு வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வருவது பிடிக்காத ஒன்று. பெண் தோழிகள் என்றில்லை ஆண் நண்பர்களையும் சேர்த்துதான். ஐந்து பெண்கள் இருக்கும் வீடு அதனால் ஆண் நண்பர்களையும் பெண் தோழிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து அதனால் குடும்பமானம் கெட்டுவிடக் கூடாதென்பது அவருடைய கருத்து. அதில் மகனும் பெண்பிள்ளைகளுடன் கூட்டு வைத்து அதனால் அவனுக்கு எவ்வித பிரச்சனையும் வந்துவிடக் கூடாதென்ற அக்கறையும் இருந்தது. இந்த கட்டுப்பாடு கௌதமுக்கு மட்டுமல்ல. வீட்டிலிருக்கும் மகள்களுக்கும் சேர்த்து தான்.

கௌதம் தந்தைக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான். இந்த விசயத்திலும் அப்படி தான். அவன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது மட்டுமல்ல இவனும் யார் வீட்டிற்கும் செல்லமாட்டான். சந்தியாவை பார்க்கும் முன் விக்ரம் வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தாலும் ஓரிரண்டு முறை விக்ரமின் வற்புறுத்தலினால் சென்றிருக்கிறான். அதுவும் விக்ரம் வீட்டில் பெண்பிள்ளை இல்லையென்பதை கருத்தில் கொண்டே சென்றிருக்கிறான். பீட்டர், தினேஷ், விக்னேஷ் மற்றும் சரவணன் வீட்டில் சகோதரிகள் இருப்பதால் அதுவும் செய்யமாட்டான்.

சந்தியாவை பார்த்ததிலிருந்து அவனது கொள்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டு இப்போது விக்ரம் வீட்டிற்கு அவனையும் அவளையும் பார்க்கச் செல்கிறான்.

கௌதம் சந்தியா இருவரும் மாறி மாறி பேச சண்டை வெடித்திருந்தது.

விக்ரமிற்கு தெரியும் இவர்கள் இருவருக்கும் கோபம் வந்தால் அனைத்தையும் பேசி பிரச்சனையில் தான் கொண்டுப் போய் முடிப்பார்கள் என்று. அதனால் அதை நிறுத்தும் பொருட்டு

“அடச்சே. ரெண்டுபேரும் நிறுத்துங்க” இருவரும் வாயை அடைத்துக் கொண்டனர்.

“இப்ப என்ன அவ வீட்டு ஓணத்துக்கு நீ வரணும் அவ்ளோ தான. நாளைக்கு என் வீட்டுக்கு வாடா” கௌதமை பார்த்து சொல்லிவிட்டு “சந்து, நீ என்ன பண்றன்னா சத்யவை தூக்கி ஒரு கேரியர்ல கட்டிட்டு வந்திடு. மீனாம்மா கேட்டா, விக்ரமுக்கு வர முடியலை அதான் எடுத்துக்கிட்டு போறேன்னு சொல்லிடு. இப்ப முறையா அவனை கூப்பிடு பார்ப்போம்” விக்ரம் சொல்லியும் அவள் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க “கூப்பிடு சந்து” என்றான் அதட்டல் குரலில் விக்ரம்.

“அதெல்லாம் வேண்டாம்டா. நான் தான் எதோ ப்ரண்ட்னு நினைச்சி கேட்டுடேன். நான் வர..” வரமாட்டேன் என்று சொல்ல வந்த கௌதமை தடுத்து சந்தியாவை காட்டினான் விக்ரம். அவள் கண்களில் கண்ணீரோடு தரையை பார்த்து நின்றிருந்தாள். அவளது கண்ணீரை பார்த்தவனுக்கு இதற்கும் மேல் இதை பெரிதுப்படுத்த மனமில்லை.

“சாரி, எனக்கு ஒண்ணும் உன்னை கூப்பிடக் கூடாதெல்லாம் இல்ல. விக்ரம் வீட்டுக்கு வந்திடு. ப்ளீஸ்ஸ்” என்றாள் அவளும் கௌதமிடத்தில்.

“அப்ப வந்து பைக்ல ஏறு” என்றான் சமாதானமாய் அவனும். அவனுக்கும் அவள் சூழ்நிலை புரிந்து தான் இருந்தது. என்ன செய்வது அவள் விக்ரமை மட்டும் அழைத்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்தநாள் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வர, இருவரும் அவன் வீட்டு உணவுமேசையில் காத்திருந்தனர். அந்நேரத்தில் சந்தியா தூக்கமுடியாத கேரியரோடு வந்தாள். உடன் அவளது தம்பி சக்தியும் மூன்று டிபன் பாக்ஸையும் வாழையிலையையும் கையில் தூக்கிவந்தான்.

“வாம்மா. எவ்ளோ நேரம் சாப்பிடாம வெயிட் பண்றது” விக்ரம் சொல்ல, கௌதம் அவளையே பார்த்திருந்தான். உடன் அவளது தம்பி சக்தி நின்றிருந்தான்.

“இது என் தம்பி சக்தி. சிக்ஸ்த் படிக்கறான்” கௌதமிடம் தான் சொன்னாள், ஆனால் நேரடியாக சொல்லாமல் பொதுவாக சொன்னாள். தம்பியை அதிகநேரம் வைத்திருக்காமல் “நீ போயிக்கோ சக்தி. அம்மா வழக்கு பரையும்” சந்தியா தம்பியிடம் சொல்ல கௌதம் அவளை புரியாமல் பார்த்திருந்தான்.

“ஒண்ணுமில்லடா அம்மா திட்டுவாங்கனு சொல்லி அவனை கிளப்பிவிடறா” விக்ரம் கௌதமுக்கு மட்டும் கேட்க விளக்கி சொல்ல ‘ஓ இவனுக்கும் புரியும் போல’ என்று அவனும் எண்ணிக் கொண்டான்.

சக்தி செல்வதற்கு காத்திருந்த கௌதம் சத்தமாகச் சிரித்து “என்னடி டிரஸ் இது, பாவாடை சட்டை. ஏற்கனவே நீ குட்டி. இதுல இத வேற போட்டுக்கிட்டு ‘பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு’” என்று கேலிச் செய்தான்.

“இதுக்கு தான் விக்ரம் இவன் வேண்டாம்னு சொன்னேன். நீ தான் கேட்கல” கோபத்தில் அவள் முகமே சிவப்பானது.

“சும்மா இரேன் டா. அது அவளோட ஓணம் டிரஸ். அதை பார்த்து சிரிக்கற. சத்யவை திரும்ப எடுத்துட்டு போய்ட போறா” விக்ரம் பதறிப்போய் சொன்னான்.

“இவனுக்கு எப்பவும் என் ஹயிட்டை வச்சி கிண்டல் செய்யறதே வேலையா போச்சு விக்ரம்” சந்தியா முறைத்துக் கொண்டே சொன்னாள்.

“சரி, நான் சொல்லலை. நீ சொல்லு விக்கி. இவளை பார்த்தா எப்படி தெரியுது” என்று அவனை பார்த்து கண்ணடிக்க விக்ரமுக்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று புரிந்துப் போனது.

“அவ ஹயிட்க்கு நேரா பார்த்தாயெல்லாம் தெரியமாட்டாடா. குனிஞ்சி தான் பார்க்கணும். லிமிடெட் எடிஷன் டா” விக்ரமும் சேர்ந்து கிண்டல் செய்ததும் அங்கிருந்து கிளம்பவே முடிவுச் செய்துவிட்டாள்.

“நான் போறேன் விக்ரம். நீங்களே எடுத்து வச்சு சாப்பிட்டுக்கோங்க” என்று அங்கிருந்து சென்றவளை கௌதம் கைப்பிடித்து நிறுத்தினான்.

“சும்மா உன் கூட விளையாடலாம்னு பார்த்தா நீ என்னனா கோவப்பட்டு போற. நல்லா தான் இருக்க. ஆனா பாவாடை தாவணி போட்டிருந்தா இன்னும் அழகா இருந்திருப்ப” கௌதமுக்கு அவளை அப்படி பார்க்கத்தான் பிடித்து இருந்தது. உண்மையில் அவளிடம் விளையாடும் பொருட்டே அவளை கேலிச் செய்தான். ஆனால் அவள் பாவாடை தாவணியில் இருந்திருந்தால் அவனது தேவதையை கண்ட திருப்தி கிடைத்திருக்கும் என்றெண்ணினான்.

“அதெல்லாம் தீபாவளிக்கு போடுவேன் வேணும்னா வந்து பார்த்துக்கோ” முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொன்னாள் “இவனோட நீயும் சேர்ந்துக்கிட்டல விக்ரம்” என்றவள் விட்டால் அழுதிருப்பாள்.

“சும்மாடி. அவன் கண்ணடிச்சனால நானும் அப்படி சொன்னேன். இல்லனா உன்னை போய் நாங்க அப்படி சொல்லுவோமா” பாவமாக முகத்தை வைத்து சொல்லிவிட்டு மறுபடியும் இருவரும் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டு சத்தமாக சிரித்தார்கள். அவர்களுக்கு முழுநேர வேலையே அவளை கேலிச் செய்து விளையாடுவது தானே. அது அவளுக்கும் தெரியாதா என்ன.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலாண்டு பரிட்சையும் முடிந்து விடுமுறையில் இருந்தனர். அன்று சந்தியாவும் விக்ரமும் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.

“இப்ப நாம ரெண்டுபேரும் எங்க போறோம் விக்ரம்” சந்தியா புரியாமல் கேட்க

“கௌதி தான் கூட்டிட்டு வரச் சொன்னான். நம்ப ரெண்டுபேருக்கும் எதோ சர்ப்ரைஸ்ஸாம்” என்று விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு எதற்கு கூப்பிட்டான், என்னவாக இருக்கும் என்ற எண்ணமே வழியெங்கும். அந்த இடத்தை அடைந்ததும் கௌதம் தன் பைக்கில் சாய்ந்து நின்றிருப்பதை இருவரும் பார்த்தனர்.

“வா விக்கி. வா சந்தியா. நான் ஒண்ணு புதுசா கத்துக்கிட்டேன். அத உங்ககிட்ட காட்டணும் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” அவளுக்கு பிடிக்கும் என்று நினைத்தான். ஒருமுறை மூவரும் படத்திற்கு சென்றபோது அவள் அந்த காட்சியை ரசித்தது உண்மைதான். அதற்காக அவளுக்கு அது பிடிக்கும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அன்று ஏதோ பார்த்தும் மலைத்துச் சொல்லிவிட்டாள். அவள் இதையெல்லாம் விரும்புபவள் அல்ல என்பது அவனுக்கு அவள் முதல்நாள் அறிவுரை கூறிய போதே புரிந்திருக்க வேண்டாமா. அவன் செய்யப்போவது இருவருக்கும் இடையில் பெரிய பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பது எப்படி அவனுக்கு தோன்றாமல் போனது.

அவனுடைய டுகாட்டியை விட்டு வேறொரு பைக்கின் அருகில் அவன் நின்றிருந்த போதே அவள் மனதிற்கு ஏதோ சரியாக படவில்லை. தலைக்கவசத்தை மாட்டியவன் சிறிது தூரம் சென்றான். சந்தியாவிற்கு எதற்கு அழைத்துவிட்டு இவன் எங்கோ செல்கிறான் என்ற எண்ணம் தோன்ற அவள் பார்த்துக் கொண்டிருந்த நொடிபொழுதில் வண்டியை அரைவட்டமிட்டு திரும்பியவன் அவளை நோக்கி வேகமாக வந்தான். ஒரு நூறு மீட்டரை கடந்தவன் வண்டியின் முன் சக்கரத்தை தூக்கியப்படி வீலி செய்தான். பின் முன் சக்கரத்தை இறக்கி பின் சக்கரத்தை தூக்கி வண்டியை இயக்கி கொண்டே அவளிடம் வந்தான். ஆம் அந்த காட்சியை தான் சந்தியா அன்றைக்கு ரசித்தாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் அதை செய்யும் போது தன்னை மறந்து ரசித்தாள் தான். ஆனால் அதையே நேரில் யாராவது செய்திருந்தால் பயத்தில் கண்களை மூடி இருப்பாள்.

சந்தியாவிற்கு குலை நடுங்கிவிட்டது. அதேநேரத்தில் அவள் கத்தவில்லை. எங்கே அவள் கத்தி அவன் நிலை தடுமாறிவிட்டால் உயிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்புண்டு. அதனால் அமைதியாக இருந்தாள். அவனோ வீலி செய்தப்படியே அவளை கடந்துச் சென்று திரும்பி சரியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தினான். அவள் தன்னை புகழ்வாள் என்று வேறு எண்ணினான்.

“வேற லெவல் மச்சான். எப்படா கத்துக்கிட்ட. மாஸ் காட்டிட்ட போ. செமடா செம” விக்ரமுக்கு பிடித்திருந்தது. அது அவன் முகத்திலும் தெரிந்தது. அவன் கௌதமை வார்த்தைகள் தேடி தேடி பாராட்டிக் கொண்டிருக்க சந்தியா அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருந்தாள்.

“இவ என்னடா எதுவும் சொல்லாம இருக்கா. ஒரு ரௌண்ட்டோட நிறுத்திட்டேன்னு கோவமாடி. பர்ஸ்ட் டைம்ங்கறதால இந்த பைக். அடுத்த முறை என் டுகாட்டியிலேயே பண்றேன்” அவன் சொன்னது தான் தாமதம்.

“கொஞ்சமாவது அறிவு இருக்காடா. அது இருந்தா நீ ஏன் இதெல்லாம் பண்ணப் போற” சந்தியா கேட்டதில் கௌதம், விக்ரம் இருவரும் அதிர்ந்துப் போயினர்.

“நீ தான சந்து அன்னைக்கு அந்த சீன்னை அப்படி இப்படினு படத்தை விட்டு வந்துல இருந்து பேசிக்கிட்டே இருந்த” விக்ரமும் அவளுக்கு அந்தக்காட்சி தந்த பிரமிப்பை பார்த்து தான் இருந்தான்.

“இருக்கட்டும் அது சினிமா. அவங்களுக்கு பதிலா வேற ஒருத்தர் பண்ணுவாங்க. இல்ல அவங்களே பண்ணாக் கூட ஆயிரத்தெட்டு சேஃப்டி மெஷர்ஸ் எடுத்திருப்பாங்க. இதெல்லாம் நாம செய்யணும்னு என்ன அவசியம் இருக்கு. அந்த படத்துல பிப்டீன்த் ஃபோர்ல இருந்து கயிறை கட்டிட்டு ஹீரோ கீழ குதிக்கறா மாதிரிக் கூட சீன் இருந்துச்சு. அதுக்காக கயிற கட்டிக்கிட்டு கீழ குதிச்சிடுவானா இவன்” அவள் கேட்ட கேள்விக்கு இருவரிடமும் பதில் இல்லை.

“எனக்கு இவன் வீலி பண்ணத பார்த்தப்போ எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா. எங்க மிஸ் ஆகிடுமோ கீழ விழுந்திடுவானோனு.. எனக்கு.. என்னால..” அவள் பயந்து தான் இருந்தாள். இன்னும் கூட அவளுக்கு பதற்றம் குறையவில்லை. அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதை கவனித்த கௌதம் “ஹேய் சந்தியா. ரிலாக்ஸ். ரிலாக்ஸ்.. ஓகே.. டென்ஷன் ஆகாத. ப்ளீஸ் காம் டவுன். இங்க பாரு நான் நல்லா தான இருக்கேன். ஏன்டி இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி பயப்படற” அவ்வளவு தான் அவளுக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“எதுடா சின்ன விஷயம். இப்படி பண்றது எவ்ளோ பெரிய ரிஸ்க். எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப. உயிரே கூட போயிருக்கலாம். ஏன்டா உனக்கு எதுக்குமே பயம் இல்லயா. யாருக்கும் பயப்படமாட்ற. டேர் கேம் விளையாடறேனு சஸ்பெண்ட் ஆகற. அன்னைக்கு அப்படி தான் ஸ்கேட்டிங் பண்ற. கேட்டா சின்னவயசுல இருந்தே பிடிக்கும் கத்துக்கிட்டேன்னு சொல்ற. நீ சக்கரத்தை கட்டிட்டு போனப்போ நான் தான் அவ்ளோ பயந்தேன். ஒருநாள் ஸ்கேட்டிங்ற, இன்னொரு நாள் பாக்ஸ்ஸிங் போயிருந்தேன்ங்கற. இதோ இப்ப இந்த வீலி. ஒரு நிமிஷம் எனக்கு இதயமே நின்னு துடிச்சா மாதிரி இருந்துச்சு” அவளுக்கு மனது ஆறவில்லை. கோபம் ஆத்திரம் அனைத்தும் இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி அவள் பயந்திருந்தாள். அவன் கூற்று ஒன்றும் ஆகவில்லையே என்பது. அவள் கூற்று ஏதாவது ஆகியிருந்தால் என்பது. அதே பயத்தில் தான் அவனிடம் பேசினாள் இல்லையில்லை அவனை சத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்ன வயசு ஆகுது. வெறும் பதினேழு. இந்த வயசுல இதெல்லாம் தேவை தானா கௌதம்”

“நீ ஏன் இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்றனு எனக்கு புரியல சந்தியா” அவனுடைய சர்வ சாதாரணமான பதில் அவளுக்கு மேலும் ஆத்திரத்தை தூண்டியது.

அதில் “நான் ஓவர் ரியாக்ட் பண்றேனா. ஏன்டா, எப்பவும் உனக்கு உயிரோட விளையாட தான் பிடிக்குமா” அவள் அவனிடம் கோபமாக கத்தினாள்.

“இப்ப எதுக்கு நீ ஒண்ணுமில்லாத விஷயத்தை பெருசாக்கற. அதான் ஒண்ணும் நடக்கலையே” அவன் ஒன்றும் நடக்காததை சொல்ல

“நடந்து இருந்தா” கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.

“அப்படி பார்த்தா லைஃப்ல ஒண்ணுமே பண்ணமுடியாது சந்தியா” அவனது அலட்சிய பேச்சு அவளது கோபத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு கூட்டிச் சென்றது.

இருவரும் பேசிக் கொள்ள விக்ரம் பார்வையாளர் ஆகிப் போனான். அவனுக்கும் அது தவறாக தெரியவில்லை என்பது தான் உண்மை. இந்த வயதில் ஆண்பிள்ளைகள் இதையெல்லாம் வயதுகோளாறில் செய்வது தானே. ஏன் அவனும் கௌதம் அளவிற்கு இல்லையென்றாலும் சின்ன சின்ன வீர விளையாட்டை நிகழ்த்தி தானே இருக்கிறான். அதேநேரத்தில் சந்தியா கூறுவதிலும் தவறில்லை என்றுணர்ந்தான். அவள் சொல்வது போல் ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது என்றும் யோசித்தான். கௌதமை பொறுத்தவரை அவன் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவனுக்கு பிடித்திருந்தது அதைவிட முக்கியமாக அவளுக்கு பிடிக்கும் என்று நினைத்தான் செய்தான். அவ்வளவே. அதை புரியாமல் பேசுபவள் மீது அவனுக்கு இப்போது கோபமும் வந்தது.

“அதானே. உனக்கு எல்லாமே ஈசி தான கௌதம். இங்க என் இடத்துல இருந்து பாரு. இப்ப கூட எனக்கு பதற்றம் குறையல. உனக்கு என்ன சொல்லி என்ன புரிய போகுது. உங்கிட்ட பேசறதே வேஸ்ட். வா விக்ரம் கிளம்பலாம்”

“இங்க பாரு சந்தியா. என்னால நீ சொல்றமாதிரி இது நடந்திடும் அது நடந்திடும்னு எதுவும் செய்யாமயெல்லாம் இருக்கமுடியாது. எனக்கு பிடிச்சத நான் செஞ்சிகிட்டே தான் இருப்பேன். லைஃப்ல கோழையா நூறு வருஷம் வாழறதைவிட நமக்கு பிடிச்சதுல ரிஸ்க் இருந்தாலும் சந்தோஷமா செஞ்சிட்டு செத்து போகலாம்” என்றான். இந்த முட்டாள் தனமான விளையாட்டு இவனுக்கு உயிரைவிட பெரியதாகி விட்டதா என்று தோன்ற இப்போது யாருமே அடக்கமுடியாத நிலைக்கு அவளுக்கு கோபம் சென்றிருந்தது.

“நான் இவ்ளோ சொல்றேன், உனக்கு நீ பண்ண தப்பு புரியலைல”

“நான் தப்பு பண்ணா தான புரியறதுக்கு” இருவரும் கண்களில் தீ பறக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்ற இதற்குமேலும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என்று “விடுடி எதோ உனக்கு பிடிக்குமேனு பண்ணிட்டான். அதுக்கு போய் அவனை இந்த வாங்கு வாங்கற” நண்பனுக்கு பரிந்து பேசுவதாக எண்ணி தோழியின் கோபத்தை அவனுக்கே தெரியாமல் பலமடங்கு ஏற்றிவிட்டு விட்டிருந்தான் விக்ரம். ஏற்கனவே அடக்கமுடியாத கோபம் இருந்தவள் இனிமேல் சொல்லவா வேண்டும்.

“நீ பர்ஸ்ட் டைம் இவனை பத்தி சொன்னது ரொம்ப கரெக்ட் விக்ரம். இவனுக்கு எல்லாரும் இவனை ஹீரோனு சொல்லணும். அதுக்காக யாருக்கு வேணா ப்ரொபோஸ் பண்ணுவான். யாரை வேணும்னா போட்டு அடிப்பான். சில சமயத்துல அடியும் வாங்குவான். அப்புறம் இந்த ஸ்கேட்டிங், பாக்ஸ்ஸிங், வீலினு எல்லாமே பண்ணுவான். நான் தான் தப்பு பண்ணிட்டேன். இவன் கூட பேசாம இருக்கணும்னு சரியா தான் முடிவு எடுத்திருந்தேன். அப்புறம் என் புத்தி எப்படி கெட்டுப் போச்சின்னே தெரியல. இவனை ப்ரண்ட்னு நினைச்சிட்டேன். அதான் இன்னைக்கு எனக்கு பதறுது” வழக்கம் போல் அவள் பேச பேச அவனுக்கும் அளவுக்கடந்த கோபம் வந்திருந்தது. அவள் அவனுக்காக பேசியதில் தவறில்லை. அதை அவன் கேட்டும் இருப்பான். ஆனால் பழையதை எடுத்து பேசிவிட்டாள்.

அவனுக்கும் இப்போது கோபம் தலைக்கு ஏற “நானும் தப்பு தான் பண்ணிட்டேன். உங்கூட பேசக்கூடாதுனு அன்னைக்கே நானும் சரியான முடிவை தான் எடுத்திருந்தேன். அத மாத்திருக்கக் கூடாது. அதனால தான் இப்ப நீ எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க. எனக்கு என் விஷயத்துல யார் தலையிட்டாலும் பிடிக்காது. எனக்கு எப்படி பிடிக்குதோ அப்படிதான் நான் வாழ்வேன்” கடுப்பில் பல்லை கடித்துக் கொண்டு சொன்னவன்

“அதான் நான் தப்புனு தெரியுதுல. அப்புறம் ஏன் இங்கயே நின்னு என்னை கடுப்பேத்திக்கிட்டு இருக்க. டேய் கூட்டிட்டு போடா இவளை” சொன்னவனின் முகத்தில் அலட்சியமும் எரிச்சலும் தெரிந்தது.

“போகத்தான் போறேன். இங்கயே நிக்க நமக்குள்ள என்ன இருக்கு. ஆனா போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு சொல்றேன். இனி எப்பவும் எங்கிட்ட பேச முயற்சிப் பண்ணாத. நமக்கு இன்னும் ஆறுமாசம் ஸ்கூல் இருக்கு. அதுக்கப்புறம் உன் முகத்தைக் கூட பார்க்க விரும்பல கௌதம். வா விக்ரம் போலாம்” சந்தியா சொல்லிவிட்டு கிளம்ப விக்ரமுக்கு என்ன செய்வதென்றெ புரியாமல் கௌதமை பார்த்துக் கொண்டே வண்டியை எடுத்து அவளை அழைத்து சென்றான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 11

அந்த சண்டைக்குப் பிறகு அவனிடமிருந்து குறுஞ்செய்திகள் வருவது நின்றுவிட்டது. இவளும் அவனது எண்ணை அழித்திருந்தாள். விக்ரமும் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய வீட்டிற்கு அழைத்தான். இருவருமே வர தயாராகயில்லை. இவர்களை எப்படி தான் சரி செய்வது என்று அவனுக்கும் புரியவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி திறந்தது. ஆரம்பத்தில் ஒருவர் முகத்தை கூட இன்னொருவர் பார்த்து கொள்ளவில்லை. போக போக வீட்டில் இருந்தபோது காட்டப்பட்ட வீம்பை இப்போது இருவராலும் காட்ட முடியவில்லை. அவர்களது நட்பும், அதன் நினைவுகளும் அதற்கு இடமும் கொடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக விக்ரமை காட்டிலும் ஓரே வகுப்பில் இருப்பதால் கௌதமிடம் சந்தியா அதிக நெருக்கமாகி இருந்தாள். கௌதமிற்கும் அப்படியே. இருவருக்கும் பேசாமல் இருப்பது ஏதோ போன்று இருந்தது. இருந்தும் பேசாமல் இருந்தனர்.

விக்ரமும் “இதெல்லாம் இந்த வயசுல சகஜம்டி. எனக்கே அவன் வீலி பண்ணது தப்பா தெரியல, கெத்தா தான் இருந்துச்சு. அதேமாதிரி தான் அவனும் நினைச்சிருப்பான். அதுவும் உனக்கு பிடிக்கும் தான செஞ்சான். பொண்ணுங்க ஒரு விஷயத்தை பார்க்கற மாதிரி பசங்க நாங்க சீரியஸா பார்க்கமாட்டோம்டி. அப்படியே அவன் பண்ணது தப்பா இருந்தாலும் அத அவன்கிட்ட பொறுமையா சொல்லிருக்கலாம். அதவிட்டுட்டு அந்த கத்து கத்தினா அவனும் டென்ஷன் ஆகமட்டானா. நீ அவனை ரொம்ப ஓவரா பேசிட்டடி” என சந்தியாவிற்கு எவ்வளவோ புரிய வைக்கப் பார்த்தான்.

“என்னடா அவன் இதெல்லாம் சொல்லி அனுப்பினானா” கோபம் அவளுக்கு கண்ணை மறைத்தது.

“அவன் சொல்லி அனுப்புறவன் இல்லனு உனக்கும் தெரியும்” என்று அவளை முறைத்தான். சந்தியா எதையும் புரிந்துக் கொள்ள தயாராக இல்லை. அவனிடம் பேசவும் தயாராக இல்லை.

சந்தியாவே இப்படியென்றால் கௌதம் ஏற்கனவே தன்மீது தவறில்லை என்றால் இறங்கிப் போகமாட்டான் இதில் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று விக்ரம் திணறிப் போனான்.

கௌதமோ அதற்கு வேலையே வைக்கவில்லை. முதல் இரண்டு நாள் அவனுக்கு கோபம் இருந்தது என்னவோ உண்மை தான். அவளுக்காக தானே ஆசையாக செய்தோம். அதை பாராட்டவில்லை என்றாலும் திட்டாமலாவது இருந்திருக்கலாம் என்றெண்ணினான். அவ்வெண்ணம் அவனுக்கு கோபத்தை குறைய விடவில்லை. அதை வெறியாகவும் மாற்றியிருந்தது. அவள் சொன்னால் தான் செய்யாமல் இருக்கவேண்டுமா. அதற்காகவே மறுபடியும் மறுபடியும் அவனது டுகாட்டியிலேயே வீலி செய்தான். அதுமட்டுமா காலில் ஸ்கேட்டிங் ஷூவை கட்டிக் கொண்டு நீண்ட பயணமே மேற்கொண்டான். குத்து பையை குத்தி தீர்த்தான். எதுவும் அவனை அமைதிப் படுத்தவில்லை.

மற்றவர்களை போல் போனால் போகட்டும் என்று தொலைத்துவிடும் உறவல்ல அவள். இன்றும் அவள் அவனது தேவதையே. அவள் அவனோடு எப்போதும் இருப்பாள் என்ற எண்ணம் தான் அவனை நிம்மதியாக வாழச் செய்தது. இன்று அந்த நம்பிக்கை பொய்யாகி போனது.

தனக்கு தான் ஆறுமாதம் கெடு வைத்திருக்கிறாளே. அதற்கு பின் தன் முகத்தை காணக் கூட அவள் விரும்பவில்லையே என்ற கசப்பான உண்மை அவனை ஏதேதோ செய்தது. அது வெறியை வேதனையை கூட்டியது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்தான். அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவையும் எடுத்தான். முடிவெடுத்து விட்டான், ஆனால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பவன் இம்முறை தயங்கினான். அடிபணிவதும் இறங்கிபோவதும் அவன் அகராதியிலேயே இல்லை. கடந்தமுறை இருவருமே ஒன்றாக இறங்கி வந்து தங்களை மறந்து பேசிக் கொண்டனர். இப்போது அப்படியில்லை. அவள் இறங்கி வருவதாக தெரியவில்லை. இவனுக்கும் நாம் இறங்கிப் போவதா என்ற எண்ணம் இருந்தாலும் அவளை விடவும் முடியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தி தான் அவளிடம் இறங்கிப் போக முடிவெடுத்தான். ‘நீயா இறங்கி போக போகிறாய் கௌதம்’ என்று மனது கேட்ட கேள்விக்கு ‘நான் அவளிடம் தானே இறங்கிப் போகிறேன். எனக்கு அவளிடத்தில் இறங்கிப் போவதில் எந்த கௌரவ குறைச்சாலும் இல்லை’ என்று பதிலளித்து அதை அடக்கினான்.

அதன் பின் என்ன பள்ளி வளாகத்தில் சென்றுக் கொண்டிருந்தவளை வழி மறித்தான்.

“என்னடி கண்டுக்காம போற” அவனது பேச்சு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியிலேயே இருந்தது. இவ்வளவு சண்டை நடந்திருக்கிறது எப்படி வெட்கமே இல்லாமல் ஒன்றும் நடக்காதது போல் பேசுகிறான் என்ற உணர்வே சந்தியா முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. விக்ரமுடன் வீட்டிற்கு செல்ல அவன் பைக் நிறுத்தும் இடத்தை நோக்கி நடந்தாள்.

“சரி வீட்டுக்கு தான போற. பைக்ல ஏறு ஒண்ணா போகலாம்” அவன் சொல்ல

“யார் நீ” என்பது அவளது பார்வையாக இருந்தது.

“என்ன தெரியலையா. நான் தான் கௌதம்” விளையாட்டாக சொன்னான் அவளது பார்வையை புரிந்தவனாக.

“அன்னைக்கு நான் சொன்னது மறந்துப்போச்சு போல. எங்கிட்ட பேச முயற்சி பண்ண வேண்டாம்னு சொன்னேன் தான. அது என்னனு தெரியல எனக்கு பிடிக்கலனு சொன்னாலும் சிலர் வெட்கமே இல்லாம வந்து பேச்சு தர்றாங்க” நேரடியாக அவனிடம் பேசாமல் யாருக்கோ சொல்வது போல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு சொன்னாள்.

“உன் ப்ரண்ட்டா அப்பாயிண்மெண்ட் வாங்கின அப்பவே அதையெல்லாம் தூக்கிப் போட்டுடேன்” அவன் சொல்ல அவள் கண்களில் கோபத்தோடு முறைத்தாள்.

“சரி சாரி. நான் அன்னைக்கு அப்படி பண்ணிருக்கக் கூடாது. தப்பு தான் மன்னிச்சிடு. இனி வீலி பண்ணமாட்டேன். ப்ராப்ளம் சால்வ்ட்டா. இப்ப ஏறு” என்றான். அவன் அடம் ஊருக்கே. அவளது அடம் அவன் ஒருவனுக்கே. ஏறாமல் நின்றாள்.

“விக்கி கிளம்பிட்டான் தெரியுமா. பை தி வே எனக்காக தான் கிளம்பினான். ரெண்டு ப்ரண்ட்ஸும் திரும்ப பேசிக்கணும்னு அவனுக்கு அப்படி ஒரு அக்கறை. உன்னை மாதிரி இல்ல. வந்து ஏறு”

“விக்ரம் இல்லனா என்ன. ஆட்டோல போவேன்” என்பது போல் எதுவும் பேசாமல் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் காட்டினாள்.

“ஓ.. நான் கைல காசு வச்சிக்க சொன்னத எனக்கே திருப்பிக்காட்டறியா. ஆட்டோல போவாளாமே. நீ எப்படி ஆட்டோல ஏறரேனு நானும் பார்க்கறேன்டி” தன் பைக்கில் சாய்ந்து கைக்கட்டி நின்றான். அவனது பேச்சு அவளுக்கு கோபத்தை தூண்டிவிட்டது.

“ஆட்டோ இல்லனா என்ன. பஸ்ல போவேன். இல்லனா என் ரெண்டு கால் நல்லா தான இருக்கு. ரெண்டு கிலோமீட்டர் தான, நடந்து போவேன் சார். அப்ப கூட உங்க பைக்ல ஏறமாட்டேன்” இதுவரை நேரடியாக பேசாதவள் இப்போது பேசினாள். இதுவே முதல் வெற்றி தானே, பிறகென்ன எப்படியோ பேசி சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை கௌதமுக்கு வந்தது.

“அதான் ரெண்டு கிலோமீட்டர் இருக்குல. ஒண்ணு பண்றேன். அப்படியே மந்தவெளிய சுத்தி காமிச்சிட்டு உங்க வீட்டுல விடறேன். நிறைய டைம் இருக்கும். சண்டை சமாதானம் எல்லாத்தையும் வழியிலேயே முடிச்சிடலாம். ஆனா அத்தோட முடிச்சிக்கணும். அப்புறம் பேசமாட்டேன் முகத்தை பார்க்கமாட்டேன்னு எதாவது சொன்ன கௌதம் யார்னு பார்ப்ப” சமாதானத்தை கூட இவ்வளவு கறாராக பேச அவனால் மட்டுமே முடியும்.

“ஏற மாட்டேன்டா” அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை.

“அப்ப வா ரெண்டு கிலோமீட்டர் தான. நடந்தே போவோம். இன்னும் நிறைய டைம் இருக்கும். சண்டை சமாதானம் எல்லாத்தையும் முடிச்சிடலாம்” அவள் நடக்க அவனும் அவன் வண்டியை உருட்டிக்கொண்டு உடன் நடந்தான்.

அவன் வண்டியை உருட்டிக்கொண்டு வருவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. வியர்வை துளிகள் அவன் முகத்தில் இருந்து வழிந்து இறங்கியது. அதை பார்த்தவளுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. அவன் வசதிப் பெற்றவன். இப்படி நடந்து வியர்க்கவேண்டும் என்ற அவசியமே அவனுக்கு இல்லை. பின் ஏன் இவனிதை செய்கிறான் என்று தோன்ற அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

“இப்ப ஏன் உன்னை நீ இப்படி கஷ்டப்படுத்திக்கற” அவள் கேட்க, அவன் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கண்ணால் கேட்க அவனது வியர்வையை காட்டினாள்.

“யூஷ்வலா எனக்கு இப்படி வேர்க்காது. என்னமோ தெரியல இன்னைக்கு அதிகமா வேர்க்குது. ஒருவேளை என் பக்கத்துல இருக்கவங்க சூடா இருக்கனால வேர்க்குதோ” விளையாட்டாக சொல்ல அவளது சுட்டெரிக்கும் பார்வை அவனை சுட “சென்னையில வெயில் அதிகமாயிடுச்சு” சாதாரணமாக பேச்சை மாற்றி சொன்னான்.

“வண்டிய எடுத்துக்கிட்டு நீ கிளம்பு” அப்போதும் வா செல்லலாம் என்று சொல்லாததால் அவனுக்கு கோபம் வந்தது. அதேநேரம் அவளை இன்று சமாதானம் செய்தே தீரவேண்டுமென்று பிரயத்தனம் செய்து கோபத்தை அடக்கியவன்

“இதுவும் பாடிக்கு எக்ஸர்சைஸ் தான். ஒரு அத்லெட் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்” என்று அவள் வேதனையை போக்கும்படி விளையாட்டாக சொன்னான்.

அவளோ “எது வீலி பண்றது கூடவா” என்று பேச்சிற்கு வந்தாள். அவனுக்கோ அப்பாடா பேச்சிற்கு வந்தாள் என்ற சந்தோசம் ஒருபுறமிருக்க ஐய்யோ அடுத்து திட்டுவாளே, அறிவுரை கூறுவாளே என்ற பதற்றம் இன்னொரு புறம் இருந்தது. இரண்டையும் முகத்தில் காட்டாமல் சரணாகதி ஆவதே சிறந்தது என முடிவெடுத்தான்.

“அது நான் உனக்கு பிடிக்கும்னு பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி.. சாரி.. சாரி.. போதுமா. ப்ளீஸ் ஃபர்கீவ் மீ” என்றான்.

“எனக்காக பண்ணீயா. நான் அத விருப்பப்படலயே. இதெல்லாம் வீரம் கிடையாதுனு உனக்கு எத்தனை முறை சொல்றது கௌதம். எது வீரம் எது உயிருக்கும் மானத்துக்கும் குறி வைக்கும்னு முதல்ல வித்தியாசம் தெரிஞ்சிக்கோ. நீ வீட்டுக்கு ஒரே பையன். உங்க வீட்டுல இருக்கவங்க உன் மேல உயிரையே வச்சிருப்பாங்க. இனி எத பண்றதா இருந்தாலும் அப்பா அம்மாவ மனசுல வச்சிக்கிட்டு செய். வண்டிய எடு” என்று பைக்கில் ஏறினாள். அவ்வளவு தான் இனி வழியெங்கும் திட்டுவாளோ அடிப்பாளோ எது எப்படியோ இருவரும் பழையபடி சேர்ந்துவிட்டனர்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில் விக்ரமுக்கு பெரும் மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக அவன் என்ன தான் வெளிப் பார்வைக்கு சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்தாலும் அவனுடைய வாழ்வில் தாங்கமுடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அதை அவன் மறப்பதே சந்தியா கௌதமுடன் இருக்கும் பொழுது தான். இப்போது அவர்களும் யாரோ போல் இருந்து வந்ததால் மனமுடைந்துப் போனான்.

சொல்லி புரிய வைத்துவிடலாம் என்று நினைத்த சந்தியாவே மூர்க்கம் பிடித்துக் கொண்டிருந்ததும் இது முடிந்துவிட்டதா என்று கௌதம் எந்தளவிற்கு பயந்தானோ அதே அளவிற்கு விக்ரமும் பயந்தான். அதற்காக சந்தியா கவலைப்படவில்லை என்று அர்த்தமில்லை. அவளென்ன தனக்காகவா அவனிடம் சண்டையிட்டாள். அவனுக்காக அவனுடைய நலனுக்காக தானே சண்டையிட்டாள். அப்படியிருப்பளுக்கு வலி வேதனை இருக்காதா என்ன. நிச்சயம் இருந்தது. கௌதமுடன் பேசிய பின் தான் அவளும் இழந்த சந்தோசத்தை திரும்பப் பெற்றாள். அதுபோல் இருவரும் பேசிக்கொண்டது விக்ரமுக்கும் நிம்மதியை கொடுத்தது.

“அப்பாடா, எப்படியோ ரெண்டுபேரும் பேசிக்கிட்டீங்களே. என்ன கோபம் வருதுடி உனக்கு. நாளைக்கு எங்கிட்ட சண்டைப் போட்டாலும் இப்படிதான் பேச முயற்சி பண்ணாத உன் முகத்தை கூட பார்க்க விரும்பலைனு சொல்லுவியா” உடன் கௌதம் இருக்க விக்ரம் சந்தியாவிடம் கேட்டான்.

“அதெல்லாம் கௌதம்ங்கற இளிச்சவாயன்கிட்ட மட்டும் தான் சொல்லுவா” வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் கௌதம் சொல்ல

“அவன் உன்னை மாதிரி எதுவும் செய்யமாட்டான். நீதான் ஊர்ல இருக்குற எல்லா தேவையில்லாத வேலையும் செய்வ” சந்தியா அவனிடம் சீறிக்கொண்டு போனாள்.

“ஆமான்டி அவன் குழந்தை. வாயில விரலை வச்சா கூட கடிக்கமாட்டான்” இருவரையும் இப்படி பார்த்த விக்ரம் சிரித்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் மாற்றி மாற்றி பேச ஆரம்பிக்க அதில் அதிர்ந்து போனவன்

“ஹேய் போதும் போதும். இந்த மன்த் கோட்டா ஓவர். மத்ததை நெக்ஸ்ட் மன்த் வச்சிப்போமா. இதோ பாருங்க அக்டோபர் வந்திடுச்சு. இன்னும் முழுசா ஆறுமாசம் கூட இல்ல. மார்ச்ல போர்ட் எக்ஸாம். இனி சண்டையெல்லாம் போடாம மூணு பேரும் ஒழுங்கா படிக்கற வேலைய பார்ப்போமா” என்றான்.

“டன் டா” “டன் மச்சான்” கௌதமும் சந்தியாவும் ஒன்று சேர்ந்து சொல்ல

“படிச்சி நீ பெரிய டாக்டர் ஆகற. நாங்க ரெண்டுபேரும் இன்ஜினீயர் ஆக போறோம்” உற்சாகமாக கௌதம் சொல்ல

“இல்லடா ரெண்டுபேரு இல்ல மூணு பேரு. நானும் இன்ஜினியரிங் தான் எடுக்கப் போறேன்” திடமாக சொன்னான் விக்ரம்.

“டேய் லாயர் அய்யா ஒத்துக்குவாரா” சந்தியா சொல்ல, நண்பனின் மனதைப் புரிந்த கௌதம் அவளை தடுத்து “நீ படி விக்கி” என்றான்.

விக்ரமும் தந்தையின் பேச்சை மீறுபவனில்லை. தந்தைக்கு பிடிக்குமென்று தனக்கு பொறியியல் படிப்பில் சேர ஆசையிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தந்தை சொன்ன மருத்துவ படிப்பை எடுக்கவிருந்தான். இப்போதோ தந்தையையே பிடிக்காமல் போன பிறகு தந்தைக்கு பிடித்ததை எதற்கு படிக்கவேண்டும் என்ற எண்ணம் கொடுத்த தெளிவில் வந்தது இன்றைய வார்த்தைகள்.

அவன் வாழ்வில் சிலமாதங்களாய் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த மகனும் பார்க்கக் கூடாத ஒன்றை தான் அவன் அன்று பார்த்தான். ரவிப்பிரகாஷை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்தான். அதுவும் சாதாரணமாக இல்லை. அவரது தோள்மீது கைபோட்டு தந்தை அப்பெண்ணை அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். பார்த்தவனுக்கு இரத்தம் கொதித்தது. அதே கொதிப்போடு தந்தை முன் சென்று நின்றான். அவரிடம் தாயிற்காக சண்டையிட்டான். அவரோ ‘இதெல்லாம் உனக்கு புரியாது நீ வீட்டிற்கு செல் நான் வீட்டில் வந்து பேசுகிறேன்’ என்று சென்றுவிட்டார்.

வீட்டிற்கு அதே சினத்தோடு வந்தவன் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து இன்றைக்கு தந்தையிடம் பேசியே ஆகவேண்டும் என்றிருந்தான். சந்தியாவும் பூஸ்ட் மற்றும் மாலை சிற்றூண்டி செய்துக் கொடுக்க அவன் அதை சாப்பிடவில்லை. பயந்துப் போய் கௌதமிற்கு அழைத்து வரசொன்னாள். அவனும் வந்து எதற்காக இப்படி இருக்கிறான் என்று பேசிப் பார்த்தான். பலனில்லை. வாயே திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். பின் அவர்கள் பதறியிருப்பதை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை சிறிதுநேரம் தான் தனியாக இருக்க விரும்புவதாக சொல்லி அவர்களை அங்கிருந்து கிளப்பினான். இரவாகியும் வீட்டுக் கூடத்திலேயே அமர்ந்திருந்தான். தாயும் வந்தார் இவன் சாப்பிட்டானா என்பது போன்ற நான்கைந்து வார்த்தைகளை பேசிவிட்டு களைப்பாக அவரது அறைக்குள் சென்று கதவடைத்தார். மணி விடியற்காலை நான்கானது. அப்போது தான் இனியும் தந்தை வீட்டிற்கு வரப் போவதில்லை என்பதே அவன் புத்திக்கு எட்டியது.

இருந்தும் அப்படியே அமர்ந்திருந்தான். காலை ஆறு மணிக்கு வரலட்சுமி எழுந்து குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தால் மகன் நேற்று அமர்ந்திருந்த அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான். அவனது சிவந்த கண்கள் இரவு முழுவதும் உறங்கவில்லை என்பதை சொல்லியது.

“விக்கி. நுவ்வு நிதரபோலேதா (நீ தூங்கலையா)” மகனது முன்நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு அவன் நெற்றியை தொட்டு உடம்பேதும் சரியில்லையா என்று பார்த்தார்.

“லேதும்மா. நாக்கு நிதர ராலேது(இல்லம்மா. எனக்கு தூக்கம் வரல)” என்றான். வெகுநேரம் என்னவென்று புரியாமல் மகனையே பார்த்திருந்தவரை பார்த்து “நேனு சுசேனம்மா(நான் பார்த்தேன்ம்மா)” என்றான். அவன் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

“எவர சுசினாவு விக்கி (யாரை பார்த்த விக்கி)” என்றார் அவர்.

“நானா(அப்பா). நானாவ இன்னொருத்தங்க கூட” முழுதாக சொல்லக்கூட முடியவில்லை. அன்னையின் வயிற்றை இறுக கட்டிக் கொண்டான்.

“எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு விக்கி” சொன்னவரை நிமிர்ந்துப் பார்த்தான். தாய்க்கு இது தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்று பயந்திருந்தவன் இப்போது அன்னைக்கு தெரிந்தா இதுவெல்லாம் நடக்கிறது என்றெண்ணி துடித்துப் போனான்.

“ஏன் ம்மா” என்றான் ஆதங்கத்தில். அவன் அருகில் வந்தமர்ந்து மகனை மடியில் படுக்க வைத்தவர் அவன் தலையை வருடி கொடுத்து கொண்டே “பேர் பொருத்தம் இருக்கா, ஜாதக பொருத்தம் இருக்கா, ஏன் படிப்புல கூட பொருத்தம் இருக்கானு பார்த்து கட்டி வச்சாங்க. ஆனா மனப்பொருத்தம் இருக்கானு யாருமே பார்க்கலை” என்றவரை எழுந்து பார்த்தான்.

“முதல்ல இருந்தே ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு பெரிய எண்ணமெல்லாம் இல்ல. கல்யாணம் ஆகிடுச்சு இனி இது தான் வாழ்க்கை வாழ முயற்சி பண்ணலாம்னு பார்த்தோம். நீ பிறந்த, அப்புறம் விஷாந்தும் பிறந்தான். ஆனா எதுவுமே எங்கள இணைக்கல. எதோ ஒரு வெற்றிடம் இருக்க தான் செஞ்சிச்சு. ஒரே வீட்டுலயே தனி தனியா இருக்க ஆரம்பிச்சோம். நீயும் விஷாந்தும் நாங்க ஏன் தனி தனி ரூம்ல இருக்கோம்னு கேக்கற கேள்விக்கு கேஸ் விஷயமா நிறைய வேலை இருக்கும், அதான் நானா அம்மாக்கோ அம்மா நானாக்கோ டிஸ்டபென்ஸ்ஸா இருக்கக்கூடாதுனு தனி தனி ரூம்ல இருக்கோம்னு பொய் சொன்னோம். நீங்களும் நம்ப ஆரம்பிச்சிங்க. அதுல நாங்க ஜெய்ச்சிட்டதா நினைக்கல. எங்க பசங்ககிட்ட தோத்ததா தான் நினைச்சோம். அப்படியே வருஷங்களும் ஓடிடுச்சு” ரவிப்பிரகாஷ் வீட்டில் கிடைக்காததை வெளியில் தேடத் தொடங்கினார். வரலஷ்மி தன் வேலையில் தேடத் தொடங்கினர். அப்போது பிள்ளைகள் என்ன ஆவார்கள் என்று இருவரும் யோசிக்கவில்லையா. மேலே பேச வந்த விக்ரமை தடுத்த வரலஷ்மி

“ப்ளீஸ் விக்கி. எதுவும் சொல்லிடாத. எத்தனையோ பேருக்காக கோர்ட் படிய ஏறின எங்களுக்கு, எங்க கேஸ்காக கோர்ட் படி ஏறுறதல விரும்பமில்ல. அதுக்காகவும் உங்களுக்காகவும் தான் ஒரே வீட்ல இருக்கோம். மத்தபடி அவர் எப்படி வாழனும்னு நினைக்கறாரோ அப்படியே வாழட்டும். அதுல நான் தலையிடமாட்டேன். ஒண்ணு மட்டும் உண்மை. எனக்கும் அவருக்கும் உன் மேலயும் விஷான் மேலயும் இருக்க அன்பு பொய்யில்ல. ஐ ஆம் ப்ரிட்டி மச் சோர் அபௌட் இட். நீ எங்களோட இந்த டெஸிஷன்ல எங்க கூட இருப்ப தான” அவர் வயதிற்கு பேசிவிட்டார். விக்ரம் என்ன சொல்வான். அவன் இன்னும் பள்ளிப் படிப்பை கூட முடிக்காத பதின்வயதை சேர்ந்தவன் தானே. அவனால் இதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதிலேயே போட்டு குமைந்தான்.

இதை சந்தியா கௌதம் இருவருக்கும் கூட சொல்லவில்லை. அவன் போக்கில் மாற்றத்தை இருவரும் கண்டு பலமுறை விசாரித்து பார்த்தும் விக்ரமிடமிருந்து பதிலேதும் வரவில்லை. தந்தையையும் நேராக பார்ப்பதில்லை பேசுவதில்லை என்றிருந்தான். மனதில் அடக்கி அடக்கி மனமே வெடித்துவிடுமோ என்றிருந்தது அவனுக்கு. இவையனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்ந்த புதிதில் நிகழ்ந்தது. கௌதம் தான் அவன் மனதை அரித்து கொண்டிருந்ததிலிருந்து அவனுக்கு விடிவு தந்தான்.

பள்ளிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் விக்ரமின் கவனமின்மையால் தோற்கும் நிலைக்கு போன போது முதலில் கடிந்தான். பின் நண்பன் எதையோ மனதில் போட்டு வதைவதால் தான் இவ்வாறு இருக்கிறான். அவனை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தே தீரவேண்டும் என்ற முடிவெடுத்து, ஒருநாள் வம்புச் செய்து வெளியே அழைத்து சென்றான். நண்பனிடம் எப்படியோ லாவகமாக பேசி அனைத்தையும் தெரிந்தும் கொண்டான். உடன் சந்தியாவும் இருந்தாள். தன் பெற்றோரின் கதையை சொல்லி கண்ணீர் விட்டு அழுத அந்த பதின்வயது குழந்தையை இருவரும் தேற்ற அரும்பாடுபட்டனர்.

அதிலிருந்து பெரும்பாலும் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கௌதம் சந்தியாவை விக்ரமுடன் அதிகம் இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டான். பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதும் அவள் விக்ரமுடன் தான் பைக்கில் செல்வாள். கௌதம் வீடு வரை உடன் வருவான். கௌதமிடம் முதலில் இருந்தே ஒரு விதமான பக்குவம் இருந்தது. விக்ரமுக்கு வேறு விதமான பக்குவம் வந்தது. தன்னை அதிகம் படிப்பு மற்றும் விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தான். கௌதம் மற்றும் சந்தியாவுடன் இருப்பதை சந்தோசமாகவும் உணர்ந்தான். அந்நேரத்தில் தான் கௌதமின் செயலில் சந்தியா கோபமடைந்து அவளது பேச்சால் அவன் கோபத்தையும் தூண்டி இருவருக்குமிடையில் இந்த பிளவு ஏற்பட்டது. நண்பர்கள் இருவரும் இப்படி முறுக்கிக் கொண்டு சுற்றுவது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. இருவரிடமும் பேசிப் பார்த்து தோற்றவனுக்கு இப்போதே நிம்மதியானது.

அனைத்தும் சரியாகியிருக்க இப்போது விக்ரமும் மனதளவில் ஓரளவிற்கு சரியாகி ஒரு முடிவிற்கு வந்தான். தன் படிப்பு விசயத்தில் தந்தை சொல்வதை கேட்காமல் தனக்கு பிடித்த இன்ஜினியரிங் படிப்பையே தேர்ந்தெடுப்பது என்று. சொல்லபோனால் மூவரும் ஒரே கல்லூரியில் சேரவேண்டும் என்றெல்லாம் யோசிக்க தொடங்கினர். விக்ரமின் இந்த தெளிவும் மாற்றமும் சந்தியா கௌதம் இருவருக்கும் பிடித்திருந்தது. இந்த மகிழ்ச்சி எல்லாம் வெறும் மூன்று நாட்கள் தான் நிலைத்தது. சந்தியாவும் கௌதமும் பேசி மூன்று நாட்கள் கூட ஆகவில்லை கௌதம் எதையோ மனதில் போட்டு குழப்பி உம்மென்று சுற்றுவதை சந்தியா கவனித்தாள்.

அதை சரி செய்தாக வேண்டும் என்று எண்ணியும் இருந்தாள். அதற்கு ஏற்றாற்போல் விக்ரமுக்கு அன்று சிறப்பு வகுப்பு இருந்ததால் கௌதமுடன் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டான். வழியெங்கும் அமைதியாக வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான் கௌதம். அது அவனில்லை. எதையாவது சிரித்து பேசி கொண்டு வருவதே அவனது குணம்.

“டேய் டுகாட்டி, என்ன இன்னைக்கு உன் பாஸ் உம்முனு வரான். கண்ணாடில அவனுக்கு முகத்தை காட்டறீயா இல்லயா. பார்க்க சகிக்கலை” வண்டியிடம் கேட்பது போல் அவனிடம் கேட்டாள்.

“அதுக்கு காரணமே அவ தான்னு சொல்லு டுகாட்டி” அவனும் வண்டியிடம் சொல்வது போல் அவளிடம் சொன்னான்.

“நானா. நான் என்னடா பண்ணேன்” என்று யோசித்தவள், கை விரல்களை விட்டு எண்ணி “மூணு நாளா சண்டை கூட போடலையே” என சொல்ல, அதற்கும் அவன் அமைதியாக இருக்க “இப்ப சொல்லபோறீயா இல்லயா” அதட்டிக் கேட்டாள்.

“எனக்கு இப்போலாம் விக்கி உன்னை சந்துனு கூப்பிட்டா கடுப்பாகுதுடி” என்றான். ஆம், ‘நீ கௌதம் கூட போ சந்துனு’ விக்ரம் சொல்லி அனுப்பியதில் இருந்து தான் அவன் முகம் மாறி இப்படி இருக்கிறான். அது தவிர வேறு சில சொல்ல முடியாத உணர்வுகளும் அவனை ஆட்கொண்டிருந்தது.

“என்ன ஆரம்பிச்சிட்டியா. எதுக்கு சின்ன விஷயத்தை பெருசாக்கறேனு எனக்கு புரியலை கௌதம். முதல்ல அவன். இப்ப நீயா. உங்க ரெண்டுபேருக்கும் என்னை பார்த்தா நீங்க விளையாடுற புட்பால் மாதிரி தெரியுதா. நீ ஒரு உதை அவன் ஒரு உதைனு உதைச்சிக்கிட்டு இருக்கீங்க” சந்தியா கடகடவென பேசியதில் கௌதமுக்கு கோபம் வர தன் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தினான். அவன் கண் பார்வையில் அவள் கீழே இறங்க அவனும் இறங்கினான்.

“என்ன பேசுற நீ. நானும் அவனும் உன்னை புட்பால் மாதிரி உதைக்கறோமா. நான் என்ன சொல்லவரேன்னு கூட உனக்கு புரியலையா. எது, சின்ன விஷயத்தை நான் பெருசாக்கறேனா. கௌதி எப்படி கௌதமா மாறினான்னு உனக்கு ஞாபகம் இருக்கா. நீ என்னை கூப்பிடறதையே மாத்திக்கிட்ட. நான் சைலண்ட்டா தான போயிட்டேன். நான் என்னமோ பிரச்சனை பண்ற மாதிரி ஆரம்பிச்சிட்டியாங்கற. அவன் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதுனு சொன்னேனா. எனக்கு கடுப்பாகுதுனு தான சொன்னேன். எனக்கு ஏன் அப்படி தோணுதுனு யோசிச்சியா” கௌதமும் அதற்கு எதிர்வாதம் புரிய வழக்கம் போல் இருவருக்குள்ளும் சண்டை வெடித்தது.

“இதுல யோசிக்க என்ன இருக்கு. உனக்கு தான் டைம்பாஸ் ஆகலனா எங்கிட்ட பிரச்சனை பண்றதயே வேலையா வச்சிருக்கியே. நீ விக்ரமுக்காக அவ்ளோ கேரிங்கா எப்பவும் அவன் கூட இரு, அவன் பைக்ல போ, அவனை பார்த்துக்கோனு சொன்னப்போ உன்னை எனக்கு எவ்ளோ பிடிச்சிருந்துச்சு தெரியுமா. ஆனா பழைய குருடி கதவை திறடி. இல்ல” வழக்கம் போல் பேசியே கோபத்தை வரவழைத்து விட்டாள்.

“என்னடி நீ ரொம்ப ஓவரா பேசிட்டே போற. என்னைக்குடி நான் தேவையில்லாம சண்டை போட்டிருக்கேன்”

“இப்போ என்னை வீட்டுல கொண்டுப் போய் விடறீயா இல்ல நானே நடந்து போயிக்கவா” என்றாள். அதற்கு மேல் அவளிடம் பேசி ஒன்றும் ஆக போவதில்லை என்று வண்டியை கிளப்பினான்.

சிறிது தூரம் வந்ததும் மறுபடியும் அவன் வண்டியை ஓரம் நிறுத்த “ஏன்டா இது என்ன பைக்கா இல்ல பஸ்ஸா. அங்கங்க நிறுத்திக்கிட்டு இருக்க” எரிச்சல்பட்டு சொன்னாள்.

“நில்லுடி எனக்கு பேசணும்” கோபமாக கத்தினான். அதற்குமேல் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கினாள்.

“நான் ஏன் விக்கி உன்னை சந்துனு கூப்பிட்டா கடுப்பாகறேன்னு உனக்கு புரியலையா சந்தியா”

“அதான் சொன்னேனே உனக்கு எங்கிட்ட எதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கணும்”

எவ்வளவு திமிர் இவளுக்கு என்று தோன்ற “வேண்டாம் சந்தியா. என்னை டென்ஷன் பண்ணாத. நான் இன்னைக்கு பேசியே ஆகணும். திரும்ப இந்த மாதிரி சந்தர்ப்பம் எனக்கு கிடைக்குமானு தெரியலை. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” அவன் பேச்சில் அவள் அமைதியானாள்.

“அவன் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதுனு நான் சொல்லலைடி. அப்படி கூப்பிடறப்போ எனக்கு பொறாமையா இருக்குனு தான் சொல்றேன். ஏன்னா நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்னு தோணுது. அவனுக்கு வேணா நீ சந்து, தெரு எதுவா வேணா இருக்கலாம். ஆனா என்னோட உலகமே நீதான் சந்தியா. உனக்கு புரியுதா இல்லையா” அவளை பார்த்து அவளது கண்களை இமைக்காமல் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான். அவள் முகமே அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை பிரதிபலித்தது. இம்முறையும் அவள் கண்களில் கண்ணீர் நின்றது. அன்றவன் பார்த்த அதே கண்ணீர். மறுபடியும் உடைந்துப் போனான். அதற்கு மேல் பேசத் தோன்றாமல் “சரி கிளம்பு உன்னை வீட்டுல விட்டுறேன்” என்றான்.

வழியெங்கும் அமைதி. அவனது வண்டி கண்ணாடி வழியாக அவளை பார்த்தப்போது வெகுநேரமாக கண்ணில் நின்றிருந்த கண்ணீர் கீழே இறங்கி வந்தது. அதையவள் துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள். அவள் வீட்டு வாசலில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான்.

அவளும் அவனிடமிருந்து விடைபெறாமல் அமைதியாக இறங்கி நடந்தாள்.

“நில்லு சந்தியா. விளையாட்டுக்கு சொன்னாலும் அழற. நிஜமா சொன்னாலும் அழற. இப்படி உன் கண்ணுல தண்ணிய பார்த்தா எனக்கு எப்படி மேல பேச தோணும். ஐய்யோ, இவளை நம்ப செயலால காயப்படுத்திட்டோமோனு தோணுது. எனக்கு உன்னை பிடிச்சிருக்குங்கற விஷயம் உனக்கு கண்ணீரை தர்றத பார்த்தா மனசே விட்டு போயிடுதுடி. ஆனாலும் அதான் உண்மை. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சந்தியா. இத நீ உங்கிட்ட பேச முயற்சி பண்ணாத, ஆறுமாசத்துக்கு அப்புறம் என் முகத்தை கூட காட்டாதனு சொன்னியே அப்ப தான்டி நானே உணர்ந்தேன். அண்ட் தட் ஒன் வீக், இட் வாஸ் எ ஹெல் டு மீ. அப்ப தான் புரிஞ்சிது ஐ ஆம் இன் லவ் வித்..” அவன் முழுதாக சொல்வதற்குள் வீட்டினுள்ளே ஓடிவிட்டாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 
Top