vennilasridhar27
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 17
விக்ரமிற்கு சந்தியாவை திட்டவேண்டும் என்றெல்லாம் கிடையாது. எங்கே இவளது செயலால் இவளது வாழ்க்கையை இவளே வீணடித்து கொள்ள போகிறாளோ என்ற பயம். அதோடு கௌதமின் குடும்பம் பெரியது. அங்கே இருக்கும் மனிதர்களின் குணமும் வெவ்வேறாக இருக்கும். இப்படி தொட்டத்தற்கெல்லாம் சண்டையிட்டு கொண்டிருந்தால் நாளை அவள் நிம்மதி தான் குலையும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டே அவன் அவளிடம் அவ்வாறு நடந்துக் கொண்டான்.
தோழி அவ்வளவு பக்குவமில்லாதவள் இல்லை என்பது அவனுக்கு தெரியவில்லை. அவள் கௌதமிடம் மட்டுமே அப்படி நடந்துக் கொள்வாள். அதுவும் அவன் மீதுள்ள அளவுக்கடந்த அன்பே, அவன் மீது அவள் கொள்ளும் கோபம். மற்றபடி மற்றவர்களிடம் நன்முறையில் நடந்து நற்பெயரை வாங்க கூடியவளே.
இதில் எந்த தவறும் செய்யாமல் திட்டும் வாங்கி, பின் சந்தியாவை சமாதானமும் செய்தவன் கௌதமே. அவனுக்கு சந்தியா ஏன் அப்படி நடந்துக் கொண்டாள் என்று நன்றாகவே புரிந்தது. ஆம், அவளுக்கு மதுவருந்தினால் பிடிக்காதென்று அவனுக்கும் தெரியும். இருந்தும் அவனுடைய சந்தோசத்திற்காக அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் அனுமதித்திருக்கிறாள் என்றும் தெரியும். அதனால் தான் விக்ரம் அவ்வளவு வற்புறுத்தியும் அவன் குடிக்கவில்லை. அவளும் காரணம் இல்லாமல் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவளது தந்தை முத்துகிருஷ்ணனே அதற்கு முழுமுதற் காரணம். அவர் நல்ல மனிதர் தான். மனைவி, மக்கள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர் தான். ஆனால் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் அவரால் விட முடியவில்லை.
இந்த வயதிலும் மகளுக்கு, முத்து தன் கையால் தான் இரவு உணவு ஊட்டிவிடுவார். சந்தியாவும் எத்தனை மணி ஆனாலும் அவருக்காக காத்திருந்து அவர் ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவாள். அதே நேரத்தில் மக்கள் இருவரும் சாப்பிட்டு படுத்ததும், வீட்டிலேயே மது அருந்துவார். இது மனைவி மீனாட்சிக்கு சுத்தமாக பிடிக்காது. மகளுக்கும் மகனுக்குமே பிடிக்காது. நிறைய முறை பேசாமல் இருந்தெல்லாம் பார்த்திருக்கின்றனர். சில நாட்களுக்கு சரியாக இருப்பார், பின் பழைய படி தொடங்கிவிடுவார்.
முத்துகிருஷ்ணன் விக்ரம் வீட்டு கார் ஓட்டுநர் என்று சொல்வதை விட அவனுடைய தனிப்பட்ட ஓட்டுநர் என்று தான் சொல்லவேண்டும். தான் வீட்டில் அதிகம் இருப்பதில்லை, தனியாக இருக்கும் மகன் வழித்தவறி சென்றுவிட கூடாதென்று வீட்டிலும் வெளியிலும் அவன் உடனிருக்க, ரவிப்பிரகாஷ் வைத்த வேலையாளும் ஓட்டுநரும் தான் மாரியப்பனும் முத்துகிருஷ்ணனும். அதுவும் முத்துகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் அபிமானம் வரவே அவரை அவர் குடும்பத்தோடு தன்னுடைய விருந்தினர் இல்லத்திலேயே தங்கி கொள்ளச் சொன்னார்.
அதனால் விக்ரமை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முத்து சரக்குவண்டி ஓட்டுவது, பிற வாடகை வண்டி ஓட்டுவதென்று வெளி வேலைகளை செய்வார். அதில் ஏற்படும் அசதியை போக்க இரவில் மதுவருந்தாமல் படுக்கமாட்டார். முன்பெல்லாம் இரவு வேலைகளையும் செய்திருந்தார். பிள்ளைகள் வளர்ந்ததும் அதற்கு தடைப்போட இப்போது பகல் வேலையை மட்டும் பார்க்கிறார். அதுவும் இப்போது விக்ரமே பெரும்பாலும் வண்டியை சுயமாக ஓட்டிச் செல்வதால் அவருக்கு வேலை குறைவு. அதுவே அவருக்கு வருமானத்தை எண்ணி ஒரு வித பயத்தை தந்திருக்க, அதைப் போக்க விக்ரமே சம்பளமும் தந்து வெளி வேலையும் செய்ய ஊக்குவித்து இருக்கிறான்.
சந்தியாவிற்கு தந்தையிடம் பிடிக்காத ஒன்றானால் அது மதுப்பழக்கமே. ஆனால், அவளால் அவரை தடுக்க முடியவில்லை. தந்தையிடம் முடியாததை தனக்கு நெருக்கமானவர்களிடம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் என்ன செய்ய, கௌதமுக்கு அது பிடித்திருந்ததால் விட்டும் கொடுத்தாள். இப்போது விக்ரமும் உடன் சேர்ந்துவிட்டானா என்ற வருத்தம், கௌதம் காண்பித்த வழியில் இவன் செல்கிறானா என்ற கோபம், தன்னால் யாரையும் சரிச் செய்ய முடியாதா என்ற இயலாமை, இவையனைத்தும் அவளை கௌதமிடம் கோபத்தை காட்ட வைத்தது. அது புரிந்ததால் தான் அன்று அவள் பேசிய அனைத்திற்கும் கௌதம் பொறுமைக் காத்தான். இருப்பினும் அவன் பொறுமையை சோதித்து ஒன்றிரண்டு வார்த்தைகளை வரவழைக்க தான் செய்தாள் அவனுடைய சனு.
இருந்தும் அனைத்தையும் மறந்து அவள் மனதை நன்கு அறிந்தவன் அவளை சமாதானம் செய்தான். விக்ரமுடனும் அவளை சரியாகச் செய்தான்.
ஒரு மாதத்திற்கும் மேல் சென்றிருந்தது. அன்றொரு நாள் கௌதம் தன்னுடைய குத்துச்சண்டை பயிற்சியில் இருந்தான். சந்தியா அவனுக்கு விடாமல் அழைத்திருந்தாள். தன் கைபேசியை சைலண்ட்டில் வைத்திருந்ததால் அவன் அவளது அழைப்புக்களை கவனிக்கவில்லை.
பயிற்சி முடிந்து கைபேசியை பார்த்தவன், அவளிடமிருந்து இத்தனை அழைப்பு வந்திருப்பதை கண்டு என்னவாக இருக்குமென்று பதறிப்போய் திரும்ப அழைத்தான்.
“ஹலோ சனு. என்னடீ.. எதுக்கு இத்தனை கால் பண்ணிருக்க”
“யாரும் எங்கிட்ட பேச வேண்டாம். யாருக்கும் என் மேல பாசம் இல்ல. அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலை தான் முக்கியம்” அவள் மூக்கை உறிஞ்சி கொண்டு சொன்னதை கேட்டு அவனுக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்தான்.
“நான் இங்க ஃபீல் பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பு வருதுல கௌதம்” அவர்கள் அலைப்பேசியில் பேசினாலும் அவளது சிவந்த முகம் அவன் கண்முன் தெரிந்தது.
“பின்ன என்னடி. நித்தி தான் இப்படி பேசுவா. உனக்கும் அவளுக்கும் வித்தியாசமே இல்ல. சரி உனக்கு என்னாச்சு, எதுக்கு இப்படி ஓயாம ஃபோன் அடிச்சிட்டு இருக்க. எப்படியும் நைட் பேச தான போறோம்”
“உனக்கென்ன. ஹாஸ்ட்டல்லயும் உன்னை யாரும் கேட்கப் போறதில்ல. வீட்டுலயும் தனி ரூம். இங்க யாருக்கும் தெரியாம உங்கிட்ட பேச நான் படற கஷ்டம் எனக்குத் தான தெரியும். சக்தி வேற வளர்ந்துட்டே வரான். எப்பவும் பக்கத்துலயே இருக்கானா, எங்க கண்டுப் பிடிச்சிடுவானோனு பயமா இருக்கு. நீ என்னனா என் ஃபோன கூட எடுக்க மாட்ற”
“பாக்ஸிங் மேட்ச் வருதுடி. அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தனால ஃபோன் சைலண்ட்ல இருந்துச்சு”
“ஆமாமா, உனக்கு புட்பால் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. பாக்ஸிங் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. அப்புறம் மசில்ஸ் பில்ட் பண்ண ஜிம்மே கதினு இருப்ப. என்னைக்காவது உனக்கு என்மேல லவ் வருதா” அவள் கோபமாக சொன்னாலும் அவனுக்கு ரசிக்க தான் தோன்றியது.
“லவ் வராமயா உங்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணேன்” கிறங்கி சொன்னான்.
“ப்ரொபோஸ் பண்ணதும் என் கடமை முடிஞ்சதுனு நீ பாட்டுக்கு உன் வேலைய செய்ய ஆரம்பிச்சிட்ட. நான் பாரு பைத்தியம் மாதிரி உன்னையே நினைச்சி சுத்திட்டு இருக்கேன்” அவள் குழந்தை தனம் மாறாது சொல்லிக் கொண்டிருந்தாள் “சரி பாக்ஸிங் மேட்ச் போற நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல. சர்ஜரி பண்ண கை வேற” குரலில் இப்போது கண்டிப்பு தெரிந்தது.
“நம்ப டாக்டர் ஓகே சொல்லி தான், நான் மேட்ச்சே போறேன். அப்புறம் எனக்கு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. நீ கவலையே படாத சனு ஆப்போனென்ட்ட என்னை அடிக்கவே விடாம மொத்த அடியையும் நானே கொடுத்திடுறேன்” சொல்லிவிட்டு சிரித்தவனை “டேய் என்ன, என்னை கிண்டல் பண்றீயா. அப்புறம் நான் உங்கிட்ட பேசமாட்டேன் போ” மீண்டும் குழந்தையாக மாறினாள்.
“சரி சரி. பார்த்து நடத்துக்கறேன். ஆனா எனக்கும் அடிகள் விழத்தான் செய்யும். அதெல்லாம் பார்த்தா எப்படி போட்டியில கலந்துக்க முடியும். ஆனா எதுவும் சீரியஸ் ஆக்கிக்காம பார்த்துக்கறேன்” அவளிடம் பேசிக் கொண்டே தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன் “ஆமா இது நீ டான்ஸ் கிளாஸ் போற டைமாச்சே. கிளாஸ் போகாம என்னடி எங்கிட்ட பேசிட்டு இருக்க” சிறுவயதில் நிறுத்திய நாட்டிய வகுப்பிற்கு மறுபடியும் போக சொல்லி ஊக்குவித்து அவளும் சென்றுக் கொண்டிருந்தாள்.
“அது.. நான் போகல”
“ஏன் போகல” இப்போது இவனது குரலில் கண்டிப்பு தெரிந்தது.
“அது கௌதம்.. நான் அந்த சைடு போறப்பயெல்லாம் ரெண்டு பசங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கானுங்க. அதான் இனி போக போறதில்ல” பயத்தில் சொன்னவள் மீது அவனுக்கு கோபம் தான் வந்தது.
“என்னது.. இனி கிளாஸ் போக போறதில்லையா. அவனுங்க அப்படி தான் எதாவது பண்ணிட்டு இருப்பான்னுங்க. ஒண்ணு கண்டுக்காம போயிடனும் இல்ல டாலரேட்டே பண்ண முடியாத அளவுக்கு பண்ணா, கைய மடிச்சி ரெண்டு குத்து குத்துறத விட்டுட்டு டான்ஸ் கிளாஸ் போகமாட்டேனு சொல்ற. நீ கவலைபடாம அடி, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ என் ஆளுன்னு தெரிஞ்சா யாருமே உங்கிட்ட வாலாட்ட மாட்டாங்க”
“என்னடா அடிக்க சொல்ற. எங்க அப்பா யார் வம்புக்கும் போகாதனு சொல்லுவாரு. நீ என்னனா கைய மடக்கி குத்த சொல்ற. நான் என்ன பாக்ஸிங்கா கத்துக்கறேன்”
“இதுக்கு கத்துக்கனுமெல்லாம் ஒண்ணுமில்ல. ஒருத்தன் உங்கிட்ட பிரச்சனை பண்ணா அந்த பிரச்சனைல இருந்து உன் தற்காத்துக்க உனக்கு தெரியணும். உன் டான்ஸ் கிளாஸே மூணு தெரு தள்ளி தான் இருக்கு. அவனுங்க என்ன உங்க ஏரியாவா. நமக்கு தெரிஞ்ச பசங்களா இருந்தா கூப்பிட்டு பேசினா திரும்ப பிரச்சனை பண்ணமாட்டானுங்க”
“ஆமா ஒரு ரௌடிக்கு தானே இன்னொரு ரௌடிய தெரியும்”
“என்னடி கொழுப்பா” அவளை செல்லமாக கடிந்துவிட்டு “சரி, ஒரு நிமிஷம் லைன்ல இரு விக்கிய கான்பெரன்ஸ்ல எடுக்கறேன்” என்று விக்ரமையும் அழைப்பில் இணைத்தவன் “ஹலோ விக்கி என்னடா எதோ ரெண்டுபசங்க என் பேபிய வம்பு பண்றாங்களாமே. அதை என்னனு பாருடா” விக்ரமிடம் கௌதம் சொல்ல
“சொன்னாடா. இன்னைக்கு கொஞ்சம் வேலையா வெளிய வந்திருக்கேன். தர்ஸ்டே போறப்போ நானே கூட இருந்து என்னனு பார்க்கறேன்” விக்ரமுக்கும் இது தெரிந்து தான் இருந்தது. அவர்கள் இருவர் இருக்க அவளுக்கென்ன பயம். ஆனால் கௌதம் அதை அத்தோடு விடவில்லை.
“விக்கி.. திங்கள், புதன், வெள்ளி பாட்டு கிளாஸ் போறா.. செவ்வாய், வியாழன் டான்ஸ் கிளாஸ் போறா.. சனி, ஞாயிறு ஃப்ரீயா தான இருக்கா, கராத்தே கிளாஸ் சேர்த்துவிடு டா”
“ஹான் இல்ல நான் மாட்டேன். நான் என்ன பாட்டு கத்துக்கிட்டு கச்சேரி பண்ணப் போறேனா இல்ல டான்ஸ் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணப் போறேனா. இதுல இந்த கிளாஸுக்கு போக தைரியம் வர கராத்தே வேற கத்துக்கணுமாம்” அதுவரை அமைதியாக கேட்டிருந்தவள் மறுப்பு சொல்ல
“என்ன நீ மாட்டேன். இது பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்க்கு போறதுக்கு மட்டும் இல்ல பொதுவாவே நீ தைரியமா இருக்கனும் சனு”
“ரொம்ப கொடுமை பண்ற கௌதம். வாரத்துல ஏழு நாளும் எதாவது ஒரு கிளாஸ் போக சொன்னா, அப்புறம் வீட்ல உன் மாமியார் சொல்ற வேலைய யார் பார்க்கறது. இதுல இந்த சக்தி வேற ஒயிட் யூனிபார்மை மாடு மாதிரி பிரட்டி எடுத்துட்டு வரான். துவைக்கறதுக்குள்ள கையே விட்டு போயிடுது. அன்னைக்கு என்ன சொன்ன நான் போர்ட்டிங் ஸ்கூல் மாதிரி நடத்துறேனா, அப்ப இதுக்கு பேர் என்ன. எனக்கு என்னமோ நீதான் சர்க்கஸ்ல இருக்க ரிங்க் மாஸ்டர் மாதிரி தெரியற” சீறிக் கொண்டு பதிலளித்தாள்.
அதை கேட்ட கௌதம் “நான் வேணா வாசிங்மெசின் வாங்கி தரவா பேபி” என்று பாசமாக கேட்க, அவளுக்கோ அப்போதும் இந்த வகுப்புகள் வேண்டாமென சொல்லாத கோபத்தில் “எதுக்கு வீட்ல மாட்டவா” என்றவள் “எங்க அவன் நான் உன்னை எதாவது சொன்னா மட்டும், நீ பிரஷர் பண்ற, பிடிச்சி வைக்கறேனு எங்ககிட்ட சண்டை போட வந்திடுவான். இப்ப மட்டும் அமைதியா இருக்கான்” அடுத்து விக்ரமிடம் சீறத் தொடங்கினாள்.
“அவன் உன்னை இம்ப்ரூவைஸ் பண்ணனும்னு செய்யறான். நீ அவன் செஞ்சிட்டு இருக்கறத செய்யாதேனு கட்டுப்பாடு வைக்கற” கௌதமுக்கு பரிந்து விக்ரம் பேச கோபமானவள் “நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க விக்ரம். அப்படி அவன் உனக்கு என்ன செஞ்சிட்டான்னு எப்பவும் அவனுக்கே சப்போர்ட் பண்ற” அவள் விக்ரமிடம் சண்டைப்போட்டு கொண்டிருக்க
“ஏன்டி எங்ககிட்ட இந்த எகிறு எகிறுறியே, அவனுங்ககிட்ட எகிறிருந்தா இப்ப கராத்தே கிளாஸ் போக வேண்டிய வேலை இருந்திருக்காதுல” விக்ரம் அவளிடம் நக்கலாக சொல்லிச் சிரிக்க
“அவங்க பேரு கௌதம் விக்ரமா இருந்திருக்காதுடா. கௌதம் விக்ரம்னு வந்துட்டா சாதாரண சந்தியாலஷ்மி, கோவில்பட்டி வீரலஷ்மியா மாறிடுவா. அதுவும் கௌதம் இன்னும் பாவம்பட்ட ஜென்மம்” என்றவனிடம் அவன் மனது ‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டிருக்கமோ’ என்று வடிவேலு பாணியில் கேள்வியெழுப்ப ‘போவோம் நம்ம சனு தான, என்ன செஞ்சிட போறா’ என்று அதனை அடக்கி, தொடர்ந்து அவளை கேலிச் செய்தான்
“என் சனு, நம்ப ரெண்டுபேருகிட்ட மட்டும் புலி, மத்தவங்களுக்கு எல்லாம் எலி” அவளை சீண்டி பார்ப்பதென்று வந்துவிட்டால் கௌதமும் விக்ரமுடன் சேர்ந்து அவளை அழ வைத்துவிடுவான். இன்றும் சந்தியா கண்ணில் கண்ணீர் தயாராக நின்றிருந்தது.
“ரெண்டுபேரும் ஓவரா பேசறீங்கல, நான் ஃபோன வைக்கறேன்” அழாத குறையாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“சனு சனு.. நான் உன்னை டார்சர் பண்ண சொல்லலைடி. நீ கான்பிடென்ட்டா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணனும். நாளைக்கே நான் உன் கூட இல்லனாலும், நீ பயப்படாம எல்லாத்தையும் தனியா கையாளனும்” கௌதம் சொன்ன அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தாள்.
அவன் எப்படி நான் இல்லையென்றாலும் நீ தைரியமாக இருக்கவேண்டும் என்று சொல்லலாம், அவனுக்கு தெரியவேண்டாமா அவன் இல்லையென்றால் நானில்லை என்று என்ற கோபம் அவளை அவ்வாறு செய்ய வைத்தது.
பாவம் கௌதம் தான் அவள் அழைப்பில் இருப்பதாக நினைத்து “பேபி எங்க சத்தத்தை காணோம். உனக்கு புரியுதா இல்லையா. சனு.. சனு..னு...” திரும்ப திரும்ப அவளை அழைத்துவிட்டு பதில் வராமல் போக, தன்னுடைய கைபேசி திரையைப் பார்த்தவன்
“டேய் அவ கட் பண்ணிட்டு இருக்காடா. சரி, நான் அவளை அப்புறம் சமாதானம் பண்ணிக்கறேன். விக்கி நான் சொன்ன மாதிரி நல்ல கராத்தே கிளாஸ்ஸா பார்த்து சேர்த்துவிடு. ரெண்டு பசங்க கிண்டல் பண்ணதுக்கே டான்ஸ் கிளாஸ் போகலன்னிட்டா. கராத்தே கிளாஸுக்கு கண்டிப்பா கலாட்டா பண்ணுவா. நிறைய சமாளிக்கணும் அவளை” என்றான்.
“கௌதி இது உனக்கே ஆபத்தான விஷயமாச்சேடா. கராத்தே கத்துக்கிட்டு உன்னையே அடிச்சா என்னடா பண்ணுவ” நண்பன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த விக்ரம் நக்கலாக கேட்க
“அவ கராத்தேவே கத்துக்கலனாலும் என்னை அடிப்பாடா” சொல்லிவிட்டு சிரித்தவன் “அவளுக்கு கான்பிடென்ஸ் வரணும் விக்கி” என்றான்.
“ரியலி கௌதி, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளை வேற யாராவது லவ் பண்ணிருந்தா கூட இவ்ளோ அவளுக்காக பார்த்து பார்த்து செய்வாங்களானு தெரியலை. நான் கூட அவளுக்கு பாதுகாப்பா அவக்கூட போவேன், வருவேன், கூடவே இருப்பேன். ஆனா நீ, எப்படி அவ, அவளை தனியா பாதுகாத்துகனும்னு சொல்லித்தர. ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யு டா” விக்ரம் தன் மனதில் இருந்ததை அவனிடம் கொட்டினான்
“உன் சந்துக்காக இத கூட செய்யமாட்டேனா” எதையோ அறிந்தவன் போல் சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தவன் “ஏன்னா அவ என்னோட சனுவும்” என்க, கௌதமின் பேச்சு விக்ரமுக்கு தான் முழுதாக புரியவில்லை. ஏனோ அதன் விளக்கமும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை.
“அப்புறம் கிளாஸ்ல சேர்த்ததும் காசு எவ்ளோனு சொல்லு நான் நேர்ல வரப்போ தரேன்” என்றான்.
ஆம் கௌதம் தான் அவளுக்கு பணம் செலுத்தி, பாட்டு மற்றும் நாட்டிய வகுப்பில் சேர்த்து விட்டிருக்கிறான். அவள் இப்போது வைத்திருக்கும் தொடு கைபேசியும், கால் கொலுசும் அவன் அவளது பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்ததே. ஆனால் அவள் வீட்டை பொறுத்தவரை இவையனைத்தும் விக்ரம் அவளுக்கு செய்வது. அதற்கே முத்துகிருஷ்ணன் சங்கடப்பட்டு, அவ்வப்போது பணம் வரும் நேரமெல்லாம் விக்ரமிடம் கொடுக்கச் சொல்லி சந்தியாவிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார். சந்தியாவிற்கு கௌதம் தான் செய்கிறான் என்று தெரியும் என்பதால், அவனை சந்திக்கும் நேரம் அதை அவனிடமே நேரடியாக தந்து திட்டும் வாங்கியிருக்கிறாள்.
இப்படி அவளை தைரியப்படுத்தி உலகின் முன் தனித்து நிற்க வைத்தவன், அறியாத ஒன்று அவன் வளர்த்த கெடா அவன் மார்பிலே பாயப் போகிறதென்று.
அந்த வருடத்தின் ஓணம் பண்டிகை வந்தது. வழக்கம் போல் அவர்கள் தஞ்சம் புகும் இடமாக விக்ரம் வீடு இருந்தது. கடந்த இரண்டு வருடமாக எப்படியோ அப்படியே தான் இந்த வருடமும் சந்தியா கேரியரில் கட்டி எடுத்து வந்துவிட்டாள்.
விக்ரம் உணவு மேசையில் அமர்ந்திருக்க கௌதம் அப்போதே வந்தான்.
“வா கௌதி. ஹாப்பி ஓணம் மச்சான்” விக்ரம் குறும்பாக சிரித்துக் கொண்டே சொன்னவன் “இப்ப எங்க வீட்ல வந்து சாப்பிடுற. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு எனக்கு ஓணம் சத்யா போடுவீங்களா, இல்ல ரெண்டுபேரும் நீ யாருனு கேப்பிங்களா” என்று அவனை கிண்டலடித்து கேட்க
“அதுக்கென்னடா போட்டுட்டா போச்சு” என்றவன், தன் வெட்கத்தை மறைத்து “சரி எங்க என்னோட ஓமணப் பெண்ணை காணோம். இன்னும் அவளும் அவ தம்பியும் கேரியரை தூக்கிட்டு வரலையா”
“டோன்ட் ஒர்ரி மச்சான். இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னா கிச்சன்ல இருக்க அவளுக்கே கேட்டிடும்”
“டேய் சொல்லமாட்டியா அவ உள்ள இருக்கானு. ஆமா உள்ள என்ன பண்றா”
“தெரியல. எதையோ போட்டு உருட்டிட்டு இருக்கா. என்னை வரக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் போட்டுட்டா” விக்ரம் சொல்லியிருந்த நேரம், சந்தியா சமையல் அறையிலிருந்து வெளியே வரும் சத்தம் கேட்டது.
வெளியே வந்தவளை இமைக்கொட்டாது பார்த்தான் கௌதம். அவள் நிறத்துக்கு அந்த கரும்பச்சை நிற பாவாடை, சட்டை பாந்தமாக இருந்தது. தன்னுடைய நீள கூந்தலை, பக்க வகுடெடுத்து பின்னால் ஒரு சிறிய கிளட்ச் கிளிப்பில் அடக்கியிருக்க, அது அருவி போல் விரிந்திருந்தது. அந்த நீளக் கூந்தலுக்கு சரம் சரமாக மல்லிப்பூவும் வைத்திருந்தாள். அவளது சங்கு கழுத்தில் மெல்லியதாக ஒரு நெக்லஸும் உடன் சார்ட் செயினும் அணிந்திருந்தாள். காதில் அழகான ஜிமிக்கி கம்மல் இருக்க, அது அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தது. இரு கைகளிலும் மெல்லியதாக இரண்டு வளையல்களும் இருந்தது. கண்மையை தவிர முகத்திற்கு வேறெந்த ஒப்பனையுமில்லாமல் அவனது தேவதையாகவே மிளிர்ந்தாள்.
அவளை தலையிலிருந்து பாதம் வரை கண்களால் அளந்தவன் சொக்கித் தான் போனான். இருந்தும் “என்னடா இவ இந்த வருஷமும் பாவாடை சட்டைல இருக்கா. எங்க நிரா கூட இப்போலாம் பாவாடை சட்டை போடுறதில்ல. இன்னும் இவளுக்கு சின்ன பொண்ணுன்னு நினைப்பா” விக்ரமை பார்த்து கௌதம் சொன்னதும் சந்தியாவிற்கு முகமே மாறிப்போனது. கண்களில் கண்ணீர் தயாராக நின்றது.
“இதுக்கு தான் விக்ரம், இவனை கூப்பிடவேண்டாம்னு சொன்னேன். இவன் கல்யாணமாகி அவங்க மாமியார் வீட்டுல போய் ஓணம் சத்யா சாப்பிட்டுக்கட்டும்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்.
“ஏன்டா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா. இதுக்கு தான காலேஜ் கட் அடிச்சிட்டு வந்த” விக்ரம் அவனுக்கு புத்திமதி சொன்னான்.
“பின்ன என்னடா. போன வருஷம் அதுக்கு முந்தன வருஷம் தான் பாவாடை சட்டைனா இந்த வருஷமுமா. எவரி இயர் கலர் தான் மாறுது” விக்ரமிடம் சொல்லிவிட்டு அவளிடம் திரும்பியவன் “வருஷா வருஷம் என்னை கடுப்பேத்தவே, பாவாடை சட்டையில வர்றியா. இதுவே பாவாடை தாவணி போட்டிருந்தா அம்சமா இருந்திருக்கும். அதுக் கூட தலையை சென்டர் வகுடெடுத்து, லூசா சடை பின்னி பூ வச்சிருந்தா அழகா இருந்திருக்கும். கூடவே கையில கண்ணாடி வளையல், கழுத்துல இந்த நெக்லஸ் கூட ஒரு டாலர் செயின் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் தெரியுமா, எங்க கடை ஆட்ல வர ஆக்டரஸ் ஹரிதாவை தூக்கிட்டு உன்னையே போட்டுடலாம்” அவன் சொல்ல சொல்ல, அவளுக்கு வெட்கம் தொற்றிக் கொள்ள தலைகுனிந்தாள் “பார்த்தியா நான் சொன்னதும் நீயே வெட்கப்படற” அவளை கரைக்கும் பார்வை பார்த்து சொன்னான்.
“அப்ப நீயே பாவாடை தாவணி வாங்கி தா” என்றாள் வெட்கம் குறையாமல்.
“கண்டிப்பா வாங்கி தரேன். கூட லாங் செயினும் கண்ணாடி வளையலும் வாங்கி தரேன்” அவன் தன் தேவதையை பாவாடை தாவணியில் பார்க்கவே ஆசைக் கொண்டான். அவளோ அந்த ஆசையை ஓவ்வொரு வருடமும் நிராசை ஆக்கிக் கொண்டு இருந்தாள். அதுவே அவனது கோபத்திற்கு காரணம்.
“லாங் செயினெல்லாம் வேணாம். வீட்டுல கேள்வி கேப்பாங்க. பாவாடை தாவணி மட்டும் போதும்” என்றுவிட்டு, இருவரும் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டிருக்க
“ஹ்ம்ம் ஹ்ம்ம்” கனைத்த விக்ரம் “சரி இப்ப சாப்பிடுவோமா” என்று இடைப்புகுந்தான்.
விக்ரம் மற்றும் கௌதம் உதவியோடு அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்து, வாழை இலையை விரித்து உணவு வகைகளை பரிமாறி, சாப்பிட சொல்லி கண்ஜாடை காட்டினாள்.
“என்ன அவ்ளோ தானா” கௌதம் கேள்வி எழுப்ப
“நீ இத சாப்பிட்டா போதாதா” விக்ரம் மீண்டும் இடைப்புகுந்தான்
“நான் அத சொல்லலைடா. சாப்பாட்ட வச்சா யாரு ஊட்டிவிடுவா” அவளை பார்த்து விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டே கேட்டான்.
“அதெல்லாம் ஒண்ணும் சத்யால கிடையாதே” சந்தியா அவனது குறும்பை அறிந்துச் சொன்னாள்.
“உங்க கேரளால வேணா அது பழக்கமா இல்லாம இருக்கலாம் எங்க தமிழ்நாட்டுல இப்படி இலை நிறைய சாப்பாட்ட போட்டு, காதலோட ஊட்டிவிடுவோம்” அவளது குறும்பு கண்ணன் சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
“டேய் இது என்னடா புது ரூல்ஸா இருக்கு. நான் எதுவும் அப்படி கேள்விபட்டதில்லயே” விக்ரம் சொல்ல
“அவன் ஆந்தரால, அதான் அங்க அந்த பழக்கம் இல்ல போல” அவளிடமிருந்து விழியகற்றாது விக்ரமை திரும்பியும் பார்க்காமல் சொன்னவன் “நான் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்” என்றான் திட்டவட்டமாக.
“வம்பு பண்ணாம ஒழுங்கா சாப்பிடு கௌதம். தோட்டத்துல மாரியப்பன் அண்ணன் வேற இருக்காரு. அச்சாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” அவனை கெஞ்சுதலாக பார்த்துச் சொன்னாள்.
“விக்கி. மாரியப்பன் அண்ணன் தான் பிரச்சனை. அவரை க்ளியர் பண்ணு” என்றான் இம்முறையும் அவளையே பார்த்துக் கொண்டே.
“அட்டகாசம் பண்றடா நீ” சொல்லிக்கொண்டே எழுந்துச் சென்ற விக்ரம், மாரியப்பன் அண்ணன் கையில் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் “ஓகே அண்ணனை க்ளியர் பண்ணிட்டேன். இப்போ நடத்துங்க” கேலியாக கௌதமிடம் சொன்னான்.
“விளையாடாத கௌதம். இங்க நீயும் நானும் மட்டும் இருக்க மாதிரி ஊட்டிவிட சொல்ற” சந்தியாவிற்கு இப்போது கோபம் தான் வந்தது.
“ஓ இவனையும் க்ளியர் பண்ணனுமா” தொடர்ந்து அவளை பார்த்துக் கொண்டே சொன்னான்.
“அடப்பாவி டேய். உனக்கு இந்த சத்யாவே என் புண்ணியத்துல தான் கிடைச்சதுனு மறந்துடாதடா” பரிதாபமாக முகத்தை வைத்து சொன்னான் விக்ரம். கௌதம் அவனை பார்த்தால் தானே நண்பனது பரிதாபம் புரியும், அவன் தான் சந்தியாவையே பார்த்திருந்தானே.
“ஹேய் கேக்கறான்ல. ஊட்டி தொலையேன்டி. அப்புறம் என்னையே எங்க வீட்டை விட்டு துரத்திடுவான் போல” அவன் கஷ்டம் கௌதமுக்கு புரிவதாக தெரியவில்லை, நேரடியாக சந்தியாவிடமே முறையிட்டான்.
“நீ ரொம்ப ஓவரா பண்ற கௌதம்” முறைத்துக் கொண்டே சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். கௌதமோ ஊட்டி விடமாட்டாளா என்று அவள் சென்ற வழியையே ஏக்கத்தோடு பார்க்க, விக்ரமோ இன்று சாப்பிட்டால் போல் தான் என்று தன் இலையை ஏக்கப்பார்வை பார்த்தான்.
சில நிமிடங்களில் வெளியே வந்தவள், கையில் எதையோ மறைத்து எடுத்து வந்து “கண்ணை மூடு” என்றாள்.
அவனும் கேள்வி கேட்காமல் கண்களை மூட கிண்ணத்தில் இருந்ததை ஸ்பூனில் எடுத்து அவன் வாயில் வைக்க, அதை ருசித்தவன் முகத்தில் பூரிப்பு. அவனுக்கு பிடிக்குமென்று கேசரி செய்திருக்கிறாள். அவன் சஸ்பெண்ட்டாகி விக்ரம் வீட்டிற்கு வந்தபோது செய்தாள். அப்போது அவன் சாப்பிடமாட்டேன் என்ற அடத்தில் இருந்தான். அத்தோடு இன்று தான் செய்கிறாள். பலமுறை அவன் செய்து தரும்படி கெஞ்சியும் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவள் சொல்லும் பதில் ‘உனக்கு தான் செஞ்சித் தர உன் அம்மா இருக்காங்களே’ என்பது தான். இன்று அவன் கேட்காமலே செய்திருக்கிறாள். அதை ருசித்தவன் கண்களில் காதலோடு அவளையும் ருசிக்க அந்த பார்வையை தாளமுடியாது தலைக்குனிந்தாள்.
“இத செய்ய தான் கிச்சன்ல போட்டு உருட்டிட்டு இருந்தியா. அது என்னடி ஓணம் சத்யால கேசரிலாமா வருது” விக்ரம் அவளை நக்கலடித்தான்.
“ஏன் பொங்கல் மட்டும் இருந்துச்சா. என் அம்மா உனக்காக செய்யறதில்ல” அவன் கேட்ட அடுத்த நொடி அவளுக்கு பதிலடி கொடுத்தாள்.
“பார்த்தியாடா பதில் எப்படி கன்ஷாட்டா வருது. பண்ணு பண்ணு நீ அவனுக்கு கேசரி பண்ணு, அத அவனுக்கு மடியில உட்கார வச்சு ஊட்டு, என்னவேனா பண்ணு. என்னையும் அப்படி பார்த்துக்க என் மீனுக்குட்டி இருக்காங்க” விக்ரமும் விடாமல் வம்பிழுத்தான்.
“சரி ரெண்டுபேரும் சாப்பிடுங்க” என்று அதட்டினாள்.
“என்னது சாப்பிடறதா. ஊட்டிவிடுனு சொன்னேனா இல்லையா” மறுபடியும் கௌதம் ஆரம்பித்தான்.
“இப்ப ஊட்டிவிட்டேன் தான” சந்தியா குழம்பிப் போய் கேட்க
“எது ஸ்பூன்ல ஊட்டிவிட்டதா. அதெல்லாம் போங்கு ஆட்டம். இதுக்கா நம்ம பையன் மாரியப்பன் அண்ணனை கிளம்பிவிட்டான். இலையில இருக்கறத கையில எடுத்து ஊட்டிவிடு” திட்டவட்டமாக கௌதம் சொல்லவும், சங்கடமாக சந்தியா விக்ரமை கண்களாலேயே காட்ட
“அம்மா தாயே. நான் வேணா கண்ணை மூடிக்கறேன், தயவுசெஞ்சி ஊட்டிவிட்டிடு. இல்லாட்டி என்னையே எங்க வீட்டை விட்டு துரத்துவானாம். அட்ராசிட்டி பண்றீங்க ரெண்டுபேரும்” பொங்கிவிட்டான் விக்ரம்.
விக்ரம் சொன்னபடி கையில் பருப்பு பாயசம் கிண்ணத்தோடு வேறுபக்கம் திரும்பிக் கொண்டு “பார்க்கலை பார்க்கலை ஸ்டார்ட் பண்ணுங்க” என்றான்.
சந்தியா கௌதமுக்கு காதலோடு ஊட்டிவிட்டாள். அவள் கை இலையில் இருந்து ஒன்வொன்றாக எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டது. ஆனால் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தது. கொஞ்சம் ஊட்டிவிட்டவள் விக்ரமை கண்களாலேயே காட்டி, அவன் பாவம் சாப்பிடட்டும் என்றுச் சொல்ல அதை புரிந்த கௌதம் “விக்கி திரும்பி சாப்பிடுடா” என்று கையில் எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
சாப்பிட்டு கொண்டிருந்தவன் திடீரென்று எதையோ யோசிக்க “என்னாச்சுடா” என்றான் விக்ரம்.
“இந்த ஓணம் சாப்பாடு, அப்புறம் இவளை இந்த பாவாடை சட்டைல பார்க்கறப்போலாம் பக்குனு இருக்கு. எங்கப்பா செல்வராஜ், இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, வீட்டை விட்டு வெளில போடானு சொல்லிடுவாரோனு பகீர்னு ஆகுது” கௌதம் சொன்னதும் சந்தியாவின் முகம் வாடியது. அதைவிட அதிகமாக கௌதம் மனதளவில் வாடியிருப்பதை உணர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து
“ஏன்டா எதாவது பிரச்சனையா” என்று அவனிடம் கேள்வி எழுப்பினாள்.
“பிரச்சனையெல்லாம் இல்ல. ஆனா நிறைய சந்திக்க வேண்டியிருக்கும். ஈசியா ஒத்துக்கவும் செய்யலாம் இல்ல ஒத்துக்காமலும் போகலாம்” என்றான். அவன் அவ்வாறு பேசுபவன் அல்ல. எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பவன். அவன் இப்படி பேசுவது சந்தியாவின் நம்பிக்கையை உடைக்க
“ஏன்டா, உங்க வீட்டுல என்னை ஒத்துக்க மாட்டாங்களா” கண்களில் கண்ணீரோடு கேட்டாள்.
அவள் கண்ணீரை பார்த்தவனுக்கு அவளை கலங்காமல் பார்த்துக் கொள்வது தன் பொறுப்பென தோன்ற “அது எப்படி ஒத்துக்காம போவாங்க. கண்டிப்பா ஒத்துக்குவாங்க” என்றான்.
அவள் மனது இன்னும் கலங்குவதை பார்த்து “உங்க பேமிலில புரட்சி பண்ண மாதிரியெல்லாம் எங்க குடும்பத்துல இதுவரைக்கும் நடந்ததே இல்ல. மாத்தி மாத்தி சொந்தத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிப்பாங்க. ஆனா ஒண்ணும் கவலைப்படாத சனு. நான் எதுக்கு இருக்கேன். நாம பண்ணபோறது தான் புரட்சியே” சிறிதும் அஞ்சாது முகத்தில் சிரிப்புடன் சொன்னவனை இன்னமும் பதற்றம் குறையாமல் பார்த்திருந்தாள்.
“அதான் அவன் பார்த்துக்கறேன்னு சொல்றான்ல. நானும் உங்க கூட தான் இருப்பேன். கவலைப்படக்கூடாது. அப்புறம் கண்ணுல வச்ச மை கரைஞ்சி இறங்கி வந்திடும்” விக்ரம் அவளை சரி செய்ய கேலியை கையிலெடுத்தான். அதை புரிந்த கௌதமும் அவளது பழைய நண்பனாக மாறி அவளை ஓட்ட தொடங்கினான்.
அன்றிலிருந்து கௌதமுக்கு ஓணம் மிகவும் பிடித்த பண்டிகையாகி போனது. அவர்கள் ஒன்றாக இருந்தவரை வருடா வருடம், ஓணம் சத்யாவை சாப்பிட்டு அவளோடு பண்டிகையை கொண்டாட தவறாமல் வந்துவிடுவான். சந்தியா தான் ஊட்டிவிட வேண்டும் என்று வம்பும் செய்து, அவளை ஊட்டிவிடவும் வைப்பான்.
அந்த வீடெங்கும் சிரிப்பும், அரட்டை சத்தமும் நிறைந்திருந்தது. மூவரும் வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு கொண்டிருந்தனர். டிவியில் சத்தமாக பாட்டை ஒலிக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடினர். கௌதம் மனதில் மட்டும் அந்த எண்ணம் இன்னும் அகலவே இல்லை. மனது முழுக்க வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து போக தான் செய்தது. வீட்டில் அவன் அடம் வெற்றிபெறும் என்பது திண்ணம். இருந்தும் இந்த விசயத்தில் எப்படி எடுத்துக் கொள்வார்கள், என்ன செய்வார்கள் என்று புரியாமல் தான் இருந்தான். அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை தந்தை மிகவும் நல்லவர். அவர் இதுவரை யாரிடமும் வித்தியாசம் பார்த்ததில்லை. தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாளையும் தன் குடும்பமாகவே பார்ப்பவர். சிரமமாக இருக்கும், ஆனால் வீட்டில் எப்படியும் சம்மதம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடே இருந்தான்.
உண்மையாகும்..
உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
www.srikalatamilnovel.com
விக்ரமிற்கு சந்தியாவை திட்டவேண்டும் என்றெல்லாம் கிடையாது. எங்கே இவளது செயலால் இவளது வாழ்க்கையை இவளே வீணடித்து கொள்ள போகிறாளோ என்ற பயம். அதோடு கௌதமின் குடும்பம் பெரியது. அங்கே இருக்கும் மனிதர்களின் குணமும் வெவ்வேறாக இருக்கும். இப்படி தொட்டத்தற்கெல்லாம் சண்டையிட்டு கொண்டிருந்தால் நாளை அவள் நிம்மதி தான் குலையும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டே அவன் அவளிடம் அவ்வாறு நடந்துக் கொண்டான்.
தோழி அவ்வளவு பக்குவமில்லாதவள் இல்லை என்பது அவனுக்கு தெரியவில்லை. அவள் கௌதமிடம் மட்டுமே அப்படி நடந்துக் கொள்வாள். அதுவும் அவன் மீதுள்ள அளவுக்கடந்த அன்பே, அவன் மீது அவள் கொள்ளும் கோபம். மற்றபடி மற்றவர்களிடம் நன்முறையில் நடந்து நற்பெயரை வாங்க கூடியவளே.
இதில் எந்த தவறும் செய்யாமல் திட்டும் வாங்கி, பின் சந்தியாவை சமாதானமும் செய்தவன் கௌதமே. அவனுக்கு சந்தியா ஏன் அப்படி நடந்துக் கொண்டாள் என்று நன்றாகவே புரிந்தது. ஆம், அவளுக்கு மதுவருந்தினால் பிடிக்காதென்று அவனுக்கும் தெரியும். இருந்தும் அவனுடைய சந்தோசத்திற்காக அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் அனுமதித்திருக்கிறாள் என்றும் தெரியும். அதனால் தான் விக்ரம் அவ்வளவு வற்புறுத்தியும் அவன் குடிக்கவில்லை. அவளும் காரணம் இல்லாமல் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவளது தந்தை முத்துகிருஷ்ணனே அதற்கு முழுமுதற் காரணம். அவர் நல்ல மனிதர் தான். மனைவி, மக்கள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர் தான். ஆனால் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் அவரால் விட முடியவில்லை.
இந்த வயதிலும் மகளுக்கு, முத்து தன் கையால் தான் இரவு உணவு ஊட்டிவிடுவார். சந்தியாவும் எத்தனை மணி ஆனாலும் அவருக்காக காத்திருந்து அவர் ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவாள். அதே நேரத்தில் மக்கள் இருவரும் சாப்பிட்டு படுத்ததும், வீட்டிலேயே மது அருந்துவார். இது மனைவி மீனாட்சிக்கு சுத்தமாக பிடிக்காது. மகளுக்கும் மகனுக்குமே பிடிக்காது. நிறைய முறை பேசாமல் இருந்தெல்லாம் பார்த்திருக்கின்றனர். சில நாட்களுக்கு சரியாக இருப்பார், பின் பழைய படி தொடங்கிவிடுவார்.
முத்துகிருஷ்ணன் விக்ரம் வீட்டு கார் ஓட்டுநர் என்று சொல்வதை விட அவனுடைய தனிப்பட்ட ஓட்டுநர் என்று தான் சொல்லவேண்டும். தான் வீட்டில் அதிகம் இருப்பதில்லை, தனியாக இருக்கும் மகன் வழித்தவறி சென்றுவிட கூடாதென்று வீட்டிலும் வெளியிலும் அவன் உடனிருக்க, ரவிப்பிரகாஷ் வைத்த வேலையாளும் ஓட்டுநரும் தான் மாரியப்பனும் முத்துகிருஷ்ணனும். அதுவும் முத்துகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் அபிமானம் வரவே அவரை அவர் குடும்பத்தோடு தன்னுடைய விருந்தினர் இல்லத்திலேயே தங்கி கொள்ளச் சொன்னார்.
அதனால் விக்ரமை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முத்து சரக்குவண்டி ஓட்டுவது, பிற வாடகை வண்டி ஓட்டுவதென்று வெளி வேலைகளை செய்வார். அதில் ஏற்படும் அசதியை போக்க இரவில் மதுவருந்தாமல் படுக்கமாட்டார். முன்பெல்லாம் இரவு வேலைகளையும் செய்திருந்தார். பிள்ளைகள் வளர்ந்ததும் அதற்கு தடைப்போட இப்போது பகல் வேலையை மட்டும் பார்க்கிறார். அதுவும் இப்போது விக்ரமே பெரும்பாலும் வண்டியை சுயமாக ஓட்டிச் செல்வதால் அவருக்கு வேலை குறைவு. அதுவே அவருக்கு வருமானத்தை எண்ணி ஒரு வித பயத்தை தந்திருக்க, அதைப் போக்க விக்ரமே சம்பளமும் தந்து வெளி வேலையும் செய்ய ஊக்குவித்து இருக்கிறான்.
சந்தியாவிற்கு தந்தையிடம் பிடிக்காத ஒன்றானால் அது மதுப்பழக்கமே. ஆனால், அவளால் அவரை தடுக்க முடியவில்லை. தந்தையிடம் முடியாததை தனக்கு நெருக்கமானவர்களிடம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் என்ன செய்ய, கௌதமுக்கு அது பிடித்திருந்ததால் விட்டும் கொடுத்தாள். இப்போது விக்ரமும் உடன் சேர்ந்துவிட்டானா என்ற வருத்தம், கௌதம் காண்பித்த வழியில் இவன் செல்கிறானா என்ற கோபம், தன்னால் யாரையும் சரிச் செய்ய முடியாதா என்ற இயலாமை, இவையனைத்தும் அவளை கௌதமிடம் கோபத்தை காட்ட வைத்தது. அது புரிந்ததால் தான் அன்று அவள் பேசிய அனைத்திற்கும் கௌதம் பொறுமைக் காத்தான். இருப்பினும் அவன் பொறுமையை சோதித்து ஒன்றிரண்டு வார்த்தைகளை வரவழைக்க தான் செய்தாள் அவனுடைய சனு.
இருந்தும் அனைத்தையும் மறந்து அவள் மனதை நன்கு அறிந்தவன் அவளை சமாதானம் செய்தான். விக்ரமுடனும் அவளை சரியாகச் செய்தான்.
ஒரு மாதத்திற்கும் மேல் சென்றிருந்தது. அன்றொரு நாள் கௌதம் தன்னுடைய குத்துச்சண்டை பயிற்சியில் இருந்தான். சந்தியா அவனுக்கு விடாமல் அழைத்திருந்தாள். தன் கைபேசியை சைலண்ட்டில் வைத்திருந்ததால் அவன் அவளது அழைப்புக்களை கவனிக்கவில்லை.
பயிற்சி முடிந்து கைபேசியை பார்த்தவன், அவளிடமிருந்து இத்தனை அழைப்பு வந்திருப்பதை கண்டு என்னவாக இருக்குமென்று பதறிப்போய் திரும்ப அழைத்தான்.
“ஹலோ சனு. என்னடீ.. எதுக்கு இத்தனை கால் பண்ணிருக்க”
“யாரும் எங்கிட்ட பேச வேண்டாம். யாருக்கும் என் மேல பாசம் இல்ல. அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலை தான் முக்கியம்” அவள் மூக்கை உறிஞ்சி கொண்டு சொன்னதை கேட்டு அவனுக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்தான்.
“நான் இங்க ஃபீல் பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பு வருதுல கௌதம்” அவர்கள் அலைப்பேசியில் பேசினாலும் அவளது சிவந்த முகம் அவன் கண்முன் தெரிந்தது.
“பின்ன என்னடி. நித்தி தான் இப்படி பேசுவா. உனக்கும் அவளுக்கும் வித்தியாசமே இல்ல. சரி உனக்கு என்னாச்சு, எதுக்கு இப்படி ஓயாம ஃபோன் அடிச்சிட்டு இருக்க. எப்படியும் நைட் பேச தான போறோம்”
“உனக்கென்ன. ஹாஸ்ட்டல்லயும் உன்னை யாரும் கேட்கப் போறதில்ல. வீட்டுலயும் தனி ரூம். இங்க யாருக்கும் தெரியாம உங்கிட்ட பேச நான் படற கஷ்டம் எனக்குத் தான தெரியும். சக்தி வேற வளர்ந்துட்டே வரான். எப்பவும் பக்கத்துலயே இருக்கானா, எங்க கண்டுப் பிடிச்சிடுவானோனு பயமா இருக்கு. நீ என்னனா என் ஃபோன கூட எடுக்க மாட்ற”
“பாக்ஸிங் மேட்ச் வருதுடி. அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தனால ஃபோன் சைலண்ட்ல இருந்துச்சு”
“ஆமாமா, உனக்கு புட்பால் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. பாக்ஸிங் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. அப்புறம் மசில்ஸ் பில்ட் பண்ண ஜிம்மே கதினு இருப்ப. என்னைக்காவது உனக்கு என்மேல லவ் வருதா” அவள் கோபமாக சொன்னாலும் அவனுக்கு ரசிக்க தான் தோன்றியது.
“லவ் வராமயா உங்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணேன்” கிறங்கி சொன்னான்.
“ப்ரொபோஸ் பண்ணதும் என் கடமை முடிஞ்சதுனு நீ பாட்டுக்கு உன் வேலைய செய்ய ஆரம்பிச்சிட்ட. நான் பாரு பைத்தியம் மாதிரி உன்னையே நினைச்சி சுத்திட்டு இருக்கேன்” அவள் குழந்தை தனம் மாறாது சொல்லிக் கொண்டிருந்தாள் “சரி பாக்ஸிங் மேட்ச் போற நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல. சர்ஜரி பண்ண கை வேற” குரலில் இப்போது கண்டிப்பு தெரிந்தது.
“நம்ப டாக்டர் ஓகே சொல்லி தான், நான் மேட்ச்சே போறேன். அப்புறம் எனக்கு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. நீ கவலையே படாத சனு ஆப்போனென்ட்ட என்னை அடிக்கவே விடாம மொத்த அடியையும் நானே கொடுத்திடுறேன்” சொல்லிவிட்டு சிரித்தவனை “டேய் என்ன, என்னை கிண்டல் பண்றீயா. அப்புறம் நான் உங்கிட்ட பேசமாட்டேன் போ” மீண்டும் குழந்தையாக மாறினாள்.
“சரி சரி. பார்த்து நடத்துக்கறேன். ஆனா எனக்கும் அடிகள் விழத்தான் செய்யும். அதெல்லாம் பார்த்தா எப்படி போட்டியில கலந்துக்க முடியும். ஆனா எதுவும் சீரியஸ் ஆக்கிக்காம பார்த்துக்கறேன்” அவளிடம் பேசிக் கொண்டே தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன் “ஆமா இது நீ டான்ஸ் கிளாஸ் போற டைமாச்சே. கிளாஸ் போகாம என்னடி எங்கிட்ட பேசிட்டு இருக்க” சிறுவயதில் நிறுத்திய நாட்டிய வகுப்பிற்கு மறுபடியும் போக சொல்லி ஊக்குவித்து அவளும் சென்றுக் கொண்டிருந்தாள்.
“அது.. நான் போகல”
“ஏன் போகல” இப்போது இவனது குரலில் கண்டிப்பு தெரிந்தது.
“அது கௌதம்.. நான் அந்த சைடு போறப்பயெல்லாம் ரெண்டு பசங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கானுங்க. அதான் இனி போக போறதில்ல” பயத்தில் சொன்னவள் மீது அவனுக்கு கோபம் தான் வந்தது.
“என்னது.. இனி கிளாஸ் போக போறதில்லையா. அவனுங்க அப்படி தான் எதாவது பண்ணிட்டு இருப்பான்னுங்க. ஒண்ணு கண்டுக்காம போயிடனும் இல்ல டாலரேட்டே பண்ண முடியாத அளவுக்கு பண்ணா, கைய மடிச்சி ரெண்டு குத்து குத்துறத விட்டுட்டு டான்ஸ் கிளாஸ் போகமாட்டேனு சொல்ற. நீ கவலைபடாம அடி, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ என் ஆளுன்னு தெரிஞ்சா யாருமே உங்கிட்ட வாலாட்ட மாட்டாங்க”
“என்னடா அடிக்க சொல்ற. எங்க அப்பா யார் வம்புக்கும் போகாதனு சொல்லுவாரு. நீ என்னனா கைய மடக்கி குத்த சொல்ற. நான் என்ன பாக்ஸிங்கா கத்துக்கறேன்”
“இதுக்கு கத்துக்கனுமெல்லாம் ஒண்ணுமில்ல. ஒருத்தன் உங்கிட்ட பிரச்சனை பண்ணா அந்த பிரச்சனைல இருந்து உன் தற்காத்துக்க உனக்கு தெரியணும். உன் டான்ஸ் கிளாஸே மூணு தெரு தள்ளி தான் இருக்கு. அவனுங்க என்ன உங்க ஏரியாவா. நமக்கு தெரிஞ்ச பசங்களா இருந்தா கூப்பிட்டு பேசினா திரும்ப பிரச்சனை பண்ணமாட்டானுங்க”
“ஆமா ஒரு ரௌடிக்கு தானே இன்னொரு ரௌடிய தெரியும்”
“என்னடி கொழுப்பா” அவளை செல்லமாக கடிந்துவிட்டு “சரி, ஒரு நிமிஷம் லைன்ல இரு விக்கிய கான்பெரன்ஸ்ல எடுக்கறேன்” என்று விக்ரமையும் அழைப்பில் இணைத்தவன் “ஹலோ விக்கி என்னடா எதோ ரெண்டுபசங்க என் பேபிய வம்பு பண்றாங்களாமே. அதை என்னனு பாருடா” விக்ரமிடம் கௌதம் சொல்ல
“சொன்னாடா. இன்னைக்கு கொஞ்சம் வேலையா வெளிய வந்திருக்கேன். தர்ஸ்டே போறப்போ நானே கூட இருந்து என்னனு பார்க்கறேன்” விக்ரமுக்கும் இது தெரிந்து தான் இருந்தது. அவர்கள் இருவர் இருக்க அவளுக்கென்ன பயம். ஆனால் கௌதம் அதை அத்தோடு விடவில்லை.
“விக்கி.. திங்கள், புதன், வெள்ளி பாட்டு கிளாஸ் போறா.. செவ்வாய், வியாழன் டான்ஸ் கிளாஸ் போறா.. சனி, ஞாயிறு ஃப்ரீயா தான இருக்கா, கராத்தே கிளாஸ் சேர்த்துவிடு டா”
“ஹான் இல்ல நான் மாட்டேன். நான் என்ன பாட்டு கத்துக்கிட்டு கச்சேரி பண்ணப் போறேனா இல்ல டான்ஸ் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணப் போறேனா. இதுல இந்த கிளாஸுக்கு போக தைரியம் வர கராத்தே வேற கத்துக்கணுமாம்” அதுவரை அமைதியாக கேட்டிருந்தவள் மறுப்பு சொல்ல
“என்ன நீ மாட்டேன். இது பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்க்கு போறதுக்கு மட்டும் இல்ல பொதுவாவே நீ தைரியமா இருக்கனும் சனு”
“ரொம்ப கொடுமை பண்ற கௌதம். வாரத்துல ஏழு நாளும் எதாவது ஒரு கிளாஸ் போக சொன்னா, அப்புறம் வீட்ல உன் மாமியார் சொல்ற வேலைய யார் பார்க்கறது. இதுல இந்த சக்தி வேற ஒயிட் யூனிபார்மை மாடு மாதிரி பிரட்டி எடுத்துட்டு வரான். துவைக்கறதுக்குள்ள கையே விட்டு போயிடுது. அன்னைக்கு என்ன சொன்ன நான் போர்ட்டிங் ஸ்கூல் மாதிரி நடத்துறேனா, அப்ப இதுக்கு பேர் என்ன. எனக்கு என்னமோ நீதான் சர்க்கஸ்ல இருக்க ரிங்க் மாஸ்டர் மாதிரி தெரியற” சீறிக் கொண்டு பதிலளித்தாள்.
அதை கேட்ட கௌதம் “நான் வேணா வாசிங்மெசின் வாங்கி தரவா பேபி” என்று பாசமாக கேட்க, அவளுக்கோ அப்போதும் இந்த வகுப்புகள் வேண்டாமென சொல்லாத கோபத்தில் “எதுக்கு வீட்ல மாட்டவா” என்றவள் “எங்க அவன் நான் உன்னை எதாவது சொன்னா மட்டும், நீ பிரஷர் பண்ற, பிடிச்சி வைக்கறேனு எங்ககிட்ட சண்டை போட வந்திடுவான். இப்ப மட்டும் அமைதியா இருக்கான்” அடுத்து விக்ரமிடம் சீறத் தொடங்கினாள்.
“அவன் உன்னை இம்ப்ரூவைஸ் பண்ணனும்னு செய்யறான். நீ அவன் செஞ்சிட்டு இருக்கறத செய்யாதேனு கட்டுப்பாடு வைக்கற” கௌதமுக்கு பரிந்து விக்ரம் பேச கோபமானவள் “நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க விக்ரம். அப்படி அவன் உனக்கு என்ன செஞ்சிட்டான்னு எப்பவும் அவனுக்கே சப்போர்ட் பண்ற” அவள் விக்ரமிடம் சண்டைப்போட்டு கொண்டிருக்க
“ஏன்டி எங்ககிட்ட இந்த எகிறு எகிறுறியே, அவனுங்ககிட்ட எகிறிருந்தா இப்ப கராத்தே கிளாஸ் போக வேண்டிய வேலை இருந்திருக்காதுல” விக்ரம் அவளிடம் நக்கலாக சொல்லிச் சிரிக்க
“அவங்க பேரு கௌதம் விக்ரமா இருந்திருக்காதுடா. கௌதம் விக்ரம்னு வந்துட்டா சாதாரண சந்தியாலஷ்மி, கோவில்பட்டி வீரலஷ்மியா மாறிடுவா. அதுவும் கௌதம் இன்னும் பாவம்பட்ட ஜென்மம்” என்றவனிடம் அவன் மனது ‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டிருக்கமோ’ என்று வடிவேலு பாணியில் கேள்வியெழுப்ப ‘போவோம் நம்ம சனு தான, என்ன செஞ்சிட போறா’ என்று அதனை அடக்கி, தொடர்ந்து அவளை கேலிச் செய்தான்
“என் சனு, நம்ப ரெண்டுபேருகிட்ட மட்டும் புலி, மத்தவங்களுக்கு எல்லாம் எலி” அவளை சீண்டி பார்ப்பதென்று வந்துவிட்டால் கௌதமும் விக்ரமுடன் சேர்ந்து அவளை அழ வைத்துவிடுவான். இன்றும் சந்தியா கண்ணில் கண்ணீர் தயாராக நின்றிருந்தது.
“ரெண்டுபேரும் ஓவரா பேசறீங்கல, நான் ஃபோன வைக்கறேன்” அழாத குறையாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“சனு சனு.. நான் உன்னை டார்சர் பண்ண சொல்லலைடி. நீ கான்பிடென்ட்டா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணனும். நாளைக்கே நான் உன் கூட இல்லனாலும், நீ பயப்படாம எல்லாத்தையும் தனியா கையாளனும்” கௌதம் சொன்ன அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தாள்.
அவன் எப்படி நான் இல்லையென்றாலும் நீ தைரியமாக இருக்கவேண்டும் என்று சொல்லலாம், அவனுக்கு தெரியவேண்டாமா அவன் இல்லையென்றால் நானில்லை என்று என்ற கோபம் அவளை அவ்வாறு செய்ய வைத்தது.
பாவம் கௌதம் தான் அவள் அழைப்பில் இருப்பதாக நினைத்து “பேபி எங்க சத்தத்தை காணோம். உனக்கு புரியுதா இல்லையா. சனு.. சனு..னு...” திரும்ப திரும்ப அவளை அழைத்துவிட்டு பதில் வராமல் போக, தன்னுடைய கைபேசி திரையைப் பார்த்தவன்
“டேய் அவ கட் பண்ணிட்டு இருக்காடா. சரி, நான் அவளை அப்புறம் சமாதானம் பண்ணிக்கறேன். விக்கி நான் சொன்ன மாதிரி நல்ல கராத்தே கிளாஸ்ஸா பார்த்து சேர்த்துவிடு. ரெண்டு பசங்க கிண்டல் பண்ணதுக்கே டான்ஸ் கிளாஸ் போகலன்னிட்டா. கராத்தே கிளாஸுக்கு கண்டிப்பா கலாட்டா பண்ணுவா. நிறைய சமாளிக்கணும் அவளை” என்றான்.
“கௌதி இது உனக்கே ஆபத்தான விஷயமாச்சேடா. கராத்தே கத்துக்கிட்டு உன்னையே அடிச்சா என்னடா பண்ணுவ” நண்பன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த விக்ரம் நக்கலாக கேட்க
“அவ கராத்தேவே கத்துக்கலனாலும் என்னை அடிப்பாடா” சொல்லிவிட்டு சிரித்தவன் “அவளுக்கு கான்பிடென்ஸ் வரணும் விக்கி” என்றான்.
“ரியலி கௌதி, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளை வேற யாராவது லவ் பண்ணிருந்தா கூட இவ்ளோ அவளுக்காக பார்த்து பார்த்து செய்வாங்களானு தெரியலை. நான் கூட அவளுக்கு பாதுகாப்பா அவக்கூட போவேன், வருவேன், கூடவே இருப்பேன். ஆனா நீ, எப்படி அவ, அவளை தனியா பாதுகாத்துகனும்னு சொல்லித்தர. ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யு டா” விக்ரம் தன் மனதில் இருந்ததை அவனிடம் கொட்டினான்
“உன் சந்துக்காக இத கூட செய்யமாட்டேனா” எதையோ அறிந்தவன் போல் சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தவன் “ஏன்னா அவ என்னோட சனுவும்” என்க, கௌதமின் பேச்சு விக்ரமுக்கு தான் முழுதாக புரியவில்லை. ஏனோ அதன் விளக்கமும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை.
“அப்புறம் கிளாஸ்ல சேர்த்ததும் காசு எவ்ளோனு சொல்லு நான் நேர்ல வரப்போ தரேன்” என்றான்.
ஆம் கௌதம் தான் அவளுக்கு பணம் செலுத்தி, பாட்டு மற்றும் நாட்டிய வகுப்பில் சேர்த்து விட்டிருக்கிறான். அவள் இப்போது வைத்திருக்கும் தொடு கைபேசியும், கால் கொலுசும் அவன் அவளது பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்ததே. ஆனால் அவள் வீட்டை பொறுத்தவரை இவையனைத்தும் விக்ரம் அவளுக்கு செய்வது. அதற்கே முத்துகிருஷ்ணன் சங்கடப்பட்டு, அவ்வப்போது பணம் வரும் நேரமெல்லாம் விக்ரமிடம் கொடுக்கச் சொல்லி சந்தியாவிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார். சந்தியாவிற்கு கௌதம் தான் செய்கிறான் என்று தெரியும் என்பதால், அவனை சந்திக்கும் நேரம் அதை அவனிடமே நேரடியாக தந்து திட்டும் வாங்கியிருக்கிறாள்.
இப்படி அவளை தைரியப்படுத்தி உலகின் முன் தனித்து நிற்க வைத்தவன், அறியாத ஒன்று அவன் வளர்த்த கெடா அவன் மார்பிலே பாயப் போகிறதென்று.
அந்த வருடத்தின் ஓணம் பண்டிகை வந்தது. வழக்கம் போல் அவர்கள் தஞ்சம் புகும் இடமாக விக்ரம் வீடு இருந்தது. கடந்த இரண்டு வருடமாக எப்படியோ அப்படியே தான் இந்த வருடமும் சந்தியா கேரியரில் கட்டி எடுத்து வந்துவிட்டாள்.
விக்ரம் உணவு மேசையில் அமர்ந்திருக்க கௌதம் அப்போதே வந்தான்.
“வா கௌதி. ஹாப்பி ஓணம் மச்சான்” விக்ரம் குறும்பாக சிரித்துக் கொண்டே சொன்னவன் “இப்ப எங்க வீட்ல வந்து சாப்பிடுற. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு எனக்கு ஓணம் சத்யா போடுவீங்களா, இல்ல ரெண்டுபேரும் நீ யாருனு கேப்பிங்களா” என்று அவனை கிண்டலடித்து கேட்க
“அதுக்கென்னடா போட்டுட்டா போச்சு” என்றவன், தன் வெட்கத்தை மறைத்து “சரி எங்க என்னோட ஓமணப் பெண்ணை காணோம். இன்னும் அவளும் அவ தம்பியும் கேரியரை தூக்கிட்டு வரலையா”
“டோன்ட் ஒர்ரி மச்சான். இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னா கிச்சன்ல இருக்க அவளுக்கே கேட்டிடும்”
“டேய் சொல்லமாட்டியா அவ உள்ள இருக்கானு. ஆமா உள்ள என்ன பண்றா”
“தெரியல. எதையோ போட்டு உருட்டிட்டு இருக்கா. என்னை வரக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் போட்டுட்டா” விக்ரம் சொல்லியிருந்த நேரம், சந்தியா சமையல் அறையிலிருந்து வெளியே வரும் சத்தம் கேட்டது.
வெளியே வந்தவளை இமைக்கொட்டாது பார்த்தான் கௌதம். அவள் நிறத்துக்கு அந்த கரும்பச்சை நிற பாவாடை, சட்டை பாந்தமாக இருந்தது. தன்னுடைய நீள கூந்தலை, பக்க வகுடெடுத்து பின்னால் ஒரு சிறிய கிளட்ச் கிளிப்பில் அடக்கியிருக்க, அது அருவி போல் விரிந்திருந்தது. அந்த நீளக் கூந்தலுக்கு சரம் சரமாக மல்லிப்பூவும் வைத்திருந்தாள். அவளது சங்கு கழுத்தில் மெல்லியதாக ஒரு நெக்லஸும் உடன் சார்ட் செயினும் அணிந்திருந்தாள். காதில் அழகான ஜிமிக்கி கம்மல் இருக்க, அது அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தது. இரு கைகளிலும் மெல்லியதாக இரண்டு வளையல்களும் இருந்தது. கண்மையை தவிர முகத்திற்கு வேறெந்த ஒப்பனையுமில்லாமல் அவனது தேவதையாகவே மிளிர்ந்தாள்.
அவளை தலையிலிருந்து பாதம் வரை கண்களால் அளந்தவன் சொக்கித் தான் போனான். இருந்தும் “என்னடா இவ இந்த வருஷமும் பாவாடை சட்டைல இருக்கா. எங்க நிரா கூட இப்போலாம் பாவாடை சட்டை போடுறதில்ல. இன்னும் இவளுக்கு சின்ன பொண்ணுன்னு நினைப்பா” விக்ரமை பார்த்து கௌதம் சொன்னதும் சந்தியாவிற்கு முகமே மாறிப்போனது. கண்களில் கண்ணீர் தயாராக நின்றது.
“இதுக்கு தான் விக்ரம், இவனை கூப்பிடவேண்டாம்னு சொன்னேன். இவன் கல்யாணமாகி அவங்க மாமியார் வீட்டுல போய் ஓணம் சத்யா சாப்பிட்டுக்கட்டும்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்.
“ஏன்டா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா. இதுக்கு தான காலேஜ் கட் அடிச்சிட்டு வந்த” விக்ரம் அவனுக்கு புத்திமதி சொன்னான்.
“பின்ன என்னடா. போன வருஷம் அதுக்கு முந்தன வருஷம் தான் பாவாடை சட்டைனா இந்த வருஷமுமா. எவரி இயர் கலர் தான் மாறுது” விக்ரமிடம் சொல்லிவிட்டு அவளிடம் திரும்பியவன் “வருஷா வருஷம் என்னை கடுப்பேத்தவே, பாவாடை சட்டையில வர்றியா. இதுவே பாவாடை தாவணி போட்டிருந்தா அம்சமா இருந்திருக்கும். அதுக் கூட தலையை சென்டர் வகுடெடுத்து, லூசா சடை பின்னி பூ வச்சிருந்தா அழகா இருந்திருக்கும். கூடவே கையில கண்ணாடி வளையல், கழுத்துல இந்த நெக்லஸ் கூட ஒரு டாலர் செயின் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் தெரியுமா, எங்க கடை ஆட்ல வர ஆக்டரஸ் ஹரிதாவை தூக்கிட்டு உன்னையே போட்டுடலாம்” அவன் சொல்ல சொல்ல, அவளுக்கு வெட்கம் தொற்றிக் கொள்ள தலைகுனிந்தாள் “பார்த்தியா நான் சொன்னதும் நீயே வெட்கப்படற” அவளை கரைக்கும் பார்வை பார்த்து சொன்னான்.
“அப்ப நீயே பாவாடை தாவணி வாங்கி தா” என்றாள் வெட்கம் குறையாமல்.
“கண்டிப்பா வாங்கி தரேன். கூட லாங் செயினும் கண்ணாடி வளையலும் வாங்கி தரேன்” அவன் தன் தேவதையை பாவாடை தாவணியில் பார்க்கவே ஆசைக் கொண்டான். அவளோ அந்த ஆசையை ஓவ்வொரு வருடமும் நிராசை ஆக்கிக் கொண்டு இருந்தாள். அதுவே அவனது கோபத்திற்கு காரணம்.
“லாங் செயினெல்லாம் வேணாம். வீட்டுல கேள்வி கேப்பாங்க. பாவாடை தாவணி மட்டும் போதும்” என்றுவிட்டு, இருவரும் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டிருக்க
“ஹ்ம்ம் ஹ்ம்ம்” கனைத்த விக்ரம் “சரி இப்ப சாப்பிடுவோமா” என்று இடைப்புகுந்தான்.
விக்ரம் மற்றும் கௌதம் உதவியோடு அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்து, வாழை இலையை விரித்து உணவு வகைகளை பரிமாறி, சாப்பிட சொல்லி கண்ஜாடை காட்டினாள்.
“என்ன அவ்ளோ தானா” கௌதம் கேள்வி எழுப்ப
“நீ இத சாப்பிட்டா போதாதா” விக்ரம் மீண்டும் இடைப்புகுந்தான்
“நான் அத சொல்லலைடா. சாப்பாட்ட வச்சா யாரு ஊட்டிவிடுவா” அவளை பார்த்து விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டே கேட்டான்.
“அதெல்லாம் ஒண்ணும் சத்யால கிடையாதே” சந்தியா அவனது குறும்பை அறிந்துச் சொன்னாள்.
“உங்க கேரளால வேணா அது பழக்கமா இல்லாம இருக்கலாம் எங்க தமிழ்நாட்டுல இப்படி இலை நிறைய சாப்பாட்ட போட்டு, காதலோட ஊட்டிவிடுவோம்” அவளது குறும்பு கண்ணன் சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
“டேய் இது என்னடா புது ரூல்ஸா இருக்கு. நான் எதுவும் அப்படி கேள்விபட்டதில்லயே” விக்ரம் சொல்ல
“அவன் ஆந்தரால, அதான் அங்க அந்த பழக்கம் இல்ல போல” அவளிடமிருந்து விழியகற்றாது விக்ரமை திரும்பியும் பார்க்காமல் சொன்னவன் “நான் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்” என்றான் திட்டவட்டமாக.
“வம்பு பண்ணாம ஒழுங்கா சாப்பிடு கௌதம். தோட்டத்துல மாரியப்பன் அண்ணன் வேற இருக்காரு. அச்சாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” அவனை கெஞ்சுதலாக பார்த்துச் சொன்னாள்.
“விக்கி. மாரியப்பன் அண்ணன் தான் பிரச்சனை. அவரை க்ளியர் பண்ணு” என்றான் இம்முறையும் அவளையே பார்த்துக் கொண்டே.
“அட்டகாசம் பண்றடா நீ” சொல்லிக்கொண்டே எழுந்துச் சென்ற விக்ரம், மாரியப்பன் அண்ணன் கையில் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் “ஓகே அண்ணனை க்ளியர் பண்ணிட்டேன். இப்போ நடத்துங்க” கேலியாக கௌதமிடம் சொன்னான்.
“விளையாடாத கௌதம். இங்க நீயும் நானும் மட்டும் இருக்க மாதிரி ஊட்டிவிட சொல்ற” சந்தியாவிற்கு இப்போது கோபம் தான் வந்தது.
“ஓ இவனையும் க்ளியர் பண்ணனுமா” தொடர்ந்து அவளை பார்த்துக் கொண்டே சொன்னான்.
“அடப்பாவி டேய். உனக்கு இந்த சத்யாவே என் புண்ணியத்துல தான் கிடைச்சதுனு மறந்துடாதடா” பரிதாபமாக முகத்தை வைத்து சொன்னான் விக்ரம். கௌதம் அவனை பார்த்தால் தானே நண்பனது பரிதாபம் புரியும், அவன் தான் சந்தியாவையே பார்த்திருந்தானே.
“ஹேய் கேக்கறான்ல. ஊட்டி தொலையேன்டி. அப்புறம் என்னையே எங்க வீட்டை விட்டு துரத்திடுவான் போல” அவன் கஷ்டம் கௌதமுக்கு புரிவதாக தெரியவில்லை, நேரடியாக சந்தியாவிடமே முறையிட்டான்.
“நீ ரொம்ப ஓவரா பண்ற கௌதம்” முறைத்துக் கொண்டே சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். கௌதமோ ஊட்டி விடமாட்டாளா என்று அவள் சென்ற வழியையே ஏக்கத்தோடு பார்க்க, விக்ரமோ இன்று சாப்பிட்டால் போல் தான் என்று தன் இலையை ஏக்கப்பார்வை பார்த்தான்.
சில நிமிடங்களில் வெளியே வந்தவள், கையில் எதையோ மறைத்து எடுத்து வந்து “கண்ணை மூடு” என்றாள்.
அவனும் கேள்வி கேட்காமல் கண்களை மூட கிண்ணத்தில் இருந்ததை ஸ்பூனில் எடுத்து அவன் வாயில் வைக்க, அதை ருசித்தவன் முகத்தில் பூரிப்பு. அவனுக்கு பிடிக்குமென்று கேசரி செய்திருக்கிறாள். அவன் சஸ்பெண்ட்டாகி விக்ரம் வீட்டிற்கு வந்தபோது செய்தாள். அப்போது அவன் சாப்பிடமாட்டேன் என்ற அடத்தில் இருந்தான். அத்தோடு இன்று தான் செய்கிறாள். பலமுறை அவன் செய்து தரும்படி கெஞ்சியும் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவள் சொல்லும் பதில் ‘உனக்கு தான் செஞ்சித் தர உன் அம்மா இருக்காங்களே’ என்பது தான். இன்று அவன் கேட்காமலே செய்திருக்கிறாள். அதை ருசித்தவன் கண்களில் காதலோடு அவளையும் ருசிக்க அந்த பார்வையை தாளமுடியாது தலைக்குனிந்தாள்.
“இத செய்ய தான் கிச்சன்ல போட்டு உருட்டிட்டு இருந்தியா. அது என்னடி ஓணம் சத்யால கேசரிலாமா வருது” விக்ரம் அவளை நக்கலடித்தான்.
“ஏன் பொங்கல் மட்டும் இருந்துச்சா. என் அம்மா உனக்காக செய்யறதில்ல” அவன் கேட்ட அடுத்த நொடி அவளுக்கு பதிலடி கொடுத்தாள்.
“பார்த்தியாடா பதில் எப்படி கன்ஷாட்டா வருது. பண்ணு பண்ணு நீ அவனுக்கு கேசரி பண்ணு, அத அவனுக்கு மடியில உட்கார வச்சு ஊட்டு, என்னவேனா பண்ணு. என்னையும் அப்படி பார்த்துக்க என் மீனுக்குட்டி இருக்காங்க” விக்ரமும் விடாமல் வம்பிழுத்தான்.
“சரி ரெண்டுபேரும் சாப்பிடுங்க” என்று அதட்டினாள்.
“என்னது சாப்பிடறதா. ஊட்டிவிடுனு சொன்னேனா இல்லையா” மறுபடியும் கௌதம் ஆரம்பித்தான்.
“இப்ப ஊட்டிவிட்டேன் தான” சந்தியா குழம்பிப் போய் கேட்க
“எது ஸ்பூன்ல ஊட்டிவிட்டதா. அதெல்லாம் போங்கு ஆட்டம். இதுக்கா நம்ம பையன் மாரியப்பன் அண்ணனை கிளம்பிவிட்டான். இலையில இருக்கறத கையில எடுத்து ஊட்டிவிடு” திட்டவட்டமாக கௌதம் சொல்லவும், சங்கடமாக சந்தியா விக்ரமை கண்களாலேயே காட்ட
“அம்மா தாயே. நான் வேணா கண்ணை மூடிக்கறேன், தயவுசெஞ்சி ஊட்டிவிட்டிடு. இல்லாட்டி என்னையே எங்க வீட்டை விட்டு துரத்துவானாம். அட்ராசிட்டி பண்றீங்க ரெண்டுபேரும்” பொங்கிவிட்டான் விக்ரம்.
விக்ரம் சொன்னபடி கையில் பருப்பு பாயசம் கிண்ணத்தோடு வேறுபக்கம் திரும்பிக் கொண்டு “பார்க்கலை பார்க்கலை ஸ்டார்ட் பண்ணுங்க” என்றான்.
சந்தியா கௌதமுக்கு காதலோடு ஊட்டிவிட்டாள். அவள் கை இலையில் இருந்து ஒன்வொன்றாக எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டது. ஆனால் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தது. கொஞ்சம் ஊட்டிவிட்டவள் விக்ரமை கண்களாலேயே காட்டி, அவன் பாவம் சாப்பிடட்டும் என்றுச் சொல்ல அதை புரிந்த கௌதம் “விக்கி திரும்பி சாப்பிடுடா” என்று கையில் எடுத்து உண்ண ஆரம்பித்தான்.
சாப்பிட்டு கொண்டிருந்தவன் திடீரென்று எதையோ யோசிக்க “என்னாச்சுடா” என்றான் விக்ரம்.
“இந்த ஓணம் சாப்பாடு, அப்புறம் இவளை இந்த பாவாடை சட்டைல பார்க்கறப்போலாம் பக்குனு இருக்கு. எங்கப்பா செல்வராஜ், இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, வீட்டை விட்டு வெளில போடானு சொல்லிடுவாரோனு பகீர்னு ஆகுது” கௌதம் சொன்னதும் சந்தியாவின் முகம் வாடியது. அதைவிட அதிகமாக கௌதம் மனதளவில் வாடியிருப்பதை உணர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து
“ஏன்டா எதாவது பிரச்சனையா” என்று அவனிடம் கேள்வி எழுப்பினாள்.
“பிரச்சனையெல்லாம் இல்ல. ஆனா நிறைய சந்திக்க வேண்டியிருக்கும். ஈசியா ஒத்துக்கவும் செய்யலாம் இல்ல ஒத்துக்காமலும் போகலாம்” என்றான். அவன் அவ்வாறு பேசுபவன் அல்ல. எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பவன். அவன் இப்படி பேசுவது சந்தியாவின் நம்பிக்கையை உடைக்க
“ஏன்டா, உங்க வீட்டுல என்னை ஒத்துக்க மாட்டாங்களா” கண்களில் கண்ணீரோடு கேட்டாள்.
அவள் கண்ணீரை பார்த்தவனுக்கு அவளை கலங்காமல் பார்த்துக் கொள்வது தன் பொறுப்பென தோன்ற “அது எப்படி ஒத்துக்காம போவாங்க. கண்டிப்பா ஒத்துக்குவாங்க” என்றான்.
அவள் மனது இன்னும் கலங்குவதை பார்த்து “உங்க பேமிலில புரட்சி பண்ண மாதிரியெல்லாம் எங்க குடும்பத்துல இதுவரைக்கும் நடந்ததே இல்ல. மாத்தி மாத்தி சொந்தத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிப்பாங்க. ஆனா ஒண்ணும் கவலைப்படாத சனு. நான் எதுக்கு இருக்கேன். நாம பண்ணபோறது தான் புரட்சியே” சிறிதும் அஞ்சாது முகத்தில் சிரிப்புடன் சொன்னவனை இன்னமும் பதற்றம் குறையாமல் பார்த்திருந்தாள்.
“அதான் அவன் பார்த்துக்கறேன்னு சொல்றான்ல. நானும் உங்க கூட தான் இருப்பேன். கவலைப்படக்கூடாது. அப்புறம் கண்ணுல வச்ச மை கரைஞ்சி இறங்கி வந்திடும்” விக்ரம் அவளை சரி செய்ய கேலியை கையிலெடுத்தான். அதை புரிந்த கௌதமும் அவளது பழைய நண்பனாக மாறி அவளை ஓட்ட தொடங்கினான்.
அன்றிலிருந்து கௌதமுக்கு ஓணம் மிகவும் பிடித்த பண்டிகையாகி போனது. அவர்கள் ஒன்றாக இருந்தவரை வருடா வருடம், ஓணம் சத்யாவை சாப்பிட்டு அவளோடு பண்டிகையை கொண்டாட தவறாமல் வந்துவிடுவான். சந்தியா தான் ஊட்டிவிட வேண்டும் என்று வம்பும் செய்து, அவளை ஊட்டிவிடவும் வைப்பான்.
அந்த வீடெங்கும் சிரிப்பும், அரட்டை சத்தமும் நிறைந்திருந்தது. மூவரும் வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு கொண்டிருந்தனர். டிவியில் சத்தமாக பாட்டை ஒலிக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடினர். கௌதம் மனதில் மட்டும் அந்த எண்ணம் இன்னும் அகலவே இல்லை. மனது முழுக்க வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து போக தான் செய்தது. வீட்டில் அவன் அடம் வெற்றிபெறும் என்பது திண்ணம். இருந்தும் இந்த விசயத்தில் எப்படி எடுத்துக் கொள்வார்கள், என்ன செய்வார்கள் என்று புரியாமல் தான் இருந்தான். அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை தந்தை மிகவும் நல்லவர். அவர் இதுவரை யாரிடமும் வித்தியாசம் பார்த்ததில்லை. தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாளையும் தன் குடும்பமாகவே பார்ப்பவர். சிரமமாக இருக்கும், ஆனால் வீட்டில் எப்படியும் சம்மதம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடே இருந்தான்.
உண்மையாகும்..
உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
![www.srikalatamilnovel.com](http://srikalatamilnovel.com/wp-content/uploads/2019/01/fbshare2.png)
நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கருத்து திரி
"என் காதல் பொய்யும் இல்லை" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
![www.srikalatamilnovel.com](http://srikalatamilnovel.com/wp-content/uploads/2019/01/fbshare2.png)