M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 4
ஊட்டியின் இரவு நேர குளிரை இளையராஜாவின் இசையோடு அனுபவித்தபடி மகனுக்கு பால் சுட வைத்து கொண்டிருந்த ஜெயதீபன் "ப்பா..." என்று அவன் இடையை சுரண்டிய மகனின் அழைப்பில் குனிந்தவன் ,
"சொல்லு தேவ்... பசிக்குதா! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல சாப்பிடலாம் ஓகே" என்றான் ஜெயதீபன்.
அதற்கு மறுப்பாய் தலை அசைத்த தேவ் "சாப்பாடு வேணாம். அம்மாட்ட போனும்..." என்று சோகமாய் சொல்ல,
"ஏன் தேவ் குட்டிக்கு அப்பாவை பிடிக்கலையா?" என்ற ஜெயதீபன் தேவேஷ் முன்பு முட்டி போட்டு போதி உக்கார்ந்த நிலையில் கேட்க,
"பிடிக்கும்... ஆனா அம்மாட்ட போனும்" என்ற தேவேஷ் இதழ் கடித்து அழுகைக்கு அச்சாரமிட,
"ஓகே ஓகே.... இப்போ ரொம்ப பனியா இருக்கு மார்னிங் ஆனாதும் போலாம். இப்போ தேவ் குட் பாயா சாப்பிடுவானாம்..." என்று சமாதானம் செய்தபடி தேவேஷை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன்
"உனக்கு முயல் தோசை சுடுவோமா?" என்று கேட்க,
"வேண்டாம். அம்மாட்டா போனும்..." என்றான் மீண்டும். இப்போது குரலில் பிடிவாதமும் சேர்ந்து இருந்தது.
தேவேஷின் பிடிவாதம் ஜெயதீபனுக்கு அவனை பார்த்து போல் இருக்க, வாஞ்சையுடன் அவன் தலை வருடியவன் "இன்னைக்கு ஒரு நாள் அப்பாவோட இரு தேவ். நாளைக்கு கண்டிப்பா அம்மாட்ட போலாம். அப்பா சொன்னா தேவ் கேட்பான் தானே!" என்று கேட்க,
ஜெயதீபனின் பாசமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தேவேஷ் முதலில் ஆமா... என்று தலையசைத்து பின்னை இல்லை என மறுத்து தலை அசைத்தவன், ஜெயதீபன் கெஞ்சலாய் பார்க்கவும் எல்லா பக்கமும் ஆட்டி வைத்தான்.
அதில் ஹாஹா.... என சத்தமாய் வாய்விட்டு சிரித்த ஜெயதீபன் "இத்தனை நாள் உன் அம்மா உன்னை எப்படி சமாளிச்சா?" என்று புன்னகையுடன் கேட்டவன்
"கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல" என்றான் பாவமாய்.
ஜெயதீபனின் பேச்சிலும் அவன் சிரிப்பிலும் லயித்த தேவேஷையும் சிரிப்பு தொற்றி கொள்ள கவலை மறந்து சிரித்தான்.
ஆனால் அப்போதும் அவன் தெளிவில்லாமல் இருக்க "குளிர் அதிகமா இருக்கு தேவ். நாம நாளைக்கு மார்னிங் கண்டிப்பா அம்மாட்ட போலாம். இப்போ அம்மாக்கு போன் போட்டு பேசுவோம். தேவ் குட்டி அம்மாட்ட பேசிட்டே சாப்பிடுவியாம்" என்று மகனை சமாதானம் செய்தவன்,
தேவேஷுடன் பேசி சிரித்தபடியே அவனுக்கு பிடித்த வகையில் நெய் ஊற்றி முறுகலாய் தோசை சுட்டு எடுத்துக்கொண்டவன் மகனையும் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிலுக்கு வந்தான்.
அவனை அமர வைத்து விட்டு "அம்மா நம்பர் சொல்லு தேவ்..." என்று கேட்க,
அவனை ஒரு மாதிரி பார்த்த தேவேஷ் ஒவ்வொரு நம்பராய் அழகாய் சொல்ல, அதை கேட்டு தேவியின் நம்பரை போனில் பதிவு செய்தவன் அவளுக்கு அழைக்க , அழைப்பு செல்லவில்லை.
தேவியின் எண் நெட்வோர்க் கவரேஜ் ஏரியாவிற்கு வெளியே உள்ளது என்று கம்யூட்டர் பதில் குரல் வர,
"அம்மாக்கு கால் ரீச் ஆகலை தேவ்" என ஜெயதீபன் சொல்ல,
அதில் தேவேஷ் மீண்டும் "அம்மாட்ட போனும்..." என்று கூற, ஜெயதீபனுக்கு தேவியின் மேல் கோபம் பெருகிய.
நேற்றைய அவளின் அடக்கப்பட்ட சிரிப்பு எதனால் என்று தேவேஷை அழைத்து வந்த சற்று நேரத்திலேயே ஜெயதீபனுக்கு புரிந்துவிட்டது.
தேவியிடம் சண்டை போட்டு மகனை அழைத்து வந்த ஜெயதீபன் தேவேஷிற்கு பிடித்ததை வாங்கி தர நினைத்து குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ள கடைக்கு அழைத்து சென்று... அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வாங்கி கொடுத்தவன், அடுத்ததாய் அருகில் இருந்த ஐஸ்கீரீஸ் பார்லருக்கு அழைத்து சென்றான்.
முதலில் அவனுக்கு பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டவன், "இது அம்மாக்கு.." என்று கூறி தேவிக்கும் ஒரு பேமிலி பேக் ஐஸ்க்ரீமை வாங்கி கொண்டே கடையில் இருந்து வெளியே வந்தான்.
முதலில் தேவிக்கு என்று சொல்லி அவனுக்கு வாங்கி கொண்டதாக நினைத்த ஜெயதீபனும் அவன் புத்திசாலித்தனத்தை மெச்சி கொண்டான்.
காரில் வரும் போதே ஐஸ்கிரீமை தூக்கி காட்டியவன் "ப்பா... அம்மா ஐஸ்" என்று சொல்ல,
அப்போது அவன் சாப்பிட தான் கேட்கிறான் என்று நினைத்தவன் "நீ சாப்பிடு தேவ். அம்மாவுக்கு வேற வாங்கி தரலாம்" என்றான் ஜெயதீபன்.
அதற்கு மறுத்து தலையசைத்த தேவேஷ் "அம்மாக்கு இருக்கட்டும்" என்று விட,
தேவியின் மீதான் அவனின் பாசதைத்து பார்த்து பூரித்து போனவன் "அம்மா ஊருக்கு போய்ருப்பா தேவ். நீ சாப்பிடு..." என்று சொல்லி விட,
அப்போது ஆரம்பித்தது தேவேஷின் அம்மா புராணம். இன்னும் ஓயவில்லை.
என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் 'அம்மாவிடம் போக வேண்டும்' என்பதே அவன் சொல்லாக இருக்க, ஜெயதீபனுக்கு அவனை சமாதானம் செய்யவும் தெரியவில்லை.
அதே நேரம் அவனை அதட்டி அமைதிப்படுத்தவும் அவன் மனம் இடம் தரவில்லை. இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் அவனை பார்த்திருக்க பார்த்த அன்றே கடிந்து கொள்ள மணம் வரவில்லை அதே நேரம் முதல் காயம் மனதில் ஆழ பதிந்து விடும் என்பதால் பொறுமையாகவே பேசி அமைதி படுத்தினான்.
ஜெயதீபனும் வித விதமாய் பேசி சமாதானம் செய்து பார்க்கிறான் ஆனால் அவன் மகனுக்கு அந்த வார்த்தைகள் போதவில்லை போலும்.
தேவேஷ் தொடர்ந்து அடம் பிடிக்கவும் அவனை முறைத்த தீபன், "அம்மா ஊருக்கு போய்ருப்பாங்க தேவ். வெளிய பனி அதிகமா இருக்கு. இந்த நேரம் வெளிய போனா ஃபீவர் வரும். அப்பறம் உனக்கு ஊசி போடனும். நாம காலையில கண்டிப்பா அம்மாகிட்ட போலாம்" என்றான் ஜெயதீபன் இப்போது கண்டிப்புடன்.
அதில் தேவேஷின் முகம் நொடியில் வாடி விட, தேவியை மனதில் திட்டியபடி மகன் தலையை தடவி கொடுத்தவன்
"தேவ் குட்டிக்கு என்ன எல்லாம் பிடிக்கு சொல்லுங்க... நாளைக்கு நாம போய் வாங்கிட்டு வரலாம். அப்படியே அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு ஊருக்கு போலாம்" என்று உற்ச்சாகமாய் பேசியபடி அவனுக்கு உணவூட்டி முடித்த ஜெயதீபன்,
கொஞ்ச நேரம் மகனுடன் இணைந்து விளையாடினான். சற்று நேரத்தில் தேவேஷ் தூக்கத்தின் பிடிக்கு செல்ல,
மின்மனி பூச்சியாய் இமை மூடி திறந்து கொட்டாவி விட்ட மகனை தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டி கொடுத்தான்.
சற்று நேரம் அமைதியாக அவள் தோள் சாய்ந்திருந்த தேவேஷ் "ப்பா கதை..." என்றான்.
"கதையா....!" என திகைத்த ஜெயதீபன். "என்ன கதை வேணும் தேவ் குட்டிக்கு" என்று மகனிடமே கேட்க
"பிரின்சஸ் கதை" என்றான் மகன்.
"பிரின்சஸ் கதையா? உன் மம்மி எந்த பிரின்சஸ் கதை சொன்னானு தெரியலையே டா" என்ற ஜெயதீபனுக்கு கதை சொல்ல தெரியாது என்பதை விட கதை தெரியாது.
அதில் மகன் வேறு பிரின்சஸ் கதை கேட்க "அப்பா பிரின்ஸ் கதை சொல்லவா... டா" என்று கேட்டவன் மகன் சரி என்று தலையசைக்கவும்
அவன் வாழ்வில் நடந்த விஷயங்களையே கதை போல் மெல்லிய குரலில் ஜெயதீபன் சொல்ல,
சற்று நேரத்தில் "அப்பா லார்ட் கிருஷ்ணா கதை" என்றான் மகன் இன்னும் தூக்கம் பிடிக்கா விழிகளுடன்.
"அவர் லவ்வர் பாய் தானே டா அவர் கதையா வேணும்?" என்ற ஜெயதீபனுக்கு 'என் வாழ்க்கை உனக்கு அவ்வளவு சலிப்பாவாடா இருக்கு' என மனதில் நினைத்தபடி, கதையை கூகிள் சர்ச் செய்து மகனுக்கு கூறினான்.
அதன் பிறகே தேவேஷ் உறங்க, அவனுக்கு தட்டி கொடுத்த தீபனின் மனதை செந்தூரதேவி வியாபித்தாள்.
ஒரு நாளிலேயே மகன் அவனை இத்தனை படுத்தி வைக்க தேவி எப்படி சமாளித்தாள் என வியப்பாக நினைத்தவனுக்கு மனைவியின் நினைவில் மனம் கனிந்து போனது.
ஆனந்தி அவளை வேண்டாம் என ஒதுக்கி விட்டு வந்த பிறகு என்ன துன்பங்களை எல்லாம் அனுபவித்து இருப்பாள்... இந்த சமூதாயம் அவளை எப்படி எல்லாம் பழித்து பேசி இருக்கு... அதை எல்லாம் எப்படி கடந்து வந்தாள்! என ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்தவனுக்கு காலையில் தேவியின் மீதிருந்த கோபம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது.
காலையில் கோபத்தில் பேசி சென்றவளின் முகம் கண் முன்னே விரிய "ரெட் சில்லி.." என்று புன்னகையுடன் கூறி கொண்டவன் மனதை மீண்டும் மீண்டும் தேவியே ஆக்கிரமித்தாள்.
ஸ்வெட்டர் போட்டும் குளிரில் உடல் நடுங்க மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு... அவனிடம் வெடித்தவளை நினைவு கூர்ந்தவன் மனம் தடம் மாறி பயணிக்க போக,
"அடங்கு டா. அவளுக்கு மட்டும் நீ இப்படி யோசிக்கிறது தெரிஞ்சி மிளகாய் கண்ணுல தேய்ச்சி விட்டுடுவா. இன்னும் சரியா பேசவே தொடங்களை அதுக்குள்ள என்ன எல்லாம் யோசிக்குற நீ" என தனக்குள் பேசி கொண்டவன் தலையில் அடித்து கொள்ள போக, அப்போது தான் கையில் இருந்த போனை பார்த்தான்.
முன்பு அழைப்பு செல்லாமல் இருக்க, இப்போது மனதின் உத்துதலில் ஜெயதீபன் அழைப்பு விடுக்க, இந்த முறை அழைப்பு சென்றது.
காலர் டியூனாக கேட்ட "உனக்காக பிறந்தேனே எனதழகா" என்ற பாடல் வரிகள் தீபனின் மனதில் காதல் கலவரத்தை மூட்ட, அதில் சுகமாய் எரிந்தவன் தேவியின் குரல் கேட்க காத்திருந்தான்.
சில நொடிகளில் "ஹலோ.." என்ற தேவியின் குரல் கரகரப்புடன் கேட்க,
"என்ன செய்து?" என்றான் ஜெயதீபன் இயல்பாய் எழுந்த அக்கறையுடன்.
'யாரோ...' என நினைத்து அழைப்பை ஏற்ற தேவி, தீபன் குரல் கேட்கவும் பயம் தனிந்தவளாய்
"என்ன என்ன செய்து?" என்றாள் அவன் கேட்க வருவது புரியாதவளாய்.
"குரல் சரி இல்லையே... ஏன்னு கேட்டேன்" என்று ஜெயதீபன் விளக்க,
"குளிர் ஒத்துக்கலை லைட்டா ப்வர் இருக்கு" என்ற தேவி "எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிங்க" என்று கேட்டாள்.
"தேவ் பேசனும்னு சொன்னான். அதான் கால் பண்ணேன். பட் அவன் இப்போ தூங்கிட்டான்" என்று ஜெயதீபன் சொல்ல,
"இனிமேல் பையனை நான் பார்த்துக்குறேன். உன் வாழ்க்கையை நீ யாருனு சொன்னிங்க! இது தான் நீங்க தந்த சுதந்திரமா?" என்றாள் தேவி சீண்டலாய்.
அவளின் சீண்டல் பேச்சில் கோபம் கொண்ட ஜெயதீபனும் "எப்போட விட்டுட்டு போலாம்னு தான் இருந்த போல!" என்றான் நக்கலாய். ஆனால் குரலில் கோபமே அதிகம் இருக்க
"இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி? எனக்கு தூக்கம் வருது" என்ற தேவி ஜெயதீபனுடனான பேச்சை துண்டிக்க பார்க்க, அதை புரிந்து கொண்ட தீபனின் முகம் கோபத்தில் கடுகடுத்தது.
"திமிரு டி உனக்கு.வேற ஒன்னும் இல்லை" என்றான் ஜெயதீபன் பல்லை கடித்து கொண்டு.
அதற்கு பதில் பேசாமல் தேவி அமைதியாக இருக்க, "என்ன அமைதி ஆகிட்ட? உனக்கு தான் நல்லா பேச வருமே... பேசு..." என்ற ஜெயதீபன் அடக்கிய கோபத்துடன் கூற
"உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? எதுக்கு தேவை இல்லாம கால் பண்ணி சண்டை இழுக்குறிங்க?" என்றாள் தேவியும் கோபமாய்.
"ஏன் உனக்கு புரியலையானா நான் எதுக்கு பேசுறேன்னு?" என்ற ஜெயதீபன் கோபத்தை விடுத்து பொறுமையாக கேட்க,
தேவியிடம் மௌனம்.
"பதில் சொல்லு டி. நான் ஏன் பேசுறேனு புரியலையா?" என்ற ஜெயதீபன் சீற,
"நீங்க நினைச்சதும் சேர்ந்து வாழ்ந்துட முடியாது. முடியாததை..." என்ற தேவியின் பேச்சை இடை வெட்டியது "என்னை கேட்டு தான் நீ என் வாழ்க்கையில வந்தியா?" என்ற ஜெயதீபனின் வார்த்தை.
மீண்டும் தேவி மௌனமாகி போக,
"பதில் சொல்லுடி..." என்றான் தீபன் ஆவேசமாய்.
அவன் கோபத்தில் சற்றே மிரண்ட செந்தூர தேவி "இல்லை.... அது.." என்றவள் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தயங்க,
"இல்லை ரைட்! அதே தான்... இப்பவும். என் வாழ்க்கையில் வரதுக்கு எப்படி நீ என்னை கேட்கலையோ! அதே மாதிரி இப்போ நாம சேர்ந்து வாழவும் உன் முடிவு தேவை இல்லை. ஏன்னா இங்க என் வாழ்க்கையை நம்ம வாழ்க்கைனு மாத்துனதே நீ தான்" என்றான் ஜெய்தீபன் அழுத்தம் திருத்தமாய்.
அவனின் தொடர் பேச்சில் தேவேஷின் தூக்கம் கலைந்து விட, இமை பிரிக்காமலேயே "ம்மா..." என்று அவன் மெல்ல சினுங்க,
"ஓகே.... ஓகே... தூங்குங்க. நாளைக்கு அம்மாட்ட போலாம்" என்று மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.
மகன் தூக்கும் வரை இருவரும் இணைப்பில் அமைதியக இருக்க, தேவேஷ் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும் அவனை பெட்டில் படுக்க வைத்தவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து கார்டனில் நடந்த ஜெயதீபன்
"இப்போ பேசு..." என்றான்.
"என்ன பேச?" என்று தேவி சலிப்புடன் கேட்க,
"இவ்வளவு சலிச்சிக்காத டி. நம்ம வாழ்க்கையே இனிமேல் தான் தொடங்க போகுது" என்ற ஜெயதீபன் கோபத்தை எல்லாம் உதறி விட்டு ஒரு வித இதமான மனநிலையில் பேச,
"ப்ச் இதையே பேசாதிங்க. வேஸ்ட். வேற ஏதும் சொல்லனும்னா சொல்லிட்டு கால் கட்டு பண்ணுங்க" என்றாள் தேவி சிடுசிடுப்புடன்.
அவனுடன் வாழ எங்கி தவித்த நாட்கள் எல்லாம் அவன் எட்டா கனி என்று தலையில் அணி அடித்து உணர்த்தி இருந்தது.
அவளின் காதல் பட்ட மரமாக போய் பல வருடங்கள் ஆகி விட்டது என நினைத்திருந்தவள் இப்போது மீண்டும் புதிதாய் துளிர் விட்டதை எற்க முடியாது தவிக்கிறாள்.
"என்னை என்னடி நினைக்குற நீ. உண்மை தெரியாம நிம்மதியா இருந்தவன் கிட்ட உண்மையை சொல்லிட்டு இப்போ வந்து சேர்ந்து வாழ மாட்டேன்னா என்ன அர்த்தம்?" என்ற ஜெயதீபன்,
"என்னோட சேர்ந்த வாழ மாட்டேன்னு உறுதியா இருக்குறவ உண்மையை சொல்லியே இருக்க கூடாது...." என்றான்.
"தப்பு தான். உரிமை இல்லாம உண்மையை சொல்லி இருக்க கூடாது" என்ற தேவியும் வேதனையும் விரக்தியுமாய் சொல்ல,
அவள் சொல்ல வருவது புரியாத தீபன் "தெளிவா பேசுடி. என்ன உரிமை இல்லை உனக்கு? எங்கிட்ட உனக்கான உரிமையை யார் தரனும்? யூ ஆர் மை வைஃப்" என்று ஜெயதீபன் அழுத்தமாய் சொல்ல,
"இல்லை.... எனக்கு உங்க கிட்ட எந்த உரிமையும் இல்லை. எனக்கு மட்டும் இல்லை தேவ் கூட உங்ககிட்ட உரிமை இல்லை. ஏன்னா நமக்கு டிவோர்ஸ் ஆகிட்டு" என்றாள் செந்தூரதேவி சீற்றமாய்.
தொடரும்...
ஊட்டியின் இரவு நேர குளிரை இளையராஜாவின் இசையோடு அனுபவித்தபடி மகனுக்கு பால் சுட வைத்து கொண்டிருந்த ஜெயதீபன் "ப்பா..." என்று அவன் இடையை சுரண்டிய மகனின் அழைப்பில் குனிந்தவன் ,
"சொல்லு தேவ்... பசிக்குதா! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல சாப்பிடலாம் ஓகே" என்றான் ஜெயதீபன்.
அதற்கு மறுப்பாய் தலை அசைத்த தேவ் "சாப்பாடு வேணாம். அம்மாட்ட போனும்..." என்று சோகமாய் சொல்ல,
"ஏன் தேவ் குட்டிக்கு அப்பாவை பிடிக்கலையா?" என்ற ஜெயதீபன் தேவேஷ் முன்பு முட்டி போட்டு போதி உக்கார்ந்த நிலையில் கேட்க,
"பிடிக்கும்... ஆனா அம்மாட்ட போனும்" என்ற தேவேஷ் இதழ் கடித்து அழுகைக்கு அச்சாரமிட,
"ஓகே ஓகே.... இப்போ ரொம்ப பனியா இருக்கு மார்னிங் ஆனாதும் போலாம். இப்போ தேவ் குட் பாயா சாப்பிடுவானாம்..." என்று சமாதானம் செய்தபடி தேவேஷை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன்
"உனக்கு முயல் தோசை சுடுவோமா?" என்று கேட்க,
"வேண்டாம். அம்மாட்டா போனும்..." என்றான் மீண்டும். இப்போது குரலில் பிடிவாதமும் சேர்ந்து இருந்தது.
தேவேஷின் பிடிவாதம் ஜெயதீபனுக்கு அவனை பார்த்து போல் இருக்க, வாஞ்சையுடன் அவன் தலை வருடியவன் "இன்னைக்கு ஒரு நாள் அப்பாவோட இரு தேவ். நாளைக்கு கண்டிப்பா அம்மாட்ட போலாம். அப்பா சொன்னா தேவ் கேட்பான் தானே!" என்று கேட்க,
ஜெயதீபனின் பாசமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தேவேஷ் முதலில் ஆமா... என்று தலையசைத்து பின்னை இல்லை என மறுத்து தலை அசைத்தவன், ஜெயதீபன் கெஞ்சலாய் பார்க்கவும் எல்லா பக்கமும் ஆட்டி வைத்தான்.
அதில் ஹாஹா.... என சத்தமாய் வாய்விட்டு சிரித்த ஜெயதீபன் "இத்தனை நாள் உன் அம்மா உன்னை எப்படி சமாளிச்சா?" என்று புன்னகையுடன் கேட்டவன்
"கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல" என்றான் பாவமாய்.
ஜெயதீபனின் பேச்சிலும் அவன் சிரிப்பிலும் லயித்த தேவேஷையும் சிரிப்பு தொற்றி கொள்ள கவலை மறந்து சிரித்தான்.
ஆனால் அப்போதும் அவன் தெளிவில்லாமல் இருக்க "குளிர் அதிகமா இருக்கு தேவ். நாம நாளைக்கு மார்னிங் கண்டிப்பா அம்மாட்ட போலாம். இப்போ அம்மாக்கு போன் போட்டு பேசுவோம். தேவ் குட்டி அம்மாட்ட பேசிட்டே சாப்பிடுவியாம்" என்று மகனை சமாதானம் செய்தவன்,
தேவேஷுடன் பேசி சிரித்தபடியே அவனுக்கு பிடித்த வகையில் நெய் ஊற்றி முறுகலாய் தோசை சுட்டு எடுத்துக்கொண்டவன் மகனையும் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிலுக்கு வந்தான்.
அவனை அமர வைத்து விட்டு "அம்மா நம்பர் சொல்லு தேவ்..." என்று கேட்க,
அவனை ஒரு மாதிரி பார்த்த தேவேஷ் ஒவ்வொரு நம்பராய் அழகாய் சொல்ல, அதை கேட்டு தேவியின் நம்பரை போனில் பதிவு செய்தவன் அவளுக்கு அழைக்க , அழைப்பு செல்லவில்லை.
தேவியின் எண் நெட்வோர்க் கவரேஜ் ஏரியாவிற்கு வெளியே உள்ளது என்று கம்யூட்டர் பதில் குரல் வர,
"அம்மாக்கு கால் ரீச் ஆகலை தேவ்" என ஜெயதீபன் சொல்ல,
அதில் தேவேஷ் மீண்டும் "அம்மாட்ட போனும்..." என்று கூற, ஜெயதீபனுக்கு தேவியின் மேல் கோபம் பெருகிய.
நேற்றைய அவளின் அடக்கப்பட்ட சிரிப்பு எதனால் என்று தேவேஷை அழைத்து வந்த சற்று நேரத்திலேயே ஜெயதீபனுக்கு புரிந்துவிட்டது.
தேவியிடம் சண்டை போட்டு மகனை அழைத்து வந்த ஜெயதீபன் தேவேஷிற்கு பிடித்ததை வாங்கி தர நினைத்து குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ள கடைக்கு அழைத்து சென்று... அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வாங்கி கொடுத்தவன், அடுத்ததாய் அருகில் இருந்த ஐஸ்கீரீஸ் பார்லருக்கு அழைத்து சென்றான்.
முதலில் அவனுக்கு பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டவன், "இது அம்மாக்கு.." என்று கூறி தேவிக்கும் ஒரு பேமிலி பேக் ஐஸ்க்ரீமை வாங்கி கொண்டே கடையில் இருந்து வெளியே வந்தான்.
முதலில் தேவிக்கு என்று சொல்லி அவனுக்கு வாங்கி கொண்டதாக நினைத்த ஜெயதீபனும் அவன் புத்திசாலித்தனத்தை மெச்சி கொண்டான்.
காரில் வரும் போதே ஐஸ்கிரீமை தூக்கி காட்டியவன் "ப்பா... அம்மா ஐஸ்" என்று சொல்ல,
அப்போது அவன் சாப்பிட தான் கேட்கிறான் என்று நினைத்தவன் "நீ சாப்பிடு தேவ். அம்மாவுக்கு வேற வாங்கி தரலாம்" என்றான் ஜெயதீபன்.
அதற்கு மறுத்து தலையசைத்த தேவேஷ் "அம்மாக்கு இருக்கட்டும்" என்று விட,
தேவியின் மீதான் அவனின் பாசதைத்து பார்த்து பூரித்து போனவன் "அம்மா ஊருக்கு போய்ருப்பா தேவ். நீ சாப்பிடு..." என்று சொல்லி விட,
அப்போது ஆரம்பித்தது தேவேஷின் அம்மா புராணம். இன்னும் ஓயவில்லை.
என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் 'அம்மாவிடம் போக வேண்டும்' என்பதே அவன் சொல்லாக இருக்க, ஜெயதீபனுக்கு அவனை சமாதானம் செய்யவும் தெரியவில்லை.
அதே நேரம் அவனை அதட்டி அமைதிப்படுத்தவும் அவன் மனம் இடம் தரவில்லை. இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் அவனை பார்த்திருக்க பார்த்த அன்றே கடிந்து கொள்ள மணம் வரவில்லை அதே நேரம் முதல் காயம் மனதில் ஆழ பதிந்து விடும் என்பதால் பொறுமையாகவே பேசி அமைதி படுத்தினான்.
ஜெயதீபனும் வித விதமாய் பேசி சமாதானம் செய்து பார்க்கிறான் ஆனால் அவன் மகனுக்கு அந்த வார்த்தைகள் போதவில்லை போலும்.
தேவேஷ் தொடர்ந்து அடம் பிடிக்கவும் அவனை முறைத்த தீபன், "அம்மா ஊருக்கு போய்ருப்பாங்க தேவ். வெளிய பனி அதிகமா இருக்கு. இந்த நேரம் வெளிய போனா ஃபீவர் வரும். அப்பறம் உனக்கு ஊசி போடனும். நாம காலையில கண்டிப்பா அம்மாகிட்ட போலாம்" என்றான் ஜெயதீபன் இப்போது கண்டிப்புடன்.
அதில் தேவேஷின் முகம் நொடியில் வாடி விட, தேவியை மனதில் திட்டியபடி மகன் தலையை தடவி கொடுத்தவன்
"தேவ் குட்டிக்கு என்ன எல்லாம் பிடிக்கு சொல்லுங்க... நாளைக்கு நாம போய் வாங்கிட்டு வரலாம். அப்படியே அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு ஊருக்கு போலாம்" என்று உற்ச்சாகமாய் பேசியபடி அவனுக்கு உணவூட்டி முடித்த ஜெயதீபன்,
கொஞ்ச நேரம் மகனுடன் இணைந்து விளையாடினான். சற்று நேரத்தில் தேவேஷ் தூக்கத்தின் பிடிக்கு செல்ல,
மின்மனி பூச்சியாய் இமை மூடி திறந்து கொட்டாவி விட்ட மகனை தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டி கொடுத்தான்.
சற்று நேரம் அமைதியாக அவள் தோள் சாய்ந்திருந்த தேவேஷ் "ப்பா கதை..." என்றான்.
"கதையா....!" என திகைத்த ஜெயதீபன். "என்ன கதை வேணும் தேவ் குட்டிக்கு" என்று மகனிடமே கேட்க
"பிரின்சஸ் கதை" என்றான் மகன்.
"பிரின்சஸ் கதையா? உன் மம்மி எந்த பிரின்சஸ் கதை சொன்னானு தெரியலையே டா" என்ற ஜெயதீபனுக்கு கதை சொல்ல தெரியாது என்பதை விட கதை தெரியாது.
அதில் மகன் வேறு பிரின்சஸ் கதை கேட்க "அப்பா பிரின்ஸ் கதை சொல்லவா... டா" என்று கேட்டவன் மகன் சரி என்று தலையசைக்கவும்
அவன் வாழ்வில் நடந்த விஷயங்களையே கதை போல் மெல்லிய குரலில் ஜெயதீபன் சொல்ல,
சற்று நேரத்தில் "அப்பா லார்ட் கிருஷ்ணா கதை" என்றான் மகன் இன்னும் தூக்கம் பிடிக்கா விழிகளுடன்.
"அவர் லவ்வர் பாய் தானே டா அவர் கதையா வேணும்?" என்ற ஜெயதீபனுக்கு 'என் வாழ்க்கை உனக்கு அவ்வளவு சலிப்பாவாடா இருக்கு' என மனதில் நினைத்தபடி, கதையை கூகிள் சர்ச் செய்து மகனுக்கு கூறினான்.
அதன் பிறகே தேவேஷ் உறங்க, அவனுக்கு தட்டி கொடுத்த தீபனின் மனதை செந்தூரதேவி வியாபித்தாள்.
ஒரு நாளிலேயே மகன் அவனை இத்தனை படுத்தி வைக்க தேவி எப்படி சமாளித்தாள் என வியப்பாக நினைத்தவனுக்கு மனைவியின் நினைவில் மனம் கனிந்து போனது.
ஆனந்தி அவளை வேண்டாம் என ஒதுக்கி விட்டு வந்த பிறகு என்ன துன்பங்களை எல்லாம் அனுபவித்து இருப்பாள்... இந்த சமூதாயம் அவளை எப்படி எல்லாம் பழித்து பேசி இருக்கு... அதை எல்லாம் எப்படி கடந்து வந்தாள்! என ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்தவனுக்கு காலையில் தேவியின் மீதிருந்த கோபம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது.
காலையில் கோபத்தில் பேசி சென்றவளின் முகம் கண் முன்னே விரிய "ரெட் சில்லி.." என்று புன்னகையுடன் கூறி கொண்டவன் மனதை மீண்டும் மீண்டும் தேவியே ஆக்கிரமித்தாள்.
ஸ்வெட்டர் போட்டும் குளிரில் உடல் நடுங்க மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு... அவனிடம் வெடித்தவளை நினைவு கூர்ந்தவன் மனம் தடம் மாறி பயணிக்க போக,
"அடங்கு டா. அவளுக்கு மட்டும் நீ இப்படி யோசிக்கிறது தெரிஞ்சி மிளகாய் கண்ணுல தேய்ச்சி விட்டுடுவா. இன்னும் சரியா பேசவே தொடங்களை அதுக்குள்ள என்ன எல்லாம் யோசிக்குற நீ" என தனக்குள் பேசி கொண்டவன் தலையில் அடித்து கொள்ள போக, அப்போது தான் கையில் இருந்த போனை பார்த்தான்.
முன்பு அழைப்பு செல்லாமல் இருக்க, இப்போது மனதின் உத்துதலில் ஜெயதீபன் அழைப்பு விடுக்க, இந்த முறை அழைப்பு சென்றது.
காலர் டியூனாக கேட்ட "உனக்காக பிறந்தேனே எனதழகா" என்ற பாடல் வரிகள் தீபனின் மனதில் காதல் கலவரத்தை மூட்ட, அதில் சுகமாய் எரிந்தவன் தேவியின் குரல் கேட்க காத்திருந்தான்.
சில நொடிகளில் "ஹலோ.." என்ற தேவியின் குரல் கரகரப்புடன் கேட்க,
"என்ன செய்து?" என்றான் ஜெயதீபன் இயல்பாய் எழுந்த அக்கறையுடன்.
'யாரோ...' என நினைத்து அழைப்பை ஏற்ற தேவி, தீபன் குரல் கேட்கவும் பயம் தனிந்தவளாய்
"என்ன என்ன செய்து?" என்றாள் அவன் கேட்க வருவது புரியாதவளாய்.
"குரல் சரி இல்லையே... ஏன்னு கேட்டேன்" என்று ஜெயதீபன் விளக்க,
"குளிர் ஒத்துக்கலை லைட்டா ப்வர் இருக்கு" என்ற தேவி "எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிங்க" என்று கேட்டாள்.
"தேவ் பேசனும்னு சொன்னான். அதான் கால் பண்ணேன். பட் அவன் இப்போ தூங்கிட்டான்" என்று ஜெயதீபன் சொல்ல,
"இனிமேல் பையனை நான் பார்த்துக்குறேன். உன் வாழ்க்கையை நீ யாருனு சொன்னிங்க! இது தான் நீங்க தந்த சுதந்திரமா?" என்றாள் தேவி சீண்டலாய்.
அவளின் சீண்டல் பேச்சில் கோபம் கொண்ட ஜெயதீபனும் "எப்போட விட்டுட்டு போலாம்னு தான் இருந்த போல!" என்றான் நக்கலாய். ஆனால் குரலில் கோபமே அதிகம் இருக்க
"இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி? எனக்கு தூக்கம் வருது" என்ற தேவி ஜெயதீபனுடனான பேச்சை துண்டிக்க பார்க்க, அதை புரிந்து கொண்ட தீபனின் முகம் கோபத்தில் கடுகடுத்தது.
"திமிரு டி உனக்கு.வேற ஒன்னும் இல்லை" என்றான் ஜெயதீபன் பல்லை கடித்து கொண்டு.
அதற்கு பதில் பேசாமல் தேவி அமைதியாக இருக்க, "என்ன அமைதி ஆகிட்ட? உனக்கு தான் நல்லா பேச வருமே... பேசு..." என்ற ஜெயதீபன் அடக்கிய கோபத்துடன் கூற
"உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? எதுக்கு தேவை இல்லாம கால் பண்ணி சண்டை இழுக்குறிங்க?" என்றாள் தேவியும் கோபமாய்.
"ஏன் உனக்கு புரியலையானா நான் எதுக்கு பேசுறேன்னு?" என்ற ஜெயதீபன் கோபத்தை விடுத்து பொறுமையாக கேட்க,
தேவியிடம் மௌனம்.
"பதில் சொல்லு டி. நான் ஏன் பேசுறேனு புரியலையா?" என்ற ஜெயதீபன் சீற,
"நீங்க நினைச்சதும் சேர்ந்து வாழ்ந்துட முடியாது. முடியாததை..." என்ற தேவியின் பேச்சை இடை வெட்டியது "என்னை கேட்டு தான் நீ என் வாழ்க்கையில வந்தியா?" என்ற ஜெயதீபனின் வார்த்தை.
மீண்டும் தேவி மௌனமாகி போக,
"பதில் சொல்லுடி..." என்றான் தீபன் ஆவேசமாய்.
அவன் கோபத்தில் சற்றே மிரண்ட செந்தூர தேவி "இல்லை.... அது.." என்றவள் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தயங்க,
"இல்லை ரைட்! அதே தான்... இப்பவும். என் வாழ்க்கையில் வரதுக்கு எப்படி நீ என்னை கேட்கலையோ! அதே மாதிரி இப்போ நாம சேர்ந்து வாழவும் உன் முடிவு தேவை இல்லை. ஏன்னா இங்க என் வாழ்க்கையை நம்ம வாழ்க்கைனு மாத்துனதே நீ தான்" என்றான் ஜெய்தீபன் அழுத்தம் திருத்தமாய்.
அவனின் தொடர் பேச்சில் தேவேஷின் தூக்கம் கலைந்து விட, இமை பிரிக்காமலேயே "ம்மா..." என்று அவன் மெல்ல சினுங்க,
"ஓகே.... ஓகே... தூங்குங்க. நாளைக்கு அம்மாட்ட போலாம்" என்று மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.
மகன் தூக்கும் வரை இருவரும் இணைப்பில் அமைதியக இருக்க, தேவேஷ் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும் அவனை பெட்டில் படுக்க வைத்தவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து கார்டனில் நடந்த ஜெயதீபன்
"இப்போ பேசு..." என்றான்.
"என்ன பேச?" என்று தேவி சலிப்புடன் கேட்க,
"இவ்வளவு சலிச்சிக்காத டி. நம்ம வாழ்க்கையே இனிமேல் தான் தொடங்க போகுது" என்ற ஜெயதீபன் கோபத்தை எல்லாம் உதறி விட்டு ஒரு வித இதமான மனநிலையில் பேச,
"ப்ச் இதையே பேசாதிங்க. வேஸ்ட். வேற ஏதும் சொல்லனும்னா சொல்லிட்டு கால் கட்டு பண்ணுங்க" என்றாள் தேவி சிடுசிடுப்புடன்.
அவனுடன் வாழ எங்கி தவித்த நாட்கள் எல்லாம் அவன் எட்டா கனி என்று தலையில் அணி அடித்து உணர்த்தி இருந்தது.
அவளின் காதல் பட்ட மரமாக போய் பல வருடங்கள் ஆகி விட்டது என நினைத்திருந்தவள் இப்போது மீண்டும் புதிதாய் துளிர் விட்டதை எற்க முடியாது தவிக்கிறாள்.
"என்னை என்னடி நினைக்குற நீ. உண்மை தெரியாம நிம்மதியா இருந்தவன் கிட்ட உண்மையை சொல்லிட்டு இப்போ வந்து சேர்ந்து வாழ மாட்டேன்னா என்ன அர்த்தம்?" என்ற ஜெயதீபன்,
"என்னோட சேர்ந்த வாழ மாட்டேன்னு உறுதியா இருக்குறவ உண்மையை சொல்லியே இருக்க கூடாது...." என்றான்.
"தப்பு தான். உரிமை இல்லாம உண்மையை சொல்லி இருக்க கூடாது" என்ற தேவியும் வேதனையும் விரக்தியுமாய் சொல்ல,
அவள் சொல்ல வருவது புரியாத தீபன் "தெளிவா பேசுடி. என்ன உரிமை இல்லை உனக்கு? எங்கிட்ட உனக்கான உரிமையை யார் தரனும்? யூ ஆர் மை வைஃப்" என்று ஜெயதீபன் அழுத்தமாய் சொல்ல,
"இல்லை.... எனக்கு உங்க கிட்ட எந்த உரிமையும் இல்லை. எனக்கு மட்டும் இல்லை தேவ் கூட உங்ககிட்ட உரிமை இல்லை. ஏன்னா நமக்கு டிவோர்ஸ் ஆகிட்டு" என்றாள் செந்தூரதேவி சீற்றமாய்.
தொடரும்...