அத்தியாயம்: 1
கீழ் வானில் உதித்த சூரிய கதிர்கள் அந்த கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அவன் முகத்தில் பட, கையை நெற்றியில் பதித்து கண்களை மறைத்தபடி படுத்து இருந்தவனிடம் சிறு சலனமும் இல்லை. ஆனால் மனம் மட்டும் புயலில் சிக்கிய துரும்பேன தவித்து கொண்டிருந்தது.
நடந்ததை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான். அவன் அன்னை இத்தனை பெரிய துரோகத்தை அவனுக்கு அளிப்பார் என்று சிறு துளி கூட யோசித்தது இல்லை. துரோகம் என்பதை விட இரு பெண்களின் பாவத்தை அவன் தலையில் சுமத்த முயன்றார் என்றே சொல்ல வேண்டும்.
அவரும் ஒரு பெண் தானே! ஒரு வளர்ந்த ஆண் மகனின் அன்னை. நல்லது, கெட்டது அறிந்தவர். அவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? என்ற கேள்வியை தாண்டி வெளியே வர முடியவில்லை. தன் அன்னையா இப்படி?! என்ற கேள்வி அவனிடம் எத்தனை முறை எழுந்ததோ கணக்கு இல்லை. ஆனால் உண்மை அவர் செய்ததை முகத்தில் அடித்து கூறி இருக்க, அதை ஏற்க முடியவில்லை.
எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ! அவனின் போன் ஒளி எழுப்ப, கணைகளை திறந்தவன் அவன் எதிர்பார்த்த அழைப்பா என்று பார்த்தான். அழைப்பு அவன் அன்னையிடம் இருந்து என்றதும் எடுத்தாமல் விட, அது சில நொடிகளில் ஓய்ந்து போக, தவறிய அழைப்பு எழுபத்தி எட்டு என்று காட்டியது.
இன்னும் சில எண்களில் இருந்து பல தவறிய அழைப்பு வந்திருக்க அதில் ஒருத்திக்கு மட்டும் அவன் பதில் சொல்லும் கடமை இருந்தது. ஆனால் இப்போது பேசும் நிலையில் இல்லை என்பதால் மீண்டும் பழைய நிலையில் அமர்ந்து விட்டான். ஆனாலும் நீ அவளுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும் எவ்வளவு சீக்கிரம் சொல்கிறாயோ அவ்வளவு நல்லது என்று மூளை அறிவுறுத்தியது.
மீண்டும் அதே எண்ணம். ஏமாற்றம் தாங்காத அவன் மனம் இன்னும் தவித்து கொண்டே இருந்தது. அதுவும் பெற்ற அன்னை செய்த செயல் துளியும் ஏற்ப்புடையதாய் இல்லை.
சூரியன் உச்சிக்கு வரும் வரை அவனின் அதே நிலை தொடர, அவன் எதிர்பார்த்த அழைப்பும் வந்தது.
அதில் இதயம் வெளியே வந்து குதித்து விடுவது போல் துடிக்க அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க பெரிதும் முயன்றபடி அழைப்பை ஏற்றவன் "சொல்லுங்க சுரேஷ் கண்டு பிடிச்சிட்டிங்களா?" என்றான் தவிப்பும் ஆர்வமுமாய்.
அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ! ம் கொட்டி கேட்டு கொண்டவன் "சரி இனிமேல் நான் பார்த்துக்குறேன். உங்க பேமண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல வரும். அப்பறம் நான் சொன்னதையும் செஞ்சிடுங்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். நான் உங்க காலை எதிர் பார்ப்பேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தவன், வாய் வழி சில முறை காற்றை உள்ளிழுத்து ஊதினான்.
அப்படியும் அவன் மனம் சமன் பட மறுக்க, அடங்கா மனதுடன் வாட்ஸ் ஆப் சென்று சுரேஸ் எண்ணில் இருந்து வந்திருந்த போட்டோவை திறந்தான் ஜெயதீபன்.
அதில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் இருக்க. அந்த பெண்ணவளை ஆராய்ந்தது அவன் கண்கள். பச்சையும் வான கலரும் சேர்ந்த கலரில் புடவை கட்டி இருந்தாள். நன்றாக பூசிய உடல்வாகு. வட்ட முகம், சற்று சதை பற்றுடன் கொலு கொலுவென இருந்த கன்னங்களுக்கு இணையான பெருய கண்கள். அடர் புருவம் ஆனால் இந்த காலத்து பெண்கள் போல் அதை திருந்த எந்த முயற்ச்சியும் எடுத்திருக்கவில்லை. அதன் நடுவே சிறிய பொட்டு. அளவான நாசி அதில் வெள்ளை கல் மூக்குத்தி மின்னி கொண்டிருக்க, முகத்தில் அளவான புன்னகை.
அவள் உடல் எடைக்கு ஏற்ப இடை இரண்டு படிப்பாக இருக்க, அதை சிம்மாசனமாய் கொண்டு அமர்ந்து இருந்தான் அவள் மகன். அப்படியே முழுக்க அவன் அன்னையின் ஜாடை, உடல் வாகு மட்டும் தன்னை போலோ என்று நினைத்தவன் பார்வை மீண்டும் அவன் மனைவியிடம் வந்தது.
ஆம் மனைவி தான். நேற்றுவரை அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று தெரியாமலேயே அடுத்த பெண்ணை திருமணம் செய்ய மண்டபம் வரை சென்றவன் கடைசி சில நிமிடங்களில் உண்மையை அறிந்து வெளியேறி இருந்தான்.
போட்டோவை விழி அசைக்காமல் பார்த்தவன் 'இவள் தன் மனைவி' என்று தனக்கு தானே சில முறை சொல்லி மனதில் பதிந்து கொண்டான். அவன் கண்களுக்கு அவள் அழகு, அழகு இல்லை என்பதை எல்லாம் தாண்டி என் மனைவி என்ற எண்ணம் தான் வந்தது.
மீண்டும் ஒரு முறை அவளை கவனித்து பார்த்தவன் ரிவர் வியூ கண்ணாடியில் அவன் முகம் பார்த்தான்.
அகன்ற நெற்றி, அதில் வில்லாய் வளைந்த புருவம், கூர்மையான நாசி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி அவளாய் வெட்டப்பட்ட மீசை, எனக்கு புன்னகையின் முகவரி தெரியும் என்று கூறும் இதழ்கள். ஜெல் வைத்து தூக்கி வாரிய தலைமுடி, ஜிம்மில் ஓர்க்கவுட் செய்து இறுகிய உடல் என பார்க்க ஹிந்தி பட ஹீரோ போல் இருந்தான்.
அதற்கு மேல் கண்ணாடியில் அவன் உருவம் தெரியாமல் போக குனிந்து பார்த்தான். நேற்று இன்னொரு பொண்ணுடன் திருமணத்திற்கு அணிந்த ஷெர்வாணி அவனை பார்த்து சிரித்தது.
"தீப் நாம சேம் கலர்ல் ட்ரெஸ் எடுக்கலாம்" என்று ஹரிதா சொன்னது நினைவு வர, நூல் அளவில் ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்காமல் விலகி இருக்றோம் என்று நினைத்தவனால் அவன் அன்னை மீதான கோபத்தை அடக்க முடியவில்லை.
எத்தனை பெரிய வேலை செய்து இருக்கிறார். எப்படி முடிந்தது? எத்தனை முறை இந்த கேள்வியை தனக்கு தானே கேட்டும் பதிலும் கிடைக்கவில்லை கேள்வியும் அடங்கிவில்லை. மாறாக கோபமும் ஆதங்கமும் தான் பெருகியது.
மீண்டும் குணிந்து தன்னை பார்த்தவன் அதற்கு மேல் அந்த உடையில் இருக்க விருப்பம் இல்லாதவனாய் காரை கிளப்பியவன் அருகில் இருந்த கடைக்கு சென்று டீ சர்ட், ஹார்ட்ஸ்க்கு மாறியவன், அணிந்திருந்த உடையை ஒரு கவரில் போட்டு எடுத்து வந்தவன் ரோட்டோரமாய் இருப்பவரிடம் கொடுத்து விட்டுதான் மீண்டும் காரில் ஏறினான்.
மீண்டும் அந்த போட்டோவை திறந்து அவன் மனைவியையும் அவனையும் பார்த்து கொண்டவன், ஜெல் வைத்திருந்த முடியை கலைத்து ஒரு பக்கமாய் அழுத்தி விட்டு மீண்டும் மனைவி மகனை பார்த்தான்.
அப்போது தான் மகனை நன்றாக கவனித்தவன் அவன் சட்டையில் இருந்த ஐடி கார்டை பார்த்தான். பெயர் ஜெ. தேவேஷ் எல்கேஜி என்று இருக்க, அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிறு புன்னகை ஜெயதீபன் இதழ்களில்.
"சார் இவ்வளவு வளர்ந்துட்டாரா? என் இன்ஷியல் தான் போட்டு இருங்கா, ஆனா என்னை பற்றி சொல்லி இருப்பாளா?" என்று நினைத்தவன் "இவ பெயர் என்ன? பச் அதை கேட்க மறந்துட்டோமே..!" என நினைத்தவன் மீண்டும் சுரேஷிற்கு அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்கும் வரை பொறுமை இல்லாமல் அமர்ந்து இருந்தவன் அவன் எடுத்ததும் "என் வைஃப் பெயர் என்ன சுரேஷ்" என்றான்.
அதில் அழைப்பில் இருந்தவன் ஒரு நொடி திகைத்து பிறகே பதில் சொல்ல,
"ம்... செந்தூர தேவி" என்று தனக்கு தானே உச்சரித்து பார்த்து கொண்டவன், எதிர் பக்கம் ஒருவன் அழைப்பில் இருப்பதே நினைவு இல்லாதவன் போல் அழைப்பை துண்டித்த தீபன் " ஜெயதீபன் செந்தூர தேவி" என்று சொல்லி பார்த்து கொண்டான்.
ஏனோ அவள் பெயரை அவனுக்கு பிடிக்காமல் போக, "பெயரை கூடவாடி மார்டனா வைக்க மாட்ட? பச்..." என்று சலித்து கொண்டான். அதே நேரம் உடனே அவர்களை பார்க்க வேண்டும் போலும் தோன்றியது. ஆனால் நினைத்ததும் சென்று விட முடியாத நிலை.
அப்படியே சென்றாலும் எப்படி போய் நிற்பது. நான் உன் கணவன் என்றா? இல்லை இதுவரை உன்னை யார் என்றே தெரியாது நேற்று தான் நீ என் மனைவி என்று தெரிந்தது என்றா? அப்படி சென்று நின்றாள் கேவலமாய் பார்த்து துரத்தி வட மாட்டாளா? அதுவா அவனுக்கு வேண்டும்? இல்லை.
அவன் தேவை இனிமேல் மச்சம் இருக்கும் அவளுடனான வாழ்க்கை. அதற்கு இந்த அவசரம் வேலை இல்லை. முதலில் அவள் மனநிலை புரிய வேண்டும். தன்னை ஏற்கும் எண்ணம் இருக்கிறதா என்று தெரிய வேண்டும். அதை தெரியாமல் சென்று நிற்பது சரி வராது என்று நினைத்தான்.
மனைவி மகனிடம் செல்லவும் முடியாமல், அன்னையிடம் செல்லவும் பிடிக்காமல் மீண்டும் இடைநிலையில் வந்து நின்றது ஜெயதீபன் மனம்.
ஆம் மீண்டும் அவன் அன்னையிடம் செல்ல படிக்கவில்லை. எத்தனை பெரிய விஷயத்தை மறைத்து இருக்கிறார். அதிலும் செந்தூர தேவி அவன் வாழ்வில் வர அவரே முழு காரணமாய் இருந்து விட்டு, எப்படி இப்படி செய்ய முடியும்.ர? ஒரு பெண்ணின் குணங்களை அவள் கலரும், அழகும் உடல் அமைப்பும் தான் தீர்மானிக்குறதா? எப்படி இப்படி எல்லாம் சிந்திக்திறார்கள்? என்று கோபமாய் நினைத்தான்.
அவள் எண்ணத்தை கலைத்தது மீண்டும் ஹரிதாவிடம் இருந்து வந்த அழைப்பு. அதற்கு மேலும் அவள் அழைப்பை கூட தன் வாழ்வில் நுலைக்க விரும்பாதவன் அழைப்பை ஏற்று "சொல்லுங்க ஹரிதா" என்றான் இறுகிய குரலில்.
அவனுடனான நிச்சயம் நின்றதற்கான காரணம் அவன் அன்னை மூலம் நேற்றே ஹரிதா அறிந்து இருந்தாள். ஆனாலும் ஜெய தீபனிடம், தனக்கான இடம் என்ன என்று அறிய நினைத்தே அவனுக்கு பல முறை முயன்றவளுக்கு அவனின் மரியாதையான பேச்சே பதில் சொல்லி விட,
"நீங்க தான் தீபன் சொல்லலும். என்னை நீங்களும் உங்க அம்மாவும் எங்க நிப்பாட்டி இருக்கிங்க புரியுதா? எனக்கு என்ன பதில் சொல்ல போறிங்க தீபன்" என்று ஹரிதா கோபமாய் கேட்க,
"சாரி ஹரிதா. எனக்கு நடந்த எதுவும் தெரியாது. தெரிஞ்சி இருந்தா இப்படி நடந்து இருக்காது சாரி. இனிமேல் உங்க வாழ்க்கையில என்னோட பார்ட் எதுவும் இருக்காது" என்றான் தீபன்.
அதில் இன்னும் கோபம் கொண்டவள் "இவ்வளவு நாள் தெரியாதது நேற்று மட்டும் எப்படி தெரிஞ்சி தீபன்? என்ன அம்மாவும் பையனும் விளையாடுறிங்காளா? மண்டபம் வரை வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு சாரி கேட்டா முடிச்சி போச்சா?" என்று கேட்க,
"நிஜமாவே இந்த தப்புல என்னோட பங்கு எதுவும் இல்லை ஹரிதா. எனக்கு கல்யாணம் ஆகிட்டுனு தெரிஞ்ச பின்னாடியும் உன்னோட எப்படி அங்க இருக்க முடியும்? அது நான் என்னோட மனைவிக்கு செய்ற தூரோகம் இல்லையா?" என்ற ஜெயதீபன் அவளின் நியாயமான கோபம் புரிந்து பொறுமையாகவே கேட்டான்.
"இவ்வளவு நாள் அந்த மனைவி எங்க போனாங்க தேவ்? இப்போ வரை அவங்க யாருனே தெரியாது. சுய நினைவுல இருக்கும் போது பார்த்தே இருக்காத ஒரு பொண்ணுக்காக, பொம்மை கல்யாணம் மாதிரி நடந்த ஒரு கல்யாணத்துக்காக என்னை வேண்டாம்னு உதறிட்டு போவிங்களா தீபன்?" என்று ஷரிதா சூடாய் கேட்க
"பொம்மை கல்யாணமா? மைன்ட் யூவர் வேட்ஸ் ஷரிதா! கல்யாணத்துல என்ன பொம்மை கல்யாணம் ஹரிதா? என்னை பொறுத்த வரைக்கும் கல்யாணம்குனது இரு மனம் இணையுற புனிதம். அது என் வாழ்க்கையில ஒரு முறை நடந்துட்டு. அதுவும் என் அம்மா ஆசிர்வாதத்தோட. இதுக்கு மேல இன்னொரு பொண்ண என்னால ஏத்துக்க முடியாது. இதுவரைக்கும் வேணும்னா என் மனைவி பற்றி தெரியாம இருந்து இருக்கலாம்.... ஆனா... இப்போ இந்த நொடி அவளை தெரியும். எங்க இருக்கா என்ன பண்றாங்குறது வரை."
"அப்பறம் நீ சொன்ன பொம்மை கல்யாணத்துக்கு சாட்ச்சியா எனக்கு ஒரு பையன் இருக்கான். நான் ராமனா இருக்க நினைகவில்வை ஆனா ராவனனா இருந்துட கூடாதுனு நினைக்குறேன் ஹரிதா. ப்ளீஸ் இனிமேல் எனக்கு போன் கூட பண்ணாதிங்க" என்றவன் அவள் பேச அனுமதி கொடுக்காமல் அழைப்பை துண்டித்து இருந்தான்.
அதன் பிறகே மனதை அழுத்திய கனம் குறையை காரை எடுத்தவன் நேராக சென்று நின்றது அவனது கடையில் தான். அது ஒரு கைவினை பொருட்களின் கிஃப் ஷோ ரூம். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இருந்து இயற்கை பொருட்கள் கொண்டு செய்யப்படும் பொருட்களின் விற்பனைகயம். அந்த கடை அவன் பலநாள் கனவு. இன்று அவனின் விடாமுயற்ச்சியால் கம்பீரமாய் எழுந்து நின்றது தீபன் கிஃப்ட் ஷாப்.
பருத்தியினால் ஆனா உடை, கால் மிதி, வாழை தடையில் செய்யும் பூ, கூடை, ஃநைட் லேம்ப், அழகுற வடிவமைக்கப்பட்ட பீங்கான் குவளைகள், மண்ணால் செய்யப்பட அழகிய வேலைபாடு உடைய கைவினை பொருட்கள், மூங்கினால் செய்யப்பட வீணை, கிட்டார், புல்லாங்குழல், தண்ணீர் பாட்டில், காபி கோப்பை, என பலதரப்பட்ட பொருட்கள் அணிவகுத்து நின்றது.
இங்கு கிஃப்ட் மட்டும் இன்றி மூலிகை பொருட்களும் கிடைக்கும் தேன், ஆவாரம் பூ, கீழா நெல்லி, சித்தரத்தை, பனங்கருப்பட்டி இப்படி எல்லா வகை மூலிகையும் கிடைக்கும்.
எத்தனை மோசமான மனநிலையில் வந்தாலும் இங்கே வந்ததும் ஜெயதீபனின் மனம் காற்றில் பறக்க தொடங்கி விடும். இன்றும் மனதின் வெறுமை சற்று சமன் பட உள்ளே சென்றவனை புன்னகையுடன் தலை அசைத்து கடந்தனர் கடை சிப்பந்திகள். எல்லோருக்கும் வெள்ளை நிற உடையில் சாந்தமாய் இருந்தனர்.
அவனும் புன்னகையடனே தலை அசைத்து அவன் அறைக்கு சென்றவன், மற்றதை எல்லாம் ஒதுக்கி விட்டு வேலையை பார்க்க தொடங்கினான்.
ஒரு வாரம் முன்பு ஆர்டர் கொடுத்திருந்த கொம்பு தேன் இன்னும் வரமாமல் இருக்க, தேன் கொடுப்பவருக்கு அழைத்து பேசினான்.
பேசி முடித்து அடுத்த வேலையை பார்க்க சென்றவன், மனதில் மீண்டும் மனைவியின் முகம். அதை தொடர்ந்து சிறு தவிப்பும். இன்னும் நேரில் கூட பார்க்கவில்லை ஆனாலும் இந்த உணர்வு எப்படி எழுகிறது என்று புரியவில்லை. மனைவி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பவரா? என்று கிண்டலாய் நினைத்தவன் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி கொண்டான். இதழில் இளம் நகை அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டது மகன் மனைவியை நினைத்து.
தொடரும்...