All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எண்ண அலைகள்.......

எண்ணத்தின் அலைகள் எண்ணில் அடங்காது - அதன்
வண்ணத்தின் நிலைகள் உன்னில் அடங்காது!

எண்ணத்தின் வண்ணங்கள்
வாழ்க்கையின் சின்னங்கள் .....!

எண்ணத்தின் அழகில் எல்லாம் அழகு!



இனி வரும் காலம் எண்ணத்தின் ஏட்டில் வண்ணம் தீட்டட்டும்.

இசை மீட்டும் எண்ணத்தில் எதிர்காலம் சிறக்கட்டும்.

எண்ணம் போல் வாழ்க்கை!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவை அறிவோம்......
நினை
உன் நினைவுகள் சுகமானால் மகிழ்ச்சி
நினை
உன் நினைவுகள் சோகமானால் வீழ்ச்சி

பார்
உன் பார்வைகள் சரியானால் மகிழ்ச்சி
பார்
உன் பார்வைகள் பிழையானால் வீழ்ச்சி

கேள்
உன் கேள்விகள் பதிலானால் மகிழ்ச்சி
கேள்
உன் கேள்விகள் அணர்த்தமானால் வீழ்ச்சி

சொல்
உன் சொற்கள் உழியானால் மகிழ்ச்சி
சொல்
உன் சொற்கள் பழுதானால் வீழ்ச்சி

கேட்பதும், பார்ப்பதும், நினைப்பதும், சொல்வதும்
நல்லதாக இருப்பின் - அறிவோம்
மனதிற்கு வீழ்வில்லை.
மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனித நேயம்.......

மனித நேயம் எங்கே?
மனித நேயம் எங்கே?
என்று தேடுகின்றாயா மனிதா!

நடை பாதையில் ஒருவர் மயங்கிவிழும் போது
ஓடிப் போய் கை பிடிக்கின்றானே- அவன்
காட்டவில்லையா மனித நேயத்தை.

மழை வெள்ளத்தில் மற்றவர் தவிக்கும் போது
நீந்திப் போய் கரை சேர்த்தானே - அவன்
உணர்த்தவில்லையா மனித நேயத்தை.

கடும் பஞ்சத்தில் ஊரே மடியும் போது
நாடிப் போய் உணவு கொடுத்தானே - அவன்
ஊட்டவில்லையா மனித நேயத்தை.
இவ்வளவு ஏன்?
நீ பொது இடத்தில் எழுத நினைக்கும் போது
பேனாவை நீட்டுகின்றானே - அவன் கூடவா
சொல்லித்தரவில்லை மனித நேயத்தை.

உனக்கு ஊட்டும் போது காக்கைக்கு உணவிட்ட தாய்,
ஒரு வடை சுட்டவுடன் பறவைகளுக்கு வீசினானே டீ கடைக்காரன்,
தோட்டத்து அணில்களுக்கு கனிகளை பறிக்காமல் விட்ட தோட்டக்காரன்,
சிட்டு குருவிகளுக்கு நெல் மணிகளை தூவினாளே பாட்டி,
இவர்களை விட வேறு யார் மனித நேயத்தை அழகாக கூற முடியும்.

எல்லாரிடமும் மனித நேயம் இருக்கிறது மனிதா.
ஆனால், அதை காட்டத்தான் நேரமில்லாமல் தவிக்கின்றாய் மனிதா.
ஓடி ஓடி களைத்துப் போய் ஒண்டியாய் நிற்கின்றாயே மனிதா?
ஓடி முடிக்கும் போது உனக்கென்று யாருளரோ மனிதா?
நினைத்துப் பார் மனிதா,
மனித நேயத்தை வளர்த்துக்கொள் மனிதா.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளிச்சம்......
காரிருள் சூழ்ந்த வானம் கூட
மழையைப் பொழிந்து, பொழிந்து
பூமியை குளிர செய்கிறது.

கரைபுரண்டு ஒடும் நதி நீர் கூட
மண்ணை நனைத்து, நனைத்து
மரம் செடி கொடிகளை தழைக்க செய்கிறது.

சுழற்றி அடிக்கும் காற்று கூட
காற்றை வீசி, வீசி
ஜீவ ராசிகளை புத்துணர்வு கொள்ள செய்கிறது.

ஏன்?
ஆறு அறிவுள்ள மனிதன் மட்டும்
தான் செல்லும் பாதைகளை
சுத்தம் செய்ய வேண்டாம்.
அசுத்தம் செய்யாமல் இருக்கலாமே?

கற்றவனின் அறிவு கையளவு என்றோம்!
கல்லாதவனின் அறிவு கடலளவு என்றோம்!
கற்றவனும் சரி, கல்லாதவனும் சரி
செல்லும் இடமெங்கும் புறம் பேச மறப்பதில்லை.

புறம் பேசும் மானுடா கேள்!
வேறோரு மூலையில் அதேபோல்
உன்னைப் பற்றியும் புறம் பேச ஆள் இருப்பதை!

புறம் அறமானால்,
நீ மட்டும் அல்ல,
உன் வீடும் , நாடும் உருப்பட்டுவிடும்.
ஆகவே, மானுடர்களே!
புறம் பேசாதீர்!

மன வெளிச்சம்... மன நிம்மதி!

அக வெளிச்சம்... அவன் சன்னதி!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலியுகத் தாய்.......
மகனே-
நீ பிறந்தாய் ,
பூரித்தேன் உன் உருவம் பார்த்து.
நீ சிரித்தாய்,
சிதறினேன் உன் முகம் பார்த்து.
நீ அழுதாய்,
அழுதேன் உன் வலி பார்த்து.
நீ தவழ்ந்தாய்,
தவித்தேன் உன் அறியாமை பார்த்து.
நீ நடந்தாய்,
நெகிழ்ந்தேன் உன் தளிர்னடை பார்த்து.
நீ ஓடினாய்,
ஓய்ந்தேன் உன் வேகம் பார்த்து.
நீ படித்தாய்,
பயின்றேன் உன் வாய்மொழி பார்த்து.
நீ பாடினாய்,
பரவசமானேன் உன் இனிய குரல் பார்த்து.
நீ ஆடினாய்,
அகமகிழ்ந்தேன் உன் நடனம் பார்த்து.
நீ வளர்ந்தாய்,
வியந்தேன் உன் வளர்ச்சி பார்த்து .
நீ மணந்தாய்,
மகிழ்ந்தேன் உன் மணக்கோலம் பார்த்து.
நீ தந்தையானாய்,
திழைத்தேன் உன் மகனை பார்த்து.
நீ இயந்திரமானாய்,
தளர்ந்தேன் உன் சோர்வை பார்த்து.
நீ ஊர் போற்றும் பெரிய மனிதனானாய்,
தனியானேன் உன் உயரம் பார்த்து.
தனிமை மிகவும் கொடுமை!
முதுமையில் தனிமை மிக மிக கொடுமை!
என்பவளே…….

ஒற்றை பிள்ளையை பெற்ற கலியுகத் தாய்!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ யார்......

நானும்
என்றவுடன் வருவது
எனக்கு என்ற உணர்வு.

நீயும் என்றவுடன் வருவது
உனக்கு என்ற உணர்வு.

நானும் நீயும் சேரும் போது
நாமென்றானோம்.

நாம் என்றவுடன் வருவது
நமக்கு என்ற உணர்வு.
பகிர்ந்து கொள் என்ற உணர்வு.
பற்றிக்கொள் என்ற உணர்வு.

உன்னுடையதை பகிர்ந்து கொள் என்று
சொல்லிக் கொடுங்கள் தாயே!
உறவுகளை பற்றிக் கொள் என்று
சொல்லிக் கொடுங்கள் தந்தைகளே!

நாம் என்ற உணர்வை
நாம் உணர்த்த தவறிவிட்டால்,
நாளைய இளம் சமுதாயம்
நம்மையே கேள்வி கேட்கும், நீ யார் என்று
?
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாதனை சாத்தியமா....?

சாதிப்பேன் சாதிப்பேன் என்று சொல்லும் போது
உள்ளத்தில் தோன்றும் உவகை
உனக்கு உத்வேகத்தை கொடுத்தால் நீ சாதிப்பாய்.

என்ன சாதிப்பாய்? எதை சாதிப்பாய்?
முடிவு செய்தாயா? இல்லையா?
எப்போது முடிவெடுக்கப் போகிறாய்?

வேகமாய் முடிவெடு -
ஏனென்றால்
காலம் என்னும் கடிகாரம் யார் தடுத்தும் நிற்காது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓட்டம்.....

அதிகாலை ஓட்டம் - அது
அழகான தோட்டம்!
இளங்காலை ஓட்டம் - அது
இடம் மாறும் காட்டம்!
முன் பகல் ஓட்டம் -அது
முடிவில்லா கூட்டம்!
அந்தி மாலை ஓட்டம் - அது
அமைதியில்லா நாட்டம்!
பின் இரவு ஓட்டம் - அது
பிணை தீர்க்கும் வாட்டம்!
நடுச் சாம ஓட்டம் - அது
நலிவான பாட்டம்!
ஓடி ஓடி ஓய்ந்து போனால் - அது
கலியுகத்தின் ஆட்டம்!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முக லட்சணம்.......
இல்லை முக லட்சணம்
என்பது
வெண்மை நிற அழகில் தெரிகிறதா?

இல்லை முக லட்சணம்
என்பது
கருமை நிற முடியில் தெரிகிறதா?

இல்லை முக லட்சணம்
என்பது
நீல நிற விழியில் தெரிகிறதா?

இல்லவே இல்லை -
முகம் காட்டும் லட்சணம் உன் அகம் சொல்லும் - ஆம்

உன் அகம் சிரித்தால் உன் முகம் சிரிக்கும்
உன் அகம் அழுதால் உன் முகம் அழுகும்
நீயே முடிவு செய் உன் முக லட்சணத்தை
அகத்தை சந்தோசமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்.

எல்லா வீட்டிலும் பிரச்சனை உண்டு
எல்லா இடத்திலும் பிரச்சனை உண்டு
நீயே முடிவு செய் உன் பிரச்சனைகளை
மனத்தை பிரச்சனைகளை எதிர் கொள்ள பழக்கிக்கொள்.


நீ நிச்சயம் வென்றுவிடுவாயடா!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல்.....

வயதாகையிலே
பூக்களும் வாடுதே ஓர் நாளிலே!
ஈக்களும் சாகுதே சில நாளிலே!

ஓவியமும் மங்கியதே சில ஆண்டிலே!
காகிதமும் கசங்கியதே சில ஆண்டிலே!

பெருமைகளும் ஒழிந்ததே நூற்றாண்டிலே!
பசுமைகளும் அழிந்ததே நூற்றாண்டிலே!

வறுமைகளும் குறையவில்லை பல்லாண்டிலே!
சிறுமைகளும் குறையவில்லை பல்லாண்டிலே!

காதலே!
உனக்கு மட்டும் அழிவில்லை புவிவாழ்விலே!

எப்படி இது சாத்தியம் என்கிறாயா?

ஊரிலும், உலகிலும்,
வீட்டிலும், நாட்டிலும்,
ஏட்டிலும், எழுத்திலும்,
அகத்திலும், புறத்திலும்
எங்கும், எதிலும்

நுழைந்திட்ட உன்னை ரசிக்கத்தான் முடிகிறது, வெறுக்க முடியவில்லை.
 
Top