Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணங்கு பெண் துன்பம்
முந்நீர் கடல்
இந்த கதையும் கதை மாந்தர்களும் சீனதேசத்தை சார்ந்தது. பதினேழாம் நூற்றாண்டு இறுதி பதினெட்டாவது நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டது
அந்தி சூரியன் கடலுள் முழ்கி கொண்டிருந்தான். அதனால் தானோ என்னவோ தனது பொன்னிற மேலாடை
கடல் மேல் மிதக்க அவன் ஆழியினுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். நாளை மீண்டும் பூமியின் பல்லாயிரக்கான பூக்களில் செய்த பூந்துகில் தனக்கு தினமும்
கிடைப்பதால் வந்த அலட்சியம் தானோ இல்லை .பரவை அவள் மீதான போதையில் மெல்ல தன் நிலை மறந்தவனானோ
என்னவோ அவன் ஆடை ஆழியில் மிதப்பதை பற்றி கவலை கொள்ளாமல் அவளுள் புதைந்து போனான்.
இவர்கள் நிலை கண்ட புள்ளினங்கள் தன் பேடை தேடி இல்லம் திரும்பத் துவங்கியிருந்தன. அந்த படகில் அமர்ந்து இருந்தாள் .
சிங்சௌ (Ching- Cabable Chu - Pearl)
கருநிறத்தில் காற்சட்டை மேல்சட்டை தலை மூங்கில் போன்ற புல்லில் வேய்த தொப்பி அணிந்திருந்தாள். தூண்டிலில் இருந்து மீன்களை எடுத்து அருகில் இருந்த கூடையில் போட்டவள் இப்போது அந்த வேலையை விட்டு விட்டு தண்ணீரில் துள்ளிக் கொண்டு இருந்த டால்பின்லில் கண்களை பதித்தாள். என்றாலும் அவளது கவனம் நினைவு வேறு இடத்தில் இருந்தது என்பதை இல்லாத இரையை போடுவதாக ஆட்டிக் கொண்டிருந்த கரம் காட்டிக் கொடுத்தது.
"நேரம் சென்று கொண்டிருக்கிறது வீடு திரும்புவோமா? சௌ" என்று கேட்ட அந்த மூதாட்டியின குரலில் திரும்பியவள் ம் என்பதாக தலையை ஆட்டவும் படகு வீட்டினை நோக்கி சென்றது. படகில் இருந்து கீழே கம்புகளை ஊன்றி பலகைகளை கொண்டு கட்டம்பட்ட அந்த வீட்டினுள் ஏறியவள் . மீண்டும் ஒரு முறை அந்த இடத்தை கண்களால் அளந்தாள். அவள் நின்றிருந்த அந்த வீடு மட்டுமல்ல அந்த கிராமமே நீரில் மிதந்து கொண்டிருந்தது.
தென் சீனக் கடல் பகுதியின் குவாங்டேங் மாகாணத்தில் கடலின் மீது மிதக்கும் டாங்கா இன மக்களின் கிராமம் அது.
நீரில் பிறந்து நீரில் வாழும் மீன்களை போல
இவர்களும் நீரில் பிறந்து நீரில் வாழ்பவர்கள் இவர்களில் நிலத்தில் கால் பதியாமலே இறந்தவர்கள் ஏராளம். ஆண்கள் வயிற்று பிழைப்புக்கு வலைவிரித்த வீட்டில் இருந்த பெண்கள் போர்த்துகீசிய ஆங்கிலேயர் மற்றும் கடற் கொள்ளையரால் விபச்சாரிகளாக வற்புறுத்தப்பட்ட 1700களின் இறுதி 1800 களின் துவக்க காலம் அது.
சில நிமிடம் நின்று பார்த்தவள் வீட்டின் உள்ளே செல்ல திரும்பி நடந்தாள். இருள் லேசாக கவியத் தொடங்கியிருக்க அந்த படகு வீடுகளில் லாந்தர் விளக்கு எரியத் துவங்கியிருந்தது. உள்ளே நுழையும் முன் ஒரு கரம் பற்றியிழுக்க அடுத்த நிமிடம் அவளது வாள் அவன் கழுத்தின் அருகில் இருந்தது.
அவளின் வேகத்திற்கு மற்றொர்வனாக இருந்தால் இந்நேரம் அவன் உயிரோடு இருக்க மாட்டான் அதை அவனும் அறிவான் ஆகையால்தான் தன் வாளால் அதைத் தடுத்து இருந்தான் .
இறக்கி அவனை உற்றுப் பார்த்தவள் கண்களில் மெல்லிய கோபம் வர வாளை வீச அவன் அதை அனாயாசமாக தடுத்தான்.
சௌ என்ன நினைத்தாளோ
"போ (Bao) எத்தனை முறை கேட்டாலும் என் பதில் அதான் . ஆதாலால் மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே இதுபோல் பொறுமை எனக்கு எப்போதும் இருக்காது."
என அதை செவிமடுத்தவன் முகத்தில் லேசான புன்னகை விரக்தியில் வந்ததோ.
இப்போது அவளைத் தடுத்த தன் வாளை இறக்கினான். சோர்ந்த கரங்களுடன் உள்ளே வைப்பதை பார்த்தவளுக்கு துயரம் கவிழ்ந்தது அவள் தனது வாளை இறக்க கூட நினைவு இன்றி அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் விழியிலும் அவள்தான் இருந்தாள். எப்படியாவது தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாளா எனும் அவனின் மறுகலும் மன்றாடலும் அதன் வழி தெரிய அதைக் கண்டவளுக்கு சரியென்று தலையசைத்துவிடுவோமோ எனும் பயம் வர விழிகளை மூடிக்கொண்டாள். அவனால் தான் இளகுவதை உணர்ந்தும் தனது இலட்சியம் எது என்பதையும் தனது கட்டப்பட்ட சூழ்நிலையும் புரிய திரும்பி நின்று கொண்டவள்
"என்னை மன்னித்து விடு போ. எனது இலட்சியம் அது என் காதலை விட முக்கியம்"
ஆனால் அதன் பின்புலத்தில் தானும் இருப்பது அவனுக்கு தெரிந்துதான் இருந்ததோ. எதுவும் செய்ய இயலாது கைகட்டி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது இயலாமை நிலையை வெறுத்தவன் ஆத்திரம் மிக அருகில் இருந்த பீங்கான் சாடியில் தனது ஆத்திரத்தை காட்ட அது உடைந்து துண்டுகளானது . அதில் ஒன்று அவனது கரத்தை பதம் பார்த்தது.
"போ " என்றவள் அவன் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து சென்றவள் அவனை அமரவைத்துவிட்டு உள்ளே வெந்நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தாள்.அவளுடன் மருந்து பெட்டியை மற்றோர் பெண்ணும் எடுத்துவந்தாள்.
" மருந்து பெட்டியை வைத்துவிட்டு செல்" என்றதில் அவள் அவசரமாக அவனை ஆராய்வதை விடுத்து மருந்து பெட்டியை வைத்துவிட்டு வெளியே சென்றாள். அதன்
பிறகு கதவை தாளிட்டு வந்தவள்.
வெந்நீர் பாத்திரத்தை அருகில் இருந்த முக்காலியில் வைத்து விட்டு பருத்தி துணியை வெந்நீரில் முக்கி பிழிந்து காயத்தை துடைப்பதற்காக அவன் கரத்தை பிடிக்க அவனோ வெடுக்கென்று இழுத்துக் கொண்டவன் எழந்து கொள்ள. அவள் மீண்டும் அவன் தோளை அழுத்த
ஸ் ... என்றான் வலி தாங்காது .இத்தனை நேரம் அவன் முகம் மறைத்து வைத்திருந்த வேதனையை அவள் கை அழுத்தியதில் விலகிவிட மீண்டும் அவன் கொணர்ந்த இறுக்கம் பயனற்று போனது.
அவனது மேல் உடையை கழற்றுவதற்காக கை வைக்க அவளது கரத்தை பிடித்துக் கொண்டவன்
"வேண்டாம் சௌ எனது இந்த காயங்களுக்கு மருந்திடாதே இது இந்த மனம் போல் அதுவும் காயத்தோடே இருக்கட்டும். இல்லை எனில் இரண்டும் உன்னை நாடும் சித்திரவதைக்கு இந்த ரணங்களின் வாதை பரவாயில்லை."
அவளோ
"போ என்னைப் பார்" என்றாள். அவளைப் பார்த்தவன் மனம் அவள் வழி செல்ல மெல்ல அவன் கரு நிற மேலாடையை கழற்றியவள் அதிர்ந்து போனாள். உள்ளே இருந்த வெண்ணிற பருத்தி ஆடை முழுவதும் இரத்தில் தோய்ந்து செந்நிறமாகி இருந்தது. அதை மெல்ல அவிழ்க்க அது காய்ந்து காயங்களுடன் ஒட்டியிருந்ததிலேயே இது இப்போது ஏற்ப்பட்டதில்லை என்பது தெளிவாகப் புரிய
பேசாமல் வெந்நீரில் துணியை முக்கி பிழிந்து அதை வைத்து காயங்களை துடைத்தாள். வலித்தாலும் பொறுமையாக இருந்தவன் அடுத்து அவள் மருந்துக் குப்பியை கையில் எடுக்க அவளது கரத்தை பிடித்து இழுத்ததில் சௌ அவன் மடியில் இருந்தாள். ஆவேசமாக நெருக்கி அவளை அனைத்துக் கொண்டான்.
"சௌ எனது காயங்களின் காரணமும் மருந்தும் நீ தான் எடுத்துக் கொள்ள வா ப
என்ற அவனை அவள் மறுக்கவும் இல்லை விலகவும் இல்லை.
" இன்று வரை நான் உனது மட்டும்தான் போ"
என்பதை இதழ் பிரியாமல் அவன் கரங்களுக்கு தன்னை ஒப்படைத்து நின்றவளின் செய்கையில் அவளது சம்மதத்தை புரிந்து கொண்டவன் அவளை கரங்களில் ஏந்திக் கொண்டான். மிக அழகாக விரிக்கப்பட்ட மஞ்சத்தில் நுழைந்தான்.
அந்த பூக்களின் விடுதியில் மதுவும் மாதுவும் தாரளமாய்த்தான் கிடைத்தது. ஒரு பக்கம் சூதாட்டம் வேறு மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் தனது தேவையை தீர்த்துக் கொண்டிருந்த அந்த வியட்நாமிய வீரனிடம் தனக்கு தேவையானதை பெற்றுக் கொண்ட ஆன் எனும் பெயர் கொண்ட அவள் அவன் மயங்கி சரிந்ததும் அவனை விட்டு விலகியவள் பின் கட்டுக்கு விரைந்தாள்.
"சௌ" என அவள் அழைக்க பணியாள் ஒருவன் "தலைவி உள்ளறையில் " என அவளது சயன அறையை காட்ட அதனுள் நுழைய அனுமதி தனக்கு இல்லை என்பதை அறிந்தவளாதலால் "புழு கிடைத்து விட்டது."
என்று மட்டும் சௌ விடம் கூறு . மற்ற விவரங்களை நான் பிறகு கூறிக்கொள்கிறேன்.என்றவள் திரும்பும் முன் அந்த பணியாளரின் தலை வெட்டப்பட்டிருந்தது. இவளது ஆடையின் நுனியை தனது வாளின் இரத்தத்தை துடைத்தபடி வந்த சௌ
"என்ன விஷயம் ஆன் ?" என்று அருகில் இருந்த நாற்காலியில் அமரந்தாள் சௌ அந்த விடுதியின் தலைவி. ஆன் என்ற அந்த பெண்னோ தன் கண்முன் நிகழ்ந்ததை கண்டு பயந்து போய் இருக்க
"என்ன அவன் எப்படி எதற்கு இறந்தான் எனத் தெரிய வேண்டுமா ?"
அவள் கேட்ட விதத்தில் அடுத்து தன் நிலை இதுவாக வாய்ப்பு உண்டு என்பது புரிய திக்கி தினறி வந்த விஷயத்தை கூறிவிட்டு தன்னறைக்கு ஓடினாள். அதில் புன்னகைத்தபடி எழுந்தவள்.
"நான் எங்கு இருக்கிறேன் என்ன நினைக்கிறேன் என்ன செய்கிறேன் என்னை என் அனுமதியின்றி பிறர் அறிவது எனக்கு பிடிக்காது என்பதை உன்னை அனுப்பியவனுக்கு எத்தனை முறை கூறுவது முட்டாள்"
என்று இறந்துகிடந்தவனிடம் கூறியவள்
"யாரங்கே என்றதும் ஓடிவந்தவர்களிடம் இவனை உப்பு நீரில் நனைத்து வாசலில் இரண்டு தினங்கள் தொங்கவிடுங்கள் பிறகு கடலுக்குள் வீசுங்கள்"
என்றவள் எழுந்து சென்று விட்டாள்.
முந்நீர் கடல்
இந்த கதையும் கதை மாந்தர்களும் சீனதேசத்தை சார்ந்தது. பதினேழாம் நூற்றாண்டு இறுதி பதினெட்டாவது நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டது
அந்தி சூரியன் கடலுள் முழ்கி கொண்டிருந்தான். அதனால் தானோ என்னவோ தனது பொன்னிற மேலாடை
கடல் மேல் மிதக்க அவன் ஆழியினுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். நாளை மீண்டும் பூமியின் பல்லாயிரக்கான பூக்களில் செய்த பூந்துகில் தனக்கு தினமும்
கிடைப்பதால் வந்த அலட்சியம் தானோ இல்லை .பரவை அவள் மீதான போதையில் மெல்ல தன் நிலை மறந்தவனானோ
என்னவோ அவன் ஆடை ஆழியில் மிதப்பதை பற்றி கவலை கொள்ளாமல் அவளுள் புதைந்து போனான்.
இவர்கள் நிலை கண்ட புள்ளினங்கள் தன் பேடை தேடி இல்லம் திரும்பத் துவங்கியிருந்தன. அந்த படகில் அமர்ந்து இருந்தாள் .
சிங்சௌ (Ching- Cabable Chu - Pearl)
கருநிறத்தில் காற்சட்டை மேல்சட்டை தலை மூங்கில் போன்ற புல்லில் வேய்த தொப்பி அணிந்திருந்தாள். தூண்டிலில் இருந்து மீன்களை எடுத்து அருகில் இருந்த கூடையில் போட்டவள் இப்போது அந்த வேலையை விட்டு விட்டு தண்ணீரில் துள்ளிக் கொண்டு இருந்த டால்பின்லில் கண்களை பதித்தாள். என்றாலும் அவளது கவனம் நினைவு வேறு இடத்தில் இருந்தது என்பதை இல்லாத இரையை போடுவதாக ஆட்டிக் கொண்டிருந்த கரம் காட்டிக் கொடுத்தது.
"நேரம் சென்று கொண்டிருக்கிறது வீடு திரும்புவோமா? சௌ" என்று கேட்ட அந்த மூதாட்டியின குரலில் திரும்பியவள் ம் என்பதாக தலையை ஆட்டவும் படகு வீட்டினை நோக்கி சென்றது. படகில் இருந்து கீழே கம்புகளை ஊன்றி பலகைகளை கொண்டு கட்டம்பட்ட அந்த வீட்டினுள் ஏறியவள் . மீண்டும் ஒரு முறை அந்த இடத்தை கண்களால் அளந்தாள். அவள் நின்றிருந்த அந்த வீடு மட்டுமல்ல அந்த கிராமமே நீரில் மிதந்து கொண்டிருந்தது.
தென் சீனக் கடல் பகுதியின் குவாங்டேங் மாகாணத்தில் கடலின் மீது மிதக்கும் டாங்கா இன மக்களின் கிராமம் அது.
நீரில் பிறந்து நீரில் வாழும் மீன்களை போல
இவர்களும் நீரில் பிறந்து நீரில் வாழ்பவர்கள் இவர்களில் நிலத்தில் கால் பதியாமலே இறந்தவர்கள் ஏராளம். ஆண்கள் வயிற்று பிழைப்புக்கு வலைவிரித்த வீட்டில் இருந்த பெண்கள் போர்த்துகீசிய ஆங்கிலேயர் மற்றும் கடற் கொள்ளையரால் விபச்சாரிகளாக வற்புறுத்தப்பட்ட 1700களின் இறுதி 1800 களின் துவக்க காலம் அது.
சில நிமிடம் நின்று பார்த்தவள் வீட்டின் உள்ளே செல்ல திரும்பி நடந்தாள். இருள் லேசாக கவியத் தொடங்கியிருக்க அந்த படகு வீடுகளில் லாந்தர் விளக்கு எரியத் துவங்கியிருந்தது. உள்ளே நுழையும் முன் ஒரு கரம் பற்றியிழுக்க அடுத்த நிமிடம் அவளது வாள் அவன் கழுத்தின் அருகில் இருந்தது.
அவளின் வேகத்திற்கு மற்றொர்வனாக இருந்தால் இந்நேரம் அவன் உயிரோடு இருக்க மாட்டான் அதை அவனும் அறிவான் ஆகையால்தான் தன் வாளால் அதைத் தடுத்து இருந்தான் .
இறக்கி அவனை உற்றுப் பார்த்தவள் கண்களில் மெல்லிய கோபம் வர வாளை வீச அவன் அதை அனாயாசமாக தடுத்தான்.
சௌ என்ன நினைத்தாளோ
"போ (Bao) எத்தனை முறை கேட்டாலும் என் பதில் அதான் . ஆதாலால் மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே இதுபோல் பொறுமை எனக்கு எப்போதும் இருக்காது."
என அதை செவிமடுத்தவன் முகத்தில் லேசான புன்னகை விரக்தியில் வந்ததோ.
இப்போது அவளைத் தடுத்த தன் வாளை இறக்கினான். சோர்ந்த கரங்களுடன் உள்ளே வைப்பதை பார்த்தவளுக்கு துயரம் கவிழ்ந்தது அவள் தனது வாளை இறக்க கூட நினைவு இன்றி அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் விழியிலும் அவள்தான் இருந்தாள். எப்படியாவது தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாளா எனும் அவனின் மறுகலும் மன்றாடலும் அதன் வழி தெரிய அதைக் கண்டவளுக்கு சரியென்று தலையசைத்துவிடுவோமோ எனும் பயம் வர விழிகளை மூடிக்கொண்டாள். அவனால் தான் இளகுவதை உணர்ந்தும் தனது இலட்சியம் எது என்பதையும் தனது கட்டப்பட்ட சூழ்நிலையும் புரிய திரும்பி நின்று கொண்டவள்
"என்னை மன்னித்து விடு போ. எனது இலட்சியம் அது என் காதலை விட முக்கியம்"
ஆனால் அதன் பின்புலத்தில் தானும் இருப்பது அவனுக்கு தெரிந்துதான் இருந்ததோ. எதுவும் செய்ய இயலாது கைகட்டி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது இயலாமை நிலையை வெறுத்தவன் ஆத்திரம் மிக அருகில் இருந்த பீங்கான் சாடியில் தனது ஆத்திரத்தை காட்ட அது உடைந்து துண்டுகளானது . அதில் ஒன்று அவனது கரத்தை பதம் பார்த்தது.
"போ " என்றவள் அவன் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து சென்றவள் அவனை அமரவைத்துவிட்டு உள்ளே வெந்நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தாள்.அவளுடன் மருந்து பெட்டியை மற்றோர் பெண்ணும் எடுத்துவந்தாள்.
" மருந்து பெட்டியை வைத்துவிட்டு செல்" என்றதில் அவள் அவசரமாக அவனை ஆராய்வதை விடுத்து மருந்து பெட்டியை வைத்துவிட்டு வெளியே சென்றாள். அதன்
பிறகு கதவை தாளிட்டு வந்தவள்.
வெந்நீர் பாத்திரத்தை அருகில் இருந்த முக்காலியில் வைத்து விட்டு பருத்தி துணியை வெந்நீரில் முக்கி பிழிந்து காயத்தை துடைப்பதற்காக அவன் கரத்தை பிடிக்க அவனோ வெடுக்கென்று இழுத்துக் கொண்டவன் எழந்து கொள்ள. அவள் மீண்டும் அவன் தோளை அழுத்த
ஸ் ... என்றான் வலி தாங்காது .இத்தனை நேரம் அவன் முகம் மறைத்து வைத்திருந்த வேதனையை அவள் கை அழுத்தியதில் விலகிவிட மீண்டும் அவன் கொணர்ந்த இறுக்கம் பயனற்று போனது.
அவனது மேல் உடையை கழற்றுவதற்காக கை வைக்க அவளது கரத்தை பிடித்துக் கொண்டவன்
"வேண்டாம் சௌ எனது இந்த காயங்களுக்கு மருந்திடாதே இது இந்த மனம் போல் அதுவும் காயத்தோடே இருக்கட்டும். இல்லை எனில் இரண்டும் உன்னை நாடும் சித்திரவதைக்கு இந்த ரணங்களின் வாதை பரவாயில்லை."
அவளோ
"போ என்னைப் பார்" என்றாள். அவளைப் பார்த்தவன் மனம் அவள் வழி செல்ல மெல்ல அவன் கரு நிற மேலாடையை கழற்றியவள் அதிர்ந்து போனாள். உள்ளே இருந்த வெண்ணிற பருத்தி ஆடை முழுவதும் இரத்தில் தோய்ந்து செந்நிறமாகி இருந்தது. அதை மெல்ல அவிழ்க்க அது காய்ந்து காயங்களுடன் ஒட்டியிருந்ததிலேயே இது இப்போது ஏற்ப்பட்டதில்லை என்பது தெளிவாகப் புரிய
பேசாமல் வெந்நீரில் துணியை முக்கி பிழிந்து அதை வைத்து காயங்களை துடைத்தாள். வலித்தாலும் பொறுமையாக இருந்தவன் அடுத்து அவள் மருந்துக் குப்பியை கையில் எடுக்க அவளது கரத்தை பிடித்து இழுத்ததில் சௌ அவன் மடியில் இருந்தாள். ஆவேசமாக நெருக்கி அவளை அனைத்துக் கொண்டான்.
"சௌ எனது காயங்களின் காரணமும் மருந்தும் நீ தான் எடுத்துக் கொள்ள வா ப
என்ற அவனை அவள் மறுக்கவும் இல்லை விலகவும் இல்லை.
" இன்று வரை நான் உனது மட்டும்தான் போ"
என்பதை இதழ் பிரியாமல் அவன் கரங்களுக்கு தன்னை ஒப்படைத்து நின்றவளின் செய்கையில் அவளது சம்மதத்தை புரிந்து கொண்டவன் அவளை கரங்களில் ஏந்திக் கொண்டான். மிக அழகாக விரிக்கப்பட்ட மஞ்சத்தில் நுழைந்தான்.
அந்த பூக்களின் விடுதியில் மதுவும் மாதுவும் தாரளமாய்த்தான் கிடைத்தது. ஒரு பக்கம் சூதாட்டம் வேறு மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் தனது தேவையை தீர்த்துக் கொண்டிருந்த அந்த வியட்நாமிய வீரனிடம் தனக்கு தேவையானதை பெற்றுக் கொண்ட ஆன் எனும் பெயர் கொண்ட அவள் அவன் மயங்கி சரிந்ததும் அவனை விட்டு விலகியவள் பின் கட்டுக்கு விரைந்தாள்.
"சௌ" என அவள் அழைக்க பணியாள் ஒருவன் "தலைவி உள்ளறையில் " என அவளது சயன அறையை காட்ட அதனுள் நுழைய அனுமதி தனக்கு இல்லை என்பதை அறிந்தவளாதலால் "புழு கிடைத்து விட்டது."
என்று மட்டும் சௌ விடம் கூறு . மற்ற விவரங்களை நான் பிறகு கூறிக்கொள்கிறேன்.என்றவள் திரும்பும் முன் அந்த பணியாளரின் தலை வெட்டப்பட்டிருந்தது. இவளது ஆடையின் நுனியை தனது வாளின் இரத்தத்தை துடைத்தபடி வந்த சௌ
"என்ன விஷயம் ஆன் ?" என்று அருகில் இருந்த நாற்காலியில் அமரந்தாள் சௌ அந்த விடுதியின் தலைவி. ஆன் என்ற அந்த பெண்னோ தன் கண்முன் நிகழ்ந்ததை கண்டு பயந்து போய் இருக்க
"என்ன அவன் எப்படி எதற்கு இறந்தான் எனத் தெரிய வேண்டுமா ?"
அவள் கேட்ட விதத்தில் அடுத்து தன் நிலை இதுவாக வாய்ப்பு உண்டு என்பது புரிய திக்கி தினறி வந்த விஷயத்தை கூறிவிட்டு தன்னறைக்கு ஓடினாள். அதில் புன்னகைத்தபடி எழுந்தவள்.
"நான் எங்கு இருக்கிறேன் என்ன நினைக்கிறேன் என்ன செய்கிறேன் என்னை என் அனுமதியின்றி பிறர் அறிவது எனக்கு பிடிக்காது என்பதை உன்னை அனுப்பியவனுக்கு எத்தனை முறை கூறுவது முட்டாள்"
என்று இறந்துகிடந்தவனிடம் கூறியவள்
"யாரங்கே என்றதும் ஓடிவந்தவர்களிடம் இவனை உப்பு நீரில் நனைத்து வாசலில் இரண்டு தினங்கள் தொங்கவிடுங்கள் பிறகு கடலுக்குள் வீசுங்கள்"
என்றவள் எழுந்து சென்று விட்டாள்.