ஶ்ரீகலா
Administrator
அத்தியாயம் : 5
உதயரேகா அந்தத் தொண்டு நிறுவனத்தின் வாயிற்கதவை திறந்ததும் அத்தனை நாய்கள் எங்கே இருந்து தான் ஓடி வந்ததோ! சொல்லி வைத்தார் போன்று அனைத்தும் வேகமாகப் பாய்ந்தோடி வந்து அவளது காலடியில் நல்ல பிள்ளை போன்று வாலை ஆட்டி கொண்டிருந்தது. அதில் சேட்டை பிடித்த வீரன் மட்டும் அவள் மீது துள்ளி குதித்து அவளை வரவேற்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
"ஹேய், வீரா... என்னைய தேடினியா?" என்று அவள் கேட்க... அவன் ஆமென்பது போல் வாலை ஆட்டினான்.
அதற்குள் அங்கு வேலை பார்க்கும் சேகர் அங்கு வந்து அவளைக் கண்டு சிநேகமாகப் புன்னகைத்தார்.
"வாம்மா, உனக்காகத் தான் எல்லாம் குளிக்காம காத்துக்கிட்டு இருக்கு. நாங்க குளிக்கக் கூப்பிட்டாலும் வராம அடம்பிடிக்குதுங்க. அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டியோ தெரியலை." அவர் சலித்துக் கொள்வது போல் பேசினாலும் அதில் அதிகம் சந்தோசம் இருந்தது. இந்தக் காலத்தில் யார் இந்த ஐந்தறிவு ஜீவன்கள் மீதுஇந்தளவிற்கு அக்கறை, பாசம் காட்டுகிறார்கள். அதனாலேயே அவருக்கு உதயரேகா மீது சற்றுப் பிரமிப்பு கலந்த பாசம் தான்.
"அண்ணா, நீங்க அவங்க கூடப் பேசி பழகுங்க. அப்போ தான் அவங்க உங்க கூடவும் ஈசியா பழகுவாங்க." உதயரேகா வீரனை தடவி கொடுத்தபடி புன்னகைத்தாள். கன்று குட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும் வீரன் அவளிடம் மட்டும் பூனை குட்டி போன்று பதுங்கி நின்றான்.
"என்னமோம்மா, நானும் இத்தனை வருசமா இங்கே வேலை செய்றேன். எனக்கு இன்னும் இதுங்க பாசை புரிய மாட்டேங்குது. நீ உன் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்க போறேன்." சேகர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
உதயரேகா எல்லா நாய்களையும் குளிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். நாய்களுக்கு என்று தனியே சோப், ஷாம்பூ எல்லாம் இருந்தது. அதை வைத்து அவள் நாய்களைக் குளிக்க வைத்து கொண்டிருந்தாள். அவள் அதைச் செய்யும் போது அவளது முகத்தில் அத்தனை சந்தோசம் தெரிந்தது. அவள் நாய்கள் அனைத்தையும் குளிக்க வைத்து அவைகளுக்கு உணவு வைக்க... அவைகளும் வாலை ஆட்டி கொண்டு உண்ண ஆரம்பித்தது. இதை எல்லாம் அவள் தாயின் வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
உதயரேகா இங்கே வந்து சேர்ந்து ஒரு மாத காலமாகி விட்டது சர்வேஸ்வரன் தான் அவளை 'ப்ளூ கிராஸ்' நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் தான் இந்தத் தொண்டு நிறுவனத்தையும் பார்த்துக் கொடுத்தது. அவர்களின் வீடு இருந்த பகுதியில் வெகு அருகாமையில் இது இருந்தது. அதே போன்று அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பார்த்து கொள்வதற்காகத் தினமும் மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணி வரை அவளுக்கு என்று நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தான். மந்தாகினி முணுமுணுத்த போதும் அது எல்லாம் மகனின் முன் எடுபடாது போனது. அதைவிட உதயரேகா அனைத்து வேலைகளையும் முடித்து விட்டே செல்வதால் அவரால் ஒன்றும் கூற முடியவில்லை.
மதிய உணவு நேரம் முடிந்ததும் பட்டம்மாளை உறங்க அனுப்பி விட்டு உதயரேகா கிளம்பி இங்கே வந்து விடுவாள். இங்கு வரும் முன்னரே மாலை நேர சிற்றுண்டிக்கு தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டே வருவாள். அப்போது தான் அவள் அங்குச் சென்றதும் காபி, சிற்றுண்டி செய்ய நேரம் சரியாக இருக்கும். அவள் தனது பணியைச் செவ்வனே செய்வதால் யாரும் ஒரு குறையும் காண முடியாது போயிற்று. தனக்காகச் சலுகைகள் கொடுக்கும் சர்வேஸ்வரனுக்குத் தன்னால் எந்தத் தலைகுனிவும் வந்துவிடக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
"ரேகா, அங்கே ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். வா, வந்து பார்." சேகர் வந்து அழைக்கவும்... உதயரேகா முகம் மலர அவருடன் இணைந்து நடந்தாள்.
ஜூலி மக்களைப் பெற்ற சோர்வில் படுத்திருக்க... அதன் அருகே அதன் குட்டிகள் ஆறும் படுத்திருந்தது. பழுப்பு, வெள்ளை, கருப்பு, பழுப்பும் வெள்ளையும், கருப்பும் வெள்ளையும், பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஆறு நாய்க்குட்டிகளும் இருந்தது. பட்டு போன்ற தேகத்துடன் விழிகளை மூடியபடி இருந்த குட்டி நாய்களைக் காண காண உதயரேகாவுக்குத் தெவிட்டவில்லை. அவள் தனது அலைப்பேசியில் அவைகளைப் புகைப்படம் எடுத்து கொண்டாள்.
மாலை ஐந்தானதும் உதயரேகா வீட்டிற்குக் கிளம்பினாள். வீடு வந்து சேர்ந்ததும் அவள் முதல் வேலையாகத் தான் வாங்கி வந்த சாக்லேட்டை மீனம்மாள், பட்டம்மாளுக்குக் கொடுத்தாள். அவர்கள் ஏனென்று கேட்க... நாய்க்குட்டி பிறந்ததை அவள் சந்தோசத்துடன் சொன்னாள். அவளது மகிழ்ச்சி கண்டு அவர்களும் மகிழ்ந்தனர். அதன் பிறகு அவளை வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டது. வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தாள். அவளது கைகள் அதுபாட்டிற்கு வேலை செய்தாலும் அவளது விழிகள் சர்வேஸ்வரனை தான் எதிர்பார்த்தது.
உதயரேகா எதிர்பார்த்தது போன்று சர்வேஸ்வரன் வீடு வந்து சேர்ந்தான். அவன் அறைக்குச் சென்று முகம் கழுவி, உடை மாற்றி விட்டுப் பால்கனியில் வந்து அமர்ந்த போது மிகச் சரியாக உதயரேகா அறை கதவினை தட்டினாள். அவன் உள்ளே வர அனுமதி கொடுத்ததும் அவள் காபி, சிற்றுண்டியோடு உள்ளே நுழைந்தாள். பால்கனிக்கு வந்த உதயரேகா அவனிடம் காபியை நீட்டினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை வாங்கிப் பருகலானான்.
"என்ன ரொம்பச் சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு?" அவளது முகத்தை வைத்தே அவளது மனதினை அவன் கண்டுபிடித்து விட்டான்.
"ஆமா பிரின்ஸ். இன்னைக்கு ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். எத்தனை தெரியுமா? மொத்தம் ஆறு..." அவள் உற்சாகமாகக் கைவிரல் ஆறினை அவனிடம் காட்டினாள்.
"இரு, இரு... யார் அந்த ஜூலி?" அவன் புரியாது கேட்டான்.
"ஜூலி... அந்தத் தொண்டு நிறுவனத்தில் வளரும் நாய்..." அவள் எடுத்து சொல்ல...
"ஓ, எஸ், எஸ்... ஏற்கெனவே சொல்லி இருக்கல்ல. மறந்துட்டேன்." என்று கூறி அவன் புன்னகைக்க... அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
"அப்புறம் இன்னைக்கு என்ன பண்ணின?" அவன் கேட்டதும் தாமதம் அவள் மடை திறந்த வெள்ளமாய்ப் பேச ஆரம்பித்தாள்.
அவனுக்குத் தெரியும், அவள் வேறு எதுவாக இருந்தாலும் அவனிடம் வாயை திறக்க மாட்டாள். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பற்றி அவனிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டவில்லை. ஏனெனில் அவன் தானே அவளுக்கு இந்த வழி காட்டி விட்டது. அதனால் வந்த நன்றியுணர்வு இது...
கீழே நின்றிருந்த பரணி மேலே பால்கனியில் இருந்த இருவரையும் பார்த்திருந்தான். உதயரேகா பாவனையுடன் சொல்லும் கதைகளைச் சர்வேஸ்வரன் புன்னகையுடன் கேட்டு கொண்டிருப்பதைக் கண்டு அவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. வெகு சீக்கிரமே தனது வீட்டாருடன் வந்து பட்டம்மாளிடம் பேச வேண்டும் என்று அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவு எடுத்த பின்பே அவன் அங்கிருந்து அகன்றான்.
"இந்தா..." சர்வேஸ்வரன் காலி காபி கோப்பை மற்றும் சிற்றுண்டி தட்டை உதயரேகாவிடம் கொடுத்தான்.
"அச்சோ, இவ்வளவு நேரமாவா பேசிக்கிட்டு இருந்தேன்." அதை வாங்கியபடி அவள் அவசரமாகச் சென்றவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் அவன் முன் வந்து நின்றாள்.
"இப்போது என்னவாம்?" அவனது புன்னகை விரிந்தது.
"சாக்லேட்..." என்றவள் தனது கையில் மறைத்து வைத்திருந்த சாக்லேட்டை நீட்டினாள்.
"எதுக்கு?"
"நாய்க்குட்டி பிறந்ததுக்கு..." என்றவளை கண்டு அவனது புன்னகை மேலும் விரிந்தது.
"இங்கே மனுசனுக்குப் பிறந்தநாள் கொண்டாடவே ஆளில்லாது இருக்கு. ஆனா நீ நாய்க்கு கொண்டாடுற..." அவன் வாய் அவளை வம்பிழுத்தாலும் அவனது கை சாக்லேட்டை எடுத்துக் கொண்டது. அதைக் கண்டு முகம் மலர்ந்தவளாய் அவள் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றாள்.
சர்வேஸ்வரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது புன்னகை முகம் மெல்ல மெல்ல வில்லத்தனத்திற்கு மாறியது. உதயரேகா பரணியுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் நாய்களுக்கு உணவு வைக்கும் சாக்கில் பரணி தினமும் அவளோடு சுற்றுவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் அடுத்த இரண்டாவது நாள் உதயரேகாவை அங்கே செல்வதைத் தடுத்து விட்டான். அவள் ஏனென்று கேட்டதற்கு...
"அந்தக் காலி மனையோட உரிமையாளர் எனக்கு ஃபோன் பண்ணி சத்தம் போடுறார். நீ தினமும் வைக்கும் சாப்பாட்டிற்காக அங்கு வரும் நாய்களாலும், பூனைகளாலும் அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களுக்குத் தொந்தரவா இருக்கிறதாம். அவங்க எல்லாம் அவருக்கு ஃபோன் போட்டுச் சத்தம் போட்டு இருக்காங்க. அவர் என்னடான்னா என்னைப் பிடித்துத் திட்டுகிறார். எல்லாம் உன்னால்..." என்று அவன் அவளைக் கடுமையாகச் சாடினான். அதைக் கேட்டு அவளுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
"என்னால தான் நீங்க திட்டு வாங்கி இருக்கீங்க. என்னைய மன்னிச்சிருங்க பிரின்ஸ். என்னைய மன்னிச்சிருங்க. இனி இப்படிப் பண்ண மாட்டேன்." அவள் அழுது கரைய... ஏனோ அவளது கண்ணீர் கூட அவனுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.
என்ன தான் அவளைச் சாடினாலும் மறுநாளே அவன் அவளை 'ப்ளூ கிராஸ்'இல் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் அவளுக்கு நல்லதும் செய்தான், தீமையும் செய்தான். நன்மையோ, தீமையோ எதுவாக இருந்தாலும் அவளுக்கு அவன் மட்டுமே செய்ய வேண்டும். அதில் அவன் உறுதியாக இருந்தான்.
*********************************
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பாட்டி." உதயரேகா பட்டம்மாள் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாள். இன்று அவருக்கு எழுபதாவது பிறந்தநாள்.
"ஒவ்வொரு வருசமும் ஒரு வயசு கூடுது. இதுக்குப் போய் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கியே." பட்டம்மாள் பேத்தியை கண்டு கேட்டார். பின்னே அவரது பேத்தி பாட்டிக்காகப் பட்டுப்புடவை வாங்கி வைத்திருக்கிறாளே.
"இருக்கட்டுமே... என்னோட பாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கிறேன். முதல்ல புதுப் புடவை கட்டுங்க. நாம கோவிலுக்குப் போயிட்டு வந்திரலாம். இன்னைக்குப் பெரிய வீட்டில் யாரும் இல்லை. பெரியம்மாவும், பிரின்சும் தான் இருக்காங்க. அதனால் பிரச்சினை இல்லை." அவள் அவரை அவரசப்படுத்தினாள்.
"பட்டு..." வாசலில் நின்றபடி மீனம்மாள் குரல் கொடுத்தார்.
"உள்ளே வாங்க பெரியம்மா." உதயரேகா வெளியில் வந்து அவரை வரவேற்க...
"வாங்க மீனாம்மா..." என்று பட்டம்மாளும் வரவேற்றார்.
"வர்றேன், வர்றேன்..." என்றபடி உள்ள வந்த மீனம்மாள் பட்டம்மாளை அணைத்துக் கொண்டு,
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பட்டு." என்று தனது வாழ்த்தினைச் சொல்லிவிட்டு பட்டம்மாளுக்கு அழகிய ஸ்படிக மாலையைப் பரிசாக அளித்தார். பட்டம்மாள் அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார்.
"ரொம்ப நன்றி மீனாம்மா. ரேகா தான் சின்னப் புள்ளை மாதிரி நடந்துக்கிறாள்ன்னா... நீங்களுமா?" பட்டம்மாள் அழகாய் வெட்கப்பட்டார்.
"இந்த வயதில் ஆரோக்கியமா வாழ கொடுப்பினை வேண்டும். அது நமக்குக் கிடைச்சிருக்கு. அதனால் நம்ம பிறந்தநாளை கோலாகலமா கொண்டாடலாம் தப்பில்லை." என்றபடி மீனம்மாள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
அதற்குள் உதயரேகா அவருக்குக் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அதைப் பருகியவாறு மீனம்மாள், "பட்டு, நீ போய்க் கிளம்பி வா. உன்னோட பிறந்தநாளுக்கு நான் புரோக்ராம் பண்ணிட்டேன்." என்று உற்சாகமாகச் சொல்ல...
"என்ன புரோக்ராம் பெரியம்மா?" உதயரேகா ஆர்வத்துடன் கேட்க... மீனம்மாள் அவளிடம் விளக்கி சொல்ல... இருவரையும் சிரித்தபடி பார்த்த பட்டம்மாள் அறைக்குள் சென்றார்.
பட்டம்மாள் கிளம்பி வந்ததும் மூவரும் வீட்டின் முன் வாசலுக்கு வந்தனர். அங்குச் சர்வேஸ்வரன் அவர்களுக்காகக் காத்திருந்தான். பட்டம்மாளை கண்டதும் அவனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவன் பின்பு அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். பிறகு அவன் அவருக்காக வாங்கி வந்திருந்த பரிசினை அவரிடம் கொடுத்தான். அதி உயர்தரப் பேரீச்சம்பழங்கள் அடங்கிய பெட்டி அது. பேரீச்சம்பழம் என்றால் பட்டம்மாளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவன் அதையே அவருக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்திருந்தான். அவர் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டார்.
"இது மீனுக்குட்டிக்கு..." என்றபடி அவன் மற்றொரு பெட்டியை தனது பாட்டியிடம் நீட்டினான். அவருக்கும் பேரீச்சம்பழம் பிடிக்கும். மீனம்மாள் சந்தோசத்துடன் பேரனை அணைத்துக் கொண்டார்.
"உங்களுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கு." என்று பாட்டியிடம் சொன்னவன் உதயரேகா புறம் திரும்பி, "பெரியவங்க ரெண்டு பேரும் பத்திரம்." என்று அவளுக்கு அறிவுறுத்திவிட்டு கிளம்பி சென்று விட்டான்.
உதயரேகா அந்தத் தொண்டு நிறுவனத்தின் வாயிற்கதவை திறந்ததும் அத்தனை நாய்கள் எங்கே இருந்து தான் ஓடி வந்ததோ! சொல்லி வைத்தார் போன்று அனைத்தும் வேகமாகப் பாய்ந்தோடி வந்து அவளது காலடியில் நல்ல பிள்ளை போன்று வாலை ஆட்டி கொண்டிருந்தது. அதில் சேட்டை பிடித்த வீரன் மட்டும் அவள் மீது துள்ளி குதித்து அவளை வரவேற்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
"ஹேய், வீரா... என்னைய தேடினியா?" என்று அவள் கேட்க... அவன் ஆமென்பது போல் வாலை ஆட்டினான்.
அதற்குள் அங்கு வேலை பார்க்கும் சேகர் அங்கு வந்து அவளைக் கண்டு சிநேகமாகப் புன்னகைத்தார்.
"வாம்மா, உனக்காகத் தான் எல்லாம் குளிக்காம காத்துக்கிட்டு இருக்கு. நாங்க குளிக்கக் கூப்பிட்டாலும் வராம அடம்பிடிக்குதுங்க. அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டியோ தெரியலை." அவர் சலித்துக் கொள்வது போல் பேசினாலும் அதில் அதிகம் சந்தோசம் இருந்தது. இந்தக் காலத்தில் யார் இந்த ஐந்தறிவு ஜீவன்கள் மீதுஇந்தளவிற்கு அக்கறை, பாசம் காட்டுகிறார்கள். அதனாலேயே அவருக்கு உதயரேகா மீது சற்றுப் பிரமிப்பு கலந்த பாசம் தான்.
"அண்ணா, நீங்க அவங்க கூடப் பேசி பழகுங்க. அப்போ தான் அவங்க உங்க கூடவும் ஈசியா பழகுவாங்க." உதயரேகா வீரனை தடவி கொடுத்தபடி புன்னகைத்தாள். கன்று குட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும் வீரன் அவளிடம் மட்டும் பூனை குட்டி போன்று பதுங்கி நின்றான்.
"என்னமோம்மா, நானும் இத்தனை வருசமா இங்கே வேலை செய்றேன். எனக்கு இன்னும் இதுங்க பாசை புரிய மாட்டேங்குது. நீ உன் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்க போறேன்." சேகர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
உதயரேகா எல்லா நாய்களையும் குளிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். நாய்களுக்கு என்று தனியே சோப், ஷாம்பூ எல்லாம் இருந்தது. அதை வைத்து அவள் நாய்களைக் குளிக்க வைத்து கொண்டிருந்தாள். அவள் அதைச் செய்யும் போது அவளது முகத்தில் அத்தனை சந்தோசம் தெரிந்தது. அவள் நாய்கள் அனைத்தையும் குளிக்க வைத்து அவைகளுக்கு உணவு வைக்க... அவைகளும் வாலை ஆட்டி கொண்டு உண்ண ஆரம்பித்தது. இதை எல்லாம் அவள் தாயின் வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
உதயரேகா இங்கே வந்து சேர்ந்து ஒரு மாத காலமாகி விட்டது சர்வேஸ்வரன் தான் அவளை 'ப்ளூ கிராஸ்' நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் தான் இந்தத் தொண்டு நிறுவனத்தையும் பார்த்துக் கொடுத்தது. அவர்களின் வீடு இருந்த பகுதியில் வெகு அருகாமையில் இது இருந்தது. அதே போன்று அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பார்த்து கொள்வதற்காகத் தினமும் மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணி வரை அவளுக்கு என்று நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தான். மந்தாகினி முணுமுணுத்த போதும் அது எல்லாம் மகனின் முன் எடுபடாது போனது. அதைவிட உதயரேகா அனைத்து வேலைகளையும் முடித்து விட்டே செல்வதால் அவரால் ஒன்றும் கூற முடியவில்லை.
மதிய உணவு நேரம் முடிந்ததும் பட்டம்மாளை உறங்க அனுப்பி விட்டு உதயரேகா கிளம்பி இங்கே வந்து விடுவாள். இங்கு வரும் முன்னரே மாலை நேர சிற்றுண்டிக்கு தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டே வருவாள். அப்போது தான் அவள் அங்குச் சென்றதும் காபி, சிற்றுண்டி செய்ய நேரம் சரியாக இருக்கும். அவள் தனது பணியைச் செவ்வனே செய்வதால் யாரும் ஒரு குறையும் காண முடியாது போயிற்று. தனக்காகச் சலுகைகள் கொடுக்கும் சர்வேஸ்வரனுக்குத் தன்னால் எந்தத் தலைகுனிவும் வந்துவிடக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
"ரேகா, அங்கே ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். வா, வந்து பார்." சேகர் வந்து அழைக்கவும்... உதயரேகா முகம் மலர அவருடன் இணைந்து நடந்தாள்.
ஜூலி மக்களைப் பெற்ற சோர்வில் படுத்திருக்க... அதன் அருகே அதன் குட்டிகள் ஆறும் படுத்திருந்தது. பழுப்பு, வெள்ளை, கருப்பு, பழுப்பும் வெள்ளையும், கருப்பும் வெள்ளையும், பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஆறு நாய்க்குட்டிகளும் இருந்தது. பட்டு போன்ற தேகத்துடன் விழிகளை மூடியபடி இருந்த குட்டி நாய்களைக் காண காண உதயரேகாவுக்குத் தெவிட்டவில்லை. அவள் தனது அலைப்பேசியில் அவைகளைப் புகைப்படம் எடுத்து கொண்டாள்.
மாலை ஐந்தானதும் உதயரேகா வீட்டிற்குக் கிளம்பினாள். வீடு வந்து சேர்ந்ததும் அவள் முதல் வேலையாகத் தான் வாங்கி வந்த சாக்லேட்டை மீனம்மாள், பட்டம்மாளுக்குக் கொடுத்தாள். அவர்கள் ஏனென்று கேட்க... நாய்க்குட்டி பிறந்ததை அவள் சந்தோசத்துடன் சொன்னாள். அவளது மகிழ்ச்சி கண்டு அவர்களும் மகிழ்ந்தனர். அதன் பிறகு அவளை வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டது. வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தாள். அவளது கைகள் அதுபாட்டிற்கு வேலை செய்தாலும் அவளது விழிகள் சர்வேஸ்வரனை தான் எதிர்பார்த்தது.
உதயரேகா எதிர்பார்த்தது போன்று சர்வேஸ்வரன் வீடு வந்து சேர்ந்தான். அவன் அறைக்குச் சென்று முகம் கழுவி, உடை மாற்றி விட்டுப் பால்கனியில் வந்து அமர்ந்த போது மிகச் சரியாக உதயரேகா அறை கதவினை தட்டினாள். அவன் உள்ளே வர அனுமதி கொடுத்ததும் அவள் காபி, சிற்றுண்டியோடு உள்ளே நுழைந்தாள். பால்கனிக்கு வந்த உதயரேகா அவனிடம் காபியை நீட்டினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை வாங்கிப் பருகலானான்.
"என்ன ரொம்பச் சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு?" அவளது முகத்தை வைத்தே அவளது மனதினை அவன் கண்டுபிடித்து விட்டான்.
"ஆமா பிரின்ஸ். இன்னைக்கு ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். எத்தனை தெரியுமா? மொத்தம் ஆறு..." அவள் உற்சாகமாகக் கைவிரல் ஆறினை அவனிடம் காட்டினாள்.
"இரு, இரு... யார் அந்த ஜூலி?" அவன் புரியாது கேட்டான்.
"ஜூலி... அந்தத் தொண்டு நிறுவனத்தில் வளரும் நாய்..." அவள் எடுத்து சொல்ல...
"ஓ, எஸ், எஸ்... ஏற்கெனவே சொல்லி இருக்கல்ல. மறந்துட்டேன்." என்று கூறி அவன் புன்னகைக்க... அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
"அப்புறம் இன்னைக்கு என்ன பண்ணின?" அவன் கேட்டதும் தாமதம் அவள் மடை திறந்த வெள்ளமாய்ப் பேச ஆரம்பித்தாள்.
அவனுக்குத் தெரியும், அவள் வேறு எதுவாக இருந்தாலும் அவனிடம் வாயை திறக்க மாட்டாள். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பற்றி அவனிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டவில்லை. ஏனெனில் அவன் தானே அவளுக்கு இந்த வழி காட்டி விட்டது. அதனால் வந்த நன்றியுணர்வு இது...
கீழே நின்றிருந்த பரணி மேலே பால்கனியில் இருந்த இருவரையும் பார்த்திருந்தான். உதயரேகா பாவனையுடன் சொல்லும் கதைகளைச் சர்வேஸ்வரன் புன்னகையுடன் கேட்டு கொண்டிருப்பதைக் கண்டு அவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. வெகு சீக்கிரமே தனது வீட்டாருடன் வந்து பட்டம்மாளிடம் பேச வேண்டும் என்று அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவு எடுத்த பின்பே அவன் அங்கிருந்து அகன்றான்.
"இந்தா..." சர்வேஸ்வரன் காலி காபி கோப்பை மற்றும் சிற்றுண்டி தட்டை உதயரேகாவிடம் கொடுத்தான்.
"அச்சோ, இவ்வளவு நேரமாவா பேசிக்கிட்டு இருந்தேன்." அதை வாங்கியபடி அவள் அவசரமாகச் சென்றவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் அவன் முன் வந்து நின்றாள்.
"இப்போது என்னவாம்?" அவனது புன்னகை விரிந்தது.
"சாக்லேட்..." என்றவள் தனது கையில் மறைத்து வைத்திருந்த சாக்லேட்டை நீட்டினாள்.
"எதுக்கு?"
"நாய்க்குட்டி பிறந்ததுக்கு..." என்றவளை கண்டு அவனது புன்னகை மேலும் விரிந்தது.
"இங்கே மனுசனுக்குப் பிறந்தநாள் கொண்டாடவே ஆளில்லாது இருக்கு. ஆனா நீ நாய்க்கு கொண்டாடுற..." அவன் வாய் அவளை வம்பிழுத்தாலும் அவனது கை சாக்லேட்டை எடுத்துக் கொண்டது. அதைக் கண்டு முகம் மலர்ந்தவளாய் அவள் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றாள்.
சர்வேஸ்வரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது புன்னகை முகம் மெல்ல மெல்ல வில்லத்தனத்திற்கு மாறியது. உதயரேகா பரணியுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் நாய்களுக்கு உணவு வைக்கும் சாக்கில் பரணி தினமும் அவளோடு சுற்றுவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் அடுத்த இரண்டாவது நாள் உதயரேகாவை அங்கே செல்வதைத் தடுத்து விட்டான். அவள் ஏனென்று கேட்டதற்கு...
"அந்தக் காலி மனையோட உரிமையாளர் எனக்கு ஃபோன் பண்ணி சத்தம் போடுறார். நீ தினமும் வைக்கும் சாப்பாட்டிற்காக அங்கு வரும் நாய்களாலும், பூனைகளாலும் அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களுக்குத் தொந்தரவா இருக்கிறதாம். அவங்க எல்லாம் அவருக்கு ஃபோன் போட்டுச் சத்தம் போட்டு இருக்காங்க. அவர் என்னடான்னா என்னைப் பிடித்துத் திட்டுகிறார். எல்லாம் உன்னால்..." என்று அவன் அவளைக் கடுமையாகச் சாடினான். அதைக் கேட்டு அவளுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
"என்னால தான் நீங்க திட்டு வாங்கி இருக்கீங்க. என்னைய மன்னிச்சிருங்க பிரின்ஸ். என்னைய மன்னிச்சிருங்க. இனி இப்படிப் பண்ண மாட்டேன்." அவள் அழுது கரைய... ஏனோ அவளது கண்ணீர் கூட அவனுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.
என்ன தான் அவளைச் சாடினாலும் மறுநாளே அவன் அவளை 'ப்ளூ கிராஸ்'இல் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் அவளுக்கு நல்லதும் செய்தான், தீமையும் செய்தான். நன்மையோ, தீமையோ எதுவாக இருந்தாலும் அவளுக்கு அவன் மட்டுமே செய்ய வேண்டும். அதில் அவன் உறுதியாக இருந்தான்.
*********************************
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பாட்டி." உதயரேகா பட்டம்மாள் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாள். இன்று அவருக்கு எழுபதாவது பிறந்தநாள்.
"ஒவ்வொரு வருசமும் ஒரு வயசு கூடுது. இதுக்குப் போய் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கியே." பட்டம்மாள் பேத்தியை கண்டு கேட்டார். பின்னே அவரது பேத்தி பாட்டிக்காகப் பட்டுப்புடவை வாங்கி வைத்திருக்கிறாளே.
"இருக்கட்டுமே... என்னோட பாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கிறேன். முதல்ல புதுப் புடவை கட்டுங்க. நாம கோவிலுக்குப் போயிட்டு வந்திரலாம். இன்னைக்குப் பெரிய வீட்டில் யாரும் இல்லை. பெரியம்மாவும், பிரின்சும் தான் இருக்காங்க. அதனால் பிரச்சினை இல்லை." அவள் அவரை அவரசப்படுத்தினாள்.
"பட்டு..." வாசலில் நின்றபடி மீனம்மாள் குரல் கொடுத்தார்.
"உள்ளே வாங்க பெரியம்மா." உதயரேகா வெளியில் வந்து அவரை வரவேற்க...
"வாங்க மீனாம்மா..." என்று பட்டம்மாளும் வரவேற்றார்.
"வர்றேன், வர்றேன்..." என்றபடி உள்ள வந்த மீனம்மாள் பட்டம்மாளை அணைத்துக் கொண்டு,
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பட்டு." என்று தனது வாழ்த்தினைச் சொல்லிவிட்டு பட்டம்மாளுக்கு அழகிய ஸ்படிக மாலையைப் பரிசாக அளித்தார். பட்டம்மாள் அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார்.
"ரொம்ப நன்றி மீனாம்மா. ரேகா தான் சின்னப் புள்ளை மாதிரி நடந்துக்கிறாள்ன்னா... நீங்களுமா?" பட்டம்மாள் அழகாய் வெட்கப்பட்டார்.
"இந்த வயதில் ஆரோக்கியமா வாழ கொடுப்பினை வேண்டும். அது நமக்குக் கிடைச்சிருக்கு. அதனால் நம்ம பிறந்தநாளை கோலாகலமா கொண்டாடலாம் தப்பில்லை." என்றபடி மீனம்மாள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
அதற்குள் உதயரேகா அவருக்குக் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அதைப் பருகியவாறு மீனம்மாள், "பட்டு, நீ போய்க் கிளம்பி வா. உன்னோட பிறந்தநாளுக்கு நான் புரோக்ராம் பண்ணிட்டேன்." என்று உற்சாகமாகச் சொல்ல...
"என்ன புரோக்ராம் பெரியம்மா?" உதயரேகா ஆர்வத்துடன் கேட்க... மீனம்மாள் அவளிடம் விளக்கி சொல்ல... இருவரையும் சிரித்தபடி பார்த்த பட்டம்மாள் அறைக்குள் சென்றார்.
பட்டம்மாள் கிளம்பி வந்ததும் மூவரும் வீட்டின் முன் வாசலுக்கு வந்தனர். அங்குச் சர்வேஸ்வரன் அவர்களுக்காகக் காத்திருந்தான். பட்டம்மாளை கண்டதும் அவனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவன் பின்பு அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். பிறகு அவன் அவருக்காக வாங்கி வந்திருந்த பரிசினை அவரிடம் கொடுத்தான். அதி உயர்தரப் பேரீச்சம்பழங்கள் அடங்கிய பெட்டி அது. பேரீச்சம்பழம் என்றால் பட்டம்மாளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவன் அதையே அவருக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்திருந்தான். அவர் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டார்.
"இது மீனுக்குட்டிக்கு..." என்றபடி அவன் மற்றொரு பெட்டியை தனது பாட்டியிடம் நீட்டினான். அவருக்கும் பேரீச்சம்பழம் பிடிக்கும். மீனம்மாள் சந்தோசத்துடன் பேரனை அணைத்துக் கொண்டார்.
"உங்களுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கு." என்று பாட்டியிடம் சொன்னவன் உதயரேகா புறம் திரும்பி, "பெரியவங்க ரெண்டு பேரும் பத்திரம்." என்று அவளுக்கு அறிவுறுத்திவிட்டு கிளம்பி சென்று விட்டான்.