swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஹாய் ஹனீஸ்
ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்து இருக்கேன்
விளையாட்டா ஒரு கதை எழுதிப்பார்ப்போம்னு ஆரம்பிச்ச நான், எழுத்துலகில் தொடர்ந்து மூன்று வருடங்களாக உங்களோடவே இனிமையான ஒரு தொடர் பயணத்தில் இருக்கேன்
முதல் கதையோட நிறுத்திடலாம்னு இருந்த என்னை, அடுத்து அடுத்துன்னு கேட்டு என்னை எழுத வச்சீங்க! அதுமட்டுமா அமேசானில் உங்க கதையிருக்கா, கொஞ்சம் பிரதிலிபி ஆப் பக்கமும் வாங்க, ஆடியோ நாவலாகவும் உங்க கதையை போடுங்க வேலை செய்யும் போது கேட்டுட்டே செய்வோம். இப்படி அடுத்தடுத்த படிகளில் என்னை ஏற்றிவிட்டது என் வாசக நட்புகளான நீங்க தான். நீங்க இருக்கும் தைரியத்தில் தான் அடுத்தடுத்த படிகளில் அடியெடுத்தும் வச்சேன்.
இப்போ அடுத்த மிகப்பெரிய படி அதுவும் உங்களுக்காக தான்.
ஒவ்வொரு புக் ஃபேர் போடும் பொழுதும் சரி, இல்லை யாராவது புக் ரிலீஸ் போஸ்ட் போட்டாலும் சரி, “சுவாதிமா நீங்க எப்ப புக் போட போறீங்கன்னு”, ஒரு நாலுப்பேர் வந்துடுவாங்க.
அவங்களுக்காவே ஆரம்பிக்கப்பட்டது தான்.
“SWATHI PUBLICATIONS” - Heart to Pages
ஆம் ஹனீஸ்! இனி என் புத்தகங்கள் என்னுடைய சொந்த பதிப்பகத்தில் தொடர்ந்து வெளிவரும்🫰
இப்பொழுது முதல் புத்தகமாக நம் வேதாந்த் அதிமதுரன் மற்றும் தேன்விழியின் “ஆண் மனதை அழிக்க வந்த சாபம்” கதை, இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.
கடைகளில் கிடைக்கும்!
நம் கோபக்கார அதிமதுரனையும், அவனின் சிடுமூஞ்சி தேன்விழியையும், அவர்களின் அடிப்பிடி சண்டைகளையும், தேன்சிந்தும் காதலையும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
புத்தக வடிவில் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்து வாங்கி படித்து மகிழுங்கள்!
பிரியா நிலையம் : +91 94444 62284
புதிய வாசகர்களுக்கு!
கதை பற்றிய சிறு முன்னோட்டம்
கதைக்களம்(Genre): ஆரம்ப சந்திப்பு முதலே எதிரிகளாக இருந்து, திடீர் திருமணத்திற்குப் பிறகு காதல் பறவைகளாக மாறும் நாயகன்-நாயகியை கொண்ட குடும்ப நாவலாகும்.
நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”. பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ, யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாய் குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால், அவனுள் இருக்கும் இனிப்பை உணரும் முன்பே, அவனைத் தீண்டியவர்கள் காயப்பட்டு விலகி விடுவார்கள். பெரும் கோபக்காரன்! முன்கோபி!
நாயகி: “தேன்விழி கண்ணபிரான்”. காந்தமாய் இழுக்கும் தேன்நிற விழிகளுக்குக் சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவள், அதன் பலனாக, பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறி இருந்தாள். பழகுவதற்குச் சிறிதும் இனிமையானவள் இல்லை. சிடுசிடு சிடுமூஞ்சி! துணிச்சல்காரி!
ஆரம்பம் முதலே, குணத்திற்கு ஏற்ப எலியும் பூனையுமாக அடித்துக் கொள்ளப்போகும் வேதாந்த் அதிமதுரனும், தேன்விழியும், எவ்வாறு காதல் பறவைகளாக மாறுவார்கள் என்பதை, இக்கதையுடன் பயணித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் நட்புகளே!
குடும்பம், காதல், மோதல், ஊடல், குறும்புகள், செல்ல சண்டைகள், நட்பு, பாசப்பிணைப்பு, சச்சரவுகள், திடீர் திருப்பங்கள் அனைத்தையும் நம் கதையில் காணலாம்.
இரு முரண்கள் சேர்ந்து, தங்களைச் சுற்றி, காதல் அரண் அமைக்கப் போகும் இனிய பயணம்!
வெறுப்பிற்கும், விருப்பிற்கும் இடையிலான பயணம்!
தீராத ஊடல் முதல் தேன் சிந்தும் கூடல் வரை!
Teaser:1
வேதாந்த் அதிமதுரனின் கார், நாளை திறக்கப்பட உள்ள, அவனுடைய மகாபலிபுரம் ரிசார்ட்டினுள் நுழைந்தது.
அங்கு நாளை திறப்பு விழாவிற்கான அலங்காரங்கள் நடந்துக்கொண்டு இருக்க,
உள் நுழைந்தவன், "அஷ்வின்,", என்று போட்ட பெரும் சத்தத்தில், அவன் அடித்துபிடித்து ஓடிவந்து, அந்த ஹாலிற்குள் அடியெடுத்து வைத்த நொடி, "வாட் த ஃப,", என்று ஆரம்பித்தவன், நிறுத்தி, "வாட் த ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர் அஷ்வின்", என்று கத்த.
"பாஸ், என்ன ஆச்சு,?, எல்லாமே கரெக்டா தானே இருக்கு,?", என்ற அஸ்வின் பதட்டத்துடன், 'ஐயோ எங்க சொதப்பல் நடந்து இருக்கு தெரியலையே', என்று சுற்றி முற்றி, ‘என்ன தவறு?’, என்று பார்க்க.
அதிமதுரன், "என்ன கரெக்டா இருக்கு? எல்லாமே தப்பா இருக்கு. என்ன செக் பண்ணீங்க அஷ்வின்?", என்று வார்த்தைகளை முடிந்தளவு கண்ணியமாக கையாண்டவனால், அதை உதிர்க்கும் தொணியை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை!
"Floral decoration இன்சார்ஜ் யார்? உடனே வர சொல்லுங்க", என்று ஒவ்வொரு வார்த்தையையும், பற்களுக்கு இடையில் வைத்து கடித்து, துப்பினான்.
அதைத்தொடர்ந்து, பூ அலங்காரம் யாரின் பொறுப்பு என்று பார்க்க? அடுத்த இரண்டு நிமிடத்தில், அவன் முன்பு தேன்விழி வந்து நின்று இருந்தாள்.
ஏற்கனவே கோபமாக இருந்தவனுக்கு, தன் முன்பு வந்து நின்றிருந்தவளை, பார்த்த அடுத்த கணமே, இன்னும் பித்தம் தலைக்கு ஏறியது. நேற்றும், இன்றும் அவன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை, தேன்விழி அவள் அறியாது, அதிவேகமாக திருப்பி இருந்தாள்.
அவளுக்கும் உள்ளுக்குள் 'மீண்டும் இவனா!?' என்று தூக்கிவாரிப்போட்டது. ‘எதுக்கு இவன் இங்க வந்து இருக்கான்? ஏன் நம்மளை கூப்பிட்டு விட்டான்? வரிசையாக சந்தேகத்தை அடுக்கிக்கொண்டே போக!
இறுதியில், ‘இவனுக்கு எதுக்கு நாம பயப்படனும்?’ என்று நினைத்தவள்,
தன்னை பார்த்து முறைக்கும், அதிமதுரனை பார்த்து, இப்பொழுது அவளும் முறைக்க ஆரம்பித்தாள்.
மறுகணம், “இடியட்,”, என்ற வேதாந்த் அதிமதுரனின், வலது கரம், கொஞ்சமும் யோசிக்காது, இடியென்று தேன்விழியின் இடது கன்னத்தில், இடியாக இறங்கிவிட்டது.
இதை சற்றும், ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.
சரியாக முப்பது வினாடிகளுக்கு பிறகு தான் தேன்விழிக்கு, அவளை அதிமதுரன் கை நீட்டி அறைந்திருந்ததே விளங்கியது.
வலியில் அவள் கண்முன்பு பூச்சிகள் வேறு பறந்தது.
வாழ்வில் முதல்முறை அவளை ஒருவன் அறைந்து இருக்கின்றான்!
வினாடியில் அதிமதுரனின், கோட் காலர் பற்றி இழுக்கப்பட்டது.
என்னவென்று அதிமதுரன் பார்ப்பதற்குள், அவனை மொத்தமாக தன் புறம் பற்றி இழுத்திருந்த தேன்விழி, யாருமே எதிர்பாராத விதமாக, தன் முழு பலத்தையும் தன் கரத்திற்கு கொடுத்து, சப்பென்று, அதிமதுரனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.
அதில், ஏற்கனவே அங்கு ஒன்றும் புரியாது மூச்சடைத்து நின்று இருந்தவர்களுக்கு, மொத்தமாகவே அவர்களின் இதயம் நின்று விடும் போல் ஆகிவிட்டது.
Teaser:2
சில மாதங்களுக்கு பிறகு!
மெல்ல தேன்விழியை நெருங்கி, அவளின் பட்டு கன்னத்தில், பட்டும் படாமலும், தன் இதழை பதித்த அதிமதுரனின் ஹிருதயமோ! ஒருகணம் உறைந்து நின்று, பிறகு அதிர்ந்து துடிக்க தொடங்கி இருந்தது…
அவன் தொண்டையை வேறு, ஏதோ சூடான அமிலம் வந்து அடைத்துவிட பயங்கர படப்படப்பு, அத்தனை பெரிய ஆண்மகன் அவனுக்குள்…
எப்படியோ எச்சில் கூட்டி விழுங்கியவன் சட்டென்று அவளிடம் இருந்து பிரிந்துவிட பார்க்க…
அவன் கழுத்தை சுற்றி பட்டென்று தன் கரத்தை மாலையாக தொடுத்து போட்டு சிறையெடுத்து தன் முகம் நோக்கி இழுத்த தேன்விழி
ஹஸ்கி குரலில், "என்ன டா, வேதுப்பையா, முத்தா தராமையே போற, என்னை பிடிச்சு இருக்குன்னு பொய் சொன்னயா, அப்போ", என்று கேள்வி எழுப்ப, அவனுக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்தது.
என்ன ஃபிரண்ட்ஸ் கதை பிடிச்சிருக்கா? உடனே ஃபோன் போட்டு, எழுத்தாளர் சுவாதி லக்ஷ்மி-யோட கதை வேண்டும்னு கேட்டு ஆர்டர் போடுங்க!
பிரியா நிலையம்
தொலைப்பேசி எண்
: +91 94444 62284
இரண்டு பாகமும் சேர்த்து புத்தக விலை- 900/-
நன்றி,
அன்புடன்
சுவாதி லக்ஷ்மி.
ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்து இருக்கேன்
விளையாட்டா ஒரு கதை எழுதிப்பார்ப்போம்னு ஆரம்பிச்ச நான், எழுத்துலகில் தொடர்ந்து மூன்று வருடங்களாக உங்களோடவே இனிமையான ஒரு தொடர் பயணத்தில் இருக்கேன்
முதல் கதையோட நிறுத்திடலாம்னு இருந்த என்னை, அடுத்து அடுத்துன்னு கேட்டு என்னை எழுத வச்சீங்க! அதுமட்டுமா அமேசானில் உங்க கதையிருக்கா, கொஞ்சம் பிரதிலிபி ஆப் பக்கமும் வாங்க, ஆடியோ நாவலாகவும் உங்க கதையை போடுங்க வேலை செய்யும் போது கேட்டுட்டே செய்வோம். இப்படி அடுத்தடுத்த படிகளில் என்னை ஏற்றிவிட்டது என் வாசக நட்புகளான நீங்க தான். நீங்க இருக்கும் தைரியத்தில் தான் அடுத்தடுத்த படிகளில் அடியெடுத்தும் வச்சேன்.
இப்போ அடுத்த மிகப்பெரிய படி அதுவும் உங்களுக்காக தான்.
ஒவ்வொரு புக் ஃபேர் போடும் பொழுதும் சரி, இல்லை யாராவது புக் ரிலீஸ் போஸ்ட் போட்டாலும் சரி, “சுவாதிமா நீங்க எப்ப புக் போட போறீங்கன்னு”, ஒரு நாலுப்பேர் வந்துடுவாங்க.
அவங்களுக்காவே ஆரம்பிக்கப்பட்டது தான்.
“SWATHI PUBLICATIONS” - Heart to Pages
ஆம் ஹனீஸ்! இனி என் புத்தகங்கள் என்னுடைய சொந்த பதிப்பகத்தில் தொடர்ந்து வெளிவரும்🫰
இப்பொழுது முதல் புத்தகமாக நம் வேதாந்த் அதிமதுரன் மற்றும் தேன்விழியின் “ஆண் மனதை அழிக்க வந்த சாபம்” கதை, இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.
கடைகளில் கிடைக்கும்!
நம் கோபக்கார அதிமதுரனையும், அவனின் சிடுமூஞ்சி தேன்விழியையும், அவர்களின் அடிப்பிடி சண்டைகளையும், தேன்சிந்தும் காதலையும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
புத்தக வடிவில் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்து வாங்கி படித்து மகிழுங்கள்!
பிரியா நிலையம் : +91 94444 62284
புதிய வாசகர்களுக்கு!
கதை பற்றிய சிறு முன்னோட்டம்
கதைக்களம்(Genre): ஆரம்ப சந்திப்பு முதலே எதிரிகளாக இருந்து, திடீர் திருமணத்திற்குப் பிறகு காதல் பறவைகளாக மாறும் நாயகன்-நாயகியை கொண்ட குடும்ப நாவலாகும்.
நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”. பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ, யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாய் குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால், அவனுள் இருக்கும் இனிப்பை உணரும் முன்பே, அவனைத் தீண்டியவர்கள் காயப்பட்டு விலகி விடுவார்கள். பெரும் கோபக்காரன்! முன்கோபி!
நாயகி: “தேன்விழி கண்ணபிரான்”. காந்தமாய் இழுக்கும் தேன்நிற விழிகளுக்குக் சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவள், அதன் பலனாக, பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறி இருந்தாள். பழகுவதற்குச் சிறிதும் இனிமையானவள் இல்லை. சிடுசிடு சிடுமூஞ்சி! துணிச்சல்காரி!
ஆரம்பம் முதலே, குணத்திற்கு ஏற்ப எலியும் பூனையுமாக அடித்துக் கொள்ளப்போகும் வேதாந்த் அதிமதுரனும், தேன்விழியும், எவ்வாறு காதல் பறவைகளாக மாறுவார்கள் என்பதை, இக்கதையுடன் பயணித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் நட்புகளே!
குடும்பம், காதல், மோதல், ஊடல், குறும்புகள், செல்ல சண்டைகள், நட்பு, பாசப்பிணைப்பு, சச்சரவுகள், திடீர் திருப்பங்கள் அனைத்தையும் நம் கதையில் காணலாம்.
இரு முரண்கள் சேர்ந்து, தங்களைச் சுற்றி, காதல் அரண் அமைக்கப் போகும் இனிய பயணம்!
வெறுப்பிற்கும், விருப்பிற்கும் இடையிலான பயணம்!
தீராத ஊடல் முதல் தேன் சிந்தும் கூடல் வரை!
Teaser:1
வேதாந்த் அதிமதுரனின் கார், நாளை திறக்கப்பட உள்ள, அவனுடைய மகாபலிபுரம் ரிசார்ட்டினுள் நுழைந்தது.
அங்கு நாளை திறப்பு விழாவிற்கான அலங்காரங்கள் நடந்துக்கொண்டு இருக்க,
உள் நுழைந்தவன், "அஷ்வின்,", என்று போட்ட பெரும் சத்தத்தில், அவன் அடித்துபிடித்து ஓடிவந்து, அந்த ஹாலிற்குள் அடியெடுத்து வைத்த நொடி, "வாட் த ஃப,", என்று ஆரம்பித்தவன், நிறுத்தி, "வாட் த ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர் அஷ்வின்", என்று கத்த.
"பாஸ், என்ன ஆச்சு,?, எல்லாமே கரெக்டா தானே இருக்கு,?", என்ற அஸ்வின் பதட்டத்துடன், 'ஐயோ எங்க சொதப்பல் நடந்து இருக்கு தெரியலையே', என்று சுற்றி முற்றி, ‘என்ன தவறு?’, என்று பார்க்க.
அதிமதுரன், "என்ன கரெக்டா இருக்கு? எல்லாமே தப்பா இருக்கு. என்ன செக் பண்ணீங்க அஷ்வின்?", என்று வார்த்தைகளை முடிந்தளவு கண்ணியமாக கையாண்டவனால், அதை உதிர்க்கும் தொணியை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை!
"Floral decoration இன்சார்ஜ் யார்? உடனே வர சொல்லுங்க", என்று ஒவ்வொரு வார்த்தையையும், பற்களுக்கு இடையில் வைத்து கடித்து, துப்பினான்.
அதைத்தொடர்ந்து, பூ அலங்காரம் யாரின் பொறுப்பு என்று பார்க்க? அடுத்த இரண்டு நிமிடத்தில், அவன் முன்பு தேன்விழி வந்து நின்று இருந்தாள்.
ஏற்கனவே கோபமாக இருந்தவனுக்கு, தன் முன்பு வந்து நின்றிருந்தவளை, பார்த்த அடுத்த கணமே, இன்னும் பித்தம் தலைக்கு ஏறியது. நேற்றும், இன்றும் அவன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை, தேன்விழி அவள் அறியாது, அதிவேகமாக திருப்பி இருந்தாள்.
அவளுக்கும் உள்ளுக்குள் 'மீண்டும் இவனா!?' என்று தூக்கிவாரிப்போட்டது. ‘எதுக்கு இவன் இங்க வந்து இருக்கான்? ஏன் நம்மளை கூப்பிட்டு விட்டான்? வரிசையாக சந்தேகத்தை அடுக்கிக்கொண்டே போக!
இறுதியில், ‘இவனுக்கு எதுக்கு நாம பயப்படனும்?’ என்று நினைத்தவள்,
தன்னை பார்த்து முறைக்கும், அதிமதுரனை பார்த்து, இப்பொழுது அவளும் முறைக்க ஆரம்பித்தாள்.
மறுகணம், “இடியட்,”, என்ற வேதாந்த் அதிமதுரனின், வலது கரம், கொஞ்சமும் யோசிக்காது, இடியென்று தேன்விழியின் இடது கன்னத்தில், இடியாக இறங்கிவிட்டது.
இதை சற்றும், ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.
சரியாக முப்பது வினாடிகளுக்கு பிறகு தான் தேன்விழிக்கு, அவளை அதிமதுரன் கை நீட்டி அறைந்திருந்ததே விளங்கியது.
வலியில் அவள் கண்முன்பு பூச்சிகள் வேறு பறந்தது.
வாழ்வில் முதல்முறை அவளை ஒருவன் அறைந்து இருக்கின்றான்!
வினாடியில் அதிமதுரனின், கோட் காலர் பற்றி இழுக்கப்பட்டது.
என்னவென்று அதிமதுரன் பார்ப்பதற்குள், அவனை மொத்தமாக தன் புறம் பற்றி இழுத்திருந்த தேன்விழி, யாருமே எதிர்பாராத விதமாக, தன் முழு பலத்தையும் தன் கரத்திற்கு கொடுத்து, சப்பென்று, அதிமதுரனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.
அதில், ஏற்கனவே அங்கு ஒன்றும் புரியாது மூச்சடைத்து நின்று இருந்தவர்களுக்கு, மொத்தமாகவே அவர்களின் இதயம் நின்று விடும் போல் ஆகிவிட்டது.
Teaser:2
சில மாதங்களுக்கு பிறகு!
மெல்ல தேன்விழியை நெருங்கி, அவளின் பட்டு கன்னத்தில், பட்டும் படாமலும், தன் இதழை பதித்த அதிமதுரனின் ஹிருதயமோ! ஒருகணம் உறைந்து நின்று, பிறகு அதிர்ந்து துடிக்க தொடங்கி இருந்தது…
அவன் தொண்டையை வேறு, ஏதோ சூடான அமிலம் வந்து அடைத்துவிட பயங்கர படப்படப்பு, அத்தனை பெரிய ஆண்மகன் அவனுக்குள்…
எப்படியோ எச்சில் கூட்டி விழுங்கியவன் சட்டென்று அவளிடம் இருந்து பிரிந்துவிட பார்க்க…
அவன் கழுத்தை சுற்றி பட்டென்று தன் கரத்தை மாலையாக தொடுத்து போட்டு சிறையெடுத்து தன் முகம் நோக்கி இழுத்த தேன்விழி
ஹஸ்கி குரலில், "என்ன டா, வேதுப்பையா, முத்தா தராமையே போற, என்னை பிடிச்சு இருக்குன்னு பொய் சொன்னயா, அப்போ", என்று கேள்வி எழுப்ப, அவனுக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்தது.
என்ன ஃபிரண்ட்ஸ் கதை பிடிச்சிருக்கா? உடனே ஃபோன் போட்டு, எழுத்தாளர் சுவாதி லக்ஷ்மி-யோட கதை வேண்டும்னு கேட்டு ஆர்டர் போடுங்க!
பிரியா நிலையம்
தொலைப்பேசி எண்
: +91 94444 62284
இரண்டு பாகமும் சேர்த்து புத்தக விலை- 900/-
நன்றி,
அன்புடன்
சுவாதி லக்ஷ்மி.