All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "செல்லமே செல்லம்!!!" கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..



எல்லாரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி அன்று தான் முதல் கதையை ஆரம்பித்தோம். அதே போல விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அடுத்த கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்.



கதையின் தலைப்பு : செல்லமே செல்லம்!!!



ஹீரோ: லலித் ஆதித்யா



ஹீரோயின்: மிருதுளா ஆதினி



கூடிய சீக்கிரம் இவங்க இரண்டும் பேரும் நம்மளோட சேர்ந்து பயணிக்க போறாங்க.. செப்டெம்பர் மூன்றாம் தேதி முதல் வாரம் மூன்று தினங்கள் செல்லங்கள் செல்லம் கொஞ்ச வர போகிறார்கள்..



உங்களுக்காக ஒரு குட்டி டீசெர்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்



ஸ்ரீநிதா..
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser 1:

ஏகாந்த இரவின் மின்னொளியில் எழில் பொங்க பதுமை என நின்று இருந்தவளின் முன் ஒரு கால் நிலத்தில் இருக்க, மறு காலில் மண்டியிட்டு அவள் கைகளை பிடித்து தன் முதல் பரிசான மோதிரத்தை அணிவித்தபடி தன் காதலை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் லலித் ஆதித்யா. முதல் முறையாக பெண்ணவளின் நாணத்தில் செய்வது அறியாது நின்று இருந்தான்.



நடப்பது எதுவும் புரி படாமல் முதல் முறை ஒரு ஆணவனின் செய்கைகள் தன்னை நிலை குலைய செய்ய அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே சிந்தையில் இருந்து மறைந்து விட முகம் முழுவதும் ரோஜா பூ வண்ணம் கொள்ள ஒரு வித நாணத்தில் நின்று தவித்து இருந்தாள் ஆதினி.



கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று, தன் கனவு நாயகன் பல முறை இது போல கனவில் வந்து இம்சிப்பவன், ஆனால் இன்றோ நடப்பது அனைத்தும் உண்மையில்.. தன்னையோ தன் கண்ணையோ இல்லை காதுகளையோ நம்பவே முடியாமல் பார்த்திருந்தவளின் கையை பற்றியபடியே எழுந்து நின்றவன் ரோஜா மலர்களின் நிறத்தில் சிகப்பேறி இருந்த முகத்தை கையில் ஏந்தி அவளது நாணத்தை ரசித்து நின்று இருந்தான்.



இதுவரை எத்தனையோ பெண்கள் அவனது வாழ்வில் பல உறவுகளாக வந்து இருந்தாலும், முதல் முறையாக அவனது செய்கையில் நாணம் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று மறந்து நின்று இருந்தவளை அவன் ரசிக்கவும் தவறவில்லை. முதல் முறையாக ஒரு புது மாதிரியான உணர்வு தன்னை தாக்குவதை உணர்ந்தே இருந்தான் லலித் ஆதித்யா.



அவளது முகத்தை தாங்கி பிடித்திருந்த இருக்கரங்களில் ஒன்று இப்பொழுது அவள் முகத்தில் துள்ளி விளையாண்டு கொண்டிருக்கின்ற முன் முடி கற்றைகளை காது மடலில் செருகிய படி அவள் மடல்களில் விளையாண்டு கொண்டிருக்க செய்வது அறியாது நின்று இருந்தவளை எண்ணி அவன் மனம் ரசித்து இருந்தது. சற்று நேரத்தில் அவன் விரல்கள் அவள் நெற்றி, கண் என்று அங்கம் அங்கமாக முகத்தில் தவழ இறுதியில் நடுங்கும் அவள் உதட்டில் வந்து நின்று இருந்தது. மிருதுவாக வருடியபடியே அவளது இதழுடன் தன் இதழ் பொருத்த முனைந்தவன் கடைசி நொடியில் அவளது நிலைமையினை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி இருந்தான். எனினும் எண்ணியதை செய்ய முடியாமல் மனம் தடுக்க அவள் இதழை சற்றே உரசி விடுவித்து இருந்தான்.



அவனது செய்கைகளில் தன்னிலை இழந்து நின்று இருந்த பெண்ணவளுக்கு இது போன்ற முதல் அனுபவம் என்ன என்னவோ செய்ய கடைசியாக அவனது செய்கையில் செய்வது அறியாது கண்களை மூடி இருந்தாள். ஆனாலும் நெஞ்சு நிறைய படபடத்து இருக்க தன் நிலையினை எண்ணி கண்கள் துளிர்த்து இருந்தது.



செல்லம் விரைவில்…
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஆதி ஆதினி ❣
செம்மையா இருக்கே காம்போ!!!
முதல் அனுபவமா?????
அப்போ ஆதிக்கு ஆல்ரெடி ஆல் இருந்துருக்கா???
#ஆதி #ஆதினி #ஏகாந்த # வேலை #காதல் # செல்லமே# செல்லம்❣❣
 
Top