All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வர்ணத்தின் வாசலிலே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணத்தின் வாசலிலே..


அத்தியாயம் 10


" கனவுத் தோட்டத்தில்

மலர்ந்த மலர்யெல்லாம்

நறுமணத்தை மறந்து

முட்களாகக் குத்துவது ஏனோ!!!




சித்தார்த் பேசனும் சொன்னதை அலட்சியமாகப் பேச இஷ்டமில்லை சொல்லி வந்தவளோ தோட்டத்தில் காலையில் மலர்ந்த மலர்களின் நறுமணம் கூட அவள் மனதைச் சாந்தப்படுத்தவில்லை.


பல வண்ணங்களில் ரோஜாக்களும், ஜாதிக் கொடி மாடிவரை நீட்டி வளர்ந்திருக்க, கொடி மல்லிகையின் மணம், பலவகை குரோட்டன்ஸ் செடிகள், ஆங்காங்கே மரங்களின் கீழே அமர சிமெண்ட் இருக்கை போட்டு இருக்க ..எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை சித்ரமாலாவிற்கு.


நேத்திலிருந்து தன் வாழ்க்கை

பயணம் அடர்ந்த வனத்தில் சிக்கி வழி மறந்து நிற்கும் ஆடு புலிக்கு இரையாகிவிடுமோ, எண்ணவதுப் போல சித்தார்த் கையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.


தான் அலட்சியமாகப் பேசி நடப்பது தன்னுடைய குணமே இல்லை .. ஆனால் இவனால் நா ராட்சஸி மாறிவிடுவனோ பயமாக இருக்கு..தனிமையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.


அவனை மதிக்காமல் பேசும்போது எல்லாம் அவன் தன்னை கடுமையாகப் பேசாமல், மனதின் வலியை மறைத்து என்னைச் சிறு குழந்தையா நினைத்தேப் பேசுவதும், நடத்துவதைக் கண்டால் தன்னுடைய கோபம் குறைந்து விடுமோ பயமாக இருந்தது சித்ரமாலாவிற்கு...


அவளைத் தேடி தோட்டத்திற்கு வந்த சித்தார்த் அங்கே தன்னந்தனியாக அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்தவளைப் பார்த்தவன், அவளிடம் சென்றவன், சிட்டு கூப்பிட வந்து மாத்தி ''சித்ரமாலா ,கூப்பிட்டவன் அவள் அருகிலே தள்ளி அமர்ந்தான்.


அவன் அருகில் அமர்ந்ததும் சட்டென்று எழுந்தவளை, தன் ஆழ்ந்த குரலில்'' உட்காரு, உன்னிடம் பேச வேண்டும் ... எழுந்து போனால், உன்னை என் கரங்களில் சிறை வைத்துப் பேசுவேன் ... எது உனக்குச் சவுகரியம் நீயே முடிவு செய்து கொள்.. என்னைப் பொறுத்தவரை அருகில் அமர்ந்தாலும், என் கரங்களிலிருந்தாலும் எனக்குச் சந்தோஷமே..'' சொல்லி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் சித்தார்த்.


அவனின் குரலில் உள்ள ஆளுமையிலும் பேசிய வார்த்தைகளையும் கேட்டவள்

முறைத்தபடி தள்ளி அமர்ந்தாள்.


நடந்த செயலுக்கோ, என் அப்பா அம்மாவிற்கு ஏற்பட்ட அவமானத்தையோ நினைத்தால் உன்னுடன் பேசவே பிடிக்கவில்லை .. நீ யாரோ எவரோ, பார்த்த ஒரே நாளில் என் அப்பாவிடமிருந்து பிரித்து, அவர்கள் இருந்தும் அனாதை போலக் கல்யாணம் செய்ய வைத்து இப்ப என்னிடம் பேச வேண்டுமா... அதை முன்பே செய்திருக்கலாமே... நீ செய்தற்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும் உன்னை நம்பப் போவதில்லை .. உன்னைப் பிடிக்கவில்லை .. என் வாழ்க்கையை முழுவதும் உன்னுடனே வாழ்வேன் நினைக்காதே... தன் மனதில் நினைத்தை எல்லாம் பேசினாள் சித்ரமாலா.


அவள் பேசப் பேச முகத்தைப் பார்த்தவன்,''நான் சொல்வதைக் காது கொடுத்தே கேட்க மாட்டேன் சொல்கிறவளுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என்னைப் பிடிக்கல சொன்னாலும் வாழ்நாள் முழுவதும் என்னுடன் மட்டுமே உனது வாழ்க்கையைப் பிறந்தவுடனே கடவுளால் ஏற்படுத்திய பந்தத்தை மாற்ற உன் அப்பனாலே முடியாது .. உன்னைத் தனியாக உன்னை அனுப்பி கல்யாணம் பண்ணிக்கோ சொன்ன போதே புரிந்து கொள்ளாதவளை நான் ''விம் பார் '',போட்டு விளக்க முடியாது. இனி இது தான் உன் வீடு, ..நா தான் உன் புருஷன்.. சொல்லிவிட்டு.. இப்ப உள்ளே போய்க் கிளம்பு'' .. சொல்லி எழுந்தவனைப் பார்த்த சித்ரமாலா..


''நா எங்கயும் வர மாட்டேன்''.. பதிலளித்தவள் தோட்டத்தைச் சுற்றி நடக்க ஆரம்பித்தாள்.


அவள் தன்னுடன் வரவில்லை சொல்லியவளின் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தியவன்.. அவளை முறைத்துப் பார்த்துச் சினத்துடன் .. உள்ளே போய் கிளம்புகிற வழியைப் பாரு.. நா சொல்வதற்கு மறுத்துப் பேசி என்னை மிருகமாக்காதே.. பல்லைக் கடித்தபடி கடினமான குரலில் சொல்லி அவளை உள்ளே இழுத்துக் கொண்டு செல்ல முயன்றான்.


அவனின் குரலில் நெஞ்சங்கூடு நடுங்கிப் போனாலும் பயத்தை வெளியைக் காட்டாமல் உள்ளே வர முரண்டுப் பிடித்தாள்.


வராமல் நிற்பதைக் கண்ட சித்திரஞ்சன் கைகளை விடாமல் இறுகப் பற்றியபடி அவளருகில் வந்து '' நா சொல்வதற்கு மறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் உனக்குத் தான் கஷ்டம்... அவளைத் தூக்கியபடி பேச...


அவன் தூக்கியதும் காலை உதைத்தபடி கீழே இறங்க முயல...


இறங்க முடியாமல் அழுத்திப் பிடித்து அறையினுள் விட்டவன் இன்னும் பத்து நிமிடம் தான் .. தேவையானதை எடுத்து வைத்துக் கிளம்பு '' வெளியேறினான்.



அவன் கோபத்தையும் தன்னை தூக்கியதை நினைத்தபடி நின்றவள், ''இன்னும் கிளம்பவில்லை, நீயே வரவில்லை என்றால் நா வந்து தூக்கிக் கொண்டு வரட்டா, வெளிலிருந்து கத்தினான்.

அவன் குரலைக் கேட்டதும் வேகமாக உடையை மாற்றியவள், அவன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் சித்ரமாலா.



அவள் வெளியே வந்ததும் தன் நான்கு சக்கர வாகனத்தில் அவளை முன் பக்கம் கதவைத் திறந்து ஏறச் சொல்ல... பொம்மை போல அவன் சொன்னதைச் செய்தாள். அவள் மனமோ சித்திரஞ்சனின் செய்கையை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.


பிரம்மனைப் போல அழகிய ஓவியத்தைப் படைப்பவனின் உண்மையான குணமோ முகமோ எதுவென்று அறிய முடியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள் .


தன் பெற்றோர் எவ்வளவு செல்லமாக வளர்த்துப் படிப்பிற்கு முழு சுதந்திரம் கொடுத்து தனக்குப் பிடித்ததைச் செய்யச் சொல்லி வளர்த்தனர். ஒற்றைப் பெண்ணாக அருமை பெருமையாக வளர்த்தவர்களோ தன் ஒரே பெண்ணின் கல்யாணம் பற்றி ஏகப்பட்ட கனவுகளை வளர்த்து வைத்திருந்தனர்..ஆனால் அதை ஒரே நாளில் தரைமட்டமாக்கிய சித்திரஞ்சன் மீது கடுங் கோபமே உண்டானது..


கன்னிப் பருவத்திலிருந்து அடுத்த திருமணப் பந்தத்தில் நுழையும் போது தனக்கு வரும் கணவனைப் பற்றிய கனவுகள் ஏராளமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்.. என் வாழ்க்கையிலும் சந்தோஷமான கனவுகளோடு காத்திருந்த நேரத்தில் அத்தனையும் புதைகுழியில் புதைந்து போனதை எண்ணியபடி சாலையை வெறித்துப் பார்த்தாள் சித்ரமாலா.


அவளின் பார்வை வெளியே வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்.. சிட்டு,.. சித்து.. சித்ரமாலா.. கூப்பிட.. அவள் திரும்பாமல் சிலை போல அமர்ந்திருக்க.. வண்டியை ஓரமாக மரத்தடியில் நிறுத்திவிட்டு அவள் முகத்தை நோக்கித் திரும்பி அமர்ந்தான் சித்தார்த்.


அவள் தோளைப் பிடித்துத் திருப்பியவன்.. சித்ரமாலா '' இங்கே பார்''.. சொல்ல அவனை நோக்கிய அவள் முகமோ வாடிப் போய் களையிழந்து மௌனத்தைக் கொண்டிருந்தது.


அதைப் பார்த்தவன்.. ஓவிய கண்காட்டியில் நுழையும் போது புத்தம் புது பூவாய் மலர்ந்திருக்கும் முகம் வாடி வதங்கி வாழ்க்கையே முடிந்து நிர்மூலமானதைப் போல இருந்தைக் கண்டு மனதினுள் வெம்பியவன்.. சித்ரமாலா இன்று ஓர்யிடத்திற்கு கூட்டிப் போகிறேன். அங்கே வந்து பார்த்துவிட்டு நம் வாழ்க்கையைப் பற்றிய முடிவை எடுத்துக் கொள்ளலாம் சொல்லியவன் வண்டியை எடுத்து வேகமாகக் கிளம்பினான்.

அவன் பேசியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதைப் போல அமர்ந்திருந்தாள் சித்ரமாலா.

காரில் இருவரின் மௌனமும் குடிக் கொண்டிருக்க தூரத்தில் சூரியனோ மறைந்து இருளுக்கு வழிவிட.. அதைக் கண்டவளோ தன் வாழ்க்கையும் இருளில் முழ்கி தவிக்கப் போவதை கண்முன் காண்பதாக எண்ணித் தவித்தாள் சித்ரமாலா.

போகுமிடம் அறியாமலே தவிக்கும் பேதைக்கு அங்கே என்ன காத்திருக்கிறது அறியவில்லை .. அறிந்தால் அதன்பின் அவள் வாழ்க்கை எத்திசையில் கொடியேற்றும் அறியாமலே இருப்பவளை மனதால் அறிந்தவனோ முகம் இறுக காரை விரட்டிக் கொண்டிருந்தான்.





மன்னிச்சு தோழமைகளே.. எதிர்பாராத சில காரணங்களால் கதை தொடர் வரமுடியாமல் தாமதம் ஆகிவிட்டது .. இனி தொடர்ந்து வரும்.. சாரி, சாரி ..😍
 
Top