All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ராம்குமாரின் "நினைவில் உறைந்த என்னுயிரே!!!" - கதைத் திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவில் உறைந்த என்னுயிரே



உயிர் - 1




“யோவ் தாடி!”

அரட்டலான பெண்குரல் வந்த திசையை நோக்கி, எரிச்சலாக திரும்பியவன் நிச்சயம் சற்று ஸ்தம்பித்து தான் போனான்.
பேசும் துறுதுறு கருவிழிகளை கொண்ட கண்கள், கூரான நாசி, சிவந்த செப்பு இதழ்களுடன் கூடிய முகம், வெண்மை நிற மேனி என மொத்தத்தில் செதுக்கி வைத்த தேவதை சிலை போன்ற அழகி, இவனுக்காகவே சற்று கோபத்தை கடன் வாங்கி இருந்தாள்.

“அபி! கொஞ்சம் மரியாதையா பேசுடி"
அவளின் அருகில் இருந்த பெண், கண்களில் சற்று பயத்துடன் அவளிடம் கூறினாள். பின்னே, முறுக்கேறிய புஜங்களும் நரம்போடிய கைகளும் வலிமையான மார்பும் அடர்ந்த தலைமுடி மற்றும் தாடி என ஒரு ரவுடி போல் உள்ள ஒருவனிடம், மெல்லிய உடல்வாகு உள்ள பெண்ணவள் கோபத்துடன் கத்தினால் அவளும் தான் என்ன செய்வாள்?.

இதற்கிடையே, இவனை போல் உள்ள ஒரு தாடிக்காரனிடம் கண்ணசைத்து விட்டு முழுமையாக அவள் புறம் திரும்பி அவளை ரசித்துக்கொண்டிருந்தான், அவன்.

“நீ சும்மா இரு மலரு! பாக்க பைக் திருடுற பொறுக்கி மாதிரியிருக்க இவனுக்கெல்லாம் என்ன மரியாதை?” என மெல்லிய குரலில், அருகில் நின்ற பெண்ணை அடக்கியவள், இவன் புறம் திரும்பி,

“யோவ் தாடி! என்னோட பிங்க்- கில உனக்கென்னயா வேல?. எப்படி திருடிட்டு போலாம்னு பாத்துக்கிட்டு இருக்கியா?.”
காரம் சற்று தூக்கலாவே இருந்தது, அவள் குரலில்.

“இதுக்காகவே தியேட்டருக்கு வருவானுங்க போலிருக்கு” மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள்.

‘பொண்ணு பாக்க அழகா இருக்கு. கோபம் எக்குதப்பா வரும் போலிருக்கே. மரியாதை என்ன விலைன்னு கேப்பா போலிருக்கு. பொது இடம்னு கூட பாக்காம இந்த கத்துகத்துறா.’ இது தான் அவனுக்கு தோன்றியது, அவளை பார்க்கும் போது.

“இந்தாமா பொண்ணு! கொஞ்சம் மரியாதையா பேசு. பாரு எல்லாரும் என்னையவே பாக்குறாங்க. ஆமா பிங்க்கினா யாரு?”

“என்னாது பிங்க்கி யாரா?. நீ உக்காந்திருக்கியே ஸ்கூட்டி அதுதான் என்னோட பிங்க்கி. அதுசரி, பைக் திருடுற உனக்கெல்லாம் எதுக்குயா மரியாதை. மரியாதை தான் இப்ப ஒரு கேடா”

“பைக் திருட வந்தேன்னு நீ பாத்தியா?”
இதுவரை அவளையும், அவளின் பிங்க்கி – க்கான விளக்கத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளின் மரியாதை இல்லாத கோபப்பேச்சு கோபத்தை வரவைத்திருந்தது. விளைவு, அவன் கண்கள் லேசாக சிவந்து, முகம் சற்று கடினமானது.

அதை கண்டு பயந்தவள், பயத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு,
“பின்ன எதுக்கு என்னோட பிங்க்கில உக்காந்துயிருந்தீங்க”
மரியாதை எட்டி பார்த்து, அவள் குரலில்.

அதை புரிந்து கொண்டவன் தனக்குள் சிரித்து விட்டு,
“என்னோட ஃப்ரண்டு ஒருத்தனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
அவளின் பயத்தை கண்கள் காட்டிக் கொடுக்க, இவனும் தன் கோபத்தைக் கைவிட்டிருந்தான்.

“அப்ப என்னோட பிங்க்கில அங்கேயும் இங்கேயும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க” இன்னும் கோபத்தைக் கைவிடாமல் இருந்தாள்.

“அபி போலாம்டி. பிரச்சனை வேணாம்டி”
அருகில் இருந்த பெண் மீண்டும் இவளிடம் முணுமுணுத்தாள். அதையெல்லாம் சட்டையே செய்யாமல், அழுத்தமாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள்.

அவளின் அழுத்தப் பார்வையை பார்த்து வந்த சிரிப்பை இதழுக்கிடையில் மறைத்து,
“என்னோட ஃப்ரண்டு வரவரைக்கும் சும்மா பாத்துக்கிட்டு இருந்தது தப்பாமா” தன்மையாகவே கேட்டான் அவன்.

அவள், அவளின் பிங்க்கியை சுற்றும் முற்றும் பார்த்து, தடவிக் கொடுத்துக்கொண்டே,
“என்னோட பிங்க்கிய பாத்தது தப்பு தான்” அழுத்தமான விடாப்பிடியாய் அவள்.

அவன் வாய் திறப்பதற்குள், தொலைபேசி தன் இருப்பை நியாபகப்படுத்த வந்த வேலையை எண்ணி “ஸ்…” என்றவன், இவளிடம் இப்போதைக்கு ஜெயிக்க முடியாது என்றெண்ணி,
“ஓகே. சாரி மா பொண்ணு. தப்புதான் உன்னோட பிங்க்கில உக்காந்தது தப்புதான். மறுபடியும் மன்னிச்சுக்கோ. பாக்கலாம்”
என்று கூறி கிளம்பியவனை, அவளின் கோபக் குரல் நிறுத்தியது.

“பாக்கலாமா. நீங்க எதுக்கு என்னைய பாக்கணும்”
இப்போது அதிகார தோரணையில் வந்தது, அவள் குரல்.

“அபி விடுடி. பாவம்டி அவரு. அதான் சாரி சொல்லிட்டாருல” – அருகில் இருந்த பெண்.

‘என்னைய பாத்து பயந்து பம்முன பொண்ணு எனக்கு பாவம் பாக்குது. ம்…’ என எண்ணியவன், தலைக்கு மேல் கை குவித்து,
“அம்மா தாயே! இதுக்கும் சேர்த்து மன்னிச்சுக்கோ. நான் வரேன் தாயே!”
என கூறிக்கொண்டே நகர்ந்து விட்டான், இன்னும் நின்று கொண்டு இருந்தால் இதுக்கும் ஏதாவது கூறுவாளோ என்று. தியேட்டருக்கு வெளியே சற்று தள்ளி நிறுத்தியிருந்த, தன் காரில் ஏறிக் கிளம்பியவன் வாய், சிரிப்பில் விரிந்து கொண்டே அழகாய் முணுமுணுத்தது,
“பிங்க்கியாம் பிங்க்கி. சரியான வாயாடியா இருப்பா போலிருக்கு. ராட்சஷி.”

– அடிக்கடி நினைவிற்கு வரும் இந்த கடந்த கால சம்பவத்தினால் தூக்கம் களைந்தவன், எழுந்து அமர்ந்தான்.அவளை நினைத்தவன் வாய் கோபத்துடன் “துரோகி” என முணுமுணுத்துக் கொண்டது. எதற்கு இந்த கோபம்? அது அவனுக்கு தான் தெரியும். துரோகி என வாய் முணுமுணுத்ததே தவிர, மனது???. அதையும் அவனே அறிவான்.அவளின் நினைவை புறம் தள்ளியவன், கடிகாரத்தைப் பார்க்க, அது அதிகாலை மணி 5.17 எனக் காட்டியது.
இதற்கு மேல் தூக்கம் வராது என எண்ணியவன், டீசர்ட், ட்ராக் பேண்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு வாக்கிங் சென்று வந்தவன், பின் வீட்டில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை முடித்து, வியர்வை நீங்க குளிர்ந்த நீரில் குளியலை முடித்து, “ராகவ் மித்ரேஸ்வரன்” என்ற பெயர் பொறித்த பட்டையும் தோள்பட்டையில் 3 நட்சத்திரங்களும் IPS எழுத்தும் பொறிக்கப்பட்ட காக்கி சட்டை அணிந்து அசிஸ்டெண்ட் கமிஷனருக்குரிய லட்சணத்துடன் தயாரானவன், கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு, மாடிப்படிகளில் இருந்து இறங்கி சென்றான்.
ராகவ் மித்ரேஸ்வரன், 29 வயது நிரம்பிய மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரி. ஆறடி உயரம். உடற்பயிற்சியினால் உயரத்திற்கேற்றவாறு கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்தான். எலுமிச்சை நிற சருமம். தலைமுடியை, காவல்துறை அதிகாரிக்கேற்ப வெட்டி, தாடி மீசையை ட்ரிம் செய்திருந்தான். மொத்தத்தில் ஆணழகனாகவே விளங்கும் திறமையானவன். 26 வயதில் IPS தேர்வில் தேர்ச்சி பெற்று, மதுரை மாவட்டத்திற்கு AC யாக பதவியேற்றவன், அன்றில் இருந்து குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பணமாகவே விளங்கி வருகிறான்.
“அகில் டார்லிங்……”
தன் தந்தை வழி பாட்டி, அகிலாண்டத்தை அழைத்துக் கொண்டே உணவு மேஜையில் அமர்ந்தான்.
“வந்துட்டேன் மித்து டார்லிங்….” பேரனுக்கு குறையாத உற்சாகத்துடன் சாமி அறையில் இருந்து வந்தவர், தீபாராதனை தட்டை பேரனுக்கு நீட்டினார். தீபாராதனையை எடுத்துக் கொண்டவனுக்கு நெற்றியில் விபூதியை வைத்து விட்டார்.
“ம்… கொஞ்சமாச்சும் அழகா இருக்கேனா? பாத்துக்கிட்டே இருக்கியே அகில் டார்லிங்…” தினசரி வழக்கம் போல் பேரனின் அழகில் தன் மகனின் சாயலை ரசித்துக் கொண்டிருந்த அகிலாண்டத்தை மித்ரனின் குரல் கலைத்தது.
“என்னோட மித்து டார்லிங்… அழகுக்கு என்ன குறைச்சல்?” தன் பேரனின் அழகில் சற்று கெத்தாகவே வந்தது, அகிலாண்டத்தின் குரல்.
ராகவேந்திரன் – பூர்ணிமா அகிலாண்டத்தின் ஒரே மகன் மற்றும் மருமகள். ராகவேந்திரன் இன்ஸ்பெக்டராக இருந்தவர். ராஜேந்திரன் – அகிலாண்டத்தின் அருமை மகன். பரம்பரை சொத்துக்கள் ஏராளம், ராகவேந்திரனுக்கு. இருந்தும் அதற்கெல்லாம் ஆசைப்பட்டு நிர்வாகம் செய்யாமல், தனக்கு பிடித்த காவல்துறையைத் தேர்ந்தெடுத்தார். ராஜேந்திரனும் அகிலாண்டமும் மகனின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் பச்சைக்கொடியை காட்ட, தன் விருப்பப்படியே இன்ஸ்பெக்டரானர், ராகவேந்திரன்.
ராஜேந்திரன் தன் தூரத்து சொந்தத்தில் இருந்தது, பூர்ணிமாவை தன் மருமகளாக தேர்ந்தெடுக்க, அகிலாண்டம் விருப்பத்துடன் கணவரின் ஆசைக்கு இசைந்தார். ராகவேந்திரனுக்கும், அடக்கமாக அழகாக இருந்த பூர்ணிமாவை மறுக்க பெரிதாக எந்த காரணமும் இருக்கவில்லை. ஒரு நல்ல திருமண நாளில், ராகவேந்திரனின் கைப்பட்ட தாலி, பூர்ணிமாவின் கழுத்தில் ஏறியது.
ராஜேந்திரன் தனது தேர்வு சோடைபோகவில்லை, என்று பெரிமிதம் கொள்ளும் அளவிற்கு பூர்ணிமா நல்ல மருமகளாகவே வலம் வந்தார். ராகவேந்திரனும் தன் மனைவியை அன்பில் குளிப்பாட்ட, அடுத்த ஒரு வருடத்தில் ராகவ் மித்ரேஸ்வரனை பெற்றெடுத்தார், பூர்ணிமா. குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாக, எவ்வித துன்பமும் இன்றி சுமுகமாகவே சென்றது, ராகவேந்திரன் – பூர்ணிமாவின் இல்லற வாழ்க்கை.
மித்ரன் கல்லூரிக்கு சென்றிருக்க, பெரியவர்கள் வயதின் காரணமாக வீட்டில் இருக்க, சொந்தத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு, ராகவேந்திரனும் பூர்ணிமாவும் மட்டும் சென்றிருந்தனர். வீட்டிற்கு இருவரின் உடல்கள் மட்டுமே வந்தது. ஆம், இருவரும் சென்ற கார் விபத்துக்குள்ளானது. வீட்டின் மகிழ்ச்சியும் இருவரின் உயிருடன் சென்று விட்டது. 23 வயதில் தாய் தந்தையை இழந்து, தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர ஆரம்பித்தான், மித்ரன்.
தந்தையின் வழியைப் பின்பற்றி, தானும் காவல்துறை அதிகாரியானவன், முதலில் எடுத்த ஃபைல், தன் தாய் தந்தையின் கொலை கேஸ். ஆம், ராகவேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராஜேந்திரனை கேஸ் ஃபைல் பண்ண சொன்னவன், தானே அந்த கேஸ்ஸை கையில் எடுத்தான்.
அவனது சந்தேகம் சரி என்பதை நிரூபித்தது, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரின் வாக்குமூலம். லாரி டிரைவரை சரியான விதத்தில் கவனித்ததால், தான் கூலியாள் என்றும், ராகவேந்திரனின் எதிரிகள் தான் இதற்கு காரணம் என்றும் வாக்குமூலம் அளிக்க, அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தான்.
சிறிது காலத்தில் ராஜேந்திரன் காலமாகி விட, பாட்டியும் பேரனும் மட்டுமே எஞ்சி இருந்தனர், அந்த வீட்டில்.
கடந்த காலத்தை நினைத்தபடி, வேலைக்காரி சமைத்த உணவை பேரனுக்கு பரிமாறினார், அகிலாண்டம்.
பாட்டியின் சோக முகத்தை வைத்து, அவரின் மனநிலையை அறிந்தவன், அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, காவல் உடையில் உள்ளே நுழைந்தான், அவன்.
"வாப்பா முத்துப்பாண்டி... வா நீயும் சாப்பிடு" அகிலாண்டத்தின் குரலில் நிமிர்ந்த மித்ரன், முத்துப்பாண்டியை பார்த்து தலையசைத்து விட்டு, "நீயும் சாப்பிடு முத்து" என்றான்.
"இல்ல மித்ரா.. நான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு கிளம்பலாம்" என்றவன் இருக்கையில் அமர்ந்தான். "இப்போயெல்லாம் முன்ன போல வீட்டுக்கு வரதில்லையே பாண்டி" என வருத்தப்பட்ட அகிலாண்டத்திற்கு, சிரிப்பையே பதிலாக கொடுத்தான். அதற்குள் சாப்பிட்டு விட்டு கிளம்பியிருந்த மித்ரன், "விடு அகில் டார்லிங்.... அவனுக்கும் வேலை இருக்கும்ல" என்று பதில் கூறிக்கொண்டே, அகிலாண்டத்திடம் தலையசைத்து விடைபெற்று தன் ஜீப்பில் ஏறினான். அவனைத் தொடர்ந்து முத்துப்பாண்டியும் ஜீப்பில் ஏற, விருட்டென கிளம்பியது, ஜிப். "கவனம் மித்து..." என்ற அகிலாண்டத்தின் குரல் காற்றில் கரைந்தது.
முத்துப்பாண்டி, மித்ரனின் கண்காணிப்பில் உள்ள காவல்நிலையங்களில், ஒன்றில் இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளான். மித்ரனின் சிறுவயது நெருங்கிய தோழன். இருவரின் குழந்தைப் பருவத்தில் முத்துப்பாண்டியின் வீடு, மித்ரனின் வீட்டிற்கு அருகில் இருந்தது. சிறுவயதில் ஒன்றாக விளையாடி பழகிய இருவரும், காலப்போக்கில் நல்ல நண்பர்களானார்கள். முத்துப்பாண்டியின் குடும்பம், நடுத்தர வர்க்கத்தை விட சற்று தாழ்ந்தது. அவனின் அப்பா, அருள்நாயகம். பெயருக்கேற்ப எந்நேரமும் அருளிலேயே இருப்பவர், குடிபோதை அருள்.
அம்மா, பாண்டியம்மாள். அருள்நாயகத்தின் இரண்டாவது மனைவி. அருள்நாயகம் கொண்டுவரும் கொஞ்ச பணத்தை அச்சாரமாய் கொண்டு ஆடியசைந்து சென்றது, அவர்களின் வாழ்க்கை வண்டி. வசதி பாகுபாடு இருந்தும், அதெல்லாம் நட்புக்குத் தேவையில்லை என்பதை நிரூபிப்பதைப் போல் அழகாகவே சென்றது, மித்ரன் - முத்துப்பாண்டியின் நட்பு. இருவரும் வெவ்வேறு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த போதும், முத்துப்பாண்டியின் கல்லூரிப் படிப்புக்காக, அருள்நாயகத்தின் குடும்பம் வீடு மாறி சென்ற போதும், இருவரின் நட்பில் பிளவு ஏற்படவில்லை. அந்த நட்பு, இன்று வரை இருவரும் பணியில் சேர்ந்த பின்னும் தொடர்கிறது.
முத்துப்பாண்டியை அவனின் காவல் நிலையத்தில் இறக்கிவிட்ட மித்ரன், கமிஷ்னரின் அலுவலகத்திற்கு சென்றான்.
"குட்மார்னிங் சார்." அனுமதியுடன் கமிஷ்னரின் அறைக்குள் நுழைந்தவன், விறைப்பாக சல்யூட் அடித்து கமிஷ்னரின் முன் நின்றான்.
"ம்... குட்மார்னிங் மித்ரா." மெல்லிய சிரிப்புடன் தலையசைத்து அவனின் வணக்கத்தை ஏற்றவர், பதிலுக்கு தானும் வணக்கம் வைத்தார்.
"உட்காரு மித்ரா.." இருக்கையை காண்பித்தார்.
"தாங்க்யூ சார். என்னை வர சொன்னீங்கலாமே சார்.." இருக்கையில் அமர்ந்தவனின் கேள்வி.
"இது ***** ஏரியா ரௌவுடி உதயாவோட ஃபைல். அவனோட மொத்த ஜாதகமும் இதுல இருக்கு பாத்துக்கோ.... அவன நீ தான் அரஸ்ட் பண்ணனும்" மித்ரன் முன் ஒரு ஃபைலை வைத்தவர், அதனைப் பற்றிய விளக்கத்தை அளித்தார்.
"சார் இது நம்ம சந்துரு பாத்துக்கிற ஏரியா சார். பின்ன ஏன் என்கிட்ட....."
"தெரியும் மித்ரன். சந்துரு இப்போ சரியில்ல.... ஏதோ காதல் மயக்கத்தில் இருக்கிறது போல் இருக்கான். இதுக்கு நீ தான் சரி"
காதல் என்பதை கேட்டவுடன் மித்ரன் முகம் இறுகியது. நொடியில் அதை மாற்றியவன்,
"அவன் என்னோட ஃப்ரண்டு சார். அவன் ஏரியாவை நான் டீல் பண்ணா.... அது நல்லா இருக்காது சார்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சார்.." வேண்டுதலாய் மித்ரன்
.
"மித்ரன் நீ தான் புரிஞ்சுக்கணும். எனக்கு உதயாவோட அரஸ்ட் முக்கியம். வேணும்னா ஒன்னு பண்ணு. சந்துருவையும் இதுல சேத்துக்கோ. ஆனா உதயாவோட அரஸ்ட் முக்கியம் மித்ரன்." கட்டளையாய் கமிஷ்னர்.
அதை புரிந்து கொண்டவன் இனி வேறு வழியில்லை என்பதை அறிந்து, சரி சந்துருவை சமாளிப்போம் என்ற முடிவுடன்,
"ஓகே சார்... கூடிய விரைவில் உதயாவை அரஸ்ட் பண்ணிருவோம். வரேன் சார்" என்று சல்யூட் அடித்து விடைபெற, கமிஷ்னர் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே யாருக்கோ தொலைபேசியில் அழைத்தார்.
மதுரை மாவட்டத்திற்கு மித்ரனுடன் சேர்த்து, சந்துரு, ஜெகன், பிரகாஷ் என நான்கு AC - க்கள்.
சந்துருக்கும் மித்ரனுக்கும் இடைப்பட்ட நட்பு, IPS ட்ரெனியிங்கில் தொடங்கியது. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
கமிஷ்னர் அறையில் இருந்து வெளியில் வந்து சந்துருக்கு அழைத்து, "மச்சி வீட்டு வா டா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றவன் வீட்டுக்கு கிளம்பினான்.
"ஹாய் மச்சி...." ஆர்ப்பாட்டமான குரலுடன் உள்ளே நுழைந்தான், சந்துரு.
"வா டா... என்ன என்னோட தங்கச்சி மலர்விழி எப்படி இருக்கா?" என்ற மித்ரனின் கேள்விக்கு,
"ம்... நல்லா இருக்கா மச்சி" முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்துடன் பதில் கூறினான், சந்துரு.
அடுத்து எதையோ கேட்க வந்தவன், எதையோ நினைத்து முகம் இறுகினான்.
அவனை அவதானித்த சந்துரு, மித்ரனை மாற்றும் விதமாக, "ம்.. எதுக்கு மச்சி வர சொன்ன?? முக்கியமான விஷயம்ன்னு வேற சொன்ன.." என்க,
"ஆமா மச்சி. கமிஷ்னர் உதயாவோட ஃபைல குடுத்து, நம்ம ரெண்டு பேரையும் கேஸ முடிக்க சொல்லிருக்காரு" நினைத்தது போலவே, தீவிர முகப்பாவத்துடன் அவனை அழைத்ததற்கான காரணத்தைக் கூறினான்.
"அப்ப என்னையும் கூப்பிட்டு இருக்கணும்ல நண்பா" நமட்டுச் சிரிப்புடன் சந்துரு கூற,

"அவசரத்துல என்னை மட்டும் கூப்பிட்டாருன்னு நினைக்கிறேன்" தொண்டை வரை வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே மறைத்து, தீவிர முகபாவனையை மாற்றாமல் கூறினான்.

"இரு உனக்கு ஒன்னு தெரியாதுல... கமிஷ்னர் சொல்லலைன்னு நினைக்கிறேன். கமிஷ்னர் உனக்கு முன்னாடியே எனக்கு, மித்ரன் கிட்ட இந்த கேஸ கொடுக்க போறேன்னு சொல்லிட்டாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, என் மலர் கூட ஊர் சுத்தலாம்ன்னு நினைச்சா, நீ என்னடானா என்னையும் இதுல இழுத்து விட்டிருக்க. நான் ஜாலியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?" ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே கூறியவன், முடிக்கையில் பொய் கோபத்துடன் முடித்தான்.

'கமிஷ்னருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. கமிஷ்னர் மாதிரியா பீகேவ் பண்றாரு' என நினைத்துக் கொண்டே, சந்துரு முன் அசட்டு சிரிப்பு சிரித்தான்.
கமிஷ்னர் பார்த்திபன், சந்துருவின் தாய் மாமா என்பதால், இருவருடனும் சற்று இணக்கமாக இருப்பார். பார்த்திபன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் சந்துருக்குத் தான்.
"எது எப்படியோ... நாம உதயாவோட கேஸ முடிக்கிறோம். இப்பயே அந்த வேலைல இறங்குறோம்..." என்றவன் எழுந்து நடக்க ஆரம்பிக்க, "இல்ல மச்சி... நான் என் ஆளு கூட ஊர் சுத்தனும். நான் வரல..." வாய் தான் அப்படி கூறியதே தவிர, கால்கள் மித்ரனுடன் நடக்கத்துவங்கியது.
விசாரித்தவரை உதயா, அவனின் குடோனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க இருவரும் அவனைக் கண்காணிக்கத் தொடங்கினர். அவன் குடோனில் இருந்து வெளியேறிய சமயம், இருவரும் பிரிந்து சென்று அவனைக் குறிப்பிட்ட தூரத்தில் பின் தொடர்ந்தனர்.

ஒரு மருத்துவமனை முன், தொலைபேசியை குனிந்து பார்த்துக்கொண்டு நடப்பது போல், உதயாவை பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தவனை, தெரியாமல் ஒரு இளம்பெண் மோதினாள்.
"சாரி... சாரி... சார்" என்று மன்னிப்பு கேட்டவளை, பழக்கமான குரல் போல் உள்ளதே என்று நினைத்து மித்ரன் நிமிர்ந்து பார்த்தான். இவன் நிமிர்ந்து பார்த்தவுடன், மன்னித்து விட்டான் என எண்ணினாள் போலும் அவள், கிளம்பிவிட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்து திகைத்து நின்றவன் வாய் முணுமுணுத்தது, "யாழ் பேபி.....". இவன் திகைத்து நிற்பதை பார்த்து அருகில் வந்த சந்துரு, "யாரு டா?" என்க, அதே திகைத்த முகத்துடன் கூறினான், "அபிக்ஸா யாழினி".





உறையும்.....
 
Last edited:

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் – 2



அவர் ஒரு நல்ல உண்மையான நேர்மையான அரசியல்வாதி, அவரின் கட்சிக்கும் கட்சிதலைவர்களுக்கும் மட்டும். மற்றபடி, தேர்தல் நேரங்களில் மக்களிடம் குழைந்து கும்பிடு போட்டும், ஆட்சி காலத்தில் விஷம் கக்கும் பாம்பின் இனத்திலும் சேர்ந்துவிடும், கேடுகெட்ட அரசியல்வாதிக்கான தகுதியும் லட்சணமும் சரிவர நிரம்பப் பெற்றவர்.

தொலைபேசியை அடிக்கடி பார்த்தவாறு, அவரின் அறையில் அமர்ந்திருந்தார். அவரின் செய்கையை பார்க்கும் போது ஏதேனும் அழைப்பிற்கோ, தகவலுக்கோ காத்திருப்பது போல் இருந்தது.

அவரின் காத்திருப்பை பொய்யாக்காமல், பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய கோப்பு, அவர் தொலைபேசியின் வாட்சப் கதவினை தட்டியது. அதற்கு அறிகுறியாய், "டொயிங்..... டொயிங்......" என்ற மெசேஜ் ரிங்டோன் ஒலி.

அவ்வொலியை கேட்டவுடன் அவரின் மூளை, கள்ள சிரிப்பு ஒன்றை நெளியவிட்டது, அவரின் உதட்டில். இருக்காதா பின்னே, எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டு இருக்கிறாரோ..?. கைகள் வேகமாக தொலைபேசியை திறந்து, கண்கள் அந்த பெண்களின் புகைப்படங்களைப் பார்க்க, அந்த படங்களுடன் ஒட்டுதலாய் ஒரு செய்தி, "பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்க" என்று. அந்த வாக்கியத்தின் ஒரு எழுத்து கூட அவரின் மேல் கோபம் கொள்ளாதவாறு, அந்த வாக்கியம் கொடுக்கும் அர்த்தத்தை செம்மையாய் நிறைவேற்றினார், அவர்.

"இந்த பொண்ணுனா, அமோண்ட் 10,000/-"

"ம்…சரி.."

"எங்க அனுப்பி வைக்கணும்.."

"என்னோட கெஸ்ட் ஹவுஸ்.."

"எத்தனை மணிக்கு இருக்கணும்..."

"இன்னைக்கு நைட் 7 மணிக்கு..."

"ஓகே. பொண்ணு அங்க இருக்கும். பணத்த அந்த பொண்ணுட்டயே கொடுத்துடுங்க...."

"வேலை முடிஞ்சதும் இந்த வாட்சப் அக்கோண்ட் - ஐ டெலிட் பண்ணிடுங்க.."

"ம்ம்ம்...."


இது தான் அவருக்கும், அந்த யாரோக்கும் நடந்த வாட்சப் உரையாடல். ஆம், அவர் பேசியது விபச்சாரப் புரோக்கரிடம் தான். விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, அதை செம்மையாக வளர்க்கவும் செய்கின்றனர்.

ஆடம்பரத்திற்கு நானும் ஒரு அடையாளம் தான் என்ற செருக்குடன், சில கோடிகளை தன்னுள் விழுங்கிக் கொண்டு, பிரம்மாண்டமாகவே உயர்ந்து நின்றது, அந்த கெஸ்ட் ஹவுஸ்.

உள்ளே நுழைந்த அந்த பெண்ணை எவ்வித கேள்வியும் இன்றி அனுமதித்தார், காவலாளி. அந்தப் பெண்ணும் எவ்வித கூச்சமும் இன்றி உள்ளே நுழைந்தாள்.

அந்த கெஸ்ட் ஹவுஸின் செழுமை அவளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. இது போல் எத்தனையை பார்த்திருப்பேன் என்ற ஏளனம் மட்டுமே, அவள் கண்களில்.

வாய் நிறைய பல்லுடனேயே அவளை வரவேற்றார், அவளுக்கு அப்பா வயதில் உள்ள அந்த அரசியல்வாதி. ஆம், அவளுக்கு ஒரு 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் தான் இருக்கும். ஆனாலும், அவளுக்கு அதெல்லாம் பற்றிய கவலை இல்லை போலும். கொடுக்கும் பணத்திற்கு வேலை என்பதை போல் இருந்தது, அவளில் அந்த கேள்வி,

"பெட் ரூம் எங்க இருக்கு சார்..?".

"ஹா... ஹா... ஹா... வாம்மா..."

'என்னவோ அவர் அழகில் மயங்கி இப்படி கேட்கிறாள்' என்று நினைத்திருப்பார் போலும், அப்படி ஒரு சத்தமாக சிரிப்பு, அவரின் வாயில் இருந்து. அந்த நேரம் அவரின் மனைவி, இவளின் வயதில் உள்ள அவரின் மகள் என அவரின் குடும்பம் பற்றிய நினைப்பெல்லாம் இருக்குமோ? அல்லது பூஜை வேலை கரடி போல் அந்த நினைப்பு, என்று ஒதுக்கி வைத்து இருப்பாரோ என்னவோ?.

அந்த பெட் ரூம் உள்ளே சென்றவள், கேமரா ஏதும் உள்ளதா? என அவளால் முடிந்த அளவு தேடிப்பார்த்தாள். இவள் தேடுவதை பார்த்த அவர்,

"கேமராலாம் இல்லமா... எல்லாரும் வந்த உடனே இதைத்தான் பாக்குறீங்க" சலிப்பாய் வந்தது அவர் குரல்.

அனுபவம் தான் காரணம் போலும், அவரின் இந்த பதிலுக்கு.

"இருந்தாலும் செக் பண்ணிறனும் - ன்னு சொல்லிருக்காங்க சார் ப்ளீஸ்.... உங்க மொபைலை தாங்க சார் சுவிச்ஆஃப் பண்ணனும்" வேண்டுதலாய் அவள்.

"நானே பண்ணிட்டேன்.."

"ஓகே சார்..."

சில மணி நேரங்களுக்குப் பின், வேலை முடிந்து அவளுக்கானப் பணத்தை வாங்கிக்கொண்டு அவள் கிளம்பினாள்.

மீண்டும் அதே வாட்சப் எண்ணிற்கு, "அடுத்த தடவை ஃப்ரஷ் பீஸா அனுப்பு" என்ற செய்தியை பரிசளித்து, அந்த எண்ணை டெலிட் செய்தார், அவர்.

********************

மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது மித்ரனை மோதி, அவனிடம் சாரி சொல்லி விட்டு, ஏதோ யோசனையிலேயே வந்தவளை,

"அபி.. என்னடி யோசிக்கிற?" என்ற மலர்விழியின் குரல் நனவுலகிற்கு இழுத்தது.

"ப்ச்... ஒன்னும் இல்ல மலரு..." பதிலாக வந்தது, அபியின் குரல்.

"பின்ன ஏன் ஒரு மாதிரியா இருக்க?" உன்னை நான் அறிவேன் என்பதைப்போல் மலரின் குரல்.

"இல்ல அவர்........" என்று முணுமுணுத்து, "ப்ச்.. விடு மலரு..." என்று மலருக்கு பதிலளித்த அபியின் மூளைக்குள், ஏதேதோ தெளிவில்லாத நினைவுகளின் ஊர்வலம். அத்தகைய தெளிவில்லாத நினைவுகளிலும், அவளைப் பொறுத்தவரை அவனாக மட்டும் இருக்கும் மித்ரனின் முகம், அவள் மனதில் தெளிவாகத் தோன்றி இம்சையிக்க, திடுக்கிட்டு தான் போனாள், பாவையவள்.

'சில நொடி கூட ஒழுங்காகப் பார்க்காத அவனின் முகம் எப்படி என் மனதில்?' என்று மூளை வேறு தன் பங்கிற்கு அவளைக் குழப்ப, 'அவன் முகம் என்னிடத்தில் பத்திரமாக பதிவாகியுள்ளது' என்று பெருமையுடன் பதிலளித்தது, மனது. மூளைக்கும் மனதுக்கும் இடைப்பட்ட விவாதத்தில் மேலும் திண்டாடித்தான் போனாள், பெண்ணவள்.

'இது சரிப்படாது... எதையும் யோசிக்கக் கூடாது' என்று முடிவெடுத்தவள், மூளைக்கும் மனதுக்கும் தற்காலிகமாக விடுமுறை அளித்து விட்டாள். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, இருவரும் அவளது பிங்கியில் வந்து சேர்ந்த இடம், ஒரு பெண்கள் விடுதி.

"அபிக்ஸா யாழினி" இது தான் அவளின் முழுப் பெயர். 26 வயது நிறைந்த அழகிய இளம் பெண். அவளுக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தாள். அபியின் நெருங்கிய உயிர் தோழி, மலர்விழி. அவளுக்கும் 26 வயது தான். மலர்விழியும் குழந்தைப் பருவத்தில் இருந்தே அதே ஆசிரமத்தில் தான் வளர்ந்தவள். சிறுவயதில் இருந்தே ஒன்றாக உண்டு, விளையாடி, படித்து, தூங்கி என இருவரும் ரொம்பவும் நெருங்கிப் போயினர். ஒவ்வொருத்தரும் தனியாக இருந்த மணி நேரங்களை எண்ணிப் பார்த்து விடலாம். அந்தளவு இருவரும் எப்போதும் சேர்ந்தே சுற்றுவர். சுருங்க கூறினால், அவளுக்கு இவள் உறவு, இவளுக்கு அவள் உறவு.

இருவரும் அரசுப்பள்ளியில், தொடக்கக்கல்வி மேல்நிலைக்கல்வியை முடித்தனர். இருவரும் நன்றாகப் படிப்பவர்கள் என்பதால், ஒரே கல்லூரியில் இடம் கிடைக்க, நல்ல முறையில் பட்டப்படிப்பை முடித்து பட்டதாரியானார்கள். அதன்பின் இருவரையும் வெளியேறும் படி ஆசிரம அதிகாரி கூற, இனி சொந்த காலில் தான் நிற்க வேண்டும் என்ற உண்மை புரிய, இருவரும் பெண்கள் விடுதியில் அறை எடுத்து அடைக்கலம் ஆனார்கள். பணத் தேவையை சமாளிக்க, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருவரும் சேர்ந்தனர். இப்போதும் அதே பள்ளியில் தான் பணியைத் தொடர்கின்றனர்.விடுதி அறைக்கு வந்த அபி,

" மலரு.... எக்ஸாம் பேப்பர் திருத்தனும்டி... எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு...நான் தூங்குறேன்… நீ திருத்திடுடி.." என்றபடி படுக்கை அறைக்குள் நுழையப் பார்க்க, அவளை அறிந்த மலர்விழி, அபியின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி,

"அதை நான் பாத்துக்குறேன்...... நீ இந்த மாத்திரையை சாப்பிடு...." என்று தண்ணியையும் பத்து மாத்திரைகளையும் கை நிறைய வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

சிறுவயதில் இருந்தே அபிக்கு, 'மாத்திரை அவளின் வாய்க்குள் மட்டும் கசக்கிறது' என்ற நினைப்பு. எனவே அபிக்கு மாத்திரையுடன் சிறுவயதில் இருந்தே சண்டை. அதனால் உண்டான விரோதத்தில், மாத்திரையைக் கண்டால் விரோதியாய் எண்ணி, பத்தடி தள்ளி நிற்பாள். விரோதியாய் கண்டால் விலகி நிற்பது நல்லது என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம். சிறுவயதில் இருந்தே அபியை மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் மலர்விழிக்கு, போதும் போதும் என்றாகி விடும்.

அவளை அறிந்த மலர்விழி கண்டிப்பான குரலில் மாத்திரை சாப்பிடும் படி கூற, மாத்திரையைப் பார்த்தவள் முகம் அஷ்டகோணலானது. அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் வாய், சிரிப்பை அடக்கும் போட்டியில் இறங்கியது. ஒரு வழியாக அந்த போட்டியில் வெற்றி பெற்று, முகத்தை முடிந்த அளவு கடுமையாக வைத்திருந்த மலர்விழியைப் பார்த்த அபி, முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு,

" மலர் செல்லம்... டெய்லி மாத்திரை போடுறேன்ல... இன்னைக்கு மட்டும் மாத்திரை வேண்டாம் செல்லம்... ப்ளீஸ்.... ப்ளீஸ்... என் பட்டுக்குட்டில..... செல்லக்குட்டில.... ப்ளீஸ்..." என்று கெஞ்சியபடி, கொஞ்ச ஆரம்பித்தாள். அவளின் முகபாவனையில் இளக முயன்ற மனதை கட்டுப்படுத்தி,

"முடியாது அபி செல்லம்... நேத்தும் இதே பதிலை தான் சொன்ன... இன்னைக்கு நீ மாத்திரை சாப்பிட்டே ஆகணும்.." கண்டிப்பாய் கூறினாள், மலர்விழி. அவள் சற்று அசந்த நேரத்தில், தன் கையை உருவிக் கொண்டு,

"அப்படினா எனக்கு பதிலா நீயே சாப்பிடு மலர் செல்லம்..." என்று கூறிக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள், அபி.

"இன்னைக்கும் தப்பிச்சிட்டா…. இவள திருத்தவே முடியாது..." என்று சிரித்தபடி முணுமுணுத்துக் கொண்டே, மலர்விழி பேப்பரை திருத்த சென்றாள்.

******************

"அபிக்ஸா யாழினி" என்று திகைத்த முகத்துடன் கூறிய மித்ரனை பார்த்த சந்துரு, "அட...ச்சே..." என்று முணுமுணுத்துக்கொண்டான், அவனின் காதலியை பார்க்க முடியாமல் போன ஆதங்கத்தில். அவன் கவலை அவனுக்கு.

வாய் தான் அப்படி முணுமுணுத்தது என்றால் மனதோ, 'இனியாவது எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும்' என்று முணுமுணுத்தது.

விதியும் முணுமுணுத்துக்கொண்டது, "ம்.. பார்க்கலாம்... பார்க்கலாம்..." என்று.

"இப்ப அதுக்கென்ன மச்சி... வா... நமக்கு வேல இருக்கு... இல்ல கமிஷ்னர் நமக்கு பொங்கல் வச்சுருவாரு.." என்று மித்ரனின் மனநிலையை மாற்ற, கடமை என்னும் ஆயுதத்தை சந்துரு பயன்படுத்த, அது சரியாய் வேலை செய்தது, மித்ரனிடம்.

'யாழ் பேபி' என்று தன்னையும் மீறி மனது முணுமுணுத்ததை நினைத்து வெட்கியவன், "துரோகியை நினைக்காதே மனமே" என்று கோபத்துடன் மனதை அடக்கியவன்,

"ஆமா.. ஆமா.. சந்துரு. நமக்கு வேலை தான் முக்கியம்" என்று சந்துருவிடம் கூறியவன், உதயாவை பின் தொடர வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

உதயாவை பின் தொடர்ந்தே வந்த இருவரும், அவன் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தெருவில் நுழைவதைப் பார்த்தவர்கள், அவனை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில், அவன் கைகளில் விலங்கை மாட்டி கைது செய்தனர். சந்துரு, ஜீப் டிரைவருக்கு அழைத்து ஜீப்பை கொண்டு வர சொல்ல, ஜீப் வந்தவுடன் அதில் உதயாவை ஏற்றி, சந்துருவின் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

காவல் நிலையம் செல்லும் வழியில் மித்ரன், கமிஷ்னருக்கு அழைத்து விஷயத்தை கூறினான். கமிஷ்னர் இருவரையும் பாராட்டியவர், உதயாவை கோர்ட்டில் ஒப்படைக்கக் கட்டளையிட்டார். அதற்கு சரி என்றவன், சந்துருவின் காவல் நிலையம் வந்த பின் அவனிடம் இருந்து விடை பெற்று தன் காவல் நிலையம் வந்து சேர்ந்தான்.

காவல் நிலையம் வந்த மித்ரனுக்கு, மீண்டும் அபியின் நினைவுகளே. 'என்னை உண்மையில் கவனிக்கவில்லையா? அல்லது கவனித்தும் வேண்டும் என்றே கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டு சென்றாளா?' கேள்விகளுக்கு பதில் தான் இல்லை அவனிடம்.

'தப்பு பண்ணிட்ட யாழ் பேபி... நீ என் கண்ணில் பட்டிருக்க கூடாது... பட்டிருந்தாலும் என்னை புறக்கணித்திருக்க கூடாது... இனி என்னால் உன்னை பிரிந்திருக்க முடியாது... எனக்கு நீ வேணும் பேபி... எனக்கு நீ வேணும்...' காதலாய் கூறினானா? அல்லது கோபமாய் கூறினானா? அது அவனுக்குத் தான் தெரியும். பின் வேலையில் கவனம் செலுத்தியவன், வழக்கத்திற்கு மாறாக வேகமாகவே வீடு திரும்பினான்.

"அகில் டார்லிங்..... அகில் டார்லிங்...." வேலை செய்த களைப்பு இருந்த போதும் உற்சாகமாகவே இருந்தது, மித்ரனின் குரல்.

" ம்ம்.. இங்க இருக்கேன் மித்து டார்லிங்... என்ன இன்னைக்கு வேகமாகவே வந்துட்ட டார்லிங்..."

"அதுவா டார்லிங்... எனக்காக என்னோட அகில் டார்லிங் ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கிறதா ஒரு பட்சி சொல்லுச்சா.... அதான் உடனே கிளம்பிட்டேன்..."

" அச்சோ மித்து டார்லிங்... பட்சி உன்கிட்ட தப்பா சொல்லிருக்கு... நான் காத்துக்கிட்டு இருந்தது உண்மைதான்... ஆனா உனக்காக இல்ல.... அடுத்து போடப் போற சீரியலுக்கு டார்லிங்..."

"போ... டார்லிங் உன்னோடக் காமெடி நல்லா இல்ல..."

"உன்னோடது மட்டும் நல்லா இருக்குன்னு நினைப்பாக்கும்.... போடா..." என்று அகிலாண்டம் முகவாயை தன் தோளில் இடிக்க,

"ஐயோ... என் அகில் டார்லி அவ்வளவு அழகு.... அழகி அகில் டார்லிங்... உம்மா....." என்று அகிலாண்டத்தின் கன்னத்தில் பாசத்தோடு உம்மா வைத்தான், மித்ரன்.

"போடா கிறுக்கா... பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் எனக்கு கொடுக்கிறான்.."

பொண்டாட்டி என்றவுடன் மித்ரனுக்கு அபியின் நினைவுகள், அவளை நினைத்தவுடன் ஒரு மந்தசாக புன்னகை மித்ரனின் உதட்டில் வந்து அமர்ந்தது.

"பொண்டாட்டி வந்தாலும் உனக்கு நான் இது மாதிரி நிறைய தருவேன் அகில் டார்லிங்..."

"அதுக்கு உன் பொண்டாட்டி விடணும்ல…." என்று மெல்ல முணுமுணுக்க, அது மித்ரன் காதில் விழ,

"பார்ரா…. பொறாமையா அகில் டார்லிங்?... கவலை படாத... நிச்சயம் உனக்கு தெரிந்தவள், உன்னைப் புரிந்தவள் தான் என் பொண்டாட்டி... ஓகே.."

"அபியா மித்து டார்லிங்?" ஏகத்துக்கும் சந்தோசத்துடன் கேள்வி வந்தது அகிலாண்டத்திடம் இருந்து.

அதற்கு, மித்ரன் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தான். இருவருக்கும் என்னப் பிரச்சனை என்று தெரியாமலும், பேரன் இன்னும் கல்யாணத்திற்கும் சம்மதிக்க மாட்டேன் என்கிறானே என்று கவலையில் இருந்த அகிலாண்டத்திற்க்கு, பேரனின் புன்னகையை பெருத்த ஆறுதலை தந்தது. பேரன் இனி அனைத்தையும் சரிசெய்து விடுவான் என்று நினைத்து மகிழ்ந்தவர், மித்ரனை சாப்பிட அழைக்க, இருவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு சென்றனர். அறைக்கு வந்த மித்ரன், தன் தொலைபேசியில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்த அபியைப் பார்த்து, தானும் சிரித்தவன் புன்னகையுடனேயே உறங்கிப் போனான்.

********************

அதே இரவில், அப்போது தான் உறங்கச் சென்ற அவளை தடுத்து நிறுத்தியது, அவளின் கைபேசி ஒலி. என்னவென்று பார்க்க, செய்தி வந்ததன் அடையாளமாய், நோட்டிபிகேஷன் பட்டியலில் மின்னிக்கொண்டிருந்தது, அந்த ஒரு புதிய எண்.

யாராக இருக்கும் என்ற சிறு குழப்பத்துடனேயே, செய்தியை திறந்து பார்த்தவளின் மூளை சற்று அதிர்ச்சியடைந்து, " நீ பார்ப்பது நிஜம் தானா?" என்று கண்ணிடம் கேள்வி எழுப்ப, மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்து, " நான் பார்ப்பது உண்மையேதான்" என்று சத்தியம் செய்து, அடித்து சொல்லியது அவளின் கண். மூளை இப்போது நன்றாகவே அதிர்ச்சியை காட்ட, அதன் விளைவு, அவளின் பூமேனி பயத்தில் நடுங்கி வியர்வையை உற்பத்தி செய்ய, உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தாள், பெண்ணவள்.

'நாங்கள் வந்த வேலை, எதிர்பார்த்தது போல் சிறப்பாகவே முடிந்தது' என்று, அவளின் அதிர்ச்சியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன, அவள் உடை மாற்றும் வீடியோவும், நிர்வாண புகைப்படமும்.




உறையும்…….
 
Last edited:

Ramkumar M

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் - 3





இரவு மணி 1 ஆன பின்னும் கூட தூங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், கண்ணில் ஒரு துளி தூக்கமும் இல்லாமல், சத்தமில்லாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள், அவள். அவள் கண்களில் இருந்தது துக்கமும் பயமும் மட்டுமே. வறுமை குடும்பத்தை பின்புலமாக கொண்ட, வேலைக்கு செல்லும் இளம்பெண், அவள்.

சில மணிநேரங்களுக்கு முன், அவளது தொலைபேசிக்கு வந்த அவளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்து அதிர்ந்த அவளை, பயத்தின் உச்சியில் ஏற்றி வைக்கவே அவளின் கைபேசிக்கு அதே எண்ணில் இருந்து வந்தது, அந்த அழைப்பு.

நடுங்கும் கைகளை கஷ்டப்பட்டு நகர்த்தி, அந்த அழைப்பை ஏற்று, தொலைபேசியை காதுக்கு குடுத்து,
"ஹாலோ... யாரு நீங்க....?" பயத்துடன் பாவையவள் வாயில் இருந்து வந்தது, இந்த கேள்வி.

"நான் யாருங்கிறது அவ்வோ முக்கியமா உனக்கு?.... ம்..... உனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லனும்னா..... உன்னை போட்டோ, வீடியோ எடுத்து அதை உனக்கு அனுப்புன ஆள் நான் தான்." எனக்கு ஒரு முப்பது வயது இருக்கலாம் என்று உணர்த்திய ஆண் குரல், அவளின் கேள்விக்கு பதிலை கூறியது.

"சார்... அந்த போட்டோவையும் வீடியோவையும் டெலிட் பண்ணிடுங்க சார்... ப்ளீஸ்... நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்.... ப்ளீஸ் டெலிட் பண்ணிடுங்க சார்...." தழுதழுக்கும் அழுகை குரலில் பயத்துடன் கெஞ்சலாய், அவள்.

"ஏம்மா.... ஈஸியா டெலிட் பண்ண சொல்லுற... டெலிட் பண்ணுறதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு, உன்னை இந்த கோலத்தில் போட்டோ எடுத்து, இப்ப உன் கூட பேசிக்கிட்டு இருக்கிறேன்..." நக்கலாய் அந்த ஆண் குரல்.

"சார்.... நான் ஏழை வீட்டுப் பொண்ணு... இது என் குடும்பத்திற்கு தெரிஞ்சா, தூக்குலயே தொங்கிடுவாங்க சார்.... ப்ளீஸ்..... டெலிட் பண்ணிடுங்க...." இப்போது முழுமையான அழுகை குரலில் அவள்.

"ஏம்மா.... இப்ப எதுக்கு அழுற.... போட்டோவை டெலிட் பண்ணனும் அவ்வளவு தானே.... பண்ணுறேன்..... ஆனா நீ அதுக்கு பதில, எனக்கு ஒரு உதவி பண்ணணுமே...." மெல்ல வலை விரித்தது, அந்த ஆணின் குரல்.

"என்ன பண்ணனும் சார்.... சொல்லுங்க பண்ணுறேன்..." எப்படியோ, இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்கிற, ஓரளவு தெளிந்த ஆர்வ குரலில் அவள்.

"ஒன்னும் இல்லமா.... நான் ஒரு கெஸ்ட்ஹவுஸோட அட்ரஸ் தரேன். அது என்னோட ஃப்ரண்டு கெஸ்ட்ஹவுஸ் தான். நீ அங்க போய், அவரு சொல்லுற வேலைய செய்..... நீ வேற... ஏழை வீட்டு பொண்ணுன்னு சொன்ன, அவரு பணமும் தருவாரு வாங்கிக்கோ......என்ன சொல்லுற.... கெஸ்ட் ஹவுஸ் போறியா.....?" இப்போது, விரித்த வலையில், மீன் சிக்குமா என்று காத்திருந்தது, அந்த ஆண் குரல்.

"என்ன..... வேலை சார்....?" மனதில் எச்சரிக்கை உணர்வுடன் சந்தேக குரலில் அவள்.

"ஒரு நாள் நைட் மட்டும் அவரு கூட இருக்கணும்.... அவ்ளோதான்..." இலகுவாய் கூறியது, அந்த ஆண் குரல்.

"என்னால முடியாது சார்..." தன் குடுமி அவன் கையில் என்பதை மறந்து, தைரியமான குரலில், வெடுக்கென பதில் வந்தது அவளிடம் இருந்து.

"இரு மா... இரு மா... எதுக்கு இவ்ளோ அவசரமா பதில் சொல்லுற..... உனக்கு ஒரு விஷயம் சொல்லுறேன்.... அப்புறம் உன் முடிவை சொல்லு......
எனக்கு ஒரு பழக்கம் இருக்கு..... எல்லா சோசியல் மீடியாலையும் நான் அக்கோண்ட் வச்சுக்குவேன்.... ஏன்னா... எனக்கு ஏதாவது போட்டோ இல்ல வீடியோவை, வைரல் ஆக்குறதுனா ரொம்ப பிடிக்கும்....
இப்ப வேற லட்டு மாதிரி, உன்னோட போட்டோ, என்கிட்ட இருக்கு... அதிலும் நீ ரொம்ப 'அழகா' இருக்க.... உனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக வாய்ப்பிருக்கு....
வைரல் ஆக்க வேண்டியது என்னோட பொறுப்பு... என்ன சொல்லுற.... ஆன, இதுல ஒரே ஒரு பிரச்சனை.... உன்னோட குடும்பம் தூக்குல தொங்கிருவாங்கன்னு சொன்ன.... அத மட்டும் யோசிக்க வேண்டி இருக்கு.... என்ன செய்ய, ஒன்னு கிடைக்கணுன்னா... ஒன்ன இழந்து தானே ஆகணும்..." அழகு என்ற இடத்தில் மட்டும் அழுத்தம் கொடுத்து, மற்றபடி சாதாரண குரலில், ஒரு பெண்ணிடம் குரூரத்தை (வீரத்தை) காட்டியது, அந்த உண்மையான ஆணின் குரல்.

"ஏன் சார் இப்படியெல்லாம் பேசுறீங்க...." அந்த ஆணின் ஒவ்வொரு வரிக்கும், அவளின் குரலில் இருந்த தைரியம், 'ஐய்யோ.. இந்த ஆட்டத்திற்கு, நான் வரலைப்பா..' என்று ஓடி ஒளிந்து கொள்ள, இப்போது அவள் குரலில், அந்த இடத்தை ஆட்சி செய்வது, அழுகையின் முறையானது.

"எனக்கும், உன் குடும்பம் தூக்குல தொங்கனும்ன்னு ஆசையெல்லாம் இல்லை... நான் சொன்ன வேலையை செஞ்சா ஒருத்தர் மட்டும் உன் அழகை ரசிப்பாரு... இல்ல இந்த உலகமே உன் அழகை ரசிக்கும். அப்படி நடந்தா... அப்புறம் நான் சொன்னது தான் நடக்கும். அதான்.. உன் குடும்பம் தூக்குல தொங்குறது... அது தான் உன் ஆசையா....?" எனக்கு இப்படி எல்லாம் மிரட்டுவதில் அனுபவம் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில், அந்த ஆணின் குரல்.

"........." மௌனமாய் அவள்.

"நல்லா யோசி..... நான் நாளைக்கு உனக்கு கால் பண்ணுறேன்..... அப்ப உன் முடிவை சொல்லு..... நல்ல முடிவா சொல்லு..." யாருக்கு நல்ல முடிவோ?? அவனுக்கா..? அவளுக்கா..?. மேலும்,

"இப்ப நல்லா தூங்குமா.... உடம்பு முக்கியம்ல....." என்றது, ஆடு நனைவதை பார்த்து, நரிக்கு வரும் அக்கறையான குரலில், பெண்ணின் (உடல்) மேல் பாசம், அக்கறை வைத்துள்ள, அந்த நல்ல ஆணின் குரல்.

அவளின் தூக்கத்தை அந்த தொலைபேசி வழியாக எடுத்து சென்ற பின், எப்படி 'நல்லா' தூங்குவாள்?. அப்போது இருந்து அழுக ஆரம்பித்தவள் தான், நான் விடியும் வரை கூட அழுவேன் என்று கடிகார முள்ளுடன் போட்டி போட்டு, மணி 1 ஆனப் பின்னும் கூட இன்னும் அழுதுக்கொண்டிருக்கிறாள்.








"ஏய்... கும்பகர்ணி எந்திரிடி.... மணியை பாரு... 8 ஆகுது.... 9 மணிக்கெல்லாம் ஸ்கூல இல்லாட்டி, அந்த 'மில்கி பேய்' நம்ம தலை மேல ஏறி உக்காந்துக்கிட்டு, நம்மள ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிரும்...." என்று ஏறக்குறைய கோபத்தில் கத்தவே செய்தாள், மலர்விழி.

பின்னே, 6 மணியில் இருந்து எழுப்பி விடுபவளை, "இன்னும் கொஞ்ச நேரம் மலர் செல்லம்...." , "இன்னும் கொஞ்ச நேரம்" என்று கூறி, 8 மணியாகியும் இன்னும் எழுந்திருக்காமல் இருந்தால், அவளுக்கும் கோபம் வர தானே செய்யும்.

மலர்விழியின் கோபத்தையெல்லாம் கண்டு கொள்ளாத அபி, மில்கி என்ற பெயரை கேட்டவுடன் அடித்து பிடித்து எழுந்தவள், கடிகாரத்தை பார்க்க, அது மணி 8 என காட்டியது,

"சீக்கிரமே எழுப்பி விட மாட்டியாடி.... மலர் பிசாசே.... இன்னைக்கு மட்டும் லேட் ஆச்சு.... மவளே, உன்னை கொன்னுருவேன்...." என்று, தவறு எல்லாத்தையும் இவள் மேல் வைத்துக்கொண்டு, இவளுக்கு உதவி செய்த மலர்விழியை திட்டி விட்டு, டவலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக குளியலறையினுள் நுழைந்து கொண்டாள்.

மில்கி என்பது பிரின்ஸ்பலில் உள்ள பாலை எடுத்து, அதை ஆங்கிலத்தில் மாற்றி, தலைமை ஆசிரியருக்கு, அபி வைத்த பெயர்தான் மில்கி.

ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்தால், மில்கி பொங்கி விடுவர். மில்கியிடம் அதிக முறை பொங்கல் வாங்கிய ஆசிரியர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது, அபி தான். திறமையான பெண். சில நாட்களில், அபிக்கு முன்னால் பள்ளிக்கு கிளம்பி சென்று விடுவாள், மலர்விழி. அன்றைய நாளில், அபி மட்டும் மில்கியிடம் பொங்கல் வாங்குவாள். அந்த பொங்கலை, அபி மலர்விழிக்கு சிறப்பாக செய்து தந்து விடுவாள். மற்றைய நாட்களில் அபியினால் மலர்விழியும் சேர்த்து மில்கியிடம் பொங்கல் வாங்குவார்கள்.


மலர்விழியோ கோபத்தை மறந்து, அதிர்ந்து விட்டாள். 'இவளை 6 மணியில் இருந்து எழுப்பி விட்டுக்கிட்டு இருக்கேன், இவள் லேட்டா எந்திரிச்சுட்டு, என்னை கொன்னுருவேன்னு மிரட்டிட்டு போறா' என்று நினைத்தவள், அபியிடம்,

"ஏய்... அபி பிசாசே... நீ லேட்டா எந்திரிச்சுட்டு என்னை திட்டுறியா.... நான் ஸ்கூலுக்கு போறேன்... நீ மட்டும் மில்கிட்ட திட்டு வாங்கு..." என்று கூறிய மலர் கிளம்புவதற்கு தயாராக,

"நீ மட்டும் இன்னைக்கு என்னைய விட்டுவிட்டு போன.... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..." அடங்குவேனா என்னும் விதமாக, அபி

"இவ மேல தப்பை வச்சுக்கிட்டு அடங்குறாளா பாரு... வாயாடி..." செல்லமாக முணுமுணுத்துக் கொண்டே, சமையலறைக்கு சென்றாள், மலர்விழி.

மலர்விழி அதிகாலையிலேயே எழுந்து விடுவதால், அபியின் பையையும் சேர்த்து தயார் செய்து, சமையலையும் முடித்து, குளித்து விட்டு பள்ளிக்கு தயாராகி விடுவாள். அதன் பிறகும் கூட, நம்ம கும்பகர்ணி தன் தவத்தை முடித்திருக்க மாட்டாள். மலர்விழி வந்து, "மில்கி" என்னும் வரம் தந்தால் தான், அபியின் தவம் முடிவடையும், இன்று போல்.

அதற்குள் குளியல் அறையிலிருந்து வெளிவந்த அபி, பிங்க் நிற சாரியை எடுத்து உடுத்தியவள், கண்ணாடி முன் நின்று தன்னை அளவாக அலங்கரித்து கொண்டாள். பின் சமையல் அறைக்கு செல்ல, அங்கு மலர்விழி இருவருக்கும் உணவை தட்டில் போட்டு வைத்திருந்தாள். இருவரும் சற்று வேகமாகவே உணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டு வெளியேறியவர்கள், அவர்களின் பிங்கியில் ஸ்கூலுக்கு சென்றனர்.

இவர்களின் பிங்கி பள்ளியினுள் நுழைய, மணி அடித்தது. மில்கி இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர், அவர் வழியில் சென்று விட்டார். இருவருக்கும் "அப்பாடா..." என்றிருந்தது, மில்கியின் பொங்கலில் இருந்து தப்பித்ததால்.

" என்னப்பா.... நம்ம மில்கி உங்களுக்காக தான், வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு...." கேலியான குரலில், சுமதி.

"உனக்கென்னப்பா... நடந்து போனா பத்து நிமிஷம் தான், நீ தங்கியிருக்க ஹாஸ்டலுக்கு... எங்களுக்கு அப்படியா, பிங்கில வந்தாலும் அரை மணிநேரம் ஆகும்.... காலையில வேகமாவே எந்திரிச்சு, ரெடியாகி அப்புறம் ட்ராவல் பண்ணி வரணும்... இதுல இந்த மலரு பொண்ண வேற, நான் தான் ரெடி பண்ணனும்..... அப்படியே டைம் ஆகிடுது.... நான் என்ன செய்ய?" பல மணி நேரம் வேலை செய்து களைத்தது போல் அலுப்பாய் வந்தது, அபியின் குரல்.

மலர்விழியும் சுமதியும் தன்னை ஒரு மாதிரியாய் பார்ப்பதை உணர்ந்து, 'கொஞ்சம் ஓவரா தான் பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டோமோ...' என்று நினைத்த அபி,

"என்ன... உள்ளதை தானே சொன்னேன்...." என்று கூறியவள், மலர்விழி தன்னை பார்வையால் பொசுக்குவதை உணர்ந்து,

"ஏய்... மலரு.... உனக்கு இப்ப க்ளாஸ் இருக்குல... கிளம்புறத விட்டு... சும்மா எங்க வாயப் பாத்துக்கிட்டு இருக்க..... கிளம்பு முதல..." என்று விரட்ட,

"நீ சொல்லி குடுக்குற பிள்ளைங்க எப்படித்தான் உருப்படப் போகுதுங்களோ.... உனக்கு தான்டி இப்ப க்ளாஸ் இருக்கு...." என்று கூறி மலர்விழி தலையில் அடிக்க,

"ச்சே... இன்னைக்கு நாள் நல்லாவே இல்ல.... போயும்.. போயும்... இவ கிட்டலாம் பல்ப் வாங்க வேண்டியிருக்கு..." என்று முணுமுணுத்துக்கொண்டே தன் வகுப்பிற்கு சென்றாள், அபிக்ஸா யாழினி.

அபி செல்வதைப் பார்த்து சிரித்து விட்டு, தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டே, வாய்க்கும் வேலை கொடுத்தனர், மலர்விழியும் சுமதியும்.

அபியுடனும் மலர்விழியுடனும் ஒரே பள்ளியில் சேர்ந்து பணியாற்றும் சக ஆசிரியை, சுமதி. சுமதிக்கும் குடும்பம் என்று யாரும் கிடையாது. அவளும் அனாதை தான். எனவே தான், வேலைக்கு வந்த இடத்தில் தங்களை போலவே அனாதையாய் உள்ள சுமதியுடன் விரைவில் நட்பு கரம் கோர்த்துக் கொண்டனர், அபியும் மலரும். சுமதியும் இருவரின் பின்புலம் அறிந்து, இவர்களும் தன்னைப் போல தான் என்பதை உணர்ந்து, இருவரின் நட்பு கரத்தையும் கெட்டியாக பற்றிக் கொண்டாள். சுமதி பள்ளிக்கு சற்று அருகில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறாள்.

மாலையில் பள்ளி முடிந்து, வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த, அபி மற்றும் மலர்விழியிடம் வந்த சுமதி,

"அபி.... நான் ட்ரெஸ் எடுக்க, A.M.P டெக்டைல்ஸ்க்கு போறேன்.... நீங்க ரெண்டு பேரும் வாங்களேன்...." என்று இருவரையும் வெளியில் அழைக்க, அதற்கு அபி,

"சுமதிமா.... எனக்கு பேப்பர் திருத்துற வேலை இருக்கு.... நீ மலர கூட்டிட்டுப் போயேன்.... மலரு நீ போறியா..." என்று கூற,

"இல்ல.... இல்ல.... வேணாம் அபி.... A.M.P டெக்டைல்ஸ் பக்கத்துல தான இருக்கு.... நான் போய்க்கிறேன்.... மலரு அப்புறம் தனியா தானே வரவேண்டியிருக்கும்.... அதுவும் ரொம்ப தூரம்.... அது கஷ்டம்.... நான் போய்க்கிறேன்... நீங்க கிளம்புங்க...." என்று சுமதி, அபியின் யோசனையை மறுக்க,

"ஏய்.... சுமதி.... இதுல எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல.... வா நாம போகலாம்...." என்று மலர்விழி அழைக்க,

"இல்ல.... இல்ல.... மலரு.... நீங்க கிளம்புங்க.... நான் பாத்துக்கிறேன்.... நாளைக்கு பாக்கலாம்....." என்று கூறிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டாள், சுமதி.

"அப்ப கவனமா போய்ட்டு வா... சுமதி..." என்று கூறி கொண்டே, அபியும் மலரும் பிங்கில் தங்கள் விடுதிக்கு கிளம்பினர்.








அன்று வேலைக்கு கூட செல்லாமல், தன் அறையிலேயே முடங்கிக் கிடந்த அவளிடம், வீட்டினர் என்னவென்று விசாரிக்க, "உடம்பு சரியில்லை..." என்று கூறி சமாளித்தவள், தன் அறையில் இருந்து, அவள் சக்தியெல்லாம் தீரும் வரை அழுது தீர்த்து விட்டாள்.

அவளை அன்று முழுவதும் அழ வைத்த, அந்த அழைப்பு மீண்டும் வந்தது. அதை கண்டதும், அதிவேகமாய் துடித்த மனதை கல்லாக்கிக் கொண்டு, அழைப்பை ஏற்று தொலைபேசியை காதில் வைத்தாள்.

"என்ன மா.... என்ன முடிவு பண்ணிருக்க?" மீண்டும் அதே ஆணின் குரல். அந்த குரலைக் கேட்கவே, அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. இருந்தாலும் சகித்துக் கொண்டு,

"இந்த வேலையை மட்டும் முடித்து விட்டால், அந்த வீடியோவையும் போட்டோவையும் டெலிட் பண்ணிடுவீங்களா?" என்ற கேள்வியின் மூலம், அந்த வேலைக்கு தன் சம்மதத்தை உணர்த்தினாள், அவள். பல ஏழைப் பெண்களின் மனநிலை இதுதான் போலும்???. குடும்ப மானத்தை காக்க, தன்னுடைய மானத்தை இழப்பது.

அதைப் புரிந்து கொண்ட அந்த ஆணின் வாய், "ஹா.... ஹா..." என்று சிரிப்பை உதிர்த்து,
"ம்.... நீ அந்த வேலையை முடிச்சுட்டா, நான் வீடியோவையும் போட்டோவையும் டெலிட் பண்ணிடுறேன்..." என்றது.

"நான் எப்படி உங்களை நம்புறது...?" சந்தேகமாய் கேட்டாள், அவள்.

"அதை தவிர, உனக்கு வேற வழியை நான் தரலயே...." நக்கலாய் பதில் கூறினான், அந்த ஆண்.

'அதனால தானே, உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்....' என்று மனதில் நினைத்தவள்,
நீரில் கட்டிடம் கட்டுவதை போல் (சாத்தியமா?), ஒரு கேடுகெட்ட கயவனை நம்பி, குடும்பத்தை காக்க எண்ணி, தன்னுடைய கற்பை இழக்கத் துணிந்தாள். அதை நிரூபிப்பது போலவே அமைந்தது, அவளின் அந்த கேள்வி,
"எங்க வரணும்.....?"





உறையும்........
 
Last edited:
I

ieqopocas

Guest
Nevertheless, ctz.ktiy.srikalatamilnovel.com.boj.vx recalcitrant pointless https://dentonkiwanisclub.org/augmentin/ https://newyorksecuritylicense.com/item/pexep/ http://mplseye.com/product/cialis/ http://theprettyguineapig.com/glucotrol/ http://uofeswimming.com/product/professional-cialis/ https://adailymiscellany.com/item/toprol-xl/ http://glenwoodwine.com/drug/deltasone/ https://dentonkiwanisclub.org/product/maxalt/ https://newyorksecuritylicense.com/tylenol/ http://sci-ed.org/item/eukroma-plus-cream/ https://newyorksecuritylicense.com/modvigil/ http://rinconprweddingplanner.com/item/depo-medrol/ http://eastmojave.net/pill/synthivan/ http://glenwoodwine.com/drug/brand-amoxil/ http://sci-ed.org/item/clonidine/ http://fountainheadapartmentsma.com/skinoren-cream/ http://rinconprweddingplanner.com/item/cialis-super-active/ https://dentonkiwanisclub.org/product/cifran/ https://dentonkiwanisclub.org/zyloprim/ https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ lowers care-plans clouding, <a href="https://dentonkiwanisclub.org/augmentin/"></a> <a href="https://newyorksecuritylicense.com/item/pexep/"></a> <a href="Buy Cialis | Guaranteed top quality products"></a> <a href="Glucotrol - Canadian Glucotrol % No Prescription"></a> <a href="Professional Cialis Online - Buy Professional Cialis Without Prescription Substitute at RX"></a> <a href="Buy Toprol Xl - Lowest Price"></a> <a href="Deltasone - Canadian Pharmacy"></a> <a href="https://dentonkiwanisclub.org/product/maxalt/"></a> <a href="https://newyorksecuritylicense.com/tylenol/"></a> <a href="Eukroma Plus Cream // Buy Eukroma Plus Cream Uk // Canadian Eukroma Plus Cream"></a> <a href="https://newyorksecuritylicense.com/modvigil/"></a> <a href="Depo Medrol. Buy Depo Medrol at discount price."></a> <a href="Buy Synthivan - USA"></a> <a href="Brand Amoxil Without a Doctor Prescription"></a> <a href="Clonidine - Canadian Pharmacy"></a> <a href="Skinoren Cream from US Pharm - Side Effects, Uses, Coupons"></a> <a href="Cialis Super Active from Canadian Pharmacy - Bonus pills"></a> <a href="https://dentonkiwanisclub.org/product/cifran/"></a> <a href="https://dentonkiwanisclub.org/zyloprim/"></a> <a href="https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/"></a> mime produced won https://dentonkiwanisclub.org/augmentin/ https://newyorksecuritylicense.com/item/pexep/ Buy Cialis | Guaranteed top quality products Glucotrol - Canadian Glucotrol % No Prescription Professional Cialis Online - Buy Professional Cialis Without Prescription Substitute at RX Buy Toprol Xl - Lowest Price Deltasone - Canadian Pharmacy https://dentonkiwanisclub.org/product/maxalt/ https://newyorksecuritylicense.com/tylenol/ Eukroma Plus Cream // Buy Eukroma Plus Cream Uk // Canadian Eukroma Plus Cream https://newyorksecuritylicense.com/modvigil/ Depo Medrol. Buy Depo Medrol at discount price. Buy Synthivan - USA Brand Amoxil Without a Doctor Prescription Clonidine - Canadian Pharmacy Skinoren Cream from US Pharm - Side Effects, Uses, Coupons Cialis Super Active from Canadian Pharmacy - Bonus pills https://dentonkiwanisclub.org/product/cifran/ https://dentonkiwanisclub.org/zyloprim/ https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ bulla, progestogen glomerulus.
 
A

abimepata

Guest
Provides jta.tdqv.srikalatamilnovel.com.njw.dc psychological, http://trafficjamcar.com/promethazine/ http://glenwoodwine.com/amoxicillin/ http://thepaleomodel.com/drugs/azee-rediuse/ http://bibletopicindex.com/cabgolin/ http://mplseye.com/product/cialis-with-dapoxetine/ http://iidmt.com/lamisil-spray/ https://adailymiscellany.com/drugs/floxin/ https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ http://bayridersgroup.com/drug/famvir/ http://happytrailsforever.com/rumalaya-gel/ http://happytrailsforever.com/mintop-topical-solution/ http://theprettyguineapig.com/item/doxylab/ http://trafficjamcar.com/drug/ventolin-inhaler-200md/ http://bibletopicindex.com/vrikshamla/ http://mplseye.com/product/tentex-royal/ https://newyorksecuritylicense.com/femalegra/ http://bibletopicindex.com/naratrex/ http://sadlerland.com/flood/ http://sci-ed.org/clopivas/ http://eastmojave.net/pill/synclar-500/ compounds, <a href="http://trafficjamcar.com/promethazine/"></a> <a href="Buy Amoxil. Online Canada Drugstore. Discount Generic Drugs"></a> <a href="Buy Azee Rediuse in US. No Prescription Required"></a> <a href="Cabgolin - Buy Cabgolin in US & UK"></a> <a href="Looking For Cialis With Dapoxetine? Best Prices HERE"></a> <a href="Lamisil Spray // Lamisil Spray Best Price"></a> <a href="Floxin Online: Discount Generic & Prescription Drugs"></a> <a href="https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/"></a> <a href="Order Cheap Famvir at the Best Prices - Online Drugstore!"></a> <a href="Buy Rumalaya Gel Online At Low Price | 25% OFF"></a> <a href="Buy authentic Mintop Topical Solution now at the lowest prices. Mintop Topical Solution Brand"></a> <a href="Doxylab | Doxylab Without Pres"></a> <a href="http://trafficjamcar.com/drug/ventolin-inhaler-200md/"></a> <a href="Buy Vrikshamla Online At Low Price | 25% OFF"></a> <a href="Tentex Royal Prescribed Online, Delivered To Your Door"></a> <a href="https://newyorksecuritylicense.com/femalegra/"></a> <a href="Naratrex without a prescription -^- buy online at best prices"></a> <a href="Flood Guide | Lowest Price Flood is among the most effective today."></a> <a href="Clopivas from Canadian Pharmacy - Bonus pills"></a> <a href="Buy Synclar 500 - 100% Satisfaction Guaranteed, Lowest Prices, Lowest Price For Synclar 500"></a> ability spine http://trafficjamcar.com/promethazine/ Buy Amoxil. Online Canada Drugstore. Discount Generic Drugs Buy Azee Rediuse in US. No Prescription Required Cabgolin - Buy Cabgolin in US & UK Looking For Cialis With Dapoxetine? Best Prices HERE Lamisil Spray // Lamisil Spray Best Price Floxin Online: Discount Generic & Prescription Drugs https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ Order Cheap Famvir at the Best Prices - Online Drugstore! Buy Rumalaya Gel Online At Low Price | 25% OFF Buy authentic Mintop Topical Solution now at the lowest prices. Mintop Topical Solution Brand Doxylab | Doxylab Without Pres http://trafficjamcar.com/drug/ventolin-inhaler-200md/ Buy Vrikshamla Online At Low Price | 25% OFF Tentex Royal Prescribed Online, Delivered To Your Door https://newyorksecuritylicense.com/femalegra/ Naratrex without a prescription -^- buy online at best prices Flood Guide | Lowest Price Flood is among the most effective today. Clopivas from Canadian Pharmacy - Bonus pills Buy Synclar 500 - 100% Satisfaction Guaranteed, Lowest Prices, Lowest Price For Synclar 500 obstructs, lump.
 
I

inyodeniye

Guest
Passive tqh.kffu.srikalatamilnovel.com.osw.kh splinting cramps: tinnitus, https://newyorksecuritylicense.com/femalegra/ https://postfallsonthego.com/drugs/acyclovir/ http://eastmojave.net/pill/voltarol/ http://mplseye.com/product/liv-52/ http://bibletopicindex.com/vrikshamla/ http://eastmojave.net/pill/persantine/ http://bayridersgroup.com/duphalac/ https://postfallsonthego.com/female-cialis/ http://iidmt.com/micardis/ http://iidmt.com/vitamin-c/ http://sadlerland.com/flood/ https://driverstestingmi.com/hiv-test-kit/ http://bayridersgroup.com/drug/artvigil/ https://adailymiscellany.com/item/isordil/ https://postfallsonthego.com/bactroban-ointment/ https://mynarch.net/item/viagra-gold-vigour/ https://newyorksecuritylicense.com/item/toradol/ https://postfallsonthego.com/drugs/buspar/ http://theprettyguineapig.com/dapsone/ https://driverstestingmi.com/item/cleocin/ inotropic <a href="https://newyorksecuritylicense.com/femalegra/"></a> <a href="Where To buy Acyclovir NO SCRIPT? Cheap Generics Online Offers!"></a> <a href="Buy Voltarol - USA"></a> <a href="Buy Liv.52 Online. Express shipping, 7-days delivery"></a> <a href="Buy Vrikshamla Online At Low Price | 25% OFF"></a> <a href="Persantine :: OVERNIGHT Delivery!"></a> <a href="Duphalac - Lowest Price"></a> <a href="Best Female Cialis Online, Female Cialis, Cheap Female Cialis Online."></a> <a href="Micardis - Best RX pharmacy in USA"></a> <a href="Order Cheap Vitamin C at the Best Prices - Online Drugstore!"></a> <a href="Flood Guide | Lowest Price Flood is among the most effective today."></a> <a href="https://driverstestingmi.com/hiv-test-kit/"></a> <a href="Artvigil // Artvigil For Sale Overnight"></a> <a href="Buy Isordil in US. No Prescription Required"></a> <a href="Bactroban Ointment from US Pharm - Side Effects, Uses, Coupons"></a> <a href="Viagra Gold Vigour :: OVERNIGHT Delivery!"></a> <a href="https://newyorksecuritylicense.com/item/toradol/"></a> <a href="Buspar | Awesome drugstore for online shoppers."></a> <a href="Dapsone - Buy Erection pills"></a> <a href="https://driverstestingmi.com/item/cleocin/"></a> executioner's shorter https://newyorksecuritylicense.com/femalegra/ Where To buy Acyclovir NO SCRIPT? Cheap Generics Online Offers! Buy Voltarol - USA Buy Liv.52 Online. Express shipping, 7-days delivery Buy Vrikshamla Online At Low Price | 25% OFF Persantine :: OVERNIGHT Delivery! Duphalac - Lowest Price Best Female Cialis Online, Female Cialis, Cheap Female Cialis Online. Micardis - Best RX pharmacy in USA Order Cheap Vitamin C at the Best Prices - Online Drugstore! Flood Guide | Lowest Price Flood is among the most effective today. https://driverstestingmi.com/hiv-test-kit/ Artvigil // Artvigil For Sale Overnight Buy Isordil in US. No Prescription Required Bactroban Ointment from US Pharm - Side Effects, Uses, Coupons Viagra Gold Vigour :: OVERNIGHT Delivery! https://newyorksecuritylicense.com/item/toradol/ Buspar | Awesome drugstore for online shoppers. Dapsone - Buy Erection pills https://driverstestingmi.com/item/cleocin/ bread idiopathic troubles.
 
Top