பூ-1
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்ற பிள்ளையார் மந்திரத்தை அழகாக சொன்னாள் நம் கதையின் நாயகி மைதிலி.
நம் கதையில் வரும் நாயகி. மீன் போன்ற கண்கள் , செர்ரி பழம் போல் உதடு, வில் போன்ற புருவம், ஆப்பிள் போன்ற கண்ணம், அழகான நாசி, கணகட்சிதமான உடலமைப்பு இந்த அழகு அணைத்தும் பொருந்தியவள் தான் நம் கதையின் நாயகி. மொத்தத்தில் பிரம்மன் படைத்த சிலையோ என்று நினைக்க தோன்றும். அனைவரையும் திரும்பி பார்க்க தூண்டும் அழகு, அப்படினு சொல்வனு எல்லாரும் எதிர் பாத்திங்களா. (அப்பறம் ஏண்டி நீதன சொன்ன நாங்க கற்பனைலாம் பண்ணி வச்சுட்டோம் கடைசி அப்படி இல்லனு சொல்ற எங்க டைம்லா வேஸ்ட் பண்ணிட்டியே ஒழுங்கா கதைல இருக்கறத மட்டும் நீ சொன்னா போதும்னு உங்க மனசுல என்னை திட்டிட்டு இருக்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது. (ஒழுங்கா கதைக்கு வா இல்ல கொலவெறி ஆகிடுவோம் பாத்துக்க)) நீங்க நினைக்குற மாதிரி அந்த அளவுக்கு அழகு இல்ல ஆன குண்டு கண்கள், அளவான நாசி, மிதமான கண்ணம், அளவான உடலமைப்பு, உயரம் 5.1 இப்படி தாங்க இருப்பாங்க நம் கதையின் நாயகி.(ஏம்மா மைதி உன்னை இண்ரோ குடுத்துட்டமா எல்லாருக்கும். நீ சொன்ன மாதிரி பொய்லாம் சொல்லாம இருக்குற உண்மைய மட்டும் சொல்லிட்டன் போதுமா) நம்ம இப்ப கதைக்கு வருவோம்.
அம்மா என்னமா பண்ற எனக்கு ஸ்க்கூலுக்கு டைம் ஆய்டுச்சு சீக்கிரம் வா சீக்கிரம் சாப்பாடு கட்டி குடுமா என்று கத்தி கூப்பிட்டுட்டு இருந்தாள் மைதிலி. ஆமா சாப்பாடு கட்டுறது இருக்கட்டும், உனக்கு இன்னைக்கு term test ல படிச்சுட்டியா. 10த் படிக்கிறனு தான் பேரு ஆனா நீ புத்தகத்த திறந்து படிக்க உட்கார்ந்தாலே ஒன்னு தூங்கிடுற இல்ல மண்டைய சொறிஞ்சுட்டு வேடிக்கை பார்க்கிறது இல்லன அண்ணன் கிட்ட சண்டைக்கு போறது. நீ ஒரு நாளும் ஒழுங்கா உட்கார்ந்து படிச்சு நான் பார்த்ததே இல்ல. இந்த வாட்டி ஆச்சும் science ல பாஸ் பண்ணுவியா இல்ல இந்த வாட்டியும் புட்டுக்குமா.(நீங்க நினைக்கறது கரெக்ட் தான்க நம்ப மைதிலிக்கு maths ன ரொம்ப பிடிக்கும், ஆனா science அரவே பிடிக்காது. அதுலயும் chemistry னா ஓடிருவா. அவ்ளோ வெறுப்பு science மேல)
அம்மா அதலாம் நான் பாஸ் பண்ணிடுவன். நீ சீக்கரமா சாப்பாடு கட்டு மணி இப்பவே 8.45 ஸ்க்கூல்ல 9 மணிக்குலாம் உள்ள இருக்கணும். சரி இந்தா சாப்பாடு உன்னை சாய்ங்காலம் பாத்துக்கிறேன். டிபன் சாப்பிட்டியா? சாப்பிட்டன் மா நான் போய்ட்டு வரன். பை மா.
நம் கதையின் நாயகியின் பெற்றோர் தந்தை தனசேகர் தாய் தனலட்சுமி அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண். பையன் குணசீலன், பெண் நம்நாயகி மைதிலி. நடுத்தரவர்க குடும்பம் இவர்களுடையது.
தனசேகர் சின்னதாக ஒரு துணிக்கடை வைத்திருக்கிறார். தனலட்சுமி இல்லத்தரசி, சில நேரங்களில் கணவர் கடைக்கு உதவி செய்வார். கணவன், பிள்ளைகள் அவர்கள் இருவரும் தான் லட்சுமியின் உலகம். முக்கியமாக காதல் என்றால் அவருக்கு அறவே பிடிக்காது.
சேகர் தன் குடும்பத்துக்காகவே வாழ்கிறவர். தனக்கு என்று எதையும் செய்து கொள்ள மாட்டார். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவார். நேர்மை மற்றும் மனிதநேயம் மிக்க மனிதர்.
அண்ணன் குணசீலன் எல்லாத்தையும் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு போய்ட்டே இருப்பான். வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்தக் கொள்ள மாட்டான். ஒரு தனியார் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணிபுரிகிறான். சனி, ஞாயிறுகளில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது என்று வாழ்க்கையை இன்பமாக வாழ்பவன்.
நாயகி மைதிலி பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவள். அவர்களுக்கு அடங்கி நடப்பவள். ஆனால் வீட்டில் அம்மா உடன் கண்டிப்பு மற்றும் விளையாட்டு, அப்பா கிட்ட பாசம் மற்றும் செல்லம் கொஞ்சுவது, அண்ணனுடன் அடிதடி மற்றும் சண்டை போடுவது இது தான் அவளுடைய உலகம். 10த் படிக்கிறாள். சுமாராக தான் படிப்பாள்.
பள்ளியில் உமா, ஹே மைதிலி நீ இன்னைக்கு படிச்சுட்டியாடி. மைதிலி, யாரு படிச்சா எப்பயும் போல என்ன கதை மண்டைல தோணுதோ அதை எழுத வேண்டியது தான். Science புத்தகத்த கைல வச்சுட்டு உட்கார்ந்தாலே அதுல இருக்கிற வார்த்தைய பார்த்தா ஏதோ கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு நான் என்னடி பண்ணட்டும். அதுக்கு மேல எப்படியாவது படிக்கலாம்னு பாத்தா தூக்கம் தான் வருதுடி. சரி நம்பலே திக்கி திணறி கொஞ்சம் படிச்சுட்டு போனா அந்த மிஸ் கரெக்டா நான் படிச்சத தவிர மத்த எல்லாத்துல இருந்தும் கேள்வி கேட்குது. சரி இந்த பிரச்சனையே வேண்டாம் மிஸ் 20 மார்க்ல முக்கியம்னு சொன்னத மட்டும் படிச்சுட்டு போனா அந்த மிஸ் அத 2 மார்க்ல கேட்குது இல்லனா சில சமயத்துல அதை கூட கேட்க மாட்டுது. அதுக்கு தான்டி நான் எதையுமே படிக்கல. நம்ப படிக்கறது வராது தெரிஞ்ச பிறகு எதுக்கு படிக்கனும்னு விட்டுட்டன் எப்புடி. சரி வா கிளாஸ்க்கு போலாம். அங்க போய் 2 மணி நேரம் தூங்கலாம் எப்படியும் ஒன்னும் தெரியாது. ஏதோ தூங்கி கிட்டே கிறுக்கலாம் வா.
பூ மலரும்.
"கொஞ்சம் கூட கோபமே இல்லாம சிரிச்சு மட்டுமே உங்க கூட ஒருத்தர் பழகுறார் என்றால் அவர் அன்பில் சிறந்தவர் என்பதை விட நடிப்பதில் சிறந்தவர் என்பதே உண்மை!!!"