RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த புத்தம் புதிய கதையுடன் வந்து விட்டேன் தோழமைகளே...!
கதை - களவாடும் முத்த சந்தங்கள்...!
தலைவன் - தொல்காப்பியன்
தலைவி - இலக்கியா
இந்த பிரபஞ்சம் தனக்கு தேவையானதை தானே உருவாக்கிக் கொள்கிறது... நாம் வெறும் கருவிகள் மட்டுமே... நம்மால் செயலாக்க பெரும் யாவுக்கும் இந்த பிரபஞ்சம் தான் காரணகர்த்தா...
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஊக்கத்தையும் ஆதரவையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நட்பூக்களே..
கதையின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
என்றும் அன்புடன்
ரம்யாராஜ்..
கதையின் முன்னோட்டம்...
தொல்ஸ் பெற்றவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு காலில் ஷூவை மாட்ட வேகமாய் உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்.
“வா இலக்கியா...” என்று காமு அவளை வரவேற்க, நிமிர்ந்துப் பார்த்த தொல்ஸ்,
“என்ன காலையிலையே இங்க வந்து உட்கார்ந்துட்ட... காலேஜ் போகலையா?” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டான்.
“இ.. ல்ல...” என்று அவள் பயந்துப் போனாள் அவனது கடுமையில்.
“அது தெரியுது... அதுக்கு காரணம் கேட்டேன்” என்று சடுதியில் இருக்கமாய் மாறிய தன் நண்பனை வாயில் ஈ போவது தெரியாமல் பார்த்தான் கோபால்.
“அது அது...” என்று தடுமாறி அவன் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து தலையை குனிந்துக் கொண்டவள்,
“பீஸ் கட்டல” என்றாள்.
“ம்கும்... எப்போ பாரு ஆறு மாசத்துக்கு ஒருக்கா இப்படி பண்ணிட்டே இரு... நீ படிச்சு கிழிச்ச மாதிரி தான்... ம்மோவ் நீ ஏதாவது காசு குடுத்த உன்னை தொலைச்சுடுவேன்...” என்று கொஞ்சம் கூட கருணை இல்லாமல் சொல்லி விட்டு தன் தகப்பனையும் எச்சரித்து விட்டு டியூட்டிக்கு கிளம்பி விட்டான்.
“அவன் கிடக்குறான் நீ வா இலக்கியா” என்று அவளை உள்ளே அழைத்து சென்றவர் மூவருக்கும் தட்டை எடுத்து வைத்து உன்னை அழைத்தார்.
“இல்ல அத்தை நான் வீட்டுலையே சாப்பிட்டுட்டேன்” என்றாள்.
“நீ என்ன சாப்பிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும். ரெண்டு இட்லி சாப்பிட்டா ஒன்னும் ஆயிடாது வா” என்று அவளுக்கு பரிமாறி தங்களுக்கும் பரிமாறிக் கொண்டார் காமு.
“இப்போ உனக்கு டெர்ம் டெஸ்ட் இருக்குமே ம்மா இந்த நேரம் காலேஜ் போகலன்னா என்ன பண்றது..” என்று பிரபு கேட்க,
“ஆமா தான் மாமா.. ஆனா காலேஜ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க..” என்றாள் வேதனையாக.
“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவர் காமுவை பார்க்க அவர் கண்ணை காட்டினார்.
“பதினோரு மணி போல பேங்க்குக்கு போயிட்டு வரலாம் இலக்கியா” என்றார் காமு.
“வேணாம் அத்தை உங்க மகனுக்கு தெரிஞ்சா என்னை இன்னும் திட்டுவாரு” என்று மறுத்தாள்.
“அவன் கிடக்குறான்... நீ வா... படிக்கிறதுக்கு கூட உதவாத காசு பேங்க்ல இருந்து என்ன பண்ணப் போகுது...” என்று சொன்னவர் அவளுக்கு வயிறு நிறைய உணவை கொடுத்து பதினோரு மணிக்கு பேங்குக்கு கூட்டிட்டு போய் பணம் எடுத்து குடுத்து காலேஜ் போக வைத்தவர் அதன் பிறகு தன் கணவனை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று வந்தார்.
“ம்மோவ்” என்று போனில் காமுவை அழைத்து விட்டான் தொல்ஸ்.
“உன் நைனாவுக்கு ஒன்னும் இல்லைடா.. ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வந்தாருல்ல அதுல கொஞ்சம் டையர்ட் ஆகிட்டாரு... அது தான் டாக்டர் தூக்க மாத்திரை ஒன்னு குடுத்து இருக்காரு. ரெண்டு நாளைக்கு பாதி பாதியா குடுக்க சொல்லி சொன்னாங்க” என்றார்.
“ம்ம்” என்றவன்,
“அந்த குட்டச்சிக்கு காசு குடுத்தியா?” கேட்டான்.
“ஆமாம்டா” என்றார்.
“உன்கிட்ட எத்தனை முறை சொல்றது... இப்படி காசு குடுத்து ஏமாறதன்னு. சொன்னா நீ கேட்கவே மாட்டியா?” என்று கடுகாய் பொறிந்தான்.
“படிக்க தானேடா” என்று அவர் சொல்ல,
“ம்கும் ஒவ்வொரு ஆறு மாசத்துக்கும் இதையே சொல்லி என்னை சமாதனம் படுத்து... அவ சொகுசா உன் பணத்துல படிச்சுட்டு ஒய்யாரமா ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும்” என்றான்.
“அடேய் அதுக்காக அவ படிச்சு முடிச்சதும் வேலைக்கு போய் எனக்கு சம்பாரிச்சு குடுக்க சொல்றியா?” என்று முறைத்தார்.
“ஏன் என்ன தப்புன்னு கேக்குறேன்.. ஒழுங்கா குடுத்த காசை எல்லாம் வட்டியும் முதலுமா சம்பாரிச்சு குடுத்ததுக்கு பிறகு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு போக சொல்லு. இல்ல நடக்குறதே வேற.. ப்போர்சரி கேஸ்ல அவளை தூக்கி உள்ள போட்டுடுவேன்” என்றான்.
“அராஜகம் பண்றடா” என்று அவனை திட்டியவர்,
“சரி சாப்பிட வர்றியா?”
“வேணாம் நீ ஆக்கியதை நீயே கொட்டிக்க... இங்க புதுசா ஒரு பிரியாணி கடை ஓபன் பண்ணி இருக்கான்.. நான் இங்க மாமூல் கலெக்ட் பண்ணிட்டு இங்கயே சாப்பிட்டுக்குறேன்.. நீயும் உன் சோறும். வை போனை” என்று வைத்து விட்டான்.
“அடேய் நீ ராத்திரி இங்க தான்டா வரணும்.. வா அப்ப பார்த்துக்குறேன்” என்று மகனை திட்டினார்.
கதை - களவாடும் முத்த சந்தங்கள்...!
தலைவன் - தொல்காப்பியன்
தலைவி - இலக்கியா
இந்த பிரபஞ்சம் தனக்கு தேவையானதை தானே உருவாக்கிக் கொள்கிறது... நாம் வெறும் கருவிகள் மட்டுமே... நம்மால் செயலாக்க பெரும் யாவுக்கும் இந்த பிரபஞ்சம் தான் காரணகர்த்தா...
எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஊக்கத்தையும் ஆதரவையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நட்பூக்களே..
கதையின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
என்றும் அன்புடன்
ரம்யாராஜ்..
கதையின் முன்னோட்டம்...
தொல்ஸ் பெற்றவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு காலில் ஷூவை மாட்ட வேகமாய் உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்.
“வா இலக்கியா...” என்று காமு அவளை வரவேற்க, நிமிர்ந்துப் பார்த்த தொல்ஸ்,
“என்ன காலையிலையே இங்க வந்து உட்கார்ந்துட்ட... காலேஜ் போகலையா?” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டான்.
“இ.. ல்ல...” என்று அவள் பயந்துப் போனாள் அவனது கடுமையில்.
“அது தெரியுது... அதுக்கு காரணம் கேட்டேன்” என்று சடுதியில் இருக்கமாய் மாறிய தன் நண்பனை வாயில் ஈ போவது தெரியாமல் பார்த்தான் கோபால்.
“அது அது...” என்று தடுமாறி அவன் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து தலையை குனிந்துக் கொண்டவள்,
“பீஸ் கட்டல” என்றாள்.
“ம்கும்... எப்போ பாரு ஆறு மாசத்துக்கு ஒருக்கா இப்படி பண்ணிட்டே இரு... நீ படிச்சு கிழிச்ச மாதிரி தான்... ம்மோவ் நீ ஏதாவது காசு குடுத்த உன்னை தொலைச்சுடுவேன்...” என்று கொஞ்சம் கூட கருணை இல்லாமல் சொல்லி விட்டு தன் தகப்பனையும் எச்சரித்து விட்டு டியூட்டிக்கு கிளம்பி விட்டான்.
“அவன் கிடக்குறான் நீ வா இலக்கியா” என்று அவளை உள்ளே அழைத்து சென்றவர் மூவருக்கும் தட்டை எடுத்து வைத்து உன்னை அழைத்தார்.
“இல்ல அத்தை நான் வீட்டுலையே சாப்பிட்டுட்டேன்” என்றாள்.
“நீ என்ன சாப்பிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும். ரெண்டு இட்லி சாப்பிட்டா ஒன்னும் ஆயிடாது வா” என்று அவளுக்கு பரிமாறி தங்களுக்கும் பரிமாறிக் கொண்டார் காமு.
“இப்போ உனக்கு டெர்ம் டெஸ்ட் இருக்குமே ம்மா இந்த நேரம் காலேஜ் போகலன்னா என்ன பண்றது..” என்று பிரபு கேட்க,
“ஆமா தான் மாமா.. ஆனா காலேஜ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க..” என்றாள் வேதனையாக.
“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவர் காமுவை பார்க்க அவர் கண்ணை காட்டினார்.
“பதினோரு மணி போல பேங்க்குக்கு போயிட்டு வரலாம் இலக்கியா” என்றார் காமு.
“வேணாம் அத்தை உங்க மகனுக்கு தெரிஞ்சா என்னை இன்னும் திட்டுவாரு” என்று மறுத்தாள்.
“அவன் கிடக்குறான்... நீ வா... படிக்கிறதுக்கு கூட உதவாத காசு பேங்க்ல இருந்து என்ன பண்ணப் போகுது...” என்று சொன்னவர் அவளுக்கு வயிறு நிறைய உணவை கொடுத்து பதினோரு மணிக்கு பேங்குக்கு கூட்டிட்டு போய் பணம் எடுத்து குடுத்து காலேஜ் போக வைத்தவர் அதன் பிறகு தன் கணவனை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று வந்தார்.
“ம்மோவ்” என்று போனில் காமுவை அழைத்து விட்டான் தொல்ஸ்.
“உன் நைனாவுக்கு ஒன்னும் இல்லைடா.. ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வந்தாருல்ல அதுல கொஞ்சம் டையர்ட் ஆகிட்டாரு... அது தான் டாக்டர் தூக்க மாத்திரை ஒன்னு குடுத்து இருக்காரு. ரெண்டு நாளைக்கு பாதி பாதியா குடுக்க சொல்லி சொன்னாங்க” என்றார்.
“ம்ம்” என்றவன்,
“அந்த குட்டச்சிக்கு காசு குடுத்தியா?” கேட்டான்.
“ஆமாம்டா” என்றார்.
“உன்கிட்ட எத்தனை முறை சொல்றது... இப்படி காசு குடுத்து ஏமாறதன்னு. சொன்னா நீ கேட்கவே மாட்டியா?” என்று கடுகாய் பொறிந்தான்.
“படிக்க தானேடா” என்று அவர் சொல்ல,
“ம்கும் ஒவ்வொரு ஆறு மாசத்துக்கும் இதையே சொல்லி என்னை சமாதனம் படுத்து... அவ சொகுசா உன் பணத்துல படிச்சுட்டு ஒய்யாரமா ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும்” என்றான்.
“அடேய் அதுக்காக அவ படிச்சு முடிச்சதும் வேலைக்கு போய் எனக்கு சம்பாரிச்சு குடுக்க சொல்றியா?” என்று முறைத்தார்.
“ஏன் என்ன தப்புன்னு கேக்குறேன்.. ஒழுங்கா குடுத்த காசை எல்லாம் வட்டியும் முதலுமா சம்பாரிச்சு குடுத்ததுக்கு பிறகு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு போக சொல்லு. இல்ல நடக்குறதே வேற.. ப்போர்சரி கேஸ்ல அவளை தூக்கி உள்ள போட்டுடுவேன்” என்றான்.
“அராஜகம் பண்றடா” என்று அவனை திட்டியவர்,
“சரி சாப்பிட வர்றியா?”
“வேணாம் நீ ஆக்கியதை நீயே கொட்டிக்க... இங்க புதுசா ஒரு பிரியாணி கடை ஓபன் பண்ணி இருக்கான்.. நான் இங்க மாமூல் கலெக்ட் பண்ணிட்டு இங்கயே சாப்பிட்டுக்குறேன்.. நீயும் உன் சோறும். வை போனை” என்று வைத்து விட்டான்.
“அடேய் நீ ராத்திரி இங்க தான்டா வரணும்.. வா அப்ப பார்த்துக்குறேன்” என்று மகனை திட்டினார்.