Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசி, அர்ஜுனை எதிர்கொள்ள சம்யுக்தாவின் பேச்சு பெரிதும் துணை கொடுத்திருந்தது... அலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் ஊதுவத்தியின் நறுமணமும், மலர்களின் நறுமணமும் நீயா நானா என போட்டியிட்டுக் மணம் பரப்பிக் கொண்டிருந்தன... அந்த ரம்மியமான சூழலே அரசியின் பதட்டத்தை வெகுவாக குறைத்துவிட்டிருந்தது.
அர்ஜுன் பால்கனியிலிருந்து உள்ளே வந்து கதவை அடைத்தவன் மனைவியை குறுகுறுவென்று பார்க்க, அவனின் பார்வையை எதிர்கொள்ள இயலாது நாணம் தடுத்ததில் சிரம் தாழ்த்திக் கொண்டாள் பார்வை வெற்று தரையில் பதிந்தது... அவள் பார்க்காத சமயம் தலை முதல் பாதம் வரை பார்வையால் கபளீகரம் செய்துக் கொண்டிருந்தவன் சிந்தையில்...
‘இந்த இரவை எப்படி எல்லாம் உன் கூட கொண்டாடணும்னு நினைச்சிருந்தேன் பாவி எல்லாத்தையுமே கெடுத்துட்டியே’ என்று மானசீகமாக சாடிக் கொண்டிருந்தான். அவனின் பார்வையையும் உணரவில்லை அவன் மனதின் கூக்குரலையும் அறியாது அவன் அருகில் வர காத்திருந்தாள்.
அர்ஜுன் சில கணங்களோ, வினாடிகளோ அறியாது அவளையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தவன் கட்டிலை நெருங்கி அவளுக்கு அருகில் இல்லாமல் சற்று இடைவெளி விட்டு அமர... அரசி பால் நிறைந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்” என்று முகத்திலறைந்தது போல் கூறியதில் சுருக்கென்று இருக்க, எங்கிருந்து தான் அந்த கோபமும், துணிச்சலும் வந்ததோ...
“இந்த முகத்தில் அறைந்த மாதிரி பேசுற பேச்செல்லாம் வேண்டாம்... இப்போ நீங்க குடிச்சு தான் ஆகணும்” என்று அதிகாரமாக கட்டளையிட்டாள்.
அவளின் பேச்சில் மனதிற்குள் மிரண்டான், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக பார்த்தவன்...
“என்னடி மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு? முதல் நாளே பொண்டாட்டி அதிகாரத்தை கட்டுற போல?”
“ஆமாம் அப்படிதான் வச்சுக்கோங்க” ஜம்பமாக அமர்ந்தவள் மிடுக்காக கூறினாள்.
“ஆனால் என்கிட்டே அதெல்லாம் செல்லுபடி ஆகாதே... அதனால் பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“ஒஹோ...! இல்லன்னா என்ன பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவனை போலவே ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக வினவியவளின் வார்த்தையில் நெஞ்சுரம் வெளிப்பட்டது.
“ஏய் கழுத்தில் தாலி ஏறிட்ட திமிரா? தொலைச்சுருவேன் பார்த்துக்கோ, எதிர்த்து பேசிட்டு இருக்காம போய் தூங்குடி” என்றவன் முணகிக் கொண்டே படுக்கைக்கு செல்ல... அரசி தடாலடியாக எழுந்தவள் அறைக் கதவை திறக்க செல்லும் போது சுதாரித்து துரிதமாகஅவளை தடுத்திருந்தான்.
“ஏய்... ஏய்.. என்ன டி பண்ணுற?” பதட்டத்துடன் அவள் கரங்களை பிடித்து தடுத்து விட்டிருந்தவனை அமர்த்தலாக பார்த்து அவன் ரத்த அழுத்தத்தை கூட்டியவள்...
“அதான் பால் குடிக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்கள்ள, அதான் அத்தைக்கிட்டே கேட்டு இந்த பாலை அப்படியே பிரிட்ஜில் வைக்கவா? இல்லை, பூனைக்கு ஊத்தவா? இல்லை, தயிருக்கு புரை போடவான்னு கேட்டுட்டு வர போறேன்”
“என்ன டி நக்கலா? இன்னைக்கு உனக்கு என்ன நாளுன்னு தெரியுமா? இல்லை மறந்துட்டியா” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளால் சீறினான்.
“எனக்கெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு, உங்களுக்கு தான் அது நியாபகம் இல்லை”
“நியாபகம் வச்சிருக்கிறவ பண்ணுற காரியமா டி இது... என் அம்மா கல்யாணம் பண்ணிக்கவே என்னை வறுத்தெடுத்தாங்க, இப்போ நீ ரூமை விட்டு போனா வீட்டை விட்டே துரத்திருவாங்க, ஒழுங்கா அடங்கி ரூமில் கிட, நம்ம விஷயத்தை கடை பரப்பின அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” அடிக்குரலில் சீறினான்.
அவனே அவளுக்கு மேலும் ஓர் அஸ்திரத்தை எடுத்து கொடுக்க அரசிக்கு படு குஷியாகிப் போனது... ‘வாலண்டியரா சிக்கிட்டியே புருஷா’ என்றெண்ணி கொண்டவள்...
“நான் உங்களுக்கு அடங்கி இருக்கத் தான் ஆசைப்படுறேன், இப்போ இந்த நிமிஷமே தயார்” என்றவளின் மார்க்கமான பார்வையும், கிறக்கமாக ஒலித்த குரலில் மயங்கிய மனதை அதட்டி அடக்கி கடிவாளமிட்டவன்...
“அடங்கி இருக்கப் போறியா... நீயா? அப்புறம் எதுக்கு இப்படி மல்லுகட்டுற, ஒழுங்கா போய் தூங்கு” என்று சாதாரணமாக கூறியதும்...
“அப்போ இந்த பாலை குடிங்க” என்று குவளையை நீட்டியவளை முறைத்துக் கொண்டே வாங்கி அருந்தியவன் பார்வை அவளிடமே நிலைத்திருக்க, அவன் குடித்துவிட்டு மீதியை அவளிடமும் கொடுத்திருந்தான்.
அரசிக்கு மனதில் வெற்றி முரசு கொட்ட “பரவாலையே அரசி முதல் முறையே சாதிச்சுட்ட” என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டவளுக்கு மனதின் ஏதோ ஓர் மூலையில் வெற்றிடம் உண்டாகவே செய்தது.
பாலை குடித்து முடித்து அவளின் மனவோட்டாதையே கண்காணித்து கொண்டிருந்தவனுக்கு அவளின் அழகும், கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிறும் அவளுடனான சொந்ததை உணர்த்தியதில் பேசாமல் கோபத்தை மறந்து அவளுடன் இணைந்துவிடலாமோ என்றெண்ணத்தை அவள் செய்த காரியம் தடையிட்டு தடுத்துவிட்டிருந்தது.
“நீ எந்த பக்கம் படுக்குற சொல்லு?” என்றவனை பார்வை மாறாமலே பார்த்தவள்...
“இன்னும் முடிவு பண்ணலை?” என்று அலட்சியமாக கூறியவளின் இதழ்கள் சிரிப்பை அடக்க முயன்றுக் கொண்டிருந்தது.
“ஏன் தூங்குற உத்தேசம் இல்லையா, சிவராத்திரி கொண்டாட போறியா?”
“ஆமாம் சிவராத்திரி கொண்டாட தான் போறேன், ஆனா தனியா இல்லை உங்களோட தான்” என்று இமை சிமிட்டியவளின் விழிகளில் இதழ் பதித்துவிட துடித்த காதல் மனதை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டான்.
அவளோ அவனின் கோபம், புறக்கணிப்பு என்று எதையும் பொருட்படுத்தாமல் அவனை நெருங்கியவள்... அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்து கண்களை நேருக்கு நேர் நோக்கியதில், அவன் சித்தம் தடுமாறியது.
“ஏய் நான் செம கடுப்பில் இருக்கிறேன் கையை எடு” என்ன தான் குரலில் கடுமையை தேக்கி அதட்டிய போதும் கடினத் தன்மை மீறி சற்று மென்மையும் வெளிபட்டுவிட்டது.
“கோபமா வச்சுக்கோங்க... ஆனால் அதெல்லாம் உங்களோட விருப்பம், எனக்கு உங்க மேல கோபம் இல்லையே, அப்புறம் நீங்களே சொல்லியிருக்கீங்க, நீங்க தான் என்னை தொடமாட்டேன்னும், நான் உங்களை என்ன வேணா பண்ணலாம்னு நீங்களே அனுமதி கொடுத்திருக்கீங்க” என்றவள் அவன் ஏதோ பேச வரும் முன் அவன் கன்னத்தில் அவள் இதழ்கள் பதிந்து விட, உடலின் ரசாயன மாற்றம் நிகழ்ந்து நூதன வித்தையை காட்டியதில் உணர்ச்சிகள் பேயாட்டம் போட்டு அவன் இளமையை சோதித்து வைத்தது. அவள் மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுத்தவள் மறுக் கண்ணத்திலும் தன் அச்சாரத்தை பதித்திருந்தாள்.
அதற்கு மேல் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது போனதிலும், அவள் அவனை விட்டு விலக செல்ல நினைத்ததும் என மாறி மாறி அவன் மனதை புரட்டி போட்டது. அவள் மேல் இழுத்துப் பிடித்து வைத்திருந்த கோபத்தையும் தாண்டிய காதல் களிப்பை முற்றிலும் அனுபவிக்க முடியாத கோபம் என அனைத்தும் சேர்ந்துக் கொள்ள, அவளே எதிர்பாராத விதமாக வெடுக்கென்று தள்ளி விட்டு தன் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தவன் விழிகள் சிவந்து போயிருந்தது. அவனின் அந்த தோற்றத்தை கண்டு அரண்டு தான் போனாள்.
“என்னை விட்டு விலகிப் போக நினைச்சப்போ எங்க டி போயிருந்தது உன்னுடைய இந்த காதல், கத்திரிக்கை எல்லாம்?” சுள்ளென்று வினவியவனின் கேள்வியில் அவள் இதயம் அடிபட்டு நொறுங்கி வலி உண்டாக, அதை தாங்கிக் கொள்ளும் சக்தியற்று உடல் தோய்ந்து தொப்பென்று படுக்கையில் அமர்ந்துவிட்டாள். அவளின் மாற்றத்தை பொருட்படுத்தாது தன் கோபத்தை அவளிடம் வார்த்தையால் காண்பிக்கலானான்.
“நீ எதையோ யோசிச்சு குழம்பி இருக்கிற, ஆனால் அது என்னவா இருந்தாலும் நீயே என்னை தேடுவ, அதுவரைக்கும் உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு நினைச்சு, உன் தனிப்பட்ட சிந்தனைக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த என்னை இழிச்சவாயன்னு நினைச்சுட்டே, நீ என்னை தவிர்த்த போதெல்லாம் உன்னை மட்டுமே மனசில் நினைச்சு தவிச்சுட்டு இருந்தேன் டி”
“ஆனால் இதோ பாரு உனக்கு இன்ப அதிர்ச்சின்னு தழையத் தழைய புடவை கட்டி, பூ வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டு இன்னொருத்தன் முன்னாடி என்னையும் பாரு, என் அழகையும் பாருன்னு காட்டிட்டு நின்ன பாரு, அதை பார்த்தப்போ என் மனசு குளிர்ந்து போச்சு டி.. ரொம்ப குளிர்ந்து போச்சு”
“உன்னை நான் தொட்டா, உனக்கு கெட்ட பேர் ஆகிருமோன்னு என் ஆசையை எல்லாம் கட்டுப்படுத்திகிட்டு உங்கிட்ட பழகினேன் டி... ஆனா கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம எப்படி டி உன்னால இன்னொருத்தன் முன்னாடி நிற்க முடிஞ்சது?”
“நான் வேற என்ன செய்ய முடியும்? எனக்குன்னு என் விருப்பத்தை கேட்க சொல்ல என் பெத்தவங்க இல்லையே?” அவள் குரலில் பச்சாதாபத்துடன் கூடிய வேதனை தொக்கி இருந்தது.
“ஏன் தரன் உன்கிட்டே விருப்பத்தை கேட்கலை?”
“..........”
“சரி அவன்கிட்ட சொல்ல முடியலை... ஏன் என்கிட்டே சொல்லலை?”
“...........”
“சொல்லு டி சொல்லு” என்றவன் அவள் விலாவை பிடித்துக் கொண்டு ஆவேசத்துடன் உலுக்கினான். கணவனின் கோபத்தில் இருந்த ஆற்றாமை கண்ட அரசிக்கு அவனை எதிர்க்க இம்மியளவும் முடியாமல் வேதனை வெள்ளமாக பொங்கியது.
“நான் தொடாம ரொம்ப கண்ணியமா பழகினது உனக்கு ஒரு வகையில் நல்லதா போச்சு... அதான் வெட்கமில்லாம அந்த உரிமையை இன்னோருத்தனுக்கு கொடுக்க முடிவு செய்திட்ட?” என்றதும் விழுக்கென்று நிமிர்த்திவளின் விழிகளில் தீட்சண்யம் மிகுந்திருந்தது.
“சும்மா வாய்க்கு வந்தப்படி உளறாதீங்க சொல்லிட்டேன்... பொண்ணு தானே பார்க்கப் போறாங்க அடுத்த கட்டம் போனா பார்த்துக்கலாம்னு இருந்தேன்”
“எதை பார்த்துக்கலாம்னு இருந்த? நீ அவனுக்கு பாதி பொண்டாட்டி ஆகி நிற்கிறதே, என்கிட்ட சொல்லி நான் அதுக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கறேன்னு பார்க்கிறதையா?”
“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது... அப்படி நடந்தா அது நடக்க நான் விட்டிருக்கமாட்டேன்”
“எப்படி? உன் உயிரை விட்டா” என்றவனின் வார்த்தையை ஏற்பது போல் மெளனமாக இருந்தாள்.
“உன் உயிரை கூட விடுவ! ஆனா உன் சூழ்நிலையை என்கிட்டே பகிர்ந்துகிட்டு என் முன்னாடி நின்னுருக்கமாட்டே? இது உன் வீம்பை தானே காட்டுது, எங்க காதல் இருக்குது?”
“இப்போ என்னை கொஞ்சுறதெல்லாம் இவன் நமக்கு புருசன் ஆகிட்டான் வேற வழியில்லைன்னு தானே? பேசாம போ டி என்னை கைகழுவிட்டு போக இருந்தவளை, நான் தொட்டு குடும்பம் நடத்தணுமா? ஆணிய புடுங்க வேண்டாம். நீ நீயாவே இரு, நான் நானாவே இருக்கேன்” தன் மனதில் தேக்கி வைத்திருந்த அவள் மேல் கொண்ட வருத்தத்தை எல்லாம் வார்த்தையால் வெளிப்படுத்திவிட்டு கட்டிலின் ஓர் மூலையில் படுத்து கண்ணுறங்கி விட்டிருந்தான்.
அரசியின் கண்கள் தான் கண்ணுறங்க மாட்டாமல் தவித்துக் கொண்டிருந்தது... அக்கணம் அவள் மூலையில் அசிரீரி போல் ஒலித்தது தரனின் பேச்சு ‘ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கப்புறம் உங்க பிரச்சனை பற்றி பேசிக்கோங்க'
எப்படி யோசித்திருக்கிறார்! அவர் கூறியது போல் திருமணதிற்கு முன்பே அர்ஜுனிடம் பேசியிருந்தால், இந்நேரம் இருவரின் உறவுக்கும் இடையில் விரிசல் விழ வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்குமோ... இங்கே அவன் தரப்பு நியாயம் ஒன்றாகவும், நம் தரப்பு நியாயம் ஒன்றாகவும் இருக்க, இதில் யார் ஜெயிப்பது என்ற ஈகோ எழுந்து நேசத்தை வேரறுத்து இருக்குமோ? என்றெல்லாம் சிந்தித்தவளுக்கு குலை நடுங்கியது. அவனின் பேச்சிலும், செயலிலும் உரிமையுணர்வு தன் மேல் அளவுக்கதிகமாக இருப்பது புலப்பட்டது.
மனதின் கணம் தாங்காமல் கண்ணீரில் கரைந்தவளின் விசும்பல் வெளியேறி விட, எங்கே அவன் செவியை எட்டிவிடுமோ என்று வாய் பொத்தியவளின் முயற்சி வீணானது போல் அர்ஜுன் திடுமென எழுந்தவன் அவளின் அழுகையை கண்டு வியாகூலம் அடைந்தான்.
“இப்போ என்ன குடி முழுகி போயிருச்சுன்னு அழற? நான் தானே தாலி காட்டினேன்... இனிமே நீ தானே என் பொண்டாட்டி இதுல எதுவும் மாறாது பேசாம தூங்கு, இன்னைக்கே வாழ்க்கை முடிஞ்சு போயிறல, இப்போ தான் வாழ்க்கையே தொடங்குறோம், அழாதே” என்றவன் அவள் கண்ணீரை துடைத்து, விளக்கை அணைத்துவிட்டு அவளை தட்டிக் கொடுக்கலானான்... அரசிக்கு அவனின் அணைப்பில் நிம்மதி தோன்றியதோ மெல்ல மெல்ல அழுகையை நிறுத்தி அவன் மார்பில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போனாள்.
சுவடுகள் தொடரும்....
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-24 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.
இன்னும் ஒரு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும் கதைத் திரி வெள்ளிகிழமை (03.05.2024) அன்று இரவு கதைத் திரி நீக்கப்படும்.
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதை முடிவடைந்ததும் இதன் இரண்டாம் பாகம் பதிவிடப்படும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels
நட்புடன்
காருராம்
அர்ஜுன் பால்கனியிலிருந்து உள்ளே வந்து கதவை அடைத்தவன் மனைவியை குறுகுறுவென்று பார்க்க, அவனின் பார்வையை எதிர்கொள்ள இயலாது நாணம் தடுத்ததில் சிரம் தாழ்த்திக் கொண்டாள் பார்வை வெற்று தரையில் பதிந்தது... அவள் பார்க்காத சமயம் தலை முதல் பாதம் வரை பார்வையால் கபளீகரம் செய்துக் கொண்டிருந்தவன் சிந்தையில்...
‘இந்த இரவை எப்படி எல்லாம் உன் கூட கொண்டாடணும்னு நினைச்சிருந்தேன் பாவி எல்லாத்தையுமே கெடுத்துட்டியே’ என்று மானசீகமாக சாடிக் கொண்டிருந்தான். அவனின் பார்வையையும் உணரவில்லை அவன் மனதின் கூக்குரலையும் அறியாது அவன் அருகில் வர காத்திருந்தாள்.
அர்ஜுன் சில கணங்களோ, வினாடிகளோ அறியாது அவளையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தவன் கட்டிலை நெருங்கி அவளுக்கு அருகில் இல்லாமல் சற்று இடைவெளி விட்டு அமர... அரசி பால் நிறைந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்” என்று முகத்திலறைந்தது போல் கூறியதில் சுருக்கென்று இருக்க, எங்கிருந்து தான் அந்த கோபமும், துணிச்சலும் வந்ததோ...
“இந்த முகத்தில் அறைந்த மாதிரி பேசுற பேச்செல்லாம் வேண்டாம்... இப்போ நீங்க குடிச்சு தான் ஆகணும்” என்று அதிகாரமாக கட்டளையிட்டாள்.
அவளின் பேச்சில் மனதிற்குள் மிரண்டான், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக பார்த்தவன்...
“என்னடி மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு? முதல் நாளே பொண்டாட்டி அதிகாரத்தை கட்டுற போல?”
“ஆமாம் அப்படிதான் வச்சுக்கோங்க” ஜம்பமாக அமர்ந்தவள் மிடுக்காக கூறினாள்.
“ஆனால் என்கிட்டே அதெல்லாம் செல்லுபடி ஆகாதே... அதனால் பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“ஒஹோ...! இல்லன்னா என்ன பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவனை போலவே ஒற்றை புருவம் உயர்த்தி ஒயிலாக வினவியவளின் வார்த்தையில் நெஞ்சுரம் வெளிப்பட்டது.
“ஏய் கழுத்தில் தாலி ஏறிட்ட திமிரா? தொலைச்சுருவேன் பார்த்துக்கோ, எதிர்த்து பேசிட்டு இருக்காம போய் தூங்குடி” என்றவன் முணகிக் கொண்டே படுக்கைக்கு செல்ல... அரசி தடாலடியாக எழுந்தவள் அறைக் கதவை திறக்க செல்லும் போது சுதாரித்து துரிதமாகஅவளை தடுத்திருந்தான்.
“ஏய்... ஏய்.. என்ன டி பண்ணுற?” பதட்டத்துடன் அவள் கரங்களை பிடித்து தடுத்து விட்டிருந்தவனை அமர்த்தலாக பார்த்து அவன் ரத்த அழுத்தத்தை கூட்டியவள்...
“அதான் பால் குடிக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்கள்ள, அதான் அத்தைக்கிட்டே கேட்டு இந்த பாலை அப்படியே பிரிட்ஜில் வைக்கவா? இல்லை, பூனைக்கு ஊத்தவா? இல்லை, தயிருக்கு புரை போடவான்னு கேட்டுட்டு வர போறேன்”
“என்ன டி நக்கலா? இன்னைக்கு உனக்கு என்ன நாளுன்னு தெரியுமா? இல்லை மறந்துட்டியா” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளால் சீறினான்.
“எனக்கெல்லாம் நல்லா நியாபகம் இருக்கு, உங்களுக்கு தான் அது நியாபகம் இல்லை”
“நியாபகம் வச்சிருக்கிறவ பண்ணுற காரியமா டி இது... என் அம்மா கல்யாணம் பண்ணிக்கவே என்னை வறுத்தெடுத்தாங்க, இப்போ நீ ரூமை விட்டு போனா வீட்டை விட்டே துரத்திருவாங்க, ஒழுங்கா அடங்கி ரூமில் கிட, நம்ம விஷயத்தை கடை பரப்பின அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” அடிக்குரலில் சீறினான்.
அவனே அவளுக்கு மேலும் ஓர் அஸ்திரத்தை எடுத்து கொடுக்க அரசிக்கு படு குஷியாகிப் போனது... ‘வாலண்டியரா சிக்கிட்டியே புருஷா’ என்றெண்ணி கொண்டவள்...
“நான் உங்களுக்கு அடங்கி இருக்கத் தான் ஆசைப்படுறேன், இப்போ இந்த நிமிஷமே தயார்” என்றவளின் மார்க்கமான பார்வையும், கிறக்கமாக ஒலித்த குரலில் மயங்கிய மனதை அதட்டி அடக்கி கடிவாளமிட்டவன்...
“அடங்கி இருக்கப் போறியா... நீயா? அப்புறம் எதுக்கு இப்படி மல்லுகட்டுற, ஒழுங்கா போய் தூங்கு” என்று சாதாரணமாக கூறியதும்...
“அப்போ இந்த பாலை குடிங்க” என்று குவளையை நீட்டியவளை முறைத்துக் கொண்டே வாங்கி அருந்தியவன் பார்வை அவளிடமே நிலைத்திருக்க, அவன் குடித்துவிட்டு மீதியை அவளிடமும் கொடுத்திருந்தான்.
அரசிக்கு மனதில் வெற்றி முரசு கொட்ட “பரவாலையே அரசி முதல் முறையே சாதிச்சுட்ட” என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டவளுக்கு மனதின் ஏதோ ஓர் மூலையில் வெற்றிடம் உண்டாகவே செய்தது.
பாலை குடித்து முடித்து அவளின் மனவோட்டாதையே கண்காணித்து கொண்டிருந்தவனுக்கு அவளின் அழகும், கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிறும் அவளுடனான சொந்ததை உணர்த்தியதில் பேசாமல் கோபத்தை மறந்து அவளுடன் இணைந்துவிடலாமோ என்றெண்ணத்தை அவள் செய்த காரியம் தடையிட்டு தடுத்துவிட்டிருந்தது.
“நீ எந்த பக்கம் படுக்குற சொல்லு?” என்றவனை பார்வை மாறாமலே பார்த்தவள்...
“இன்னும் முடிவு பண்ணலை?” என்று அலட்சியமாக கூறியவளின் இதழ்கள் சிரிப்பை அடக்க முயன்றுக் கொண்டிருந்தது.
“ஏன் தூங்குற உத்தேசம் இல்லையா, சிவராத்திரி கொண்டாட போறியா?”
“ஆமாம் சிவராத்திரி கொண்டாட தான் போறேன், ஆனா தனியா இல்லை உங்களோட தான்” என்று இமை சிமிட்டியவளின் விழிகளில் இதழ் பதித்துவிட துடித்த காதல் மனதை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டான்.
அவளோ அவனின் கோபம், புறக்கணிப்பு என்று எதையும் பொருட்படுத்தாமல் அவனை நெருங்கியவள்... அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்து கண்களை நேருக்கு நேர் நோக்கியதில், அவன் சித்தம் தடுமாறியது.
“ஏய் நான் செம கடுப்பில் இருக்கிறேன் கையை எடு” என்ன தான் குரலில் கடுமையை தேக்கி அதட்டிய போதும் கடினத் தன்மை மீறி சற்று மென்மையும் வெளிபட்டுவிட்டது.
“கோபமா வச்சுக்கோங்க... ஆனால் அதெல்லாம் உங்களோட விருப்பம், எனக்கு உங்க மேல கோபம் இல்லையே, அப்புறம் நீங்களே சொல்லியிருக்கீங்க, நீங்க தான் என்னை தொடமாட்டேன்னும், நான் உங்களை என்ன வேணா பண்ணலாம்னு நீங்களே அனுமதி கொடுத்திருக்கீங்க” என்றவள் அவன் ஏதோ பேச வரும் முன் அவன் கன்னத்தில் அவள் இதழ்கள் பதிந்து விட, உடலின் ரசாயன மாற்றம் நிகழ்ந்து நூதன வித்தையை காட்டியதில் உணர்ச்சிகள் பேயாட்டம் போட்டு அவன் இளமையை சோதித்து வைத்தது. அவள் மெல்ல தன் இதழ்களை பிரித்தெடுத்தவள் மறுக் கண்ணத்திலும் தன் அச்சாரத்தை பதித்திருந்தாள்.
அதற்கு மேல் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது போனதிலும், அவள் அவனை விட்டு விலக செல்ல நினைத்ததும் என மாறி மாறி அவன் மனதை புரட்டி போட்டது. அவள் மேல் இழுத்துப் பிடித்து வைத்திருந்த கோபத்தையும் தாண்டிய காதல் களிப்பை முற்றிலும் அனுபவிக்க முடியாத கோபம் என அனைத்தும் சேர்ந்துக் கொள்ள, அவளே எதிர்பாராத விதமாக வெடுக்கென்று தள்ளி விட்டு தன் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தவன் விழிகள் சிவந்து போயிருந்தது. அவனின் அந்த தோற்றத்தை கண்டு அரண்டு தான் போனாள்.
“என்னை விட்டு விலகிப் போக நினைச்சப்போ எங்க டி போயிருந்தது உன்னுடைய இந்த காதல், கத்திரிக்கை எல்லாம்?” சுள்ளென்று வினவியவனின் கேள்வியில் அவள் இதயம் அடிபட்டு நொறுங்கி வலி உண்டாக, அதை தாங்கிக் கொள்ளும் சக்தியற்று உடல் தோய்ந்து தொப்பென்று படுக்கையில் அமர்ந்துவிட்டாள். அவளின் மாற்றத்தை பொருட்படுத்தாது தன் கோபத்தை அவளிடம் வார்த்தையால் காண்பிக்கலானான்.
“நீ எதையோ யோசிச்சு குழம்பி இருக்கிற, ஆனால் அது என்னவா இருந்தாலும் நீயே என்னை தேடுவ, அதுவரைக்கும் உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு நினைச்சு, உன் தனிப்பட்ட சிந்தனைக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த என்னை இழிச்சவாயன்னு நினைச்சுட்டே, நீ என்னை தவிர்த்த போதெல்லாம் உன்னை மட்டுமே மனசில் நினைச்சு தவிச்சுட்டு இருந்தேன் டி”
“ஆனால் இதோ பாரு உனக்கு இன்ப அதிர்ச்சின்னு தழையத் தழைய புடவை கட்டி, பூ வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டு இன்னொருத்தன் முன்னாடி என்னையும் பாரு, என் அழகையும் பாருன்னு காட்டிட்டு நின்ன பாரு, அதை பார்த்தப்போ என் மனசு குளிர்ந்து போச்சு டி.. ரொம்ப குளிர்ந்து போச்சு”
“உன்னை நான் தொட்டா, உனக்கு கெட்ட பேர் ஆகிருமோன்னு என் ஆசையை எல்லாம் கட்டுப்படுத்திகிட்டு உங்கிட்ட பழகினேன் டி... ஆனா கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம எப்படி டி உன்னால இன்னொருத்தன் முன்னாடி நிற்க முடிஞ்சது?”
“நான் வேற என்ன செய்ய முடியும்? எனக்குன்னு என் விருப்பத்தை கேட்க சொல்ல என் பெத்தவங்க இல்லையே?” அவள் குரலில் பச்சாதாபத்துடன் கூடிய வேதனை தொக்கி இருந்தது.
“ஏன் தரன் உன்கிட்டே விருப்பத்தை கேட்கலை?”
“..........”
“சரி அவன்கிட்ட சொல்ல முடியலை... ஏன் என்கிட்டே சொல்லலை?”
“...........”
“சொல்லு டி சொல்லு” என்றவன் அவள் விலாவை பிடித்துக் கொண்டு ஆவேசத்துடன் உலுக்கினான். கணவனின் கோபத்தில் இருந்த ஆற்றாமை கண்ட அரசிக்கு அவனை எதிர்க்க இம்மியளவும் முடியாமல் வேதனை வெள்ளமாக பொங்கியது.
“நான் தொடாம ரொம்ப கண்ணியமா பழகினது உனக்கு ஒரு வகையில் நல்லதா போச்சு... அதான் வெட்கமில்லாம அந்த உரிமையை இன்னோருத்தனுக்கு கொடுக்க முடிவு செய்திட்ட?” என்றதும் விழுக்கென்று நிமிர்த்திவளின் விழிகளில் தீட்சண்யம் மிகுந்திருந்தது.
“சும்மா வாய்க்கு வந்தப்படி உளறாதீங்க சொல்லிட்டேன்... பொண்ணு தானே பார்க்கப் போறாங்க அடுத்த கட்டம் போனா பார்த்துக்கலாம்னு இருந்தேன்”
“எதை பார்த்துக்கலாம்னு இருந்த? நீ அவனுக்கு பாதி பொண்டாட்டி ஆகி நிற்கிறதே, என்கிட்ட சொல்லி நான் அதுக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கறேன்னு பார்க்கிறதையா?”
“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது... அப்படி நடந்தா அது நடக்க நான் விட்டிருக்கமாட்டேன்”
“எப்படி? உன் உயிரை விட்டா” என்றவனின் வார்த்தையை ஏற்பது போல் மெளனமாக இருந்தாள்.
“உன் உயிரை கூட விடுவ! ஆனா உன் சூழ்நிலையை என்கிட்டே பகிர்ந்துகிட்டு என் முன்னாடி நின்னுருக்கமாட்டே? இது உன் வீம்பை தானே காட்டுது, எங்க காதல் இருக்குது?”
“இப்போ என்னை கொஞ்சுறதெல்லாம் இவன் நமக்கு புருசன் ஆகிட்டான் வேற வழியில்லைன்னு தானே? பேசாம போ டி என்னை கைகழுவிட்டு போக இருந்தவளை, நான் தொட்டு குடும்பம் நடத்தணுமா? ஆணிய புடுங்க வேண்டாம். நீ நீயாவே இரு, நான் நானாவே இருக்கேன்” தன் மனதில் தேக்கி வைத்திருந்த அவள் மேல் கொண்ட வருத்தத்தை எல்லாம் வார்த்தையால் வெளிப்படுத்திவிட்டு கட்டிலின் ஓர் மூலையில் படுத்து கண்ணுறங்கி விட்டிருந்தான்.
அரசியின் கண்கள் தான் கண்ணுறங்க மாட்டாமல் தவித்துக் கொண்டிருந்தது... அக்கணம் அவள் மூலையில் அசிரீரி போல் ஒலித்தது தரனின் பேச்சு ‘ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கப்புறம் உங்க பிரச்சனை பற்றி பேசிக்கோங்க'
எப்படி யோசித்திருக்கிறார்! அவர் கூறியது போல் திருமணதிற்கு முன்பே அர்ஜுனிடம் பேசியிருந்தால், இந்நேரம் இருவரின் உறவுக்கும் இடையில் விரிசல் விழ வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்குமோ... இங்கே அவன் தரப்பு நியாயம் ஒன்றாகவும், நம் தரப்பு நியாயம் ஒன்றாகவும் இருக்க, இதில் யார் ஜெயிப்பது என்ற ஈகோ எழுந்து நேசத்தை வேரறுத்து இருக்குமோ? என்றெல்லாம் சிந்தித்தவளுக்கு குலை நடுங்கியது. அவனின் பேச்சிலும், செயலிலும் உரிமையுணர்வு தன் மேல் அளவுக்கதிகமாக இருப்பது புலப்பட்டது.
மனதின் கணம் தாங்காமல் கண்ணீரில் கரைந்தவளின் விசும்பல் வெளியேறி விட, எங்கே அவன் செவியை எட்டிவிடுமோ என்று வாய் பொத்தியவளின் முயற்சி வீணானது போல் அர்ஜுன் திடுமென எழுந்தவன் அவளின் அழுகையை கண்டு வியாகூலம் அடைந்தான்.
“இப்போ என்ன குடி முழுகி போயிருச்சுன்னு அழற? நான் தானே தாலி காட்டினேன்... இனிமே நீ தானே என் பொண்டாட்டி இதுல எதுவும் மாறாது பேசாம தூங்கு, இன்னைக்கே வாழ்க்கை முடிஞ்சு போயிறல, இப்போ தான் வாழ்க்கையே தொடங்குறோம், அழாதே” என்றவன் அவள் கண்ணீரை துடைத்து, விளக்கை அணைத்துவிட்டு அவளை தட்டிக் கொடுக்கலானான்... அரசிக்கு அவனின் அணைப்பில் நிம்மதி தோன்றியதோ மெல்ல மெல்ல அழுகையை நிறுத்தி அவன் மார்பில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போனாள்.
சுவடுகள் தொடரும்....
**************************************
வணக்கம் நட்பூக்களே...
“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)” அத்தியாயம்-24 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.
காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" - கருத்துத் திரி
வணக்கம் நட்பூக்களே... "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-1)" கருத்துகளை இங்கே பகிரவும் மக்களே. நட்புடன் காருராம்.
www.srikalatamilnovel.com
இன்னும் ஒரு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும் கதைத் திரி வெள்ளிகிழமை (03.05.2024) அன்று இரவு கதைத் திரி நீக்கப்படும்.
“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதை முடிவடைந்ததும் இதன் இரண்டாம் பாகம் பதிவிடப்படும் மக்களே.
தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:
Whatsapp Channel Link:
KaruRam Tamizh Novels | WhatsApp-Kanal
Telegram Channel Link:
KaruRam Tamizh Novels
நட்புடன்
காருராம்